Subscribe

BREAKING NEWS

30 September 2019

வல்லக்கோட்டை முருகன் கோவில் தரிசனம்...

ராஜ்குமார் அன்ணா அவர்கள் முருகன் அடியார் ஒருவரை கௌரவித்தபோது. உடன் ஆதி ஐயா 
சிங்கபெருமாள் கோவிலில் இருந்து வரும்போது வழிகாட்டிப்  பலகை 
சிங்கபெருமாள் கோவிலில் இருந்து சுமார் பதினைந்து கிலோமீட்டர் தொலைவிலும், ஸ்ரீபெரும்புதூரில் இருந்து 9 கி.மீ. தொலைவில் இருக்கும் வல்லக்கோட்டை என்ற ஊரில் வல்லக்கோட்டை முருகன் கோவில் அமைந்து இருக்கிறது. இது 1200 ஆண்டு காலம் பழமை வாய்ந்தது. தமிழகத்திலேயே இக்கோவிலில்தான்  7 அடி முருகன் சிலை அமையப்பெற்றுள்ளது. இச்சிலைதான் மிகப்பெரிய முருகன் சிலை ஆகும்.

வல்லக்கோட்டை முருகன் ஆலய தீர்த்தக்குளம் 





முருகப்பெருமானின் துணைவியரான வள்ளி மற்றும் தெய்வானையின் சிலைகள் இருபுறமும் இருக்கின்றன. துர்வாச முனிவரின் ஆலோசனையின்படி தன் ராஜ்ஜியத்தை திரும்பப் பெறுவதற்காக பகரீதன் இந்த கோவிலை கட்டியதாக புராணம் கூறுகிறது. வல்லான் என்கிற அரக்கன் தேவர்களை சித்திரவதை செய்ததாகவும், முருகப்பெருமான் அவனை வீழ்த்தி இவ்விடத்தில் அமைதியை நிலைநாட்டியதாகவும், அவரை பெருமைபடுத்தும்படி இந்த கோவில் கட்டப்பட்டதாகவும் மற்றும் ஒரு புராணச் செய்தியும் கூறப்படுகிறது.




வல்லக்கோட்டை முருகன் கோவில் முகப்புத் தோற்றம் 

வல்லக்கோட்டை முருகன் கோவில் முகப்புத்  தோற்றம் 

வல்லக்கோட்டை முருகன் கோவில் முகப்புத் தோற்றம் 

வல்லக்கோட்டை முருகன் கோவில் அன்னதானக்கூடம் 

K.K.V.K  டிரஸ்ட் இயங்கிவரும் அன்னதானக்கூடத்தில் நமது நண்பர்கள் காலை உணவருந்தும் காட்சிகள். 
வல்லக்கோட்டை முருகன் கோவில் அன்னதானக்கூடத்தின் வரவேற்பறை 



வல்லக்கோட்டை முருகன் கோவில் அன்னதானக்கூடத்தின் வரவேற்பறை 

வல்லக்கோட்டை முருகன் கோவில் அன்னதானக்கூடத்தின் வரவேற்பறை 

நம் குழுவினர்  அன்னதானம் வழங்கியபோது 

நம் குழுவினர்  அன்னதானம் வழங்கியபோது 

நம் குழுவினர்  அன்னதானம் வழங்கியபோது 
இக்கோவிலில் நமக்காக சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்து சிறப்பு தரிசனத்திற்கு ஏற்பாடு செய்வதாக  நமது ஐயா திரு ஆதி ,அவர்கள் நம்மிடம் தெரிவித்தார்கள். மன மகிழ்ச்சியுடன் ஒப்புதல் தெரிவித்து  நமது குழுவினருடன் ஆலோசித்து ஒரு ஞாயிற்றுக்  கிழமையில் நம் குழுவினர்  அனைவரும் பூஜையில் கலந்துகொள்வதாக ஒப்புக் கொண்டோம்.

பூஜைக்காக நாம் கட்டணமாக செலுத்தியது மிகச்  சொற்பமே....அக்கட்டணத்தைக்கூட  நமது குழுவின் நண்பர் திரு,ஹேமந்த் ஐயா அவர்கள் ஏற்றுக்கொண்டார்கள் .அவர்களுக்கு நமது குழுவின் சார்பாக நன்றிகளை தெரிவிக்கின்றோம் .
ஏற்பாடுகள் அனைத்தும் மெய்சிலிர்க்க வைத்தது. முருகனின் திருப்பாதத்தில் நம் குழுவினரே முதலில் அமர்ந்து முருகன் போற்றி பாடல்கள் பாடி அசத்தினார்கள்.  அனைத்திற்கும் எம்பெருமான் முருகனின் அருளால் திரு ஆதி ஐயா அவர்களே காரணம் என்றே சொல்லவேண்டும்.

பூஜைக்குப் பிறகு நமது குழுவினருக்கு உபயதாரர் மரியாதை வழங்கினார்கள். பின்பு முருகனுக்கு அபிஷேகம் செய்த பால்,  பஞ்சாமிருதம், வெண்பொங்கல் பிரசாதமாக வழங்கினார்கள்.

வல்லக்கோட்டை கோவிலுக்கு வரும் பக்தர்கள் உணவுக்காக கவலைப்படத்தேவையில்லை. காலை மற்றும் மதியம் இங்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. எத்தனை முறை வேண்டுமோ  கேட்டு வாங்கலாம். இந்த ஏற்பாட்டினை மிகச் சிறப்பாக செய்துவரும் வல்லக்கோட்டை பழனி பாதயாத்திரை குழு,  தாம்பரம்  நண்பர்களுக்கு நமது சிரம் தாழ்ந்த வணக்கங்கள் .

வல்லக்கோட்டைக்கு வர விரும்புவோர்,அல்லது  அன்னதானம் செய்ய விரும்புவோர் K.K.V.K  டிரஸ்ட்டினை தொடர்புகொள்ளலாம். 



அல்லது இந்த இணையத்தில் உள்ள செல்லிடை பேசியிலும் தொடர்புகொள்ளலாம்.
நன்றி.

29 September 2019

முன்னோர்களின் பசிதீர்க்கும் திருவிழா!!!

முன்னோர்களின் பசிதீர்க்கும் திருவிழா நேற்றுடன்  முடிவடைந்தது  ,கடந்த 14/09/2019 முதல் இன்று 28/09/2019.வரை  நாம் நம் குழுவின் சார்பாக தொடர்ந்து அன்னதானங்கள் செய்துவந்தோம். என்பது அனைவருக்கும் தெரிந்திருக்கும்.ஒவ்வொரு நாளும் ஒருவர் அன்னதானத்திற்காக  பொருப்பேற்றுகொண்டார்கள்.நமது தமிழ்நாடு ஆன்மீக யாத்திக்குழு என்பது வெறும் யாத்திரைக்கானது மட்டுமல்ல நம்மால் முடிந்த பற்பல நற்காரியங்கள் செய்துவருகிறோம்.மேலும் செய்ய எத்தனிக்கின்றோம் .

இந்த மஹாளயபட்ச தினங்களாகிய பதினைந்து நாட்களிலும் பித்ரு தேவதைகள் எம தர்மனிடம் விடைபெற்றுக்கொண்டு தங்கள்  குடும்பத்தினருடன் தங்கி விடுவர் என்பர்.எனவேதான் இந்த நாட்களில் அவர்கள் பசியாற அன்னமாகவோ அல்லது எள்ளும் தண்ணீருமாகவோ தர்ப்பணம் அளிக்க வேண்டும் என்கிறார்கள். அவர்களும் அதன் மூலம் திருப்தியடைந்து, நமக்கு அருளாசி வழங்குகின்றனர். நோயற்ற வாழ்வினை வழங்குகிறார்கள். தாய், தந்தையர் இறந்த தினத்தில் சிரார்த்தம் செய்யாதவர்கூட, மறக்காமல் மஹாளயத்தை அவசியம் செய்ய வேண்டும்.

மஹாளய தினத்தில் நம் முன்னோர்களுக்கு பிடித்தமான சைவ உணவுகளை ஆக்கிப்படைத்து அவர்களை மகிழ்வித்து அவர்களின் ஆசிகளைப் பெறுவதாக அமைகின்றது. படைத்த உணவின் சிறு பகுதியை மிருகங்களுக்கும், பறவைகளுக்கும் உணவாக கொடுப்பதும், மிகுதியை, உற்றார், உறவினர்களுடன் பகிர்ந்து உண்பதும் மஹாளய அமாவாசையின் சிறப்பாகும். இந்த நாளில் நம் முன்னோர்களுக்கு கொடுக்கும் தர்ப்பணம் மூலம் நமது மூன்று தலைமுறைக்கும் ஆசியை பெற்றுத்தரும்.

நாம் செய்த பித்ரு கடன்களில் சிறு துளிகள் :-

அதிகாலையில் சுமார் 5.00 மணிக்கு  மறைமலை நகரிலிந்து சிங்கபெருமாள் கோவில் நோக்கி சென்றோம். அதிகாலைமுதலே சற்று கூட்டம் அதிகமாகவே இருந்தது.வரிசையில் நிற்கும்போது சுமார் 50 பேர் நமக்கு முன்னர் வரிசையில் நின்றிருந்தனர்.


சிங்கபெருமாள் கோவில் குளத்தில் பித்ருகடன் செய்ய நீண்ட வரிசையில் மக்கள் 

பித்ருகடன் செய்ய கூடியிருந்த மக்கள் அதிகாலை 5.00 மணி.


பின்பு நமது வாய்ப்பு வந்தவுடன் நமது முன்னோர்களின் பெயர்கள் உட்பட நமக்கு தெரிந்தவரையில் அனைவரின் பெயர்களை  சொல்லிமுடித்தவுடன்  சிரார்த்த கடன் செய்துவிட்ட திருப்தில், அங்கிருந்து புறப்பட்டோம். வழியில் கன்றுடன் கூடிய பசுவிற்கு அகத்திகீரை அளித்தோம்.


கன்றுடன் கூடிய பசுவிற்கு அகத்திகீரை கொடுக்கும்போது 


நேராக வீட்டிற்கு வந்தவுடன் வீட்டில் அனைத்து ஏற்பாடுகளும் தயார்நிலையில் இருக்க பூஜைக்கு தயாரானோம்.முன்னோர்கலின் பெயர்களை மனதில் நினைத்து ஆத்மார்த்தமாக பிராரத்தனை செய்யப்பட்டது.

நமது குழுவின் சார்பாக வழங்கப்பட்ட அன்னதான நிகழ்வின் துளிகள் :-









மஹாலய பட்சம் ஆரம்பித்த நாள் முதல் 28/09/2019 வரையில் நமது குழுனர் ஒவ்வொரு நாளும் ஒருவர்  அன்னதானம் பொருப்பேற்றுகொண்டார்கள். அவர்கள் இல்லாமல் இந்த மஹாலய பட்சம் எனும் முன்னோர்களின் பசிதீர்க்கும் திருவிழா  இவ்வளவு சிறப்பாக நடந்திருக்குமா என்பது கேள்விக்குறிதான் ...பங்கேற்ற அனைத்து நண்பர்கள்,குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் நமது நெஞ்சார்ந்த நன்றிகளை இத்தருனத்தில் தெரிவித்துகொள்கிறோம். நன்றி ..நன்றி . 

15 September 2019

மகாளய பட்சம் 2019 எளிய முறையில் தர்ப்பணம்!!

மாவாசை முதலான முக்கிய நாட்களில் நமது முன்னோர்கள், பூமிக்கு வந்து தங்களின் சந்ததியினர் அளிக்கும் உபசாரங்களை ஏற்று, ஆசீர்வதிப்பார்கள் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. இந்த நாட்களில் சிரத்தையோடு அவர்களை வழிபட்டால், தீர்க்க ஆயுள், புகழ், செல்வம், உடல் ஆரோக்கியம், இன்பம் போன்ற அனைத்தும் கிடைக்கும் என்பது ஐதீகம். 
Image result for எளிய முறை தர்ப்பணம்


அறிவியல் ரீதியாக பூமி மற்றும் கிரகங்கள் சூரியனை சுற்றி வருகின்றன.
பூமி, சூரியனின் வட கிழக்கில் பங்குனி மாதமும், தென்மேற்கில் புரட்டாசி மாதமும் வருகிறது. இந்த வேளையில் இறைவழிபாடுகள் போற்றப்படுகின்றன. மாதந்தோறும் வரும் அமாவாசை அன்று காலமான மூதாதையர்களுக்குத் திதி கொடுத்தால் யாரை நினைத்துத் திதி கொடுக்கிறோமோ அவர்கள் மட்டும் வந்து திதியை பெற்றுக் கொள்வர். ஆனால், மகாளய அமாவாசை அன்று திதி கொடுத்தால் நம் மூதாதையர்கள் அனைவரும் ஒன்றாக வந்து திதியைப் பெற்றுக் கொண்டு வாழ்த்துவதாக ஐதீகம். இதனால் அன்றைய தினம் பித்ருக்களுக்கு திதி கொடுப்பது சிறப்பாகப் போற்றப்படுகிறது. பித்ருக்கள் இறந்த திதி தெரியாதவர்கள் கூட அன்று தர்ப்பணம் செய்யலாம். அன்று ஒரு வேளை உணவு உண்டு விரதம் கடைபிடிப்பது சிறப்பாகும்.

பட்சம் என்பது 15 நாட்கள் கொண்ட கால அளவை குறிப்பதாகும். மகாளய பட்சம் என்பது ஆவணி மாதம் பெளர்ணமிக்கு பின்னர் வரும் 15 நாட்களை குறிப்பதாகும்.

இன்றைய தினம் (14.09.2019) மகாளய பட்சம் ஆரம்பமாகிறது. இதனைத் தொடர்ந்து வரும் அமாவாசை மகாளய அமாவாசை எனப்படும். இந்தக் காலத்தில் முன்னோரை ஆராதிக்க வேண்டும். அவர்கள் நினைவாக தானம் அளிப்பது சிறந்த பலனைத் தரும்.

மகாளய பட்சம் இன்று 14 செப்டம்பர் 2019 முதல் 28 செப்டம்பர் 2019 வரை நடக்க உள்ளது. மகாளய பட்சம் காலத்தில் முன்னோர்களை வழிபடுவதன் மூலம் பல பலன்களை பெற முடியும். மகாளய பட்சம் 15 நாட்கள் செய்ய வேண்டியது, செய்யக் கூடாததைத் தெரிந்து கொள்வது அவசியம். இந்த பதினைந்து நாட்களும் முன்னோர்களின் நினைவாக சுபநிகழ்வுகளைத் தவிர்த்து அவர்களுக்குரிய சிரார்த்தம், தர்ப்பணம் ஆகியவற்றை செய்வதால் அவர்களது ஆன்மாக்கள் சாந்தி பெறும்.

நமது மூதாதையர்களான பித்ருக்கள் அவர்கள் நினைக்கிற போதெல்லாம் பூலோகத்திற்கு வர இயலாது. பித்ருக்கள் பக்ஷமான ஆடி மாதத்தில் பித்ருக்கள் தங்களின் சந்ததிகளை ஆசீர்வதிக்க பூலோகத்திற்கு வருவதாகவும் பின் உத்திராயண புண்ய காலத்தில் தை அமாவாசையில் பித்ரு லோகம் செல்வதாகவும் புராணங்கள் தெரிவிக்கின்றன. எனவே அமாவாசை, மாதப்பிறப்பு, இறந்த அவர்கள் திதி மற்றும் மகாளயபட்ச தினங்களில் தான் அவர்கள் பூலோகத்திற்கு வர அனுமதிக்கப்படுகிறார்கள்.

மகாளய பட்சத்து அமாவாசை அன்று பிரபஞ்சத்தின் அண்டவெளியில் மிக அபரிதமான பித்ருக்களின் ஆசி இருக்கிறது. நாம் அளிக்கும் நீரையும், எள்ளையும் தேடிக் கோடானுகோடி பித்ருக்கள் பூமிக்கு வருவார்கள். இதனால், வாழும் காலத்தில் எண்ணற்ற துன்பங்களுக்கு ஆளான இவர்கள் ஆன்மா சாந்தியடைய அனைவரும் தர்ப்பணம் செய்ய வேண்டும்.
மகாளய அமாவாசை நாளில் தங்கம், வெள்ளி, தாமிரம், இரும்பு, கோ தானம், தானியங்கள், எள், எள் எண்ணெய், வெல்லம், பணம், வஸ்திரம், போர்வை, சால்வை, விளக்கு, கைத்தடி, குடை, விசிறி, செருப்பு ஆகியவற்றில் எது முடியுமோ அதனைத் தானம் அளிக்கலாம்.  தானம் பெறுபவர்களுக்குத் தாம்பூலமும், தட்சிணையும் கண்டிப்பாகத் தருதல் வேண்டும். தானம் பெறுபவர்களை மரியாதையாக நடத்துதல் மிகவும் முக்கியம்.

அதேபோல், வாய்ப்புள்ளவர்கள் இந்தியாவின் கயா, தனுஷ்கோடி போன்ற பிதுர் காரியத்துக்காகவே பிரசித்தி பெற்ற தலங்களில் அல்லது கடல், ஆறு, ஏரி, குளம் போன்ற நீர் நிலைகளிலுக்கருகில் உள்ள கரைகளில் திதியும், தானமும் தருவது சிறப்பு.

மகாளய பட்சத்தின் ஒவ்வொரு திதியிலும் தர்ப்பணம் கொடுப்பதால் பல்வேறு பலன்கள் நம்மைச் சேர்கின்றன. 
Image result for எளிய முறை தர்ப்பணம்
1ம் நாள் – 14.09.2019 - பிரதமை - செல்வம் சேரும் 
2ம் நாள் – 15.09.2019 - துவிதியை - பெயர் சொல்லும் குழந்தைகளைப் பெறலாம். 
3ம் நாள் – 16.09.2019 - திரிதியை - நினைத்த காரியங்கள் நிறைவேறும் 
4ம் நாள் – 17.09.2019 - சதுர்த்தி - பகையிலிருந்து எளிதில் விடுபடலாம். 
5ம் நாள் – 18.09.2019 - பஞ்சமி - அசையா சொத்துக்கள் மற்றும் செல்வம் பெருகும். 
6ம் நாள் – 19.09.2019 - சஷ்டி - பேரும், புகழும் தேடி வரும். 
7ம்நாள் – 20.09.2019 - சப்தமி - தகுதியான மற்றும் சிறந்த பதவிகள் கிடைக்கும்.
8ம் நாள் – 21.09.2019 - அஷ்டமி -அறிவு கூர்மை பெறும். 
9ம் நாள் – 22.09.2019 - நவமி - நல்ல வாழ்க்கைத்துணை மற்றும் நல்ல குடும்ப சூழல் அமையும். 
10ம் நாள் – 23.09.2019 -  தசமி - நீண்ட நாள் ஆசை உடனடியாக நிறைவேறும். 
11ம் நாள் – 24.09.2019  - ஏகாதசி - கல்வி, விளையாட்டு, கலைகளில் அசுர வளர்ச்சி கிடைக்கும். 
12ம் நாள் – 25.09.2019 -  துவாதசி - ஆபரணங்கள் சேரும். 
13ம் நாள் – 26.09.2019 - திரயோதசி - விவசாயம் மற்றும் தொழில் செழிக்கும். தீர்க்காயுள் கிடைக்கும். 
14ம் நாள் –  27.09.2019 - சதுர்த்தசி - பாவம் கழியும். வாரிசுகளுக்கும் நன்மையே நடக்கும். 
15ம் நாள் – 28.09.2019 - மகாளய அமாவாசை - அத்தனை பலன்களும் நமக்குக் கிடைக்க, நமது முன்னோர்களின் பரிபூரண ஆசி கிடைக்கும். 

இவ்வாறான சிறப்புக்களால்தான், தை அமாவாசை, ஆடி அமாவாசையைக் காட்டிலும் மகாளய அமாவாசை அதிக முக்கியத்துவம் பெறுகிறது. அனைத்து முன்னோர்களுக்கு மட்டுமல்லாமல், நண்பர்களுக்கும், முகம் தெரியாதவர்களுக்கும் கூட அன்று தர்ப்பணம் செய்யலாம் என்பது மகாளயத்தின் சிறப்பு.

தவற விடக்கூடாத திதிகள்
மகாளய பட்சத்தில் பரணி நட்சத்திரம் தோன்றும் நாள் மகா பரணி என்றழைக்கப்படுகிறது .இந்த பரணி நட்சத்திரம் யம தர்மராஜன் ஆட்சி செய்யும் நட்சத்திரம்.எனவே இந்த நட்சத்திரம் மிகவும் சிறப்பு வாய்ந்த நட்சத்திரமாக கருதப்படுகிறது.

புரட்டாசி 1 (18.09.2019) செவ்வாய்   - மகாபரணி  - அனைவருக்கும் பொதுவானது

புரட்டாசி 05 (22.09.2019) ஞாயிறு  - மகாவியதீபாதம்  - அனைவருக்கும் பொதுவானது

புரட்டாசி 05 (22.09.2019) ஞாயிறு  - மத்யாஷ்டமி  - அனைவருக்கும் பொதுவானது

புரட்டாசி 06 (23.09.2019) திங்கள்  - அவிதவாநவமி  - அனைவருக்கும் பொதுவானது

புரட்டாசி 09 (26.09.2019) வியாழன் -  சன்னியஸ்தமாளயம்  - சன்னியாசிகளுக்கு

புரட்டாசி 10 (27.09.2019)  வெள்ளி - சதுர்த்தசி  - கஜச்சட்சமயமாளயம்  - விதவைகள் அனுஷ்டிப்பதற்கு

இறந்துபோன நம் பெற்றோர்கள் மட்டுமல்லாது, பெரியப்பா, பெரியம்மா, சித்தப்பா, சித்தி, மாமன், மாமி, சகோதரன், சகோதரி, ஆசிரியர், சிஷ்யன், நம்மீது அக்கறை கொண்டு உதவியவர்கள், நண்பர்கள், ஆசிரியர்கள், குருமார்கள், நாம் அறிந்தவர்களில் இறந்துபோன எல்லோரையும் திரும்ப நினைவிற்குக்கொண்டுவந்து அவர்களுக்கும் எள்ளுடன் கலந்த தண்ணீரை வார்த்து தர்ப்பணம் செய்ய வேண்டும். அவ்வாறு செய்வது அனைத்து ஆன்மாக்களையும் மகிழ்ச்சி அடையச் செய்கிறது. எனவே அத்தனை பித்ருக்களும் ஆசி வழங்குவது இந்த மகாளய பட்ச விரத நாட்களில் தான்.

எனவே, மகாளய பட்சம் என்னும் அரிய சந்தர்ப்பத்தை நழுவ விடாமல் இருந்தால் லாபம் நமக்கு மட்டுமல்ல! நம் தலைமுறைக்கும் சேர்த்து தான். ஒட்டுமொத்த முன்னோரையும் அப்போது நினைவு கூர வேண்டும். தீர்த்தக்கரைகளுக்கு சென்று புனித நீராடி, நம் முன்னோர் ஆத்மசாந்திக்காக பிரார்த்தித்து வர வேண்டும்.  அந்தணர்களுக்கு ஆடைகள், ஏழைகளுக்கு உணவு, படிக்க சிரமப்படும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை என தானமளிக்க வேண்டும்.

இந்த காலங்களில் இராமேஸ்வரம், திருவெண்காடு, கோடியக்கரை, வேதாரண்யம், திருப்பூவனம் காசி, கயா, பத்ரிநாத், திருக்கயிலை, மானஷரோவர், சென்னை மத்திய கைலாசம், திருக்கழுக்குன்றம். திருக்கோவரணம் போன்ற இடங்களிலும் பவானி கூடுதுரை, திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம், தென்காசி அருகில் உள்ள பாபநாசம் சிவாலய தீர்த்தக்கரை, கும்பகோணம் அருகில் உள்ள செதலபதி ஆதி விநாயகர் ஆலயம், பூம்புகார் சங்கமுகேஸ்வரர் ஆலயம், உடுமலைதிருமூர்த்திமலை அமண லிங்கேஸ்வரர் ஆலயம், மற்றும் ஆற்றங்கரைகளிலும் தர்ப்பணம் மற்றும் சிரார்தங்கள் செய்வது சிறப்பு.

எளிய முறை தர்ப்பணம்:
தலை வாழை இலையில், கறுப்பு எள், பொரி, கற்கண்டு போன்றவற்றை வைத்து கொள்ள வேண்டும். முன்னோர் சாபம் நீங்க, தமது முன்னோரின் பெயரை, 21 முறை வெள்ளை தாளில் எழுதி, மஞ்சள் தடவி சுருட்டி, நுாலால் கட்டி எடுத்து கொள்ள வேண்டும். இலையில் அனைத்தையும் வைத்து, கையில் பிடித்து, ஆற்றில், கிழக்கு திசையில் சூரியனை நோக்கி நிற்க வேண்டும். தலைக்கு மேல் துாக்கி, ஆகாயத்தை காட்டி பிரார்த்தனை செய்து, பின் நீரில் மூழ்கி, தண்ணீரை மூன்று முறை தலைக்கு பின்னால் தெளித்து, முழுவதுமாய் மூன்று முறை மூழ்கி வெளியில் வர வேண்டும். இந்த எளிய பரிகாரம், எப்பேர்பட்ட முன்னோரின் சாபத்தையும் நீக்கிவிடும்.






09 September 2019

நல்லோர் வாய்ச்சொல் என்றும் பொய்க்காது...



இல்லறவாசி ஒருவர் அருகிலுள்ள ஊருக்குப் புறப்பட்டார்... அவரால் மறுநாள் தான் திரும்பி வரமுடியும்...

எனவே, அவரது மனைவி மதியமும் இரவும் சாப்பிடுவதற்காக அவருக்கு உணவுப் பொட்டலங்களை ஒரு பையில் போட்டுக் கொடுத்தாள்.... காட்டுவழியே தான அவரது பயணம் அமைந்தது....

அவர் நடுக்காட்டை அடைந்தபோது மதியம் ஆகிவிட்டது.... ஒரு மரத்தடியில் அமர்ந்து மதிய உணவை உண்டார்....

உணவுக்குப் பின் பையை எடுத்துத் தோளில் தொங்க விட்டவாறு தனது பயணத்தை தொடர்ந்தார்....

நினைத்ததை விட மிக விரைவில் சேர வேண்டிய இடத்தைச் சென்றடைந்த அவர்... தனது வேலைகளை விரைவில் முடித்துக் கொண்டார்... தனது ஊரை நோக்கிப் புறப்பட்டார்....

விரைவிலேயே புறப்பட்ட காரணத்தால், வீட்டிற்குச் சென்ற பின் இரவு உணவைச் சாப்பிடலாம் எனத் தீர்மானித்தார்....

திரும்பும் வழியில் அவர் ஒரு ஜென் துறைவி அமர்ந்திருப்பதை கண்டார்.... அந்த ஜென் துறவி இவரிடம், ”இன்று நீ உன் வீடு திரும்பினால் உன் மனைவி இறந்து விடுவாள், இன்று திரும்பவில்லை என்றால் நீ இறந்து விடுவாய்” என்று கூறினார்....

இதைக்கோட்ட இல்லறவாசி திடுக்கிட்டார்....

துறவிகளின் வார்த்தைகள் பொய்க்காது என்பதை அறிந்த அவர், தம் மனைவியின் உயிரைக் காக்கும் பொருட்டு அன்று வீடு திரும்புவதில்லை என்று முடிவு செய்தார்....

காட்டில் விலங்குகள் எந்த நிமிடமும் தன் மீது பாய்ந்து தன்னைக் கொன்று தின்னலாம் என்ற எதிர்பார்ப்புடன் அவர் மிக மெதுவாக, கவனமாக எல்லா திசைகளிலும் கூர்ந்து நோக்கியவாறு நடக்க ஆரம்பித்தார்....

சிறிது தூரம் நடந்தபிறகு, ஒரு மரத்தடியில் சில துறவிகள் அமர்ந்திருக்க தலைமைத் துறவி அருளுரை நிகழ்த்துவதைக் கண்டனர்....


இல்லறவாசி ஆர்வத்துடன் அவரது அருளுரையைக் கேட்டார்... உரை நிறைவுற்ற பின்னர், அவர் துறவியை வணங்கினார்...

பின்னர் தான் வழியில் ஒருவரைச் சந்தித்ததை விளக்கமாக கூறி, தன்னைக் காக்குமாறு வேண்டினார்....

புன்னகை புரிந்த குரு “எனக்குப் பசியாக இருக்கிறது. ஏதாவது சாப்பிட இருக்கிறதா?” என்று கேட்டார்....

இல்லறவாசி அளவற்ற மகிழ்ச்சியுடன் பையைத் திறக்க முற்பட்டார்... ஆனால் குரு அந்தப்பையை அப்படியே தன்னிடம் தருமாறு கேட்டார்....

இல்லறவாசியும் பையை அப்படியே குருவிடம் கொடுத்தார்.... குரு மெதுவாக பையைத் திறந்து, அதன் உள்ளே இருந்த சிறிய விஷப்பாம்பை வெளியில் எடுத்தார்....

அதைக்கண்ட இல்லறவாசி திடுக்கிட்டான்.... மதியம் தான் உணவருந்தப் பையைத் திறந்து மரத்தடியில் வைத்திருந்தபோது விஷப்பாம்பு பைக்குள் சென்றிருக்க வேண்டும் என்று இல்லறவாசி புரிந்து கொண்டார்....

அப்போதுதான் துறவி சொன்னதன் பொருள் அவனுக்குப் புரிந்தது....

ஒருவர் மரணத்தை எப்போதும் தன்னுடனேயே எடுத்துச் செல்கிறார்.... சாதுக்கள் ஞானிகள் தொடர்புகள் அவரைக் காப்பாற்றிக் கொண்டிருக்கும்.

மரணத்தை வென்றவர் என்று இதுவரையில் யாரும் இல்லை.. நல்லவர்களோடு தொடர்பில் இருப்போம்...

மனித நேயத்தோடு செயல்படுவோம்...

07 September 2019

உங்கள் வாழ்க்கையில் வெற்றி பெற





ஒரு தத்துவ பேராசிரியர் ஒரு முறை ஒரு பெரிய வெற்று கண்ணாடி குடுவையுடன் தனது வகுப்பிற்கு வந்து நின்றார். அவர் பெரிய பாறைகளால்ஆன கற்களால் குடுவையை நிரப்பி, குடுவை நிரம்பியிருக்கிறதா ? என்றுதனது மாணவர்களிடம் கேட்டார். ஆம், குடுவை உண்மையில் நிரம்பியுள்ளதுஎன்று மாணவர்கள் சொன்னார்கள். பின்னர் அவர் குடுவையில் சிறியகூழாங்கற்களைச் சேர்த்தார், மேலும், கூழாங்கற்கள் கற்களுக்கு இடையிலான இடைவெளிகளை நிரப்பும் வரை குடுவையைக் குலுக்கினார், "குடுவை இப்போது நிரம்பியிருக்கிறதா?" என்று மீண்டும் கேட்டார்  குடுவை இன்னும் நிரம்பியுள்ளது என்று மாணவர்கள் ஒப்புக்கொண்டனர். பேராசிரியர் பின்னர் குடுவையில் சிறிது சிறிதாக மணல் கொண்டு நிரப்பினார். மீதமுள்ள வெற்று இடம் நிரம்பியது. "குடுவை இப்போது நிரம்பியிருக்கிறதா?" என்று மீண்டும் கேட்டார்.  குடுவை நிரம்பி விட்டதாக மாணவர்கள் சிறிது சந்தேகத்துடன் கூறினர். இறுதியாக சிறிது தண்ணீரை குடுவையில் ஊற்றினார். சிறிய காற்று இடைவெளிகள் தண்ணீரால் நிரம்பியது "குடுவை இப்போது நிரம்பியிருக்கிறதா?" என்று பேராசிரியர்  கேட்டார்.  குடுவை முற்றிலும் நிரம்பிதாக அப்போது ஒப்புக்கொண்டனர்.

ஒருவரது வாழ்க்கையில் உள்ள அனைத்தையும் இந்த நிரம்பி கண்ணாடி
குடுவை குறிக்கிறது என்று பேராசிரியர் விளக்கினார். நீங்கள் பார்க்கும் கண்ணாடிகுடுவை உங்கள் நேரத்தைக் குறிக்கிறது. அதற்கு அடுத்தபடியாக, உங்களிடம்சில பெரிய பாறை கற்கள், கூழாங்கற்கள், மணல் மற்றும் தண்ணீர் உள்ளன.


அந்த பாறை கற்கள் ஒவ்வொரு நாளும் நீங்கள் செய்ய வேண்டிய பெரிய,
முக்கியமான விஷயங்களைக் குறிக்கின்றன. உங்கள் கண்ணாடி குடுவையைமுதலில் பாறைகளால் நிரப்ப வேண்டும் என்பது பொதுவான யோசனை. உங்கள்இலக்குகளை அடைய உங்களைத் தூண்டும் மிக முக்கியமான பணிகளைச் சுற்றிஒவ்வொரு நாளும் திட்டமிடுங்கள். இவை உங்கள் மிக உயர்ந்த முன்னுரிமைதிட்டங்கள் மற்றும் காலக்கெடுவை மிகப் பெரிய மதிப்புடன் குறிக்கின்றன
பெரும்பாலும் முக்கியமானவை, ஆனால் உங்கள் இலக்குகளை நோக்கி உங்களை நகர்த்தும் அவசர பணிகள் அல்ல. அடுத்து, கூழாங்கற்களால் பாறை கற்களுக்குஇடையில் உள்ள இடத்தை நிரப்பவும். இவை அவசர மற்றும் முக்கியமான பணிகளைக் குறிக்கின்றன, ஆனால் முக்கியமான குறிக்கோள்களுக்கு குறைவாக பங்களிக்கின்றன மற்றும் உங்களுக்கு
ஒரு அர்த்தமுள்ள வாழ்க்கையை பெறுவதற்கு அவை முக்கியமானவை அல்ல.இந்த பணிகள் பெரும்பாலும் எதிர்பாராதவை, சரியான திட்டமிடல் இல்லாமல்,மற்றும் நிர்வகிக்கப்படாமல் விடப்பட்டால், உங்கள் நாளை விரைவாக விரயம் செய்து விடும். இந்த பணிகளைக் குறைக்க மற்றும் சுருக்கமாக்க முயன்றால் உங்கள் இலக்குகளை நோக்கிச் செயல்பட அதிக நேரம் கொடுக்கும்.

இப்போது உங்கள் குடுவையை நிரப்ப மணல் சேர்க்கவும். வேறு வார்த்தைகளில்
கூறுவதானால், முக்கியமான பணிகளுக்குப் பிறகு அவசர ஆனால் முக்கியமான
பணிகளைத் திட்டமிடுங்கள். இந்த நடவடிக்கைகள் வழக்கமாக உங்கள்
இலக்குகளுக்கு நேரடியாக பங்களிக்காத வழக்கமான அல்லது பராமரிப்பு
பணிகள். சிறிய விஷயங்களாக இருக்கலாம் ஆனால், நீங்கள் அதை
புத்திசாலித்தனமாக கையாள வேண்டும்.

இறுதியாக, உங்கள் குடுவைக்குள் தண்ணீர் ஊற்றவும். இந்த அற்பமான நேரவிரயங்கள் முக்கியமானவை அல்ல, அவசரமானதும் அல்ல.  மேலும் இவை உங்களை உங்கள் இலக்குகளை நோக்கிச் செல்வதிலிருந்து விலக்கி வைக்கின்றன. கடைசியாக, மிக முக்கியமாக கஞ்சத்தனம் பாராட்டத்தக்க, தவிர்க்கக்கூடிய இவற்றை கவனமாகக் கையாள்வதால் சராசரி நபராக அல்லாமல் ஒரு திறமையான நபராக எதிர்காலத்தைப் பற்றி கேள்விகள் இல்லாத முழு நன்மையையும் நீங்கள் அனுபவிப்பீர்கள்.

நீங்கள் முதலில் குடுவையை மணலில் நிரப்பினால்கூழாங்கற்கள் அல்லது பாறை கற்களுக்கு இடம் இல்லை. அதே உங்கள் வாழ்க்கைக்கும் பொருந்தும்.. உங்கள் முழு நேரத்தையும் சக்தியையும் சிறிய விஷயங்களுக்கு செலவிட்டால்ஒருபோதும் முக்கியமான விஷயங்களுக்கு இடமளிக்க மாட்டீர்கள். உங்கள் மகிழ்ச்சிக்கு முக்கியமான விஷயங்களில் கவனம் செலுத்துங்கள். உண்மையில் முக்கியமான விஷயங்களில் உங்கள் முன்னுரிமைகளை அமைக்கவும்.

உங்கள் எல்லா செயல்களையும் உங்கள் வளர்ச்சிக்கு எவ்வாறு பொருத்தமாக மாற்ற முடியும்பெரிய மற்றும் சிறிய பாறை கற்கள்கூழாங்கற்கள்மணல் மற்றும் நீர் ஆகியவற்றின் வரிசையில் சமநிலைகளை அடையாளம் காணத் தொடங்குங்கள்.  பெரிய பாறை கற்களை முதலில் ஏற்பாடு செய்ய திட்டமிடுங்கள்அதைத் தொடர்ந்து சிறிய பாறை கற்கள்கூழாங்கற்கள்மணல் மற்றும் நீர் என்ற வரிசையில் அமைக்கவும். சிறிய பாறை கற்களுக்கு முன் மணல் மற்றும் நீர் என தேர்ந்தெடுத்து  வாழ்க்கையில் சறுக்குவதற்கான சோதனையை தவிர்க்கவும்.

நீங்கள் வாழ்நாள் முழுவதும் வெற்றி பெற திட்டமிடடுங்கள், வெற்றி நோக்கி...
உங்கள் வெற்றி பயணத்தை தொடங்குங்கள்...



05 September 2019

கர்ம வினை- Effects of KARMA.

கர்ம வினை

உலகில் கோடிக்கணக்கான மக்கள் இருக்கிறார்கள்.
நாம் பழக்கம் வைத்துக் கொண்டிருப்பவர்கள்
ஆயிரக்கணக்கு. ஆனால் எதோ ஒரு குறிப்பிட்ட
நபர் நமக்கு துணைவராக அல்லது துணைவியாக
அமைவது ஏன் ?

நம் வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்விலும்
ஒரு கர்மாவை நாம் ஏற்படுத்துகிறோம்.
அதாவது அந்தக் கர்மாக்களின் மூலம் ஒன்று
நாம் ஏதாவது பெற்றுக் கொள்கிறோம்,
அல்லது அடுத்தவருக்கு ஏதேனும் ஒரு
உபகாரம் செய்கிறோம். சில சமயங்களில்
ஏமாற்றப்படுகிறோம். பல சமயங்களில்
ஏமாற்றுகிறோம். சிலருக்கு நல்லது செய்கிறோம்.


பலரிடமிருந்து அளவுக்கு அதிகமாக
நன்மைகளைப்பெற்றுக் கொள்கிறோம்.
இந்த கொடுக்கல் வாங்கலே "ருண பந்தம்"
எனப்படுகிறது.

சிலருடைய உறவுகள் ஆனந்தத்தைக் கொடுக்கிறது.
சிலருடைய வருகை மட்டற்ற மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.  சிலர் கூடவே இருந்து தொல்லைப் படுத்துகிறார்கள்.சிலரின் வருகை துக்கத்தை ஏற்படுத்துகிறது. பல சமயங்களில் இது ஏன் நிகழ்கிறது  என்று தெரியாமலேயே  தன்    போக்கில்    நம் வாழ்வில் பல நிகழ்ச்சிகள் நடக்கின்றன.
கனவில் கூட காண முடியாத   பல ஆச்சர்யங்கள் நமக்கு  சிலசமயங்களில் ஏற்படுகிறது.

இதற்கெல்லாம் என்ன காரணம் ?

ஏன் இப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் ?

நாமே நம் தாயை, தந்தையை, சகோதர சகோதரிகளை,  நண்பர்களை, மனைவியை, கணவனை, பிள்ளைகளை,  தேர்ந்தெடுப்பதில்லை. நண்பர்களைத் தேர்ந்தெடுக்கலாம்  என்று யாரேனும் கூறலாம். ஆனாலும் அதுவும் தானே
நிகழ வேண்டும். நம்மால் உருவாக்க முடியாது.
முயற்சி மட்டுமே நம்முடையது. முடிவு ? .
ஒரு சிலர் நம் வாழ்க்கையிலிருந்து திடீரென்று
காணாமல் போய்விடுவர். அது இறப்பால் மட்டும் அல்ல ,  பல காரணங்களினால் நிகழும். அதே நபர் மீண்டும்  நம் வாழ்வில் வேறு கோணத்தில்
வேறு பார்வையில் தோன்றுவர்.

எதோ ஒன்று நம்மை அடுத்தவர் பால் ஈர்க்கிறது,
அல்லது அடுத்தவரை காரணம் இல்லாமல்
வெறுக்க வைக்கிறது. அது என்ன ? சமன் செய்யாமல் மிச்சம் வைத்திருக்கும் கர்ம கதிகளின்
எச்சங்களே அவ்வாறு ஒரு ஈர்ப்பை அல்லது வெறுப்பை  ஏற்படுத்துகிறதா ?
இதற்கெல்லாம்    தெரிந்த ஒரே காரணம் நம்முடைய  "கர்ம வினை" தான் .

இது நாள் வரை எத்தனையோ பிறவிகளை நாம்
கொண்டிருக்கிறோம். அத்தனைப் பிறப்பிலும்
பலப் பல பாவ புண்ணியங்களை சேர்த்திருக்கிறோம்.  அந்தக் கூட்டின் பெயரே "சஞ்சித கர்மா" எனப்படுகிறது.  அதன் ஒரு பகுதியை இந்தப் பிறவியில் அனுபவிக்க கொடுக்கப்படுகிறது. அதுவே 'பிராரப்தக் கர்மா'  எனப்படுகிறது. இந்த பிராரப்தக் கர்மா நிறைவடையாமல்
நம்முடைய இந்தப் பிறவி முடிவடையாது.
நாம் இவ்வுலக வாழ்க்கையிலிருந்து விடுதலைப் பெற முடியாது.

இந்த வாழ்க்கை நடைமுறையில் நாம்
ஒவ்வொருவரிடமும் ஏதேனும் ஒன்றை கற்கிறோம்  அல்லது கற்றுக் கொள்கிறோம்.
இதில் நாம் அனைவரும் அதிகமாக கற்பது அல்லது
கற்பிப்பது நம் துணையுடன் மட்டுமே.

இது தவிர 'ஆகாம்ய கர்மா' என்று ஒன்றுள்ளது.
அது கொடுக்கப்பட்டுள்ள இந்தப் பிறவியில் நாம்
செய்யும் நல்ல - கெட்ட செயல்களால் ஏற்படுவது.
யாராலும் யாருக்கும் எந்த கர்மாவையும் ஏற்படுத்தவோ  உருவாக்கவோ முடியாது.அவரவர்கள் செய்வினையின்
பயனாலேயே அவரவர்கள் அனுபவம் மற்றும்
வாழ்க்கை அமையும் .

துக்கமும், சந்தோஷமும், சண்டையும், சமாதானமும்,  ஏற்றமும், இறக்கமும், வெறுப்பும், ஆதரவும்,  அவரவர்கள் கர்ம கதியே.
இதைத் தான் "தீதும் நன்றும் பிறர் தர வாரா"
என நம் மதம் போதிக்கிறது.

நம்முடைய நல்ல கெட்ட காலங்களுக்கு
நாம் மட்டுமே பொறுப்பு. அப்படி என்றால்
ஆகாமி கர்மா நம்முடைய கையிலேயே இருக்கிறது.  இந்தப் பிறவியில் யார் எப்படி இருந்தாலும்,  நீ எப்படி இருக்கப் போகிறாய் என்பது உன்  கையிலேயே உள்ளது. நீ செய்யும் நற்செயல்களையும்,  வினைச்செயல்களையும் நீ மட்டுமே எதோ  ஒரு பிறவியில் அனுபவிக்கப் போகிறாய்  என்பதை உணர்ந்தால்,
நீ என்ன செய்யப் போகிறாய் ?
எப்படி நடந்து கொள்ளப் போகிறாய் ?
எது போன்ற வாழ்க்கைத் தடத்தை
ஏற்படுத்திக்கொள்ளப் போகிறாய் என்பது
உனக்குப் புலப்படும்.
இதை போதிப்பது தான் " ஹிந்து மதம் ".

There is NO cancellation of GOOD and BAD deeds .

பாவ புண்ணியங்களுக்கு கூட்டல் கழித்தல் கிடையாது.  இரண்டையும் நாம் அனுபவித்தே ஆகவேண்டும்.

பணம் மட்டுமே எல்லாப் பிரச்சனைகளையும்
தீர்த்துவிடும் என்று ஒரு சித்தாந்தம் உள்ளது.
ஆனால், பணமே இல்லாத ஒரு சாதாரண மனிதன்
கூட தன்னுடைய வாழ்க்கையில் பல சமயங்களில்
சந்தோஷமாக இருக்கிறான். அதேபோல பெரும் பணக்காரர்களையும்  'துக்கங்கள்' விடுவதில்லை.

சர்க்கரை ஆலை அதிபரானாலும் Diabetic
ஆக இருந்தால் இனிப்புப் பண்டங்களை
உண்ண முடியாது. பல கார்களுக்குச்
சொந்தக்காரராக இருந்தாலும் தனது
கால்களையே நடை பயிற்சிக்கு
நம்ப வேண்டியதாக உள்ளது.

'வினை விதைத்த வழியில் விதி நடக்கும்'
'விதி வகுத்த வழியில் நாம் நடக்க வேண்டும்'

நமக்கு விதிக்கப்பட்டது நம் கடமையைச்
செய்வது மட்டுமே.  பலனை ஆண்டவனிடம் விட்டுவிடுவோம்.  நடப்பதை ஏற்கும் பக்குவத்தை மட்டுமே நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும்.
அதை மாற்ற முயலும் போது, மேலும் மேலும் துன்பத்தையும் சோகத்தையுமே
பலனாகப் பெறுகிறோம்.

எதற்கும் நிதானமும் பொறுமையும் தேவை.
நமக்கு நடக்கும் நடக்கப்போகும் நல்லதை யாராலும் கெடுக்க முடியாது.அதேபோல் தீமையையும் கொடுக்க முடியாது.

மேலே சொன்ன சஞ்சித கர்மா,பிராரப்தக் கர்மா,ஆகாம்ய கர்மா,இந்த கர்மாக்களை பற்றி ஒன்றும் புரியவில்லையா சிம்பிளா ஒன்று சொல்றேன் பாருங்க,ஒவ்வொருவரும் தங்களின் தற்போதைய வயதிற்கேற்ப அவறவர் கடமைகளை சரியாக செய்ய வேண்டும்.அப்படி நாம் கடமைகளை சரியாக செய்யலைனா கடவுள் நம்மள பின்னாளில் வச்சி செய்வாரு..! அப்புறம் குய்யோ முய்யோ என  கத்தி புரயோஜனம் இல்ல..BE ALERT AND BE CAREFUL..