Subscribe

BREAKING NEWS

29 June 2018

ஸ்ரீ சத்குரு சாந்தானந்த ஸ்வாமிகள் தியான மண்டபம் திருப்பணி பத்திரிக்கை


அடியார் பெருமக்களுக்கு வணக்கம்.

நமது புண்ணிய பாரத தேசத்தில் - எண்ணற்ற தெய்வங்களுக்கு ஆயிரக்கணக்கான ஆலயங்கள் உள்ளது. பல ஆலயங்கள் வனங்களில், நதியோரம், கடலோரம், ஏரிக்கரை மீது, மலைகள், குன்றுகள் மீதும், மலை அடிவாரம் என்று பல இடங்களிலும், புராதன சிறப்புகளுடன் அமைந்துள்ளன.


அப்படி அமைந்துள்ள ஆலயங்களில் நமது தமிழகத்தில் பல ஆலயங்கள் புகழும், மகிமையும் பெற்று அருள்கின்றன. இவற்றில் பாடல் பெற்றதும், பஞ்ச பூத தலங்களில் ஒன்று என அக்னி தலமாக போற்றப்படுவதும் திருஅண்ணாமலை ஆகும். நம் தளத்தில் சிறிய அளவில் திருஅண்ணாமலை பற்றி தொட்டுக் காட்டியுள்ளோம். கிரிவலம் பற்றியும் சிறிய அளவிலே பதிவுகள் உள்ளது. இந்த தலம் மூர்த்தி,தலம் ,தீர்த்தம் என்றளவில் பெருமை உடையது. ஏன் இங்கு கிரிவலம் பிரசித்தம்..அந்த அண்ணாமலையார் இங்கே மலை ரூபத்தில் அல்லவா காட்சி தருகின்றார். சிவனாகநினைத்தால் அவர் சிவனாக இருப்பார். மலையாக நினைத்தால் அவர் அங்கே மலையாக இருப்பார். பார்ப்பவரின் கண்களுக்குத் தான் இவை புலப்படும். கிரிவலம் முடித்து கண்ணார் அமுதக் கடலை அன்னையுடன் காண ஒன்பது ராஜ கோபுரங்களுடன், ஆறு பிரகாரங்கள் அங்கே உள.



திருவாரூரில் பிறந்தால் முக்தி 
காசியில் இறந்தால் முக்தி 
சிதம்பரத்தை தரிசித்தால் முக்தி 
திருஅண்ணாமலையை நினைத்தாலே முக்தி 

என்று நினைத்தாலே முக்தி தரும் திருஅண்ணாமலையை நாம் கண்ணால் கண்டு, மனத்தால் நடந்து, கிடந்து அருள் பெற வேண்டும். நம் மானிடப் பிறப்பின் நிலை அறிய கிரிவலம் ஒன்றே மாமருந்து என்பதில் துளி அளவும் ஐயமில்லை. இது மட்டுமா? பகவான் ரமணர், சேஷாத்திரி.விசிறி ஸ்வாமிகள் என அருள் ததும்பும் மலையாக திருஅண்ணாமலை இருக்கின்றது.

கிரிவலப் பாதையில் இருபுறமும் பலவிதமான மடங்களும், ஆலயங்களும், அன்னதான அருட்கூடங்களும்,சித்தர்களின் மகான்களின் ஆசிரமங்களும் உள்ளன. உதாரணமாக ரமணாஸ்ரமம், சேஷாத்திரி ஆலயம், விசிறி சுவாமிகள்  ஆசிரமம் என்று குறிப்பாக சொல்லலாம். இன்றைய காலகட்டத்தில் மழைக்கு முன் தோன்றும் காளான்களாக புதுப்புது ஆலயங்கள், மடங்கள் உருவாக்கி வருகின்றது. இது போன்ற புது மடங்கள்,ஆலயங்களின் சேவை கண்டு உங்கள் ஆன்மிகப்பணியை அவர்களோடு இயைந்து செய்யவும்.

இங்கு நம்பிக்கையுடன் கிரிவலம் வந்தால் நம் பிறவிகடன்கள் தீரும் என்பது உறுதி. கிரிவலத்துடன் அஷ்ட லிங்க தரிசனம், நாம் ஏற்கனவே சொல்வது போல் ரமணாஸ்ரமம், சேஷாத்திரி ஆலயம், விசிறி சுவாமிகள்  ஆசிரமம், வள்ளலார், ஸ்ரீ ராகவேந்திரர் நேர் அண்ணாமலை, ஆதி அண்ணாமலை, மாணிக்கவாசகர் கோயில், இடுக்குப் பிள்ளையார், பஞ்சமுக தரிசனம் என ஒரு நாளில் அடங்கா தித்திக்கும் தரிசனம் நமக்கு கிடைக்கும்.

இத்தகு சிறப்புமிகு திருஅண்ணாமலையில் சற்குரு சாந்தானந்த சுவாமிகளுக்கு அன்னதானத்துடன் கூடிய ஓர் தியான மண்டபம் கட்ட ,சென்னையை சேர்ந்த சற்குரு சாந்தானந்த சுவாமிகள் டிரஸ்ட் முயற்சி செய்து வருகின்றார்கள். இந்த தியான மண்டபம் கிரிவலப்பாதையில் அடி அண்ணாமலை ஆலயத்திற்கு அருகிலும், வருணலிங்கம்,வாயு லிங்கத்திற்கு நடுவிலும், விபூதி பாபா இருக்கின்ற ஓம் நகரில் உருவாக்கப்பட உள்ளது.

சற்குரு சாந்தானந்த சுவாமிகள் தியான மண்டபத்தில் ஸ்ரீ கணபதி, ஸ்ரீ தட்சிணாமூர்த்தி, மஹா பெரியவா, சாந்தானந்த சுவாமிகள் திரு உருவங்களும், ஏனைய மகான்களின் அருள்படங்களும் அமைக்க உள்ளார்கள். தாங்கும் அறைகளும், ஆன்மிக நூலகமும் திறக்க உள்ளார்கள். 

ஆகவே, ஆன்மிக பெரியோர்கள் அனைவரும் இந்த திருப்பணியில் பங்கு கொண்டு,குருவருளும்,திருவருளும் பெறும்படி சற்குரு சாந்தானந்த சுவாமிகள் டிரஸ்ட் சார்பில் வேண்டுகின்றோம்.


அன்பர்கள் தங்களால் மனமுவந்து அளிக்கும் உதவியை ஸ்ரீ சற்குரு சாந்தானந்த சுவாமிகள் டிரஸ்ட் என்ற பெயருக்கு DD/Cheque மூலம் அளிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.மேலும் விபரங்களுக்கு  மேலே உள்ள இணைப்பை பார்க்கவும்.

மேலதிக விபரங்களுக்கு : சாந்தானந்ததாசன் K. ராம்மோகன் - 8148000910 & 9444200910

- மீண்டும் அடுத்த பதிவில்  இணைவோம்.


28 June 2018

சித்தர்களின் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கிய கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள்

அனைவருக்கும் வணக்கம்.


மலை யாத்திரை...நமக்கு மிகவும் பிடித்த ஒன்று. குறைவிலா அருளை வழங்கும் சித்தர் பெருமக்கள் குன்றுகளில் தான் இருக்கின்றார்கள். மலை என்றதும் முதலில் திருஅண்ணாமலை தான் நினைவிற்கு வரும். எத்தனை எத்தனை மகான்கள், ரிஷிகள்... பகவான் ரமணர், சேஷாத்திரி.விசிறி ஸ்வாமிகள் என அருள் ததும்பும் மலையாக திருஅண்ணாமலை இருக்கின்றது. அடுத்து சித்தர்களின் அருளில் சதுரகிரியை கூறலாம். காலாங்கி,சட்டைமுனி,ராமதேவர்,கோரக்கர் என 18 சித்தர்களும் ஆன்மிக அரசாங்கம் நடத்தும் இடமே சதுரகிரி ஆகும். மருதமலை என்றால் பாம்பாட்டி சித்தரின் அருளில் சித்தர்களின் சாம்ராஜ்ஜியமாக உள்ளது. இது போல் வெள்ளியங்கிரி,கொல்லிமலை பட்டியல் நீளுகின்றது. தமிழ் நாட்டில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் இது போல் ஒரு மலை உள்ளதாக தெரிகின்றது. தேனி மாவட்டத்தில் மிருகண்ட மகரிஷி மலை,சுருளி மலை என்று கூறலாம். இது போன்ற மலை அமைப்பு,சித்தர்களின் இருப்பு நம் தமிழ் நாட்டை தவிர வேறெங்கும் இருப்பதாக தெரியவில்லை. இங்குள்ள சித்தர்கள் சிவனின் மறு அம்சம் தானே..அதனால் தான் வேறெங்கும் இல்லாத இந்த நிலையை உணர்த்த "தென்னாடுடைய சிவனே போற்றி" என்று கூறுவதாக உணர்கின்றோம். இதனை மேலும் வேறொரு பதிவில் ஆராய்வோம்.



இப்படியான ஆன்மிக யாத்திரையில் மதுரையில் உள்ள மலை என்றால் டக்கென்று "திருப்பரங்குன்றம்" என்று சொல்வோம். திருப்பரங்குன்றத்துக்கு அருகிலே காகபுசுண்டர் மலை என்று ஒரு மலை தன் அருளை மதுரை முழுதும் வெளிப்படுத்தி வருகின்றது.இம்மலை புசுண்டர் மலை என்றும் திருக்கூடல்மலை என்றும் வழங்கப்பட்டு வருகின்றது. 300 ஆதி உயரம் கொண்ட இந்த மலையில் தான்  கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் இருக்கின்றார் என்பது சிறப்பு. அங்கேயே சுவாமிகளின் சீடரான சோமப்பா சுவாமிகளும் அருள் தந்து கொண்டு வருகின்றார்.








மதுரையிலிருந்து மானாமதுரை செல்லும் வழியில் இருக்கும் திருப்பாச்சேத்தியிலிருந்து தெற்கே எட்டு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது கட்டிக்குளம் . அங்கு குப்பமுத்து வேளாளர், கூத்தாயி அம்மாள் ஆகியோரின் மகனாக காளயுக்தி வருடம் ஆடி மாதம் பூராட நட்சத்திரத்தில் (1855 ஜூலையில்) மாயாண்டி சுவாமிகள் அவதரித்தார் . சிறு வயது முதலே ஆன்மிகத்தில் ஈடுபாடு கொண்டிருந்தார்.



கட்டிக்குளத்தில் உள்ள அய்யனார் கோயிலின் பூசாரியாக இருந்த குப்பமுத்து வேளாளர் ஒரு நாள் தம் மகன் மாயாண்டியையும் பூசை செய்வதற்காக அழைத்துச் சென்றார் . வெளிக்கூடத்தில் மகனை உட்காரவைத்துவிட்டு உள்ளே சென்று பூசைகளைச் செய்துவிட்டுத் திரும்பியவர் அதிர்ச்சியடைந்தார் .

குத்துக்காலிட்டுத் தியானத்தில் அமர்ந்திருந்த சிறுவன் மாயாண்டியின் தலைக்கு மேலே நல்ல பாம்பு ஒன்று படமெடுத்து ஆடாமல் அசையாமல் இருந்தது. அதன் உடற் பகுதியும் வால் பகுதியும் சிறுவனின் உடலைச் சுற்றி இருந்தன. கடும் விஷம் உள்ள நாகம் மகனைக் கொத்திவிடப் போகிறதோ என்கிற பீதியில், ஐயனாரப்பா எம் மகனைக் காப்பாத்து என்று கருவறையை நோக்கி ஓங்கிக் குரல் கொடுத்தார் குப்பமுத்து. பிஞ்சு மகனைப் பார்க்க வாஞ்சையுடனும் பயத்துடனும் திரும்பினார். என்னே அதிசயம்! நாகத்தைக் காணோம். தியானத்தில் இருந்து அப்போதுதான் மீண்டிருந்தான் மாயாண்டி. மகனிடம் ஏதோ ஓர் அபூர்வ சக்தி இருக்கிறது என்பதை அப்போது உணர்ந்துகொண்ட குப்பமுத்து, அவனை அப்படியே வாரி அணைத்துக்கொண்டார். இதே போன்ற சம்பவங்கள் பின்வந்த நாட்களிலும் தொடர்ந்தன. ஒரு கட்டத்தில் விஷயம் ஊருக்குள் பரவி, மாயாண்டியை ஒரு தெய்வ சக்தியாகவே அனைவரும் பார்க்க ஆரம்பித்தனர்.



சிறு வயதில் மாயாண்டி சுவாமிகள், சித்தர் பாடல்களைத் தேடித் தேடிப் படிப்பதையும் அடிக்கடி ஆலய யாத்திரைகள் சென்று வருவதையும் கண்டு அச்சமுற்ற பெற்றோர் அவருக்குத் திருமணமும் செய்து வைத்தனர். இருப்பினும் அவரது ஆன்மிகத் தேடல் குறையவில்லை. அவர் தமது தேடல்களுக்குச் சரியான வழிகாட்டும் குரு ஒருவரைத் தேடியலைந்தார். இறைவன் அதற்கும் வழிகாட்டினான்.

மாயாண்டி சுவாமிகளை இறைவன் எந்தப் பணிக்காக அனுப்பி இருக்கிறான் என்பது, அவனுக்கு மட்டும்தானே தெரியும்?! இல்லறத்திலேயே இவன் இருந்து விட்டால், எதிர்கால சமுதாயத்துக்கு என்ன பயனைச் செய்துவிட முடியும்? மாயாண்டியை இறைவன் ஆட்கொண்டான். விளைவு- இல்லறம் இனிக்கவில்லை. தவத்திலும் யோகத்திலும் காலத்தை ஓட்டினார். சிட்டாய்ப் பறக்க விரும்பினார். தவத்திலும் சமாதி நிலையில் உடல் கூட வேண்டும் என்று விரும்பினார்.  அதற்கு முன் தீட்சை பெற வேண்டுமே! உபதேசம் செய்வதற்கு ஒரு குரு வேண்டுமே! இந்த வேளையில்தான் ராமேஸ்வரத்துக்கு யாத்திரை சென்று கொண்டிருந்த தஞ்சாக்கூர் செல்லப்ப சுவாமிகள் என்பவர், கட்டிக்குளம் வந்தார்.





அவரைச் சந்தித்த மாயாண்டி சுவாமிகள் அவரிடம் தம் விருப்பத்தைக் கூறியதும் உடனே அவருக்குத் தீட்சையளித்தார். அந்த நிமிடமே அனைத்தையும் துறந்த மாயாண்டி சுவாமிகள் கட்டிய கோவணத்துடன் வீட்டை விட்டுப் புறப்பட்டார்.

பல புனித ஸ்தலங்களுக்குச் சென்று யோக சமாதியில் ஆழ்ந்த அவர் இறுதியாகத் திருக்கூடல் மலை என்ற காகபுஜண்டர் மலைக்கு வந்து சேர்ந்தார்.(இன்றைக்கும் காகபுஜண்டர் அந்த மலையில் யோக சாமதியில் இருப்பதாகக் கூறப்படுகிறது). அந்த மலையில் அரூபமாக இருக்கும் சித்தர்கள் அவரை வரவேற்று, இங்கேயே நிரந்தரமாகத் தங்கிவிடும்படி அருளாசி கூறினர் . அதன்படி மாயாண்டி சுவாமிகள் அங்கிருக்கும் குகை ஒன்றில் லிங்கம் ஒன்றைப் பிரிதிஷ்டை செய்து யோக சமாதியில் ஆழ்ந்து அட்டமாசித்திகளையும் பெற்றார் .


மாயாண்டி சுவாமிகளின் வாழ்க்கையில் நடந்த அற்புதங்கள் எண்ணற்றவை.

ஒருநாள் சுவாமிகள் மதுரைக்கு அருகே ஒரு சிறு கிராமத்தில் வசித்த பிராமணத்துக் தம்பதியினரின் இல்லத்திற்குள் திடீரென நுழைந்தார் . அத்தம்பதியினரிடம், “உங்களுக்குப் பத்தாவதாக ஒரு பிள்ளை பிறக்கப்போகிறது . அதற்குச் சுப்பிரமணி என்று பெயர் வை .ஆனால் அவன் சில காலம் மட்டும் உங்களுடன் இருப்பான் . பின்னர் அவனை இந்த உலகமே கொண்டாடும்” என்று ஆசி வழங்கினார் . அதன்படி பிறந்த சுப்பிரமணி தான் பின்னர் சுவாமிகளிடம் தீட்சை பெற்று ‘சாந்தானந்த சுவாமிகள்’ ஆனார். சேலம் புதுக்கோட்டை போன்ற இடங்களில் உள்ள ‘ஸ்கந்தாஸ்ரமம்’ அமைத்துப் பக்தர்களின் குறைகளைத் தீர்த்தார் .



ஒருமுறை சுவாமிகள் நாகப்பட்டினம் சென்றிருந்தார். சுவாமிகளைத் தரிசித்துத் திருநீறு பெறுவதற்காகப் பெரும் கூட்டம் கூடியிருந்தது . அப்போது ஒரு சிறுவன் திருநீறு வாங்குவதற்காக நீட்டிய கையைத் தொட்டதும் சுவாமிகள் மகிழ்ச்சியுடன் “நீ யோகக்காரனப்பா! உன் பேச்சைக் கேட்கப் பணத்தைக் கொட்டிக் கொடுப்பார்கள் .

அதனைக் கொண்டு ஏராளமான ஆலயங்களுக்குத் திருப்பணிகள் செய்யும் யோகமும் உனக்கு இருக்கிறது” என்று கூறி ஆசிர்வதித்தார் . அந்தச் சிறுவன்தான் பின்னாளில் திருமுருகக் கிருபானந்த வாரியார் சுவாமிகள் எனப் புகழ் பெற்றார் . சுவாமிகள் கூறியபடி சுமார் நாற்பது திருத்தலங்களுக்குத் திருப்பணிகளும் செய்தார்.

சுவாமிகளின் நெருங்கிய சீடரான இருளப்பக் கோனார் சுவாமிகளின் அறிவுரையின்படி திருக்கூடல் மலையில், தண்டாயுதபாணியின் சொரூபத்தைப் பிரதிஷ்டை செய்தார். இப்போது அங்கு பெரும் ஆலயம் ஒன்று எழுப்பப்பட்டிருக்கிறது. சுவாமிகளிடம் தீட்சை பெற்றுச் சீடர்கள் பலர் சித்தரானார்கள். கற்றங்குடி ரெட்டி சுவாமிகள், மூக்கையா சுவாமிகள், கச்சைகட்டி சுவாமிகள், வேலம்மாள், முத்துமாணிக்கம் சுவாமிகள், சோமப்பா சுவாமிகள், சாந்தானந்த சுவாமிகள் ஆகியோர் குறிப்பிடத்தகுந்தவர்கள்.



நீரின் மீது நடந்தது தண்ணீரில் விளக் கேற்றியது போன்ற பல சித்துக்களைச் செய்த மாயாண்டி சுவாமிகள் 1928-ம் ஆண்டு புரட்டாசி மாதம் ஆறாம் தேதி, தமது பக்தர்களிடம் இன்னும் இரண்டு ஆண்டுகளில் அடக்கம் ஏற்படும் என்று தெரிவித்தார் . அடக்கம் செய்ய வேண்டிய இடத்தைக் குறிப்பிட்டு அங்கே சமாதிக் குழியும் வெட்டச் செய்தார் .

சுவாமிகள் கூறியபடி 1930-ம் ஆண்டு புரட்டாசி மாதம் 11-ம் தேதி இரவு இருளப்பக் கோனாரின் இடது தோளில் சாய்ந்து “அப்பு இந்தச் சட்டையைக் கழற்றிவிடலாமா?” என்று கேட்டுவிட்டுச் சமாதியானார் . சமாதிக் குழிக்குள் சுவாமிகளின் பூத உடலை வைக்கும்போது அவரது ஜீவநாடி ஓடிக்கொண்டிருந்ததாம் . சுவாமிகளின் விருப்பப்படி அவரது சமாதிப் பீடத்தில் சுவாமிகள் பூசித்துவந்த விநாயகரின் சொரூபம் பிரதிஷ்டை செய்யப்பட்டது .









திருக்கூடல் மலை என்ற காகபுஜண்டர் மலையில் காகபுஜண்டர் இன்றும் அரூபமாக யோக சமாதியில் இருக்கின்றார் என்றும் அங்கு பல சித்தர்கள் அரூபமாக வாழ்ந்துவருவதாகவும் கூறப்படுகிறது . இப்படிப்பட்ட புனிதமான அந்த மலையின் அடிவாரத்தில் மாயாண்டி சுவாமிகள் ஜீவசமாதியடைந்து அதனை மேலும் புனிதமாக்கியிருக்கிறார் .



அதென்ன  சூட்டுக்கோல்? இவர் கையில் வைத்திருக்கும் சூட்டுக்கோல் நல்லவர்களுக்கு நன்மை தருவதாகவும் தீயவர்களுக்குத் தண்டனை தருவதாகவும் இருந்தது. ராமலிங்க சுவாமிகளின் காலத்துக்குப் பிறகு இந்த சூட்டுக்கோல் அவரின் சீடரான செல்லப்ப சுவாமிகளிடமும் அதன் பின் அவருடைய சீடரான மாயாண்டி சுவாமிகளிடமும் வந்தது. இன்றைக்கும் இந்தச் சூட்டுக்கோலை மாயாண்டி சுவாமிகளின் சமாதியில் தரிசிக்கலாம்.





எப்படி செல்வது?
மதுரை திருப்பரங்குன்றம் தியாகராஜர் பொறியியல் கல்லூரி நிறுத்தத்தில் இறங்கிக்கொண்டு, அங்கிருந்து பத்து நிமிடங்கள் நடந்தால், காகபுசுண்டர் மலை வந்துவிடும்.  இங்கு தான்  கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் மற்றும் சோமப்ப சுவாமிகள் ஜீவ சமாதி அமைந்துள்ளது.






- மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்

மீள்பதிவாக:-

பாரத்தைக் குறைத்து பரத்தை உணர்த்தும் பரஞ்சோதி பாபா - 7- ஆம் ஆண்டு மகா குருபூஜைப் பேரானந்த வழிபாடு - http://tut-temple.blogspot.com/2018/06/7_27.html

 உன்னுள் உத்தமனைக் காணும் வழி - மஹான் சங்கு சித்தர் அவர்களின் 119 ஆவது குரு பூஜை - http://tut-temple.blogspot.com/2018/06/blog-post_13.html

அருள்மிகு சோமப்பா சுவாமிகளின் 50 ஆம் ஆண்டு குருபூசை விழா அழைப்பிதழ் - http://tut-temple.blogspot.com/2018/06/50.html

என்னை நீ ஆள்வாய் சிவப்பிரகாச இறைவநல் தேசிக மணியே! - http://tut-temple.blogspot.com/2018/06/blog-post_5.html

திருச்சி வரகனேரி பிர்மரிஷி ஸ்ரீ குழுமியானந்த சுவாமிகள் குருபூஜை - http://tut-temple.blogspot.com/2018/06/blog-post_1.html

ஸ்ரீ கண்ணையா யோகி குரு பூஜை - http://tut-temple.blogspot.com/2018/05/blog-post_79.html

மண் உண்ட மகான் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மல்லையா சுவாமிகள் - http://tut-temple.blogspot.in/2018/05/blog-post_89.html

மீண்டும் மீண்டும் நம்மை அழைக்கும் குழந்தைவேல் சுவாமிகள் - உழவாரப் பணி அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2018/05/blog-post_21.html

சித்திரை பூசத்தில் குழந்தைவேல் சுவாமிகளிடம் சரண் அடைவோம் - http://tut-temple.blogspot.in/2018/04/blog-post_21.html

ஜாதகத்தை மாற்றி சாதகமாக்கும் குழந்தைவேலர் - உழவாரப் பணி அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_77.html

 ஜாதகத்தையே மாற்றும் குழந்தைவேலர்... - http://tut-temple.blogspot.in/2017/05/blog-post_22.html

 என் கடன் பணி செய்து கிடப்பதே - உழவாரப் பணி - http://tut-temple.blogspot.in/2017/08/blog-post_24.html

உன்னுள் உத்தமனைக் காணும் வழி சாகாக் கல்வி - http://tut-temple.blogspot.com/2017/07/blog-post_4.html

ஓம் அகஸ்த்திய நாதனே - ஸ்ரீ குருமண்டல தெய்வமே !  - http://tut-temple.blogspot.com/2018/03/blog-post_76.html

எந்தையும் தாயும் - கூடுவாஞ்சேரி அகத்தியர் ஆயில்ய ஆராதனை அறிவிப்பு 21/05/2018  - http://tut-temple.blogspot.com/2018/05/21052018.html

மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டா - கூடுவாஞ்சேரி அகத்தியர் ஆயில்ய ஆராதனை அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2018/04/blog-post_22.html

அகத்தியருக்கு ஆயில்ய ஆராதனை -புரட்டாசி -2017- http://tut-temple.blogspot.in/2017/09/2017.html

அகத்திய முனிவரின் பஞ்ச யாக ஷேத்திரம் - பஞ்செட்டி சதய பூஜை அழைப்பு - http://tut-temple.blogspot.in/2018/04/blog-post_74.html

குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!! - கூடுவாஞ்சேரி அகத்தியர் ஆயில்ய ஆராதனை அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2018/03/blog-post_89.html

கூடுவாஞ்சேரி அகத்தியர் ஆயில்ய ஆராதனை - 28/2/2018 - http://tut-temple.blogspot.in/2018/02/2822018.html

மனமது செம்மை யாக அகத்தியர் பூசை தானே - http://tut-temple.blogspot.in/2018/03/blog-post_6.html

27 June 2018

திருப்புகழைப் பாடப் பாட வாய் மணக்கும்

திருப்புகழை பாடப் பாட வாய் மணக்கும்
எதிர்ப்புகளை முருகா  உன் வேல் தடுக்கும்
நீ கொடுத்த தமிழ் அல்லவா புகழ்  எடுத்தது -அந்த
தமிழ் கொடுத்த அறிவல்லவா தலை சிறந்தது
முருகா முருகா முருகா.

நீ சிரித்த பிறகல்லவோ சிரிப்பு வந்தது
உன் நினைவிருக்கும் மனம் அல்லவோ பெருமை கொண்டது

சந்தனத்தில் நிறமெடுத்ததால் அழகன் ஆனவன்
சரவணத்தில்  உருவெடுத்ததால்  வேதமானவன்
முருகா முருகா முருகா

கந்தன் என்னும் பேரெடுத்ததால் கருணை ஆனவன்
அந்த கருணையினால் தொண்டருக்கும் தொண்டனானவன்

திருப்புகழைப் பாடப் பாட வாய் மணக்கும்
எதிர்ப்புகளை முருகா, உன் வேல் தடுக்கும்
முருகா…… உன் வேல் தடுக்கும்!




திருப்புகழின் திருப்புகழை இதை விட எளிதாக சொல்ல முடியுமா? திருப்புகழ் யார் பாடியது? இன்று குருபூஜையில் அருள் தரும் அருணகிரிநாதர் பாடியது. ஏற்கனவே அவரைப் பற்றி சிறிது பார்த்தோம். இன்றைய நன்னாளில் மீண்டும் திருப்புகழ் பற்றி சிந்திப்போம்.

திருப்புகழ் என்ற பெயரைப் பின்னால் யாரும் வைக்கவில்லை. அருணகிரியே ஒரு பாடலில் திருப்புகழ் என்று குறிப்பிடுகிறார்.

பக்கரை விசித்ரமணி பொற்கலனை இட்ட நடை
பட்சியெனும் உக்ர துரகமும் நீபப்
பக்குவ மலர்த்தொடையும் அக்குவடு பட்டொழிய
பட்டுருவ விட்டருள்கை வடிவேலும்
திக்கது மதிக்கவரு குக்குடமும் ரட்சைதரு
சிற்றடியு முற்றிய பனிருதோளும்
செய்ப்பதியும் வைத்துயர் திருப்புகழ் விருப்பமொடு
செப்பென எனக்கருள்கை மறவேனே

'முருகக் கடவுளை முன்னிறுத்திப் பாடப்பட்டதுதான் திருப்புகழ்னாலும் கூட, அதில் மற்ற சுவாமிகள் பற்றியும் உருகி உருகிப் பாடியிருக்கார் அருணகிரிநாதர்.'' என்பது கூடுதல் சிறப்பு.

திருப்புகழில் இப்போது கிடைத்திருப்பது 1307 பாடல்கள்தான். இன்னும் பல்லாயிரம் பாடல்கள் இருந்ததாகவும் அவை மறைந்து போனதாகவும் கூறுகிறார்கள்.


திருப்புகழைப் பாடிய அருணகிரி அந்தப் பாடல்களை ஓலைசுவடிகளில்  எழுதி வைக்கவில்லை. யாத்திரையாக சென்று ஆலய தரிசனம் செய்த கோயில்களில்  இருக்கும் அன்பர்கள் அந்தப் பாடல்களை ரசித்து எழுதி வைத்தார்கள். அப்படி எழுதி வைத்த பாடல்கள்தான் இன்று தப்பிப் பிழைத்து நமக்குக் கிடைத்திருக்கின்றன.திருப்புகழை அருணகிரி அறிவால் பாடவில்லை. அறிவால் இப்படி பாட முடியுமா ?



முருகன் அருளால் பாடினார்.  அருளால் பாடியதால் தான் திருப்புகழ் இன்னும் அருள் தருகின்றது.தமிழில் எந்த நூட்களுக்கு திரு என்று பெயர் சேர்ந்து வருகின்றதோ, அவையெல்லாம் இறையால் அருளப்பட்டவை, திருக்குறள்,திருவாசகம், திருப்புகழ் என் கூறலாம். திருப்புகழை முருகன் அருணகிரியை வைத்து  பாட வைத்தான். அந்தப் பாடல்களில் எத்தனையெத்தனை சந்தநயம்! எத்தனை தாள வகைகள் உண்டோ அத்தனையும் திருப்புகழ் பாடல்களில் உள்ளனவாம். அத்தோடு அளவிட முடியாத கவிச்சுவை வேறு. சொல்,பொருள்,இன்பம் என அனைத்தும் ஒருங்கே பெற்றது திருப்புகழ்.

இது மட்டுமா?

வேதம் வேண்டாம்,சகல வித்தை வேண்டாம்
நாதம் வேண்டாம்,நாத நூல் வேண்டாம், ஆதி
குரு புகழை மேவுகின்ற கொற்றவன்தாள்
போற்றும் திருப்புகழை கேளீர் தினம்

என்பது ஆன்றோர் வாக்கு. சரி.வாருங்கள் மூழ்கி சில முத்தெடுக்கலாம்.



கைத்தல நிறைகனி யப்பமொ டவல்பொரி
     கப்பிய கரிமுக ...... னடிபேணிக்

கற்றிடு மடியவர் புத்தியி லுறைபவ
     கற்பக மெனவினை ...... கடிதேகும்

மத்தமு மதியமும் வைத்திடு மரன்மகன்
     மற்பொரு திரள்புய ...... மதயானை

மத்தள வயிறனை உத்தமி புதல்வனை
     மட்டவிழ் மலர்கொடு ...... பணிவேனே

முத்தமி ழடைவினை முற்படு கிரிதனில்
     முற்பட எழுதிய ...... முதல்வோனே

முப்புர மெரிசெய்த அச்சிவ னுறைரதம்
     அச்சது பொடிசெய்த ...... அதிதீரா

அத்துய ரதுகொடு சுப்பிர மணிபடும்
     அப்புன மதனிடை ...... இபமாகி

அக்குற மகளுட னச்சிறு முருகனை
     அக்கண மணமருள் ...... பெருமாளே.

விநாயகர் துதி யுடன் திருப்புகழ் தொடங்குகின்றது. இந்த பாடலில் ஒரு சிறப்பு உள்ளது. இத்திருப்புகழில் உள்ள உயிர் எழுத்துக்களை மட்டும் கூட்டினால் 200 எழுத்துக்கள் வரும். சில ஊர்களில் 100 என்பதை பிள்ளையார் என்று கூறுவது மறைவு.இங்கு 200 வருகின்றது..எனவே இத்திருப்புகழை "இரட்டைப் பிள்ளையார்" என்பார்கள்.



அட..ஆரம்பமே அருமையாக உள்ளது. நமக்குத் தெரிந்த வரை "முத்தைத்தரு பத்தித் திருநகை" சில முறை கேட்டிருக்கின்றோம். இன்று "நாத விந்துக லாதீ நமோநம" என்ற பாடல் கேட்டோம். இன்னும் ஒரு நிகழ்வோடு பதிவை முழுமை செய்வோம்.

முருகனை வழிபடும் அடியாரைக் கண்டால் எமனும் பயப்படுவார். அருணகிரிநாதருக்கு அப்படியே. முருகன் அருள் பெறுவதற்கும் முன் அப்படியே பயப்படுகிறார்.

தமர குரங்களுங் காரி ருட்பி ழம்பு
மெழுகிய அங்கமும் பார்வை யிற்கொ ழுந்தும் 
தழலுமிழ் கண்களுங் காள மொத்த கொம்பு
முளகதக் கடமாமேல் தனிவரு மந்தகன் பாசம் விட்டெ றிந்து
அடவரு மென்றுசிந் தாகு லத்தி ருந்து தமரழ 
மைந்தருஞ் சோக முற்றி ரங்க மரணபக் குவமாநாள்

என்று கூறுகின்றார். தமிழ்க் கடவுள் முருகன் அருள் பெற்ற பின்னர் எமனுக்கே சவால் விடுகின்றார்.

தண்டா யுதமுந் திரிசூல மும்விழத் தாக்கியுன்னைத்
திண்டாட வெட்டி விழவிடு வேன்செந்தில் வேலுனக்குத்
தொண்டா கியவென் னவிரோத ஞானச் சுடர்வடிவாள்
கண்டா யடாவந்த காவந்து பார்சற்றென் கைக்கெட்டவே.

என்று எமனையே முடிந்தால் என்கைக்கு எட்டும்படி வந்து பார் என்று சவால் விடுகின்றார் என்றால் அது முருகன் அருள் முன்னிற்கத் தான். இதன் மூலம் நாம் உணர்வது யாதெனின் வேலும் மயிலும் சேவலும் துணையிருக்க பயமேன்?

இது போன்ற திருப்புகழ் செய்திகளை இனிவரும் பதிவுகளில் அறிய முருகன் அருள் புரியட்டும். சொல்,பொருள்,இன்பம் என அனைத்தும் பொருந்திய திருப்புகழைப் பாட பாட வாய் மட்டுமா மணக்கும்? பாடுபவர்களின் வாழ்க்கையும் மணக்கும்.



கந்தனுக்கு அரோகரா!
கடம்பனுக்கு அரோகரா!! 
கதிவேலனுக்கு அரோகரா!!!

- மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்.

மீள்பதிவாக :-

திருப்புகழைக் கேட்கும் செவி - ஸ்ரீமத் அருணகிரிநாதர் குருபூஜை விழா - http://tut-temple.blogspot.com/2018/06/blog-post_54.html

அழகெல்லாம் முருகனே ... அருளெல்லாம் முருகனே... - http://tut-temple.blogspot.com/2018/06/blog-post_47.html

தேனி சண்முகநாத மலை தரிசனம் (1) - http://tut-temple.blogspot.com/2018/06/1.html

வெற்றி வேல் வீர வேல் - தேனி சண்முகநாத மலை தரிசனம் - http://tut-temple.blogspot.com/2018/05/blog-post.html

இது சிவன் மலை ஆண்டவன் கட்டளை - உத்தரவுப் பெட்டி - http://tut-temple.blogspot.com/2018/06/blog-post_19.html

சண்முகா சரணம் - http://tut-temple.blogspot.com/2018/05/blog-post_84.html

முருகன் அருள் முன்னிற்க! பங்குனி உத்திரம் 2018 - http://tut-temple.blogspot.in/2018/03/2018.html

முருகன் அருள் முன்னிற்க! - பங்குனி உத்திரம் கொண்டாட்டம் - http://tut-temple.blogspot.com/2018/04/blog-post.html

நால்வரின் பாதையில்... திருப்புகழ் தலங்கள் - http://tut-temple.blogspot.in/2018/03/blog-post_30.html

வேலை வணங்குவதே நம் வேலை! - http://tut-temple.blogspot.com/2018/04/blog-post_2.html

பாரத்தைக் குறைத்து பரத்தை உணர்த்தும் பரஞ்சோதி பாபா - 7- ஆம் ஆண்டு மகா குருபூஜைப் பேரானந்த வழிபாடு

கடவுள் தரிசனம் செய்ய லட்சக்கணக்கானோர் கூடும் இடத்தில் வெகு சிலர் மட்டும் அந்த மகானைக் காண்பதற்காக வரிசையில் நின்று தரிசனம் செய்து இருக்கின்றார்கள்.தற்போது அவர் சித்தியாகி விட்டார். நாமும் அவரது பெயரை பலமுறை கேட்டிருக்கின்றோம். ஆனால் நேரில் சென்று தரிசிக்கும் நாள் எந்நாளோ? என்று காத்திருந்தோம். அவர் தான் பரஞ்சோதி பாபா. ஆம்.!‘பரஞ்சோதி பாபா’ என்று பொதுவாக அழைக்கப்படும் இவரை, ‘அய்யா, அப்பா, தாத்தா’ என்றும் அழைக்கிறார்கள். பதிவின் இறுதியில் முக்கிய அறிவிப்பும் இடம் பெற்றுள்ளது. நாம் இன்றைய பதிவில் பரஞ்சோதி பாபா  பற்றி உணர்த்த வேண்டும் என்று கனவில் கூட நினைக்கவில்லை. ஆனால் இன்று  நம்மை உணர்த்த வைத்தது பரஞ்சோதி பாபா  தான் என்பதில் துளி கூட ஐயமில்லை.



கலைத்துறையினர் அதிகம் பேர் இவருடைய பக்தர்கள்..இசையமைப்பாளர் சிற்பி, ஸ்ரீகாந்த் தேவா, டிரம்மர் சிவமணி, நடிகர்கள் விவேக், மோகன், நடிகை நீலிமா ராணி, இயக்குநர் வின்சென்ட் செல்வா ஆகியோர் இம்மகானின் தீவிர பக்தர்கள் என பட்டியல் நீளுகின்றது. இவர்களின் அனுபவத்தை தான் இனி நாம் காண இருக்கின்றோம்.

பாபாவின் இரண்டு கால்களும் பெரிதாக வீங்கியிருந்தது. இடது காலில் புண் ஏற்பட்டு அதுவும் புறையோடிப்போய் இருந்தது. தனது கைகளால் அதற்கு மருந்து தடவி சுத்தம் செய்தார் சீடர்கிருஷ்ணமூர்த்தி. பாபாவைக் காண வந்தவர்கள், அந்தப் பழுதடைந்த காலின் மீது தலை சாய்த்து வணங்கிவிட்டுச் சென்றனர். ‘‘எல்லாருடைய பாவங்களையும் தானே உள்வாங்கிக்கொள்வதால், அய்யாவின் கால்கள் பாதிக்கப்பட்டுள்ளது’’ என்றார் கிருஷ்ணமூர்த்தி.பாபா தொடர்ந்து எதையாவது முனுமுனுத்தபடி இருக்கிறார். யாரிடமும் எதுவும் பேசுவதில்லை.




பாபா வாழ்ந்த காலத்தில்யாருக்கும் எந்த உபதேசங்களையும் போதிப்பதில்லை. கொள்கை, கோட்பாடு என எதுவுமே இல்லை. அவர் வடபழனியில்தான் இருக்கிறார். இடத்தை மட்டும் சொல்லாதீர்கள். வேண்டியவர்கள் தேடி வருவார்கள்’’ என்கிறார்கள் பக்தர்கள்...

பல பேர் பல வித பிரச்சனைகளுடன் பாபாவை தரிசித்திருக்கிறார்கள் அவர்கள் பிரச்சனைகளை வெளியில் தெரியாமல் தீர்த்திருக்கிறார் பாபா என பல திரைப்பிரபலங்கள் கூறுகிறார்கள்...
ஸ்ரீபெரும்புதூர் அருகே இருக்கும் பால்நல்லூர் கிராமத்தில்தான் ஐயாவின் சமாதி இருக்கிறது.


இசைப் பயணத்துக்கு இடையே பக்திப் பயணத்தையும் தவம் போலவே செய்துவருகிறார் டிரம்ஸ் சிவமணி. பரஞ்சோதி பாபாவின் தீவிர பக்தர். வார்த்தைக்கு வார்த்தை அவரை ஐயா என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிடுகிறார். பரஞ்சோதி பாபாவுடனான தன் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறார் சிவமணி.

நதி மூலம், ரிஷி மூலம் கேட்கக்கூடாது என்று சொல்வார்கள். நானும் ஐயாவை அப்படியே ஏற்றுக் கொண்டேன். சென்னை வடபழனி வீதிகளில் வாழ்ந்த மகான் அவர். யாருக்கும் தன்னை வெளிப்படுத்திக்கொள்ளாதவர். நான் ஐயாவைத் தரிசித்த அந்த நாள் இன்றும் பசுமையாக நினைவில் இருக்கிறது. இது நடந்து கிட்டத்தட்ட 30 வருடங்கள் இருக்கும். பிரசாத் ஸ்டூடியோவில் இசையமைப்பாளர் இளையராஜா அவர்களுடன் பாடல் பதிவில் இருக்கிறேன். அப்போது சவுண்ட் இன்ஜினியர் முரளி என்பவர்தான் ஐயாவைப் பற்றி என்னிடம் சொன்னார். நானும் உடனே கிளம்பி சிவன் கோயில் தெருவுக்குச் சென்றேன். அங்கே ஜடைமுடியுடன் சாலையில் கைகட்டி நின்று கொண்டிருந்தார் அவர். என்னை அருகில் சேர்க்கவே இல்லை. நாளைக்குப் பார்க்கலாம் என்று சொல்லி அனுப்பிவிட்டார். இப்படியே மூன்று மாதம் நான் போவதும் அவர் என்னைத் திருப்பி அனுப்புவதுமாகவே இருந்தது. நான் கொஞ்சம்கூட சளைக்கவில்லை. ஒருநாள் மாலை என்னை உற்றுப் பார்த்தவர், ‘என்ன... என்னைக் கண்டுபிடிச்சிட்டியா?’ என்று கேட்டார். என்னை அவர் அருகில் அமரவைத்துக்கொண்டார். தோசை வாங்கிவரச் சொல்லி, ஒரே இலையில் இருவரும் சாப்பிட்டோம். அதுதான் துவக்கம். அதற்குப் பிறகு தினமும் ஐயாவைத் தரிசித்தால்தான் அன்றையநாள் நிறைவுபெற்ற திருப்தி எனக்கு. சமயங்களில் இரவு அவருடனேயே தங்கியும் விடுவேன்.




இடையில் ஆறு மாதம் ஜெர்மனிக்குச் சென்றிருந்தேன். ஐயாவைப் பார்க்க முடியவில்லையே என்ற கவலை மனதை அரித்தது. அப்போது இந்தியாவைப் பற்றிய டாகுமெண்ட்ரி தொலைக்காட்சியில் ஓடிக்கொண்டிருந்தது. அதைப் பார்த்ததும் மனம் ஐயாவையே சுற்றிச் சுற்றி வந்தது. சென்னையைக் காட்டினால் எப்படி இருக்கும் என நினைத்தேன். அடுத்த நொடி சென்னைத் தெருக்கள் திரையில் தோன்றின. வடபழனியைக் காட்டுவார்களா என்று மனம் ஏங்கியது. அடுத்தக் காட்சியில் வடபழனி வந்தது. ஐயா எனக்குக் காட்சி தருவீர்களா என மனம் அரற்றியது. சட்டென்று திரையில் ஐயாவின் திருவுருவம்! அது அப்படியே வடபழனி கோயிலுக்குள் சென்று மறைந்துவிட்டது. நானும் அந்தக் காட்சியை ரீவைன்ட் செய்து பார்த்து சிலிர்த்துவிட்டேன். கண்டம் தாண்டி காட்சி தந்த ஐயாவின் உருவம் ஆயுளுக்கும் மறக்காது.

இப்படித்தான் இன்னொரு சம்பவமும் நடந்தது. நான் ஏவிஎம் ஸ்டூடியோவில் இருந்தபோது பிரான்ஸ் நாட்டில் இருந்து இரண்டு பேர் என்னை இசை நிகழ்ச்சிக்கு அழைக்க வந்திருந்தார்கள். ஐயாவிடம் கேட்டுவிட்டு ஒப்புக்கொள்ளலாம் என்று அவரிடம் சென்றேன். என்னைப் பார்த்ததுமே, ‘என்ன, ரெண்டு பேர் வந்தாங்களா?’ என்று கேட்டார். அதிகம் பேசமாட்டார். ஆனால் எதையுமே அருகிருந்து பார்த்தது போலவே பட்டென உடைத்துச் சொல்லிவிடுவார். என்ன நடக்கும் என்பதையும் சொல்வார். ஆனால் தன்னிடம் இருக்கும் இந்த தீட்சண்யத்தை அவர் வெளிப்படுத்திக் கொண்டதே இல்லை. பரதேசிக்கோலத்துடன் தான் இருப்பார். மழையோ,வெயிலோ பொருட்படுத்த மாட்டார். மழை அடித்துப் பெய்தாலும் அவர் நிற்கிற இடம் நனையாது.
ஒருமுறை அவருக்கு மிகவும் முடியாமல் போனது. அவர் மருந்து, மாத்திரைகளை அனுமதிக்கவே மாட்டார். அருகில் இருந்தவர்கள் அழைத்தும் அவர் மருத்துவமனைக்குச் செல்ல சம்மதிக்கவில்லை. எனக்குத் தகவல் கிடைத்து நான் சென்று அவரை அழைத்தேன்.



அப்போதும் அசைந்து கொடுக்கவில்லை. யாரையும் தொடக்கூட அனுமதிக்கவில்லை. தன்னைத் தேடி வருகிறவர்களின் வியாதை வாங்கி தன் காலில் வைத்துக் கொண்டதால்தான் காலில் புண் வந்து, புறையோடிப் போயிருக்கும். கால் வீக்கம், செப்டிக் ஆகிவிடக்கூடாது என்பதற்காக என் மருத்துவ நண்பரை வரவழைத்தேன். அப்போதும் சிகிச்சைக்கு உடன்படவில்லை. எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. காபியில் மாத்திரையைக் கலந்து அவரிடம் கொடுத்தேன். ‘இதை நான் குடிச்சுதான் ஆகணுமா?’ என்று கேட்டார். பாதியைக் குடித்துவிட்டு மீதியை என்னிடம் கொடுத்து குடிக்கச் சொன்னார். நானும் வாங்கிக் குடித்தேன். காபி, ரசமாக மாறியிருந்தது.
தங்கள் மகளின் இதய அறுவை சிகிச்சைக்குத் தேதி குறித்துவிட்டு ஐயாவைப் பற்றி கேள்விப்பட்டு அவரைப் பார்க்க வடநாட்டு தம்பதி வந்திருந்தனர். அந்தக் குழந்தையை அருகே அழைத்து ஆரஞ்சுப்பழத்தைக் கொடுத்து அனுப்பினார் ஐயா. மருத்துவமனையில் அந்தக் குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தைக்கு இதயத்தில் அடைப்பு சரியாகியிருந்ததைப் பார்த்து அதிசயித்துவிட்டார்கள். அறுவை சிகிச்சைக்காக கட்டிய பணத்தைத் திரும்ப வாங்கிக் கொண்டு ஐயாவைத் தரிசிக்க வந்தார்கள். அவர்கள் ஊருக்குச் சென்ற பிறகும் தொடர்ந்து ஐயாவுக்குக் கடிதங்கள் எழுதினார்கள்.


இதோ அடுத்து ஜுனியர் விகடன் குழுவின் சந்திப்பு...

அய்யா... உங்களைப் பார்க்க பத்திரிகைல இருந்து வந்திருக்காங்க’’ என்றவாறு ஜூ.வி.யை அவர் மடியில் வைத்தார் அவரது சீடர் கிருஷ்ணமூர்த்தி. ‘‘தெரியுமே! ஜூனியர் விகடன்’’ என்றபோது நமக்குத் தூக்கிவாரிப்போட்டது. ஏனென்றால் நம் வருகை குறித்து பாபாவிடம் தெரிவிக்கவும் இல்லை. தெரிவிப்பது சாத்தியமும் இல்லை. சிபாரிசுகளுக்கு அங்கே வேலை இல்லை. ‘‘நீ நூறு ரூபா கொடு’’ என்றார், பாபா நம்மிடம்.

நாம் பணத்தைக் கொடுத்ததும், ‘‘உங்களுடைய கடன் தீர்ந்துவிட்டது. இனி உங்களுக்கு அடுத்த பிறவி கிடையாது’’ என்றார் அருகிலிருந்த கிருஷ்ணமூர்த்தி. ஒரு நிமிடம் நம்மைப் பார்த்த பாபா, படீரென முகத்தைத் திருப்பிக்கொண்டார். நாம் அவர் அருகே உட்கார்ந்தோம். பாபாவின் வேட்டியை முழங்காலுக்கு மேல் உயர்த்திவிட்ட கிருஷ்ணமூர்த்தி, அவருக்குப் பணிவிடை செய்ய ஆரம்பித்தார். நாம் அதிர்ச்சியில் உறைந்துபோனோம்.

பாபாவின் இரண்டு கால்களும் பெரிதாக வீங்கியிருந்தது. இடது காலில் புண் ஏற்பட்டு அதுவும் புறையோடிப்போய் இருந்தது. தனது கைகளால் அதற்கு மருந்து தடவி சுத்தம் செய்தார் கிருஷ்ணமூர்த்தி. பாபாவைக் காண வந்தவர்கள், அந்தப் பழுதடைந்த காலின் மீது தலை சாய்த்து வணங்கிவிட்டுச் சென்றனர். ‘‘எல்லாருடைய பாவங்களையும் தானே உள்வாங்கிக்கொள்வதால், அய்யாவின் கால்கள் பாதிக்கப்பட்டுள்ளது’’ என்றார் கிருஷ்ணமூர்த்தி.
பாபா தொடர்ந்து எதையாவது முனுமுனுத்தபடி இருக்கிறார். யாரிடமும் எதுவும் பேசுவதில்லை. நாமாக விடைபெற்று வெளியே வந்தோம்.

செங்கோட்டையைச் சேர்ந்த கண்ணன் நம்மிடம், ‘‘என் அம்மாவை ஹாஸ்பிட்டலில் சேர்த்திருந்தேன். ‘48 மணிநேரம்தான் இருக்கு. ஆக வேண்டியதைக் கவனியுங்கள்’ என்று டாக்டர்கள் கைவிரித்துவிட்டனர். நாம் பாபாவிடம் வந்து அழுதேன். என் கரங்கைப் பற்றியவர், இரண்டு நாட்களும் தன்னுடனே என்னை தங்க வைத்துக்கொண்டார். மூன்றாம் நாள் ‘அம்மாவை ஐ.சி.யூ.வில் இருந்து சாதாரண பெட்டுக்கு மாற்றிவிட்டதாகவும் உயிருக்கு ஆபத்தில்லை’ எனவும் எனக்குத் தகவல் வந்தது. அதன் பிறகுதான் என்னை வெளியேற அனுமதித்தார்’’ என்கிறார்.

அங்கு வந்திருந்த நடிகை நீலிமாராணி, ‘‘நம்பிக்கையோடு பாபாஜியை தரிசிக்கவேண்டும். என் அப்பாவுக்கு உடம்பு சரியில்லாமல், வாரத்தில் பல நாட்கள் ஆஸ்பிட்டலிலேயே கிடந்தோம். கடுமையான பணப் பிரச்னை வேறு. நான், நாள் முழுக்க பாபாஜியின் காலடியில் கிடந்தேன். அடுத்த ஒரு வாரத்தில் கலைஞர் டி.வி, கன்னடத்தில் விசா டி.வி இரண்டிலும் மிகப்பெரிய ஒப்பந்தங்கள் எனக்கு கைகூடியது. இன்றோடு என் அப்பா இறந்து பத்து நாட்கள் ஆகிறது. இதுவும் பாபாவின் கட்டளைதான்’’ என்கிறார் நெகிழ்ச்சியுடன்.

நம்மிடம் பேசிய சில சினிமா தொழிலாளர்கள், ‘‘பத்தாண்டுகளுக்கு முன் தொழிலாளர் சங்கமான ஃபெப்சிக்கும் தயாரிப்பாளர்களுக்கும் பெரிய அளவில் சம்பளப் பிரச்னை உருவாயிற்று. பாபாவிடம் வந்த நாங்கள், ‘சாப்பாட்டுக்கே வழியில்ல சாமி. பட்டினி கிடந்து சாகிறோம்’ என்று கதறியழுதோம். அன்றிரவு நடு வீதிக்கு வந்த பாபாஜி, ‘வேலை செய்றவனெல்லாம் சோத்துக்கு வழியில்லாம கஷ்டப்படுறான். நீங்க ஏ.சி. ரூம்ல பொம்பளைங்களோட கூத்து நடத்துறீங்களா?’’ என்று கெட்ட கெட்ட வார்த்தைகளால் திட்டிவிட்டு, ‘உடனே அவங்களைக் கூப்பிட்டுப் பேசுங்கடா’ என்று வெற்றிடத்தைப் பார்த்து கட்டளையிட்டார். அடுத்த நாளே எங்கள் இரு தரப்புக்கும் சமாதானமாகிவிட்டது’’ என்றனர்.

‘‘பாபா, யாருக்கும் எந்த உபதேசங்களையும் போதிப்பதில்லை. கொள்கை, கோட்பாடு என எதுவுமே இல்லை. அவர் வடபழனியில்தான் இருக்கிறார். இடத்தை மட்டும் சொல்லாதீர்கள். வேண்டியவர்கள் தேடி வருவார்கள்’’ என்கிறார்கள் பக்தர்கள்.

நாமும் கடந்த முறை வடபழனி சென்ற போது, தரிசனம் செய்தோம். நகர இரைச்சலில் அந்த இடம் பேரமைதியாய் இருந்தது. உள்ளத்தில் சற்று அமைதி கிடைத்தது. மனம் ஒடுங்கியது. அவரை பார்க்க பார்க்க, அந்த பரத்தை பார்த்தது போலவே உணர்ந்தோம்.



இதற்கு முந்தைய பதிவில் சொன்னது போல், எந்த ஒரு உபதேசமும் இங்கே இல்லை. வரலாம், தியானத்தில் அமரலாம். தாத்தாவிடம் கோரிக்கை வைக்கலாம். கோரிக்கை வைப்பதோடு நம் கடமை முடிந்து விடுவதில்லை. நாமும் நமது அகத்தை கொஞ்சமேனும் உணர்ந்து திருத்த வேண்டும். பிறகென்ன? மற்றவற்றை பரஞ்சோதி பாபா பார்த்துக் கொள்வார்.



இதோ..அன்றைய தினம் அடியார் ஒருவர் சிவ புராணம் பயாடிக் கொண்டு இருந்தார். அதுவும் தன்னிலை மறந்து, அந்த பரத்துடன் கலந்து என்பது அவரை பார்த்த போது புரிந்தது. இதோ. நம் தள உறவுகளுக்காக..பாரத்தைக் குறைத்து பரத்தை உணர்த்தும் பரஞ்சோதி பாபா வின் திருப்பாதம் இங்கே தருகின்றோம். கண்ணில் ஒற்றிக் கொள்ளுங்கள். நம் பாவத்தை துடைக்க இவர் போன்ற மகான்கள் நமக்குக் கிடைத்தது நமது பாக்கியமே.



இதோ..மற்றுமொரு அழைப்பிதழ் இங்கே பகிர்கின்றோம். வடபழனி அய்யா சத்குரு ஸ்ரீலஸ்ரீ பரஞ்சோதி பாபா அவர்களின் 7- ஆம் ஆண்டு மகா குருபூஜைப் பேரானந்த வழிபாடு வருகின்ற 30/06/2018 & 01/07/2018 அன்று பால்நல்லூரில் நடைபெற உள்ளது. சித்த அடியார் பெருமக்கள் கலந்து கொண்டு அவரின் அருள் பெற வேண்டுகின்றோம்.






நாம சங்கீர்த்தனம், சத்சங்கம், சிறப்பு இன்னிசை நிகழ்ச்சிகள், தமிழ்வேத நாதவேள்வி, சொற்பொழிவுகள், திருப்புகழ் தேவார அருட்பா திருமுறை இன்னிசை நிகழ்ச்சிகள், அன்னம்பாலிப்பு என இரு தினங்களும் கொண்டாட்டம் தான்.இந்த வழிபாட்டிற்காக இலவச வாகன வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும் விபரங்களுக்கு அழைப்பிதழை பார்க்கவும்.

- மீண்டும் அடுத்த பதிவில் இணைவோம்.

மீள்பதிவாக:-

உன்னுள் உத்தமனைக் காணும் வழி - மஹான் சங்கு சித்தர் அவர்களின் 119 ஆவது குரு பூஜை - http://tut-temple.blogspot.com/2018/06/blog-post_13.html

அருள்மிகு சோமப்பா சுவாமிகளின் 50 ஆம் ஆண்டு குருபூசை விழா அழைப்பிதழ் - http://tut-temple.blogspot.com/2018/06/50.html

என்னை நீ ஆள்வாய் சிவப்பிரகாச இறைவநல் தேசிக மணியே! - http://tut-temple.blogspot.com/2018/06/blog-post_5.html

திருச்சி வரகனேரி பிர்மரிஷி ஸ்ரீ குழுமியானந்த சுவாமிகள் குருபூஜை - http://tut-temple.blogspot.com/2018/06/blog-post_1.html

ஸ்ரீ கண்ணையா யோகி குரு பூஜை - http://tut-temple.blogspot.com/2018/05/blog-post_79.html

மண் உண்ட மகான் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மல்லையா சுவாமிகள் - http://tut-temple.blogspot.in/2018/05/blog-post_89.html

மீண்டும் மீண்டும் நம்மை அழைக்கும் குழந்தைவேல் சுவாமிகள் - உழவாரப் பணி அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2018/05/blog-post_21.html

சித்திரை பூசத்தில் குழந்தைவேல் சுவாமிகளிடம் சரண் அடைவோம் - http://tut-temple.blogspot.in/2018/04/blog-post_21.html

ஜாதகத்தை மாற்றி சாதகமாக்கும் குழந்தைவேலர் - உழவாரப் பணி அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_77.html

 ஜாதகத்தையே மாற்றும் குழந்தைவேலர்... - http://tut-temple.blogspot.in/2017/05/blog-post_22.html

 என் கடன் பணி செய்து கிடப்பதே - உழவாரப் பணி - http://tut-temple.blogspot.in/2017/08/blog-post_24.html

உன்னுள் உத்தமனைக் காணும் வழி சாகாக் கல்வி - http://tut-temple.blogspot.com/2017/07/blog-post_4.html

ஓம் அகஸ்த்திய நாதனே - ஸ்ரீ குருமண்டல தெய்வமே !  - http://tut-temple.blogspot.com/2018/03/blog-post_76.html

எந்தையும் தாயும் - கூடுவாஞ்சேரி அகத்தியர் ஆயில்ய ஆராதனை அறிவிப்பு 21/05/2018  - http://tut-temple.blogspot.com/2018/05/21052018.html

மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டா - கூடுவாஞ்சேரி அகத்தியர் ஆயில்ய ஆராதனை அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2018/04/blog-post_22.html

அகத்தியருக்கு ஆயில்ய ஆராதனை -புரட்டாசி -2017- http://tut-temple.blogspot.in/2017/09/2017.html

அகத்திய முனிவரின் பஞ்ச யாக ஷேத்திரம் - பஞ்செட்டி சதய பூஜை அழைப்பு - http://tut-temple.blogspot.in/2018/04/blog-post_74.html

குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!! - கூடுவாஞ்சேரி அகத்தியர் ஆயில்ய ஆராதனை அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2018/03/blog-post_89.html

கூடுவாஞ்சேரி அகத்தியர் ஆயில்ய ஆராதனை - 28/2/2018 - http://tut-temple.blogspot.in/2018/02/2822018.html

மனமது செம்மை யாக அகத்தியர் பூசை தானே - http://tut-temple.blogspot.in/2018/03/blog-post_6.html

26 June 2018

திருப்புகழைக் கேட்கும் செவி - ஸ்ரீமத் அருணகிரிநாதர் குருபூஜை விழா

அருணகிரிநாதர் தமிழ் நாட்டில் கி.பி. 15 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்து முருகக் கடவுள் மீது பாடல்கள் எழுதி புகழ் பெற்ற அருளாளர். இவர் திருவண்ணாமலையில் பிறந்தார். இவர் தமிழ் மொழி, வடமொழி ஆகிய இரு மொழிகளிலும் புலமை பெற்றவர். இவர் ஆயிரக்கணக்கான பல்வேறு இசைச் சந்தங்களில் பாடினார். கருத்தாழமும், சொல்லழகும், இசைத்தாளச் செறிவும் நிறைந்தது இவர் பாடல்கள். இவர் எழுதிய திருப்புகழில் 1307 இசைப்பாடல்கள் உள்ளன. இவற்றுள் 1088க்கும் மேற்பட்ட சந்த வேறுபாடுகள் உள்ளன என்று கணித்து இருக்கிறார்கள்.


இவருடைய நூல்கள் தேவாரம், திருவாசகம் போல் மந்திர நூலாகவும், நாள்தோறும் இறைவனைப் போற்றிப்பாடும் நூலாகவும் பக்தி வழி பின்பற்றுவோர் கொள்ளுகின்றனர்.

அருணகிரிநாதர் என்றாலேயே அவர் அருளிச் செய்த திருப்புகழ், கந்தரனுபூதி, கந்தரலங்காரம் முதலிய அற்புத பிரபந்தங்கள் கருத்தில் வரும். அவற்றின் வழியாகப் பிரவாகிக்கும் திருமுருகன் திருவருள் கருத்தை நிறைவிக்கும்.

திருவண்ணாமலை என்று சிலரும், காவிரிப்பூம்பட்டினம் என்று சிலரும் அருணகிரிநாதர் பிறந்த இடம் என்று சொல்கின்றனர். தந்தையார் பெயர் திருவெங்கட்டார் என்றும் தாயார் பெயர் முத்தம்மை என்றும் சொல்கின்றனர். திருவண்ணாமலைக்கு எப்போது வந்தார் என்பது சரிவரத் தெரியவில்லை. சிலர் இவருடைய தாயார் ஒரு பரத்தை என்றும் சொல்கின்றனர். இவருக்கு ஒரு மூத்த சகோதரி இருந்தாள். திருமணம் செய்து கொள்ளாமல் தம்பியின் வாழ்க்கையையே நினைத்துத் தம்பிக்குச் சேவை செய்து வந்ததாய்ச் சொல்லுவதுண்டு. அருணகிரிநாதரின் தமக்கையார் அருணகிரிநாதரைச் சிறு வயதில் இருந்து மிகவும் செல்லம் கொடுத்து வளர்த்து வந்தார். இவர் தீய செயல்களைச் செய்கின்றார், சிறு வயதில் இருந்தே பெண்ணாசை கொண்டவராய் இருக்கிறார் என்பது தெரிந்தும் அந்த அம்மையார் நாளாவட்டத்தில் இவர் திருந்துவார் என எதிர்பார்த்தார். ஏனெனில் அருணகிரி இளமையிலே நல்ல கல்வி கற்றுத் தமிழில் உள்ள இலக்கிய, இலக்கணங்களைக் கற்றுத் தேர்ந்திருந்தார். உரிய வயதில் திருமணமும் ஆகியது. ஆனாலும் இவருக்கு முற்பிறவியின் பயனாலோ என்னவோ, பெண்களின் தொடர்பு அதிகமாய் இருந்தது. வீட்டில் கட்டிய மனைவி அழகியாய் இருந்தும், வெளியில் பரத்தையரிடமே உள்ளத்தைப் பறி கொடுத்ததோடு அல்லாமல், கொஞ்சம் கொஞ்சமாய்ச் சொத்தையும் இழந்து வந்தார். எந்நேரமும் காமத்திலே மூழ்கித் திளைத்ததன் விளைவாய் சொத்தை இழந்ததோடு அல்லாமல், பெருநோயும் வந்து சேர்ந்தது இவருக்கு.

என்றாலும் அந்நிலையிலும் இவருக்குப் பெண்ணின் அண்மை தேவைப்பட, கட்டிய மனைவியைக் கட்டி அணைக்க முற்பட்டவரை மனைவி வெறுத்து ஒதுக்க, இவர் சகோதரி தன்னைப் பெண்டாளுமாறு கோபத்துடனும், வருத்தத்துடனும் இவரிடம் சொல்ல தன் தீய செயல்களால் ஏற்பட்ட விளைவு குடும்பத்தையே உருக்குலைத்ததை எண்ணி இவர் வீட்டை விட்டே வெளியேறிக் கால் போன போக்கில் சென்றார். அப்போது ஒரு பெரியவர் இவரைக் கண்ணுற்றார். அவர் தான் அருணாசலேஸ்வரர் என்றும் சொல்லுகின்றனர். குமரக் கடவுள் என்றும் சொல்லுவதுண்டு. எது எப்படி இருந்தாலும் அருணகிரிநாதருக்கு அருட்பேராற்றல் சித்திக்கும் நேரம் நெருங்கி விட்டது. அந்தப் பெரியவர் அவருக்கு, “குன்றுதோறாடும் குமரக் கடவுளைப் பற்றிச் சொல்லி, அந்த ஆறெழுத்து மந்திரத்தையும், அதன் உட்பொருளையும், சரவணபவ என்னும் சொல்லின் தத்துவத்தையும் விளக்கி, குமரனைப் போற்றிப் பெருவாழ்வு வாழச் சொல்லி ஆசீர்வாதம் செய்தார். என்றாலும் குழப்பத்தோடு இருந்த அருணகிரி சரியாகச் செவி சாய்த்தாரில்லை. ஒருபக்கம் பெரியவரின் பேச்சு. மறுபக்கம் குழப்பமான மனது. சற்றுத் தெளிவடைகிறது மனம் என நினைத்தால் மீண்டும், மீண்டும் குழப்பம். முருகனை நினைத்து தியானத்தில் அமர்ந்தால் மனம் ஈடுபட மறுக்கிறது. அமைதி வரவில்லை. என்ன செய்யலாம்? குழப்பத்திலும், கவலையிலும் செய்வதறியாது தவித்த அருணகிரி கடைசியில் ஒரு முடிவுக்கு வந்தார். திருவண்ணாமலைக் கோபுர வாயிலில் தவம் இருந்த அருணகிரியார் அந்தக் கோபுரத்தின் மேலே ஏறி அதிலிருந்து கீழே குதித்து தம் உயிரை விட முற்பட்டார். அவர் கீழே குதித்தபோது இரு கரங்கள் அவரைத் தாங்கின. அந்தக் கரங்களுக்குச் சொந்தக்காரர் வேறு யாரும் இல்லை. குன்றுதோறாடும் குமரனே ஆகும். தன் கைகளால் அவரைத் தாங்கி, “அருணகிரி !நில்!” என்றும் சொன்னார்.

திகைத்த அருணகிரி தம்மைக் காப்பாற்றியது யாரோ எனப் பார்க்க வடிவேலவன் தன் திருக்கோலத்தைக் காட்டி அருளினான். மயில்வாகனனின் தரிசனம் கிடைத்த அருணகிரி வியப்பின் உச்சியிலிருந்து மீளாமல் தவிக்க, முருகன் அவரை, “அருணகிரிநாதரே! “ என அழைத்துத் தம் வேலால் அவர் நாவிலே “சரவணபவ” என்னும் ஆறெழுத்து மந்திரத்தைப் பொறித்து, யோக மார்க்கங்களும், மெய்ஞ்ஞானமும் அவருக்குக் கைவரும்படியாக அருளினார். சித்தம் கலங்கிய நிலையில் இருந்த அருணகிரியாரின் சித்தம் தெளிந்தது.

பிரணவ மந்திர உபதேசத்தை நேரடியாக முருகனிடமிருந்தே பெற்ற இவர் வள்ளி மணாளனை இரு கரம் கூப்பித் தொழுதார். அவனோ, “அருணகிரி, இந்தப் பிறவியில் இன்னும் செய்யவேண்டியவை நிறைய உள்ளன உனக்கு. ஆகையால் இம்மையில் எம்மைப் பாடுவாயாக. பாடிப் பணிந்து பின்னர் எம்மிடம் வந்து சேருவாய்.” என்று சொல்ல, கந்தனின் கட்டளையால் மனம் மகிழ்ந்தாலும், பாடல் புனையும் வழியே அறியாத தாம் எவ்விதம் கந்தனைப் பாடுவது எனக் கலங்கினார். கந்தவேளோ, “யாமிருக்க பயமேன்? அஞ்சேல்!” என்று சொல்லிவிட்டு, “முத்தைத் தரு பத்தித் திருநகை” என எடுத்துக் கொடுத்துவிட்டு மறைந்தான். ஆஹா, தமிழ் கூறும் நல்லுலகுக்கு அன்று பிறந்தது தமிழில் சந்தக் கவிகள். சந்தக் கவிகளுக்கு ஆதிகர்த்த என அருணகிரிநாதரைச் சொல்லலாமோ??

கந்தன் வந்து உபதேசம் செய்து சென்றபின்னரும் அருணகிரியாரைச் சோதனை விடவில்லை. திருவண்ணாமலை ஆலயத்தின் இளையனார் சந்நிதியில் பெரும்பாலும் மோனத் தவம் செய்து வந்தார் அருணகிரி. தவம் கலைந்த வேளைகளில் சந்தப் பாடல்களை மனம் உருகிப் பாடிவந்தார். இவரின் இந்தப் பாடல்கள் யோகக் கலையை ஒட்டி அமைந்தவை. பரிபூரண யோக ஞானம் கைவரப் பெற்றவர்களுக்கு மட்டுமே இந்தப் பாடல்களின் உட்பொருள் புரியும். அப்போது திருவண்ணாமலையை ஆண்டு வந்தவன் விஜயநகர வம்சத்தைச் சேர்ந்த பிரபுடதேவராயன் என்னும் மன்னன். தெய்வ பக்தி மிகுந்த அவன் அருணகிரியாரைப் பற்றியும் அவர்க்கு நேர்ந்த அனுபவங்கள் பற்றியும் அறிந்து கொண்டான். அருணகிரியாரைப் பணிந்து தனக்கும் அவருக்குக் கிடைத்த பாக்கியங்கள் கிடைக்குமாறு செய்யவேண்டும் என வேண்டிக் கேட்க, அருணகிரிக்கும், அரசனுக்கும் நட்பு முகிழ்ந்து மணம் வீசிப் பரவலாயிற்று.

அந்த நட்பின் மணமானது மன்னனிடம் ஆஸ்தான பண்டிதன் ஆன சம்பந்தாண்டானைப் போய்ச் சேர்ந்தது. தேவி பக்தன் ஆன அவன் தேவிகுமாரனைப் பணிந்து வந்த அருணகிரியிடம் ஏற்கனவே பொறாமை கொண்டிருந்தான். இப்போது மன்னனும் அருணகிரியைப் பணிந்து அவர் சீடர் ஆக முயல்வதைக் கண்டதும் மன்னனைத் தடுக்க எண்ணம் கொண்டான். “மன்னா, யாம் உம் நெருங்கிய நண்பன். உம் நன்மையே நாடுபவர். உமக்கு நல்லதே செய்ய நினைக்கிறோம். அருணகிரி பற்றி நீர் சரிவர அறியாமல் அவனிடம் நட்புக் கொண்டுள்ளீர். வேண்டாம் இந்த நட்பு. பரத்தையரிடமே தஞ்சம் எனக் கிடந்தான் அருணகிரி. உற்றார், உறவினர் கைவிட்டனர். அத்தகைய பெருநோய் வந்திருந்தது அவனுக்கு. ஏதோ மாயவித்தையால் இப்போது மறைந்திருக்கலாம். சித்துவேலைகளை எவ்வாறோ கற்றுக் கொண்டு, முருகன் நேரில் வந்தான், எனக்குச் சொல்லிக் கொடுத்தான், நான் முருகனுக்கு அடிமை, என்று சொல்லித் திரிகின்றான். நம்பவேண்டாம் அவன் பேச்சை!” என்று சொன்னான்.

மன்னரோ, அருணகிரிநாதரின் ஆன்மபலத்தையும், அவரின் பக்தியையும், யோகசக்தியையும் நன்கு உணர்ந்துவிட்டார். அருணகிரியின் செந்தமிழ்ப் பாக்களும், அதன் சந்தங்களும் அவரைப் பெரிதும் கவர்ந்திருந்தன. சம்பந்தாண்டானிடம், “நீர் பெரிய தேவி உபாசகர் என்பதை நாம் அறிவோம். அருணகிரி பரிசுத்தமான யோகி. முருகன் அவரை உண்மையாகவே ஆட்கொண்டதோடு அல்லாமல், பாடல் பாடவும் அடியெடுத்துக் கொடுத்துள்ளான். அவரின் கடந்த காலவாழ்க்கை எவ்விதம் இருந்தாலும் இப்போது அவர் வாழ்வது பரிசுத்தமான துறவு வாழ்க்கை. முருகன் அருணகிரியை ஆட்கொள்ளவில்லை என்பதை உம்மால் எவ்விதம் நிரூபிக்கமுடியும்,? “ என்று கேட்டான் மன்னன்.

சம்பந்தாண்டான் இது தான் சமயம் என சாமர்த்தியமாக , “மன்னா, தன்னை முருகனடிமை என்று சொல்லிக் கொண்டிருக்கும் அந்த அருணகிரியை அழையுங்கள். தேவி உபாசகன் ஆன நான் என் பக்தியால் அதன் சக்தியால் அந்தத் தேவியை இங்கே தோன்றச் செய்கிறேன். அதேபோல் அருணகிரியும் தன் பக்தியால் அந்த முருகனைத் தோன்றச் செய்யவேண்டும். தோல்வி அடைந்தால் ஊரை விட்டே ஓடவேண்டும். சம்மதமா?” என்று சவால் விட்டான். மன்னனும் நமக்கென்ன?? தேவி தரிசனம் ஒருபக்கம், இன்னொரு பக்கம் முருகன் தரிசனம். சம்மதமே என்று சொன்னான் மன்னன். குறிப்பிட்ட நாளும் வந்தது. அருணகிரிநாதருக்கும் விஷயம் சொல்லப் பட்டது. என் முருகன், என் அப்பன் என்னைக் கைவிட மாட்டான் என்ற பூரண நம்பிக்கையுடன் அவரும் சம்மதம் சொல்லிவிட்டார். மந்திர, தந்திரங்களில் தேர்ந்த சம்பந்தாண்டான் தன் தந்திர வித்தையால் தேவியைப் போன்ற தோற்றம் உண்டாக்கமுடியும் என்ற நம்பிக்கையில் இருந்தான். ஊரெங்கும் செய்தி பரவி அனைவரும் கூடிவிட்டனர்.

தேவி உபாசகன் ஆன சம்பந்தாண்டான் தான் வழிபடும் தேவியைக் குறித்துத் துதிகள் பல செய்து அவளைக் காட்சி தருமாறு வேண்டிக் கொண்டான். கொஞ்சம் ஆணவத்துடனேயே கட்டளை போல் சொல்ல அவன் ஆணவத்தால் கோபம் கொண்ட தேவி தோன்றவே இல்லை. கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. சம்பந்தாண்டானின் தோல்வி உறுதியானது. அனைவரும் அருணகிரியாரை மிகுந்த ஆவலுடன் நோக்கினார்கள். அருணகிரியாரோ கந்தவேளை மனதில் தியானித்துப் பின்னர் அருணாசலேஸ்வரர் ஆலயத்தின் வடக்குப் பக்கம் இருக்கும் மண்டபத்தின் வடகீழ்த் தம்பத்தில் முருகன் காட்சி அளிக்கும்படி வேண்டிக் கொள்வதாயும், இறைவன் திருவருளால் காட்சி கிடைக்கும் என்றும் சொல்லிவிட்டுக் கோயிலை நோக்கி நடக்கலானார். அனைவரும் அவரைப் பின் தொடர்ந்து சென்றார்கள். பக்திப் பரவசத்துடன் மனமுருகி, மணிரெங்கு என்று ஆரம்பிக்கும் கீழ்க்கண்ட திருப்புகழைப் பாட ஆரம்பித்தார். பாடி முடித்ததுதான் தாமதம்,. மயில் வாகனன் மயில் மீது அமர்ந்த திருக்கோலத்தில் கையில் வேல் தாங்கியபடி அங்கே அனைவரும் பார்க்கும் வண்ணம் தோன்றி மறைய, கூடி இருந்த கூட்டம் பக்திப் பரவசத்தில் ஆனந்தக் கூத்தாடியது. சம்பந்தாண்டான் அவமானத்துடன் வெளியேறினான். அருணகிரியார் இயற்றியவை திருப்புகழ், கந்தரலங்காரம், கந்தரநுபூதி, வேல் விருத்தம், மயில் விருத்தம், சேவல் விருத்தம், திருவெழுக்கூற்றிருக்கை, திருவகுப்பு போன்றவை ஆகும்.

அருணகிரிநாதர் கைகளில் ஆறு விரல் இருந்தன. அதனால் முருகப் பெருமானின் ஆறு தலைகளையும், அவருக்குரிய "சரவணபவ" எனும் ஆறெழுத்து மந்திரத்தினையும் நினைவுறுத்துவது போல இருப்பதாகக் கூறுவர்.

அருணகிரிநாதர் சுவாமிகள் பாடிய பாடல்களின் தொகுப்பு கீழே.

கந்தர் அந்தாதி (102 பாடல்கள்)
கந்தர் அலங்காரம் (108 பாடல்கள்)
கந்தரனுபூதி (52 பாடல்கள்)
திருப்புகழ் (1307 பாடல்கள்)
திருவகுப்பு (25 பாடல்கள்)
சேவல் விருத்தம் (11 பாடல்கள்)
மயில் விருத்தம் (11 பாடல்கள்)
வேல் விருத்தம் (11 பாடல்கள்)
திருவெழுகூற்றிருக்கை

அருளாளர் அருணகிரிநாதர் சுவாமிகளின் குருபூஜை நாளை கொண்டாடப்பட உள்ளது. அனைத்து அடியார் பெருமக்களும் அருகில் உள்ள தலத்தில் சென்று தங்களுக்கு தெரிந்த திருப்புகளைப் பாடி முருகப் பெருமான் முன் வேண்டவும். வாய்ப்புள்ள அன்பர்கள் திருவான்மியூரில் உள்ள ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் ஆலயத்தில் நாளை மாலை 4 மணி முதல்  நடைபெற உள்ள குரு பூஜையில் கலந்து கொண்டு, நம்மை எப்போதும் முன்னின்று காக்கும் முருகன் அருள் பெற வேண்டுகின்றோம்.



திருப்புகழ் இன்றி பதிவை நிறைவு செய்ய மனம் மறுக்கின்றது, கோயிலுக்கு செல்ல இயலாதவர்கள்கீழ்கண்ட திருப்புகழை ஓதுங்கள். திருப்புகழைப் பாட பாட வாய் மணக்கும். இதோ..இந்த அற்புத திருநாளில் நம் வாழ்க்கை மணக்க அருளாளர் அருணகிரிநாதர் அருள் புரியட்டும்.



    விநாயகர் துதி (இராகம் - நாட்டை; தாளம் - ஆதி)

        தத்தன தனதன தத்தன தனதன
        தத்தன தனதன ...... தனதான

        கைத்தல நிறைகனி அப்பமொ டவல்பொரி
        கப்பிய கரிமுகன் ...... அடிபேணிக்

        கற்றிடும் அடியவர் புத்தியில் உறைபவ
        கற்பகம் எனவினை ...... கடிதேகும்

        மத்தமு மதியமும் வைத்திடும் அரன்மகன்
        மற்பொரு திரள்புய ...... மதயானை

        மத்தள வயிறனை உத்தமி புதல்வனை
        மட்டவிழ் மலர்கொடு ...... பணிவேனே

        முத்தமிழ் அடைவினை முற்படு கிரிதனில்
        முற்பட எழுதிய ...... முதல்வோனே

        முப்புரம் எரிசெய்த அச்சிவன் உறைரதம்
        அச்சது பொடிசெய்த ...... அதிதீரா

        அத்துய ரதுகொடு சுப்பிர மணிபடும்
        அப்புன மதனிடை ...... இபமாகி

        அக்குற மகளுடன் அச்சிறு முருகனை
        அக்கண மணமருள் ...... பெருமாளே.


        "அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் -- 3"


        "முத்தைத்தரு"


        இராகம்: கௌளை
        தாளம்: திஸ்ர த்ருபுடை/மிஸ்ரசாபு

        தத்தத்தன தத்தத் தனதன
        தத்தத்தன தத்தத் தனதன
        தத்தத்தன தத்தத் தனதன ..... தனதான


        முத்தைத்தரு பத்தித் திருநகை
        அத்திக்கிறை சத்திச் சரவண
        முத்திக்கொரு வித்துக் குருபர ..... எனவோதும்

        முக்கட்பர மற்குச் சுருதியின்
        முற்பட்டது கற்பித் திருவரும்
        முப்பத்துமு வர்க்கத் தமரரும் ..... அடிபேணப்

        பத்துத்தலை தத்தக் கணைதொடு
        ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு
        பட்டப்பகல் வட்டத் திகிரியில் ..... இரவாகப்

        பத்தற்கிர தத்தைக் கடவிய
        பச்சைப்பு யல்மெச்சத் தகுபொருள்
        பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் ..... ஒருநாளே

        தித்தித்தெய ஒத்தப் பரிபுர
        நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி
        திக்கொட்கந டிக்கக் கழுகொடு ..... கழுதாடத்

        திக்குப்பரி அட்டப் பயிரவர்
        தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு
        சித்ரப்பவு ரிக்குத் த்ரிகடக ..... எனவோதக்

        கொத்துப்பறை கொட்டக் களமிசை
        குக்குக்குகு குக்குக் குகுகுகு
        குத்திப்புதை புக்குப் பிடியென ..... முதுகூகை

        கொட்புற்றெழ நட்புற் றவுணரை
        வெட்டிப்பலி யிட்டுக் குலகிரி
        குத்துப்பட வொத்துப் பொரவல ..... பெருமாளே.

திருத்தணியில் பாடப்பட்ட ’இருமல் உரோகம்..’ எனத்தொடங்கும் திருப்புகழ் ’மந்திரத் திருப்புகழ்’ எனப்படுகிறது. இத்திருப்புகழ் நோய் தீர்க்கும் என்று கூறப்படுகிறது.



        இருமல் உரோகம் முயலகன் வாதம்

                எரிகுண நாசி விடமே நீர்

        இழிவு விடாத தலைவலி சோகை

                எழுகள மாலை இவையோடே


        பெருவயிறு ஈளை எரிகுலை சூலை

                பெருவலி வேறும் உளநோய்கள்

        பிறவிகள் தோறும் எனை நலியாத

                படிஉன் தாள்கள் அருள்வாயே


        வரும் ஒரு கோடி அசுரர் பதாதி

                மடிய அநேக இசைபாடி

        வரும் ஒரு கால வயிரவர் ஆட

                வடிசுடர் வேலை விடுவோனே


        தருநிழல் மீதில் உறைமுகில் ஊர்தி

                தரு திரு மாதின் மணவாளா

        ஜலமிடை பூவின் நடுவினில் வீறு

                தணிமலை மேவு பெருமாளே

"இருமல், ரோகம், முடக்கு வாதம், எரிவாயு, விஷநோய்கள், நீரிழிவு, தீராத தலைவலி, சோகை, எழுகள மாலை மற்றும் வேறு நோய்கள் எதுவும் இப்பிறவியிலும், இனி வரும் பிறவிகளிலும் என்னை வாட்டாத வகையில் முருகா, உனது திருவடிகளை தந்து அருள வேண்டும்.கோடிக்கணக்கான அசுரர்கள் அழியவும் அதனால் கால பைரவர் மகிழ்ந்து ஆடவும் வடிவேலை விடும் வேலாயுதக் கடவுளே! மேகத்தை வாகனமாக கொண்ட தேவேந்திரனின் மகளான தெய்வயானை மணவாளனே! திருத்தணிகை மலையில் வாழும் பெருமானே!"

வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!
திருத்தணிகை முருகனுக்கு அரோகரா!!
முருகா! முருகா!! முருகா !!!

- மீண்டும் அடுத்த பதிவில் இணைவோம்.

மீள்பதிவாக :-

 அழகெல்லாம் முருகனே ... அருளெல்லாம் முருகனே... - http://tut-temple.blogspot.com/2018/06/blog-post_47.html

தேனி சண்முகநாத மலை தரிசனம் (1) - http://tut-temple.blogspot.com/2018/06/1.html

வெற்றி வேல் வீர வேல் - தேனி சண்முகநாத மலை தரிசனம் - http://tut-temple.blogspot.com/2018/05/blog-post.html

இது சிவன் மலை ஆண்டவன் கட்டளை - உத்தரவுப் பெட்டி - http://tut-temple.blogspot.com/2018/06/blog-post_19.html

சண்முகா சரணம் - http://tut-temple.blogspot.com/2018/05/blog-post_84.html

முருகன் அருள் முன்னிற்க! பங்குனி உத்திரம் 2018 - http://tut-temple.blogspot.in/2018/03/2018.html

முருகன் அருள் முன்னிற்க! - பங்குனி உத்திரம் கொண்டாட்டம் - http://tut-temple.blogspot.com/2018/04/blog-post.html

நால்வரின் பாதையில்... திருப்புகழ் தலங்கள் - http://tut-temple.blogspot.in/2018/03/blog-post_30.html

வேலை வணங்குவதே நம் வேலை! - http://tut-temple.blogspot.com/2018/04/blog-post_2.html


கேட்பது விவேகானந்தரோ? - இது ரமணர் வழி


பகவான் ரமணர்

மதுரையை அடுத்த திருச்சுழியில் அவதரித்தவர். பிறந்தவர்.தோன்றியவர் என்பது எல்லாம் மக்களுக்குத் தான் பொருந்தும். மகான்கள் அவதாரம் தான் செய்வார்கள். இது தான் நம் தமிழ் மொழியின் சிறப்பும் ஆகும்.‘நான் யார்’ என்னும் விசாரணை மூலம் ஒரே கணத்தில்ஆத்மானுபவம் எய்தியவர். அதன்பின் அருணாசல அண்ணலை நாடி அண்ணாமலை வந்தார். பல இடங்களிலும் தங்கி தவம் செய்தார். சில போக்கிரிகளால் இவரது தவத்திற்கு இடையூறு ஏற்படவே, இடிந்து, சிதலமடைந்திருந்த, யார் கண்ணிலும் படாத பாதாள லிங்கேச்வரர் சன்னதியில் தவத்தில் ஆழ்ந்தார். அப்போதும் சில போக்கிரிச் சிறுவர்கள் கல்லெறிந்து அவரைத் தொந்தரவு செய்தனர். சத்குரு சேஷாத்ரி சுவாமிகள் இவரை உலகுக்கு அடையாளம் காட்டினார்.

அதுமுதல் வெளியுலகிற்குத் தெரிய ஆரம்பித்தார். பேசாமல் தியானத்திலேயே எப்போதும் இருந்ததால் ‘மௌன குரு’ என்றும், ‘பிராமண சுவாமி’ என்றும் அன்பர்களால் அழைக்கப்பட்டார். மாமரத்துக் குகை, பவழக் குன்று, விரூபாக்ஷிக் குகை போன்றவற்றில் சிலகாலம் தவம் செய்த இவர் பின்னர் ஸ்கந்தாச்ரமம் சென்று வசிக்கத் தொடங்கினார்.

தம்மை நாடி வந்தவர்களுக்கு மௌன குருவாய், தக்ஷிணாமூர்த்தியாய், நயன தீக்ஷை வழங்கி, அவர்களது ஆன்ம ஒளியை ஊக்குவித்தார். பின்னர் மலையை ஒட்டிய பகுதியில் கீழே வந்து வசிக்கத் தொடங்கினார். அதுவே பிற்காலத்தில் ‘ரமணாச்ரமம்’ ஆயிற்று.

ரமணாஸ்ரமத்தில் ஏற்பட்ட சில நிகழ்வுகளை இங்கே பதிக்கின்றோம். இடையிடையே மரணம் வெல்ல காட்டும் ரமணம் , ரமணரின் ஆன்ம விசாரம் பற்றிய கருத்துக்களை இணைக்க உள்ளோம். படித்து இன்புறுவதோடு, ரமணர் வழியைப் பின்பற்ற முயற்சி செய்ய வேண்டுகின்றோம்.

ஒரு முறை, படித்தவனாகத் தோன்றிய ஓர் இளைஞன் பகவான் முன்பு வந்து அமர்ந்தார். உலகில் எத்துணையோ மகான்களும்,குருமார்களும் இருக்கின்றார்கள். ஆனால் பகவான் என்றால் அது ஸ்ரீ ரமணரும், ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சரும் தான். சொல்லப் போகும் நிகழ்வில் ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சரும் உள்ளார். சரி..பகவான் ஸ்ரீ ரமணரின் எதிரே அந்த இளைஞன் அமர்ந்தான். அங்கிருந்த கூட்டத்தில் அமைதியை உருவாக்கி, கேள்வி ஒன்றை எழுப்பினான்.

சுவாமி ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர், விவேகானந்தரைத் தொட்ட மாத்திரத்தில், சமாதியில் இருக்க வைத்தாரே, அதே போல பகவானும் சமாதியில் இருக்க வைக்க முடியுமா? என்று கேட்டான்.

பகவான் பதில் எதுவும் கூறாமல் மெளனமாக இருந்தார். இளைஞனோ பதில் பெற இருக்கும் தருணம் நோக்கி காத்துக் கொண்டுதான் இருந்தான்.பின்னே இருக்காதா? எப்படிப்பட்ட கேள்வி, அந்த பரம் பொருளை நோக்கி, இப்படி ஒரு கேள்வி என்றால் நமக்கே பதைபதைப்பாக உள்ளதே.பகவான் என்ன சொல்லி இருப்பார்?



சிறிது நேரம் பொறுத்து, பகவான் அந்த இளையனைப் பார்த்து, "கேட்பது விவேகானந்தரோ?" என்றார். அந்த இளைஞன் அப்படியே அமைதியாகி விட்டான். அந்த இளைஞன் வெட்கி தலைகுனிந்து பதில் சொல்ல முடியாமல் அந்த இடத்தை விட்டு நகர்ந்து விட்டான். 


நாமும் அந்த இளைஞன் போல் தான் இருக்கின்றோம். நம்மைப் பற்றி நாம் உணரவில்லை. நான்கைந்து புத்தகங்களை மேய்ந்து விட்டு, சில பல செய்திகளை தெரிந்து வைத்துக் கொண்டு, அதிமேதாவி போல் காட்டிக் கொள்கின்றோம். தன்னை பற்றி அறிவதே இல்லை, அதற்கு முயற்சிப்பதும் இல்லை, தன்னை அறிவதே பூரணம். நான் யார் ? என்று உங்களை பற்றி கேட்டுப்பாருங்கள், பேந்த பேந்த முழிப்போம், ஆனால் பக்கத்தில் இருப்பவரை பற்றி கேட்டுப்பாருங்கள், அவரைப் பற்றி ஊர்க் கதை அடிப்போம்.தன்னைப் பற்றி ஐந்து நிமிடம் கூட தெரியாத நாம் பிறரைப் பற்றி முப்பது நிமிடம் பேசுவோம். இதுதான் அனைத்து பிரச்சினைகளுக்கும் காரணம்.



அந்த  இளைஞன் பகவானை ராமகிருஷ்ண பரமஹம்சரா என்று சோதிக்க விரும்பினானே தவிர, தான் விவேகானந்தரா என்று பார்க்கவில்லை. ஏனென்றால் தனக்கு எல்லாம் தெரியும் என்ற நினைப்பு.

நான் யார் என்று அந்த இளைஞன் விசாரம் செய்திருந்தால் இந்த கேள்வி எழ வாய்ப்பே இல்லை. ஒரே ஒரு விவேகானந்தரைத் தான் அப்படி சமாதி நிலையில் ஆழ்த்தினார் என்பது புரியவும் இல்லை. மனம் பிறரை ஆய்வதை விட்டு, தன்னை ஆராயத் தொடங்கினால், எந்தக் கேள்வியும் எழவே எழாது. எல்லாக் கேள்விகளுக்கும் "நான் யார்" ஆன்ம விசாரம் பதிலை தரும் என்று பகவான் இந்த சம்பவத்தில் தெள்ளத் தெளிவாக கூறுகின்றார். 


இந்த பதில் அந்த இளைஞனுக்கு மட்டுமல்ல; நமக்கும் சேர்த்து தான். சும்மா நுனிப்புல் மேய்ந்துவிட்டு, நம்மை விட பெரியோர்களிடம் கேள்வி கேட்பதை நிறுத்துங்கள். அதுவும் வாட்ஸாப்(whatsapp ), பேஸ்புக் (facebook) போன்ற சமூக வலைத்தளங்களில் சொல்லவே வேண்டாம். அனைவரும் தம்மை ஞானிகள் போன்று காட்டிக் கொண்டு இருக்கின்றார்கள். ஆனால் எதார்த்தம் வேறாக இருக்கும். ஆன்லைன் குருக்களிடம் உஷாராக இருங்கள். குருக்களை ஆன்லைனில் தேடுவதை நிறுத்துங்கள். அன்பும், மனிதாபிமானமும் ஆன்லைனில் கிடைக்காத ஒன்று, மாறாக சித்தர்களை சரண் அடையுங்கள்; நான் யார் என்று தேடுங்கள். இது ஒன்று தான் முக்திக்கு வழி. புறப்பூசைகளும் இங்கே வந்து ஒரு நாள் நிற்கும்; அப்போது நாம் சொல்ல வரும் செய்தி புரியும்.




ஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாய!


- மீண்டும் அடுத்த பதிவில் சிந்திப்போம் 

மீள்பதிவாக :- 


கிரிவலம் - திருஅண்ணாமலையாருக்கு அரோகரா! - http://tut-temple.blogspot.com/2018/05/blog-post_31.html

கிரிவலம் - திருஅண்ணாமலை சிறப்புப் பதிவு (2) - http://tut-temple.blogspot.com/2017/11/2.html

திருஅண்ணாமலையாருக்கு அரோகரா ! - http://tut-temple.blogspot.com/2017/11/2.html