Subscribe

BREAKING NEWS

31 July 2020

புண்ணியக் கணக்கில் சேர்வது தானமா?...தர்மமா?...

தானத்திலும் தர்மத்திலும் சிறந்து விளங்குபவன் கர்ணன் என்று கேள்விப் பட்டிருக்கிறோம். கர்ணன் தன்னிடம் யாசகம் கேட்டு வருபவர்களுக்கு அவர்கள் விரும்பியது எதுவாயினும் மகிழ்ச்சியோடு அளிப்பான்.
புண்ணியக் கணக்கில் சேர்வது தானமல்ல...தர்மம் மட்டுமே...இந்துமதம் பெரும்பாலும் வலியுறுத்துவது தானமும் தர்மமும் செய்ய வேண்டும் என்பது தான். இறைப்பணியில் மூழ்கி இறைவனையே நினைத்துக் கொண்டிருக்கும் பக்தர்கள் சாஸ்திரப்படி பிறந்தநாளில், திருமணநாளில், முன்னோர்கள் இறந்த திதியில் என்று இயன்ற  அளவு அன்னதானங்களை செய்கிறார்கள். தானங்களில் எத்தனையோ வகைகள் உண்டு. தர்மம் என்று எடுத்துகொண்டால் ஒன்றுதான். தானத்துக்கும் தர்மத்துக்கும் வேறுபாடு உண்டு.
நான் தான தர்மம் செய்ய விரும்புகிறேன் என்று சொல்வதில் சிலர் பெருமிதம் கொள்வார்கள். உதவி என்று யார் கேட்டு வந்தாலும் நான் தர்மம் செய்கிறேன் என்றும் சொல்வார்கள்.
இயலாதவர்களுக்கு உணவிடுவதும், ஏழை குழந்தைகளைப் படிக்க வைப்பதும், முதியோர்களுக்கு ஆடைகள் தருவதையும் தானத்திலும் தர்மத்திலும் சேர்த்துக்கொள்பவர்கள் முதலில் தானம் வேறு தர்மம் வேறு என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும். 
தானம்:
தானத்திலும் தர்மத்திலும் சிறந்து விளங்குபவன் கர்ணன் என்று கேள்விப் பட்டிருக்கிறோம். கர்ணன் தன்னிடம் யாசகம் கேட்டு வருபவர்களுக்கு அவர்கள் விரும்பியது எதுவாயினும் மகிழ்ச்சியோடு அளிப்பான்.
கேட்டதைக் கொடுக்கும் அளவுக்கு தன்னை இறைவன் வைத்திருப்பதை எண்ணி மனம் மகிழ்ந்து இறைவனுக்கு நன்றி செலுத்தவும் தவற மாட்டான். இப்படி கேட்பவர்களுக்கு  செய்யும் உதவியானது  தானத்தில் தான் சேரும்..   புண்ணியத்தைக் கொண்டு வராது.
தருமம்:
ஆனால் அதே கர்ணன் கொடை வள்ளல் என்றும் அழைக்கப்பட்டான்.  உதவி என்று சொல்லும் முன்பே குறிப்பறிந்து அவர்கள் கேளாத நிலையில் அவர்களுக்கு வேண்டியதை மனமுவந்தும் செய்து வந்தான். இப்படி செய்யும்  உதவிகளே தர்ம கணக்கில் வந்து சேரும். ஆனால் இந்த தர்மம் புண்ணியத்தைத்  தரவல்லது.
இத்தகைய புண்ணியத்தை அதிகம் சம்பாதித்தான் கர்ணன். ஆனால் கிருஷ்ண பரமாத்மா வயோதிக பிராமணனாய் வேடமிட்டு கர்ணனிடம் வந்து புண்ணியத்தைக் கேட்டு பெற்றுகொண்டார்.  கேட்டு பெற்றதால்  கர்ணன்  தர்மத்தால் பெற்ற புண்ணியம் அனைத்தும் தானக்கணக்கில் சேர்ந்துவிட்டது.  கர்ணனை மரணமும் எளிதில் சூழ்ந்துகொண்டது.
இப்படி தர்மம் இருக்கும் இடங்களுக்கேற்ப மாறுபடும். ஒரு போர்வீரரின் தர்மம் என்பது  அவர் இருக்கும் நாட்டைக் காப்பது. மனிதன் இல்லறத்தில் ஈடுபடும் போது மனைவி,  பிள்ளைகள், பெற்றோர்களை கவனிக்காமல் கடவுளுக்கு தொண்டு செய்வது  தர்மக்கணக்கில் சேராது. தர்மம் என்பது கடமையைச் சரியாக செய்வது ஆகும்.
எனவே  இந்நாளில் இறைவனை நினைத்து 1000 பேருக்கு அன்னதானம் செய்து தானம் தர்மம் செய்தேன் என்று சொல்வதை விட வறுமையால் வாடி பசி என்னும் கொடுமையைச் சொல்வதற்கு முன்பும்,  கல்வியைத் தொடரமுடியவில்லை என்று சொல்லாமல் இருக்கும் குழந்தைகளுக்கு கல்வியும் என கேட்கும் முன்பே நீங்கள் செய்வதே தர்மம் என்று சாஸ்திரம் சொல்கிறது.
 தர்மம் என்னும் புண்ணியக்கணக்கைப் பெற  கேளாமலேயே உரியவருக்கு உரிய நேரத்தில் செய்துவிடுங்கள். இதுதான் தர்மம்... இதுதான் புண்ணியம்.. 

நமது குழு நண்பர்கள் அந்தவகையில் செய்துவரும் தர்மம் ஆனது ஏதோ ஒரு வகையில் அவர்களது கர்ம கணக்கை தீர்க்கும் என்பது நிச்சயமாகும்.இதை படித்துகொண்டிருக்கும் நண்பர்களும் தங்களால் இயன்ற ஒரு தர்ம காரியத்தினை செய்து வரவேண்டும் என்பதே எனது விருப்பமாகும் .
தர்மம் செய்ய வேண்டும் என்றால் ஏதோ ஐயாயிரம் பத்தாயிரம் என செலவாகுமே என என்ன வேண்டாம்,சாலை ஓரத்தில் இருக்கும் ஒரு ஆதரவற்றவர்களுக்கு ஒரு வாழைப்பழம் போதும்,ஒரு டீ,ஒரு ரொட்டிதுண்டு,சாலைகளில் சுற்றித்திரியும் ஒரு பைரவ வாகனத்திற்கு ஒரு பிஸ்கட் துண்டு போதும், பறவைகளுக்கு சிறு தானியம் போதும்,இதுபோன்ற தர்மங்களை செய்துவந்தாலே போதும் ,தங்களது வாழ்க்கையின் கர்மவினைகள் அகன்று ,சுப நிகழ்வுகள் ,வாழ்க்கையில் மகிழ்ச்சி கூடுவதை கண்கூடாக பார்க்க முடியும் .
நமது குழுவில் உள்ள  சோழிங் நல்லூரில் வசிக்கும் நண்பர்  திரு,செந்தில்நாதன்,அவர்களின் வீட்டருகே வசிக்கும் ஒருவர் மிகவும் குடும்ப வறுமையில் உள்ளார் என கேள்விப்பட்டோம்,இந்த கொரோனா காலகட்டத்தில் வேலை ,வருமானம் ஏதும் இல்லை என திரு செந்தில்நாதன் அவர்கள் நம்மிடம் தெரிவித்ததின் பேரில் அவர்களுக்கும் நாம் ஏதாவது செய்யவேண்டும் என எத்தனித்த வேலையில் ,நமது குழுவின் முக்கிய உறுப்பினராக இருக்கும் திருமதி,பரிமளம் அவர்களில் மூத்தமகன் திருமணநாளையொட்டி  தர்மம் செய்ய வேண்டும் என நம்மிடம் தெரிவிக்க இதுவே தக்க சமயம் என அவர்களுக்கு இரண்டாயிரம் மதிப்புள்ள அந்த உதவித்தொகை மலிகைப்பொருளாக அவர்களுக்கு திரு,செந்திநாதன் அவர்களின் மூலமாகவே 10/07/2020 அன்று  வழங்கப்பட்டது.






இதேபோல் நமது குழுவின் சகோதரி ஒருவர் திருமதி,சசிகலா அவர்களளின் குடும்ப செலவிற்காக ரூ,4000. 31/07/2020 அன்று உதவிசெய்த திருமதி,தாமரை வெங்கட்,மற்றும் திருமதி,ரமா சங்கர்,அவர்களுக்கும்,நமது குழுவின் சார்பாக நன்றிகளை தெரிவித்துகொள்கின்றோம். 
!!!இயன்ற அளவிற்கு தான தர்மங்களை செய்வோம் வாழும்போதும் வாழ்க்கைக்கு பின்பும் நிறைவுடன் வாழ்வோம்.!!!
நன்றி.

No comments:

Post a Comment