Subscribe

BREAKING NEWS

26 November 2019

உங்களது மனம் எப்படி இயங்குகிறது உங்களுக்கு தெரியுமா?(ரகசியம் 6)






உங்களது மனம்தான் உங்களுடைய விலைமதிப்பற்ற உடமை. அது எப்போதும் உங்களுக்குள்ளேயே இருக்கிறது ஆனால் நீங்கள் அதை எப்படிப் பயன்படுத்துவது என்பதை அறிந்து கொண்ட பிறகு அதன் அற்புதமான சக்தி உங்களுக்கு சொந்தமாகும். நாம் முன்பே பார்த்தபடி உங்கள் மனதிற்கு வெளி மனம் ,ஆழ்மனம் ,ஆகிய இரு நிலைகள் உள்ளன நீங்கள் உங்கள் வெளி மனத்தைக் கொண்டு சிந்திக்கிறீர்கள் உங்களது வழக்கமான சிந்தனைகள் ஆழ்மனதிற்குள் சென்று பதிந்துவிடுகிறது. பின்னர் உங்கள் ஆழ்மனமானது உங்களது எண்ணங்களில் அதற்கு ஏற்றார் போல் அவற்றை படைக்கின்றது. உங்களது ஆழ்மனம் தான் உங்கள் உணர்ச்சிகளின் இருப்பிடம் ஆகும். இது தான் படைக்கும் மனம் என்று சொல்வார்கள் நீங்கள் நல்லவற்றை சிந்தித்தால் நல்லவை மலரும் தீயவற்றைச் சிந்தித்தால் தீயவையே பிறக்கும். இப்படித்தான் உங்கள் மனமும் வேலை செய்கின்றது.

 நீங்கள் முக்கியமாக நினைவில் வைக்க வேண்டியது என்னவென்றால் உங்களது ஆழ்மனம் ஒரு கருத்தை ஏற்றுக் கொண்டு விட்டால் அது உடனே அதை செயல் படுத்த துவங்கிவிடும். ஆழ்மனம் நல்ல கருத்துக்களுக்கும் தீய கருத்துக்களுக்கும் ஒரே விதமாகத்தான் செயல்படுகின்றது. என்பது வியப்பான உண்மை, என்று நாம் முதலில் பார்ப்போம் எதிர்மறையான வழியில் இவ்விதியை நடைமுறைப்படுத்தினால் தோல்வியும் வருத்தமும் ஏற்பட காரணமாகிவிடும்.

 அதேசமயம் உங்களது வழக்கமான சிந்தனை ஆக்கபூர்வமானதாகவும் இருக்கும் பட்சத்தில் நீங்கள் முழு ஆரோக்கியத்தையும் வெற்றியையும் செழிப்பையும் அனுபவிப்பீர்கள். நீங்கள் சரியான வழியில் சிந்திக்கவும் உணரவும் துவங்கிவிட்டால் மன அமைதியும் ஆரோக்கியமும் உடலும் கண்டிப்பாக உங்கள் வசப்படும் நீங்கள் மனதளவில் ஒரு விஷயத்தை ஏற்றுக் கொண்டு அதை உண்மை என உணரும் போது உங்களது ஆழ்மனம் அதை ஏற்றுக்கொண்டு அதை உங்கள் அனுபவம் நிகழ்த்தும்  நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் உங்கள் கருத்தை உங்கள் ஆழ்மனத்தை ஏற்றுக் கொள்ள வைப்பதுதான். அப்படி நிகழும் உங்களது ஆழ்மனம் நீங்கள் விரும்பும் ஆரோக்கியத்தையும் அமைதியையும் செழிப்பையும் உங்களிடத்தில் கொண்டு வந்து சேர்க்கும்.

 நீங்கள் ஆணையிடுங்கள் உங்களது ஆழ்மனம் தன் மீது பதிந்துள்ள கருத்தினை அப்படியே உங்கள் நிஜ வாழ்க்கையில் பிரதிபலிக்கும்.
எண்ணங்கள் ஆழ்மனதிற்கு அனுப்பப்படும் போது மூளையில் உள்ள உயிரணுக்கள் பதிவுகள் நிகழ்கின்றன என்று மனநல மருத்துவர்களும் குறிப்பிடுவார்கள் ஏதாவது ஒரு கருத்தை உங்களால் மனம் ஏற்றுக் கொண்டு விட்டால் அதை நடைமுறைப்படுத்த உடனே அது செயலில் இறங்கி விடும். கருத்துக்களை தொடர்புபடுத்தி செயலாற்றுவது அடிப்படையில் அதை நீங்கள் உங்கள் வாழ்நாள் முழுவதும் சேகரித்து வைத்திருக்க முடியும். ஒவ்வொரு துளி அறிவையும் உங்கள் நோக்கம் அதை நிறைவேற்ற பயன்படுத்துகிறது உங்களுக்குள் இருக்கும் பெரும் சக்தியையும் ஆற்றலையும் அறிவையும் அது பயன்படுத்திக்கொள்கிறது இயற்கை விதிகள் எல்லாம் ஒன்று திரட்டி அதன் பாதையை அமைத்துக் கொள்கிறது சில நேரங்களில் அது உங்கள் கஷ்டங்கலுக்காண தீர்வை உடனே வழங்கலாம், சில நேரங்களில் அதற்கு பல நாட்கள் வாரங்கள் அல்லது அதற்கும் அதிகமான நேரம் பிடிக்கலாம், அதன் வழிகள் நம் அறிவிற்கு அப்பாற்பட்டவை.

வெளி மனத்திற்கும்   ஆழ்மனதில் உடலுக்கும் மனதுக்கும் இடையே வேறு வேறுபாடு:-
வெளிய மனமும் ஆழ்  மனமும் இரண்டு மனங்கள் அல்ல என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும் அவை ஒரு மனதிற்குள் அமைந்துள்ள சிறு செயல்கள். பகுத்தறியும் மனம் தான் உங்களது வெளிமனம் வீட்டையும் வாழ்க்கையும் தேர்ந்தெடுப்பதை ஒரு நல்ல முடிவுகளையும் வெளி மானத்தின் மூலமாகத்தான் எடுக்கிறீர்கள் மறுபுறத்தில் உங்களது தேர்வு எதுவும் இல்லை இந்த விடயம் தானாகவே இயங்க வைக்கப்படுகிறது. செரிமானம்  சுவாசித்தல் ஆகிய இன்றியமையாத செயல்கள் உங்கள் வெளிமனத்தின்  ஆதிக்கம் இல்லாமல் உங்களது ஆழ்மனத்தால்  இயக்கப்படுகின்றன என்பதை நீங்கள் அறிவீர்கள்.

 ஆழ்மனம் தன் மீது பதிக்கப்படும் கருத்துக்களை எல்லாத்தையுமே  ஏற்றுக்கொள்ளும் ஒரு செழிப்பான நிலத்தை போன்றது உங்கள் எண்ணங்கள் செயல் திறன்கள் கொண்டவை எதிர்மறையான அவை அறிவுபூர்வமான எண்ணங்கள் தொடர்ந்து உங்கள் மனதில் எதிர்மறையாகவே செயலாற்றுகின்றன உடனடியாகவோ அல்லது சிறிது காலம் கழித்து அவை வடிவம் பெற்று உங்களுடைய எண்ணங்களுக்கு ஏற்றவாறு உங்களது  வாழ்க்கையை மாற்றுகிறது.

ஹிப்னாடிசம் செய்பவர்கள்  மனத்தின் மூலம் உறக்க நிலைக்கு உட்படுத்தப்படுவார்கள் அவர்கள் மீது உளவியலாளர்கள் எண்ணற்ற பரிசோதனைகளையும் நிகழ்த்தியுள்ளனர் பகுத்தறிவு செயல்முறைக்கு தேவையான தேர்ந்தெடுப்பு கலையும் ஒப்பீடு களையும் ஆழ் மணம் மேற்கொள்வது இல்லை என்பதை இந்த ஆராய்ச்சி தெளிவாக எடுத்துக் காட்டுகிறது தூண்டுதல் மூலம் உங்கள் ஆழ்மனதில் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்பதை உணர ஒரு உதாரணத்தைப் பார்க்கலாம்.

 பயிற்சி பெற்ற மன வசிய நிபுணர் ஒருவர் தன்னிடம் சிகிச்சை பெற வரும் ஒருவரிடம் அவர் நீ நாய் என்றோ அல்லது பூனை என்றோ நம்பவைக்க வெளியிலிருந்து தூண்டினால் அந்த நபர் இம்மி பிசகாமல் அப் பாத்திரமாகவே மாறி நாயை போலவும் பூனைகள் போலவும் சத்தமிடுவார்கள் அவருடைய தோற்றம் நடை பாவனை யாவும் அந்த நேரத்திற்கு தற்காலிகமாக மாறிவிடுகிறது இதுதான் ஆழ்மனத்தின் அபரிமிதமான சக்தி ஒன்று.

 இதைதான் நாம் நமக்குத் தேவையானவாறு நம் மனதை கட்டுக்குள் வைத்து நமக்கு தேவையானதை பெற பயிற்சி மேற்கொள்ளுதல் வேண்டும் உங்களது வெளிமனம் சில சமயங்களில் ஒரு வாயிற்காவலன் ஆக செயல்படுகிறது என்பதை நாம் முன்பே பார்த்தோம் பொய்யான கருத்துக்கள் ஆழ்மனதில் பதிய விடாமல் பாதுகாப்பது தான் நமது  மிக இன்றியமையாத வேலைகளில் ஒன்று. இது இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருப்பதற்கு காரணம் ஆழ்மனம் தூண்டுதலால் தான் எளிதில் தூண்டக்கூடிய ஒன்று என்று மனதில் நிறுத்துங்கள்.


சுயபிரகடனம் அதாவது ஆட்டோ சஜஷன்

 ஆட்டோ சஜஷன்  என்பது ஏதாவது ஒரு விஷயம் தீர்மானம் திட்டமிட்ட தனக்கு தனக்குத்தானே தீவிரமாக  சொல்லிக் கொள்வதாகும்    தீங்குவிளைவிக்காத  முறையாகப் பயன்படுத்தப்பட்டால் அதிக நன்மை அளிக்கும். உதாரணமாக ஒரு 75 வயது ஒரு மூதாட்டி ஒருவர் தன் நினைவாற்றலை திறன் குறித்து எப்போதும் மிகவும் பெருமை கொண்டிருந்தார் எல்லோரையும் போல சில சமயங்களில் அவர் சிலவற்றை மறப்பதுண்டு ஆனால் அதைப்பற்றி பெரிதாக அவர் அப்போது கவலைப்படவில்லை இருந்தாலும் வயது ஆக ஆக அவர் தனக்கு மறதி ஏற்பட்ட சந்தர்ப்பங்களில் கவனித்து அது குறித்துக் கவலைப்படத் தொடங்கினார் ஒவ்வொரு முறை அவர் எதையாவது மறந்த போதும் என் வயது காரணமாக எனக்கு ஞாபக மறதி ஏற்படுகிறது என்று கூறலானார்.

 இந்த எதிர்மறைப் தூண்டுதலால் மற்றவர்களின் பெயர்களையும் நிகழ்வுகளையும் அவர் மேலும் மேலும் கிட்டதட்ட நம்பிக்கையை இழக்கும் நிலைக்கு வந்தார் பின்னர் அதிர்ஷ்டவசமாக தன்னைத்தானே எவ்வளவு சீரழித்து கொண்டிருக்கிறோம் என்பதை உணர்ந்துகொண்டார் தன்னுடைய நிலைமையை மாற்ற அவர் முடிவு செய்தார்.

 நான் ஏன்  நினைவை இழக்கிறோம்  என்று நினைக்க தூண்டப்படும் ஒவ்வொரு முறையும் அவர் தன் சிந்தனையை அங்கேயே நிறுத்தி விடுவார் அதோடு தன் எண்ணப் போக்கையும் வலுக்கட்டாயமாக மாற்றுவார் நாள்தோறும் பலமுறை நேர்மறையான  சுய  பிரகடனம் பயிற்சி செய்தார் அவர் தனக்கு தானே இவ்வாறு கூறிக்கொண்டார்.

  இன்று முதல் எல்லா விதத்திலும் என் நினைவு மேம்படுகிறது ஒவ்வொரு குறிப்பிட்ட நேரத்தில் எனக்கு தேவைப்படும் அனைத்தும் என் ஞாபகத்தில் இருக்கும் எனக்கு கிடைக்கும் என் மனப்  பதிவுகள் தெளிவாகவும் நிச்சயமான தாகவும் இருக்கும் நான் அவற்றை எளிதாக நினைவில் நிறுத்திக் கொள்வேன்  நான் எவற்றை நினைவு கொள்ள விரும்பும் அவையெல்லாம் சரியான முறையில் என் மனதில் வந்து சேரும் நான் ஒவ்வொரு நாளும் வேகமாக முன்னேருகிரேன்  விரைவில் இதுவரை இல்லாத அளவு என் நினைவு மேம்படும் அது அவ்வாறு நடக்கும்.

 இவ்வாறு அவர் பயிற்சி செய்தார் சுமார் மூன்று வாரங்களுக்குப் பிறகு அவருடைய ஞாபகம் நல்ல நிலைக்கு திரும்பியது..

  சிந்தனைகள் தொடரும்...


25 November 2019

எண்ணம்போல் வாழ்க்கை அமைய !!! (ரகசியம்5)


மிகப்பெரிய அறிவியல்  அறிஞர்கள் கவிஞர்கள் பாடகர்கள் எழுத்தாளர்கள் கண்டுபிடிப்பாளர்கள் பலரும் வெளிமனம் மற்றும் ஆழ்மனத்தின் செயல்பாடுகள் குறித்து ஆழமாக அறிந்திருந்தனர். உடனே தங்களுடைய குறிக்கோள்களை அவர்கள் அடைவதற்கான ஆற்றலை இந்த பிரபஞ்சம் அவர்களுக்கு கொடுத்துள்ளது என்றால் அது மிகையாகாது ..


வெளிமனம் என்பது ஒரு பழைய கப்பலின் வெளிப்புற அறையில்  இருக்கும் கப்பல்  தலைவரை போன்றது அவர் இயந்திர அறையில் இருப்பவர்களுக்கு கட்டளைகளை பிறப்பிப்பார் அங்கிருப்பவர்கள் பொதி கலன்களையும் இயக்கங்களையும்,இயந்திரங்களையும் கட்டுப்படுத்துவார் இயந்திர அறைக்குள் இருப்பவர்களுக்கு தாங்கள் எங்கு செல்கிறோம் என்பது தெரியாது அவர்கள் கட்டளைகளை மட்டுமே செயல்படுத்துவார்கள்  தலைவர்  மற்றும் பிற கருவிகளின் அடிப்படையில் தவறாக கணித்து அதன் காரணமாக தவறான கட்டளைகளை அனுப்பினால் அவர்கள் அப்படியே சிறு மாற்றம் கூட இல்லாமல் அப்படியே செய்வார்கள். கப்பல் பாறைமீது கூட மோதும்  தான் என்ன செய்கிறோம் என்பது கூட அவர்களுக்கு தெரியாது அதுதான் ஆழ்மனத்தின் செயல்பாடுகள். கப்பல் தலைவருக்கு தெரியும் என்று அவர்கள் நம்புவதால் பணிக்குழு உறுப்பினர்கள் அவரிடம் ஏதும் மறுத்துக் கூற மாட்டார்கள் அவர்கள் வெறுமனே அவருடைய கட்டளைகளை நிறைவேற்றுவார்கள்

 கேப்டன் அதாவது கப்பல் படைத் தலைவர் அவருடைய ஆணைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும்.என்பதே உண்மை  இதேபோன்று  வெளிமனம் தான் உங்களுடைய  உங்களது ஆழ்மன உடலில் உங்களின் சுற்றுச்சூழல், உங்களின் நடவடிக்கைகலின்  தலைவர் அதாவது எஜமானர் உங்களது வெளிமனம் உண்மை என்று நம்பி எதனை ஏற்றுக் கொண்டிருக்கிறதோ  அவற்றின் அடிப்படையில் உங்கள் ஆழ்மனம் நீங்கள் இடும் கட்டளைகளை ஏற்றுக் கொள்ளும் அது கட்டளைகளை பற்றியோ அல்லது கட்டளைகள் எதன் அடிப்படையில் கொடுக்கப்பட்டன என்பது குறித்து எந்த விதமான கேள்விகள் கேட்காது.

 இதை வாங்கும் வசதி எனக்கு இல்லை.இது என்னால் முடியாது,இது நடப்பதற்கு வாய்பே இல்லை, என்று தொடர்ந்து நீங்கள் உங்களுக்குள்ளேயே சொல்லிக் கொண்டு வந்தால் உங்கள் ஆழ்மனம் நீங்கள் கூறுவதை வார்த்தை பிசகாமல் அப்படியே ஏற்றுக் கொள்ளும் நீங்கள் வேண்டியதை வாங்கும் நிலைமையை அடைய விடாமல் அது பார்த்துக் கொள்ளும். அந்தக் காரையும், அந்த வீட்டையும், என்னால் வாங்க இயலாது, என்று நீங்கள் தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருக்கும் வரை உங்களது  மனம் உங்கள் கட்டளைகளை அப்படியே நிறைவேற்றும். என்பதை நீங்கள் உறுதியாக நம்பலாம்.  இந்த பொருட்களின் பற்றாக்குறையை அனுபவித்தவாறு உங்கள் வாழ்க்கை பயணம் தொடரும், சூழ்நிலைகள் தான் இதற்கு காரணம், என்று நீங்கள் நம்புகிறீர்கள் ஆனால் நீங்கள்தான் உங்கள் எதிர்மறையான மறுப்பும் எண்ணங்களால் அந்த சூழ்நிலைகளை உருவாக்கி உள்ளீர்கள் என்பது உங்களுக்கு புலப்படாது .

 மனதில் பதிய வைத்துக் கொள்ளுங்கள்:-

1)உங்களுக்கான   புதையல்  உங்கள் ஆழ் மனதிற்குள் தான் இருக்கிறது உங்கள் இதயத்தில் விருப்பத்திற்காக விடையை உருவாக்குங்கள் தேடுங்கள் .

2)கடந்த காலத்தில் வாழ்ந்துவந்த மாபெரும் மனிதர்கள் தங்கள் ஆழ்மனதை தொடர்பு கொண்டு அதன் சக்தியை விடுவிக்கும் ரகசியத்தை அறிந்திருந்தனர் உங்களாலும்  அதை செய்ய முடியும்.என நம்புங்கள்.

3) உங்களுடைய பிரச்சினைகளுக்கான தீர்வு உங்கள் ஆழ்மனதில் உள்ளது நீங்கள் உறங்கச் செல்லும் முன் உங்கள் ஆழ்மனதிடம்  நான் காலை 4 மணிக்கு எழுந்திருக்க வேண்டும் என்று சொல்லிவிட்டு படுக்கச் சென்றால் அது உங்களை சரியான நேரத்தில் எழுப்பி விடும்.ஆதலால் அதனை உங்களுக்கு ஏற்றவாறு பயன்படுத்திக்கொள்ளுங்கள் 

4) உங்கள் உடல் வளர்ச்சியின் காரண கர்த்தாவான உங்கள் ஆழ் மனதால் உங்களை குணப்படுத்த முடியும் ஒவ்வோர் இரவும் பூரண ஆரோக்கியம் என்னும் கருத்தை மனதில் கொண்டு உறங்கச் செல்லுங்கள் உங்கள் நம்பிக்கைக்குரிய பணியாளர்களான உங்கள் ஆழ்மனம் உங்களுக்கு கட்டுப்பட்டு அப்படியே செயல்பட வைப்பார்கள் அது நடக்கும்.

 5)ஒவ்வொரு எண்ணமும் ஒரு காரணம் ஒவ்வொரு சூழ்நிலையும் ஒரு விளைவு நீங்கள் ஒரு புத்தகத்தை எழுத ஒரு அற்புதமான நாடகத்தை பார்க்கவோ அல்லது உங்கள் பார்வையாளர்களுக்கு சிறப்பான ஒரு சொற்பொழிவும் விரும்பினால் கருத்தினை உங்கள் ஆழ்மனதில் அன்பாகவும் உணர்வுபூர்வமாகவும் தெரிவியுங்கள் அதை ஒரு திரைப்படமாக காணுங்கள் அது அதற்கு ஏற்றார் போல் செயல்படும்.

 6)நீங்கள் ஒரு கப்பலை வழிநடத்திச் செல்லும் தலைவர் போன்றவர்கள் தலைவர் சரியான கட்டளைகளை அளிக்க வேண்டும் இல்லையேல் கப்பல் சேதம் ஆகிவிடும். அதுபோலவே உங்களுடைய அனுபவங்கள் கட்டுப்படுத்தி முறைப்படுத்தும் உங்களது ஆழ்மனதிற்கு நீங்கள் உங்களுடைய எண்ணங்கள் மூலமாகவும் காட்சிகள் மூலமாகவும் சரியான கட்டளைகளை இடவேண்டும் என்பதை மறக்க வேண்டாம்.

 7)இதனை வாங்கும் பணம் வசதி எனக்கில்லை அல்லது என்னால் இதை செய்ய முடியாது போன்ற சொற்றொடர்களை ஒருபோதும் பயன்படுத்தாதீர்கள் உங்கள் ஆழ்மனம் வார்த்தை பிறழாமல் அவற்றை ஏற்றுக்கொள்ளும் நீங்கள் விரும்புவதை செய்வதற்கான பணமோ வறுமையோ உங்களிடம் ஒருபோதும் இல்லாதவாறு உங்களது ஆழ்மனம் பார்த்துக்கொள்ளும் என் ஆழ்மனதின் சக்தி கொண்டு என்னால் எல்லாவற்றையும் செய்ய முடியும் என்று தொடர்ந்து கூறி வாருங்கள்.

 8)நம்பிக்கை விதிதான் வாழ்வின் விதி, நம்பிக்கை என்பது உங்கள் மனதில் தோன்றும் ஓர் எண்ணம் ,ஏன் உங்களை பாதிக்கும் அல்லது   உங்கள் ஆழ்மனதில் சக்தி உங்களை குணப்படுத்த வல்லது  அல்லது பலப்படுத்த வல்லது என்று நம்புங்கள் நீங்கள் நம்புவதை போன்றே உங்கள் வாழ்வில் நடக்கும்.

எண்ணங்களை மாற்றுவோம் நமது தலைவிதியை மாற்றுவோம்.

 சிந்தனைகள் தொடரும்...



24 November 2019

ஜீவசமாதி என்றால் என்ன?எளிய அடிப்படை தகவல்கள்.


ஜீவசமாதியில் இருக்கும் சித்தர்களின் உடலை விட்டு உயிர் பிரியாது உயிரோட்டம் மட்டும்தான் இருக்கும். அதாவது அவருடைய உயிர் நாடியானது சூக்கும முனை வழியாக சதா இயங்கியவாரே இருக்கும்  எவ்வளவு நாள் கழிச்சு பார்த்தாலும்  கூட உடல் அழுகி போகாது அதே நிலையில்தான் அந்த சமாதியில் இருக்கும் உடலானது அழுகிப்போகாது  .அவரின் அந்த உயிர் நாடியை தன்கட்டுக்குள் வைத்து தனது ஆத்மாவை மட்டும் பிரித்து அண்ட வெளிகளில் பயணிப்பது வாழும் ஒரு பெரும் வாழ்வாகும்  எவ்வளவு ஆண்டுகளானாலும் தன் உயிர் பிரியாமல்  ஆத்மாவை மட்டும் பிரித்து செயல்படுவது  இதுதான் மரணமில்லா பெருவாழ்வு என சிதைதர்கள் சொல்கிறார்கள்.



எல்லா ஜீவ சமாதியில்  உயிர் பிரியாது உயிரோட்டம் மட்டும் தான் நிற்கும் உடலிலிருந்து உயிரோட்டம் இருந்துட்டே இருக்கும் தான் விரும்பும் இடமெல்லாம் சொல்லக்கூடிய ஒரு வார்த்தை தான் இந்த உயிரோட்டம். ஒரே இடத்தில் இருந்தவாரே அதனுடைய ஆற்றல் உலகமுழுக்க சுற்றிவர முடியும்  ஜீவசமாதியில்  உட்காரும் எந்த ஒரு மனிதரும் உடலை விட்டு உயிர்  வெளியே போவது கிடையாது அந்த உயிர் உடலுக்குள்ளேயே இருக்கும் அது ஒரு சஸ்பெண்டெட் அணிமேஷன் என்று சொல்லுவாங்க அதே சமயத்துல இது உடலை பார்த்திங்கனா உயிரோட வச்சு புதைக்கிறார்கள் அப்ப இதுவும் ஒரு  தற்கொலைதான் அப்படின்னு கேட்கிற அறிவிலிகளுக்கு  இது ரொம்ப ஒரு நுணுக்கமான ஒரு யோக முறையை சித்தர்களும் மகான்களும் யோகிகளும் மட்டுமே செய்யக் கூடிய ஒரு விஷயம் என்று அவர்களுக்கு புரிவதில்லை.புரியவும் செய்யாது.
 இவங்க செய்றது எதுவுமே தற்கொலை கிடையாது என எந்த ஒரு உயிருக்கும் தீங்கு செய்யாமல் இருக்கும் அல்லது அவ்வாறு நினைக்கும் சித்தர்கள்  அவர்கள் தன்னுடைய உயிரை மட்டும் எப்படி  மாய்த்துக்கொள்ளுவார்கள்?அப்படி  ஒரு நிலையை யோசிக்கவே மாட்டாங்க ஒரு பைத்தியக்காரத்தனமான விஷயம் அது மக்கள் இதிலிருந்து என்ன புரிஞ்சுகிட்டாங்க! இதுல தெரிய வேண்டிய விஷயம் என்னவெனில் யோகிகளுக்கும் ஞானிகளுக்கும் சித்தர்களுக்கும் உண்டான ஒரு நிலை சாதாரண மனிதர்கள் புரிந்து கொள்ளக்கூடிய நிலையில் இல்லை அது ஒரு சூச்ட்சகமான ஒன்னு  அந்த ஜீவசமாதியில்  நீங்க போய் உட்கார்ந்து தியானம் பண்ணும் பொழுது அது ஒரு அபரிமிதமான ஒரு சக்தி உங்கலுக்கு  கொடுக்கும்.

 அந்த ஜீவ சமாதி உள்ள எக்ஸ்ட்ராடினரி பவர் என  ஒரு சக்தி இருக்கும் அந்த சக்தியை உள்வாங்கிக்  நீங்க ஜீவசமாதிகள் இருக்கிற இடத்துல போய் உட்கார்ந்து கொஞ்ச நேரம் தியானத்தில் இருக்கும் பட்சத்தில் உங்களுடைய என்ன ஓட்டங்கள் அப்படியே  குறைய ஆரம்பித்து உங்களது மனம் ஒருமுகப்படும் அது உங்களுடைய வாழ்க்கை பயணத்துக்கு தேவையான ஒரு பாதையை காட்டும்.

இதுபோக இன்னொரு ஒரு ரகசியமும் கூட சொல்லலாம் இது ஒரு சீக்கிரமே நிறைய பேரு அனுபவிச்சிருக்காங்க  இதை யாரும் அவ்வளவாக வெளியில் சொல்வதில்லை இருந்தாலும்  நான் சொல்றேன் சில ஜோதிட மாந்திரீக பிரச்சினைகளால் பாதிக்க பட்டவர்கள் கூட ஜீவசமாதிக்கு தொடர்ந்து போறது மூலமா மிக கடுமையான துன்பத்துள இருந்து மீண்டு வெளியில் வர முடியும். 

அப்படின்னா ஜீவ சமாதியில் இருக்கும் சித்தர்களின்  உடல் மட்டும்தான் இருக்குமான்னு கேட்டா அதுவும் கிடையாது எல்லா ஜீவ சமாதியிலும் அந்த உடலுக்கு மேல ஒரு சிவலிங்கம் வைக்கப்பட்டிருக்கும் இது தான் ஜீவசமாதின் சூட்சுமமே! எதுக்காக அது வைக்கப்பட்டிருக்கு அப்படின்னா அந்த சிவலிங்கம் ஒரு லைட் பிரிட்ஜாக செயல்படும் அதாவது ஒரு ஒளி பாலமாக செயல்படும் எங்க எந்த இடத்துக்கும் பயணிக்க நினைத்தாலும் அது ஒரு  பாலமாக செயல்படும் அது வேறொரு மற்றொரு பரிணாமத்திற்கு பயணிப்பதற்கு அல்லது போறதுக்கு அந்த சிவலிங்கம்தான் ஒரு பாதையாக இருக்கும்.  அப்படின்னா அதனுள்ள  இருக்கு அந்த மகான் ஒரு ஒளியின் வடிவில் பயணிக்க  பயன்படுத்தி போயிட்டு வந்துட்டு இருப்பாங்க அதுக்காக அந்த லிங்கம் ஒரு பாலமாக அமையும்.

. அப்படி போகும்போது வெளியில இருக்குற ஒரு சில மனிதர்களால  அவர்கலை  பார்க்கவும் முடியும்  ஜீவசமாதி அடைந்த நிறைய பேரை தான் இங்க பார்த்தேன் அங்கே பார்த்தேன் சொல்லுறது இதுதாங்க  அவங்க எல்லாம் வெளிய வராங்க நம்மளை அவங்க  பாக்குறாங்க நாம செய்யுறத கவனிக்கறாங்க. 

அப்படித்தான் அவர்களுயடைய ஆத்மா மட்டும் வெளியில் வந்து  ஒரு சில பேருக்கு காட்சி கொடுக்க சில பேருக்கு மட்டும்  உணர முடிகிறது சிலபேர்களால உணர  முடியாமலிருக்கின்றது   அங்க வேற டைமென்ஷன் பரிணாமங்களில் இருக்கக் கூடிய விஷயங்கள் அவங்களால செய்ய முடியும் அது மட்டுமில்லாம அந்த சிவலிங்கம் என்பது ஒரு ரெண்டு தன்மை இருக்குன்னு எனர்ஜிய சேவ் பண்ணி ஸ்டோர் பண்ணி விடும் அந்த எனர்ஜிய சேவ் பண்ணி அங்க இருக்கிற அது ஒரு குறிப்பிட்ட தூரத்திற்கு பரவச்செய்யும்  ஒவ்வொரு சிவலிங்கத்துக்கு ஒரு அளவு இருக்கு அந்த அளவிற்கு ஏற்றார்போல ஒரு குறிப்பிட்ட தூரம் வரை எல்லாருக்கும் இவருடைய எனர்ஜி கிடைச்சுக்கிட்டே இருக்கும் அதன் சுற்று வட்டாரத்தில் இருக்கும் அத்தனை பேருக்கும் அங்கு  சென்று வந்ததால் எனர்ஜி கிடைக்கும்  

ஜீவ சமாதியில் போய் மெடிடேஷன் பண்றது கூட  எனர்ஜி அவங்களால ஈஸியா ஈர்க்க முடியும். அவங்கள பாக்க முடியும் அது மட்டுமில்லாம இந்த கோயில்களில் பல பழமையான கோயில்கள் அந்தக் கோயில்களில் எல்லாத்தையும் சித்தர்கள்-ஜீவசமாதி என்பது தான் இருக்கு அந்தக் கோயில்கள் சில கோவில்களில் போய்விட்டு வந்தவங்க  ரொம்ப நல்லா மன நிம்மதியா இருக்குன்னு சொல்வாங்க   அங்க  வேண்டுதல் வச்சா எல்லாம்  நடந்தது மனசு ரொம்ப நிம்மதியா இருந்ததுன்னு சொலுவாங்க  சில ஒரு சில கோவில்களுக்கு அதிகமாக சொல்வாங்க அதுக்கு முக்கியமான காரணங்கள் ஜீவசமாதிகளில் இருக்கும் ஒரு அபரிமிதமான சக்திதான் காரணம்.

 ஜீவசமாதிகள் ஒரு சில காரணங்களுக்காக மட்டும் இருக்கும். இப்போ ஒரு சில மகான்கள் வந்து அதிகமாக ஒருசில குறிப்பிட்ட வியாதிகளை குணப் படுத்தக்கூடியவர்களாக இருப்பார்கள் அப்படியிருக்க அவர் ஜீவ சமாதியடைந்த பிறகு அவருடைய ஜீவா சமாதிக்குசென்று அது சம்பந்தமான பிரச்சனைகள் குறித்து வேண்டினால் அது உடனடியாக தீர்த்து வைக்கப்படுகிறது.
 ஒவ்வொரு ஆன்மாவும்  இந்த பூமிக்கு வந்தபிறகு  வந்த பிறகு அடுத்தடுத்த பிறவிகள் நிறைய இருந்துகொண்டேதான் இருக்கும் இதனை உணர்ந்த சித்தர்கள் இனி பிறவியே கூடாது என்பதர்க்காதான் இந்த நிலையை அவர்கள் விரும்பி ஏற்கிறார்கள்.

 ஜீவசமாதி என்பது ஒரு நல்ல ஒரு கோயில் மாதிரி ஒரு சாதாரண ஒரு ஸ்தலம் கிடையாது இங்கு வரும் அத்தனை பேருக்குமே அவர்களுடைய அருள் கிடைக்கும். சாதாரண மனிதர்களால 1% கூட ஜீவசமாதி அடைய முடியுமா? என்பது கேள்விக்குறிதான்? இது சாதாரணமாக எல்லோருக்கும் சாத்தியம் கிடையாது இதுல  சில முறைகள் இருக்கு கிரியா யோகம், வாசி யோகம், பண்றவங்கலால ஜீவசமாதி அடைய முடியும்.அதுக்கு தனிப்பயிச்சிகள் தேவை முதலில் உணவு பழக்கத்தை மாற்றுவார்கள்  ஒரு குறிப்பிட்ட நாளில் வந்து ஜீவசமாதி அடைய முடிவு பண்ணிட்டாங்க அப்படின்னா அப்ப அதுக்கு ஒரு சில நாட்களுக்கு முன்னாடி அந்த உணவு பழக்கங்களை மாற்ற ஆரம்பிச்சுடுவாங்க  அவங்க அவங்களுடைய எல்லாமே தன்னுடைய கட்டுப்பாட்டில் கொண்டுவருவார்கள் வெளி உலக தொடர்புகளை கொஞ்ச கொஞ்சமாக தவிர்ப்பார்கள் பிறகு பூஉலக தொடர்பு முற்றிலும் குறைய ஆரம்பிக்கும்.

 இப்ப நான் யோகா பண்றேன் அப்ப நானும் ஜீவா சமாதியடையலாமா? என்றால்  அதுக்கும் இதுக்கும் சம்பந்தமே கிடையாது இது வேற ஒரு நிலை. பொதுவா ஜீவா சமாதி அடையப்போகும் சித்தர்களுக்கு அந்த நாள் வரும்போது  என்னுடைய டைம் வந்துடுச்சு  நாம் போகலாம் அப்படி அவங்களுக்கு உத்தரவு வந்தல்  மட்டும்தான் அந்த சமாதி நிலைக்குப் போக அவர்கள் முடிவெடுப்பார்கள் . அதற்கு உதாரணங்கள் ராகவேந்திரா ஜீவசமாதி இந்த மந்திராலயத்தில் இது மாதிரி நிறைய மகான்கள் வந்து ஜீவசமாதி அடைந்த மகான்கள் மட்டும்தானா இல்ல யோகிகளும் இப்போது சமீப காலத்தில் கூட நிறைய யோகிகள் ஜீவசமாதி அடைந்த சித்தர்கள் மகான்கள் யோகிகள் இந்த நாட்டை பொறுத்த வரைக்கும் இறை நிலைக்கு மனித நிலைக்கும் நடுவுல ஒரு முக்கியமான ஒரு மீடியமா செயல்பட்டவர்கள் என்பது யாராலும் மறுக்க முடியாது  ஒரு சாதாரண மனிதர்களுக்கு இறைநிலை அடைய கூடிய ஒரு வழிகாட்டுதல் கொடுத்தவர்கள் நிறைய அறிவியல் விஞ்ஞானம் மெய்ஞானம் ஜோதிடம் மாந்த்ரீகம் மருத்துவம் விவசாயம் மனிதர்களுக்குத் தேவையான எல்லா விஷயத்தையும் ஒரு எக்ஸ்ட்ராடினரி நாள் எல்லாத்தையுமே சித்தர்கள் கொடுத்திருக்கிறார்கள் என்பது ஒரு அட்வான்டேஜ் ஆகும்.

 பார்க்கும் ஒரு சாதாரண மனிதனாக பிறந்த நாம் பிறவியிலேயே வந்து ஒரு தெய்வம் நிலை அடைந்த நிலையை எட்டியவர்கள்  யோகிகள் என்று கிடையாது யார் வேணாலும் யோகி ஆகலாம் இப்போ சாதாரணமாக எந்த கடவுள் நம்பிக்கை இல்லாதவங்க கூட திடீர்னு ஒரு யோகத்தில் ஈடுபாடு ஏற்பட்டு ஒரு யோகப் பயிற்சிகளை தொடர்ந்து செஞ்சு அதுல நிறைவை அடைந்துவிட்டால் அவங்கள ஒரு யோகி எனலாம் அவர்களின் ஜீவ சமாதிகளும் அதனுடைய கடமைகளை முடிச்சிட்டு வந்து இருக்கணும் அப்படி என்றால் தான் அது சரியானதாக  இருக்கும்.

சிவானந்த பரமஹம்சர் விருப்பமே அதுதான் குடும்பத்தை விட்டுப்போக குடும்பத்தை தவிக்க விட்டுட்டு போற அவர் விருப்பப்படி ஒரு  மறுபிறவி வேண்டாம் அப்படின்னு தோன்றுவதற்கான காரணங்கள்..இதுதான் 

எல்லோரும்  மறுபிறவி வேண்டாம் என யோசிக்கிறார்கள்  இந்த வாழ்க்கை நமக்குப் போதும் நாம் அந்த ஒருவருக்கு எத்தனை பிறவிகள் இருக்கு ஒவ்வொரு பிறவியிலும் வந்து அந்த கர்மாவிற்கு ஏற்றபடி நல்லது கெட்டது எல்லாத்தையும் அனுபவிக்கனும்... அப்படி என்று ஒரு விதி இப்ப இருக்கிற நம்முடைய வாழ்க்கை எப்படி இருக்கும் நாம் மட்டும் பார்க்கிறோம் அடுத்த பிறவில நம்முடைய வாழ்க்கை எப்படி இருக்கும் என்று எவராலும் சொல்ல முடியாது அது மட்டுமில்லாம ஒரு ஆத்மாவுக்கு அதோட ஸ்டேஜ் அப்படின்னா மறுபிறவி இல்லாத ஒரு வாழ்க்கை தான்...

 இந்த ஆன்மாவோடு நான் இறையை சேரனும் இறைநிலை அடைய இறைவனை நோக்கி போக மறுபிறவி இல்லாத ஒரு முக்தி நிலை அடையணும் அப்படித்தான் இந்த ஆன்மீகப் பாதை அவர்கலுக்கு வழிகாட்டுகிறது அவர்கள் விரும்புவது எல்லாமே மறுபிறவி இருக்கக்கூடாது..என்பதுதான் இதன் நோக்கமே அவர்களின் ஜீவ சம்மதி நிலையாகும். .


23 November 2019

பிரார்த்தனை எவ்வாறு இருத்தல் நல்லது?(ரகசியம் 4)


உங்கள் பிரார்த்தனை நிறைவேறுவதற்கான காரணம் உங்களது ஆழ்மனம் என்று நான் கூறினால் அதை நீங்கள் நம்புவீர்களா?அல்லது மறுப்பீர்களா?அல்லது நான் வணங்கும் கடவுள்தான் இதனை செய்தது என்று சொல்வீர்களா?  ஒரு முக்கியமான கோட்பாடு என்னவென்றால் மின்சாரம் உயர் மின் ஆற்றலை கொண்டு குறைந்த மின் ஆற்றலுக்கு செல்கிறது என்பது நீங்கள் அறிவீர்கள் ஒரு மின் விளக்கை இயக்கும்போது அல்லது ஒரு மின்சார அடுப்பை பயன்படுத்தும் போது இது விளங்கும்  மின்சாரத்தின் கோட்பாட்டினை அது  மாற்றுவதில்லை மாறாக அதை உங்களது வசதிகேற்ப பயன்படுத்துகிறீர்கள் இப்படி இயற்கையோடு இணைந்து செயல் புரிவதன் மூலம் மனித குலத்திற்கு எண்ணற்ற வகையில் பயனளிக்கும் பல அற்புதமான கண்டுபிடிப்புகளையும் கண்டறிதல் நிலையில் உங்களால் நிகழ்த்த முடியும்.


கோட்பாடு என்பது  நம்பிக்கை விதிக்கு ஏற்ப செயலாற்றுகிறது நம்பிக்கை என்றால் என்ன? அது ஏன் பலனளிக்கிறது? அது எவ்வாறு செயல்படுகிறது? என்பதை நீங்கள் முதலில் அறிந்து கொள்ள வேண்டும்.

 நம்பிக்கை விதையை உங்கள் இதயத்தின் மீது மனம் செயல்படும் முறையில் நீங்கள் நம்பிக்கை கொள்ளவேண்டும் அதாவது நம்பிக்கையின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும் என்பது தான் இதன் பொருள். உங்கள் மனம் எதை நம்புகிரதோ அதைத்தான் சிந்தித்துக் கொண்டு இருக்கிறது உங்களுடைய எல்லா அனுபவங்களும் நிகழ்வுகளும் நிலைகளும் உங்கள் எண்ணங்களை பயன் வடிவமாகும் என்பதால் இவை உருவாக்கப்படுகின்றன. ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் நீங்கள் சந்திக்கும் விளைவுகள் நீங்கள் நம்பிக் கொண்டிருக்கும் விஷயங்களால் ஏற்படுவதில்லை மாறாக ஆழ் மனதில் பதிந்திருக்கும் நம்பிக்கையினால் தான் ஏற்படுகின்றன மனித குலத்தை புற்றுபோல அரித்துக் கொண்டிருக்கும் பொய்யான நம்பிக்கைகள் அபிப்பிராயங்கள் மூடநம்பிக்கைகள் பழக்கங்கள் ஆகியவற்றை ஏற்று கொள்வதை  நிறுத்துங்கள். என்றென்றும் நிலைத்திருக்கும் என்றுமே உண்மைகள் மீது நம்பிக்கை கொள்ளச் செய்யுங்கள் அது  அத்தருணத்தில் உங்கள் ஆழ்மனம் மேல் நோக்கி கடவுளை நோக்கி செல்லத்  துவங்கும்.

 இப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ள ஆழ்மனத்தின் கோட்பாடுகளை நம்பிக்கையுடன் நடைமுறைப்படுத்தும் எவரும் தமக்காகவும் பிறருக்காகவும் மன வலிமையை பெறுவார்கள் ஒவ்வொரு வினைக்கும் ஒரு எதிர்வினை உண்டு என்ற உலகளாவிய இதற்கேற்ப சாதனைக்கான பலன் கிடைக்கும்.   தொடக்கநிலை எதிர்வினை என்பது உங்கள் எண்ணத்தில் இயல்புக்கேற்ப இயங்கும் உங்கள் ஆழ்மனத்தின் செயல்பாடு இணக்கம் ஆரோக்கியம் அமைதி நல்லெண்ணம் ஆகிய   கருத்துக்களால்  உங்கள் மனதை நிரப்புங்கள் உங்கள் வாழ்வில் அதிசயங்கள் நிகழும்.

 உங்களிடம் ஒரு மனம் தான் உள்ளது ஆனால் அந்த ஒரு மனம் தனிப்பட்ட குறிப்பிடத்தக்க செயல்திறன் கொண்ட இரு பகுதிகளை பெற்றுள்ளது இந்த இரு பகுதிகளையும் பிரிக்கும் எல்லைக்கோட்டின் பற்றி உளவியல் பயிலும் மாணவர்களுக்கு நன்றாக தெரியும் உங்கள் மனதில் இருவேறு செயல்பாடுகளும் முற்றிலும் மாறுபட்டவை அவை ஒவ்வொன்றும்  தனக்குரிய தனித்துவமிக்க இயல்புகளையும் சிறப்புகளை  பெற்றுள்ளன மனதில் இந்த இரு செயல்பாடுகளையும் வேறுபடுத்தி காட்ட பல பெயர்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன இவற்றில் உள்நோக்கு மனம்.  வெளிமனம், ஆழ்மனம், விழித்திருக்கும் மனம், உறங்கும் மனம் ,மேல்மட்ட மனம் ,அடிமட்ட மனம் ,தன்னிச்சை மனம்,ஆண் மனம், பெண் மனம், ஆகியவை அடங்கும் இவையாவும் மனதின் இந்த இருவேறு இயல்புகளையும்  குறிக்கின்றன.

 உங்கள் மனதில் ஒருவேளை இயல்புகளை இருக்க இந்த பதிவு முழுவதும் வெளிமனம் ஆழ்மனம் என்ற சொற்களை பயன்படுத்துகிறேன் உங்களுக்கு வேறு சொற்கள் எதையேனும் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் தோன்றினால் அதை நீங்கள் தாராளமாக பயன்படுத்தலாம் மனதில் வேறு இயல்புகளை அடையாளம் கண்டு கொண்டு அவற்றை ஏற்றுக் கொள்வது தான் இங்கு முக்கியம்.

 உங்கள் மனதை ஒரு பூந்தோட்டம் என்று நினைத்துக் கொள்வதுதான் அதன் செயல்பாடுகளையும் பற்றி தெரிந்து கொள்ள துவங்க ஒரு சிறந்த வழி நீங்கள்தான் தோட்டக்காரர் நாள் முழுவதும் உங்கள் மனதில் எண்ணங்கள் என்னும் விதைகளை நினைக்கின்றீர்கள் பல சமயங்களில் எண்ணங்களை விதைத்து வருகிறோம். என்ற உணர்வு கூட உங்களுக்கு இருப்பதில்லை ஏனெனில் அதில் உங்களுக்கு பழக்கமான சிந்தனைகளின் அடிப்படையில் உருவானவை உங்கள் ஆழ்மனதில் எதை நினைக்கிறீர்கள் அதுவே உங்கள் உடலிலும் சுற்றுச்சூழலும் உருப்பெறுகின்றன .

உங்களுடைய ஆழ்மனத்தை எல்லாவிதமான விதைகளும் அவை நல்லவை கெட்டவை முளைவிட்டு குறிப்பாக வளர்வதற்கு உதவும் ஒரு பலமான மூலமாக கற்பனை செய்து கொள்ளுங்கள் நீங்கள் முட்களை விதைத்தால்  திராட்சைகளை பறிக்கப் போவதில்லை, விஷ செடியை விதைத்தால் ஆப்பிளை அறுவடை செய்யப் போவதில்லை ஒவ்வொரு எண்ணமும் ஒரு காரணம் ஒவ்வொரு சூழ்நிலையும் ஒரு விளைவு இது உங்கள் எண்ணங்களை உங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறது இவ்விதத்தில் நீங்கள் விரும்பும் சூழ்நிலைகளை மாத்திரம் உங்களால் உருவாக்கிக் கொள்ள முடியும்.

 அமைதி மகிழ்ச்சி சரியான நடவடிக்கை நல்லெண்ணம் செழித்து வளர நல்ல விதைகளை விதைக்க துவங்குங்கள் அமைதியாகவும் முழு நம்பிக்கையோடு குணநலன்களைப் பற்றிய எண்ணங்கள் பகுத்தறியும் உங்களது அடிமனத்தில் இவற்றை முழுமையாக ஏற்றுக் கொள்ளுங்கள் இந்த அற்புதமான விதைகளை உங்கள் மனம் எனும் பூந்தோட்டத்தில் தொடர்ந்து விதைத்துவாருங்கள் அதன் பலனை நிச்சயமாக  அடைவீர்கள்.  உங்கள் மனம் சரியாக சிந்திக்கும் போது வாழ்வில் உண்மையை நீங்கள் தெரிந்து கொள்ளும்போது உங்கள் ஆழ்மனதில் ஆக்கப்பூர்வமான இணக்கமான அமைதியான எண்ணங்கள் விதைக்கப்படும் போது உங்கள் ஆழ்மனத்தின் அற்புத சக்தி யானது அதற்கேற்றவாறு செயல்படும் அது இணக்கமான சூழ்நிலை களையும் ஏற்றுக்கொள்ளத்தக்க சுற்றுச்சூழல் துறையில் மிகச் சிறந்தவற்றை உங்களிடத்தில் கொண்டு வந்து சேர்க்கும். நீங்கள் சிந்திக்கும் முறையை கட்டுப்படுத்த தொடங்கும்போது உங்களால் உங்கள் ஆழ்மனத்தின் சக்திகளைக் கொண்டு எந்த ஒரு பிரச்சினையையும் தீர்க்க முடியும் எல்லாவற்றையும் கட்டுப்படுத்தும் அந்த பிரபஞ்சத்தோடு நீங்கள் உண்மையிலேயே உணர்வுபூர்வமாக இணைந்து செயல்படுவீர்கள்.

உங்களை சுற்றி பாருங்கள் நீங்கள் எங்கு வாழ்ந்தாலும் எந்த சமுதாயத்தின் அங்கமாக இருந்தாலும் பெரும்பான்மையான மக்கள் தங்களின் துறை உலகத்தில் தான் வாழ்க்கை நடத்துகிறார்கள் என்பதை உங்களால் காண முடியும் அதே நேரத்தில் ஞானத் தெளிவு பெற்று இருப்பவர்கள் தங்களது உலகத்திற்குள் உலாவுகின்றனர். உலகம்தான் புறவுலகில் தோற்றுவிக்கிறது என்பதை அவர்கள் உணர்ந்துள்ளது போல் நீங்களும் உணர்வீர்கள் உங்களுடைய எண்ணங்கள் உணர்வுகள் சில காட்சிகள் ஆகியவைதான் உங்கள் அனுபவங்களை உருவாக்கும்  கோட்பாடுகள் ஆகும்.

உங்களுக்குள் இருக்கும் உலகம்தான் ஒரே படைப்பு பற்றி உங்கள் புறவுலகில் நீங்கள் காணும் அனைத்தும் சுய உணர்வுடனோ அல்லது உணர்வின்றி யோ நீங்கள் உங்கள் அக உலகில் உருவாக்கிய வையே.

 உங்கள் நிறுவனத்திற்கு மனத்திற்கும் இடையே நிலவும் தொடர்பு குறித்த உண்மையை நீங்கள் அறிந்து கொண்டால் உங்கள் வாழ்க்கையையே உங்களால் முற்றிலும் மாற்றி அமைக்க முடியும் நீங்கள் புறச் சூழல்களை மாற்ற விரும்பினால் அதற்கான காரணத்தை மாற்றவேண்டும் சூழ்நிலைகளை சந்தர்ப்பங்களையும் மாற்ற விரும்பும் பலரும் சூழ்நிலைகளிலும் சந்தர்ப்பங்களிலும் ஏன் தொடர்ந்து கவனம் செலுத்துகின்றனர் இது தேவையற்ற கால விரயம் முயற்சி விரைவில் தங்களுடைய சூழ்நிலைகள் ஏதோ ஒரு காரணத்தால் உருவானவையே என்பதை அவர்கள் கவனிக்கத் தவறி விடுகின்றனர் முரண்பாடு குழப்பம் பற்றாக்குறை கட்டுப்பாடு ஆகியவற்றை உங்கள் வாழ்விலிருந்து களைய வேண்டும் என்றால் அதற்கான காரணத்தை களைய வேண்டும் நீங்கள் உங்கள் ஆழ்மனத்தை பயன்படுத்தும் விதமும் அதில் நீங்கள் விதைக்கும் எண்ணங்களும் தான் காரணம். காரணத்தை மாற்றங்கள் விளைவுகள் மாறும்...

 சிந்தனைகள் தொடரும்...


22 November 2019

கனவு காணுங்கள் VISUALIZE (ரகசியம்3)



எல்லையற்ற சக்தி நிறைந்த முதல் களஞ்சியத்தில் அளவில்லா அன்பும் தங்களுக்குள் இருப்பதை அறிந்து கொள்ளாத மக்கள் பலரும் தங்களுடைய முழு ஆற்றலை உணர்ந்து கொள்ள முடியாதவர்களாக இருந்துவிடுகின்றனர் உங்களுக்கு வேண்டிய அனைத்தையும் உங்களால் இதிலிருந்து பெற முடியும்.



காந்தவிசை கூட்டப்பட்ட ஓர் இரும்பு துண்டால் தன் எடையைப் போல் 12 மடங்கு எடையுள்ள பொருட்களைத் தூக்க முடியும் ஆனால் அதே இரும்பு செல்லிலிருந்து காந்தவிசை நீக்கப்பட்டு விட்டால் ஓர் இறகை கூட அதனால் தூக்க முடியாது.
 இதேபோன்று மக்களிலும் இருவகையான உள்ளனர் கவர்ந்து இழுக்கும் ஈர்ப்பு சக்தி நிறைந்த மக்கள் துணிச்சலோடும் தன்னம்பிக்கையோடும் இருப்பார்கள் தாங்கள் வெற்றி நடை போட பிறந்தவர்கள் என்று அவர்களுக்கு தெரியும்.

 அதேசமயம்  வலுவிழுந்தவர்கள் ஏராளமான மக்கள் உள்ளனர் அவர்கள் மனம் முழுவதும் பயங்களும் சந்தேகங்களும் நிறைந்திருக்கும் அவர்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும்போது ஒருவேளை நான் தோற்று விட்டால் என்னவாகும் நான் என் பணத்தை இழக்க நேரலாம் மக்கள் என்னை பார்த்து ஏளனமாக சிரிப்பார்கள் என்று கூறுவார்கள் இத்தகைய மக்கள் வாழ்வில் வெகு தூரம் சென்று அடையப் போவதில்லை முன்னேற விடாமல் தடுக்கும் அவர்களது பயம் அவர்கள் இருக்கும் இடத்திலேயே அவர்களை முடக்கிப் போட்டுவிடும்.

 காலத்தால் அழியாத பரம ரகசியத்தை நீங்கள் கண்டறிந்து அதை நடைமுறைப்படுத்தினால் உங்களுக்கு வேண்டியதை தீர்த்துக் கொள்வதற்கான காந்த சக்தியை நீங்கள் பெறலாம்.

 காலத்தால் அழியாத மாபெரும் ரகசியம் என்ன என்று யாரோ ஒருவர் உங்களை கேட்கிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள் நீங்கள் என்ன பதில் அளிப்பீர்கள் அனுசக்தி கோள்களுக்கு இடையேயான பயணம் கருங்குழி இவற்றில் ஏதுமில்லை அப்படியானால் அந்த மாபெரும் ரகசியம் எது ஒருவர் அதனை எங்கே கண்டுபிடிக்கலாம் அதனை எப்படிப் புரிந்து கொண்டு நடைமுறைப்படுத்துவது இதற்கான விடை நம்மை வியப்பில் ஆழ்த்தும் அளவுக்கு மிகவும் எளிமையானது உங்களுடைய சொந்த ஆழ்மனத்தில் குடிகொண்டுள்ள அற்புதமான அதிசயங்களை உருவாக்கும் சக்தி தான் அந்த ரகசியம். இப்பெரும் ரகசியத்தை கண்டு பிடிக்க முனையும் அனேக மக்கள் கடைசியாக தேடும் இடம் தங்கள் ஆழ்மனமாகத்தான் இருக்கும் வெகு சிலரே இதை கண்டுபிடித்து அதற்கான காரணமும் இதுதான்.

 ஒருமுறை நீங்கள் உங்கள் ஆழ்மனதில் உறைந்து இருக்கும் இந்த அற்புத சக்தியை தொடர்பு கொண்டு அதை விடுவிக்க கற்றுக் கொண்டால் உங்களது வாழ்க்கைக்குள் இன்னும் அதிகமான சக்தியும் செல்வத்தையும் ஆரோக்கியத்தையும் மகிழ்ச்சியையும் மங்களத்தையும் உங்களால் கொண்டுவர முடியும் நீங்கள் மின்சக்தியை கையகப்படுத்த அலைந்து திரியத் தேவையில்லை நீங்கள் அதை ஏற்கனவே பெற்றுள்ளீர்கள் ஆனால் அதை எப்படி உபயோகிப்பது என்பதை மட்டும் நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டும் உங்கள் வாழ்க்கையின் எல்லாத் துறைகளிலும் சக்தியைப் பயன்படுத்து வதற்கு முதல் இதனை நன்றாக புரிந்து கொள்வது அவசியமாகும்.
இங்கே கொடுக்கப்பட்டுள்ள எளிய உத்திகளையும் செயல்முறைகளையும் நீங்கள் பின்பற்றினால் தேவையான புரிதலை பெறுவீர்கள் உங்கள் நம்பிக்கைகள் மெய்ப்படும் கணவுகள் நனவாக தேவையான ஒரு வேகத்தையும் ஒரு புதிய சக்தியையும் உங்களால் உருவாக்கிக்கொள்ள முடியும் உங்கள் வாழ்க்கையை நீங்கள் இதுவரை கண்டிராத அளவு பிரம்மாண்டமானதாக சிறப்பானதாக வளமானதாக மேன்மை பொருந்தியதாக மாற்ற இப்பொழுதே உறுதி எடுத்துக்கொள்ளுங்கள்.

 எல்லா அறிவும் அளவற்ற சக்தியும் உங்களுக்கு தேவையான அனைத்தும் உங்கள் ஆழ்மனதில் ஆழங்களில் புதைந்து கிடக்கின்றன உருவம் கொடுக்கப்படும் அதற்காகவும் தட்டி எழுப்பப்படும் அதற்காகவும் அவை காத்துக்கொண்டிருக்கின்றன நீங்கள் இப்பொழுது உங்கள் ஆழ்மனத்தின் ஆற்றல்களை உணர்ந்துகொள்ள துவங்கினால் அது புறவுலகில் நிஜமாக உருவெடுக்கத் துவங்கும்.

 நீங்கள் திறந்த மனதோடும் ஏற்றுக்கொள்ளும் மன நிலையும் இருக்கும் பட்சத்தில் உங்கள் ஆழ்மனதில் உள்ள எல்லையற்ற சக்தியானது உங்கள் வாழ்வின் ஒவ்வொரு கணத்திலும் உங்களுக்கு தேவையான அந்தந்த நேரத்தில் வெளிப்படுத்தும் நீங்கள் புதிய சிந்தனைகளையும் கருத்துக்களையும் பெறுவீர்கள் புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தும் புதிய விஷயங்களை கண்டறிவீர்கள் புதிய ஓவியங்களை படைப்பீர்கள் உங்கள் ஆழ்மனதில் உள்ள எல்லா எல்லையில்லா சக்தியானது பலவகைப்பட்ட வியத்தகு அறிவைத் தர உங்களுக்கு உதவும் அது தானாகவே தன்னை வெளிப்படுத்திக்கொள்ளும் அவ்வாறு நிகழும்போது வாழ்வில் நிலையான இடத்தை நீங்கள் அடைய அது உங்களுக்கு உதவும்.

உங்கள் ஆழ்மனத்தின் அறிவியல் வாயிலாக நீங்கள் மிகச் சிறந்த துணையையும் சரியான வியாபாரக் கூட்டாளிகள் உங்கள் பக்கம் இருக்க முடியும் அது உங்களுக்கு தேவையான பணத்தை எல்லாம் எப்படி பெறுவது என்பதைக் காட்டும் நீங்கள் இதயபூர்வமாக எதை விரும்புகிறீர்களோ அதை செய்வதற்கும் எப்படி இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அப்படி இருப்பதற்கும் எங்கு செல்ல விரும்புகிறோமோ அங்கு செல்வதற்கு தேவையான பொருளாதார சுதந்திரத்தை சக்தி உங்களுக்குக் கொடுக்கும்.

 எண்ணமும் உணர்வும் சக்தியும் ஒளியும் அன்பும் அழகும் நிறைந்த உங்களுடைய இந்த உலகை கண்டறிந்து தெரிந்து கொள்வது உங்கள் உரிமை கண்ணுக்குப் புலப்படாமல் இருந்தாலும் அது மிகவும் சக்தி வாய்ந்தது எந்த ஒரு பிரச்சினைக்கான தீர்வையும் எந்த ஒரு விளைவு கான காரணத்தையும் நீங்கள் உங்கள் ஆழ்மனதில் கண்டறிவீர்கள் ஒளிந்திருக்கும் சக்திகளை வெளிக்கொணர நீங்கள் கற்றுக் கொள்ளும்போது வாழ்வில் செழிப்பையும் பாதுகாப்பையும் மகிழ்ச்சியையும் விருத்தி செய்து கொள்ளத் தேவையான சக்தியையும் அறிவும் உண்மையிலேயே உங்கள் வசப்படும்.

 முடங்கிக் கிடந்த மக்கள் தங்கள் ஆழ்மனத்தின் சக்தி கொண்டு அந்நிலை நீங்கி மீண்டும் முழுமையான அவர்களாகும் வலிமை உடையவர் களாகவும் பலசாலிகளாகவும் ஆகியுள்ளது நான் பார்த்திருக்கிறேன் அவர்களுடைய மனம் அவர்கள் வெளி உலகிற்கு சென்று மகிழ்ச்சியையும் ஆரோக்கியத்தையும் ஆனந்தமான வெளிப்பாடுகளையும் அனுபவிக்கும் சுதந்திரத்தை அவர்களுக்கு கொடுத்தது உழன்று கொண்டிருக்கும் மனத்தையும் நொறுங்கிப் போன இதயத்தையும் குணமாக்கும் ஓர் அதிசய சக்தி உங்கள் ஆழ்மனதில் இருக்கிறது அதே உங்கள் மனதில் சிறைக் கதவை திறந்து விட்டு அதில் இருந்து உங்களை விடுவிக்கும் பௌதீக ரீதியான மற்றும் உடல்ரீதியான அடிமைத்தனத்தில் இருந்து உங்களை விடுதலை அளிக்கும்.

எந்தத் துறையிலும் நீங்கள் மென்மேலும் முயற்சியில் முன்னேற்றம் காண வேண்டும் என்றால் அதற்கான இன்றியமையாத முதற்படி உலகளாவிய அளவில் நடைமுறைப்படுத்தக் கூடிய செயல்பாட்டு முறை ஒன்றை கண்டுபிடிப்பதுதான் உங்கள் ஆழ்மனத்தை செயல்படுத்துவதற்கு முன்பு அதன் கோட்பாடுகளை புரிந்துகொள்வது அவசியம் புரிதலுக்கு பிறகு நீங்கள் பெறக்கூடிய நல் விளைவுகளை மனதிற் கொண்டு அதன்படி பயன்படுத்த பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்  காட்சிகளை நடைமுறைப்படுத்துவதன் மூலம் நீங்கள் அடைய விரும்பும் நிச்சயமான குறிப்பிட்ட நோக்கங்களையும் இலக்குகளையும் உங்களால் கண்டிப்பாக அடைய முடியும்.

 சிந்தனைகள் தொடரும் ....

21 November 2019

உங்களுக்குள் ஒளிந்திருக்கும் புதையல் (ரகஸியம் 2)



நாம் முன் பதிவில் கேட்டிருந்த அனைத்து கேள்விகளுக்கான விடைகளை தற்போது வருகின்ற இந்தப்பதிவில் ஒவ்வொன்றாக பதிலைக் காண முயற்சிப்போம்.




இத்தகைய கேள்விகளுக்கும் இதேபோன்ற இன்னும் பிற கேள்விகளுக்கும் நான் கண்டுபிடித்துள்ள விடைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற ஆழ்ந்த விருப்பமே என்னை இந்த பதிவை எழுதத் தூண்டியது. உங்கள் மனதில் அடிப்படை உண்மைகளை இயன்ற அளவு எளிய நடையில் விளக்க முயற்சித்துள்ளேன் உங்கள் நாளிதழ்களிலும் பத்திரிகைகளிலும் உங்கள் தொழிலிலும் உங்கள் அலுவலகங்களையும் உங்கள் வீட்டிலும் நீங்கள் உபயோகிக்கும் நடையில் நான் இந்தப் பதிவை எழுதி இருக்கிறேன் .

 இந்தப் பதிவை படித்து இதில் வரையறுக்கப்பட்டுள்ள உத்திகளை அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்துமாறு நான் உங்களை கேட்டுக்கொள்கிறேன். அவ்வாறு நீங்கள் செயல்படும்போது ஒரு அற்புதமான நிகழ்த்தும் சக்தி உங்கள் கைவசம் படும் என்று நான் மனதார நம்புகிறேன். குழப்பம் துயரம் மனசோர்வு தோல்வி ஆகியவற்றிலிருந்து அச்சக்தி உங்களை மீட்டெடுக்கும். உங்கள் துன்பங்கள் தீர்க்கும் உணர்ச்சி ரீதியான தலையிலிருந்து உடல் ரீதியான தலையில் இருந்து உங்களை விடுவிக்கும் சுதந்திரம் மகிழ்ச்சி மற்றும் மன அமைதிக்கான பாதையில்  உங்களைக் கொண்டுபோய் சேர்க்கும்.

 உங்கள் ஆழ்மனத்தின் இந்த அற்புத நிகழ்த்தும் சக்தி உங்களை நோயிலிருந்து குணப்படுத்தி மீண்டும் பலம் வாய்ந்தவராகவும் துடிப்பு மிக்கவராகவும் ஆக்கும்  உங்களுக்குள் இருக்கும் சக்திகளை எவ்வாறு உபயோகிப்பது என்பதை கற்றுக் கொள்வதன் மூலம் நீங்கள் பயமெனும் சிறைக் கதவை திறந்துவிட்டு இன்பத்தை   அனுபவிக்கும் புகழ் பெற்ற சுதந்திர வாழ்வுக்குள் நுழைவீர்கள்.

 அற்புதம் நிகழ்த்தும் சக்தியை விடுவித்தல் ஒரு தனிமனிதன் அனுபவபூர்வமாக உணர்ந்த கணமே நமது ஆழ்மனதில் காட்சிகளுக்கு சிறந்த நம்பகமான ஆதாரம் என்னை உருவாக்கி இன்று வரையிலும் என் உடலில் இன்றியமையா செயல்கள் அனைத்தையும் கண்காணித்து வருவது  எனது ஆழ்மனமே.என்று நான் நம்புகிறேன்.

ஆழ்ந்து பிரார்த்திக்கும்போது அற்புதங்கள் நிகழ்கின்றன அறிவியல்பூர்வமான பிரார்த்தனை என்பது ஒரு குறிப்பிட்ட குறிக்கோளை நோக்கி செலுத்தப்படும் வெளி மனத்திற்கும் உள்மனத்திர்க்கும் இடையே நடைபெறும் ஓர் இணக்கமான நடவடிக்கை உங்களுக்குள் இருக்கும் மகா சக்தியை வெளிக் கொணர்ந்து வாழ்க்கையில் நீங்கள் உண்மையிலேயே என்ன வேண்டும் என்று விரும்புகிறீர்களோ அது உங்களுக்கு கிடைக்க உதவும். ஓர் அறிவியல் பூர்வமான முறையை இந்த பதிவில் கற்றுக் கொடுக்கும். நீங்கள் ஒரு மகிழ்ச்சியான முழுமையான வளமான வாழ்வை விரும்புகிறீர்கள் அற்புதங்களை நிகழ்த்தும் சக்தியை பயன்படுத்தி உங்கள் அன்றாட நடவடிக்கைகளை எளிதாக உங்கள் வியாபாரம் ,செல்வம், கல்வி,ஆரோக்கியம் போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு காணுங்கள்.

 இந்த பதிவை பலமுறை படிக்கவும்... இந்த அற்புதமான சக்தி எவ்வாறு செயல்படுகிறது என்பதையும் உங்களுக்குள் ஒளிந்திருக்கும் உள்ளத்தையும் ஞானத்தையும் எவ்வாறு வெளிக்கொணர்வது என்பதையும் இந்த பதிவில் பல அத்தியாயங்கள் உங்களுக்கு எடுத்துக்காட்டும். உங்கள் ஆழ்மனதில் எண்ணப் பதிவை ஏற்படுத்தும் எளிய உத்திகளை கற்றுக்கொள்ளுங்கள் வற்றாத களஞ்சியமான உங்கள் ஆழ்மனதில் இருந்து வேண்டியதைப் பெற உதவும் புதிய அறிவியல் முறையை கடைபிடியுங்கள். இதை கவனமாகவும் அக்கறையோடும் அன்போடும் படியுங்கள். இது வியத்தகு முறையில் உதவி செய்யும் என்பதை உங்களுக்கு நீங்களே நிரூபித்துக் காட்டுங்கள் இது கண்டிப்பாக உங்கள் வாழ்வில் ஒரு திருப்பு முனையாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்.

 பலனளிக்கும் விதத்தில் பிரார்த்திப்பது எப்படி என்று உங்களுக்கு தெரியுமா?

அதனை உங்கள் அன்றாட வாழ்வில் ஒரு பகுதியாக அங்கம் வகித்து எவ்வளவு காலம் இருக்கும் ஆனால் ஒரு அவசர காலத்தில் ஆபத்தான அல்லது பிரச்சனையான சமயங்களில் காலம் அதிலிருந்து நம்மை பார்க்கும் நேரத்தில் பொதுவாக நமக்குள் பிரார்த்தனைகள் பீறிட்டுக் கிளம்பும் தினசரி செய்திகள் உற்று கவனியுங்கள் தீராத நோயால் அல்லலுறும் ஒரு குழந்தைக்காக நாடுகளுக்கு இடையேயான அமைதிக்காக நீர் புகுந்து கரங்களில் சிக்கித்தவிக்கும்  சுரங்கத் தொழிலாளர்கள் இன்று நாடெங்கிலும் மக்கள் சமூக வலைதளங்களில் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கும் செய்திகள் அதில் இடம் பெற்றிருக்கும் பின்னர் அட்சரங்கள் தொழிலாளர்கள் மாற்றப்படும் போது தாங்கள் காத்திருந்த நேரம் முழுவதும் பிரார்த்தித்துக் கொண்டு இருந்ததாக அவர்கள் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறோம்.
பிரார்த்தனை  என்பது பிரச்சனை காலங்களில் நமக்கு கிடைக்கும் ஒரு அருமருந்து என்பதில் சந்தேகமில்லை ஆனால் பிரார்த்தனை நம் வாழ்வில் பிரிக்கமுடியாத ஆக்கபூர்வமான ஓர் அங்கமாகி கொள்ள நாம் ஏன் பிரச்சினைக்காக காத்திருக்க வேண்டும்.. பிரார்த்தனைக்கு கிடைக்கும் நம்பமுடியாத பலன்கள் தலையங்கங்களை அலங்கரிக்கும் அதையே பலன் தரும் பிரார்த்தனைகளுக்கு கிடைக்கும் நற்சான்றிதழ் கூட ஆனால் குழந்தைகளின் பணிவான பிரார்த்தனைகளை பற்றியும் தினமும் உணரும்போது நமக்கு கிடைத்த உணவுக்காக இறைவனுக்கு நாம் தெரிவிக்கும் எளிமையான நன்றி பாராட்டுக்கள் பற்றியும் இறைவனிடம் ஐக்கியத்தை மட்டுமே நாடி வரும் மக்களின் நம்பிக்கை .

மக்கள் பலரும் நினைப்பது போல ஒரு மனிதன் பிரார்த்தனைக்கான விலை அவன் எதன் மீது நம்பிக்கை வைத்து உள்ளானோ அதைப் பொறுத்து அமைவது இல்லை மாறாக அவனுடைய ஆழ்மனம் எப்போது அவனுடைய வெளி மனம் சிந்திக்கும் சிந்தனைகளுக்கு காணும் காட்சிக்கு ஏற்றவாறு செயலாற்றுகிறது அப்போதுதான் அவனுடைய பிரார்த்தனைக்கான விடை கிடைக்கிறது இந்த நம்பிக்கை விதிதான் உலகில் உள்ள அனைத்து மக்களின் அடிப்படை ரகசியம்.


 இந்து கிறிஸ்தவர் இஸ்லாமியர் யூதர் ஆகியோருக்கு இடையேயான நம்பிக்கைகளில் மாபெரும் வேறுபாடுகள் இருக்கும் போதிலும்  பிரார்த்தனை களுக்கான விடைகள் அவர்கள் எல்லோருக்கும் கிடைக்கக்கூடும் இது எவ்வாறு சாத்தியம் இது ஒரு குறிப்பிட்ட சமயக் கோட்பாடுகளையும் சடங்குகளையும் விழாக்களையும் புத்தகங்களையோ வழிபாட்டு முறைகளையும் உச்சரிக்கும் மந்திரங்களையும் கொடுக்கும் வழிகளையும் செலுத்தும் காணிக்கைகலையோ பொறுத்தது அல்ல மாறாக அவர் எதைப் பற்றிப் இருக்கிறாரோ அதை முழுமையாக நம்பும் அல்லது மனதளவில் ஏற்றுக் கொள்ளும் நிலையில் அவர் இருப்பதால்தான் இது சாத்தியப்படுகிறது.


 நம்பிக்கைக் கோட்பாடு வாழ்க்கை கோட்பாடு சுருங்கக் கூறினால் நம்பிக்கை என்பது உங்கள் மனதில் உள்ள ஒரு எண்ணமே ஒருவர் எவ்வாறு சிந்திக்கின்றோம் உணர்கிறோம். நம்புகிறாரோ அவ்வாறு அவருடைய உடலும் மனமும் சூழ்நிலைகளும் அமையும் நீங்கள் என்ன செய்கிறீர்கள் ஏன் செய்கிறீர்கள் என்ற புரிதலின் அடிப்படையில் உருவாகும் உத்தியும் வழிமுறையும் வாழ்வின் சகல சௌபாக்கியங்களையும் உங்களிடம் கொண்டு வந்து சேர்க்க ஆழ்மனம் உதவும் நிறைவேறிய பிரார்த்தனை என்பது உங்கள் இதயப்பூர்வமான விருப்பம் மெய் படுவதால் தான்.


 தீவிர விருப்பமே பிரார்த்தனை ஆரோக்கியம் மகிழ்ச்சி பாதுகாப்பு மற்றும் மன நிம்மதி ஆகியவற்றை எல்லோரும் விரும்புகிறோம் ஆனால் நம்மில் எத்தனை பேர் இந்த இலக்குகள் அத்தனையும் அடைகிறோம்? என்னுடைய மனப் போக்கை மாற்றி உணர்ச்சிபூர்வமான வாழ்க்கைக்கு கடிவாளம் விட்டால் என்னுடைய இதயத்தில் நிலை மேம்படும் என்பதை நான் மனப்பூர்வமாக அறிவேன். பிரச்சனை என்னவென்றால் என்னிடம் அதற்கான உத்தியோ வழி முறையோ அல்லது இரு முறையோ இல்லை என் மனம் பல பிரச்சினைகள் குறித்து முன்னும் பின்னும் சதா உழன்று கொண்டே இருக்கிறது. அதனால் நான் வெறுப்பாகவும் மகிழ்ச்சி அற்றவனாகவும் தோல்வி அடைந்ததாகவும் உணருகிறேன் என்று பலபேர் புலம்புகின்றனர்.



இவர் முழுமையான ஆரோக்கியத்தை பெற தீவிர விருப்பம் கொண்டிருந்தார் தன் மனம் எவ்வாறு செயலாற்றுகிறது என்பது குறித்த அறிவு அவருக்கு தேவைப்பட்டது இந்த அறிவை அவர் தன்னுடைய விருப்பத்தை பூர்த்தி செய்ய அவருக்கு உதவும் இந்த பதிவில் வரையறுத்து காட்டப்பட்டுள்ள நிவாரண வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் அவர் குறை நீங்கி முழுமை அடைய முடியும்.


ஆழ்மனத்தின் அற்புத நிகழ்த்தும்சக்தி என்பது  நீங்கள் நானும் பிறப்பதற்கு முன்னரே  உலகமும் தோன்றுவதற்கு முன்பே இருந்து வந்துள்ளது வாழ்வில் நிலையான பேர் உண்மைகளும் கோட்பாடுகளும் மதங்கள் யாவும் தோன்றுவதற்கு முன்னரே இருந்து வந்துள்ளன இதை மனதில் கொண்டே இந்த அற்புதமான மாயமான பூரணமான மாற்றத்தை ஏற்படுத்தும் சக்தியை அதிகப்படுத்திக் கொள்ள பின்வரும் பதிவுகளில் நான் உங்களை கேட்டு கொள்கின்றேன். சக்தி உங்கள் மனது காயங்களையும் ஆற்றும். பயம் சூழ்ந்த மனதிற்கு விடுதலையை அழகுபடுத்தும் ஏழ்மை தோல்வி துயரம் பற்றாக்குறை மற்றும் வெறுப்பு ஆகிய குறைபாடுகளில் இருந்து உங்களை முழுமையாக விடுவிக்கவும் செய்யும்..


 நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் நீங்கள் பயன்படுத்த விரும்பும் நல்ல விஷயங்களோடு உங்களை மன பூர்வமாகவும் உணர்ச்சி பூர்வமாகவும் ஐக்கியப் படுத்திக் கொள்வது தான் உங்களுடைய ஆழ்மனத்தில் படைதிரட்டி அதற்கேற்ப செயல்படும் இன்றே இப்பொழுதே தொடங்குங்கள் உங்கள் வாழ்வில் அற்புதங்கள் நிகழ்த்தும் இருள் விலகி உங்கள் வாழ்வில் ஒளி வீசும் வரை ஓயாதீர்கள் ...


சிந்தனைகள் தொடரும் ...