Subscribe

BREAKING NEWS

29 August 2019

ஊழ்வினைப்போக்கும் உழவாரப்பணி


அன்பு வாசகர்களுக்கு வணக்கம்.

இந்தப்பதிவில் வருகின்ற 02/09/2019,அன்று நடைபெறும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோயம்பேடு பேருந்துநிலையம் பின்புறம்  சின்மயா நகரிலுள்ள ஸ்ரீ வரசித்தி வினாயகர் ஆலயத்தில் நமது உழவாரப்பணி  மிகச் சிறப்பாக நடைபெற்றது, அதனைப்பற்றி இந்த பதிவில் காண்போம் ,



நமது குழுவில் முக்கிய உறுப்பினராக உள்ள திருமதி, செல்வி அவர்கள் இந்த ஏற்பாட்டினை மிகச்சிறப்பாக ஏற்பாடு செய்து தந்தார்கள்,அவர்களுக்கு நமது குழுவின் சார்பாக முதலில் நன்றிகளை சமர்ப்பிக்கின்றோம்.



பொதுவாக நமது கண்ணுக்கு எட்டாத கர்மவினைகள் பிடியில் சிக்கி உழலும்  கோடான கோடி மக்களின் விமோசனத்திற்காக இக்கலியுக நிகழ்வில் உழவாரப்  பணி  அருமருந்தாக அமைந்துள்ளது .

​உழவாரப்பணி நிறுவிய அப்பர் திருநாவுக்கரசர் கிபி 7-ம்  நூற்றாண்டு  வாழ்ந்ததாக வரலாறு கூறுகிறது

உழவாரப்பணி மூலம் மனித மனது செம்மை நிலைக்கு வரும். கல் மண் அப்புறப்படுத்தி ஆலயத்தை நாம் செம்மைப் படுத்துவது போல் நம் கர்ம வினை போன்றவற்றை நீக்கி இறைவன் நம் மனத்தை செம்மைப் படுத்துகிறான்.

இறைவன் நாம் பிரபஞ்சத்தில் வாழ நமக்கு வழி செய்து கொடுப்பது போல, ஆலயங்களை சுத்தப்படுத்தி நாம் இறை தொண்டு ஆற்ற வேண்டும்.

ஆன்மீகப்  பார்வையில் பார்க்கும் போது உழவாரப்பணி இறைவனுக்கு நாம் செய்யும் தொண்டு ஆகும். கர்மவினைகள் நீக்கி நம்மை செம்மை படுத்துகிறது.

அறிவபூர்வமாக சிந்தித்தால், கோவில் ஆனது பல ஆயிரம் மக்கள் வந்து போகும் ஒரு புண்ணிய வழிபாடு ஸ்தலம் ஆகும். இங்கு வரும் பக்தர்களுக்காக கோவிலை சுத்தப்படுத்தி மக்கள் தொண்டு ஆற்றுகின்றோம்.

எவ்வாறு பார்த்தாலும் உழவாரப்பணி இக்கலியுகத்தில் இறை அருள் பெற சிறந்த ஒரு மார்க்கம் ஆகும்.



உழவாரப்பனிக்கு நிர்வாகத்திடமிருந்து நமக்கு அளிக்கப்பட நேரம் காலை 7.௦௦ மணி முதல் நண்பகல் ஒருமணி வரை மட்டுமே.


அதற்குள் நாம் அனைத்துப் பணிகளையும் முடித்தாக வேண்டும். அன்று நடந்தது மிகவும் அசாதாரணமான ஒன்று அன்று. அதிகாலை முதலே பலத்த மழை! வேறு என்ன செய்வது என்றே நமக்குப் புரியவில்லை.  எங்கே யாரும் வராமல் போய்விடுவார்களோ என்ற கவலை ஒருபுறமிருக்க அனைத்திற்கும் நீதான் பொறுப்பு கணேசா என்று அவன் மீது பாரத்தை போட்டுவிட்டு கையில் ஒரு குடையும் எடுத்துக்கொண்டு விரைவாகப்புறப்பட்டோம் ,




நான் அங்கு  ஒருமணி நேரம் தாமதமாகச் சென்றேன். ஆனால்  அங்கே நடந்ததை  பார்த்தபோது அதிர்ந்துதான் போனேன், அதுதான் நீங்கள் மேலே பார்க்கும் காட்சிகள்.  அனைவரும் தங்களது பணியில் மிகவும் மும்முரமாக..... 



திருமதி.மாலதி , திருமதி.ரமாசங்கர், திருமதி,தாமரை அவர்கள் மூவரும் சுவாமியின் கருவறை பூஜை பொருட்களை மிகச்சிறப்பாக சுத்தம் செய்துகொண்டிருந்தனர் 




சற்று கோவிலின் பின்புறம் சென்று பார்த்தபோது அங்கு தம்பி குட்டி சந்திரன், திருமதி. பரிமளம், திருமதி.  செல்வி ,மூவரும் சேர்ந்து நவகிரஹ சன்னதியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர். யார்யாருக்கு என்னென்ன பணிகள் என்று யாருமே நமது குழு  நண்பர்களுக்குச்  சொல்லவேண்டியதில்லை.  அனைத்துமே நம் பணியென செய்வதுதான் நமது குழுவின் பாக்கியம்(பொறுப்பும் கூட).












சுத்தம்செய்தபின்னர் 


சிந்தாதிரிப்பேட்டை சிஸ்டர்ஸ் என செல்லமாக அழைக்கப்படும்  சகோதரிகள் திருமதி .சரஸ்வதி மற்றும் புவனேஸ்வரி அவர்கள்  ஆலயத்தின் உள் மற்றும் வெளிப்பிரஹாரத்தை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர் .




தீபமேற்றும் மேடையை சுத்தம் செய்யும் திருமதி பரிமளம் அவர்கள் .
.

அனைத்து பிரஹாரங்களையும்  தண்ணீர்விட்டு அலம்பி சுத்தம் செய்யும் காட்சி .


நாம் எவ்வளவோ கோவில்களுக்கு சென்றிருப்போம்.  விக்ரகங்களை  கண்ணால் பார்த்து தரிசித்திருப்போம். ஆனால் இந்த உழவாரப்பணியில் மட்டுமே நம் கையினால் விக்ரஹங்களை தொட்டுப்பார்க்க முடியும் அப்படியொரு ஆனந்தத்தில் திருமதி பரிமளம் அவர்கள் .

இவை அனைத்தும் முடிக்கவும் மணி மதியம் ஒன்று ஆகிவிட்டது பசிக்கு நம் குழுவினர் தயாரித்து வைத்திருந்த உணவுகள் தயிர் சாதம் மற்றும் புளியோதரை உருளை சிப்ஸ் கேட்கவும் வேண்டுமா!நல்ல பசியின்போது அனைத்துமே அமிர்தமாகும். திருமதி மாலதி அவர்கள் அதிகாலை நான்கு மணிக்கே எழுந்து புளியோதரை சாதம் தயார் செய்துவிட்டார்கள் ,திருமதி பரிமளம் அவர்கள் அதேநேரத்தில் எழுந்து தயிர்சாதத்தை  தயார் செய்து இங்கே கொண்டுவந்துவிட்டார்கள்  நாம் யாரும் இதனை செய்துவாருங்கள் என்று யாருக்கும் சொல்லவில்லை ,இதுதான் கடமை என்பது இப்படிப்பட்ட நல்லுள்ளம் கொண்ட நண்பர்கள் நமது குழுவில் வாய்த்தது நமது பாக்கியம் எனலாம்..


இந்த உழவாரப்பணியை  மிகச்சிறப்பாக முடித்துக் கொடுத்த ஸ்ரீ வரசித்தி விநாயகருக்கு நன்றிகளை தெரிவித்துக் கொண்டு நம் குழுவினரோடு ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டு உழவாரப்பனியில் பங்குபெற்ற அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டோம் .


என்ன வாசகர்களே!  இதுபோன்ற உழவாரப்பணிகளில் நீங்களும் பங்கேற்கவேண்டுமா? நமது வலைப்பதிவினை தவறாமல் பார்த்துவாருங்கள்.  அடுத்துவரும் உழவாரப்பணிகள் தெரிவிக்கப்படும். கலந்துகொண்டு ஊழ்வினை பாவத்தை போக்குங்கள் இறை அருள் பெற்று மன நிம்மதியோடு வாழுங்கள்.

நன்றி.



27 August 2019

மனதை பிரபஞ்ச சக்தியோடு இணைத்துக் கொள்வது எப்படி?

mind-power



பிரபஞ்சத்திற்கும் நமக்கும் எப்போதும் ஒரு தொடர்பு இருந்துகொண்டே இருக்கிறது என்பதை முன்பதிவில் நாம் பார்த்தோம்.அதனை எப்படி நம்வசம் வைப்பது என்பதை தற்போது பார்ப்போம்.

மூலாதார சக்தியானது உடலின் செயல்பாடுகளை செம்மையாக செயல் படுத்தவும், உடலில் உள்ள அனைத்து சக்திகளையும் ஒருங் கிணைத்து செயல்பட வைக்கவும் முக்கிய காரணமாகிறது.

பிராண வாயுவை மூலாதாரத்தில் நிறுத்தி மூலாதார சக்தியை வலுவடையச் செய்ய வேண்டும். அதற்கு சிறந்த வழி ஆழ்நிலை தியானமேயாகும்.

இந்த ஆழ்நிலை தியானத்தில் ஈடுபடும்போதுதான் பிராண வாயு மூலாதாரத்தையடைந்து மூலாதார சக்தியைத் தூண்டி உடலெங்கும் செயல்பட வைக்கிறது.

ஆழ்நிலை தியானம் செய்வது எப்படி?

Image result for பிரபஞ்ச சக்தி

ஆழ்ந்த தியானத்தில் ஈடுபட அமைதியான காற்றோட்டம் மிகுந்த இடம் வேண்டும். நன்கு சுத்தமான சிறிய அறை கூட போதுமானது. அல்லது கடற்கரை, பூங்கா, மலைவாசஸ் தலங்களில் உள்ள இடங்கள் த கோயில்கள் அனைத்துமே நேர்மறையான அதிர்வுகள் நிறைந்திருக்கும் இடங்களாக இருக்கிறது. எனவே இந்த மன பயிற்சியை கோயிலில் செய்தால் பலன் வேகமாக கிடைக்கிறது. நமது ஆன்மிகப் பெரியவர்கள் கண்டுபிடித்த நாமசங்கீர்த்தனம்,யோகம், தியானம் போன்ற அத்தனை முறைகளுமே நம் உடல், மனம், ஆன்மா ஆகிய மூன்றிலும் ஒரு நேர்மறையான அதிர்வலைகளை உருவாக்கி அதன் மூலம் இறைவனை தொடர்பு கொண்டு, அந்த இறைவனின் அருள் நம்மில் நிறைந்து, நமக்கும் இன்ன பிற உயிர்களுக்கும் நன்மை செய்வதற்காக தான் என்பதை இங்கு நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

பொதுவாக தியானம் காலை மற்றும் மாலை நேரங்களில் செய்வது நல்லது.

இப்படி ஆழ்ந்த தியான நிலையில் சுவாசம் மூலம் பிராணன் உட்சென்று மூலாதாரத்தை அடையும். அங்கே மூலாதார சக்தியானது வலுவடையும். இதனால் உடலானது பிரபஞ்ச சக்தியோடு இணைந்துகொள்ளும்.

பிரபஞ்ச சக்தியோடு இணைந்து கொண்ட உடல், ஆன்ம சக்திக்கு கட்டுப்படும். இப்படி கட்டுப்பட்ட உடலை ஆன்ம சக்தி பரிபூரணமாக ஆட்கொண்டு முதன்மையான சக்தியாக விளங்கும்.

ஆன்ம சக்தி ஆட்கொண்டதால் உடலும் மனமும் ஒரே நிலையில் ஒருங்கிணையும். இந்த நிலையே ஒருவரை சாந்த சொரூபியாக மாற்றும். இதைத்தான் ஆன்மீக சக்தி என்றும் அழைக்கின்றனர்.

இப்படிப்பட்ட ஆன்மீக சக்தியை அடைந்தவர்கள் எப்போதும் புன்முறுவலோடும் நிதானத்தோடும் காணப்படுவார்கள். இவர்கள் முக்காலத்தையும் உணரும் சக்தி பெறுவார்கள்.

இவர்கள் எண்ணிய எண்ணங்கள் எளிதில் ஈடேறும். மேலும் இவர்கள் விருப்பு, வெறுப்பின்றி அனைவரிடமும் அன்பை மட்டுமே செலுத்துவார்கள்.நாம் எதனை இந்த பிரபஞ்சத்திற்கு அனுப்புகிறோமோ அதுவே நமக்கு திரும்ப கிடைக்கும் என்பது விதி .

இந்த ஆன்மீக சக்தியை பெற்றவர்கள் தான் தவயோகிகளாகவும், ஞானிகளாகவும், சித்தர்களாகவும் போற்றப் படுகிறார்கள்.

இப்படிப்பட்ட ஆன்ம சக்தி கிடைக்காதவர்கள் உடல் என்ற சக்திக்கு மட்டுமே கட்டுப்படுவார்கள்.அறிவியல் அறிவு சொல்வதையே உண்மை என வாதிட்டு ,புறசுகங்கலாகிய,காமம்,குரோதம்,பேராசை,பொறாமை,சிற்றின்பம்,குறுக்கு வழியில் பொருளீட்டுதல் ,போன்ற விவகாரங்களில் ஈடுபடுவார்கள் .

இவர்களிடம் ஆன்மீக சக்தி பலமிழந்தே காணப்படும். இதனால் இவர்கள் அடிக்கடி தங்களின் எண்ணங்களையும், செயல்களையும் மாற்றிக் கொண்டே இருப்பார்கள்.மனநிம்மதியின்றி தவிப்பார்கள்

எதிலும் நிதானமின்றி காணப்படுவார்கள். எத்தகைய முடிவையும் இவர்களால் குறிப்பிட்ட நேரத்தில் எடுக்க முடியாது .

ஒருசில நேரங்களில் ஆன்மீக சக்தி இழந்தும் காணப்படுவதுண்டு. உலக சஞ்சாரங்களில் எளிதில் சிக்கிக் கொள்வார்கள்.

இவர்களுக்கு எப்போதும் ஞானம் கிடைக்காது. இவர்களின் மனம் ஒருநிலைப் படாது. இவர்களால் மூலாதார சக்தியையும் பிரபஞ்ச சக்தியையும் ஒருங்கிணைக்க முடியாது. ஆன்மிக சக்தியை பெற்றவர்கள்தான் சித்தர்கள்.

ஆன்மீக சக்தியை ஆட்கொண்டவர்களின் உடலும் உள்ளமும் ஒருங்கிணைந்து இருக்கும். மனம், புத்தி, காமம், குரோதம், அகங்காரம் இவற்றிலிருந்து முற்றிலும் விடுபட்டவர்களாக வலம் வருவார்கள்.

இப்படிப்பட்டவர்களை கண்டறிந்து அவர்கள் பெற்ற ஆன்ம சக்தியின் பலத்தையும், ஆசியையும் பெறுவதுதான் உண்மையான ஆன்மீக ஞானத்திற்கு சிறந்த வழி.

பிராணவாயுவை உள்வாங்கி மூலாதார சக்தியை தூண்ட தவம் செய்வதே சிறந்த வழியாகும். தவநிலையில்தான் சரசுவாசம் நடைபெறும்.

இந்நிலையில் தான் ஆன்மீக சக்தியைப் பெற முடியும்.
இதைத்தான் இருக்கும் இடத்தைவிட்டு இல்லாத இடம்தேடி எங்கெங்கோ அலைகின்றார் ஞான தங்கமே என்றும்,
ஊன் உடம்பே ஆலயம், என்று திருமூலரும் கூறுகிறார்கள்.

உள்ளத்தை கோவிலாக எண்ணி வழிபட்ட மகான்கள்தான் சித்தர்கள்.

அமைதியாக சில நிமிடங்கள் தனியாக அமர்ந்து பிராண வாயுவை உள் வாங்கி வெளியிட்டாலே இவர்கள் ஆன்மீக சக்தியை பெறலாம்.

சரசுவாசத்தின் மூலம் பிராணன் உட்சென்று மூலத்தில் முழு நிலையடையும்.

இந்நிலைதான் ஆன்மீக சக்தியை பெற்றுத்தரும்.

இந்நிலையை அடைந்தவர்களே சித்தர்கள்...இதனை நாம்மாலும் அடையமுடியும்.முழுப்பலன்கள் கிடைக்காவிட்டாலும் நமது பயிர்சிற்க்கேற்ப சிறு பலன்கலாவதுநிச்சயம் கிட்டும் .

ஆன்ம ஞானத்தை அடைய குருமார்களின் வழிகாட்டுதல் அவசியம்
நல்லதொரு குருவை தேடுங்கள் நிச்சயம் அவர்கள் நம்மைத்தேடி வருவார்கள் .

சிந்தனைகள் தொடரும் ...

26 August 2019

சிந்தனையை கொஞ்சம் மாற்றுவோம்...

பரேட்டோ கொள்கை ( Pareto principle )


பரேட்டோ கொள்கை (80/20 விதிஅல்லது காரணி இடைவெளியின் கொள்கை என்றும் அழைக்கப்படுகிறது) பல நிகழ்வுகளுக்குதோராயமாக 80% விளைவுகள் 20% காரணங்களிலிருந்து வருகின்றன எனக் கூறுகிறது.

சில உதாரணங்கள் உங்கள் பார்வைக்கு:
வணிக விற்பனையைப் பொறுத்தவரை, ஒரு நிறுவனத்தின் 20% வாடிக்கையாளர்களில் 80% விற்பனைக்கு பொறுப்பாவார்கள். மேலும், 80% முடிவுகளுக்கு 20% ஊழியர்கள் பொறுப்பாவார்கள். ஒரு திட்டத்தின் முதல் 20% முயற்சி திட்டத்தின் 80% முடிவுகளை அளிக்கிறது அடிக்கடி பயன்படுத்தப்படும் 20% சொற்கள் 80% வார்த்தை நிகழ்வுகளுக்கு
காரணமாகின்றன.    மக்கள் தங்கள் 20% ஆடைகளில்  80% முறை அணிவார்கள். உலகின் பணக்கார 20% மக்கள் உலக வருமானத்தில் 80% வைத்துள்ளனர்.சுருக்கமாக 80% வெளியீடு அல்லது முடிவுகள் 20% உள்ளீடு அல்லது செயலினால் வரும். சிறிய விஷயங்கள் தான் பெரும்பாலான முடிவுகளுக்குக் காரணமாகின்றன. விகிதம் 80/20 - எளிமைப்படுத்தும் நோக்கங்களுக்காகவே.  பொதுவான எண்கள். உண்மையில்இது 90/10, 95/5 அல்லது 99/1 என்று பொருள்படும். இந்த மன மாதிரியைப் பற்றிச் சொல்ல விரும்புவது என்னவென்றால், நீங்கள் வேறுவிதமாகக் கருதாத கேள்விகளை நீங்களே கேட்டுக்கொள்ள இது கட்டாயப்படுத்துகிறது. புத்திசாலித்தனமாகப்பயன்படுத்துவதால், இது உங்கள் கவனம் எங்கே, அது உண்மையில் எங்கு இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கும் ஒரு நிலையான நினைவூட்டலாகும்.

உங்கள் கவனத்தை சரியான இடத்தில் வைப்பதன் மூலம் - அது பணம், வேலை, உற்பத்தித்திறன், பொழுதுபோக்குகள் அல்லது வேறு எதையாவது - நீங்கள் உங்கள் வாழ்க்கையின் பொறுப்பில் இருப்பதில் தொடங்கி, நீங்கள் நினைத்ததை அடைவதில் முடிவடைகிறது. நீங்கள் செய்யவிரும்பும் முக்கிய பணிகளை அடையாளம் காணவும், அவற்றால் நினைத்ததை அடையவும் வழி வகை செய்கிறது..
#நல்லதே #நினைப்போம்; #நல்லதே #செய்வோம்

 துவாரகையை ஆட்சிபுரிந்த கண்ணன் தெய்வமாக இருந்தாலும், பூலோகத்தில் மானிடராக அவதரித்ததால் முக்தி (மரணம்) என்பது தவிர்க்க முடியாதது. தன் இறுதிக் காலம் நிறைவுறப் போகிறது என்பதை அறிந்த பகவான் ஒருநாள் ஹிரண்ய நதிக்கரையினையொட்டி அடர்ந்த புதர்கள் நிறைந்த குரா மரத்தடியில் கால்களை நீட்டி ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார். 

அப்போது "ஜரா' என்ற வேடன் ஒரு காட்டு முயலைத் துரத்திக் கொண்டு வந்தான். அது புதர்ப் பகுதியில் ஓடி மறைந்தது. அந்த வேளையில் கிருஷ்ணரின் கால்களில் ஒன்று வேடன் கண்களுக்கு முயல்போல் தெரிய, மறைந்திருந்து அம்பு எய்தான். அந்த அம்பு பகவானின் வலது குதிங்காலில் பலமாகத் தைத்ததும், "ஆ' என்ற அலறல் சத்தம் கேட்டு பதறினான் வேடன்; ஓடோடி வந்தான். அங்கே பகவான் கிருஷ்ணர்  காலில் அம்பு தைக்கப்பட்டு, உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பதைக் கண்ட வேடன், "பகவானே! உங்கள் பாதம் எனக்கு முயல்போல் தெரிந்ததால் மறைந் திருந்து அம்பு எய்தேன். என்னை மன்னித்து விடுங்கள்'' என்று கதறினான்.

வேடனே, வருந்தாதே. நாம் செய்த பாவங்கள் நம்மைப் பின் தொடர்ந்து வரும். தெரியாமல் செய்த பாவங்களை இப்பிறவியிலேயே பரிகாரங்கள் மூலம் நிவர்த்தி செய்திடலாம். ஆனால் தெரிந்து செய்த பாவங்களை எந்த வழிபாடுகளாலும் நிவர்த்தி செய்ய முடியாது. 

அதற்கு #நானே #உதாரணம்.

திரேதாயுகத்தில் நான் ராமனாக அவதரித்தபோது, வாலியை மறைந் திருந்து அம்பு எய்து கொன்றேன். அப்போது வாலி, "ராமா, எனக்கும் உனக்கும் என்ன பகை? எங்கள் விலங்கினத்தில் ஒரு பெண்ணை கடத்திச் செல்வது சகஜம். ஆனால், நீ என்னைத் தவறாகப் புரிந்துகொண்டாய். என்னிடம் நேருக்கு நேர் போர்புரிய முடியாது என்பதை அறிந்து, மறைந்திருந்து என்னை வீழ்த்தினாய். இதே நிலைமை #உனக்கு #என்னால் #ஏற்படும். 

தர்மம் என்று ஒன்றிருந்தால், எத்தனை காலமானாலும் உன்னை மறைந்திருந்து வீழ்த்துவேன்' என்று வேதனையுடன் சாபமிட்டான். #அந்த #சாபம்தான் #இன்று #பலித்தது.

#தெய்வமாக #இருந்தாலும் சிறிதளவு நெறி தவறினால் துன்பத்தை அனுபவித்தே தீரவேண்டும் என்பது பொது விதியாகும்.

 இதற்கு  எந்தவிதமான பரிகாரங்களும்,
யாகங்களும், 
தான - தர்மங்களும், வழிபாடுகளும் 
கைகொடுக்காது. 

அதைத்தான் நான் இப்போது அனுபவிக்கிறேன். வேடனே,  நீதான் அந்த வாலி. உன் சாபத்தினை நிறைவேற்றிவிட்டாய். முன்ஜென்ம நிகழ்வுகள் எதுவும் பூலோகத்தில் பிறந்தவர்களுக்கு நினைவுக்கு வராது. அதனால் உனக்கு இது தெரியவில்லை. என் அவதாரம் 
இன்றுடன் முடிந்தது. 

நீ நீடூழி வாழ்வாயாக'' என்று வாழ்த்திவிட்டு முக்தியடைந்தார் பகவான் கிருஷ்ணர்.

ஒருவருக்கு நாம் செய்யும் தீமை, மீண்டும் நமக்கே வந்துசேரும் என்னும் பேருண்மையை பகவான் தன் இரு அவதாரங்கள் மூலம் மனித குலத்துக்கு உணர்த்தியுள்ளார்.

எனவே, நல்லதே நினைப்போம்; நல்லதே செய்வோம். இறைவன் அருளால் எல்லாம் 

நலமாகவே நடக்கும்...
 சிந்தனைகள் தொடரும்...




19 August 2019

பரஸ்பர புரிதல்


பரஸ்பர புரிதல்

எதிரெதிர் கருத்துக்களை நீங்கள் தெளிவாக புரிந்துகொண்டு மதிக்கவில்லை என்றால் உங்கள் கருத்து மிகவும் மதிப்புக்குரியது அல்ல. முன்னேற்றம் என்பது புரிந்துகொள்வதன் மூலம் வருவது, கூச்சலிடுவது, வாதிடுவது, இழிவுபடுத்துதல் ஆகியவற்றால் அல்ல.

மறுபக்கம் நியாயமற்றதாக இருந்தாலும், நீங்கள் இன்னும் 
ஆக்ரோஷமாக நியாயமற்றவராக இருப்பதற்கு இது ஒரு காரணமல்ல. 
அதற்கு பதிலாக, புரிதலை உருவாக்குவதற்கான உங்கள் முயற்சிகளில் 
ஆக்ரோஷமாக இருங்கள்.

யாரோ ஒருவர் புரிந்துணர்வை ஏற்படுத்த வேண்டும், பின்னர், அந்த புரிதலை ஒத்துழைப்பு மற்றும் முன்னேற்றத்திற்கு வழிகாட்ட வேண்டும். இல்லையெனில், அதில் எதுவுமே நல்லதல்ல.

கருத்து வேறுபாடு மாறாமல் இருந்தால் ஒரு வாதத்தை வென்றவர் கூட உண்மையில் வெல்ல மாட்டார். உடன்படிக்கை விளைவிக்கத் தவறினால் ஒரு புள்ளியை நிரூபிப்பதில் எந்த அர்த்தமும் இல்லை.

பரஸ்பர புரிதல் கடினம். இன்னும் சிறிது முயற்சி, பொறுமை, உண்மையான கவனிப்பு,  இவற்றால் இது எப்போதும் சாத்தியமாகும்.

இதுவரை, சம்பந்தப்பட்ட அனைவரும், முன்னோக்கி நகர சிறந்த வழி பரஸ்பர புரிதலே. வாதத்தை வெல்வதற்கான உங்கள் விருப்பத்தை விட்டுவிட்டு, அதற்கு பதிலாக பரஸ்பர புரிந்துணர்வின் மூலம் மிகப் பெரிய வெற்றியைத் தேடுங்கள்.

18 August 2019

ஒரு நேர்மறையான தொடக்கம்(Think positive)


ஒரு நேர்மறையான தொடக்கம்.



வ்வொரு நாளும் நன்றியுடன் தொடங்குவதன் மூலம் உங்கள் வாழ்க்கையை உற்சாகப்படுத்துங்கள். நீங்கள் எழுந்திருக்கும்போது, ​​வேறு எதையும் செய்வதற்கு முன், உங்கள் கொடுப்பினைகளை எண்ணுங்கள். உங்களை படைத்த இறைவனுக்கு .அல்லது இந்த பிரபஞ்சத்தை இயக்கம் அந்த மஹா  சக்திக்கும் நன்றி சொல்லுங்கள் ஒவ்வொரு நாளும் சிறப்பான ஒன்றைக் கண்டுபிடித்து, அதற்காக நீங்கள் நன்றியுடன் இருக்க பழகுங்கள் அது ஒரு நாள் உங்களை ஒரு புது மனிதனாக மாற்றும். 


ஒவ்வொரு நாளையும் நேர்மறையான குறிப்பில் தொடங்குவதே சிறந்த வழியாகும், மேலும் இது நாள் முழுவதும் ஒரு பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தும். நன்றியுடன் செயல்படுவதை ஒரு வழக்கமாக்கிக் கொண்டால், உங்களுக்கு மிகச் சிறந்த சாத்தியக்கூறுகளுடன் ஒரு நாள் அமைவதற்கு வழிவகுக்கும். இது வாய்ப்புகளைப் பார்க்கவும், இல்லையெனில் மறைக்கப்பட்ட அல்லது மறந்துபோன வளங்களை பயன்படுத்தவும் உதவும்.

உங்கள் வாழ்க்கையில் பல நல்ல விஷயங்கள் உள்ளன. அவற்றை முழுமையாகப் பாராட்டுவதும் ரசிப்பதும் அர்த்தமுள்ள செயலாகும். நீங்கள் அதனைச் செய்யும்போது, ​​அந்த நேர்மறையான விஷயங்கள் இன்னும் வலுவாக வளரும். உங்கள் பல கொடுப்பினைகளை எண்ணி ஒவ்வொரு நாளையும் தொடங்குங்கள். அவ்வாறு செய்வதன் மூலம் நீங்கள் இன்னும் பலரை ஈர்ப்பீர்கள்.
இந்த  பிரபஞ்சத்தில் நாம் எதனை அடிக்கடி மனதில் நினைக்கின்றோமோ அதுதான் நம் வாழ்க்கையை வழி நடத்தும்...
உங்களுக்கு எது வேண்டுமோ அதனை இந்த பிரபஞ்சம் கொடுக்கத்தயாராக இறுக்கிறது அதனை பெறுவதும் வெறுப்பதும் நம் கையில் உள்ளது ..உங்களுக்கு பல பிரச்சினைகள் இருக்கலாம் தீராத சோகங்கள் இருக்கலாம் நான் எப்படி நேர்மறையாக சிந்திப்பது முடியவில்லையே என என்னலாம் ..தற்போது நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த திரைப்படத்தில் ஒரு பாடலின் வரிகள் (பாம்பு வந்து கடிக்கையில் பாவியின் உயிர் துடிக்கையில் யார் முகத்தில் பொங்கிவரும் சிரிப்பு )கண்டிப்பா முடியாதுதாங்க..ஆனா ஒன்றுமட்டும் சொல்ல முடியும். உங்கள் நண்பரிடத்தில் இத செஞ்சு பாருங்க உங்க முகத்த சும்மா கோபமா வச்சுகிட்டு திட்டிபாருங்க ...அவர்முகம் எப்படி மாறுதுன்னு பாருங்க ..மறுபடியும் சந்தோசமா வச்சுகிட்டு சிரிச்சிபாருங்க ..அவர்முகம் எப்படி பிரகாசமா மாருதுன்னு பாருங்க எப்படி இதல்லாம் நடக்குது ..நம்ம என்னத்துக்கு அவ்வளவு வலிமை இருக்குதுங்க .. சரி எப்படி மேலும் நம் எண்ணங்களை நேர்மறையா வச்சுகிறது.. அதற்க்கான பயிற்சிகள் ஏதாவது உண்டா? கண்டிப்பகா உண்டு.
அடுத்த பதிவில் சிந்திப்போம் ..  



17 August 2019

மனமின்றி விடை தருகிறோம்... இனி 2059 வரை காத்திருப்போம்.. உன்னை காண..!





மனமின்றி விடை தருகிறோம்... இனி 2059 வரை காத்திருப்போம்.. உன்னை காண..!இன்றுடன் விடைபெறும் அத்திவரதர்...!!
காஞ்சிபுரம் மாவட்டம் கடந்த 48 நாட்களாக விழா கோலம் பூண்டது. எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. இதற்கு ஒரே ஒரு காரணம் அத்திவரதர்.








டிவி, மீடியா, வாட்ஸ்அப், டிவிட்டர் என உலக மக்களால் தினமும் பேசப்பட்டுவந்த ஒரு விஷயம் தான் அத்திவரத பெருமாள்.

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் ஆலயத்தில் நூற்றுக்கால் மண்டபத்தின் வடக்கே உள்ள குளத்தில் இரண்டு நீராழி மண்டபங்கள் உள்ளன. தென்திசையில் உள்ள மண்டபத்தின் கீழே நீருக்கு அடியில் ஒரு மண்டபம் உள்ளது. அதில் அனந்தசரஸ் என்ற திருக்குளத்திற்குள் அத்திவரதர் இருப்பார்.

அத்திவரதர் சிலையை 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை வெளியே எடுத்து, பூஜைகள் செய்து, ஒரு மண்டல காலம் பக்தர்களின் தரிசனத்திற்காக வைப்பது வழக்கம்.

கடந்த 1979ஆம் ஆண்டு அத்திவரதர் சிலை பக்தர்களின் பார்வைக்காக வைக்கப்பட்டது. அதன்பின் இவ்வாண்டு (2019) கடந்த ஜூன் 30ஆம் தேதி வெளியே வந்தார்.


பூஜைகளுக்கு பின் ஜூலை 1ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 16ஆம் தேதி வரை சயன கோலத்திலும், நின்ற கோலத்திலும் பக்தர்களுக்கு இருவேறு நிலைகளில் காட்சி தந்து அருளினார் அத்திவரதர்.

கடந்த 47 நாட்களாக அருள்பாலித்து வந்த அத்திவரதர் தரிசனம் நேற்று இரவுடன் நிறைவடைந்தது. இன்றுமுதல் அத்திவரதர் அனந்தசரஸ் குளத்தில் சயன கோலத்தில் ஓய்வெடுக்கப் போகிறார்.

அத்திவரதரை காண தமிழகம் மட்டுமல்லாது நாடு முழுவதில் இருந்தும், வெளிநாட்டில் இருந்தும் தினசரி பல லட்சக்கணக்கான பக்தர்கள் காஞ்சிபுரத்தில் குவிந்தனர். இதனால் காஞ்சிபுரம் நகரமே திருவிழா போல் காட்சியளித்தது.

48 நாட்கள் அருள்பாலித்த அத்திவரதர் திருவிழா இன்றுடன் நிறைவடைகிறது. இன்று இரவு 10 மணியில் இருந்து 12 மணிக்குள் அத்திவரதர் சிலை அனந்தசரஸ் குளத்துக்குள் வைக்கப்படுகிறது. குளத்தில் உள்ள அத்திவரதர் மண்டபத்தின் கீழ் உள்ள அறையில் அத்திவரதர் சிலை வைக்கப்படும். அதன்பிறகு குளத்தில் வழக்கம்போல் நீர் நிரப்பப்படும். அனந்தசரஸ் குளத்தில் ஜலவாசம் செய்யும் அத்திவரதர், 40 ஆண்டுகளுக்கு பிறகு 2059-ம் ஆண்டு மீண்டும் அருள்பாலிக்க வருவார்.

இதில் உள்ள அதிசயம், அத்திவரதர் வீற்றிருக்கும் அனந்தசரஸ் திருக்குளம் இதுவரை வற்றினதே இல்லையாம்.

2019

இன்றுடன் விடைபெறும் அத்திவரதர்...

அத்திவரதா...🙏 மனமின்றி விடை தருகிறோம்...

மீண்டும் உன்னை காண...

2059ஆம் ஆண்டு வரை காத்திருக்கிறோம்....!!

உமக்கு...!!

🙏ஆயிரம் கோடி நமஸ்காரங்கள்...🙏