Subscribe

BREAKING NEWS

28 July 2018

வெள்ளியங்கிரி ஈசன் தந்த தெம்பே போதும்

அடியார் பெருமக்களே.

தரிசனம் இன்னும் பெறுவோம் என்று வெள்ளியங்கிரி  பதிவை நிறைத்தோம். நிறைவு பெறும் தரிசனமா அது? முழுமை பெறும் தரிசனம் அது. செங்குத்தான மலை, கரடுமுரடான பாறைகள், வாய் பிளந்து நிற்கும் அதலபாதாளம். யானை, செந்நாய் போன்ற வனவிலங்குகள். மலை மேல் செல்லச் செல்ல வாட்டும் குளிர், பனி. அந்தச் சிரமங்களைத் தாங்கித்தான் ஏழு மலைகளைக் கொண்ட வெள்ளயங்கிரியில் ஏறி உச்சியில் உறைந்திருக்கும் ஈசனைத் தரிசித்தால் அனைத்தும் பறந்து போய் விடுகின்றது.

வெள்ளியங்கிரி மலை என்பது மிகவும் புனிதமான ஒரு மலையாக கருதப்படுகிறது. மேகங்கள் சூழ்ந்திருப்பது போலவும், வெள்ளி வார்ப்படத்தால் மூடி இருப்பது போலவும் காட்சி தருவதால் இது வெள்ளியங்கிரி என்று பெயர் பெற்றது. இங்குள்ள சிவன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது.

ஒரு பெண், மணந்தால் சிவனை தான் மணப்பேன் என்று உறுதி பூண்டு நிற்கிறாள். அதிலும் குறிப்பிட்ட நாளுக்குள் நான் சிவனை மணந்தே தீருவேன் என்கிறாள். அப்படி மணக்க முடியாமல் போனால் நான் என் உயிரையும் துறப்பேன் என்கிறாள். சிவபெருமானும் அவளது பக்தியை கண்டு அவளை நோக்கி வருகிறார். அவர் வரும் வழியில் அவருக்கு சில இன்னல்கள் நேருகிறது. இதனால் அவர் வர தாமதமாகிறது. இந்த நிலையில் அந்த பெண் குறிப்பிட்ட காலம் நிறைவடைந்ததால், நின்ற கோலத்தில் அவள் தன் உயிரை துறக்கிறாள். அவள் தான் கன்னியாகுமரி. இன்றும் அவளுக்கு கோவில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தன் பக்தையை காப்பாற்ற முடியாததால் மனமுடைந்த சிவன் தன் கவலைகளை குறைக்க ஒரு இடத்தை தேடுகிறார். அப்படி அவர் கண்டறிந்த இடம் தான் வெள்ளியங்கிரி மலை. விசனத்தோடு வெள்ளியங்கிரி மலையில் ஏறிய சிவன் அதன் உச்சியை அடைந்த பிறகு அங்கு அமர்கிறார். சிவன் வந்து அமர்ந்ததாலேயே அம்மலை தென் கைலாயம் என்று பக்தர்களால் அழைக்கப்படுகிறது.

மிகவும் பிரசித்தி பெற்ற இம்மலையில் மூன்று பாறைகள் ஒன்று கூடி சிவனுக்கு ஆலயமாக உள்ளது. சித்தர்களும், யோகிகளும், முனிவர்களும் வாழ்ந்த ஒரு அற்புத மலை இது. இன்றும் இங்கு பல சித்தர்கள் சூட்சும வடிவில் இருப்பதாக நம்பிக்கை உள்ளது. வெள்ளியங்கிரி மலை பயணம் நமக்கு ஆன்மீக உணர்வை அதிகரிப்பதோடு உடலில் புத்துணர்வும் பெருகுகிறது என்பதே உண்மை.

சரி...தரிசனம் தொடர்வோமா?






கயிலாயம் எப்படி இருக்கும் என்று நாம் திரைப்படங்களில் தான் கண்டிருப்போம். இங்கு சென்றால் நாம் கயிலையை காண்பது உறுதி. சென்ற ஆண்டு நமக்கு இப்படி ஒரு தரிசனம் கிடைக்கவில்லை. அரக்க,பறக்க சென்றோம். முதல் முறை தரிசனம் வேறு; நன்றாக அமைந்தது. ஆனால் இந்த ஆண்டு  கயிலை கண்டு, நெஞ்சில் இறுத்தினோம். கடுங்குளிரில் அந்த சாம்பிராணி பரவ, பரவ, மேலும் நெருப்பில் கண்ட காட்சி..அட...அட..அனுபவித்தால் தான் புரியும்.



ஒவ்வொருவராக சென்று ஆசி பெற்ற காட்சி. இவர் இங்கே பல்லாண்டுகளாக இருந்து பூசை செய்து வருகின்றார். இவரிடம் ஆசி பெற்றது மிகவும் மகிழ்வாக இருந்தது. காரணம் இவரை நாம் தொலைக்காட்சி பதிவில் பார்த்திருக்கின்றோம். சிவன் அடியார் இவரிடம் ஆசி பெற்றது எத்துனை எத்துணை பெரும் பேறு என்று யாம் அறிந்திலோம் இறைவா !





இதோ..உங்களுக்காக..தெள்ளத் தெளிவாக அந்த ஈசனின் அருட்காட்சி. கண்டு மகிழுங்கள். இந்தப் பராமனைக் காணத் தான் 10 மணி நேரம் நடந்தோம். கண்டதும் அனைத்தும் பறந்து போய் விட்டது. மனம் மிக மிக லேசாக மாறிவிட்டது. இயற்கையின் இன்பம் உணர்த்தப்பட்டது. தென்றலை ஸ்பரிசித்தோம். மழையில் நனைந்தோம். சிவத்தின் அருளில் ஊறினோம். கைலாய வாத்தியம் விண்ணைப்பிளக்க, கயிலாயத்தில் கால் ஊன்றி, இது கனவா? நனவா? என்று நம்மை நாமே தொட்டுப் பார்த்தோம். இதற்குத் தானே ஆசைப்பட்டோம் இறைவா ! எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா என்று நெக்குருகினோம்.


                                      இளங்காலை சூரியன் எட்டிப் பார்த்த போது


இதைப் போன்ற இன்பம் வாய்க்க இன்னும் ஓராண்டு காத்திருக்க வேண்டும். இந்த முறை இரண்டு நாட்கள் வெள்ளிங்கிரியில் தரிசனம். அந்த மிதமான குளிர் இன்னும் வேணும் என்றே தோன்றுகின்றது. குழு புகைப்படம் எடுத்துக் கொண்டோம்.



அட...நம்ம வினோத் ஏதோ..ஆராய்ச்சி பண்ணுவது போல் தெரிகிறதே...அடுத்து அப்படியே மலை இறக்கம் தான். சென்ற முறை 7 ஆவது மலை ஏறி இறங்குவதற்குள் நமக்கு போதும் ..போதும் என்றாகிவிட்டது.இம்முறை பல தம்பிகள் இருந்ததால், தம்பி உடையான் படைக்கு அஞ்சான் என்பது போல் இருந்தது..ஆனால் ஒரே ஒருவருத்தம். ஆறாவது மலையில் உள்ள சுனையில் இம்முறையும் நாம் நீராட வில்லை.







ஒவ்வொரு மலையேற்றமும் ஒவ்வொரு விதமாக இருக்கும். வெள்ளியங்கிரியைப் பொறுத்த வரையில், உடலை மட்டுமல்ல;மனதையும் வெளுத்து வாங்கும் என்பதே உண்மை. நம்மை சிறுவயது நினைவுகளுக்கு வெள்ளியங்கிரி அழைத்து செல்கின்றது. இதே அனுபவம் சென்ற ஆண்டும் நமக்குக் கிடைத்தது.







இறங்கி வரும் போது தேநீர்கடையில் தேநீர் அருந்தினோம், ஒரு வழியாக ஆறாவது மலை அடிவாரத்தை நெருங்கிவிட்டோம். இதோ. அங்குள்ள ஈசன் தரிசனம்.


வேறென்ன வேண்டும்? இந்த தரிசனம் ஒன்று போதாதா? இந்த தரிசனம் மூலம் அம்மையப்பன் தருகின்ற தெம்பு போதாதா? மலை இறக்கத்தில் நாம் எப்படி வந்தோம்? எப்படி தரிசனம் செய்தோம் போன்ற செய்திகளை இனிவரும் பதிவிகளில் தொடர்வோம்.

- இனி மலை இறக்கம் தொடரும்.

மீள்பதிவாக:-

 வெள்ளியங்கிரி ஈசனே போற்றி ! - http://tut-temple.blogspot.com/2018/05/blog-post_58.html

வெள்ளியங்கிரி ஆண்டவரே துணை - http://tut-temple.blogspot.com/2018/05/blog-post_81.html

ஈர்த்தெம்மை ஆட்கொண்ட எந்தை பெருமாளே! - http://tut-temple.blogspot.in/2018/04/blog-post_11.html

வெள்ளியங்கிரி யாத்திரை -2018 - http://tut-temple.blogspot.in/2018/04/2018.html

இப்பிறப்பில் உன்னைக் காண்கின்றோம் - வெள்ளியங்கிரி ஈசா ! - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_51.html

வெள்ளியங்கிரி ஈசன் தரிசனம் கிடைக்குமா? - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_3.html

வெள்ளியங்கிரி ஈசனே! நீயே துணை - தொடர்ச்சி - http://tut-temple.blogspot.in/2017/06/blog-post_28.html

இன்பத்தை அள்ளித்தரும் வெள்ளியங்கிரி - http://tut-temple.blogspot.in/2017/06/blog-post_15.html

பாவம் தீர்க்கும் வெள்ளியங்கிரி - தொடர்ச்சி - http://tut-temple.blogspot.in/2017/06/blog-post_19.html

மனதை வெளுக்கும் வெள்ளியங்கிரி - http://tut-temple.blogspot.in/2017/06/blog-post_13.html

27 July 2018

இன்றைய குரு பூர்ணிமா தரிசனம் - மதியேது விதியேது கதியுந்தன் பொற்பாதமே

அன்பின் அடியார்களே..

இன்று குரு பூர்ணிமா. இன்று குருவை கொண்டாட வேண்டிய நாள். அவரிடம் ஆசி பெற வேண்டிய நாள். அவர் நாமத்தை உச்சரிக்க வேண்டிய நன்னாள். அவர் சொல்லிக் கொடுத்த வித்தையை செய்ய வேண்டிய நாள். வழக்கமாக பௌர்ணமி தோறும் அண்ணாமலையார் தரிசனம் பெறுவது உறுதி. இம்முறை வேறொரு வாய்ப்பு கிடைத்துள்ளது. அந்த அனுபவத்தை மற்றொரு பதிவில் காண்போம். நம்மை பொறுத்த வரை நாம் சித்தர்களின் மார்க்கத்தில் சென்று கொண்டிருக்கின்றோம். இதற்கு முதன் முதலில் பிள்ளையார் சுழி போட்டவர் ..வாழ வழிகாட்டும் குருவாய் விளங்கும் அகத்தியர் பெருமான் தான். அவரைப் பற்றி பேசாது, காணாது இந்த நன்னாளை நாம் கடத்திட விரும்பவில்லை.

அதே போல் இந்த நன்னாளில் நாம் நமக்கு வழிகாட்டியாக இருந்த/ இருக்கின்ற அனைவரையும் நினைவு கூர்ந்து வணங்குகின்றோம்.

பள்ளிப்பருவம் தொட்டு கல்லூரி பருவம் வரை சுவாமிஜி அருட்தந்தை வேதாத்திரி மகரிஷியின் வழிகாட்டல் இருந்தது. கால ஓட்டத்தில் அனைத்தும் விடுத்து இருந்த சூழலில் மீண்டும் குருவின் அருளால் ஆட்கொள்ளப் பட்டோம். என்னே குருவின் கருணை! நாம் விட்டாலும் குரு நம்மை விடாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும் என்றால் அது எம் பெற்றோரின் புண்ணியப் பலனே. நாம் தரிசிக்கும் சித்தர்கள் அனைத்திற்கும் அவர்களே தான் காரணம் என்று நினைக்கின்றோம். சென்னை வந்து சுமார் 10 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில். தற்போது நான்கு ஆண்டுகளாக கூடுவாஞ்சேரியில் இருக்கின்றோம்.

இங்கு வந்தும், வேதாத்திரி மகரிஷி பிறந்து வளர்ந்த ஊர் இது என்று நாம் எண்ணி இருக்கின்றோம் தவிர, அவர் வாழ்ந்த வீடு, கூடுவாஞ்சேரி அறிவு திருக்கோயில் பக்கம் எட்டிக் கூட பார்க்கவில்லை. இதற்கும் நாட்கள் தேவைப்பட்டன. கூடுவாஞ்சேரி வந்து சுமார் ஐந்தாறு மாதங்கள் கழிந்த நிலையில் ஒரு புத்தாண்டு தினத்தில் அப்படியே சைவ உணவு உட்கொள்ள ஆரம்பித்தோம். ஏன்? எப்படி ? என்று தெரியவில்லை. தேனியில் இருக்கும் போது பல முறை தவத்தில் குருவோடு ஒன்றி உயிர் கலப்பு பெற்றதன் பயனா இது? இருக்கலாம் என்றே தோன்றியது. அடுத்து தற்போது சுமார் ஐந்து மாதங்களுக்கு முன்னர் அருட்தந்தை வேதாத்திரி மகரிஷியின் பேரன் திரு. சிவ ஞானம் அவர்களை சந்தித்தோம். அப்படியே அறிவுத்திருக்கோயிலுக்கு தினமும் சென்று வருகின்றோம். இது தான் வேதாத்திரி மகரிஷி நமக்கு காட்டிக் கொண்டிருக்கும் அருள் ஆணை.

அடுத்து, நாம் இப்படியொரு தளத்தினை ஆரம்பிக்க இருக்கின்றோம் என்று கனவிலும் நினைக்க வில்லை. இப்படியொரு தர்மத்தினை சார்ந்து வாழப் போகின்றோம் என்றும் நினைக்கவில்லை. ஆனால் இவை அனைத்தும் நிகழ்த்தப்படுகின்றன. உழவாரப்பணி என்ற சொல்லை நமக்கு சொல்லிக்காட்டி, அனுபவத்தையும் தந்து தானம் போன்ற செய்திகளை எடுத்துரைத்த திரு.ரைட்மந்த்ரா சுந்தர் அவர்களையும் இந்த நன்னாளில் நினைவு கூறுகின்றோம். ஏதோ அவர் விட்டுச் சென்ற பணியை கடுகளவில் நம் "தேடல் உள்ள தேனீக்களாய்" குழுவின் மூலம் செய்து வருகின்றோம் என்று நாம் நம்புகின்றோம். அவரின் ஆசிகள் என்றும் வேண்டுகின்றோம்.

அடுத்து இந்த பயணத்தில் எண்ணற்ற சான்றோர் பெருமக்கள் இணைந்து வழிகாட்டி வருகின்றார்கள். அனைவரின் பெயரையும் இங்கே குறிப்பிட விரும்புகின்றோம். யார் பெயராவது இங்கே இணையத்தில் விடுபட்டிருக்கலாம். ஆனால் என்றும் நீஙகள் நம் இதயத்தில் இருந்துகொண்டு உள்ளீர்கள் என்பது திண்ணம். அன்னதானம் எப்படி செய்வது என்று கற்றுக்கொடுத்த ஜீவ அமிர்தம் திருமுருகன். அடுத்து நாம் அன்னதானம் செய்ய தற்போது வரை பொருளுதவி செய்து ஊக்குவித்து வரும் அகதியர்வனம் மலேசியா குழுவிற்கு நம்  நன்றி.

இவ்வாறாக செல்லும் போது, மீண்டும் முதல் பத்திக்கே வருகின்றோம். சித்தர்களில் முதன்மையான சித்தர் அகத்தியர் தான் இங்கே சிறப்பாக தரிசனம் தர உள்ளார். அவர் மட்டுமா? அடுத்து நம் தளத்திலே ஏகப்பட்ட குருமார்கள், சித்தர்கள் என தொட்டுக் காட்டியுள்ளோம். பெருங்களத்தூர் சதானந்த சுவாமிகள், மருதேரி பிருகு மகரிஷி அருள் குடிலம், மயிலை குழந்தைவேல் சுவாமிகள்,கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள், தீர்த்தமலை ஜடை சாமியார், ஸ்ரீ சற்குரு சுவாமிகள், பட்டினத்தார், வீர ராகவ சுவாமிகள், ரோம மகரிஷி என்று சித்தர்கள் பட்டியல் நீண்டுகொண்டே இருக்கின்றது.  இந்த நன்னாளில் அனைத்து சித்தர்களின் பொற்பாதம் அடைகின்றோம்.



சரி..இனி தரிசனம் காண செல்வோமா?

நம் அலுவலக நண்பர் திரு.பத்ம குமார் அவர்களிடம் நாம் பலமுறை பஞ்செட்டி அகத்தியர் கோயில் பற்றியும் அங்கு  நடைபெறும் சதய பூசை பற்றியும் கூறி உள்ளோம்.ஆனால் அதற்கான நேரம் அமையவில்லை. சுமார் இரண்டு வாரங்களுக்கு முன்னர் தீடீரென நண்பர் பஞ்செட்டி செல்லலாமா? என்று கேட்டார். நாமும் சரி என்று கூறிவிட்டு மற்ற வேலைகளில் இருந்தோம். பின்னர் அகத்தியர் வனம் மலேசியா குழுவின் நண்பர் திரு. பாலச்சந்திரன் சென்னை வந்து இருந்தார்.அவரை அழைத்துக் கொண்டு திருஒற்றியூர் சென்றோம்.மறுநாள் காலை பஞ்செட்டி செல்ல வேண்டும். பயணத்தின் போதே குருக்களிடம் அலைபேசியில் தொடர்பு கொண்டு தரிசனம் பற்றி கூறினோம். 

அன்றிரவு நாம் வீட்டிற்கு வந்த போது இரவு மணி 11 நெருங்கி விட்டது. தீபமேற்ற நல்லெண்ணெய் வாங்கிக் கொண்டு, வீட்டில் இருந்த வில்வம்,நெல்லி,அருகு, மஞ்சள்,பசுஞ்சாண விபூதி,சந்தனம்  என எடுத்துக் கொண்டு கிளம்பினோம். காலையில் பஞ்செட்டி அகத்தியர் தரிசனம் பெறப் போவது கண்டு மனம் மகிழ்ந்தோம். நீங்களும் இந்த தரிசனத்தில் மகிழ இருக்கின்றீர்கள்.




தரிசனப் படங்கள் கொஞ்சமே. அதனை மேலே கண்டு தரிசிக்கவும். ஒவ்வொரு அபிஷேகத்திலும் ஒவ்வொரு விதமாக தரிசனம் கண்டோம். அபிஷேகம் முடித்து அலங்காரத்தில் கண்ணில் ஒற்றும் தரிசனம் பெற்றோம்.







மிக மிக எளிய பூசை தான். கண்ணுக்கு இனிமையாய் இருந்தது. காதுக்கு இனிமையாய் அகத்தியரின் நாமம் போற்றினோம்.இது போதும் தானே? இன்றைய குருபூர்ணிமா நன்னாளில் நம் குருவின் தரிசனம் நமக்கு கிடைக்க நாம் கொடுத்து வைத்திருக்க வேண்டும் அன்றோ?

நீர் தான் கதி என்பதை " மதியேது விதியேது கதியுந்தன் பொற்பாதமே " என்று கூறி கூறி களிப்பு உற்றோம். மீண்டும் ஆலயம் முழுதும் ஒருமுறை வலம் வந்தோம். எத்தனை முறை தரிசித்தாலும் இன்னும் இன்னும் என மனம் ஏங்குகின்றது.









அனைத்தும் ஒருங்காய் மேலே இணைத்துள்ளோம். கண்டு கண் குளிரவும். திடீரென இந்த தரிசனம் அமைந்ததால் யாரையும் உடன் அழைக்க முடியவில்லை. அருமையான தரிசனம் வழங்க நமக்கு வாய்ப்பளித்த நண்பர் திரு.பத்மகுமார் அவர்களுக்கு நம் சார்பாகவும், நம் தளம் சார்பாகவும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.



அடுத்து மிக மிக முக்கிய அறிவிப்பு இந்த நன்னாளில் தருகின்றோம். வருகின்ற 03/08/2018 அன்று ஏக தின லட்சார்ச்சனை பஞ்செட்டி அகத்தியர் கோயிலில் காலை 8 மணி முதல் இரவு வரை நடைபெற உள்ளது. காலை 6 மணிக்கு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை 9 மணிக்கு  தொடங்கி மத்தியம் 2 மணி வரை, லலிதா சகஸ்ர நாம பாராயணம் மாலை வரை, மாலை 7 மணி முதல் திரு விளக்கு பூசை என ஒரே கொண்டாட்டமாக நடைபெற உள்ளது. வாய்ப்புள்ள அன்பர்கள் கலந்து கொண்டு இறையருளும்,குருவருளும் பெறும்படி வேண்டுகின்றோம். மீண்டும் அனைத்து குருமார்களின் பதமும், பாதமும் பணிகின்றோம்,

                 குரு உயர்வு மதிப்பவர் தம்மை தரத்தினை உயர்த்தி பிறவிப்பயனை நல்கும்.





- அடுத்த பதிவில் இணைவோம்.

மீள்பதிவாக:-

கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் 161 ஆம் ஆண்டு அவதார திருவிழா அழைப்பிதழ் - http://tut-temple.blogspot.com/2018/07/161.html

பாரத்தைக் குறைத்து பரத்தை உணர்த்தும் பரஞ்சோதி பாபா - 7- ஆம் ஆண்டு மகா குருபூஜைப் பேரானந்த வழிபாடு - http://tut-temple.blogspot.com/2018/06/7_27.html

 உன்னுள் உத்தமனைக் காணும் வழி - மஹான் சங்கு சித்தர் அவர்களின் 119 ஆவது குரு பூஜை - http://tut-temple.blogspot.com/2018/06/blog-post_13.html

அருள்மிகு சோமப்பா சுவாமிகளின் 50 ஆம் ஆண்டு குருபூசை விழா அழைப்பிதழ் - http://tut-temple.blogspot.com/2018/06/50.html

என்னை நீ ஆள்வாய் சிவப்பிரகாச இறைவநல் தேசிக மணியே! - http://tut-temple.blogspot.com/2018/06/blog-post_5.html

திருச்சி வரகனேரி பிர்மரிஷி ஸ்ரீ குழுமியானந்த சுவாமிகள் குருபூஜை - http://tut-temple.blogspot.com/2018/06/blog-post_1.html

ஸ்ரீ கண்ணையா யோகி குரு பூஜை - http://tut-temple.blogspot.com/2018/05/blog-post_79.html

மண் உண்ட மகான் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மல்லையா சுவாமிகள் - http://tut-temple.blogspot.in/2018/05/blog-post_89.html

மீண்டும் மீண்டும் நம்மை அழைக்கும் குழந்தைவேல் சுவாமிகள் - உழவாரப் பணி அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2018/05/blog-post_21.html

சித்திரை பூசத்தில் குழந்தைவேல் சுவாமிகளிடம் சரண் அடைவோம் - http://tut-temple.blogspot.in/2018/04/blog-post_21.html

ஜாதகத்தை மாற்றி சாதகமாக்கும் குழந்தைவேலர் - உழவாரப் பணி அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_77.html

 ஜாதகத்தையே மாற்றும் குழந்தைவேலர்... - http://tut-temple.blogspot.in/2017/05/blog-post_22.html

 என் கடன் பணி செய்து கிடப்பதே - உழவாரப் பணி - http://tut-temple.blogspot.in/2017/08/blog-post_24.html

உன்னுள் உத்தமனைக் காணும் வழி சாகாக் கல்வி - http://tut-temple.blogspot.com/2017/07/blog-post_4.html

ஓம் அகஸ்த்திய நாதனே - ஸ்ரீ குருமண்டல தெய்வமே !  - http://tut-temple.blogspot.com/2018/03/blog-post_76.html

எந்தையும் தாயும் - கூடுவாஞ்சேரி அகத்தியர் ஆயில்ய ஆராதனை அறிவிப்பு 21/05/2018  - http://tut-temple.blogspot.com/2018/05/21052018.html

மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டா - கூடுவாஞ்சேரி அகத்தியர் ஆயில்ய ஆராதனை அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2018/04/blog-post_22.html

அகத்தியருக்கு ஆயில்ய ஆராதனை -புரட்டாசி -2017- http://tut-temple.blogspot.in/2017/09/2017.html

அகத்திய முனிவரின் பஞ்ச யாக ஷேத்திரம் - பஞ்செட்டி சதய பூஜை அழைப்பு - http://tut-temple.blogspot.in/2018/04/blog-post_74.html

குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!! - கூடுவாஞ்சேரி அகத்தியர் ஆயில்ய ஆராதனை அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2018/03/blog-post_89.html

கூடுவாஞ்சேரி அகத்தியர் ஆயில்ய ஆராதனை - 28/2/2018 - http://tut-temple.blogspot.in/2018/02/2822018.html

மனமது செம்மை யாக அகத்தியர் பூசை தானே - http://tut-temple.blogspot.in/2018/03/blog-post_6.html

25 July 2018

கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் 161 ஆம் ஆண்டு அவதார திருவிழா அழைப்பிதழ்

அனைவருக்கும் வணக்கம்.

தற்போது தான் சித்தர்களின் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கிய கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் என்றொரு தலைப்பில் மாயாண்டி சுவாமிகள் தரிசனம் பெற்றோம். சுவாமிகளைப் பற்றி படிக்க படிக்க நமக்கு இன்னும் இன்னும் பரவசம் உண்டாகின்றது. இந்த பதிவு ஒரு மீள்பதிவு தான். சுவாமிகள் 161 ஆம் ஆண்டு அவதார திருவிழா அழைப்பிதழ் பகிரவே இந்த பதிவை மீண்டும் தொடர்கின்றோம்.


மதுரையிலிருந்து மானாமதுரை செல்லும் வழியில் இருக்கும் திருப்பாச்சேத்தியிலிருந்து தெற்கே எட்டு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது கட்டிக்குளம் . அங்கு குப்பமுத்து வேளாளர், கூத்தாயி அம்மாள் ஆகியோரின் மகனாக காளயுக்தி வருடம் ஆடி மாதம் பூராட நட்சத்திரத்தில் (1855 ஜூலையில்) மாயாண்டி சுவாமிகள் அவதரித்தார் . சிறு வயது முதலே ஆன்மிகத்தில் ஈடுபாடு கொண்டிருந்தார்.



கட்டிக்குளத்தில் உள்ள அய்யனார் கோயிலின் பூசாரியாக இருந்த குப்பமுத்து வேளாளர் ஒரு நாள் தம் மகன் மாயாண்டியையும் பூசை செய்வதற்காக அழைத்துச் சென்றார் . வெளிக்கூடத்தில் மகனை உட்காரவைத்துவிட்டு உள்ளே சென்று பூசைகளைச் செய்துவிட்டுத் திரும்பியவர் அதிர்ச்சியடைந்தார் .

குத்துக்காலிட்டுத் தியானத்தில் அமர்ந்திருந்த சிறுவன் மாயாண்டியின் தலைக்கு மேலே நல்ல பாம்பு ஒன்று படமெடுத்து ஆடாமல் அசையாமல் இருந்தது. அதன் உடற் பகுதியும் வால் பகுதியும் சிறுவனின் உடலைச் சுற்றி இருந்தன. கடும் விஷம் உள்ள நாகம் மகனைக் கொத்திவிடப் போகிறதோ என்கிற பீதியில், ஐயனாரப்பா எம் மகனைக் காப்பாத்து என்று கருவறையை நோக்கி ஓங்கிக் குரல் கொடுத்தார் குப்பமுத்து. பிஞ்சு மகனைப் பார்க்க வாஞ்சையுடனும் பயத்துடனும் திரும்பினார். என்னே அதிசயம்! நாகத்தைக் காணோம். தியானத்தில் இருந்து அப்போதுதான் மீண்டிருந்தான் மாயாண்டி. மகனிடம் ஏதோ ஓர் அபூர்வ சக்தி இருக்கிறது என்பதை அப்போது உணர்ந்துகொண்ட குப்பமுத்து, அவனை அப்படியே வாரி அணைத்துக்கொண்டார். இதே போன்ற சம்பவங்கள் பின்வந்த நாட்களிலும் தொடர்ந்தன. ஒரு கட்டத்தில் விஷயம் ஊருக்குள் பரவி, மாயாண்டியை ஒரு தெய்வ சக்தியாகவே அனைவரும் பார்க்க ஆரம்பித்தனர்.



சிறு வயதில் மாயாண்டி சுவாமிகள், சித்தர் பாடல்களைத் தேடித் தேடிப் படிப்பதையும் அடிக்கடி ஆலய யாத்திரைகள் சென்று வருவதையும் கண்டு அச்சமுற்ற பெற்றோர் அவருக்குத் திருமணமும் செய்து வைத்தனர். இருப்பினும் அவரது ஆன்மிகத் தேடல் குறையவில்லை. அவர் தமது தேடல்களுக்குச் சரியான வழிகாட்டும் குரு ஒருவரைத் தேடியலைந்தார். இறைவன் அதற்கும் வழிகாட்டினான்.

மாயாண்டி சுவாமிகளை இறைவன் எந்தப் பணிக்காக அனுப்பி இருக்கிறான் என்பது, அவனுக்கு மட்டும்தானே தெரியும்?! இல்லறத்திலேயே இவன் இருந்து விட்டால், எதிர்கால சமுதாயத்துக்கு என்ன பயனைச் செய்துவிட முடியும்? மாயாண்டியை இறைவன் ஆட்கொண்டான். விளைவு- இல்லறம் இனிக்கவில்லை. தவத்திலும் யோகத்திலும் காலத்தை ஓட்டினார். சிட்டாய்ப் பறக்க விரும்பினார். தவத்திலும் சமாதி நிலையில் உடல் கூட வேண்டும் என்று விரும்பினார்.  அதற்கு முன் தீட்சை பெற வேண்டுமே! உபதேசம் செய்வதற்கு ஒரு குரு வேண்டுமே! இந்த வேளையில்தான் ராமேஸ்வரத்துக்கு யாத்திரை சென்று கொண்டிருந்த தஞ்சாக்கூர் செல்லப்ப சுவாமிகள் என்பவர், கட்டிக்குளம் வந்தார்.





அவரைச் சந்தித்த மாயாண்டி சுவாமிகள் அவரிடம் தம் விருப்பத்தைக் கூறியதும் உடனே அவருக்குத் தீட்சையளித்தார். அந்த நிமிடமே அனைத்தையும் துறந்த மாயாண்டி சுவாமிகள் கட்டிய கோவணத்துடன் வீட்டை விட்டுப் புறப்பட்டார்.

பல புனித ஸ்தலங்களுக்குச் சென்று யோக சமாதியில் ஆழ்ந்த அவர் இறுதியாகத் திருக்கூடல் மலை என்ற காகபுஜண்டர் மலைக்கு வந்து சேர்ந்தார்.(இன்றைக்கும் காகபுஜண்டர் அந்த மலையில் யோக சாமதியில் இருப்பதாகக் கூறப்படுகிறது). அந்த மலையில் அரூபமாக இருக்கும் சித்தர்கள் அவரை வரவேற்று, இங்கேயே நிரந்தரமாகத் தங்கிவிடும்படி அருளாசி கூறினர் . அதன்படி மாயாண்டி சுவாமிகள் அங்கிருக்கும் குகை ஒன்றில் லிங்கம் ஒன்றைப் பிரிதிஷ்டை செய்து யோக சமாதியில் ஆழ்ந்து அட்டமாசித்திகளையும் பெற்றார் .


மாயாண்டி சுவாமிகளின் வாழ்க்கையில் நடந்த அற்புதங்கள் எண்ணற்றவை.

ஒருநாள் சுவாமிகள் மதுரைக்கு அருகே ஒரு சிறு கிராமத்தில் வசித்த பிராமணத்துக் தம்பதியினரின் இல்லத்திற்குள் திடீரென நுழைந்தார் . அத்தம்பதியினரிடம், “உங்களுக்குப் பத்தாவதாக ஒரு பிள்ளை பிறக்கப்போகிறது . அதற்குச் சுப்பிரமணி என்று பெயர் வை .ஆனால் அவன் சில காலம் மட்டும் உங்களுடன் இருப்பான் . பின்னர் அவனை இந்த உலகமே கொண்டாடும்” என்று ஆசி வழங்கினார் . அதன்படி பிறந்த சுப்பிரமணி தான் பின்னர் சுவாமிகளிடம் தீட்சை பெற்று ‘சாந்தானந்த சுவாமிகள்’ ஆனார். சேலம் புதுக்கோட்டை போன்ற இடங்களில் உள்ள ‘ஸ்கந்தாஸ்ரமம்’ அமைத்துப் பக்தர்களின் குறைகளைத் தீர்த்தார் .



ஒருமுறை சுவாமிகள் நாகப்பட்டினம் சென்றிருந்தார். சுவாமிகளைத் தரிசித்துத் திருநீறு பெறுவதற்காகப் பெரும் கூட்டம் கூடியிருந்தது . அப்போது ஒரு சிறுவன் திருநீறு வாங்குவதற்காக நீட்டிய கையைத் தொட்டதும் சுவாமிகள் மகிழ்ச்சியுடன் “நீ யோகக்காரனப்பா! உன் பேச்சைக் கேட்கப் பணத்தைக் கொட்டிக் கொடுப்பார்கள் .

அதனைக் கொண்டு ஏராளமான ஆலயங்களுக்குத் திருப்பணிகள் செய்யும் யோகமும் உனக்கு இருக்கிறது” என்று கூறி ஆசிர்வதித்தார் . அந்தச் சிறுவன்தான் பின்னாளில் திருமுருகக் கிருபானந்த வாரியார் சுவாமிகள் எனப் புகழ் பெற்றார் . சுவாமிகள் கூறியபடி சுமார் நாற்பது திருத்தலங்களுக்குத் திருப்பணிகளும் செய்தார்.

சுவாமிகளின் நெருங்கிய சீடரான இருளப்பக் கோனார் சுவாமிகளின் அறிவுரையின்படி திருக்கூடல் மலையில், தண்டாயுதபாணியின் சொரூபத்தைப் பிரதிஷ்டை செய்தார். இப்போது அங்கு பெரும் ஆலயம் ஒன்று எழுப்பப்பட்டிருக்கிறது. சுவாமிகளிடம் தீட்சை பெற்றுச் சீடர்கள் பலர் சித்தரானார்கள். கற்றங்குடி ரெட்டி சுவாமிகள், மூக்கையா சுவாமிகள், கச்சைகட்டி சுவாமிகள், வேலம்மாள், முத்துமாணிக்கம் சுவாமிகள், சோமப்பா சுவாமிகள், சாந்தானந்த சுவாமிகள் ஆகியோர் குறிப்பிடத்தகுந்தவர்கள்.



நீரின் மீது நடந்தது தண்ணீரில் விளக் கேற்றியது போன்ற பல சித்துக்களைச் செய்த மாயாண்டி சுவாமிகள் 1928-ம் ஆண்டு புரட்டாசி மாதம் ஆறாம் தேதி, தமது பக்தர்களிடம் இன்னும் இரண்டு ஆண்டுகளில் அடக்கம் ஏற்படும் என்று தெரிவித்தார் . அடக்கம் செய்ய வேண்டிய இடத்தைக் குறிப்பிட்டு அங்கே சமாதிக் குழியும் வெட்டச் செய்தார் .

சுவாமிகள் கூறியபடி 1930-ம் ஆண்டு புரட்டாசி மாதம் 11-ம் தேதி இரவு இருளப்பக் கோனாரின் இடது தோளில் சாய்ந்து “அப்பு இந்தச் சட்டையைக் கழற்றிவிடலாமா?” என்று கேட்டுவிட்டுச் சமாதியானார் . சமாதிக் குழிக்குள் சுவாமிகளின் பூத உடலை வைக்கும்போது அவரது ஜீவநாடி ஓடிக்கொண்டிருந்ததாம் . சுவாமிகளின் விருப்பப்படி அவரது சமாதிப் பீடத்தில் சுவாமிகள் பூசித்துவந்த விநாயகரின் சொரூபம் பிரதிஷ்டை செய்யப்பட்டது .









திருக்கூடல் மலை என்ற காகபுஜண்டர் மலையில் காகபுஜண்டர் இன்றும் அரூபமாக யோக சமாதியில் இருக்கின்றார் என்றும் அங்கு பல சித்தர்கள் அரூபமாக வாழ்ந்துவருவதாகவும் கூறப்படுகிறது . இப்படிப்பட்ட புனிதமான அந்த மலையின் அடிவாரத்தில் மாயாண்டி சுவாமிகள் ஜீவசமாதியடைந்து அதனை மேலும் புனிதமாக்கியிருக்கிறார் .



அதென்ன  சூட்டுக்கோல்? இவர் கையில் வைத்திருக்கும் சூட்டுக்கோல் நல்லவர்களுக்கு நன்மை தருவதாகவும் தீயவர்களுக்குத் தண்டனை தருவதாகவும் இருந்தது. ராமலிங்க சுவாமிகளின் காலத்துக்குப் பிறகு இந்த சூட்டுக்கோல் அவரின் சீடரான செல்லப்ப சுவாமிகளிடமும் அதன் பின் அவருடைய சீடரான மாயாண்டி சுவாமிகளிடமும் வந்தது. இன்றைக்கும் இந்தச் சூட்டுக்கோலை மாயாண்டி சுவாமிகளின் சமாதியில் தரிசிக்கலாம்.





எப்படி செல்வது?
மதுரை திருப்பரங்குன்றம் தியாகராஜர் பொறியியல் கல்லூரி நிறுத்தத்தில் இறங்கிக்கொண்டு, அங்கிருந்து பத்து நிமிடங்கள் நடந்தால், காகபுசுண்டர் மலை வந்துவிடும்.  இங்கு தான்  கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் மற்றும் சோமப்ப சுவாமிகள் ஜீவ சமாதி அமைந்துள்ளது.






திருப்பரங்குன்றத்துக்கு அருகிலே காகபுசுண்டர் மலை என்று ஒரு மலை தன் அருளை மதுரை முழுதும் வெளிப்படுத்தி வருகின்றது.இம்மலை புசுண்டர் மலை என்றும் திருக்கூடல்மலை என்றும் வழங்கப்பட்டு வருகின்றது. 300 ஆதி உயரம் கொண்ட இந்த மலையில் தான்  கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் இருக்கின்றார் என்பது சிறப்பு. அங்கேயே சுவாமிகளின் சீடரான சோமப்பா சுவாமிகளும் அருள் தந்து கொண்டு வருகின்றார்.





 சற்குருநாதர்  துணை 
அருள்மிகு கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் 161-ம் ஆண்டு அவதார விழா 
நாள் : 26.07.2018 வியாழக்கிழமை  
நேரம் : காலை 7.31 மணிக்குமேல் 9.00 மணிக்குள்  
இடம்: சுவாமிகள் அவதார இல்லம், பட்டமான், கட்டிக்குளம் 
அனைவரும் வருக!   சுவாமியின் அருள் பெறுக!

Arulmiku Kattikkulam Soottukkole Mayandi  Swamigal 161th Avathara Vizhaa 2018

Date: 26.07.2018 - Thursday

Time: 7.31 to 9.00 am

Venue: Swamigal Avathara Illam, Pattmaan, Kattikkulam

All are Welcome!

இணைப்பு: விழா பத்திரிக்கை என்றும் அன்புடன்,

இரா. தட்சணாமூர்த்தி பரம்பரை டிரஸ்டி - 5ம் தலைமுறை
சூட்டுக்கோல் இராமலிங்க விலாசம் செல்: 94422 72220, 98421 24843
மின்னஞ்சல்: soottukkole@gmail.com  
இணையதளம்: www.soottukkole.org   
முகநூல்: Soottukkole

- மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்

மீள்பதிவாக:-

பாரத்தைக் குறைத்து பரத்தை உணர்த்தும் பரஞ்சோதி பாபா - 7- ஆம் ஆண்டு மகா குருபூஜைப் பேரானந்த வழிபாடு - http://tut-temple.blogspot.com/2018/06/7_27.html

 உன்னுள் உத்தமனைக் காணும் வழி - மஹான் சங்கு சித்தர் அவர்களின் 119 ஆவது குரு பூஜை - http://tut-temple.blogspot.com/2018/06/blog-post_13.html

அருள்மிகு சோமப்பா சுவாமிகளின் 50 ஆம் ஆண்டு குருபூசை விழா அழைப்பிதழ் - http://tut-temple.blogspot.com/2018/06/50.html

என்னை நீ ஆள்வாய் சிவப்பிரகாச இறைவநல் தேசிக மணியே! - http://tut-temple.blogspot.com/2018/06/blog-post_5.html

திருச்சி வரகனேரி பிர்மரிஷி ஸ்ரீ குழுமியானந்த சுவாமிகள் குருபூஜை - http://tut-temple.blogspot.com/2018/06/blog-post_1.html

ஸ்ரீ கண்ணையா யோகி குரு பூஜை - http://tut-temple.blogspot.com/2018/05/blog-post_79.html

மண் உண்ட மகான் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மல்லையா சுவாமிகள் - http://tut-temple.blogspot.in/2018/05/blog-post_89.html

மீண்டும் மீண்டும் நம்மை அழைக்கும் குழந்தைவேல் சுவாமிகள் - உழவாரப் பணி அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2018/05/blog-post_21.html

சித்திரை பூசத்தில் குழந்தைவேல் சுவாமிகளிடம் சரண் அடைவோம் - http://tut-temple.blogspot.in/2018/04/blog-post_21.html

ஜாதகத்தை மாற்றி சாதகமாக்கும் குழந்தைவேலர் - உழவாரப் பணி அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_77.html

 ஜாதகத்தையே மாற்றும் குழந்தைவேலர்... - http://tut-temple.blogspot.in/2017/05/blog-post_22.html

 என் கடன் பணி செய்து கிடப்பதே - உழவாரப் பணி - http://tut-temple.blogspot.in/2017/08/blog-post_24.html

உன்னுள் உத்தமனைக் காணும் வழி சாகாக் கல்வி - http://tut-temple.blogspot.com/2017/07/blog-post_4.html

ஓம் அகஸ்த்திய நாதனே - ஸ்ரீ குருமண்டல தெய்வமே !  - http://tut-temple.blogspot.com/2018/03/blog-post_76.html

எந்தையும் தாயும் - கூடுவாஞ்சேரி அகத்தியர் ஆயில்ய ஆராதனை அறிவிப்பு 21/05/2018  - http://tut-temple.blogspot.com/2018/05/21052018.html

மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டா - கூடுவாஞ்சேரி அகத்தியர் ஆயில்ய ஆராதனை அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2018/04/blog-post_22.html

அகத்தியருக்கு ஆயில்ய ஆராதனை -புரட்டாசி -2017- http://tut-temple.blogspot.in/2017/09/2017.html

அகத்திய முனிவரின் பஞ்ச யாக ஷேத்திரம் - பஞ்செட்டி சதய பூஜை அழைப்பு - http://tut-temple.blogspot.in/2018/04/blog-post_74.html

குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!! - கூடுவாஞ்சேரி அகத்தியர் ஆயில்ய ஆராதனை அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2018/03/blog-post_89.html

கூடுவாஞ்சேரி அகத்தியர் ஆயில்ய ஆராதனை - 28/2/2018 - http://tut-temple.blogspot.in/2018/02/2822018.html

மனமது செம்மை யாக அகத்தியர் பூசை தானே - http://tut-temple.blogspot.in/2018/03/blog-post_6.html