Subscribe

BREAKING NEWS

14 April 2020

தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

ன்பு உள்ளங்களே
தேவைகள் தீர்வதில்லை
எதுவும் முடிவு அல்ல
எல்லாமே அடுத்த
நல்லதுக்கான தொடக்கமே
மகிழ்ச்சியுடன் புத்தாண்டை வரவேற்று
நலமுடனும் வளமுடனும்
வாழ்ந்திட நல் வாழ்த்துக்கள்.




சார்வரி தமிழ் புத்தாண்டில் எல்லா வளங்களும் நலங்களும் பெற்று வாழ அனைவரையும் வாழ்த்துகிறோம்.

சார்வரி என்றால் வீறியெழல் என பெயர். இந்த புத்தாண்டில் தீயவை அழிந்து நல்லவை பெருக, அயுள் ஆரோக்கியம் அதிகரிக்கவும் வாழ்க வையகம் வாழ்க வளமுடன் என்று வாழ்த்துகிறோம்.

சார்வரி வருடம் சித்திரை மாதம் 1-ம் நாள் (13.04.2020) திங்கட்கிழமை இரவு உதயாதி நாழிகை 32-52 இல் திருக்கணித பஞ்சாங்கப்படி இரவு 8.23 மணிக்கு (வாக்கிய பஞ்சாங்கப்படி இரவு 7.26 மணி) சார்வரி என்னும் பெயருடைய தமிழ்ப் புதுவருடம் பிறக்கின்றது.
தமிழ் புத்தாண்டான சித்திரை முதல் நாளன்று பூஜை அறைகளை அலங்கரித்து விளக்கேற்றி, பஞ்சாங்கம் வைத்து கனிகளை இறைவனுக்கு படைத்து வழிபடுவதன் மூலம் ஆண்டு முழுவதும் நன்மைகள் நடைபெறும். இந்த நாளில் பஞ்சாங்கம் படிப்பதன் மூலம் நோய்கள் நீங்கும் ஆயுள் அதிகரிக்கும். மும்மூர்த்திகளில் பிரம்மாவுக்கு உரியது விஷூ புண்ணிய காலம் ஆகும். 12 தமிழ் மாதங்களில் சித்திரை, ஆடி, ஐப்பசி மற்றும் தை ஆகியவை பிரம்மாவுக்கு உரியவை. அந்த மாதங்களின் முதல் நாள் விஷூ புண்ணிய காலம் என்று குறிப்பிடப்பட்டு, தலை எழுத்தை மாற்றி எழுதக் கூடிய பிரம்மாவை வணங்கு வதற்குரிய நாட்களாகவும் வரையறுக்கப்பட்டுள்ளன. ஜோதிட ரீதியாக, அந்த காலகட்டம் சூரியனது சர ராசி சஞ்சார மாதங்களாகவும் அமைகிறது.

கிரக நிலை:
அன்றைய நேரத்தில் தனுசு ராசி, துலாம் லக்கினமாக அமைகிறது. நவாம்சமாக கடக ராசியும், கும்ப லக்கினமாகவும், புதன் ஹோரை, கேது மகா தசையும், சனி புத்தி என அமைந்து சார்வரி ஆண்டு பிறக்கிறது.
சார்வரி ஆண்டுக்குரிய சித்தர் பிரான் இடைக்காடரின் பாடல்
சாருவரி ஆண்டதனிற் சாதிபதினெட்டுமே
தீரமறு நோயால் திரிவார்கள், மாரியில்லை
பூமி விளை வில்லாமற் புத்திரரும் மற்றவரும்
ஏமமன்றிச் சாவார் இயம்பு.


அதாவது சார்வரி ஆண்டில், தீராத நோயால் அவதிப்படுவர், மழை குறைவாக இருக்கும் என்பதால், பூமியில் விளைச்சல் குறையும் சோகம் உண்டு. மக்கள் தாமாக வரக்கூடிய மரணமில்லாமல் சாவார் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மழை வாய்ப்பு 
ஆடி மாதம் நல்ல மழை உண்டு அதனால் விவசாயம் உள்ளிட்ட தொழில் தழைக்கும். அதே சமயம், மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளுக்கு பல சலுகைகள் வழங்கக் கூடும் என கணிக்கப்படுகிறது. சலுகைகள் ஒருவருக்கு வழங்குகிறார்கள் என்றால் அவர் பாதிக்கப்பட்டவராக இருப்பார். அதனால் மழை அதிகமாகவோ அல்லது குறைவாக ஏற்படும் என்பது இதன் மூலம் தெரிகிறது.
ஸ்ரீ சார்வரி வருடம் பல சிக்கல்களை தவிர்க்க முடியாததாக இருக்கும். மழை சுமாராக இருந்தாலும் விளைச்சல் ஓரளவு நம்பிக்கை தரும். காய், கனி, கிழங்கு வகைகள் ஓரளவு நல்ல விளைச்சலை தரும்
இந்தாண்டு நவகிரகங்களின் பதவி
சனி -ராஜா 
சூரியன் - மந்திரி
சனி - சேனாதிபதி
புதன் - ஸஸ்யாதிபதி
சந்திரன்- தான்யாதிபதி 
சனி - அர்க்காதிபதி
சனி - மேகாதிபதி 
சுக்கிரன் - இராசாதிபதி 
புதன்- நீரஸாதிபதி
நவநாயகர்களின் வலிமையும், இந்தாண்டு பலனும், அரசுகளின் ஆதிக்கம் ஓங்கி இருக்கும். திடீர் புதையல் கிடைக்க வாய்ப்புள்ளது. 
பிறக்கவிருக்கும் சார்வரி புத்தாண்டில் பன்னிரு ராசிகளுக்குமான வரவு செலவு 
இந்த ஆண்டு மேஷம் விருச்சிகம் ராசிகளுக்கு ஆதாயம் 5 விரையம் 5 ஆகவும் .
ரிஷபம், துலாம் ராசிக்காரர்களுக்கு ஆதாயம் 14 விரையம் 11ஆகவும் .
மிதுனம் கன்னி ராசிக்காரர்களுக்கு ஆதாயம் 2 விரையம் 11 ஆகவும் .
கடகம் ராசிக்கு ஆதாயம் 2 விரையம் 2, ஆகவும் .
சிம்மம் ராசிக்கு ஆதாயம் 14 விரையம் 2,ஆகவும் .
தனுசு, மீனம் ராசிக்கு ஆதாயம் 8 விரையம் 11 ஆகவும் .
மகரம் கும்பம் ராசிக்கு ஆதாயம் 11, விரையம் 5.ஆகவும் உள்ளது
இந்த ஆண்டு மொத்த ஆதாயம் 56 மொத்த விரையம் 47 . இந்த ஆண்டு ஆதாயத்தை விட விரையம் குறைவாக இருப்பதால் பொதுமக்களுக்கு வருமானத்தை விட செலவு குறைவாக இருக்கும்.
சார்வரி வருடத்தில் வரும் கிரகணங்கள்
ஜூன் 5 அன்று ஒரு பௌர்ணமி தினத்தில் சந்திர கிரகணம்.
ஜூன் 21 அன்று ஒரு வருடாந்திர சூரிய கிரகணம்.
ஜூலை 5 அன்று ஒரு பௌர்ணமி தினத்தில் சந்திர கிரகணம்.
நவம்பர் 30 அன்று ஒரு தெளிவற்ற சந்திர கிரகணம்
டிசம்பர் 14 அன்று சூரிய கிரகணம்.
2020 - 2021 சார்வரி கிரக பெயர்ச்சி
குரு
குரு தற்போது அதிசாரம் அடைந்து மகர ராசியில் இருக்கும் நிலையில், ஜூன் 8ம் தேதி (ஆனி 24) வக்கிரம் அடைந்து தன் சொந்த வீடான தனுசு ராசிக்கு திரும்புவார்.
2020 நவம்பர் 15ம் தேதி இரவு 9.36 மணிக்கு குரு பகவான் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு பெயர்ச்சி அடைவார். அதன் பின்னர் 2021 ஏப்ரல் 6ம் தேதி (பங்குனி 23) கும்ப ராசிக்கு அதிசார பெயர்ச்சி அடைவார்.
சனி
வாக்கிய பஞ்சாங்கப்படி சனி பகவான் மகர ராசிக்கு மார்கழி மாதம் 11 (2020 டிசம்பர் 26) அன்று பெயர்ச்சி அடைவார்.
ராகு – கேது பெயர்ச்சி:
2020 செப்டம்பர் 1ம் தேதி (ஆவணி 16) ராகு கேது பெயர்ச்சி நிகழ உள்ளது. ராகு பகவான் ரிஷப ராசிக்கும், கேது விருச்சிக ராசிக்கும் பெயர்ச்சி அடைய உள்ளனர்.
எந்த நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம். 

1. அஸ்வினி - புரவி
பணவரவு நன்றாக இருக்கும். நினைத்த காரியங்கள் நிறைவேறும். வியாபாரம் விருத்தியடையும். செய்யும் தொழிலில் லாபம் வரும். கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். 

2. பரணி - அடுப்பு
குடும்பத்தில் சின்னச் சின்ன பிரச்சினைகள் வரலாம் கணவன் மனைவி விட்டுக்கொடுத்து போங்க. பணவரவும் செலவும் சரியாக இருக்கும். நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் போது பயன்படுத்திக்கொள்ளுங்கள். 

3. கார்த்திகை - ஆரல்
உங்களுக்கு இந்த ஆண்டு பணவரவு நன்றாக இருக்கும். வியாபாரத்தில் லாபம் திருப்தி தரும். பிள்ளைகளின் நலனில் அக்கறை காட்டுவீர்கள். எடுத்த காரியத்தை சாதகமாக செய்து முடிப்பீர்கள். 

4. ரோகிணி - சகடு
உங்களின் மனோ தைரியம் அதிகரிக்கும். காரியத்தடைகள் உண்டாகும். தம்பதியர் இடையே நெருக்கம் கூடும். அவ்வப்போது சின்னச் சின்ன சண்டைகள் வரலாம் கவனம் தேவை. வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும் பணம் பாக்கிகள் இன்றி வசூலாகும்.

5. மிருகஷீரிடம் - மான்றலை
உங்களின் மனக்கவலை நீங்கும் தெம்பும் தைரியமும் உண்டாகும். கணவன் மனைவி இடையே நெருக்கம் கூடும். புதிய வாய்ப்புகள் தேடி வரலாம். பிள்ளைகள் மீது அதிக அக்கறை காட்டுவீர்கள். பணவரவு உற்சாகத்தை கொடுக்கும். 

6. திருவாதிரை - மூதிரை
தோல்விகளை வெற்றிகளாக மாற்றும் வல்லமை படைத்தவர்கள் நீங்கள். எதிலும் தெளிவான முடிவு எடுப்பீர்கள். வியாபாரத்தில் சாதுர்யமான பேச்சினால் லாபம் அடைவீர்கள். பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள். கணவன் மனைவி இடையே டென்சனும் கோபமும் வேண்டாம் விட்டுக்கொடுத்து போங்க. 

7. புனர்பூசம் - கழை
குடும்பத்துடன் குதூகலமாக இருப்பீர்கள். இந்த ஆண்டு இதமான ஆண்டாக அமையும். கணவன் மனைவி இடையே சின்னச் சின்ன சண்டைகள் ஏற்பட்டு விலகும். கொடுத்த கடனை திரும்ப வசூலித்து விடுவீர்கள். இந்த ஆண்டு உங்களின் நிதி நிலைமை நன்றாக இருக்கும். வேலைச்சுமை சில நேரங்களில் டென்சனை ஏற்படுத்தும். 

8. பூசம் - கொடிறு
வியாபாரம் தொடர்பாக சில அலைச்சல்கள் ஏற்படலாம். திடீர் கோபம் உங்களுக்கு சில பாதிப்புகளை ஏற்படுத்தும். பழைய பாக்கிகள் வசூலாகும். உங்க குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். இந்த ஆண்டு உங்களுக்கு கெட்ட கனவுகளால் சில பிரச்சினைகள் வரலாம் இறை வழிபாடு மனதில் அமைதியை ஏற்படுத்தும்.

9. ஆயில்யம் - அரவு
இந்த ஆண்டு உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும் சுறுசுறுப்பாகவும் உற்சாகமாகவும் இருப்பீர்கள். பணவரவு நன்றாக இருக்கும் வீண் செலவு கட்டுப்படும். உங்களுக்கு இந்த ஆண்டு வியாபாரம் நன்றாக இருக்கும். பழைய கடன்கள் வசூலாகும். வேலையில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் தேடி வரும். 
10. மகம் - கொடுநுகம்
உங்களின் மனோ தைரியம் அதிகரிக்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். வேலையில் கவனம் தேவை. பெண்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்க. கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். இந்த ஆண்டு சுப காரியங்கள் செய்யும் முன்பாக ஒருமுறைக்கு இருமுறை ஆலோசனை செய்வது நல்லது. 

11. பூரம் - கணை
பூரம் நட்சத்திரக்காரர்களே நீங்க இந்த ஆண்டு எந்த ஒரு விசயத்தையும் கவனமாக கையாளுங்கள். ரகசியம் காக்கவும் எந்த ஒரு விசயத்தையும் வெளிப்படையாக பேச வேண்டாம். உறவினர்களால் நன்மை ஏற்படும். உங்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். தைரியம் கூடும்.

12. உத்திரம் - உத்தரம்
இந்த ஆண்டு திடீர் பணவரவு வரும். புதிய நபர்களுடன் எதையும் விவாதிக்க வேண்டாம். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு டென்சன் அதிகமாகும். பெண்கள் அடுத்தவர்களின் விசயங்களில் தலையிட வேண்டாம். 

13. ஹஸ்தம் - கை
இந்த ஆண்டு உங்களின் மதிப்பு மரியாதை கூடும். கணவன் மனைவி இடையே ஏற்பட்ட பிரச்சினைகள் தீரும். கணவன் மனைவி இடையே ஏற்பட்ட பிரச்சினைகள் தீரும். இந்த ஆண்டு உங்களுக்கு உற்சாகமான ஆண்டாக அமையும். தொழில் வியாபாரம் லாபகரமாக இருக்கும். பணவரவு நன்றாக இருக்கும். 

14. சித்திரை - அனுபை
உங்களின் மனோ தைரியம் அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே விட்டுக்கொடுத்து போங்க சின்னச் சின்ன பிரச்சினைகள் வந்தாலும் அதை நீங்க பெரிதுபடுத்த வேண்டாம். தொழில் வியாபாரத்தில் ஆரம்பத்தில் நஷ்டம் ஏற்படுவது போல இருந்தாலும் இந்த ஆண்டு இறுதியில் வியாபாரம் லாபத்தில் இருக்கும். 

15. சுவாதி - விளக்கு
இந்த ஆண்டு உங்களுக்கு பணவரவு அதிகமாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களிடம் வாக்குவாதத்தை தவிர்த்து விடுங்கள். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். தடைகள் நீங்கும் வெற்றிகரமான ஆண்டாக அமையும். பிரச்சினைகள் தீரும். பணவரவு அதிகமாக இருக்கும். 

16. விசாகம் - முறம்
இந்த ஆண்டு உங்களுக்கு வீண் செலவு அதிகரிக்கும். வேலையில் இருப்பவர்கள் கோபப்பட வேண்டாம். மேலதிகாரிகளை அனுசரித்து செல்வதன் மூலம் வேலையை தக்கவைக்கலாம். கணவன் மனைவி இடையே கோபமாக பேச வேண்டாம். பெண்களின் மன அமைதி பாதிக்கும். உங்களின் பேச்சுக்கு மதிப்பு மரியாதை கூடும். 

17. அனுசம் - பனை
இந்த ஆண்டு உங்களின் உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். நோய் பாதிப்புகள் நீங்கும். பிரிவினை ஏற்பட்டு பிரிந்தவர்கள் ஒன்று சேர்வார்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு புரமோசன் கிடைக்கும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். 

18. கேட்டை - துலங்கொலி
இந்த ஆண்டு விஐபிக்களின் அறிமுகம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். கணவன் மனைவி இடையே நெருக்கம் கூடும். தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். உடல் சோர்வு நீங்கி சுறுசுறுப்பு அதிகரிக்கும். 

19. மூலம் - குருகு
வாழ்க்கையில் எதிர்பாராத திடீர் திருப்பங்களை சந்திக்க வேண்டியிருக்கும் , கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். உறவினர்களால் நன்மைகள் நடைபெறும். வேலை செய்பவர்களுக்கு புரமோசன் கிடைக்கும். எந்த செயலையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செய்யுங்கள். 

20. பூராடம் - முற்குலம்
இந்த புத்தாண்டு முதல் நீங்க புதிய மனிதராக இருப்பீர்கள். நீங்க எண்ணியவை நிறைவேறும். நிறைய நேரங்களில் கோபம் வரும். கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். பணவரவு இருந்தாலும் காரிய தடைகளால் அவ்வப்போது டென்சன் மன உளைச்சல் ஏற்படும். 

21. உத்திராடம் - கடைக்குலம்
எந்த பிரச்சினை வந்தாலும் சாதுர்யமான பேச்சினால் சமாளிப்பீர்கள். எதிர்பார்த்த இடத்தில் இருந்து பணவரவு வரும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். குடும்பத்தில் கணவன் மனைவி இடையே நெருக்கம் கூடும். 

22. திருவோணம் - முக்கோல்
இந்த புத்தாண்டு முதல் உங்க ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். தைரியம் தன்னம்பிக்கை கூடும். நீங்க எதிர்பார்த்ததை விட பணவரவு அதிகமாகவே இருக்கும். எதிரிகளால் ஏற்பட்ட பிரச்சினைகள் தீரும். கணவன் மனைவி இடையே மகிழ்ச்சி அதிகரிக்கும். 

23. அவிட்டம் - காக்கை
கணவன் மனைவி இடையே ஏற்பட்ட பூசல்கள் சரியாகும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கும் போது ஒருமுறைக்கு இருமுறை யோசித்து முடிவெடுப்பது நல்லது. திடீர் செலவுகள் அதிகம் வரும். அமைதியே ஆரோக்கியத்திற்கு வழி

24. சதயம் - செக்கு
இந்த சார்வரி ஆண்டில் எந்த புதிய செயலை செய்யத் தொடங்குவதற்கு முன்பும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செய்யவும். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்லவும். கணவன் மனைவி இடையே ஏற்பட்ட பிரச்சினைகள் நீங்கும். பெண்களுக்கு நகை, பொன் பொருள் சேர்க்கை அதிகரிக்கும். 

25. பூரட்டாதி - நாழி
இந்த வருடம் உங்க பேச்சில் கவனமாக இருங்க காரணம் உங்க பேச்சே உங்களுக்கு எதிரியாகும். அக்கம் பக்கத்தினர் உறவினர்களிடம் கவனமாக பேசுங்க. குடும்பத்தில் அவ்வப்போது வீண் வாக்குவாதம் ஏற்படும். கணவன் மனைவி உறவில் கவனமாக இருங்க. ஏதோ மனக்கவலையுடனே இருப்பீங்க கவனமாக இருங்க கடவுளை நம்பினோரை கைவிட மாட்டார். 

26. உத்திரட்டாதி - முரசு
குடும்பத்தில் உள்ளவர்களுடன் பேசும் போது பேச்சுவார்த்தையில் கவனமாக இருங்க. கணவன் மனைவி இடையே சிறுசிறு மனஸ்தாபம் ஏற்படும். சகோதரர்களிடம் பேசும் போது கவனமாக பேசவும். கொடுத்த பணம் கைக்கு வருவதில் தாமதம் ஏற்படும். வேலைப்பளு இருந்தாலும் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பக்திமயமான ஆண்டாக அமையும். 

27. ரேவதி - தோணி
ஆண்டு முழுவதும் குதூகலமாக இருப்பீர்கள். குடும்பத்தில் கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். தடைபட்ட காரியங்கள் தடையின்றி நடைபெறும். பெண்களின் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். பணவரவு அதிகமாகும். மனதில் குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். புதிய பட்டங்கள் பதவிகள் தேடி வரும்.

இறை வழிபாடு
வளமை தூபக்காலில் மரக்கரியை எரியச் செய்து, அந்தக் கனலில் சாம்பிராணியைப் போட்டு, புகைய விட்டு, இறைவனுக்குக் காட்டுங்கள்.
பாறை போல் இறுகிக் கிடக்கும் சாம்பிராணிக் கட்டிகள், தீயில் பட்டவுடன் புகையாகிப் போகிறது. அதுபோல், நம்முன் பூதாகாரமாக, மிகக் கடினமாகக் கிடக்கும் துன்பங்கள் எல்லாம், அக்னி உருவாக உள்ள இறைவனின் அருள் கடாட்சம் கிட்டியவுடனே, புகையைப் போன்று லேசாகி விலகிவிடும்.இதுதான் அதற்கான விளக்கமாக உள்ளது .
புத்தாண்டில்
புதிய சிந்தனை
புதிய முயற்சி
புதிய எண்ணங்கள் பூக்கட்டும்
நட்புகளுக்கும்
சொந்தங்களுக்கும்
தமிழ் இனத்துக்கும்
உயிரோடு இணைந்த
அனைத்து தமிழ் உறவுகளுக்கும்
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

04 April 2020

காலத்தினால் செய்த நன்றி...

காலத்தினால் செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது.

ஒரு குவளை தண்ணீர் என்ன பெறும் . ஒருவருக்கு ஒரு குவளை தண்ணீர் தருவது பெரிய உதவியா ?

சாதரணமான நேரத்தில் அது ஒன்றும் பெரிய உதவி இல்லை தான்.

அதுவே, ஒரு பாலை வனத்தில், நாக்கு வறண்டு உயிர் போகும் தருவாயில் உள்ள ஒருவனுக்கு அந்த ஒரு குவளை தண்ணீர் எவ்வளவு பெரிய உதவி ?

உதவி என்பது என்ன செய்கிறோம் என்பது அல்ல.
உதவி என்பது எவ்வளவு செய்கிறோம் என்பது அல்ல.
உதவி என்பது யாருக்குச் செய்கிறோம் எனபது அல்ல

உதவி என்பது எப்போது செய்கிறோம் என்பதைப் பொருத்தது.


கொரோனா... கொரோனா... என உலகெங்கும் பேசி பேசி அதன் தகவல்களை மற்றவர்களுக்கு அனுப்பி அனுப்பி அனைவரும் கைகள் ஓய்ந்திருப்பீர்கள் (மீடியாக்கள் உட்பட)ஆனால் இந்த சூழ்நிலைகளிலும் தம்மால் முடிந்த உதவிகளை மற்றவர்வகளுக்கு செய்வதில் கருணை உள்ளம் கொண்ட மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அதனையும் நாம் சமூக வலைதளங்களில் பார்க்கின்றோம்.இந்த சூழ்நிலையில் நமது குழுவின் சார்பாக ஏதாவது செய்யவேண்டும் என்று யோசித்துக்கொண்டிருந்தேன். அனைத்து கடைகள் மற்றும் உணவகங்கள் பெட்டிக்கடைகள் மூடியிருக்கும் நிலையில் என்ன செய்வது ?இந்த நிலையில் நமது குழுவின் உறுப்பினர் திருமதி,அருணா அவர்கள் அன்னதானத்திற்காக ரூ,500.பணம் அனுப்பி இருப்பதாக சொன்னார்கள் நானும் அதனை உறுதி செய்து அவர்களுக்கு வாட்ஸ் ஆப்பில் நன்றி தெறிவித்தேன்.


பொதுவாக நாம் யாரிடமும் உதவி செய்யுங்கள் என்று யாரிடமும் கேட்பதில்லை, தாமாக முன்வந்து கொடுக்கும் கருணை உள்ளம் கொண்ட நண்பர்களை   நமது குழு எப்போதும் மறப்பதில்லை. இதுவரை நமது குழு நண்பர்கள் கொடுத்த அத்துணை உதவித்தொகைகளையும் தேதி, நேரம், கொடுத்த தொகையின் அளவு, உட்பட அனைத்தையும் தனியாக ஒரு வரவு செலவு புத்தகத்தில் எழுதி வைத்துள்ளேன். அது அன்னதானம் ஆலய திருப்பணி செலவுகள் என  அவ்வப்போது நமது குழுவின் அட்மின்களுக்கு தெரியப்படுத்தி வருகின்றேன். அந்த தொகையில் நிச்சயமாக ஒரு ரூபாய் கூட வீண் செலவிற்காக பயன்படாது என்பதை என்னால் இங்கு உறுதியாக சொல்ல முடியும்.



 நமக்கு எவ்வளவுதான் செல்வம் இருந்தாலும் நிம்மதி என்பது எல்லோருக்கும் அமைவதில்லை ஏதாவது ஒரு துன்பங்கள் நிச்சயமாக ஒவ்வொரு மனிதருக்கும் வந்து கொண்டேதான் இருக்கும். ஆனால் மன நிம்மதி என்பது அனைவருக்கும் இருக்குமா? என்பது சந்தேகம்தான்.அதிலும் இந்த உலகத்தில் மனிதர்களால் தீர்க்கமுடியாத பிரச்சனைகள் என்று ஒன்று வரும்போது புரியும் அப்போதுதான் கடவுளின் அருமையும் ஒவ்வொருவருக்கும் புரியவரும். அப்படி இல்லாதபோது தன்னால் எல்லாவற்றையும் இந்த உலகத்தில் பணத்தை வைத்து சாதித்துக்கொள்ள முடியும் என்று ஒரு மனிதன் நினைக்கும் போது அவனுக்கு புரிவதில்லை நமக்கு மேலே ஒரு மகா சக்தி  இருக்கிறதென்று. 


 இதுபோன்ற நல்லதொரு தர்ம காரியங்களில் நமது உழைப்பின் ஒரு சிறு துளி செலவிடும் போது அது உண்மையில் நம் மனதிற்கு ஏதோ ஒரு மூலையில் நாமும் ஒரு நல்லதை செய்து கொண்டிருக்கின்றோம் என்ற அந்த எண்ணமே நம்மை நல்வழிப்படுத்தி நமது மனதை அமைதிப்படுத்தி நிம்மதியை கொண்டு வந்து சேர்க்கும் என்பது உண்மையிலும் உண்மையே .


நாம் எவ்வளவுதான் திட்டமிட்டு நம்முடைய பொருட்களை தானம் செய்தால் அது நூற்றுக்கு நூறு உரியவர்களுக்கு பயன்படும் என்பது சொல்ல முடியாது. 
அதில் சில துளிகள் தேவைப்படாத
 நபர்களுக்கும் சென்றடையும். அதனைப் பற்றி நாம் பெரிதாக வருத்தப்பட தேவையில்லை.

 வயலுக்கு இரைக்கப்படும் நீர் அங்குள்ள புற்களுக்களுக்கும் சேர்ந்து பாய்ச்சப்படுகிறது. பயன்பெறுவது என்பது இரண்டும் தான். ஆனால் நமது நோக்கம் புற்களுக்கு நீர் பாய்ச்சி அது வினாகி போனது என்று என்னாமல் அதில் ஒரு பகுதியாவது பயிர்களுக்கு சென்றடைந்தது என்று நிம்மதி கொள்ள வேண்டும்.


 அதாவது நாம் செய்கின்ற அன்னதானம் உண்மையில் பசியால் வாடும் மனிதர்களுக்கு மட்டுமே அது சென்றடைய வேண்டும் என்று அனைவரும் நினைப்பது உண்டு. அப்போது பசியில்லாமல் உள்ள நண்பர்களும் இந்த உணவுகளை வாங்கி எடுத்துச் செல்வார்கள் அப்போது நாம் அதனை தவறாக கொள்ளுதல் கூடாது என்பதனை நான் இங்கு சொல்ல வருகின்றேன். 


உலகெங்கும் அடங்கிக் கிடக்கும் இந்த நேரத்தில் உண்மையில் பசித்தவர்கள் உணவு  தேடி வருகின்றார்கள் அவர்களுக்கு தற்போது அம்மா உணவகங்களில் உணவு வழங்கப்படுகின்றது. முன்பைவிட இப்போது இரண்டு மடங்கு கூட்டம் வருகின்றார்கள் காரணம் அனைத்து உணவகங்களும் அடைக்கப்பட்ட நிலையில் வேறுவழியின்றி உண்மையில் பசித்து அவர்களே இங்கு வந்து உணவுகள் அருந்தி செல்கின்றார்கள், தயவுசெய்து இந்த இடத்தில் அரசியலை சம்பந்தப்படுத்தி பேசுகிறேன் என யாரும் நினைக்க வேண்டாம் பசியைப் போக்கும் அனைத்து திட்டங்களும் நல்ல  திட்டங்களே !!!



அந்த வகையில் அன்னதானம் கொடுக்கவேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்த இந்த வேலையில் நல்லதொரு யோசனையாக வந்ததுதான் இந்த அம்மா உணவகம், இந்த நேரத்தில் அன்னதானம் செய்தால் நிச்சயமாக உண்மையில் பசியோடு வரும் நண்பர்களுக்கு இது பயனுள்ளவையாக இத்தருணத்தில் இருக்கும் என்று யோசித்து நேராக அம்மா உணவகத்திற்கு சென்று அங்கு காலை உணவு  மற்றும் மதிய உணவு உட்பட சுமார் 100 பேருக்கு உண்டான அனைத்து டோக்கன் களையும் வாங்கிவிட்டேன்.


 அந்த நூறு பேருக்கும் எனது கைப்படவே டோக்கன்களை வழங்க வேண்டும் என்று எனக்கும் ஆசை தான் ஆனால் அதற்கான நேரம் என்பது அதிகமாக பிடிக்கும் சுமார் நூறு பேர்கள் வந்து சாப்பிடும் வரை காத்திருந்தால் சுமார் இரண்டு மணி நேரமாவது ஆகும்.அதனால் மொத்த டோக்கங்களையும்
 உணவு வழங்கும் இடத்தில் உள்ள ஒருவரிடம் கொடுத்துவிட்டு இங்கு வரும் அனைவருக்கும் யாரிடமும் காசு வாங்காமல் இந்த டோக்கன்கள் தீரும்வரை உணவுகளை வழங்கவேண்டும் என்று அவர்களிடம் கேட்டுக்கொண்டேன். அவர்களும் இதனை சிறப்பாக செய்கின்றேன் என்று உறுதி அளித்தார்கள்.
 இந்த அம்மா உணவகங்களில் நாம் அடிக்கடி அன்னதானம் செய்வதுண்டு நாம் எங்கும் தேடி தெரிந்து அலையாமல் ஒருவரிடம் பொறுப்பைக் கொடுத்து அதற்கான டோக்கன்களை  வாங்கி அவர்களிடம் கொடுத்துவிட்டு வந்துவிடுவோம் அவர்கள் அந்த டோக்கன்கலுக்கு உறிய உணவுகளை அங்கு வரும் நபர்களுக்கு இலவசமாக கொடுத்து விடுவார்கள். இந்த சேவைகள் என்பது மிகப்பெரிய சேவைகள் என்று சொல்லமுடியாது ஏதோ நம்மால் முடிந்த சிறிய தொகை தான் ஆனால் அந்த சிறிய தொகை கூட சில பேருக்கு மிகப் பெரிய ஆறுதலாக இருக்கும் என்பதனை இந்த இடத்தில் யாரும் மறந்துவிடக்கூடாது. 


அது மட்டும் அல்லாது நமது குழுவின் அட்மின்கள் அனைவருக்கும் நாம் சொல்லியிருக்கும் தகவல் என்னவென்றால், தாங்கள் எங்கு செல்கின்றீர்கள் அதாவது கோவில் மற்றும் பொது இடங்களில் தாங்கள் தர்மம் செய்ய வேண்டும் என்ற ஒரு சூழ்நிலை ஏற்பட்டால் அப்போது தங்கள் கைகளில் இருக்கும் சிறு தொகையினை நீங்கள் அந்த தர்ம காரியங்களுக்காக பயன்படுத்திக்கொள்ளுங்கள் அது நீர்மோர் வழங்குவது அன்னதானம் செய்வது நலிந்தோருக்கு ஆடைகள் தானம் வழங்குவது,போன்ற ஏதாகிலும் இருக்கலாம் அதற்கான தொகையை நமது குழுவில் இருந்து உங்களது வங்கிக் கணக்கிற்கு அனுப்பப்படும் என்பதனை தெரிவித்துள்ளேன். அவர்களும் இதுபோன்ற காரியங்களும் நாங்கள் செய்கின்றோம் என்று தெரிவித்துள்ளார்கள்.அவர்களுக்கும் இத்தருணத்தில் நாம் நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றோம்.


 ஒரு கை தட்டினால் ஓசை வராது இரு கை தட்டினால் ஓசை வரும். என்பதைப்போல அனைவரும் தங்களால் முடிந்த நற்காரியங்களை செய்ய வேண்டும் என்பதற்கான நோக்கமே அன்றி வேறொன்றுமில்லை .


இணைந்திருப்போம்!!! இயன்றவற்றை செய்வோம்!!! நன்றி... 

02 April 2020

பஞ்ச பட்சி சாஸ்திர இரகசியம்...

பஞ்ச பட்சி சாஸ்திரம் என்றால் என்ன?

இறையருள் இல்லாமல் பஞ்ச பட்சி சாஸ்திரம் மட்டுமல்ல. வேறு எந்த சாஸ்திரமும் நமக்கு கைவராது. ஆகையால் இறைவனை வணங்கித் தொழுது விட்டு இந்த அபூர்வ பதிவை உலகம் அறிய  பகிர்கிறேன்....


இந்த இரகசியத்தின் அருமையை எனக்கு முதன்முதலில் தெரியபடுத்தியவர் நமது குழுவில் முக்கிய உறுப்பினராக இருக்கும் திருமதி,மாலதி ராஜ்குமார் அவர்கள்,எங்கள் இருவருக்கும் ஆன்மிகம் சம்பந்தமாக மணிகணக்கில் விவாதங்கள் நடக்கும் அது அறிவியல் சார்ந்ததாகவும் இருக்கும்.அப்படி ஒருமுறை விவாதம் நடக்கும்போது இந்த பஞ்சபட்சி சாஸ்திரம் பற்றிய விவாதங்களும் நடைபெற்றது. என்னுடைய விவாதம் அதெல்லாம் சரியாக யாராலயும் நூற்றுக்கு நூறு சரியாக கணிக்க முடியாது என்பதாகும் ஆனால் அவர்கள் அதெல்லாம் விடுங்க இந்தக் பஞ்சபட்சி சாஸ்திரம்  மட்டும் உங்க வாழ்க்கையில ஒருவாட்டி பயன்படுத்திப்பாருங்கள் அப்படின்னு சொன்னாங்க அதை எப்படி பார்க்கணும் எப்படி? அப்படிங்கிற அட்டவணையும் எனக்கு மெயிலில் அனுப்பி வச்சாங்க... சரி இது என்ன தான் நடக்குது  காசா? பணமா? ஒரு முறை டெஸ்ட் பண்ணி பார்த்துக்கலாம்னு என்னுடைய ஒரு சுப நிகழ்ச்சிக்காக சோதித்துப் பார்த்தேன் முதலில் சோதித்து பார்த்ததில் அது தவறாகவே அமைந்தது.

 மீண்டும் ஒருநாள் அவர்களுடன் பேசும்போது இந்த விவாதத்தை பற்றிய தகவல்கள் பரிமாறிக் கொண்டோம் எனது பக்கம் விவாதம் சாதகமாக இருந்ததால் நானும் விடாப்பிடியாக விவாதித்துக் கொண்டிருந்தேன். ஆனால் அவர்களோ விடாப்பிடியாக நீங்கள் இதை கணிப்பதில் ஏதோ தவறு செய்து இருக்கிறீர்கள் என்று ஆணித்தனமாக அவர்கள் கூறிக்கொண்டிருந்தார்கள். என்ன தவறாக இருக்கும்? என்று மீண்டும் விவாதம் தொடர்ந்தது அப்போதுதான் நீங்கள் சரியாக 100% உங்கள் பட்சி ஆட்சியில் இருக்கும் போது ஒரு காரியத்தை செய்து பாருங்கள் அதாவது நீங்கள் ஒரு காரியத்தை தொடங்கும் அந்தநேரம் உங்களது பட்சி 100% உச்சத்தில் இருக்க வேண்டும் இதுதான் அவர்கள் சொன்ன அடுத்த ரகசியம். 
சரி மீண்டும் ஒரு நல்ல சுப நிகழ்வுகளுக்காக காத்துக்கொண்டிருந்தேன் அந்த நாளும் வந்தது நானும் சரியாக 100% என்னுடைய   பட்சி உச்சத்தில் இருக்கும் அந்த நேரத்தை தேர்வு செய்து அனைத்து ஏற்பாடுகளையும் செய்து துவங்கினேன். என்ன ஒரு மிகப் பெரிய ஆச்சரியம் என்னை மெய்சிலிர்க்க வைத்தது அதிலிருந்து இன்றுவரை நான் இந்த பஞ்சபட்சி சாஸ்திரத்தை ஒரு பிரிண்ட் அவுட் எடுத்து எனது  நாட்காட்டியில் ஒட்டி வைத்துள்ளேன் முக்கியமான செயல்களை செய்யும்போது நான் இவை தற்போது பார்த்து வருகின்றேன் உண்மையில் பயனுள்ளதாக இருக்கிறது நீங்களும் பயன்படுத்தி பாருங்கள்.

பட்சி தெரிந்தவனிடம் பகை கொள்ளாதே என்பது முதுமொழி. இந்த சாஸ்திரம் தெரிந்தவரை பகைத்துக் கொண்டால் தன் மீது பகை கொண்டவரை வீழ்த்தும் வல்லமை  அவர்களுக்கு இருக்கும். அவ்வளவு சக்தி வாய்ந்தது. இதைப் படிப்பவர்கள் யாரும் தீய காரியத்திற்கு பயன்படுத்த வேண்டாம் என மிகத் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். அதே நேரத்தில் அரைகுறையாகப் புரிந்துக் கொண்டு  சோதனை செய்து தனக்குத் தானே பிரச்சினையைத் தேடிக்கொள்ளாதீர்கள்.

மனித உடலில் இயங்க கூடிய உள் உறுப்புகளுக்கு பல்வேறு வழிகளிலிருந்து சக்தி கிடைக்கும் வகையில் மனித உடல் அமைப்பு அமைந்துள்ளது.

மனிதனின் உடல் உறுப்புகளில் இருந்து வரும் நரம்புகளின் தொடர்பு மற்றும் நரம்புகளின் முடிச்சுகள் மனிதனின் கண், காது உள்ளங்கை மற்றும் கால் பாதங்களில் வந்தடைகிறது. மனிதனின் அகத்தை வெளிப்படுத்தும் புறவழி உறுப்பே கண்கள்தான். இயற்கையின் தோற்றத்தையும், மற்றவையையும் ஊர்ஜிதப்படுத்துவதும் கண்கள்தான்.

எதையும் முதலில் அங்கரிப்பது கண்கள் மூலமாகத்தான். அழகான உறுப்பே கண்கள். மனிதனின் உடல் உறுப்புகளில் ஏற்படும் பிரச்சினைகளுக்கும் மற்றும் நோய்களுக்கும் நாடி பார்த்து நோயை கணிப்பது போல மனிதனின் கருவிழியை வைத்தும் நோயை கணிக்கலாம்.

கருவிழித் திசுக்களில் ஏற்படும் புள்ளிகள், கோடுகள், நிற மாற்றங்கள் கருவிழித் திசுக்களின் ஒருங்கிணைப்பு மாற்றங்கள் ஆகியவற்றைக் கொண்டு உடல் உறுப்புகளின் பாதிப்புகளை துல்லியமாக கண்டு தீர்வு காணலாம். கண்களின் கருவிழிக் கொண்டு நோய் அறிந்து காது, உள்ளங்கை, கால் பாதங்களில் உள்ள வர்ம புள்ளிகள் தூண்டப்படுவதின் மூலமாக நோயினை குண்படுத்த முடியும்.

கருவிழியில் மருத்துவம் எப்படி உருவானது?

பஞ்சபட்சிகளில் ஒன்றான ஆந்தையை மையமாகவும் இதன் கண்களின் கருவிழியில் ஏற்பட்ட மாற்றத்தை கொண்டும் தான் கருவிழியில் மருத்துவம் உருவானது. கால் உடைந்த ஆந்தைக்கு காலில் கட்டு போடுவதற்கு முன் ஆந்தையை வைத்தியர் பார்த்தபோது அந்த ஆந்தையின் கண்ணின் கருவிழியில் ஒரு புள்ளி இருப்பதை கண்டறிந்தார். அதை வைத்து சிகிச்சை அளித்தார். இதில் ஆந்தையின் கால் குணமானது. உடனே அப்புள்ளி மறைந்தையும் கண்டார்.

அதே போலவே ஒரு மனிதனுக்கு ஏற்பட்ட விபத்தின் போது அவன் கருவிழியில் இதைப்போன்ற மாற்றம் ஏற்பட்டதையும் பின்பு அந்த மனிதனின் காயம் சரியானதும் அவன் கண்ணின் கருவிழி சரியானதையும் கண்டார்.

இந்த அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டுதான் நோயை நிர்ணயம் செய்ய ஒரு புதிய யுத்தியை கண்டறிந்து கையாண்டார்கள்.

கருவிழியின் மூலம் நோய் அறியும் மருத்துவம் கி.பி. 1837-ம் ஆண்டில் இருந்து இன்று வரை நடைமுறையில் உள்ளது.

அதே போல பஞ்சபட்சி சாஸ்திரம் ஓர் மனிதனின் வாழ்க்கை முறையையும், வசதி வாய்ப்பையும் மற்றும் அவனின் நோய் தன்மையையும், உள் உறுப்புகளில் எந்த உறுப்பு பாதித்துள்ளது என்பதையும், அவன் உடலில் எந்த சக்கரம் சரியாக   இயங்கவில்லை என்பதையும் கூற முடியும். மகாபாரத்தில் சாகதேவன் சோதிட சாஸ்திரம் கையாண்டார்.

கிருஷ்ண பகவான் பஞ்சபட்சி சாஸ்திரத்தை கையாண்டார் என்று சாஸ்திரம் கூறுகிறது. அதே போல ராமயணத்தில் பலவகை கலைகளையும் அறிந்த ராவணனும் பஞ்சபட்சி சாஸ்திரம் அறிந்தவர் ஆவார்.

இவர்கள் பஞ்ச பட்சிசாஸ்திரம் அதிகம் கையாண்டுயுள்ளனர்.

இந்த அபூர்வ சாஸ்த்திரங்களை யோகிகள் "ஞானிகள்" முனிவர்கள் சித்தர்களும் பல்லாயிரம் வருடங்களாக மிகவும் இரகசியமாக பயன்படுத்தியும் பாதுகாத்தும் பயிற்சி அளித்தும் வந்துள்ளனர்.

இவைகளை பல வருடம் தம்முடனே இருந்து தொண்டுகள் செய்துகுருவின் திருப்பாதமே கதி என இருந்து வரும் விசுவாசமுள்ள சீடனுக்கு மட்டும் இக்கலைகளின் அரிய இரகசியங்களை உபதேசித்து வந்துள்ளனர்.

இதில் பஞ்சபட்சி சாஸ்திரம் எனப்படும்  மகத்துவம் வாய்ந்த இக்கலை ஆதியில் எம்பெருமான் ஈசன் அன்னை மகாசக்தி உமையவளுக்கு உபதேசித்த அபூர்வ கலையாகும்.

தமிழ்க் கடவுளாகிய சுப்பிரமணியர் சூரபத்மனுடன் போரிட்டு அவனை வெல்ல முடியாமல் போகவே அவனை சம்ஹாரம் செய்யும் பொருட்டு தாயாகிய மகாசக்தியால் சுப்பிரமணியருக்கு உபதேசித்த உன்னத கலையாகும் "பஞ்ச பட்சி சாஸ்திரம்" இதனையே சூரனை வதம் செய்ய  முருகனுக்கு அன்னை மகாசக்தி வேல் கொடுத்ததாக சொல்வர்.

சூரனை வதம் செய்து வெகு காலம் சென்ற பின்பு குருமுனியாகிய அகத்திய முனிவருக்கு முருகப் பெருமான் பஞ்ச பட்சி சாஸ்த்திரத்தை உபதேசம் செய்தார்.

அகத்தியரும் மற்ற சித்தர்களுக்கு  உபதேசித்தார் இக்கலையைப் பயின்ற சித்தர்களும் தம்மிடம் உள்ள உண்மையான சீடர்களுக்கு மட்டும் குருவழி உபதேசம் அளித்து வந்துள்ளனர்.  

பஞ்ச பட்சி சாஸ்திரம் என்பது ஜோதிடக்கலையிலும் மேலான மிகவும் துல்லியமான ஒரு காலக்கணிதம் ஆகும்.இது பஞ்ச பூத சக்திகளை அடிப்படையாகக் கொண்டு இயங்குவது ஆகும். 

நவக்கிரகங்கள், பன்னிரு இராசிகள், இருபத்தேழு நட்சத்திரங்கள் ஆக மொத்தம் - 48- இவை அனைத்தையும் ஐந்து பட்சிக்குள் (பறவைகள்)அடக்குவதே இதன் சூட்சும இரகசியமாகும்.

பஞ்சபூதம் எனப்படும் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் எனப்படும் ஐந்து வித மாபெரும் பிரபஞ்ச சக்திகளை பஞ்சபட்சி எனப்படும். வல்லூறு,ஆந்தை, காகம், கோழி, மயில், என ஐந்து வித பறவைகளாக மாற்றி அமைத்து இக்கலையை உருவாக்கியது இறைவனின் வல்லமையாகும்.

சரம்  தெரிந்தவனிடம்  சரசமாடாதே 

பட்சி தெரிந்தவனிடம்  பகைகொள்ளாதே 

பல்லி சொல்பவனிடம் பதில் பேசாதே 

என்பது பெரியோர் வாக்குவாகும்.

மேற்கண்டபடி  பஞ்சபட்சி தெரிந்தவனை பகைத்துக் கொண்டால் பகைத்தவனை எளிதில் சாய்க்கும் வல்லமை அவனுக்கு உண்டு என்பதால்தான். இன்றும் தென் தமிழகத்தில் இக்கலையின் இரகசியம்  அறிந்த ஆசான்கள் ஒரு சிலர் மட்டுமே உள்ளனர். இக்கலையினைப் பயன் படுத்தி சேவல் சண்டை, ஆட்டுகிடா சண்டை, சிலம்பம் , பிரச்சனை வழக்குகள், போன்றவற்றில் தன்னைச் சார்ந்தவர்களை மட்டும் வெற்றி பெற வைத்து வருகின்றனர். 

அதே சமயம் பஞ்சபட்சி கலையின் சூட்சும சக்தியைப் பயன்படுத்தி வாழ்வில் மிகவும் தாழ்ந்த நிலையில் உள்ள ஒருவரைவாழ்வில் மிகவும் உச்ச நிலையில் உயர்த்தி பணம்,பதவி,புகழ், ஆகிய வற்றை  எளிதில் அடைய வைக்க முடியும்.மேலும் பஞ்சபட்சி நுட்பத்தினை அறிந்தவன் ஜெகத்தை ஆள்வான், அவனை எவரும் வெல்ல முடியாது என்பது உறுதியிட்ட உண்மையாகும்.

இக்கலையை பயன்படுத்தி மாந்திரீக அஷ்ட கர்மம் ஆடலாம். செய்தொழில், காரியங்கள், வாழ்க்கையில் முன்னேற்றம்,  புதுவித திட்டங்கள் போன்றவற்றை உடனே நடைமுறைக்கு கொண்டு வரவும், தொட்ட காரியங்கள் அனைத்திலும் வெற்றி பெறவும் முடியும்.

மேலும், நவக்கிரகங்களின் இயக்கத்தை கட்டுப்படுத்தும் வல்லமை இக்கலைக்கு உண்டு. நாள், திதி, நட்சத்திரம், யோகம், கரணம், நேரம், லக்கினம், போன்ற அனைத்து தோஷங்களும் பஞ்சபட்சியினைக் கட்டுப் படுத்த இயலாது.

பஞ்ச பட்சி சாஸ்திரம் என்றால் என்ன?
*********************************************

பட்சிகள் மொத்தம் ஐந்து. 
அவை முறையே 
(1)வல்லூறு.
(2)ஆந்தை.
(3)காகம்.
(4)கோழி.
(5)மயில்.

முதலில் யாருக்கு என்ன பட்சி என்று பார்ப்போம். ஒருவரின் நட்சத்திரத்தின் மூலம் பட்சியை நிர்ணயிக்கலாம். இது நட்சத்திரப் பட்சி எனப்படும். அவை கீழ் கண்டவாறு வரும்....

வல்லூறு
***********
அஷ்வினி,
பரணி,
கார்த்திகை,
ரோகிணி,
மிருகசீரிஷம்     
         
ஆந்தை
**********
திருவாதிரை,
புனர்பூசம்,
பூசம்,
ஆயில்யம்,
மகம்,
பூரம்    
              
காகம்
********
உத்தரம்,
ஹஸ்தம்,
சித்திரை,
சுவாதி,
விசாகம்    
                           
கோழி
********
அனுஷம்,
கேட்டை,
மூலம்,
பூராடம்,
உத்ராடம்     
                        
மயில்
********
திருவோணம்,
அவிட்டம்,
சதயம்,
பூரட்டாதி,
உத்ரட்டாதி,
ரேவதி

இதுதான் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. நட்சத்திரம் தெரியாதவர்கள் பெயரின் முதல் எழுத்தை வைத்து தங்களுடைய (அல்லது பிறருடைய) பட்சிகளை முடிவு செய்யலாம். இவை அட்சரப் பட்சிகள் எனப்படும்.

வளர்பிறை
*************

அ, ஆ - வல்லூறு

(ராமன், கலைவாணன் இப்படி, அதாவது ராமன் என்னும் பெயரில் ரா முதல் எழுத்து. அதை ர் + ஆ என்று பிரிக்கலாம். அதே போல் கலைவாணன் என்னும் பெயரில் முதல் எழுத்து க. இதை க் + அ என்று பிரிக்கலாம். இப்படியே மற்ற எழுத்துகளுக்கும் பார்த்துக் கொள்ளலாம்.) 

இ, ஈ - ஆந்தை

உ, ஊ - காகம்

எ, ஏ - கோழி

ஒ, ஓ - மயில்

தேய்பிறை
*************

அ, ஆ - கோழி 

இ, ஈ - வல்லூறு

உ, ஊ - ஆந்தை

எ, ஏ - மயில்

ஒ, ஓ - காகம்

         ஒருவர் தொழில் நிமித்தமாகவோ வேறு எதற்காகவேனும் தங்களுடைய பட்சியின் நிலையறிந்து செயல்பட்டால் அதில் வெற்றி நிச்சயம் பெறலாம். இந்த பட்சிகளின் தொழில்கள் என்று அரசு, ஊண், நடை, துயில், சாவு என்று நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலைகளில் பட்சிகளின் பலம் கீழ் கண்டவாறு இருக்கும் என்று சொல்லலாம்

அரசு  - 100% பலம்
ஊண் - 80%      “
நடை -   50%    “
துயில் - 25%    “
சாவு     - 0%     “

         ஒவ்வொரு பட்சிக்கு பகல்/இரவு நேரம் 5 பிரிவாக பிரிக்கப் பட்டு அந்த நேரத்தில் மேற்கண்ட எந்த நிலையில் இருக்கிறது என்று சொல்லப் பட்டிருக்கிறது. 

       இது தவிர இந்த பட்சிகளுக்கு மிகவும் பலவீனமான நாட்கள் (செயல் இழந்து விடும் நாட்கள் - Death Days) என்று இருக்கிறது. இவை படுபட்சி நாட்கள் எனப்படும். இந்த நாட்களில் எந்த முக்கியமான வேலை,  புது முயற்சி, சுப காரியம், பிரயாணம், மிகவும் Risk ஆன  ஆப்பரேஷன், மருத்துவ சிகிச்சை இவை மேற்கொள்ளாமல் இருப்பது நல்லது. இவை பகல், இரவு இரண்டு வேளைகளுக்கும் பொருந்தும்.

வளர்பிறை - படுபட்சி நாட்கள்
***********************************

வல்லூறு - வியாழன், சனி

ஆந்தை - ஞாயிறு, வெள்ளி

காகம் - திங்கள்

கோழி - செவ்வாய்

மயில் - புதன்

தேய்பிறை படுபட்சி நாட்கள் 
*********************************

வல்லூறு -செவ்வாய்

ஆந்தை -திங்கள்

காகம் -ஞாயிறு

கோழி -வியாழன், சனி

மயில் -புதன், வெள்ளி

       அடுத்து இந்த பட்சிகளுக்கு ஊண் பட்சி நாட்கள் (Ruling Days) என்று இருக்கின்றன. அந்த நாட்களில் அந்த பட்சி பலமாக இருக்கும். முன்பு சொன்ன படு பட்சி நாட்களுக்கு நேர் எதிரானது. மேலே விலக்கச் சொன்ன எல்லாக் காரியங்களையும் மேற்கொள்ள ஏதுவான நாள். இவை படு பட்சி நாட்கள் போல் இல்லாமல் பகல் இரவு இரு வேளைகளுக்கும் வெவ்வேறாக இருக்கும். அவை கீழ்கண்டவாறு:-

வளர்பிறை
*************

பகல் - ஊண்பட்சி நாட்கள் (Ruling Days)

வல்லூறு - ஞாயிறு, செவ்வாய்

ஆந்தை - புதன், திங்கள்

காகம் - வியாழன்

கோழி - வெள்ளி

மயில் - சனி

இரவு - ஊண்பட்சி நாட்கள் (Ruling Days)

வல்லூறு - வெள்ளி

ஆந்தை -ஞாயிறு

காகம் -ஞாயிறு, செவ்வாய்

கோழி - திங்கள், புதன் 

மயில் -வியாழன் 

தேய்பிறை
*************

பகல் - ஊண்பட்சி நாட்கள் (Ruling Days)

வல்லூறு -வெள்ளி

ஆந்தை - வியாழன் 

காகம் -புதன்

கோழி - ஞாயிறு, செவ்வாய்

மயில் - திங், சனி

இரவு - ஊண்பட்சி நாட்கள் (Ruling Days)

வல்லூறு -ஞாயிறு, செவ்வாய்

ஆந்தை - புதன்

காகம் - வியாழன்

கோழி - திங்கள், சனி 

மயில் -வெள்ளி 

      இந்த படு பட்சி நாட்களில் உங்களுடைய பட்சி குறிப்பிட்ட நேரத்தில் அரசு என்ற நிலையில் இருந்தாலும் எந்த பிரயோஜமும் இல்லை. அதே நேரத்தில் ஊண் பட்சி நாட்களில் சாவு என்ற நிலையில் இருந்தாலும் அது பலமிழந்ததாக ஆகாது.

    அடுத்து பட்சிகளின் பொதுவான பல நிர்னயங்களைப் பார்ப்போம். பட்சிகளின் பலம் இறங்குமுகமாக கீழ் கண்டவாறு:
(1) காகம்
(2) ஆந்தை
(3) வல்லூறு
(4) கோழி
(5) மயில்
அதாவது காகம் எல்லாவற்றிலும் பலமிக்கது என்றும் மயில் மிகவும் பலவீனமானது என்று இதன் மூலம் முடிவுக்கு வரலாம்.

        இது எதற்கு என்றால் உங்களது பட்சி மயில் என்று வைத்துக் கொள்வோம். உங்கள் பட்சியை விட பலமான ஆந்தை, காகம் இவற்றைத் தங்களது பட்சியாகக் கொண்டுள்ளவர்களுடன் நீங்கள் போட்டி போட்டு ஜெயிப்பது கடினம். ஆனால் பலவீனமான உங்கள் பட்சிக்கு ஊண் பட்சி நாட்களாக இருந்து, எதிராளியின் பட்சி படு பட்சியாக இருந்தால் உங்களுக்குதான் வெற்றி. இதை தற்காப்புக்காக பயன் படுத்தலாம் என்பதற்காகச் சொல்கிறேன். பிறருக்கு தீங்கு செய்வதற்காக அல்ல.

           அந்த கால கட்டத்தில் எதிராளிக்கு பில்லி, சூனியம், ஏவல் செய்பவர்கள்,  அல்லது ஏதாவது ஒரு வகையில் கெடுதல் செய்ய நினைப்பவர்கள், பஞ்ச பட்சி தெரிந்தவர்களிடம் கேட்டு தனக்கு ஊண் பட்சி நாளும், எதிராளிக்கு படு பட்சி வரும்படி பார்த்துக் கொள்வார்கள். அல்லது பஞ்ச பட்சி தெரிந்தவர்கள் தங்களை நாடி வருபவர்களிடம் இந்த நாட்களைத் தேர்ந்தெடுத்து சொல்வார்கள். தீமைக்கு மட்டுமல்ல. நல்ல காரியங்களுக்கும் பயன்படுத்தலாம். பயன்படுத்த வேண்டும்.

                  தனக்கு சாதகமாக காரியம் சாதித்துக் கொள்ள நினைப்பவர்கள், (வீண், வம்பு, வழக்கு என்று மாட்டிக் கொண்டவர்கள்,  அதிகாரிகளைச் சந்தித்து உதவி கேட்க நினைப்பவர்கள்) இந்த பட்சியின் நிலையறிந்து நடந்தால் நன்மை அடையலாம். ஊண் பட்சி நாட்களில் வேலைக்கு மனு செய்தால் சாதகமான பதிலை எதிர் பார்க்கலாம்.

               படு பட்சி நாட்கள் என்பது மிகவும் மோசமான பலன்களைக் கொடுக்கக் கூடியது என்று பார்த்தோம். இதனுடைய கொடிய பலன்களிலிருந்து தப்பிக்க ஒரு பரிகாரம் சொல்லியிருக்கிறார்கள். ஓம் நமசிவய என்னும் பஞ்சாட்சர மந்திரத்தை ஜெபம் செய்து விட்டு சென்றால் அதன் கடுமை குறையும் என்று. (இதை மசிவயந, சிவயநம, நசிவயம  என்று 125 வகையில் மாற்றி சொல்லலாம். பலன் ஒன்றுதான்.) ஆயினும் முழுமையாக படு பட்சி நாளின் கடுமையை கட்டுப்படுத்தி விட முடியாது என்பது என் கருத்து.

              நாளும் கோளும் சிவனடியார்களை ஒன்றும் செய்து விட முடியாது என்று கோளறு திருப்பதிகத்தைப் பாடி தன் பயணத்தைத் தொடர்ந்த  திருஞானசம்பந்தரே அதன் பிடியில் இருந்து தப்ப முடியாமல் போய் விட்டது. நாமெல்லாம் எம்மாத்திரம்.

பறவைகள் ஐந்து. அதன் தொழில்கள் ஐந்து என்று ஏற்கனவே பார்த்தோம். எந்த பறவை எந்த நாளில் எந்த நேரத்தில் என்ன தொழில் செய்யும் என்று பார்ப்போம். ஒரு நாளில் மொத்தம் 24 மணி = 60 நாளிகை. பகல் = 30 நாளிகை, இரவு = 30 நாளிகை. அது ஐந்து பறவைகளுக்கும் ஐந்து பிரிவாக பிரிக்கப்பட்டு பகல் (அல்லது இரவில்) தன் தொழிலைச் செய்ய ஒவ்வொரு பறவையும் 6 நாழிகைகள் எடுத்துக் கொள்ளும். 6 நாழிகைகள் என்பது 2 மணி 24 நிமிடங்கள். முதல் 6 நாழிகை ஊண் என்றால் அடுத்த 6 நாழிகை நடை அல்லது வேறு ஒரு தொழில் என்று வரும்.

உண்மையில் உற்றுக் கவனித்தீர்களானால் வளர் பிறை பகல் தொழில் முறையே ஊண், நடை, அரசு, துயில், சாவு என்று வரும். இரவு ஊண், அரசு, சாவு, நடை, துயில் என்று வரும். அதே போல் தேய்பிறை பகல் ஊண், சாவு, துயில், அரசு, நடை என்றும் இரவில் ஊண், துயில், நடை, சாவு, அரசு என்ற இந்த வரிசையில் வரும். எல்லா பட்சிகளுக்கும் வளர்/தேய் பிறைகளில் ஞாயிறு செவ்வாய், ஒரே மாதிரியான தொழில் இருக்கும். வளர் பிறைகளில் திங்கள், புதன் தேய்பிறைகளில் திங்கள், சனி, பட்சிகளின் தொழில் ஒரே மாதிரி இருக்கும். மற்ற கிழமைகளில் அந்தந்த கிழமைக்கு தகுந்தாற்போல் மாறி வரும். 

அதிகம் குழப்ப விரும்பவில்லை. கீழே ஒரு அட்டவணை தந்திருக்கிறேன் அதைப் பார்த்துக் கொள்ளுங்கள். சூரிய உதயம் காலை 6 மணி என்ற நிலையில் இதைத் தந்திருக்கிறேன். நீங்கள் இருக்கும் நாட்டில் சூரிய உதயம் 6.30 மணி என்றால் அந்த நேரத்திலிருந்து ஆரம்பிக்க வேண்டும்.

வல்லூறு - வளர்பிறை

நட்பு : மயில், ஆந்தை
பகை : காகம், கோழி 

வல்லூறு - தேய் பிறை

நட்பு : மயில், காகம்
பகை : ஆந்தை, கோழி 

ஆந்தை - வளர்பிறை

நட்பு : வல்லூறு, காகம்
பகை : மயில், கோழி

ஆந்தை - தேய்பிறை

நட்பு : கோழி, காகம்
பகை : வல்லூறு, மயில்

காகம் - வளர்பிறை

நட்பு : ஆந்தை,கோழி
பகை : வல்லூறு, மயில்

காகம் - தேய்பிறை

நட்பு : ஆந்தை, வல்லூறு
பகை : மயில், கோழி

கோழி - வளர்பிறை

நட்பு : மயில், ஆந்தை
பகை : காகம், வல்லூறு 

கோழி - தேய்பிறை

நட்பு : மயில், ஆந்தை
பகை : காகம், வல்லூறு

மயில் - வளர்பிறை

நட்பு : வல்லூறு, கோழி
பகை : ஆந்தை, காகம்

மயில் - தேய்பிறை

நட்பு :  வல்லூறு, கோழி
பகை : ஆந்தை, காகம்

ஊண் பட்சி நாட்களை மஞ்சள் நிறத்திலும், படு பட்சி நாட்களை சிவப்பு நிறத்திலும் இரண்டும் கலந்து வந்தால் ஆரஞ்சு நிறத்திலும் highlight செய்து உள்ளேன்.






நட்பு பட்சியாக உள்ளவர்களுடன் கூட்டு சேர்வது நன்மை பயக்கும். பகை உள்ளவர்களிடம் சற்று தள்ளியே இருப்பது நல்லது.

“அண்டத்தில் உள்ளதெல்லாம் பிண்டத்தில் உள்ளது” என்பது சித்தர்களின் வாக்கு. பிரபஞ்சமானது பஞ்ச பூதங்களாலானது என்பதை சித்தர்கள் கண்டறிந்தார்கள். அது போல் மனித உடலானது பஞ்ச பூதங்களாலானது என்பதையும் அவர்கள் அறிந்திருந்தனர்.

ஜோதிட சாஸ்திரத்தில் சந்திரனுக்கு உடல் காரகன்,மனோக்காரகன் என்று பெயர்.மனித உடலிலும்,மனதிலும் ஏற்படும் மாற்றங்களுக்கு சந்திரனின் சுழற்சியே காரணம் என்பதை சித்தர்கள் கண்டறிந்தார்கள்.மனிதர்களின் உடற்கூறு அவர்கள் பிறந்த ஜென்ம நட்சத்திரத்திற்கு தகுந்தாற்போல் அமைந்தூள்ளது என்பதையும் கண்டறிந்தார்கள். உடலை இயக்குவது உயிர் காந்த ஆற்றலாகும். அந்த உயிர் காந்த ஆற்றாலானது சந்திரனினின் சுழற்சிக்கு தகுந்தார்போல் சில நேரங்களில் வலிமையடைவதையும்,சில நேரங்களில் வலுவிழந்துபோவதையும் கண்டறிந்தார்கள்.

உடலில் உயிர்காந்த ஆற்றல் வலிமையாக இருக்கும்போது, எண்ணிய எண்ணங்கள் எளிதில் நிறைவேறுவதையும், உடலில் உயிர்காந்த ஆற்றல் வலிமை குன்றியிருக்கும்போது, எண்ணிய எண்ணங்கள் நடைபெறாமல் தடைபடுவதையும் அனுபவத்தில் கண்டறிந்தார்கள்.

உடலில் உயிர்காந்த ஆற்றல் வலிமையாக இருக்கும்போது, உடல் வலிமை,மனவலிமை கூடுவதையும், உடலில் உயிர்காந்த ஆற்றல் வலிமை குன்றியிருக்கும்போது, உடல் வலிமை,மனவலிமை குறைவதையும் அனுபவத்தில் கண்டறிந்தார்கள். உடலில் ஏற்படும் இத்தகை மாற்றங்கள் ஒரு குறிப்பிட்ட கால சுழற்சியில் இயங்குகிறது என்பதையும்,அந்த கால சுழற்சிக்குத்தகுந்தார் போல் செயல்பட்டால் வாழ்க்கையில் எப்பொழுதும் வெற்றி  நடை போடலாம் என்பதையும் மானிடர்கள் அறிந்துகொள்ளும் பொருட்டு அதை பஞ்ச பட்சி சாஸ்திரம் என்னும் தலைப்பில் உலகுக்கு வெளிப்படுத்தினார்கள்.
“பஞ்ச”என்றால் “ஐந்து” என்று பொருள். “பட்சி” என்றால் “பறவை” என்று பொருள். “சாஸ்திரம்” என்றால் “எழுதப்பட்டவைகளை செயல்படுத்திப்பார்த்தால் உண்மை விளங்கும்” என்று பொருள்.

பஞ்ச பட்சிகள் என்பவை வல்லூறு, ஆந்தை, காகம், கோழி, மயில் ஆகிய ஐந்து பறவைகளாகும்.

பஞ்ச பட்சி சாஸ்திரத்தில் ஜென்ம நட்சத்திரம் தெரிந்தவர்களுக்கு ஜென்ம நட்சத்திர அடிப்படையிலும், ஜென்ம நட்சத்திரம் தெரியாதவர்களுக்கு அவரவர்களுடைய பெயரின் முதல் எழுத்தில் அமைந்துள்ள உயிர் எழுத்தின் அடிப்படையிலும் பட்சி நிர்ணயம் செய்யப்படுகிறது.

தமிழ் எழுத்துக்களை சித்திர எழுத்துக்கள் என தமிழறிஞர்கள் குறிப்பிடுவர். தமிழ் உயிர் எழுத்துகளில் குறில் வடிவமுடைய “அ, இ, உ, எ, ஒ” ஆகிய ஐந்து எழுத்துக்கள் என்ன வடிவத்தில் அமைந்துள்ளனவோ,அதே வடிவத்தையொத்த பறவைகள் பஞ்ச பட்சிகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.

அ - வல்லூறு
இ - ஆந்தை
உ - காகம்
எ - கோழி
ஒ - மயில்.

மனித உடல் பஞ்ச பூதங்களால் ஆனது. அந்த பஞ்ச பூதங்களின் செயல் பாட்டையே, பஞ்ச பட்சி சாஸ்திரம் விளக்குகிறது.

நிலம் - வல்லூறு
நீர் - ஆந்தை
நெருப்பு - காகம்
காற்று - கோழி
ஆகாயம் - மயில்.

         பஞ்ச பூதங்களைக்கட்டுப்படுத்தும் ஆற்றல் பஞ்சாக்ஷரம் என்னும் சிவ மந்திரத்திரத்திற்கு உண்டு. எனவே பஞ்சாக்ஷரம் ஜெபிப்பவனை யாராலும் வெற்றிகொள்ள முடியாது என்பதை இந்த சாஸ்திரம் ரகசியமாக வெளிப்படுத்துகிறது.

ந - வல்லூறு
ம - ஆந்தை
சி - காகம்
வ - கோழி
ய - மயில்.

பஞ்சாக்ஷர மந்திரத்திற்குரிய தேவதையான சிவபெருமானே,இந்த பஞ்ச பட்சி சாஸ்திரத்தை முதலில் தன் குமரனான முருகப்பெருமானுக்கு அசுரர்களை அழிக்கும் பொருட்டு உபதேசித்தார் எனவும்,முருகன் அதை அகத்தியருக்கு உபதேசித்தார் எனவும்,அகத்தியர் பதினென் சித்தர்களுக்கு உபதேசித்தார் எனவும் புராணங்களில் கூறப்பட்டுள்ளது.

பஞ்ச பட்சி சாஸ்திரத்தின் உதவியுடன் கீழ்கண்ட காரியங்களை செய்யலாம்.

(1)   உடலிலிருந்து நோய் நீக்குதல்.
(2)   பிறர் உடலில் நோயை உண்டாக்குதல்.
(3)   மனோவிகாரங்களிலிருந்துதன்னை தற்காத்துக்கொள்தல்.
(4)   பிறர் மனதை கட்டுப்படுத்துதல்.
(5)   எண்ணிய எண்ணங்களை நிறைவேற்றிக்கொள்தல்.
(6)   பிறர் எண்ணங்கள் நிறைவேறாமல் தடுத்தல்.
(7)   போட்டிகளில் வெற்றியடைதல்.
(8)   எதிரிகளை வெல்லுதல்.
(9)   தாம்பத்தியஉறவில் பெண்ணை திருப்திபடுத்துதல்.
(10) ஆருட பலன் கூறுதல்.
(11) கிரக தோசங்களுக்கு பரிகாரம் செய்தல்.
(12) சுப காரியங்களுக்கு நல்ல நேரம் தேர்ந்தெடுத்தல்.
(13) வர்மம் நீக்குதல்,வர்மத்தால் எதிரிகளைதாக்குதல்.!!!.

எனக்கு தெரிந்து இன்று இத் தெய்வீகக் கலையின் அதிசூட்சும இரகசியங்கள் அறிந்த ஆசான்கள் வெகுசிலர் மட்டும் தான் உள்ளனர்.    

உண்மையான மெய்குருவிடம் சென்று பணிந்து இக்கலையை கற்கும் ஒருவனை பஞ்சபூத சக்திகள் துணை நின்று காக்கும். அவன் வாழ்வில் மேன்மை பெற்று சீரும் சிறப்புடன் வாழ வகை செய்யும். அதே சமயம் இக்கலையின் மூலமாக சத்ருக்களை துன்புறுத்தவோ, அழிக்கவோ நினைத்தால் ஏழு ஜென்ம பாவ வினைகள் வந்து சேரும். என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.