Subscribe

BREAKING NEWS

05 January 2020

ஆழ்மனத்தின் இயக்க சக்தியை வெளிப்படுத்துவது எப்படி?ரகசியம் 8..

ஒரு நண்பர் ஒருவர் தன்னுடைய உறுப்பு ஒன்றில் புற்றுநோய் உயிரணுக்கள் இருப்பதாக தன் திசு ஆய்வறிக்கையில் காட்டியதாக கூறினார். அவரது சிறப்பு மருத்துவர் ஒரு வலிமைமிக்க ஆபத்தான சிகிச்சை முறையை பரிந்துரைத்தார். அதை ஒப்புக் கொள்வதற்கு முன்பாக அந்த நண்பர் வேறொரு அணுகுமுறையை  முயற்சித்தார் அது தினமும் இரவு உறங்கச் செல்வதற்கு முன்னர் அவர் அமைதியாக கீழ்க்கண்டவாறு கூறினார். என் ஒவ்வொரு உயிரணுவும் நரம்பும் திசுவும் உருபும் இப்போது முழுமையடைந்து தூய்மை ஆக்கப்பட்டு சுத்தமாக்கப்பட்டு  என் உடல் முழுவதும் ஆரோக்கியமும் இயக்கமும் மீண்டும் குடியேறுகின்றன என்று தனக்குத்தானே சுய பிரகடனத்தை கூறிக்கொண்டார்.
 

ஒரு மாதத்தில் அவர் பரிபூரணமாக    குணமடைந்தார் அதையடுத்து மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகள் அனைத்தும் அவரது உடலில் புற்றுநோய் உயிரணுக்கள் இல்லை என்பதை உறுதிப்படுத்தினார்.

 தூக்கத்துக்கு முன்பு அவர் மீண்டும் மீண்டும் சுயபிரகடனம் கூறியதன் காரணத்தை அவரிடம் கேட்டபோது அதற்கு அவர் மனதை ஒருமுறை ஒரு குறிப்பிட்ட திசையில் இயக்கப்பட்டால் ஆழ்மனத்தின் இயக்க சக்தி உங்கள் உறக்கம் முழுவதும் தொடர்ந்து செயலாற்றிக் கொண்டே இருக்கும் எனவேதான் நீங்கள் ஆழ்ந்த உறக்கத்திற்கு செல்லும் முன்பு உங்கள் ஆழ்மனம் வேலை செய்வதற்கான ஏதேனும் பயனுள்ள ஒன்றை அதற்கு வழங்குவது அல்லது நமக்கு வேண்டிய பிரார்த்தனைகளை செய்வது  மிக மிக இன்றியமையாதது என்று அவர் பதிலளித்தார்.

 பரிபூரண ஆரோக்கியம் குறித்து சிந்திக்கையில் அவர் தனது உடல்நிலையை அந்த நோயின் பெயரை கொண்டு அழைக்க வில்லை என்பதை நாம் இங்கு கவனிக்க வேண்டும் நீங்கள் உங்கள் உபாதைகளை பற்றிப் பேசுவதையும் அவற்றுக்கு பெயர் இடுவதையும் குறிப்பாக தூங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு முற்றிலுமாக நிறுத்தி விடுங்கள் என்று நான் பரிந்துரைக்கிறேன்.

 உபாதைகள் உயிர் பெற்று நீங்கள் அதற்க்கு அளிக்கும் கவனம்  அவை குறித்து பயத்தாலும் மேற்கூறப்பட்ட தகவல்கள் போல் நீங்களும் மன அறுவை சிகிச்சை நிபுணராக மாறலாம். காய்ந்துபோன கிளைகள் எவ்வாறு மரத்தில் இருந்து உதிர்ந்து விழுகின்றன அவ்வாறு உங்கள் பிரச்சனைகளும் உங்கள் வாழ்விலிருந்து துண்டிக்கப்பட்டு விடும்.
 அதற்கு மாறாக உங்கள் வலிகளும் அறிகுறிகளும் அதற்குரிய நோய்களின் பெயர்களை அடிக்கடி கூறிக் கொண்டிருந்தால் அவற்றைப்பற்றி மற்றவர்களிடத்தில் கலந்து பேசிக்கொண்டும்   இருந்தால் நீங்கள் அவற்றுக்கு உங்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் வல்லமையை அளிக்கின்றீர்கள்  ஆழ்மனதில் குணமாக்கும் சக்தியை ஆற்றலையும் விடுவிக்கும் இயக்க வினையை அணை போட்டுத் தடுத்து விடுகிறீர்கள்  மேலும் உங்கள் சொந்த மனதின் விருப்பப்படி உங்களது கற்பனைகள் உருப்பெறுகின்றன என்பதனை மறக்க வேண்டாம்  வாழ்வின் மாபெரும் உண்மைகள் உங்கள் மனத்தில்  நிரப்பவேண்டும் 

 உங்களை குணப்படுத்துவது எது என்பதை முதலில் நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும் உங்கள் ஆழ் மனதிற்கு இடப்படும் சரியான கட்டளைகள் உங்கள் மனத்தையும் உடலையும் குணப்படுத்தும் என்பதை நீங்கள் மறக்கக்கூடாது.

 உங்கள் வேண்டுகோள்களையும் விருப்பங்களையும் உங்கள் ஆழ்மனதிற்கு தெரிவிப்பதற்கு ஒரு தீர்மானமான திட்டத்தை முதலில் நீங்கள் வகுத்துக்கொள்ள வேண்டும்.

 விரும்பும் விளைவுகளை கற்பனை செய்யுங்கள் அவற்றின் அர்த்தத்தை உணருங்கள் அதைத் தொடர்ந்து பின்பற்றுங்கள் தீர்மானமான விளைவுகள் உங்களுக்கு நிச்சயம் கிடைக்கும்.

 நம்பிக்கை என்றால் என்ன? என்று முடிவு செய்யுங்கள் நம்பிக்கை என்பது உங்கள் மனதில் தோன்றும் ஓர் எண்ணம் என்பதை அறிந்து கொள்ளுங்கள் நீங்கள் என்ன சிந்திக்கிறீர்களோ  அதை உருவாக்குகிறீர்கள் என்பதை நீங்கள் ஒருபோதும் மறந்துவிடக் கூடாது.

 உடல் நலமின்மை உங்களை பாதிக்கும் அல்லது உங்களுக்கு தீங்கு விளைவிக்கும் எதிலும் நம்பிக்கை கொள்வது தவறானது பூரண ஆரோக்கியம் செழிப்பு அமைதி செல்வம் தெய்வீக சிந்தனை ஆகியவற்றை எப்பொழுதும் நீங்கள் நம்ப வேண்டும்.

 நீங்கள் வழக்கமாக சிந்திக்கும் உரிய எண்ணங்களை உங்கள் வாழ்க்கையில் அது நிகழ்வுகளாக மாறும் நெகடிவான எண்ணங்கள் உங்கள் மனதில் எப்போது தோன்றினாலும் உடனே அதனை அந்த இடத்திலேயே நிறுத்திவிட்டு பாசிடிவான எண்ணங்களை உங்கள் மனதில் பதிய வையுங்கள்.ஆதலால் எப்போதும் உங்களது எண்ணங்களை கவனித்தவரே இருக்கவேண்டும் இதுவே தியானமாகும் .

 பிரார்த்தனையில் சிகிச்சையின் சக்தியை உங்கள் வாழ்வில் நடைமுறைப் படுத்துங்கள் ஒரு குறிப்பிட்ட திட்டம் அல்லது  எண்ணம் அல்லது மனசாட்சியை தேர்ந்தெடுங்கள் உளப்பூர்வமாக உணர்ச்சி பூர்வமாகவும் அதனோடு ஒன்றிணைந்து விடுங்கள் உங்கள் மனப்போக்கின் மீது தொடர்ந்து விசுவாசத்துடன் இருந்து வந்தால் உங்கள் பிரார்த்தனை பலிக்கும்.

 குணமாக்கும் சக்தி உங்களுக்கு உண்மையிலேயே வேண்டுமென்றால் விசுவாசத்தின் மூலம் நீங்கள் அதைப்பெறலாம் அதாவது அது வெளிமனம் மற்றும் ஆழ்மனத்தின் செயல்பாடுகள் குறித்த அறிவு என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள்.

 கண்மூடித்தனம் விசுவாசம் என்பது உடலில் உள்ள சக்தி அறிவியல் அறிவு தன் பிணி நீங்கப் பெறும்.

 நீங்கள் அன்பு கொண்டிருக்கும்  நண்பர்கள் நோய்வாய்ப்பட்டிருந்தார் அவர்களுக்காக பிரார்த்தனை செய்ய கற்றுக் கொள்ளுங்கள் அது உங்கள் மனதை அமைதிப்படுத்தும் ஆரோக்கியம் வலிமை முழுமை குறித்த உங்களது எண்ணங்கள் உணர்ச்சிமிக்க ஒரே பிரபஞ்ச மனத்தின் ஊடாக இயங்கி உங்கள் அன்புக்குரியவர்கள் உணரப்பட்டு அவர்கள் மனத்தில் வெளிப்படுத்தப்படும்.அதனால் அவர்களது பிணிகள் நீங்கப்பெற்று முழு சுகத்தை பெறுவார்.

ரகசியங்கள் தொடரும்...

சேரன்மகாதேவி (சந்திரன்) பரிகார ஸ்தலம்...

சேரன்மகாதேவி இது நவ கைலாயத்தில் இரண்டாவது இடத்தைப் பெறுவது
சேரன்மகாதேவி திருக்கோவில் ஆகும். இந்த கோவில் நவகிரகங்களில்
சந்திரன் ஆட்சி பெற்று விளங்குகிறது. இந்த கோவில் தாமிரபரணி ஆற்றின்
தென்கரையில் அமைந்துள்ள புண்ணிய ஸ்தலமாகும் திருநெல்வேலியில்
இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் இக்கோவில் உள்ளது.


கோவிலின் ராஜகோபுரம் 

 ஸ்ரீ அம்மன் அம்மநாதசுவாமி என்ற கைலாய கைலாசநாத சுவாமிஆகவும்
ஆவுடை நாயகி அம்பிகை ஆகவும் அருள் பாலிக்கின்றார்.
கிழக்கு வாசல் அழகிய சிறிய ராஜகோபுரம் கம்பீரமாக அமைந்திருக்கும்.
இக்கோவிலுக்கு இரண்டு பெரிய வாயில்கள் உள்ளன.
 கோவிலின் வடக்குப் பகுதியில் அம்மனும் சுவாமியும் தெற்குப்பகுதியில்
ஆவுடை அம்மை அம்மனும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
இங்கு அம்மனாதர் தாமே சுயம்புவாக காட்சி அளிக்கின்றார்.

கோவிலின் ராஜகோபுரம் 
கோயிலில் நந்தி கொடி மரம் ஆகியவையும் கோயில் உள்ளே உள்ள
மண்டபத்தில் துவார பாலகர்களும் நடுவே நந்தியும்
பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது தெற்கு நோக்கிய பகுதியில் நடராஜர்
சிவகாமி அம்மையுடன் காரைக்கால் அம்மையும் உள்ளார் சூரியன்
சந்திரன் ஆகியோர் மேற்கு நோக்கி உள்ளனர்.

இக்கோவிலில் தெற்கு நோக்கி ஒரு வாசலும் கிழக்கில் ஒரு மண்டபமும் அமைந்துள்ளது இந்த மண்டபம் தற்போது தூண்கள் சிதைந்து காணப்பட்ட நிலையில் சிவனை வைத்து வழிபட்ட உரோமச முனிவரின் திருவுருவம் இந்த மண்டப தூண்களில் பொறிக்கப்பட்டுள்ளது இங்கு உரோமச முனிவரும் பக்தர்கள் வணங்கிவந்திருக்கின்றனர்.


மேலும் தெற்கு நோக்கி இரண்டு பெண்கள் உரல் உலக்கை உடன் நிற்கும் காட்சிகள் கையில் வைத்திருக்கும் காட்சியும் அழகாக அமைக்கப்பட்டுள்ளது.

காசி விஸ்வநாதர் விசாலாட்சி சுப்பிரமணியர் வள்ளி தெய்வானையுடன்
கஜலட்சுமி சனீஸ்வரர் சண்டிகேஸ்வரர் உள்ளனர் இக்கோவில்
தல புராணத்தை பற்றிக் கூறும் போது உரோமச முனிவர்
கைலாய மலையை அடைந்து நித்தியத்துவம் வேண்டும் என்று கேட்டு
ஆலமரத்தின் அடியில் சிவலிங்கம் கண்டு பூஜை செய்து வழிபட்டார்.



  இங்கு சிவபெருமான் உரோமச முனிவருக்கு காட்சி தந்தார் கோவிலின் தலவிருட்சம் ஆலமரம். இக்கோயிலின் மூலஸ்தானத்தை இரண்டு பேர் சேர்ந்து கட்டியுள்ளனர் என்பதற்கு வரலாறு உள்ளது .


அதாவது இரண்டு சகோதரிகள் சேர்ந்து அம்மனாக சுவாமி கோவிலில்
மூலஸ்தானத்தை கட்டுவதற்காக தாங்கள் செய்து வரும் நெற்குத்தும்
தொழில் செய்து பணம் சேர்த்து வந்துள்ளனர். இருப்பினும் அவர்களுக்கு
கோவில் மூலஸ்தானம் கட்டுவதற்கான பணம் சேரவில்லை இது குறித்து
மிகவும் கவலை அடைந்து சிவபெருமானை பக்தியுடன் வழிபட்டனர்.

இதை அறிந்த சிவபெருமான் ஒரு நாள் மாலை நேரத்தில் அந்தணர் வடிவில்
வந்த இரண்டு சகோதரியின் வீட்டிற்குச் சென்றார். அந்த சகோதரிகள்
இருவரும் அந்தணர் வடிவில் வந்த சிவபெருமான் அமரவைத்து இலையை
போட்டு உணவு பரிமாறினார்கள்.
 அந்தனர் சாப்பாடு உண்டபிறகு சகோதரிகளை வாழ்த்திச் சென்றார்
அன்றிலிருந்து சகோதரி வீட்டில் செல்வம்  பெருகியது.



அதன் பின்னர் சகோதரிகள் இணைந்து கோவிலின் மூலஸ்தானத்தை
கட்டினார்கள் என்பது வரலாறு. இதற்குச் சான்றாக கோவிலில் உள்ள
தூணில் இரண்டு சகோதரிகள் நெல் குத்துவது போல சிற்பம்
வடிவமைக்கப்பட்டுள்ளது மேலும் இக்கோயிலில் அமைப்பு பணியில்
ராஜராஜ சோழன் ராஜேந்திர சோழன் ஆகியோர் சேர்ந்து கட்டியதாகவும்
கல்வெட்டுச் சான்று உள்ளது சேரன் மகாதேவி மங்கலம் என்ற பெயர்
கோவிலில் உள்ள கல்வெட்டுகளில் கூறப்பட்டுள்ளது.


 இக்கல்வெட்டுக்கள் பாண்டியர் காலத்து கல்வெட்டுகள் ஆகும்
மகாதேவி என்பது சேர மன்னன் மகளின் பெயர் என்பதும்
தன் மகளின் பெயரை சேரமன்னர் இவ்வூருக்கு சூட்டினான் என்றும்
அதன் பின்னரே சேரன்மகாதேவி என அழைக்கப்பட்டதாக கருதப்படுகிறது.
 மேலும் இக்கோயிலில் தெற்கு மேற்கு சுவர்களில் உள்ள
மூன்று கல்வெட்டுகள் பெருமாள் ஆழ்வார் என்னும் கைலாய
என்றும் கூறப்படுகிறது.
கோவிலின் பின்புறம் சுற்றும்போது

 கோச்சடைய வர்மறான சுந்தர சோழ பாண்டியன் என்ற அரசர்
காலம் ராச ராச கேசரி வர்மரான  இராசராச தேவர் என்ற மன்னர்
காலமும் கல்வெட்டுக்களில் குறிப்பிடப்பட்டுள்ளது 


 இக்கோவிலின் அருகே பக்தவச்சலம் கோவில் உள்ளது இக்கோவில்
அருகே யாக தீர்த்தம் உள்ளது இங்கு தான் யாசமா முனிவருக்கு
முக்தி கொடுக்க பக்தவச்சலராக சிவபெருமான் தோன்றினார்
என்றும் கூறப்படுகிறது.


 
கோவில் நுழைவு வாயில் 

கோவிலுக்கும் யாக தீர்த்தத்துக்கும் இடையிலான பகுதியில் ரண
 விமோசன பாறை ஒன்று உள்ளது இங்கு 41 நாட்கள் விடாமல் ஸ்னானம்
செய்தால் தீராத ரணமும் தீரும் மனதில் தீய எண்ணத்துடனும்
தீட்டுடனோ இப்பகுதியில் குளிக்க முடியாது.


 மார்கழி மாதத்தில் வியாச தீர்த்தம் என்று அழைக்கப்படுகின்ற
மகாவிதிபாகம் என்ற திருவிழா நடக்கும் . இத்திருவிழா அன்று
அனைத்து நதிகளும் மூன்று நாட்கள் இப்பகுதியில் சங்கமிக்கும்
என்பது புராணம் கூறும் வரலாறு.

கோவில் அன்றாடபனிகள் செய்துவரும் ஒரு ஏழை அந்தணருக்கு வேட்டி கொஞ்சம் பணம் நமது குழுவின்சார்பாக கொடுத்தபோது 


தற்போது கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழாவும் ,
திருவாதிரை திருநாளும், நடக்கிறது.

சேரன்மகாதேவி  சென்று சிவனருள் பெறுவோம்.

கோவில் தொடர்பு கொள்ள :-

சந்திரசேகர் பட்டார் செல்:-9442226511

04 January 2020

பிறவி என்னும் கர்மாவின் மாய பிடியில் நாம் ...


பிறவி என்னும் கர்மாவின்  மாய பிடியில் சிக்கி தவித்துக்கொண்டிருக்கும்  அனைத்து மனிதப் பிறவிகளுக்கும் வணக்கம், எவ்வளவுதான் சொந்தங்கள் பந்தங்கள் செல்வங்கள் பணபலம் படைபலம் அனைத்தும் இருந்தாலும் இவை அனைத்தையும் விட்டு ஒருநாள் நாம் செல்லப் போகின்றோம் என்பது அனைவருக்கும் தெரியும், இருந்தும் நாம் அந்த மாய உறவுகள் இடத்தில் சிக்கி சின்னாபின்னமாகி கொண்டிருக்கின்றோம், இந்த பூமியில் வாழ்வதற்கு இது எல்லாம் வேண்டும் தான் இல்லை என்று மறுப்பதற்கு இல்லை ஆனால் அது மட்டுமே முழுமை ஆகாது, இது எல்லாம் வேண்டும் என்று நாம் நினைத்தாலும் சில பேருக்கு அது அமைவதில்லை காரணம் என்னவாக இருக்கும். அதுவே கர்மா என்னும் நம்முடைய புனர்ஜென்மம் பந்தமாகும், அதன்படியே நாம் இப்போது அனுபவிக்கின்ற அனைத்து விதமான நன்மை மற்றும் தீமைகள் அனைத்தும் நடந்து கொண்டிருக்கின்றது, இதை மாற்றுவது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல, ஆனால் மறு ஜென்மம் ஒன்று இருந்தால் அந்த ஜென்மத்தில் இவைகள் அனைத்தையும் மாற்றுவதற்கு தேவையான அனைத்தையும் இந்த ஜென்மத்தில் நாம் செய்தாக வேண்டும், அது புண்ணிய காரியங்கள் தானதர்மங்கள் சக மனிதர்களுடன் அன்புடன் வாழ்தல் போன்றவைகளாகும்,




அந்தவகையில் நாம் ஆன்மீக பயணம் மேற்கொண்டு பல பல புண்ணிய ஸ்தலங்களை தரிசனம் செய்து முடிந்த அளவிற்கு தான தர்மங்கள் செய்து வருகின்றோம் என்பது அனைவருக்குமே தெரியும்.
 அதன்படி தற்போது நாம் சென்று வந்த புண்ணிய ஸ்தலங்கள் ஆகிய நவகைலாயம் மற்றும் நவதிருப்பதி பற்றிய கோவில்களின் சிறப்புகள் பற்றி பதிவுகளை தற்போது வரும் நாட்களில் பார்க்கலாம்.




உலகில் சிவலிங்கத்திற்கு பெயர்பெற்றது  இமயமலையில் உள்ள சிவ கைலாயம் ஆகும்.  சிவாலயங்கலுக்கு  பெயர் பெற்றது தென் தமிழ்நாட்டில் உள்ள தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் உள்ள புண்ணிய நதியாம் தாமிரபரணிக் கரையிலுள்ள நவ கைலாயம்.ஆகும்.
 நவகைலாயம் திருக்கோயில்கள் உருவான விதமாவது, புண்ணிய மலையான பொதிகை மலையில் தவம் புரிந்து வந்த மாமுனிவர் அகஸ்தியரின் பிரதான சீடரான உரோமச முனிவர் தன் குருவின் துணை கொண்டு சிவபெருமான் காட்சி பெற்று முக்தி அடைய விரும்பினார்.அதை அறிந்துகொண்டு அகத்திய முனிவர் அவரிடம் அதற்கான வழி முறைகளை கூறினார்.


 அதன்படி உரோமச முனிவர் தாமிரபரணி சங்கமிக்கும் இடத்தில் நீராடி சிவபெருமானை வழிபட்டார் பின்னர் நவகோள்கள் வரிசையில் சிவபெருமானை வணங்க புறப்பட்டார் உரோமசமுனிவர்.
எந்தெந்த  இடங்களில் எல்லாம் வணங்க வேண்டும் எந்த இடத்தில் வழிபட்டால் மிகச்சிறப்பான பலன்கள் மிக விரைவில் கிட்டும் என்பதை அடையாளம் காட்டுவதற்காக தாமிரபரணி நதியில் ஒன்பது மலர்களை அகத்திய மாமுனிவர் மிதக்க விட்டார், அந்த மலர்கள்.கீழே கொடுக்கப்பட்டுள்ள வரிசையின்படி கறை ஒதுங்கியது.


1)பாபநாசம், (சூரியன்) ஸ்ரீ கைலாசநாதர் அம்பாள் ஸ்ரீ உலகாம்பிகை.
2) சேரன்மகாதேவி, (சந்திரன்)ஸ்ரீ அம்மைனாதர் அம்பாள் ஸ்ரீ ஆவுடை நாயகி.
3) கோடகநல்லூர், ஸ்ரீ கைலாசநாதர் அம்பாள் ஸ்ரீ சிவகாமி.
4)குன்னத்தூர், ஸ்ரீ கோத பரமேஸ்வரர் அம்பாள் ஸ்ரீ சிவகாமி.
 5) முறப்பநாடு, ஸ்ரீ கைலாசநாதர் அம்பாள் ஸ்ரீ சிவகாமி.
6) 8ஸ்ரீவைகுண்டம், ஸ்ரீ கைலாசநாதர் அம்பாள் ஸ்ரீ சிவகாமி.
7)தென்திருப்பேரை, ஸ்ரீ கைலாசநாதர் அம்பாள் ஸ்ரீ அழகிய பொன்னம்மை.
8)ராஜபதி, ஸ்ரீ கைலாசநாதர் அம்பாள் ஸ்ரீ சௌந்தர்யா நாயகி பொன்னம்பாள்.
9) சேந்தமங்கலம், ஸ்ரீ கைலாசநாதர் அம்பாள் ஸ்ரீ சௌந்தர்யா நாயகி.


ஆகிய இடங்களில் அந்த ஒன்பது மலர்களும்  தாமிரபரணி நதிக்கரையில் கறை ஒதுங்கியது.அந்தந்த இடங்களில்  உரோமச முனிவர் ஒன்பது சிவலிங்கத்தை வைத்து வணங்கி முக்தி பெற்றார்.என்பது புராண வரலாறு.அடுத்தடுத்து வரும்  பதிவுகளில் இந்த ஒன்பது கயிலாயங்கள் பற்றிய பதிவுகளை ஒவ்வொன்றாக நாம் பார்க்க இருக்கின்றோம்.

 இப்பொழுது நவ கைலாயங்கள் விளங்கக்கூடிய முதல் பரிகார ஸ்தலம் பாபநாசம் ஆகும் இது சூரிய கிரகத்திற்கான பரிகார ஸ்தலம் ஆகும்.
 நாம் செய்த பாவத்தை நாசம் செய்ய செல்ல வேண்டிய ஒரு ஆலயம்  ஆகும் இங்குள்ள பாவநாசம் சந்நிதி எதிரில் உள்ள தாமிரபரணி படித்துறையில் நீராடினால் நாம் செய்த பாவங்கள் நீங்கும் என்பது ஐதீகம் இந்த திருக்கோவில் திருநெல்வேலியில் இருந்து சுமார் 45 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது இந்த கோவிலுக்கு முக்கூடல் வழியாகவும் சேரன்மாதேவி வழியாகவும் செல்லலாம் இத்திருக்கோவில் மூலவர் ருத்ராட்சத்தால் ஆனது.

 தாமிரபரணி ஆறு பொதிகை மலையில் தோன்றி சமவெளியை அடையும் இடமே பாபநாசம் இக்கோவிலில் வீற்றிருக்கும் இடம் எழில் சூழ்ந்துள்ளது வற்றாத ஜீவநதியான தாமிரபரணி பாபநாசம் கோவில் அமைப்பு அற்புதமான இயற்க்கை கலையம்சம் பொருந்தியதாக இருக்கின்றது ஏழு தட்டுகள் உடைய பெரிய கோபுரத்தை இத்திருக்கோவில் பெற்றுள்ளது  இது தாமிரபரணி ஆற்றின் மேற்கு கரையில் உள்ளது. அகத்திய முனிவர் தங்கி தவம் புரிந்த இடம் இது என்பதால் முக்கியத்துவம் வாய்ந்தது இந்த கோவில் , கோவில் கோபுரத்தின் உயரம் 80 அடி ஆகும்.

  சிவராத்திரி சிவலிங்கப் பெருமானை தரிசிப்பது மிகவும் விசேஷமானது அவ்வாறு வழிபட்டால் செய்த பாவங்கள் நீங்கும்.என்பார்கள்.அப்படி

விராட்டு என்பவர்வாழ்க்கையில் விரட்டிக்கொண்டு இருந்த நேரத்தில் அவர் மோட்சத்தை விரும்பி பாபநாசத்தில் பரமேஸ்வரனை நோக்கி யாகம் செய்தார் யாகத்தின் பயனாக பரமேஸ்வரன் அவருக்கு காட்சி தந்தார் அதன் பின் மோட்சத்தை தரத்தக்க சிவபூஜை செய்து மோட்சம் அடைந்தார்.

 நல்ல குலத்தில் பிறந்தவராக இருந்தாலும் சிவபூஜை செய்யாதவர் மேன்மை அடைய மாட்டார் தாழ்ந்த குலத்தில் பிறந்தவர் ஆயினும் விதிப்படி சிவபூஜை செய்வாராயின் உயர்ந்த குலத்தினர் ஆவர். என்று நாரத முனிவர் அருளிச் செய்ய கேட்டு பொதிகை,கையம், தருத்தாரம், என்றும் மூன்று மலைகள் ஐம்புலன்களையும் ஒடுக்கி பரமேஸ்வரனை நோக்கி தவம் செய்திட சிவராத்திரி தினத்தில் கோடி உருவம் கொண்டு சிவபெருமான் தோன்றினார்.
 மலைகள் மூன்றும் ஞானத்தினாலே  அறிந்து சிரசிலே கைகுவித்து வணங்கி எங்கும் நிறைந்த மூலப்பொருளே எங்களை அடிமை கொண்டு அருள்க என்று தியானிக்க சிவபெருமான் சகல உருவம் கொண்டு காட்சிதர மூன்று மலைகளும் நிற்க பரமேஸ்வரன் கருணை கூர்ந்து தேவ தட்சனை வரவைத்து பொன்னாலும் மணியாலும் ஆகிய கிரீடம் ஆபரணம் ஆடை குடை சாமரம் முதலானவர்கள் வகைக்கு மும்மூன்று செய்து வரும்படி உத்தரவிட்டார். சந்திர மண்டலத்தை சிங்காதத்தின் மேல் வைத்து அதன் மேல் பொதிகை மலையை அரசனாக்கி அவனுக்கு சந்திர பாண்டியன் என்னும் பெயர் புனைந்தார்.
 பின்னர் கிரீடம் முதலியவற்றை தரித்து பின்பு கைய  மலையையும், தருத்தார மலையையும்,  சோழன் என்னும் பெயருடைய  இரண்டு அரசராக்கி மகுடம்  முதலியவை எல்லாம் அணிந்து பெருமை சேர்த்தார். பின்னர் வேண்டிய வரங்களையும் தந்து அருள் புரிந்தார் என்பது வரலாறு.



பொதிகை மலையின் மீது வந்த அகத்தியர் சிவபெருமான் திருமணக் கோலம் காண வேண்டும்  என்று நினைத்து இருந்த காலமும் உண்டு சொன்ன வாக்கின்படி சிவபெருமான் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி பொதிகை மலைச்சாரலில் உள்ள பாபநாசத்தில் கல்யானதீர்த்தம் என்னும் இடத்தில்  ஸ்ரீ அகஸ்தியருக்கும் அம்மை உலோபமுத்திரை அவர்களுக்கும் கல்யாண கோலத்தில் வந்து காட்சி தந்தார்.
 இன்னும் பலவற்றை தன்னுள் அடக்கி இருக்கிறது பாபநாசம் வரலாற்று சிறப்புமிக்க இத்திருக்கோவில் சென்று வணங்கினால் பாவங்கள் நீங்கும் என்பது நிச்சயம்.


01 January 2020

ஏரல் சேர்மன் அருணாசலம் சுவாமி ஜீவ சமாதி...





மனிதனாக பிறந்து மாமனிதராக வாழ்ந்து தெய்வமாகி, தன்னை அடிபணிந்து கை தொழுவோர்க்கு அருள்புரிகிறார். ஏரல் சேர்மன் அருணாசலம் சுவாமி. மனநோய், பேய்பிடி, விஷப் பூச்சிக்கடி, விஷப் பூச்சிகளின் தொல்லைகள், வீண்பயம், குடும்ப பிரச்னை, மன அழுத்தம் உள்ளிட்ட பிரச்னைகளை போக்கும் பரிகார தலமாக இந்த கோயில் திகழ்கிறது. தென் மாவட்ட மக்களின் வழிபாட்டு தெய்வங்களில் ஏரல் சேர்மன் சுவாமியும் ஒருவர். தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள கிராமம் மேலப்புதுக்குடி. இங்கு பிறந்த குமாரசாமி நாடார் ஒரு நாள் தனது ஊருக்கு வந்த முனிவர் ஒருவரை தனது வீட்டுக்கு அழைத்து வந்து, பாத பூஜை செய்து, அருஞ்சுவை விருந்து அளித்தார். அப்போது அந்த முனிவர் ஒரு தெய்வீக ஏடு ஒன்றை குமாரசாமியிடம் கொடுத்தார். இந்த ஏட்டை தொடர்ந்து படித்து வந்ததன் பயனாக, மந்திரங்கள் சிலவற்றை கற்றுக் கொண்டு தினமும் தியானமும், பூஜையும் செய்து வந்தார்.

கோவிலின் முகப்புத்தோற்றம்

இதனால் அவருக்குள் ஒரு சக்தி உருவானது. அதன் பயனாக பாம்பு, பூரான் போன்ற கொடிய விஷ ஜந்துகள் கடித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு வைத்தியம் பார்த்தார். பார்வை பார்த்தல் என்று அப்பகுதியில் இதை கூறுவர். குமாரசாமி நாடாரிடம் பார்வை(வைத்தியம்) பார்த்ததால் விஷம் இறங்கியது என்று அப்பகுதி மட்டுமன்றி சுற்றுவட்டாரங்களிலும் பேச்சு பரவலாகியது. அந்த காலக்கட்டத்தில் தேள்கடி, பூரான் கடி முதலானவை அதிகமாக ஏற்படுவதுண்டு, சிலருக்கு விஷப்பூச்சிகள் கடித்து உடலில் சரும நோய்கள் ஏற்படுவதும் உண்டு. அவ்வாறு வரும் சரும நோய்களிலிருந்து விடுபடவும், விஷமிறக்கவும் மதுரை தெற்கே இருக்கும் பெரும்பாலான மக்கள், ஏரல் வந்து குமாரசாமி நாடாரிடம் பார்வை பார்த்து செல்வார்கள். இவருடைய புகழ் நாளுக்கு நாள் மேலும் பரவியது. இவரது மறைவிற்கு பின் இவருடைய சந்ததிகள் இந்த பணியை செய்து வந்தனர். அந்த வழித்தோன்றலில் ஒருவர் ராமசாமி நாடார்.




இவரது மனைவி சிவனணைந்தம்மாள். இவர்களுக்கு திருமணம் முடிந்து ஆண்டுகள் பல கழிந்த பின்னும் குழந்தை இல்லை. ஒரு நாள் தர்மம் கேட்டு, அவர்கள் இல்லம் வந்த காவி உடை தரித்த துறவி, “நீ செட்டியாபத்து சென்று அங்கிருக்கும் ஐந்து வீட்டு சாமியைத் தரிசனம் செய்து வா. உனக்கு ஆண் மகன் பிறப்பான்” என்று கூறினார். (ஏரலில் இருந்து 28 கி.மீ தொலைவில் உள்ளது செட்டியாபத்து) அதன்படி தம்பதிகள் வண்டி கட்டி, செட்டியாபத்து கோயிலுக்கு சென்று தரிசித்து வந்தனர். அன்றைய தினம் ராமசாமிக்கு கனவு வந்தது. அதில் முந்தைய நாள் தர்மம் கேட்டு வந்த காவித்துறவி தோன்றி, உனக்கு ஆண் குழந்தை பிறக்கும், அதற்கு அருணாசலம் என்று பெயரிடு. அவன் தெய்வ நிலை கொண்ட குழந்தையாக வளருவான் என்று கூறினார். நாட்கள் சில சென்ற நிலையில் சிவனணைந்தம்மாள் கர்ப்பமுற்றாள். அதை வைத்தியச்சி கைபிடித்து சொன்னபோது மிகவும் சந்தோஷம் கொண்டனர் தம்பதியினர். ஏழு மாதமான நிலையில் சிவனணைந்த அம்மாளுக்கு மயக்கம், வாந்தி, சோர்வு என கருவுற்ற பெண்ணுக்கு இருக்கிற எந்த செயலும் இவரிடத்தில் இல்லை, இதனால் சற்று குழப்பம் அவர்களுக்கு உருவானது.


இப்படி இருக்கையில் நிறைமாதமாக இருந்த சிவனணைந்தம்மாள், விக்கிரம ஆண்டு புரட்டாசி திங்கள் பதினெட்டாம் நாள் உத்திர நட்சத்திரத்தில் அதாவது 2.10.1880 அன்று அழகான ஆண்குழந்தையைப் பெற்றெடுத்தாள். குழந்தைக்கு அருணாசலம் என்று பெயரிட்டனர்.  உடனே ராமசாமி நாடார் வேண்டுதல் நிறைவேறிய சந்தோஷத்தில் செட்டியாபத்து கோயிலில் அழகிய மண்டபம் கட்டினார். அருணாசலம், மூலக்கரையில் இருந்த பாடசாலையில் கல்வி கற்றார். ஏரல், சிறுத்தொண்டநல்லூர், பழையகாயல் போன்ற கிராமங்களில் பெருமளவில் சொத்துகள் இவர்களது குடும்பத்துக்கு இருந்தது. அருணாசலம், பண்ணைவிளையில் மேல்படிப்பு படித்தார். அங்கு அவர் ஆங்கிலத்தையும் கற்றுக்கொண்டார். வாலிபப் பருவம் அவரை நெருங்க, அவர் தனது எண்ணத்தை இறை தேடலில் செலுத்தி வந்தார். தனது வழி முன்னோடிகள் செய்து வந்த விஷக்கடி மருத்துவத்தினையும் இவர் தொடர்ந்து செய்து வந்தார். இதனால் இப்பகுதி மக்களிடம் பேராதரவு இருந்தது. இதற்கிடையில் இவரது அறிவாற்றலையும், ஆங்கிலப் புலமையையும் கண்ட அன்றைய ஆங்கில அரசு இவரை சிறுதொண்ட நல்லூருக்கு முன்சீப்பாக (நிர்வாக அதிகாரி) நியமித்தார்கள்.
ஜீவ சமாதியின் கருவறை தோற்றம் 


அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட அருணாசலம், அதைச் சிறப்பாக செய்து வந்தார். சிறுவயதாக இருந்தாலும் வரி வசூல் செய்வது. அந்தக் கிராமத்தில் ஏற்படும் சிறு சிறு சண்டைகளை பஞ்சாயத்து பேசி முடிப்பது என்று 8 ஆண்டுகளாக இப்பணியை மிகச்சிறப்பாக செய்து வந்தார். இதற்கிடையில் ஒரு நாள் செய்த வசூலை உண்மை நிலவரமாக சொல்லாமல், குறைத்து மாவட்ட அதிகாரிக்கு சொல்லுமாறு, மேலதிகாரியான வருவாய்த்துறை அதிகாரி இவரிடம் கூற, பொய் சொல்ல வேண்டுமா என்று நினைத்த இவர் மறு நிமிடமே தான் வகித்து வந்த பதவியை துறந்து விட்டார். அந்தப் பதவியை விட்ட உடனே ஆன்மிகத்தில் தனது ஈடுபாட்டை அதிகமாக்கினார். சுற்று வட்டார கிராமங்களில் இருக்கும், தங்களது குடும்ப சொத்துகளை பார்வையிட அருணாசலம் வெள்ளை வேட்டியும், கோட்டும் அணிந்து தலைப்பாகையுடன் வெள்ளைக் குதிரையில் ஏறி செல்வார். அவருடைய ராஜ தோரணையை கண்டு உறவினர்களும், ஊராரும் வியந்து நிற்பர்.
நெய் விளக்கேற்றி வேண்டுதல் வைக்கும் மகளிர் அணியினர்.


இதற்கிடையில் அருணாசலத்துக்கு திருமணம் செய்ய உறவினர்கள் ஏற்பாடு செய்து வந்தனர். இதையறிந்த அவர் 28 வயது ஆகட்டும். அப்ப பார்த்துக்கலாம் என்று கூறிவிட்டார். அப்பழுக்கற்ற மனிதராய், பிரம்மச்சாரியாக வாழ்ந்த இந்த மகானை கவனித்துக் கொண்டே வந்த, அப்போதைய மாவட்ட கலெக்டர்கள் பிஷப்வெஸ்டன், பிஷப்ஸ்டோன் ஆகியோர் பரிந்துரைப்படி ஏரல் பஞ்சாயத்துக்கு சேர்மனாக (தலைவராக) அருணாசலத்தினை நியமித்தார்கள். அந்தக் காலங்களில் ஊராட்சி, பேரூராட்சி தலைவர்களைகூட சேர்மன் என்று அழைப்பது வழக்கம். சேர்மனான அருணாசலம், ஏரலில் பள்ளிக்கூடங்களைத் தொடங்கினார். தெருவிளக்குகளை அமைத்தார். அந்த விளக்குகள் தற்போது போல அல்லாமல் எண்ணெயால் எரியும் தீப விளக்குகள். இந்த விளக்குகள் இரவு நேரங்களில் அணைந்து விடாமல் இருக்க பணியாளர்களை நியமனம் செய்தார். ஊருக்குள் கழிவு நீர் தங்காமல் இருக்க வடிகால் வசதி செய்து கொடுத்தார். ஊராட்சி எல்லைக்குள் மரக்கன்றுகள் நட்டார். அனைத்து மக்களிடமும் அன்போடு பழகி வந்தார்.  
அருணாசலம் ஐயாவை மனமுருக பிரார்த்திக்கும் நமது குழுவினர்.


அதிகம் பேசாமல் அமைதியுடன் திகழ்ந்த அருணாசலம், தனது ஆன்மிக சக்தியால், பின் நடப்பதை முன் அறியும் திறன் பெற்றார். ஒரு நாள் அப்பகுதியைச் சேர்ந்த  பால்நாடார் என்பவரைப் பாம்பு கடித்து விட்டது. அப்போது அவரைக் கடித்த பாம்பையே திரும்ப வரவழைத்து அந்த விஷத்தினை உறிஞ்சச் செய்தார். இதைக்கண்ட அனைவரும் மெய் சிலிர்த்தனர். அவருக்குள் ஏதே ஒரு தெய்வ சக்தி இருப்பதை அந்த ஊர்காரர்களும், உறவினர்களும் உணர்ந்தனர். இந்த சம்பவத்திற்கு பிறகு அவரை சேர்மன் சாமி என்றே அழைக்கத் தொடங்கினர். ஒரு சமயம் அவரது தங்கை ஒருவர் புளியங்காடு என்ற ஊரில் வசித்து வந்தார். அவர், சேர்மனிடம் ‘‘அண்ணே, என் வீட்டுக்கு வரமாட்டீங்களா’’ என்று கேட்டதற்கு, அவர் தனது போட்டோ ஒன்றைக்கொடுத்து இதை வைத்து என்னை பார்த்துக் கொள் என்று கூறினார். அவர் போட்டோவை வாங்கிக்கொண்டு சென்ற சில நாளில் போட்டோ வைக்கப்பட்டிருந்த அந்த அறை திடீரென்று தீ பிடித்து எரிந்தது. அப்போது அறை முழுவதும் எரிந்து சாம்பலானது ஆனால் சேர்மன் சுவாமியின் படம் மட்டும் நெருப்பில் எரியவில்லை இது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது.
அங்கு துப்புரவு பணிபுரியும் ஏழை பெண்மணிக்கு புடவை கொஞ்சம் பணம் நமது குழுவின் சார்பாக கொடுத்தபோது 



ஒரு நாள் காலை சேர்மன் சுவாமி அருணாசலம் எழுந்தவுடன் தனது தம்பி  கருத்தபாண்டியை அழைத்து, காலம் கனித்து விட்டது. நான் சிவனடி செல்லும் நாள் வந்துவிட்டது. வருகிற அமாவாசை அன்று ஆடிமாதம் 13ம் நாள் செவ்வாய்க் கிழமை (27. 07. 1908) அன்று உச்சிப் பொழுதில் என்னை எம்பெருமான் சிவனோடு அர்ப்பணித்துக் கொள்வேன். என்னுடைய உடலை விட்டு ஜீவன் போனாலும் நான் எப்போதும் உங்களுடன்தான் இருப்பேன். என்னை நம்பி வரும் பக்தர்களுக்கு வேண்டிய வரம் அளித்து வருவேன். அவர்களை காலம் காலமாக காத்துவருவேன். என் ஆவி பிரிந்தவுடன் நமது குல வழக்கப்படி என் உடலை எரித்து விடாதீர்கள். இறந்தோருக்குச்செய்யும் சடங்குகளை செய்து அப்படியே இருந்த நிலையில் குழி தோண்டி வையுங்கள். அப்போது வானத்தில் கருடன் ஒலி கொடுத்து என்னை மும்முறை வலம் வருவார். கருடன் நிழல் என் உடல் மீது படும். அப்போது என்னை உட்கார்ந்த நிலையில் மண்ணையும் மலரையும் கொண்டு மூடிவிடுங்கள். செய்ய வேண்டிய சடங்குகளை செய்யுங்கள் என்று முக மலர்ச்சியோடு சேர்மன் அருணாசலம் சுவாமிகள் கூறினார்.



சுவாமிகள் வாக்கினைக் கேட்ட கருத்தபாண்டி நாடார் கலங்கி கண்ணீர் வடித்தார். தன்னுடைய இறுதிக் காலம் இதுதான் என முடிவு எடுத்த சேர்மன் சுவாமிகள் பஞ்சாயத்து அலுவலகத்துக்கு சென்றார். அங்குள்ள கோப்புகள் அனைத்தினையும் பார்த்து முறையாக கையொப்பம் வைத்தார். 28. 07. 1908. அவர் கூறிய நாள் வந்தது. நிறைந்த அமாவாசை முன்னரே கருத்தபாண்டி நாடார் மூலம் தகவல் அறிந்த உற்றார், உறவினர், நண்பர்கள், நகர மக்கள் என பலரும் அவரது இல்லம் முன்பு ஒன்று கூடினர். பகல் 11 மணிக்கு சேர்மன் அருணாசலம் சுவாமி இதோ வருகிறேன் என்று கூடியிருந்த அனைவரையும் பார்த்து புன்னகை சிந்தும் பொன்முகத்தோடு கையசைத்தபடி தனது அறைக்குள் சென்றார். கட்டிலில் படுத்தார். கண்களை மூடினார். உச்சிப் பொழுது வந்தது. (பகல் 12 மணி) உறங்கிய நிலையிலேயே சிவனடி அடைந்தார். சுவாமி கூறியபடி தென்மேற்கில் உள்ள தாமிரபரணி நதிக்கரையில் படர்ந்த ஆலமரத்தின் அடியில் சுவாமியின் உடலை அமர்ந்த கோலத்தில் வைத்தனர். உரிய சடங்குகள் நடத்தப்பட்டது. கருடன் சங்கொலியுடன் சுவாமியை வலம் வந்தது. கருடன் நிழல் சுவாமி உடலில் பட்டது.



சுவாமிகள் படித்த நூல்கள், பயன் படுத்திய விலை மதிப்பு மிக்க பொருள்கள், உயர்ந்த அணிகலன்கள் ஆகியவற்றை சுவாமியின் காலடியில் வைத்து சுவாமி அமர வைக்கப்பட்டிருந்த குழியை மலர்களாலும், மண்ணாலும் நிரப்பினார்கள். சுவாமி தெய்வ நிலையடைந்த ஒரு சில நாளில் அவர்களோடு வைக்கப்பட்ட விலை உயர்ந்த பொருள்களைத் திருடிச் சென்றிட திருடர்கள் குழியைத் தோண்ட முயன்றனர். அப்போது, பாம்புகள் கூட்டம் படையெடுத்து வந்தது. அவர்களை படமெடுத்து விரட்டியது. அஞ்சி நடுங்கிய திருடர்கள் ஓடினர். இந்தக்காட்சி ராமசாமி நாடாருக்கு கனவில் தெரிந்தது. அவர் உடனே ஓடி வந்து பார்த்தார். அங்கு மண் தோண்டப்பட்டு இருப்பதையும் அதன் அருகே கடப்பாறை மற்றும் மண்வெட்டி இருப்பதையும் கண்டார். உடனே இனி தனது தெய்வ மகனுக்குக் கட்டிடம் கட்ட வேண்டும் என்று நினைத்து சிறிய கட்டிடம் ஒன்றை கோயிலாகக் கட்டினார். எப்போதுமே ஆடு மாடு மேய்க்கும் சிறுவர்கள் மீது சுவாமிக்கு அலாதி பிரியம் உண்டு. சுவாமி சமாதி நிலை அடைந்தாலும் அந்தப் பிரியம் அவரை விட்டுப் போகவில்லை. ஆகவே அந்த சிறுவர்களுக்குக் காட்சி கொடுத்தார். சுவாமிகள் உயிரோடு இருந்த போது அவரிடம் நோய் தீர்க்க மருந்து வாங்கி உண்டவர் ஆதிதிராவிடப்பெண்ணான சுடலைப் பேச்சி.

அவர் தனக்கு நோய் தீரவில்லையே என்று சுவாமி சமாதிக்கு வந்து வேண்டி நின்றாள். நோயின் ரணம் தாங்காமல் அங்கேயே அழுதாள். உடனே அந்தப் பெண்ணுக்கு காட்சி கொடுத்த சுவாமி தீர்த்தமும் நிலக்காப்பும் உனக்கு மருந்தாகும் என்று கூறினார். அதன்படி அவரது நோய் தீர்ந்தது. சேர்மன் சுவாமிகளின் அருளாற்றிலின் தனிச்சிறப்பு மற்ற மாநிலங்களிலும் பரவியது. அப்பகுதியைச் சேர்ந்த மரியாள் என்ற சிறுமி  பூப்படையவில்லை. அவளது பெற்றோர்கள் பல மருத்துவரிடம் சென்று மருத்துவம் பார்த்தும் பலன் அளிக்கவில்லை. அந்த பெண்ணின் பெற்றோர் தெரிந்தவர்கள் மூலம் அறியப்பெற்று சேர்மன் சுவாமியின் கோயிலுக்கு மகளை அழைத்து வந்தனர். கோயிலுக்கு வந்த, அவர்கள் வீடு செல்வதற்கு முன்பு ஆற்றின் மறு கரையில் வைத்தே அவள் பூப்பெய்தினாள். அவர்கள் குடும்பம் ஆண்டாண்டுகளாக இங்கு வந்து வணங்கி செல்கின்றனர். கிறிஸ்வர்கள் புதைக்கப்பட வேண்டிய இடத்தில் அருணாசல சுவாமியை புதைத்து விட்டனர். ஆகவே அங்கு எழுப்பப்பட்டிருக்கும் சுவாமியின் கோயிலை அப்புறப்படுத்த வேண்டும் என்று அப்பகுதியை சேர்ந்த சிலர் கலெக்டரிடம் கோரிக்கை வைத்தனர். அப்போது கலெக்டர்களாக இருந்தவர்கள் மெக்வர், டேவிட்சன் ஆகியோர் ஆவர்.

அவர்கள் இந்தக் கோரிக்கையை பிஷப்பாக இருந்த ஆர்தர்வில்லியத்திடம் தெரிவித்தனர். இதனையடுத்து கலெக்டர்கள், பிஷப்புடன் சேர்ந்து நெல்லையில் இருந்து ஏரலுக்கு குதிரையில் வந்தனர். கோயிலுக்கு வரும் முன்பு அவர்கள் வந்த குதிரைகள் முரண்டு பிடித்து நின்றன. ஆகவே அவர்கள் குதிரையை விட்டு இறங்கி சுவாமியின் கோயிலுக்கு வர, கோயிலின் முன்பு சேர்மன் அருணாசலம் சுவாமி கணக்கு எழுதுவது போல அமர்ந்து இருந்தார். அந்தக் காட்சியை பார்த்த அவர்கள் வேர்வை கொட்ட அந்த இடத்தில் காலணிகளை கழற்றி விட்டு தனது தொப்பிகளை இடுப்பில் இறக்கி வைத்து விட்டு சுவாமியை வணங்கினர். நெல்லை சென்று சேர்ந்ததும் கலெக்டர், கோயில் உள்ள பகுதியான இரண்டு ஏக்கர் நிலத்தினை முறைப்படி பட்டாபோட்டு கொடுத்துவிட்டார். இந்த வரலாறு அரசு ஆவணங்களில் உள்ளது. சுவாமியின் தெய்வ நிலை பெற்ற ஆண்டு 1908. அன்றிலிருந்து மக்கள் ஏரலுக்கு கூட்டம் கூட்டமாக வந்து தரிசனம் செய்து வருகின்றனர். இது குறித்து ஆங்கிலேய கலெக்டர் பேட்துரை என்பவர், 1916ம் ஆண்டு எழுதிய அரசு குறிப்பேட்டில் கூறியதாவது.






ஏரல் நகரில் சில ஆண்டுகளுக்கு முன்பு பஞ்சாயத்து சேர்மனாக இருந்த அருணாசல நாடார் என்பவரது கோயில் பல அற்புதங்களை நிகழ்த்தி வருகின்றது. தீராத நோயால் கொடுமையடைந்த ஆதிதிராவிட பெண் ஒருத்தி கனவில் வந்த அருணாசல நாடார் தனது சமாதியைச் சுற்றி வந்தால் உனது நோய் குணமாகும் என்று கூறினார். அதன்படி அந்தப் பெண் சுற்றி வந்தாள். அவளது நோய் குணமானது. அந்த அற்புதத்தின் செய்தி சுற்றி வட்டாரத்தில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.
சேர்மன் அருணாசல நாடாரின் சமாதி, தாமிரபரணி கரையில் உள்ளது. தற்போது நாள் தோறும் அங்கு பூஜை நடந்து வருகிறது. அங்கு சேர்மனின் போட்டோ பிரேம் செய்து வைக்கப்பட்டுள்ளது. செவ்வாய், வெள்ளி அமாவாசை பௌர்ணமி தினங்களில் இவரை தரிசிக்க சாதி, மதம் பாராமல் வரும் பக்தர்கள் கூட்டம் கூட்டமாக தாமிரபரணிக் கரையில்  கூடுகிறார்கள். பில்லிசூனியத்தால் பாதிக்கப்பட்டவர்கள் அங்குள்ள புற்று மண்ணை மருந்தாக உண்ணுகிறார்கள். உடம்பிலும், கை, கால்களில் பூசி வருகின்றனர். அவர்களுக்கு உடனே குணம் தெரிகிறது என்று ஆங்கிலேய கலெக்டர் பேட்துரை என்பவர் திருநெல்வேலி கெஜட்டர் என்ற நூலில் எழுதியுள்ளார்.

மனிதனாக வாழ்ந்து தெய்வமாக வணங்கப்படும் சேர்மன் சுவாமி சமாதி, இருக்கும் இடத்தில் சுவாமியின் தந்தை தனது கைகளால் சிறிது மண்ணை எடுத்து லிங்கம் போல் பிடித்து வைத்துள்ளார். அந்த லிங்கம் தான் இன்று இரண்டு அடிக்கு மேல் வளர்ந்து உள்ளது. தாமிரபரணி ஆற்று நீரில் லிங்கத்தினை பல ஆண்டுகளாக அபிஷேகம் செய்துவந்தும் அந்த லிங்கம் கரையாமல் உள்ளது. அந்த லிங்க அபிஷேக தீர்த்தத்தினால் பல நோய்கள் தீருகிறது. குறிப்பாக வலிப்பு நோய், மனநோய், அரிப்பு, கட்டி என பல நோய்கள் தீருகிறது. சுவாமிகள் ஜீவ சமாதி அடைந்து 100 வருடங்களைத் தாண்டி விட்டது. ஆனால் தற்போதும் சுவாமிகள் பல விதத்தில் தனது ரூபத்தினை மக்களுக்குக் காட்டி வருகிறார். திருச்செந்தூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரி முதல்வராக பணியாற்றிய சற்குணம் என்பவர் ஒருசமயம் ஏரலுக்கு சுவாமியைக் கும்பிட குடும்பத்துடன் வந்துள்ளார். அவர்கள் தாமிரபரணியில் நீராடும் போது அவரது மகன் நீரில் முழ்கி விட்டான். உடனே அவர் ‘‘சேர்மா! என் மகனை காப்பாற்று’’ என குரல் எழுப்பியுள்ளார்.

அப்போது அங்கு வந்த பெரியவர் ஒருவர் ஆற்றில் இறங்கி அவர் மகனை காப்பாற்றியுள்ளார். அதன் பின் அவர் மகனை அன்போடு கட்டி அரவணைத்து விட்டு காப்பாற்றிய பெரியவருக்கு நன்றி சொல்ல அவரை கூப்பிட்ட போது அவரைக் காணவில்லை. பல இடங்களில் தேடியும் அவரைப் போன்ற உருவத்தில் யாரும் இங்கே நடமாடவே இல்லை என்று அக்கம், பக்கத்தினர் கூறிவிட்டனர். ஆகவே மகனைக் காப்பாற்றியது சேர்மன் சுவாமிகளே என்று அவர் மட்டுமல்ல அனைவரும் நம்பினர். ஏரல் சுவாமி கோயிலில் மந்திர மை இடுவது வழக்கம். இந்த மந்திர மை ஆல், அரசு, வேம்பு, துளசி, வில்வம், சந்தனம், கற்பூரம் போன்ற பொருட்களைச் சேர்த்து யாகத்தில் நெய்யிட்டு எரித்து பஸ்பமாக்கி அதனை சுவாமியின் முன்னர் வைத்து வழிபாடு செய்து தருகிறார்கள். இந்த மந்திர மை பக்தர்கள் நெற்றியில் இடும் போது திருஷ்டி, பேய், பிசாசுகள் ஓடிப்போய்விடும். என்பது அனுபவபூர்வமான நம்பிக்கை.



இதுதான் அந்த மந்திர மை 

குலசேகரபட்டினம் அருணாசலப் பிள்ளை என்பவர் சுவாமி கோயிலுக்குத் தவறாமல் அரிசி தருவது வழக்கம். ஒரு முறை இரவில் தென்திருப்பேரையில் இருந்து அவர் அந்த அரிசியை ஒரு நார்ப்பெட்டியில் வைத்துக் கொண்டு ஏரலுக்கு வந்தார். அப்போது ஆற்றில் வெள்ளம் வந்த காரணத்தினால் தனியாக எப்படி அக்கரைக்குப் போவது என்று அவர் தவிக்க ஒரு பெரியவர் தனது பிரம்பை அவர் கையில் கொடுத்து இதைப் பிடித்துக் கொண்டு என் பின்னால் வா என்றார்.

அங்கு துப்புரவு பணிபுரியும் ஏழை பெண்மணிக்கு புடவை கொஞ்சம் பணம் நமது குழுவின் சார்பாக கொடுத்தபோது 


பிள்ளை அந்த பிரம்பை பிடித்தவுடன் மறுகரை வந்து விட்டதை உணர்ந்தார். சரி நமக்கு உதவி செய்பவருக்கு ஏதாவது செய்யலாம் என்று அவர் அந்தப் பெரியவரைத் தேடிய போது அவரைக் காணவில்லை. உடனே இங்கே இருந்த பெரியவரை எங்கே என்று அங்கிருந்தவர்களிடம் கேட்டார்”. பெரியவர் யாரு வந்தா... நீங்க ஒத்தையில் வாறீங்களேன்னுதான் நாங்க இங்க நின்னு உங்களை பாத்துக்கிட்டு இருக்கோம்” என்று சொன்னார்கள்.

அப்படியென்றால் அவரை வழிநடத்தி வந்தது சேர்மன் சுவாமிதான் என்று அனைவரும் கருதினர். ஆதி சங்கரர் தமது முப்பத்தியிரண்டு வயதிலும், சுந்தரர் தனது பதினெட்டாவது வயதிலும், ஏரல் சேர்மன் சுவாமி தனது 28வது வயதிலும் இறைவனின் திருவருள் பெற்று தெய்வமானார்கள். இங்கு சித்திரைத் திருவிழா, ஆடி அமாவாசை, தை அமாவாசை.ஆகிய மூன்று திருவிழாக்கள் முக்கிய விழாக்களாகும். மற்றும் மாதந்தோறும் வரும் அமாவாசையிலும், பௌர்ணமியிலும் சிறப்பு பூஜைகள் நடக்கிறது. சுவாமியின் திருக் கோலம் இங்கு ராஜ திருக் கோலமாகும். நின்ற கோலத்தில் சுவாமி காட்சி தருகிறார். இங்கு நான்கு கால பூஜைகள் நடக்கிறது. ருநெல்வேலியிலிருந்து - திருச்செந்தூர் செல்லும் மெயின் ரோட்டில் தென்திருப்பேரையில் இருந்து இடதுபுறம் திரும்பிச் சென்றால் ஏரல் தாமிரபரணிக்கரையில் சேர்மன் அருணாசல சுவாமிகள் அருளைப்பெறலாம்.


முகவரி :-