Subscribe

BREAKING NEWS

27 February 2019

சிவராத்திரி விரதம் அறிந்து கொள்வோம்

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

இதோ சிவராத்திரி கொண்டாட்டங்களுக்காக அனைவரும் ஆயத்தமாகி வருவீர்கள் என்று நம்புகின்றோம். சென்ற ஆண்டு கூடுவாஞ்சேரியில் முழுதும் கொண்டாடினோம். மாமரத்து விநாயகர் கோயிலில் முதல் காலம், வேலி அம்மன் கோயிலில் இரண்டாம் காலம், மூன்றாம் காலம் நந்தீஸ்வரர், ஊரணீஸ்வரர் கோயிலில் நான்காம் காலம் என்று புதுமையாக இருந்தது. இந்த ஆண்டு முதல் அழைப்பாக அருள்மிகு கந்தழீஸ்வரர் அழைப்பு விடுத்துள்ளார். இம்முறையும் சென்னையிலே கொண்டாட விரும்புகின்றோம். அனைத்தும் அவன் அருளாலே தானே.! சரி. சிவராத்திரி பற்றி இணையத்தில் படிக்க கிடைத்த செய்திகளை இங்கே தொகுத்து தருகின்றோம்.

சென்ற ஆண்டு சுமார் 1000 பிரதி சிவ புராணம் அச்சிட்டு சிவராத்திரி அன்றும். பின்னர் நாம் சென்று வந்த யாத்திரைகள் போதும் அனைவருக்கும் வழங்கினோம். இம்முறை நால்வரின் பதிகங்களை சேர்க்க உள்ளோம்.




 சிவராத்திரி விரதம் இருக்குமன்று அதாவது நாளை  முழுதும் எதுவும் சாப்பிடக்கூடாது. நாள் முழுதும் உபவாசம் இருந்து மனதை சிவனின் மீது வைத்து, இரவு முழுவதும் தூங்காமல் கண் விழித்து சிவாலயங்களில் நடைபெறும் 4 ஜாம பூஜைகளிலும் பங்கேற்க வேண்டும். இன்றைய ஒரு நாள் வழிபாடு ஆயிரம் நாள் சிவபூஜை செய்த பலனை அளிக்கும் என்பது அருளாளர்கள் வாக்கு.

சிவராத்திரி அன்று இரவு முழுவதும் கண் விழித்து ஸ்வாமியை தரிசித்து வழிபாடு செய்ய முடியாவிட்டால் கூட, ‘லிங்கோற்பவ’ காலமாகிய இரவு 11.30 மணி முதல் 1மணி வரை உள்ள காலத்திலாவது சிவதரிசனம் செய்து வழிபட வேண்டும். ஏனெனில் இந்த நேரத்தில் தான் சிவன் ஜோதிலிங்கமாக தோன்றிய நேரமாக கருதப்படுகிறது.

மகாசிவராத்திரியன்று முறையாக விரதம் இருந்து, இரவு முழுவதும் கண்விழித்து இறைவனின் நாமத்தை சொல்லி வழிபடுவதால் அளவற்ற நன்மை கிடைக்கும். சிவராத்திரி வழிபாட்டினால் நீண்ட ஆயுள், நிறைந்த செல்வம், நல்ல மக்கட்பேறு பெறலாம். தீரா நோய்கள் நீங்கும். முடிவாக இனிப் பிறவா தன்மை பெறலாம் என முன்னோர்கள் கூறுகின்றனர்.

விரதத்தை சாஸ்திர சம்பிரதாயங்களில் கூறியுள்ளபடி அனுஷ்டிக்க பயந்து பலர் விரதமிருக்க முயற்சிப்பதில்லை. இன்றைய சூழ்நிலையில் 100% உண்மையான விரதத்தை எடுத்தவுடன் அனுஷ்டிப்பது எவராலும் இயலாது. விரதமிருந்து உடலையும் மனதையும் பழக்கவேண்டும். ஒவ்வொரு மகா சிவராதிரியின்போதும்  முந்தைய சிவராத்திரியைவிட சிறப்பாக அனுஷ்டிக்க சங்கல்பம் செய்துகொண்டால் கொஞ்சம் கொஞ்சமாக  விரதம் கைவரப்பெறும்.

நாமும் இப்படித் தான் முதல் ஆண்டில் எப்படி விரதம் இருப்பது என்று தெரியாமல் நமக்குத் தெரிந்த வழிகளில் வழிபாடு செய்தோம். பின்னர் இரண்டாம் ஆண்டில் கிரிவலம் செய்தோம்.




இப்படியெல்லாம் கஷ்டப்பட்டு தான் விரதம் இருக்க வேண்டுமா? என்று நீங்கள் கேட்பது நம் காதில் விழுகின்றது? மனதில் தூய எண்ணத்துடன் மாசு நீக்கி, இன்று ஒரு நாள் சிவ சிந்தனையில் இருந்தால் கூட போதும்., இரவில் கண் விழித்து விரதம் இருக்க முடியாதவர்கள், நாளை முழுதும் உபவாசம் இருந்து, மாலை தங்கள் வீட்டின் அருகில் உள்ள சிவாலயம் சென்று, முதல் கால பூசையாவது கண்டு இன்புறுங்கள். மற்றவர்கள் கண்டிப்பாக 4 கால பூசை பார்க்கவும்.

நாங்களும் விரதம் இருக்க விரும்புகின்றோம்? வீட்டிலேயே விரதம் இருக்க முடியுமா? என்றால் நிச்சயமாக முடியும். கோவிலுக்கு செல்லாமல் வீட்டில் விரதம் இருப்பவர்கள் திருவிளையாடல்,திருவருட்ச்செல்வர்,கந்தன் கருணை போன்ற பக்திப் படங்களை பார்த்தும், சிவபுராணம், கந்த புராணம், திருவிளையாடல் புராணம், பெரிய புராணம் போன்ற பொக்கிஷங்களை படித்தும் சிவ சிந்தனையில் இருக்கலாம்.



அனைத்து புண்ணியப் பலன்களையும் இந்த சிவராத்திரி பூஜை தந்துவிடும்; அறிந்து பாவங்கள் செய்திருந்தாலும்,அறியாமல் பாவங்கள் செய்திருந்தாலும் அனைத்து பாவங்களையும், கர்மவினைகளையும் அழித்துவிடும் இந்த  சிவராத்திரி விரதம்.

சித்திரை மாதத்தில் வரும் இரண்டு சிவராத்திரிகளிலும் ஒருவன்/ஒருத்தி தனது ஆயுள் முழுவதும் செய்து வந்தால், அங்கங்களின் குறைகள் நீங்கும்; உடலின் குறைகள் நீக்கப்பட்டு, ருத்திர கணங்கள் வந்து சிவலோகத்திற்கு அழைத்துச் செல்வார்கள்;

வைகாசி மாதத்தில் வரும் இரண்டு சிவராத்திரி பூஜைகளை ஆயுள் முழுக்க செய்தால், நாம் சாப்பிடுகின்ற மருந்து நம் உடலில் ஒட்டும்; சாப்பிடுகின்ற மருந்து உடலில் ஒட்டினால் தான் நம் நோய் நீங்கி ஆரோக்கியம் வரும்;

ஆனி மாதத்தில் வரும் இரு சிவராத்திரிகளில் பூஜைகளை ஆயுள் முழுக்க செய்தால், தேவதைகள் எல்லாம் நடனம் ஆடி நம்மை வணங்கி தேவலோகத்திற்கு அழைப்பார்கள்:

ஆடி மாதத்தில் வரும் இரு சிவராத்திகளில் பூஜைகளை ஆயுள் முழுக்க செய்தால், அம்பிகையுடன் சேர்ந்து சிவராத்திரி பூஜை செய்த பலன் கிட்டும்;

ஆவணி மாதத்தில் வரும் இரு சிவராத்திரிகளில் பூஜைகளை செய்தால் வேதம் ஓதிய பலன் கிட்டும்; பூணூல் அணிந்து வேதம் ஓதிய பலன் கிட்டும்;மேல் உலகில் வேதம் ஒதியவருக்கு கொடுக்கின்ற மதிப்பைக் கொடுப்பார்கள்:

புரட்டாசி மாதத்தில் வரும் இரு சிவராத்திரிகளில் ஆயுள் முழுக்க பூஜை செய்தால்,செல்வம் பெருகும்;

ஐப்பசி மாதத்தில் வரும் இரு சிவராத்திரிகளில் ஆயுள் முழுக்க பூஜை செய்தால்,நாம் என்றுமே பசியால் வாடித் தவித்து அலைய மாட்டோம்; வாழ்நாள் முழுவதும் பசியால் அவதிப்படமாட்டோம்; அதாவது உணவிற்காக என்றுமே கையேந்தி நிற்கும் நிலை வராது;

சிவபக்தன் என்று சொல்லிக் கொள்கின்ற ஒவ்வொருவரும் அவசியம் செய்ய வேண்டியது,
கார்த்திகை மாதத்தில் வரும் இரு சிவராத்திரிகளிலும் பூஜைகள் செய்திடவேண்டும்; சிவராத்திரி விரதம் இருந்திடல் வேண்டும்; கார்த்திகை மாதத்து சிவராத்திரி பூஜையைப் பற்றி விவரிக்க ஒரு 100 ஆண்டுகள் போதாது;

மார்கழி மாதத்தில் வரும் இரு சிவராத்திரி பூஜையை ஆயுள் முழுக்க செய்தால், பிறருக்காக தவறுகள் செய்ய மாட்டார்கள்: ஒரு மனிதன் அதுவரை செய்த அனைத்துவிதமான தவறுகளையும் அழிக்கின்ற சிவராத்திரி மார்கழியில் வரும் சிவராத்திரியாகும்;

தை மாதத்தில் வரும் இரு சிவராத்திரி பூஜைகளை ஆயுள் முழுக்க செய்தால்,நெல் முதலான தானியங்கள் நன் கு விளையும்;அள்ளி வழங்கிய தானப் பலன் கிடைக்கும்;

மாசி மாதத்தில் வரும் இரு சிவராத்திரிகளில் பூஜையை மனைவி செய்தால், பிற பெண்களை நாடும் கணவன் திருந்திவிடுவான்;கணவன் செய்தால், பிற மாதரை நாடும் எண்ணத்தில் இருந்து நிச்சயம் மீண்டு வர முடியும்;

பங்குனி மாதத்தில் வரும் இரு சிவராத்திரிகளில் பூஜை செய்தால்,சிவபெருமானின் பங்குனி உத்திர நடனத்தைக் காணும் அளப்பரிய பாக்கியம் கிடைக்கும்; பங்குனி உத்திர நடனத்தைப் பார்ப்பதற்கு 3 கோடி முறை மனிதப் பிறப்பு எடுத்து சிவசிந்தையோடு வாழ்ந்தால் தான் கிட்டும்; அதை ஒரே ஒரு பிறவி பங்குனி மாத சிவராத்திரி பூஜைகளைப் பின்பற்றுவதன் மூலமாக கிடைத்துவிடுகின்றன;

நமது பிறந்த நட்சத்திரமும், சிவராத்திரியும் சேர்ந்து வரும் நாளில் சிவராத்திரி பூஜை+விரதம் இருந்தாலே போதும்; கலியுகத்தில் மானுடப் பிறவி எடுத்தமைக்கான லட்சியத்தை அடைந்துவிட்டதாக அர்த்தம்;

ஒருவேளை பிறந்த நட்சத்திரமும் சிவராத்திரியும் இணைந்து வராவிட்டாலும் கூட, பிறந்த கிழமையும் சிவராத்திரியும் இணைந்து வரும் நாளில் கூட சிவராத்திரி விரதம் இருந்து சிவபூஜை செய்வது மிகுந்த புண்ணியம் தரும்;





செய்யவேண்டியது:

1) சிவாலயத்தில் இருந்தபடி நான்கு கால பூஜைகளையும் பார்ப்பது

2) சிவ சிந்தனையுடன் உபவாசம் இருத்தல்

3) சிவ நாமத்தை மனதுக்குள் தியானித்தபடி இருத்தல்

4) பக்தி இலக்கியங்களையும் பக்தி நூல்களையும் படித்தல் (இன்று பன்னிரு திருமுறைகளுள் “போற்றித்திருத்தாண்டகம்” பாடுவது மிகச் சிறந்தது.

5) சிவராத்திரி தரிசனத்திற்கு கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு உதவுவது; ஆலய நிர்வாகத்திற்கு உதவுவது

6) ஆலயத்தில் விழித்திருந்து துப்புரவு பணிகளை மேற்கொள்வது

7) சிவபூஜை செய்பவர்களுக்கு கூட மாட உதவுவது

8) கோ-சம்ரோக்ஷனம் செய்வது

9) தான தர்மங்களை (அடுத்த நாள்) மேற்கொள்வது. – இவைகளை அவசியம் கடைபிடிக்கவேண்டும்.



கண்டிப்பாக சிவராத்திரி அன்று அன்னதானம் போன்ற தானங்களை செய்ய வேண்டாம். அன்றைய தினம் உடலும் மனமும் சுத்தமாக வேண்டும். தானம் செய்கின்றேன் என்று நீங்கள் அன்னதானம் செய்தால் அது உண்பவர்களை தியானத்தில் ஆழ்த்தாது.


எனவே தான் அடுத்த நாள் இது போன்ற தான தர்ம செயல்களை அடுத்த நாள் செய்யவும். மொத்தம் சிவராத்திரி அன்று நான்கு கால பூசை நடைபெறும்.

ஒரு ஜாமம் என்பது 3 மணி நேரம் ஆகும்;நான்கு ஜாமப் பூஜைகள் சிவராத்திரி இரவில் நடைபெறும்; இதையே நான்கு காலப் பூஜை என்றும் அழைக்கின்றனர்;

முதல் ஜாமப்பூஜை என்ற முதல் கால பூஜை சிவராத்திரி அன்று மாலை 6 மணி முதல் 9 மணி வரை செய்வர்;

இரண்டாம் ஜாமப்பூஜை என்ற இரண்டாம் கால பூஜை இரவு 9.01 முதல் நள்ளிரவு 12 மணி வரை செய்வர்;

மூன்றாம் ஜாமப்பூஜை என்ற மூன்றாம் கால பூஜை நள்ளிரவு மணி 12.01 முதல் பின்னிரவு 3.00 மணி வரை செய்வர்;

நான்காம் ஜாமப்பூஜை என்ற நான்காம் கால பூஜை பின்னிரவு மணி 3.01 முதல் மறுநாள் காலை 6.00 மணி வரை செய்வர்;





முதல் கால பூஜை(சிவராத்திரி அன்று மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை) பசும்பால் (கிராமங்களில் தேடிப்பார்த்து வாங்குங்கள்; பாக்கெட் பால் உண்மையான பால் அல்ல); தேன், பசுநெய், பசும் சாணம், கோஜலம் (பசுவின் சிறுநீர்) இவைகள் ஐந்துமே பஞ்சகவ்யம் என்று அழைக்கப்படுகிறது; சிவலிங்கத்துக்கு அபிஷேகம் செய்ய பஞ்ச கவ்யம் அளித்தவர்கள் யாரும் பஞ்சத்தால் வாடமாட்டார்கள்;

சிவலிங்கத்திற்கு சந்தனப்பூச்சு செய்து வில்வத்தால் அர்ச்சனை செய்ய வேண்டும்; இதனால், வேத நாயகனின் ஆசி கிட்டும்; பச்சைப்பயிறு நைவேத்தியமாக வைக்க வேண்டும்; இதனால், பெரும் புண்ணியம் கிட்டும்; இதனால்,அவர்களுடைய பிள்ளைகள் நன்றாக வாழ்வார்கள்; எதிர்காலத்தில் தங்கள் பெற்றோர்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளைச் சரியாகச் செய்வார்கள்;
பஞ்சகவ்யம் வாங்கித்தர இயலாதவர்கள், சிவராத்திரி பூஜைக்கு பணம் அன்பளிக்காக் கொடுக்கலாம்;

இந்த முதல் ஜாமப் பூஜையில் ரிக் வேதம் பாராயணம் செய்ய வேண்டும்; ரிக் வேதம் சொல்லத் தெரியாவிட்டால், ரிக் வேதிகளை அழைத்து வந்து ஓதச் சொல்லலாம்;
அதுவும் இயலாதவர்கள் ஓம் நமசிவாய என்ற பஞ்சாட்சரத்த்தை இந்த முதல் ஜாமம் முழுவதும் ஜபிக்க வேண்டும்; இதனால்,ருத்ரம், ரிக் வேதம், சாம வேதம் சொன்ன பலன் கிட்டும்;

ஓம்நமச்சிவாயமே உணர்ந்து மெய் உணர்ந்தபின்
ஓம்நமச்சிவாயமே உணர்ந்து மெய் தெளிந்தபின்
ஓம்நமச்சிவாயமே உணர்ந்து மெய்ப் புணர்ந்த பின்
ஓம்நமச்சிவாயமே உணர்ந்து உட்கலந்து நிற்குமே!

***************************

இரண்டாம் ஜாம(கால)பூஜை(இரவு 9.01 முதல் நள்ளிரவு 12 வரை)

இரண்டாம் ஜாமத்தில் ஈசனை தரிசித்தால், நம்முடைய பிறவி முடிந்து, மீண்டும் மறுபிறவி எடுத்த பலன் கிட்டுகின்றது;

பால், தேன், சர்க்கரை, நெய், தயிர் கலந்த ரச பஞ்சாமிர்தம் ஆகும்; ஈசனாகிய சிவலிங்கத்திற்கு பஞ்சாமிர்த அபிஷேகம் செய்ய வேண்டும்;
இந்த அபிஷேகத்திற்கு, பால் கொடுத்தால் தாய்ப்பால் இல்லாதவள், தாய்ப்பால் பெறுவாள்; சுத்தமான பசும்பாலில் தான் அபிஷேகம் செய்ய வேண்டும்; காரம்பசுவின் பால் எனில் மிகவும் சிறப்பு; கிறிஸ்தவ ஆங்கிலேயனின் 300 ஆண்டுச் சதிகளால் மாவட்டத்திற்கு ஒரு ஊரில் தான் காரம்பசுவே இருக்கின்றது;

சர்க்கரை கொடுத்தவருக்கு சர்க்கரை நோய் வராது;
தயிர் கொடுத்தவருக்கு தயிர் திரண்டு உருவாவது போல,செல்வம் பெருகும்;

சிவலிங்கத்திற்கு அகில் குழம்பு பூச்சு சார்த்த வேண்டும்; இதனால்,லட்சுமிதேவி நம்மைவிட்டு விலகாமல் இருப்பாள்; தாமரைப்பூக்களால் அர்ச்சனை செய்ய வேண்டும்; நைவேத்தியமாக பாயாசம் வைக்க வேண்டும்; நைவேத்தியத்தை அனைவருக்கும் பகிர்ந்து தரவேண்டும்; இதன் மூலமாக நம்முடைய குழந்தைகள் நற்குணத்துடன் தானாய் வளரும்;

இந்த இரண்டாம் கால பூஜை சமயத்தில் (இரவு 9.01 முதல் நள்ளிரவு 12 வரை) யஜீர் வேதம் பாராயணம் செய்ய வேண்டும்; க்ருஷ்ண யஜீர்,சுக்ல யஜீர் என்று இரு பெரும் யஜீர் வேதப்பிரிவுகள் இருக்கின்றன; இருவருமே கூடி அவரவர் யஜீர் வேதத்தை ஓத வேண்டும்; இதனால்,நாடு சுபிட்சமடையும்; நாமும் நன்றாக இருப்போம்; இன்று தேசபக்தியுடன் கூடிய தெய்வபக்திதான் தேவை;

ஒருவேளை,யஜீர் வேதம் தெரியாவிட்டால் அல்லது யஜீர் வேதம் தெரிந்தவர்கள் கிடைக்காவிட்டால் வருத்தப்படவேண்டியதில்லை; சிவாய நம என்று இந்த இரண்டாம் காலம் முழுவதும் ஜபிக்க வேண்டும்;

செம்பு பொன்னாகும் சிவாயநம வென்னீற்
செம்பு பொன்னாகத் திரண்டது சிற்பரம்
செம்பு பொன்னாகும் ஸ்ரீயும்,கிரீயுமெனச்
செம்பு பொன்னான திரு அம்பலமே!

இதையே நமது தாத்தா பாட்டிகள் பழமொழியாக எழுதி வைத்துள்ளனர்; சிவாய நம என்று சிந்தித்திருப்போர்க்கு ஒரு நாளும் துன்பமில்லை;

***************************

மூன்றாம் ஜாம(கால) பூஜை (நள்ளிரவு 12 முதல் பின்னிரவு 3.00 மணி வரை)

இந்த காலத்தில் சிவலிங்கத்திற்கு கொம்புத்தேனால் அபிஷேகம் செய்ய வேண்டும்;
சிவலிங்கத்திற்கு மேல் பூச்சு அரைத்த பச்சைக் கற்பூரம் சார்த்த வேண்டும்; வில்வத்தால் அர்ச்சனை செய்ய வேண்டும்; நைவேத்தியமாக எள் சாதம் படையல் இடவேண்டும்;

சாம வேதம் பாடவேண்டும்; சாமவேதம் தெரியாவிட்டால், சிவயசிவ என்று நள்ளிரவு 12 முதல் பின்னிர்வு 3 மணி வரை ஜபிக்க வேண்டும்;

போகின்ற உயிரை நிறுத்தவும், விரும்பிய துவாரத்தின் வழியாக உயிரைச் செலுத்தவும் வல்லது இந்த சிவயசிவ என்ற மந்திரமாகும்;

இதில் இரவு 10.54 முதல் நள்ளிரவு 12.24 மணி வரையிலான நேரத்திற்கு லிங்கோத்பவ நேரம் என்று பெயர்;இந்த நேரத்தில் யார் “சிவயசிவ; சிவயசிவ” என்று ஓதுகிறார்களோ, அவர்களுடைய ஆவி பிரிகின்ற போது அளவற்ற சிவகடாட்சம் உண்டாகும்;

************************

நான்காம் ஜாம(கால) பூஜை(பின்னிரவு 3.01 முதல் மறுநாள் காலை 6 மணி வரை)

கரும்புச்சாறு கலந்த அபிஷேகம் சிவலிங்கத்திற்குச் செய்ய வேண்டும்; மேல் பூச்சு அரைத்த குங்குமப்பூ பூச வேண்டும்; வில்வத்தாலும், நீலோற்பவ மலர்களாலும் சிவலிங்கத்திற்கு அர்ச்சனை செய்ய வேண்டும்; இன்று நைவேத்தியமாக சுத்தமான அன்னம் படையல் இடவேண்டும்; பச்சரிசி சாதம் வடித்து, அதில் குறைந்தது இரண்டு கரண்டி பசுநெய் விடவேண்டும்; இதுவே சுத்த அன்னம் இடவேண்டும்;

அதர்வண வேதம் பாடவேண்டும்; அதர்வண வேதத்தை எட்டு வருடங்கள் குரு அருகில் இருந்தே ஜபித்துப் பழகவேண்டும்; குரு அருகில் இல்லாமல் இந்த அதர்வண வேதத்தின் ரகசிய மந்திரத்தை ஜபித்தால்,உடனே உயிர் உடலைவிட்டுப் பிரிந்துவிடும்;

அதர்வண வேதம் தெரியாவிட்டால்,பின்வரும் திருமூலரின் திருமந்திரப் பாடலைப் பாடினால் போதுமானது;

சிவசிவ என் கிலர் தீவினை யாளர்
சிவசிவ என்றிட தீவினை மாளும்
சிவசிவ என்றிட தேவரும் ஆவர்
சிவசிவ என்றிட சிவகதி தானே!

இதையும் பாட இயலாதவர்கள் சிவசிவ என்று ஜபித்தாலே போதுமானது; பின்னிரவு 3 மணி முதல் விடிகாலை 6 மணி வரை இப்படி ஜபிக்க வேண்டும்;

இவ்வாறு நான்கு ஜாம(கால) பூஜைகளையும், சிவராத்திரி விரதங்களை யாரொருவர் 24 ஆண்டுகள் தொடர்ந்து செய்கின்றார்களோ, அவர்கள் இறுதியாக வேதியர்களுக்கு ஸ்வர்ண தானம், பூ தானம், கோதானங்களை அன்புடன் செய்ய வேண்டும்; அனைவருக்கும் அன்னதானம் போன்ற தான தருமங்களைச் செய்ய வேண்டும். அதுவும் சிவ தலங்களில் அன்னதானம் செய்ய வேண்டும்; இப்படிச் செய்து முடிப்பவர்கள் முக்தி அடைவார்; அவர்களின் பரம்பரையும் குருவோடு சொர்க்கத்தை அடைவார்கள்;

சிவராத்திரியின் மகிமையை சுக்ரதேசாத்திரியில் சாஸ்திரம் கூறுகின்றது; இதன் படி, மகாசிவ ஆகமங்களும்,சிவபுராணங்களும் விவரிக்கின்றன;சிவராத்திரி மகிமைகளைக் கேட்டவர் சிவனாய் ஆவார்;சொன்னவர் சிவன் நாமத்தில் என்றும் திளைப்பார்;கேட்டு மகிழ்கின்றவரும் சிவனாய் ஆவார்;
இதனைச் செய்கின்றவர்களுக்கு சிவலோகப் பிராப்தம் உண்டு;

முந்தைய பதிவுகளுக்கு:


சிவராத்திரி விரதம் - செய்ய வேண்டியது - http://tut-temple.blogspot.in/2018/02/blog-post_12.html

மகா சிவராத்திரி அழைப்பிதழ்  - http://tut-temple.blogspot.in/2018/02/blog-post_87.html


25 February 2019

பகரு ஞானி பகல் ஊண் பலத்துக்கு - மகேசுவர பூசை

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

நம் தளத்தின் மாத துவக்கம் அன்னசேவை போன்ற பதிவுகளால் தான் ஆரம்பம் ஆகும். யாராவது கவனித்தீர்களா? என்று தெரியவில்லை. கடந்த இரண்டு மாதங்களாக வேறு சில பதிவுகள் தரப்பட்டிருக்கும். இவை நாம் தீர்மானம் செய்யவில்லை. குருவருளால் தான் இவை தீர்மானம் செய்யப்படுகின்றன.கடந்த டிசம்பர் மாத பதிவாக அகத்தியர் ஜெயந்தி பற்றி அளிக்க நேரிட்டது. ஜனவரி மாதத்தை வாழ்த்து பதிவாக அளித்தோம். இனிமேல் மகேசுவர பூசை பதிவு வழக்கம் போல் தொடரும்.



சாதுக்களை அமர வைத்து, வாழை இலை போட்டு உணவு பதார்த்தங்கள் பரிமாறி, அவர்களுக்கு சந்தனம் இட்டு, தலையில் பூக்கள் சூடி, கையில் வாழைப்பழம்,வெற்றிலை,பாக்கோடு தட்சினை கொடுத்து, அவர்களின் கால் தொட்டு வணங்கி விட்டோம். அடுத்து இதோ சரவன்பவா சுவாமிகள் ஒவ்வொரு அடியாரையும் சிவனாக்கி தீபம் காட்டி வருகின்றார்.





அடுத்து சாதுக்கள் உண்ண ஆரம்பித்து விட்டார்கள். என்னப்பா சிவனடியார், சாதுக்கள் என்று நாம் புளகாங்கிதம் கொள்வதாக நினையாதீர். சிவனடியார் ஒவ்வொருவரும் நம் ஊழ்வினை கழிக்க வந்தவர்கள். அடியார் வேறு.சிவன் வேறு அல்லர். நம் தேகமே கர்ம வினைகளின் தொகுப்பு, வினைப்பதிவு தான் நமக்கு தேகத்தை தருகின்றது, இந்த சதைப் பிண்டத்தில் எத்துணை ஜென்ம கர்ம வாசனைகள்.


இவை அனைத்தும் ஒரு நொடியில் போய் விடுமா என்ன? கொஞ்சம் கொஞ்சமாக இது போன்ற தர்ம காரியங்களை செய்து செய்து, மனதை அறிந்து இனி எண்ணத்தால் கூட தீங்கிழைக்க மாட்டேன் என்ற நிலை வர வேண்டும்.



பார்க்க பரதேசி போன்று நீங்கள் சாதுக்களை எண்ணலாம். அந்த பரத்தை அல்லவா இவர்கள் தேடுகிறார்கள். பட்டினத்தாரை எடுத்துக் கொள்ளுங்கள். எத்துணையோ பொன்னை,பொருளை உதறி விட்டு அல்லவா ஒரே ஒரு துணி உடுத்தி வீட்டை விட்டு வெளியே வந்தார். அப்போது கணக்குப்பிள்ளை நம்மிடம் உள்ள பொன்னையும்,பொருளையும் என்ன செய்வது என்று கேட்டதற்கு போய் ..குப்பையில் தூக்கிப் போடு என்றார். அதே போல் இங்கே எத்துனை சாதுக்கள் தம் வீட்டை விட்டு,பொருள் பற்றை விட்டு வந்திருக்கின்றார்களோ?

அதனால் தான் மீண்டும் மீண்டும் சொல்கின்றோம். சாதுக்களை கண்டால் மனத்தளவிலாவது வணங்குங்கள். அருகே சென்று அவர்களுக்கு என்ன தேவை என்று கேட்டு வாங்கிக்கொடுங்கள். குறைந்த பட்சம் நூறு  ரூபாய் செலவழிப்பதில் தவறொன்றும் இல்லை. கை, கால் நன்றாகத் தானே உள்ளது.ஏன் இப்படி என்று நினைக்காதீர்கள். இதோ.திருமந்திரம் சொல்கின்றது.


அகரம் ஆயிரம் அந்தணர்க்கு ஈயில் என்
சிகரம் ஆயிரம் செய்து முடிக்கில் என்
பகரு ஞானி பகல் ஊண் பலத்துக்கு
நிகரிலை என்பது நிச்சயம் தானே

அந்தணர்க்கு ஆயிரமாயிரம் (கிராமங்கள்) செய்தாலும், ஆயிரமாயிரம் கோட்டை, கோயில்கள் கட்டி முடித்தாலும், ஞானிக்கு அளிக்கப்படும் ஊண் பலம் என்று சொல்லப்படும் அன்னதான தர்மத்திற்கு ஈடாக எந்த செய்கையும் நிச்சயமாக நிகரில்லை என்று அழுத்தம் திருத்தமாக கூறுகிறார் திருமூலர்.


அன்று மகேசுவர பூசை முடித்த பின்னர் மேலும் சிலர் வந்தார்கள்.அவர்களுக்கும் உணவு வழங்கப்பட்டது.


பின்னர் சுவாமிகளிடம் சொல்லிவிட்டு, கிரிவலம் தொடங்கினோம்.






ஒவ்வொருமுறை கிரிவலம் வரும் போது இங்கே நம் மனம் செல்லாமல் இருக்காது. புதிது புதிதாக கிரிவலப்பாதையில் கோயில்கள் முளைக்கின்றன. ஆனால் நம் நால்வர் பதித்த மண்ணில் உள்ள கோயில்களை கண்டும் காணாததும் போல் நாம் இருக்கின்றோம்.





வாயலிங்கம் தரிசனம் முடித்து கிரிவலம் தொடர்ந்தோம்.







அடுத்து குபேர லிங்கம்.




இதோ இடுக்கு பிள்ளையார் தரிசனம்.


அடுத்து பஞ்சமுக தரிசனம்.




                                                   ஈசான்ய லிங்கம் தரிசனம் பெற்றோம்.




அடுத்து மனம் அண்ணாமலையானே..அண்ணாமலையானே என்று குதூகலித்தது.



இதோ நெருங்கி விட்டோம்.




இதற்குத் தானே ஆசைப்பட்டோம் எம் சிவமே..என்று தொழுதோம்.






அடுத்து இந்திர லிங்கம்.


அடுத்து அக்னி லிங்கம்.




                                                              எம லிங்கத்தை நோக்கி.




                                      அடுத்து நிருதி லிங்கம் அடைந்து விட்டோம்.







நம் TUT தல அன்பு பரிசை தயவு ஆசிரமத்தில் கொடுத்தோம்.



அன்றைய தினம் சனி பிரதோஷம் என்பதால் நந்தி தரிசனம் பெற்றோம். மகேசுவர பூசையோடு கிரிவலம், பிரதோஷ தரிசனம் என்று சிவனருள் முழுதும் உணர்ந்தோம். ஆனால் நாம் இந்த மகேசுவர பூசை மட்டும் செய்ய நினைத்தோம். நம்மை நம் குருமார்கள் பிரதோஷ தரிசனமும், கிரிவலமும் செய்ய பணித்தார்கள் என்பதே உண்மை. இந்த ஆண்டு மீண்டும் ஒரு முறை நம் தளம் சார்பில் மகேசுவர பூசையுடன் , வஸ்திர தானம் செய்ய உள்ளோம். குருவிடம் விண்ணப்பம் வைக்கின்றோம்.

மீண்டும் ஒரு முறை 

பகரு ஞானி பகல் ஊண் பலத்துக்கு
நிகரிலை என்பது நிச்சயம் தானே

மேலும் விபரங்களுக்கு:

ஸ்ரீ சரவணபவா சுவாமிகள்,
ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமம், கிரிவல பாதையில் உள்ள பழனி ஆண்டவர் கோவில் அருகில், திருவண்ணாமலை, செல்: (0)9944800220 (இந்த எண்ணில் தொடர்பு கொண்டு மகேஸ்வர பூஜை செய்ய பதிவு செய்து கொள்ளலாம்)


மீள்பதிவாக:-


அன்பே அகத்தியம் - மகேஸ்வர பூசை பதிவு - https://tut-temple.blogspot.com/2018/11/blog-post.html


உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே - http://tut-temple.blogspot.com/2018/10/blog-post_61.html

தேடிப்போய் தர்மம் செய்; நாடி வருவருக்கு உதவி செய் - http://tut-temple.blogspot.com/2018/06/blog-post.html

பல கோடி நன்மைகள் வழங்கும் அன்னதானம் & மகேஸ்வர பூசை - ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமம் - http://tut-temple.blogspot.com/2018/05/blog-post_8.html

அன்னதானம் கொடுப்பது அனைத்தையுமே கொடுப்பதாம் - http://tut-temple.blogspot.in/2018/03/blog-post.html

ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமத்தில் அன்னம் பாலிக்கும் தில்லை சிற்றம்பலம் - ம(மா)கேஸ்வர பூசை - http://tut-temple.blogspot.in/2018/01/blog-post_24.html

ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமம் அருட் தொண்டுகள் - மகேஸ்வர பூசை & அன்னதான சேவை - http://tut-temple.blogspot.in/2018/04/blog-post_18.html