Subscribe

BREAKING NEWS

23 December 2019

அற்புதங்களை நிகழ்த்தும் ஆழ்மனதின் சக்தி(ரகசியம் 7)...


ஆழ்மனம் இன்றியமையாத செயல்முறைகளை கட்டுப்படுத்துகிறது .
அது உங்களுடைய அனைத்து பிரச்சனைகளுக்கான விடைகளையும் கொடுக்கின்றது. என்பதை மறக்கவேண்டாம் .

 தினமும் உறங்கச் செல்வதற்கு முன் உங்கள் ஆழ் மனதில் ஏதோ ஒரு குறிப்பிட்ட வேண்டுகோளை வெளிப்படுத்துங்கள் . அது உங்களுடைய இலட்சியமாகஇருக்கலாம்,அல்லதுஆசை,வேண்டுகோள்,ஆரோக்கியம்,
நியாமனா கனவு போன்ற எதுவாகவும் இருக்கலாம் ,  அதன் வியத்தகு செயல்பாட்டின் சக்தியை உங்களுக்கு நீங்களே சோதித்துகொள்ளுங்கள்.
 நீங்கள் உங்கள்  ஆழ்மனதில் எவற்றையெல்லாம் பதிவு செய்கின்றீர்களோ அவையெல்லாம் புறவுலகில் சூழ்நிலைகள் ஆகவும் அனுபவங்களாகவும்  வெளிப்படும் என்பதை நீங்கள் மறக்கவேண்டாம் .எனவே உங்கள் வெளி மனத்தில் கொண்டாடப்படும் அனைத்து எண்ணங்கள் குறித்தும்கருத்துக்கள் குறித்தும் நீங்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
 காரணமும் விளைவும் என்னும் கோட்பாடு உலக கோட்பாடு ஆகும் காரணம் உங்களது எண்ணம் விளைவு உங்களது எண்ணத்திற்கு உங்கள் ஆழ்மனம் கொடுக்கும் இயல்பான செயல் விடை ஆகும். அதனால் உங்கள் எண்ணங்கள் குறித்து எச்சரிக்கையாக இருங்கள்.
 நிறைவேறாத ஆசைகள் தான்  எல்லாவிதமான விதிகளுக்கும் காரணம். நீங்கள் தடைகள்தாமதங்கள்மற்றும் சிரமங்கள்ஆகியவற்றில் சிக்கி உழன்று கொண்டிருந்தால் உங்கள் ஆழ் மனம் அவற்றுக்கேற்றார்போல் செயல் விடை அளிக்கும். இதன் மூலம் உங்களை நோக்கி வரும் நல்லவற்றை நீங்களே தடுத்து விடுகிறீர்கள்.
 எனக்கு இந்த விருப்பத்தை கொடுத்த ஆழ்மனமே அதை இப்போது நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது என்று விழிப்புணர்வோடு தொடர்ந்து உறுதியாக கூறி வந்தால் வாழ்க்கைக் கோட்பாடு உங்கள் ஊடாக சீராகவும் இணக்கமாகவும் பாயும். இது அனைத்து முரண்பாடுகளையும் கரைத்துவிடும்.   கவலை,  மனக்கலக்கம் மற்றும் பயம் ஆகியவை உங்களது இதயம் நுரையீரல்கள் மற்றும் பிற உறுப்புகளின் இயல்பான செயல் பாட்டிற்கு இடையூறு விளைவிக்கும்.என்பதை மறக்கவேண்டாம்.
 உங்கள் ஆரோக்கியம் மற்றும் சமாதானம் குறித்த எண்ணங்களை உங்கள் மனதிற்குள் திரும்ப திரும்ப கொண்டுவாருங்கள் அது உங்களது உடலின் அனைத்து செயல்பாடுகளும் மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டுவரும்.
 உங்கள் மனத்தை சிறந்தவற்றில் எதிர்பார்ப்பதில் சுறுசுறுப்பாக இருக்கச் செய்யுங்கள் உங்கள் ஆழ்மனம் உங்கள் வழக்கமான சிந்தனைக்கு ஏற்றவாறு விசுவாசத்துடன் அவற்றை மீண்டும் உருவாக்கித்தரும்.
 உங்கள் பிரச்சினைக்கு சுமூகமான முடிவு மகிழ்வான தீர்வும் ஏற்படுவது போல் கற்பனை செய்யுங்கள் உங்கள் விருப்பம் நிறைவேறி விட்டால் கிடைக்கும் மகிழ்ச்சியை சதா நினைத்துகொடே இருங்கள் அந்த  கற்பனையும் உணர்வும் உங்கள் ஆழ் மனதால் ஏற்றுக் கொள்ளப்பட்டு உங்கள் அனுபவமாக மாறும். 

குணமாக்கும் சக்தி உங்கள் ஆழ்மனதில் உள்ளது என்பதை உங்களுக்கு நீங்களே பலமுறை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள் விசுவாசம் என்பது நிலத்தின் ஊன்றப்பட்ட விதையை போன்றது ஒரு கருத்து என்னும் விதையை உங்கள் மனதில் விதையுங்கள் எதிர்பார்ப்புடன் அதற்கு நீரூற்றி உரம் இடுங்கள் அது செழித்து வளர்ந்து வெளிப்படும்.
 ஒரு புது கண்டுபிடிப்பு அல்லது சுகம் லட்சிய கணவு குறித்த உங்களது எண்ணம் உங்கள் மனதில் உண்மையான உருவமாக உள்ளது அதனால் அது உங்களிடம் இப்போதே இருக்கின்றது என்பதை நீங்கள் நம்ப தடைபடலாம் உங்கள் எண்ணம் திட்டம் அல்லது கண்டுபிடிப்பின் வெளிப்பாட்டில் நம்பிக்கை கொள்ளுங்கள் நீங்கள் அப்படி செய்தால் அது நிச்சயமாக புறவுலகில் வெளிப்படும்.
 மற்றவர்களுக்காக பிரார்த்திக்கும் போது முழு நம்பிக்கையுடன் நடக்கும் என்பதை குறித்த உங்களது அமைதியான உள்ளார்ந்த அறிவு அடுத்தவருடைய ஆழ்மனதில் உள்ள எதிர்மறையான எண்ண அமைப்புகளை மாற்றி அற்புதமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடியது என்பது நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
 பல்வேறு புனித தலங்களில் ஏற்பட்டதாக நாம் கேள்விப்படும் அதிசய குணங்கள் அனைத்தும் ஆழ்மனத்தின் மீது தாக்கத்தை ஏற்படுத்தி அதன் குணமாக்கும் சக்தியை விடுவிக்கும் கற்பனைகளும் கண்மூடித்தனமான நம்பிக்கையாலும் தான் விளைகின்றது.பேயோட்டுதல் ,குறி சொல்லுதல் மற்றும்,பிரார்த்தனை போன்று.
 எல்லா வியாதிகளும் நம் மனதில் தான் உருவாகின்றன நம் மனதில் அதற்கான ஓர் எண்ண ஓட்டம் இல்லாமல் நம் உடலில் எதுவுமே ஏற்படுவதில்லை.
 தூண்டுதல் மூலம் எந்த ஒரு வியாதிக்கான அறிகுறியையும் உங்களிடத்தில் ஏற்படுத்த முடியும் அதாவது கர்ப்பனைகேற்ப நிகழ்வுகளை புறவுலகில் கொண்டுவருவது. ஒருவரை ஆழ்மனதை நம்பவைத்து அவரின் உடல் இயக்கங்களை கட்டுபடுத்துவது,இதைத்தான் மெஸ்மரிசம் என்று சொல்லுவார்கள்.இது உங்கள் எண்ணத்திற்கு இருக்கும் சக்தியை தெளிவாக காட்டுகின்றது ஒரே ஒரு குணமாக்கும் செயல்முறை தான் உள்ளது அதுதான் விசுவாசம் நன்றி உணர்தல் ஒரே ஒரு குணமாக்கும் சக்தி தான் உள்ளது அது தான் உங்களது ஆழ்மனம்.

 நீங்கள் விசுவாசம் அதாவது நன்றி உணர்தல் கொண்டிருக்கும் பொருள் உண்மையானதோ இல்லையோ நீங்கள் விளைவுகளை பெறுவது உறுதி உங்கள் எண்ணத்திற்கு ஏற்ப உங்களது ஆழ்மனம் செயல் விடை அளிக்கும் விசுவாசத்தை உங்கள் மனதின் ஓர் இனமாக பாருங்கள் அது மட்டுமே போதும்.

ரகசியம் தொடரும்...

14 December 2019

சிந்திப்போம் சிலவற்றை ...


ஒரு நாள் ஒரு நண்பர் என்னைப்  பார்த்து ஒரு கேள்வி கேட்டார் நீங்க எப்ப பார்த்தாலும்  கோவில் கோவிலா சுத்திக்கிட்டே இருக்கிறீர்ளே  அதனால நீங்க என்ன சாதிச்சிங்க? அப்படின்னு ஒரு கேள்வி கேட்டார் .

அந்தக் கேள்வி சாதாரணமா எல்லாரும் கேட்கக்கூடிய ஒரு கேள்விதான் 
இந்த மாதிரியான கேள்விகள் எல்லாம் நாத்திகர்களுக்கு ஏற்படக்கூடிய ஒரு சிறிய விவாதம் ஆகும், அவர்களைப் பொறுத்தவரைக்கும் கடவுள் இல்லை, எல்லாமே தன்னுடைய முயற்சியால் மட்டுமே நடக்கும் என்பது அவர்களுடைய விவாதமாகும்.ஆனால் மரணத்தை ஏன் தடுக்க முடியவில்லை என்பதற்கு அவர்களால் பதில் தர முடியாது. ஆத்திகர்களைப் பொறுத்தவரை கடவுள் இருக்கிறார் எல்லாமே அவரால் தான் நடக்குது அவனின்றி ஓரணுவும் அசையாது இப்படி அவங்க ரொம்ப ஆழமா நினைச்சிட்டு இருக்காங்க நாத்திகர்கள் இதுக்கு ஆப்போசிட் எல்லாமே நம்ம நெனச்சா நடக்குது நாம நினைச்சா எதையும் செய்யலாம் அப்படிங்கிற ஒரு எதிர் விவாதத்தை அவங்க வைக்கிறாங்க.




ஆத்திகரை பொறுத்தவரைக்கும் கடவுள் இருக்காருன்னு அதிகார பூர்வமாக நிரூபிக்க முடியாது அதேசமயம் நாத்திகர்கள் கடவுள் இல்லை அப்படின்னு அதிகாரப்பூர்வமாக நிரூபிக்கவும் முடியாது.இது எப்படின்னா ஒரு ரூபாய் நாணயத்துல ஒருபக்கம் பூ, மறுபக்கம் தலை இருப்பது போன்று இந்தபக்கம் இவர்கள் பார்ப்பது மட்டும்தான் உண்மை மற்றது உண்மையல்ல என அவர்களது மனது நம்ப மறுக்கும். மறுபக்கம் ஆன்மீகவாதிகள் இந்தபக்கம் இருப்பது மட்டுமே உண்மை என இவர்கள் வாதாடுவார்கள் இது காலகாலமாக நடந்துவருகிற ஒரு உண்மை யாராலும் மறுக்க முடியாது. அது ஏனோ தெரியவில்லை ஒருவர் மற்றொரு பக்கம் திரும்பிப் பார்க்க தவறிவிடுகிறார்கள்,


இந்த உலகத்துல இந்த பிரபஞ்சம் நம்ம எல்லாரையும் இயக்கி கிட்டு இருக்கு (சாரி கடவுள் இயக்கிகிட்டு இருக்காரு)ஆனா அது எப்படி நடக்குது அது எப்படி சாத்தியம் இப்படிப்பட்ட விஷயங்களுக்கு யாராலும் பதில் சொல்ல முடியாது யாராலும் விளக்கவும் முடியாது.அப்படி விளக்கினாலும் முழுத்தெளிவை யாராலும் அடைய முடியாது.


ஒரு அறிஞர் தன்னுடைய மரணப்படுக்கையில் இருக்கும் போது அவர் சிரித்துக் கொண்டே இருந்தார் அதை பார்த்த மற்ற நண்பர்கள் என்னய்யா நீங்க இப்ப மரண வேதனையில் இருக்கீங்க இன்னும் கொஞ்ச நேரத்துல மரணம் கூட நிகழலாம் இந்த சமயத்தில் போய் எப்படி உங்களால சிரிக்க முடியுது அப்படின்னு அவர்கிட்ட கேட்டாங்க அதற்கு அவர் சொன்ன பதில் என்ன தெரியுமாமறுஜென்மம் இருக்கிறது அப்படின்னு ஆத்திகர்கள் சொல்றாங்க ஒருவேளை அது உண்மையாக இருந்துச்சுன்னா இந்தப் பிறவியில் நான் பட்ட கஷ்டங்கள் எனக்கு அமையப் பெற்ற இந்த அவலட்சணமான உடல்கள் எல்லாமே அழிஞ்சி அடுத்த ஜென்மத்துல ஒரு நல்ல உடல் ஒரு நல்ல வாழ்வு எனக்கு கிடைக்கும் அத நெனைச்சி சந்தோசத்துல சிரிக்கிறேன். நாத்திகர்கள் சொல்றமாதிரி மறுஜென்மம் அப்படின்னு ஒன்னும் கிடையாது என்பது உண்மையா இருந்தா இனிமே நம்ம பிறவி எடுக்கப் போறதில்லை இந்த கஷ்டங்களை அனுபவிக்க போவதில்லை எந்தவிதமான துன்பமும் நம்மள வந்து தாக்க போறதில்லை அதை நினைச்சு சந்தோஷத்துல சிரிச்சேன் அப்படின்னு சொன்னாராம் கொஞ்சம் யோசிச்சு பாருங்க எதுவா இருந்தாலும் பாசிட்டிவா திங்க் பண்ற அந்த மன நிலைமை எல்லாருக்கும் வருமா?


இதுதான் கேள்வி என்னோட நண்பர் என்னை பார்த்து கேட்ட விஷயம் கடவுள் இருக்கிறாரா இல்லையா அவர் இருக்காருன்னு ஏன் மக்களுக்கு இவ்வளவு துன்பம் வருது குறிப்பா கடவுளை வணங்க அவர்களுக்கு அதிக கஷ்டங்கள் துன்பங்கள் துரத்திக்கொண்டே இருக்கு?
 சிறந்த ஆன்மீகவாதிகள் இதற்கான பதில்களை எப்படி சொல்வாங்க அவர்கள் போன ஜென்மத்துல செஞ்ச கர்மா அதனுடைய விளைவுகள் இந்த ஜென்மத்துல இவங்க அனுபவிச்சிட்டு இருக்காங்க அப்படின்னு சொல்லுவாங்க சரி அப்படியே நம்ம நம்புவோம். ஆனால் அந்த கர்மா எவ்வளவு? நான் படும் துன்பம் எனக்கு மிக அதிகமாக தெரியுது ஆனா இந்த ஜென்மத்துல நானோ எந்த ஒரு பாவமும் செய்யல அப்படி இருக்க ஏன் நான் இவ்வளவு கஷ்டப் படுறேன். இந்த கர்மாவை அளக்கும் அளவுகோல் யாருக்கிட்ட இருக்கு, யாருக்கும் தெரியாது.ஆனா நம்முடைய தர்ம சாஸ்திரம் நமக்கு என்ன சொல்லுதுன்னாயாரையும் பழிக்காதேநயவஞ்சகம் செய்யாதேயாரையும் துன்புறுத்தாதேபொய் சொல்லாதேதிருடாதேஅடுத்தவர் பொருளை அபகரிக்காதே இன்னும் நெறைய... 

சரிங்க இதெல்லாம் கடைபிடிச்சா நம்முடைய கர்ம பாவங்கள் குறையுமா?
கர்ம பாவங்கள் குறையுதோ இல்லையோ நிச்சயமா நிம்மதியா வாழமுடியும் அப்படி நிம்மதியா வாழ்ந்தாலே கர்ம பாவங்கள் குறைஞ்சுதுன்னு வச்சுக்கோங்க.  சிம்பிள்.
அவ்வளவு ஏங்க என்னுடைய லைஃப்ல நான் பார்த்த ஒரு சில நிகழ்வுகளை இங்கே நான் சொல்ல விரும்புறேன் நான் ஒருமுறை டூவீலரில் போயிட்டு இருக்கும்போது ஒரு 50 வயது மதிக்கத்தக்க ஒருவர்  என்கிட்ட லிப்ட் கேட்டார் சரி நானும் அவரை ஏத்திக்கிட்டு போய்கிட்டே இருந்தேன் அப்போ அவர் என்கிட்ட பேசத் தொடங்கினார் தம்பி நீங்க எதுவரைக்கும் போறீங்க நானும் அந்த போற தூரத்தை சொன்னேன் அதுக்கு முன்னாடி தான் நான் இறங்க வேண்டிய இடம் வருது, தம்பி அங்க கொஞ்சம் நிறுத்திக்குங்க அப்படின்னு சொல்லிட்டு அவருடைய கதையை எனக்கு சொன்னார்.

ஒரே பையன் தம்பி, பார்த்து பார்த்து வளர்த்த அவன் கேட்டதெல்லாம் வாங்கிக் கொடுத்தேன் 25 வயசு ஆச்சு கல்யாணம் பண்ணேன் நல்லா சந்தோஷமா தான் இருந்தோம் நான் ஒரு கோவிலுக்கு இருபது வருஷமா மாலை போட்டுக்கிட்டு நடந்தே போவேன் அந்த கோவிலை இங்க நான் சொல்ல விரும்பல அது பக்தர்களுடைய அவநம்பிக்கை உருவாக்குவதாக இருக்கும் அப்புறம் அவர் மேலும் சொன்னார் இவ்ளோ பிரார்த்தனை விரதம் எல்லாம் செஞ்சி வந்தேன் .ஒருநாள் என்னுடைய ஒரே மகன் எங்களை விட்டுட்டு போய்ட்டான் தம்பி அதுல இருந்து எந்த கோவிலுக்கும் நான்போறது இல்ல சாமி கீமி எல்லாம் தூக்கிபோட்டாச்சி
ஒரு நாள் ஹார்ட் அட்டாக் 30 வயசுல  எங்க எல்லாரையும் விட்டுட்டு போயிட்டான் அப்படின்னு சொல்லிட்டு கண்ணுல தண்ணி வர்ற அளவுக்கு பேச ஆரம்பிச்சிட்டார் அது சம்பந்தமாக தான் இங்க வந்த இந்த ஊர்ல இருக்கிற என் சொந்த காரங்களோடு பேசிட்டு வரேன் அப்படின்னு சொன்னார். இந்த இடத்துல நம்ம கொஞ்சம் யோசிக்க வேண்டியது இருக்கு.

இந்த கர்மா அப்படிங்கறது யார் செஞ்சது அது யாருக்கு போய் சேரும் அப்படிங்கிற நம்ம கொஞ்சம் கவனமா பார்க்கணும் அந்தப் பெரியவரை பொறுத்தவரைக்கும் இந்த பூமியில இந்தப் பிறவியில் அவர் அவருடைய கர்மாவை மட்டும்தான் பெருக்கி கொண்டிருக்கிறார் இங்கு தன்னுடைய மகள் மகன் மனைவி இவர்களுக்காக பிரார்த்திப்பது அவர்களுக்கு அந்த கர்மா உடைய பயன் சென்று சேருமா? இது நம்ம நல்லா புரிஞ்சுக்கணும் அப்படின்னா அந்த பையனோட கர்மா என்ன? நிச்சயமா நமக்கு தெரியாது. அதை ஏதோ ஒன்னு கடவுள் அல்லது பிரபஞ்சத்தால நிர்ணயிக்கப்பட்டு இருக்கு அதுதான் இப்ப நடந்திருக்கு ஆனால் அந்தக் கர்மா உள்ள ஏதோ ஒரு பகுதியில் இவருக்கும் சம்பந்தமிருக்கு அதனுடைய தாக்கம் இவருடைய மனதையும் கண்டிப்பா காயப்படுத்தும் இல்லன்னு சொல்ல முடியாது. அப்போ இதெல்லாம் வந்து தவிர்க்க முடியாதா? அப்படின்னா கண்டிப்பா முடியாது அப்படித்தான் நான் சொல்லுவேன் அப்ப இதுக்கு வேற வழியே இல்லையா அப்படினா கண்டிப்பா இருக்குங்க அது எப்படின்னா யார் பாதிக்கப்படுகிறார்களோ அவர்களே நேரடியாக தங்களுடைய கர்மாவை புனிதப் படுத்த வேண்டும் அதற்கான வழிகளை அவர்களின் பெற்றோர்கள் காட்ட வேண்டும் அப்படின்னா என்ன?குழந்தைகள் சிறுவயதிலேயே தவறான பாதையில் செல்லாமல் தவறான எண்ணங்களை நினைக்காமல் நல்வழிப்படுத்தும் கடமை பெற்றோர்களுக்கு உண்டு 

இந்த கதையில் அந்தப்  பையனுக்கு பெரிய கெட்ட பழக்கங்கள் எதுவும் இல்லை ஆனால் ஒரே பிள்ளை என்று அதிகமாக செல்லம் கொடுத்து அதிக உணவுகளை அவர்களுக்கு வழங்கியது குறிப்பாக அசைவ உணவுகள் அவன் பார்ப்பதற்கு மிகவும் குண்டாக இருப்பாராம் இதை அவரே சொன்னார் இந்த அதிக குண்டான உடல் உடற்பயிற்சி இன்றி அதிக கொலஸ்ட்ரால் உற்பத்தியாகி அது இருதய அடைப்பை உண்டாக்கி இருக்கிறது பாருங்கள் சிறிய விஷயம்தான் பாசமாக செய்தது இது கூட எவ்வளவு பெரிய ஆபத்தை உண்டாக்கி இருக்கிறது.

இங்கு நாம் கவனிக்க வேண்டியது ஆன்மிக வழி தேடல்களில் பயணித்துக் கொண்டு இருப்பது ஒரு நல்ல விஷயம் என்றாலும் நம் உடல் நலத்தை கண்டிப்பாக பேணி பாதுகாக்க வேண்டும் அதற்கு உடற்பயிற்சி யோகா, மனநல பயிற்சி இது போன்ற விஷயங்கள் இக்காலத்திற்கு கண்டிப்பாக தேவைப்படுகிறது. இதையெல்லாம் பின்பற்றாமல் நல்ல உடல் ஆரோக்கியம் இல்லை நல்ல பொருள் வசதி இல்லை  அப்படின்னு கடவுள் மேல குத்தம் சொல்றதுல எந்த பிரயோஜனமும் இல்லை. நல்ல ஆரோக்கியம் இருந்தாலே நல்ல செல்வங்கள் நம்மை வந்து சேரும் அதற்கான உழைப்பு நம்ம கிட்ட இருக்கும் இதுதான் நான் இங்கு சொல்ல வர்ற விஷயம் .

சரி கடைசியா நாம கடவுள் இருக்கிறாரா இல்லையா என்ற கேள்விக்கு பதில் பாத்துருவோம் மழைக்காலம் வரப்போகுது அதுக்காக நாம தானியத்தை சேர்த்து வைக்கிறோம் ஏன்னா மழை காலத்துல தானியங்கள் கிடைக்காது. தொடர்ந்து மழை பெய்தால் நம்ம வெளியில போயிட்டு எதையும் வாங்கிட்டு வர முடியாது சில பொருட்கள் கிடைக்கும் சில பொருட்கள் கிடைக்காமல் போகும் அதனால உணவு பொருட்களை நம்ம சேர்த்து வைப்போம். அதுபோலத்தான் ஆன்மீகத்துல நாம கொஞ்சம் கொஞ்சமா புண்ணியத்தை சேர்த்து வைக்கிறோம் ஒருவேளை மழை காலத்துல மழையே வராமல் போகலாம் ஆனால் சேர்த்துவைத்த நம்ம தானியங்கள் வீணா போகாது கண்டிப்பா அத நம்ம அடுத்த நாளைக்கு பயன்படுத்திக்கலாம் ஆனா மழையே வராது அப்படி நினைச்சுகிட்டு தானியத்தை சேர்த்து வைக்காமல் இருந்தால் ஒரு வேலை மழைக்காலம் வந்து தொடர்ந்து வெளியில் வர முடியாத அளவுக்கு போச்சுன்னா நாம பட்டினிதான் கிடக்க வேண்டும். அது போல தான் நம்ம ஆன்மீக பயணத்தில் ஒவ்வொரு கோவிலுக்கும் போறோம் அங்க இருக்கக்கூடிய புனித தீர்த்தங்களில் நீராடி அங்கு இருக்கக்கூடிய கோவில்களில் தரிசனம் செய்து, முடிந்த அளவிற்கு அன்னதானம் செய்து புண்ணியத்தை சேர்த்துக் கொள்கின்றோம் இந்த சேர்த்து வைத்த புண்ணியங்கள் நமக்கு கண்டிப்பாக பயன்படா விட்டாலும் நிச்சயமாக யாருக்கும் தொந்தரவாக இருக்காது அது தானியத்தை சேர்த்து  வைக்காமல் இருப்பதைவிட மேலாகும் எனவே புண்ணியத்தின் அளவுகளை நாம் நினைக்காமல் அதன் வழியில் பயணிப்பது மேலாகும். கடவுள் இருக்கிறார் என்றால் அது பயன்படும் இல்லையென்றால் வீண்போகாது.


விவாதங்கள் தொடரும்...


நவ திருப்பதி பற்றிய வரலாற்று சிறப்புகள்

ஆன்மீக நண்பர்களுக்கு வணக்கம் நமது அடுத்த யாத்திரை நவதிருப்பதி மற்றும் நவ கைலாயமாகும். முதலில் நவதிருப்பதி பற்றிய விவரங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

ஆழ்வார்களால் பாடல் பெற்ற 108 திவ்ய தேசங்களில் 9 கோயில்கள், திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி நதிக் கரையோரம் அமைந்துள்ளன. நவதிருப்பதிகள் என்றழைக்கப்படும் இவை நவக்கிரகத் தலங்களாகப் போற்றப்பட்டு வருகின்றன. இந்த ஒன்பது கோயில்களையும் ஒரே நாளில் வழிபடுவது விசேஷம்.

1)திருவைகுண்டம்: (சூரியன் தோஷ நிவர்த்தி ஸ்தலம்.)

Image result for திருவைகுண்டம் கோவில்"
நவ திருப்பதிகளில் முதல் ஸ்தலம் இது. இங்கு ஸ்ரீவைகுண்டநாதர் நின்ற கோலத்தில் கிழக்கு நோக்கி அருள்புரிகிறார். மூல விக்ரகத்தை பிரம்மனே பிரதிஷ்டை செய்து தன் கமண்டலத்திலேயே நீர் எடுத்து திருமஞ்சனம் செய்து வழிபட்டதாக தலப்புராணம் கூறுகிறது. தாயார் வைகுண்டவல்லி, சொரநாத நாயகி ஆவார்.


2)திருவரகுணமங்கை (நத்தம்):சந்திர பரிகராஸ் ஸ்தலம். 

படிமம்:Varagunamangai2.jpg
நத்தம் என்றழைக்கப்படும் திருவரகுணமங்கை என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். நம்மாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் ஸ்ரீவைகுண்டத்திலிருந்து கிழக்கே சுமார் ஒரு மைல் தொலைவில் உள்ளது. இறைவர்: கிழக்கு நோக்கி அமர்ந்த திருக்கோலத்தில் ஆதிசேடனால் குடை பிடிக்கப்பட்ட விஜயாசனப் பெருமாள். இறைவி: வரகுணவல்லித்தாயார், வரகுணமங்கைத் தாயார். தீர்த்தம்: அகநாச தீர்த்தம், அக்னி தீர்த்தம் ஆகியன: இதன் விமானம் விஜயகோடி விமானம் என்ற வகையைச் சேர்ந்தது.  இத்தலம் நம்மாழ்வாரால் மட்டும் பாடல் பெற்றுள்ளது.
3) திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாள் கோயில்: செவ்வாய் பரிகார ஸ்தலமாகும்.
படிமம்:Thirukkolur3.jpg
 ஆழ்வார்களால் மங்களாசனம் செய்யப்பட்ட 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றும், நவதிருப்பதியில் மூன்றாவது திருப்பதியுமாகும்.
நம்மாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் ஆழ்வார்திருநகரியிலிருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் உள்ளது. பிரம்மாண்ட புராணத்தில் இத்தலத்தைப் பற்றிக் கூறப்பட்டுள்ளது. இறைவன்: கிழக்கு நோக்கிய சயனக் கோலத்தில் நிசேபவித்தன், வைத்தமா நிதிப்பெருமான். இறைவி: குமுதவல்லி, கோளுர் வள்ளி. தீர்த்தம்: குபேர தீர்த்தம், நிதித் தீர்த்தம்(தாமிரபரணி). விமானம்: ஸ்ரீகர விமானம் என்ற அமைப்பைச் சேர்ந்தது. நம்மாழ்வார் மட்டும் 12 பாடல்களாலும் மணவாள மாமுனிகளும் மங்களாசாசனம் செய்துள்ளனர். இவ்வூர் மதுரகவியாழ்வார் பிறந்த தலமாகும். இறைவன் செல்வத்தைப் பாதுகாத்து அளந்ததால் மரக்காலைத் தலைக்கு வைத்து பள்ளி கொண்ட கோலத்தில் இங்கும், சோழ நாட்டு வைணவத் திருத்தலமான திரு ஆதனூரில் ஆதனூர் ஆண்டளக்கும் ஐயன் கோயிலில் மட்டுமே காணப்படுகிறார்.
4)திருப்புளியங்குடி: புதன் கிரக தோஷ நிவர்த்தி ஸ்தலம்.

படிமம்:Thirupuliyangudi3.jpg
நத்தத்திலிருந்து அரை கி.மீ. தொலைவில் உள்ளது இத்தலம். மூலவர் காசின வேந்தன், தாயார் மலர்மகள் நாச்சியார், புளியங்குடி வல்லி. திருமால் இலக்குமி தேவியுடன் நதிக்கரையில் தனித்திருந்தபோது, தன்னை திருமால் கண்டு கொள்ளவில்லை என பூமாதேவி கோபம் கொண்டு பாதாள லோகம் செல்ல, திருமால் பூமாதேவியை சமாதானம் செய்து அழைத்து வந்து இருவரும் சமமே என இரு தேவியருடனும் இங்கு எழுந் தருளி காட்சியளிக்கிறார். பூமாதேவியை சமாதானம் செய்து பூமியைக் காத்ததால், பூமிபாலன் என்ற திருநாமமும் சுவாமிக்கு உள்ளது.

5)ஆழ்வார் திருநகரி: முந்தய பதிவில் நாம் சென்றபோது இங்கே கிளிக் செய்யவும் 

இது விழாயன் குரு பரிகார ஸ்தலமாகும்
ஆழ்வார்திருநகரி (திருக்குருகூர்) ஆதிநாதன் திருக்கோயில் 108 வைணவத் திருக்கோயில்களில் ஒன்றாகும். இத்தலம் நம்மாழ்வார் அவதாரத் தலம் ஆகும். தூத்துக்குடி மாவட்டத்தின் ஆழ்வார் திருநகரியில் அமைந்துள்ளது. இத்தலம் பிரம்மாவுக்கு குருவாகப் பெருமாள் வந்த திருத்தலம் என்பதால் குருகூர் எனப்படுகின்றது. ஆதியிலேயே தோன்றிய நாதன் என்பதால் பெருமாள் ஆதிநாதன் என திருப்பெயர் பெற்றார்.
புளிய மரத்தின் சிறப்பு:-
நாராயணன் ராமபிரானாக அவதரிக்கையில் இலக்குவனாக உடன் வந்தவன் ஆதிசேஷன். தனது இறுதிக் காலத்தில், காலாந்தகனைச் சந்திக்கும் வேளை நெருங்குகையில் எவரையும் அனுமதிக்க வேண்டாம் எனத் தன் தம்பியான இலக்குவனிடம் ராம பிரான் கூறியிருந்தான். அவ்வேளை அங்கு துர்வாச மாமுனியை அனுமதிக்க இலக்குவன் தயங்கவே, அவர் அவனைப் புளிய மரமாகப் பிறப்பெடுக்கும்படி சபித்து விட்டார். அவ்வாறு, ஆழ்வார் திருநகரி என்னும் இத்திருத்தலத்தில் இலக்குவன் புளிய மரமாகி விட, அவன் வேண்டுகோளுக்கு இணங்கி ராமபிரான் பின்னாளில் தாமே நம்மாழ்வாராக அவதரித்து அப்புளிய மரத்தில் காட்சி அளித்ததாகவும், இலக்குவன் திருப்புளியாழ்வாராக இங்கு காட்சியளித்தமையால், இத்தலம் சேஷ ஷேத்திரம் என விளங்குவதாகவும் கூறுவர்.

6)தென் திருப்பேரை : சுக்ர பரிகார ஸ்தலமாகும்.
படிமம்:Then Thirupperai3.jpg
 நம்மாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் திருநகரியிலிருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் சுமார் 3 மைல் தொலைவில் தென்கிழக்கே அமைந்துள்ளது. திருக்கோளூரில் இருந்தும் இவ்வூருக்கு பேருந்து வசதியுள்ளது. ஸ்ரீபேரை (இலக்குமியின் உடல்) என்ற பெயரில் பூமிதேவி இங்கு தவம் செய்ததால் திருப்பேரை என்றே இத்தலத்திற்குப் பெயருண்டாயிற்று. 108 வைணவ திவ்ய தேசங்களில் சோழநாட்டில் திருச்சிக்கு அண்மையில் திருப்பேர் நகர் என்ற திருத்தலம் ஒன்றிருப்பதால் இத்தலத்தை தென்திருப்பேரை என்று அழைத்தனர். இறைவன் கிழக்கு நோக்கி அமர்ந்த கோலத்தில் காணப்படுகிறான். இறைவன் பெயர்கள்: மகர நெடுங்குழைக்காதன். நிகரில் முகில் வண்ணன். இறைவி பெயர்கள்: குழைக்காதுவல்லி, திருப்பேரை நாச்சியார்; தீர்த்தம் : சுக்ர புஷ்கரணி, சங்க தீர்த்தம், மகர தீர்த்தம் ஆகியன. விமானம்: பத்ர விமானம் என்ற வகையைச் சேர்ந்தது. ஆழ்வார்களில் நம்மாழ்வாரால் மட்டும் 11 பாசுரங்களால் பாடல் பெற்றது. மணவாள மாமுனிகளும் இத்தலத்தைப் பாடியுள்ளார்.

7)பெருங்குளம் பெருமாள்: சனீஸ்வர பரிகாராஸ் ஸ்தலமாகும்

படிமம்:Thirukulandhai1.jpg
108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். இறைவன் கிழக்கு நோக்கி நின்ற நிலையில் மாயக் கூத்தன் என்ற பெயரில் அறியப்படுகிறார். இவருக்கு சோர நாதன், சீனிவாசன் என்ற பெயர்களும் உள்ளன. இறைவி குளந்தை வல்லித் தாயார் என்றும் கமலாதேவி என்றும் அறியப்படுகிறார். இவருடன் அலமேலு மங்கைத் தாயாரும் உள்ளார்.
இக்கோவிலின் தீர்த்தம் பெருங்குளம் என்றும் அறியப்படுகிறது. இக்கோவிலின் விமானம் ஆனந்த நிலைய விமானம் எனும் அமைப்பைச் சார்ந்தது.
ஆழ்வார்களில் ஒருவரான நம்மாழ்வார் இத்தலம் குறித்து பாடியுள்ளார். அதனால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திருத்தலமாக புகழப்படுகிறது.[

8)தொலைவிலிமங்கலம் (இரட்டைத் திருப்பதி):ராகு

படிமம்:Devapiran temple4.jpg

இரண்டு கோயில்கள் அருகருகே உள்ளன. இவை இரட்டைத் திருப்பதி என்று அழைக்கப்படுகின்றன. தெற்குக் கோயிலில் மூலவர் தேவபிரான், தாயார் ஸ்ரீதேவி, பூதேவியுடன் காட்சி தருகிறார். ஆத்ரேயசுப்ரபர் தேவபிரானுக்கு தினமும் வடக்குத் தடாகத்திலிருந்து தாமரை மலர்களைக் கொதுபூஜித்து வந்தார். ஒரு நாள் சுப்ரபர் எங்கிருந்து தாமரை மலர்களைக் கொது வருகிறார் என்பதை அறிய பின்தொடந்து சென்றார் மாலன். இதை அறிந்த சுப்ரபர் தன்னை பின் தொடந்து வருவதற்கான காரணத்தைக் கேட்க, தேவபிரானோடு சேர்த் துத் தனக்கு அபிஷேகம் செய்ய பெருமாள் கூறியதால் அங்கேயே ஒரு பெருமாளை பிரதிஷ்டை செய்து பூஜை செய்து வந்தார். அந்தப் பெருமாளே செந்தாமரைக்கண்ணனாக அருள்பாலிக்கிறார். இது ராகு கிரக தோஷ நிவர்த்தி ஸ்தலம்.

9)திருத்துலைவில்லி மங்கலம் தேவர்பிரான் திருக்கோயில்:ராகு

படிமம்:Aravinda Lochanar temple3.jpg
ஆத்ரேயசுப்ரபர் எனும் ரிஷி, யாகம் செய்வதற்காக இத்தலத்தில் நிலத்தை உழுத போது ஒளிரும் வில்லையும் தராசையும் கண்டு ஆச்சரியமடைந்து கையில் எடுக்க, அவை சாப விமோசனம் பெற்று ஆண், பெண்ணாக உருப்பெற்றன. குபேரனை மதிக்காததால் சாபம் பெற்றதாகக் கூறினர். இதனாலேயே இவ்வூர் துலை, வில்லி மங்கலம் எனும் பெயர் பெற்றது.
பின்னர் யாகம் நடத்தி அவிர்பாகத்தை தேவர்களுக்குத் தந்த சுப்ரரும், பெற்ற தேவர்களும் திருமாலைத் தொழுது வழிபட திருமால் காட்சியளித்தார். தேவப்பிரான் எனும் திருப்பெயரும் பெற்றார்.
இத்திருத்தலம் இரட்டைத் திருப்பதியில் தெற்கு திருக்கோயில் ராகு அம்சம் திருக்கோயில்.


திருத்துலைவில்லி அரவிந்தலோசனன் திருக்கோயில்:கேது
தினந்தோறும் தேவர்பிரானுக்கு தாமரை மலர் கொண்டு வழிபாடு செய்து வந்தார் சுப்ரரர். இத்தகைய அழகு வாய்ந்த மலர்களை சுப்ரரர் எங்கிருந்து கொணர்கிறார் என்றறிய பெருமாள், சுப்ரரர் தாமரை மலர்களை தடாகத்தில் இருந்து எடுக்கவரும் போது பின்தொடர்ந்து வரவே, சுப்ரரர் காரணம் வினவினார். செந்தாமரை மலர்கள் கொண்டு செய்த வழிபாட்டில் மயங்கி வந்ததாகவும் அங்கேயே தமக்கு ஓர் ஆலயம் எழுப்பவும் கூறினார் பெருமாள்.
இத்திருத்தலம் இரட்டைத் திருப்பதியில் வடக்கு திருக்கோயில்.கேது அம்சம் திருக்கோயில்.


03 December 2019

நவ கைலாயம் மற்றும் நவ திருப்பதி பற்றிய பயனுள்ள குறிப்புகள்...

ஆன்மீக நண்பர்களுக்கு  வணக்கம் ,நாம் வருகின்ற டிசம்பர் மாதம் நவகைலாயம் மற்றும் நவ திருப்பதி  ஆன்மீக யாத்திரை செல்ல இருக்கின்றோம் .எந்தெந்த கோவில் எங்குள்ளது அதனுடைய  சிறப்புகள் என்ன என்பதனை இங்கு சிறு குறிப்புகளாக தருகின்றோம் நண்பர்கள் குறித்து வைத்துக்கொண்டு யாத்திரையின்போது மேலும் சிறப்பாக தரிசனம் செய்ய ஏதுவாக இருக்க பயன்படுத்திக்கொள்ளுங்கள் .

மேலும் ஒவ்வொரு கோவிலைப்பற்றிய முழு விவரங்கள் தெரிந்துகொள்ள அக்கோவிலின் பெயரின்மேல் கிளிக் செய்தால் விக்கிபீடியாவில் முழு விபரங்கள் தாங்கள் படித்து பயன்பெறலாம்..



நவகைலாய திருத்தலங்கள் :-
வ.எண்ஊர்கோயில்வழிப்பட்ட கிரகம்கைலாய வகை
1பாபநாசம்பாபநாசநாதர் கோயில்சூரியன்மேல்கைலாயம்
2சேரன்மாதேவிசேரன்மகாதேவி கைலாசநாதர் கோயில்சந்திரன்மேல்கைலாயம்
3கோடகநல்லூர்கோடகநல்லூர் கைலாசநாதர் கோயில்செவ்வாய்மேல்கைலாயம்
4குன்னத்தூர்குன்னத்தூர் கோத பரமேசுவரர் கோயில்இராகுநடுகைலாயம்
5முறப்பநாடுமுறப்பநாடு கைலாசநாதர் கோயில்குருநடுகைலாயம்
6திருவைகுண்டம்திருவைகுண்டம் கைலாசநாதர் கோயில்சனிநடுகைலாயம்
7தென்திருப்பேரைதென்திருப்பேரை கைலாசநாதர் கோயில்புதன்கீழ்கைலாயம்
8ராஜபதிஇராஜபதி கைலாசநாதர் கோயில்கேதுகீழ்கைலாயம்
9சேர்ந்த பூமங்கலம்சேர்ந்தபூமங்கலம் கைலாசநாதர் கோயில்சுக்கிரன்கீழ்கைலாயம்


நவ கைலாயம் பற்றிய அதிக விபரங்களுக்கு இங்கே சொடுக்கவும் 

நவதிருப்பதி திருத்தலங்கள்:-
கோயில் பெயர்இறைவன்கோள்சிறப்பு நாள்அமைவிடம்படிமம்திறந்திருக்கும் காலம்
வைகுண்டநாதர் கோவில், ஸ்ரீவைகுண்டம்சூரியன்சூரியன்ஞாயிற்றுக்கிழமை
Srivaikuntam4.jpg
திருவைகுண்டம்காலை 7 - 12 , மாலை 5 - 8
விஜயாசனப் பெருமாள் கோயில்சந்திரன்நிலாதிங்கட்கிழமை
Varagunamangai2.jpg
நத்தம்காலை 8 - 12 ; மாலை 1 - 6
வைத்தமாநிதி பெருமாள் கோயில்அங்காரகன்செவ்வாய்செவ்வாய் கிழமை
Thirukkolur3.jpg
திருக்கோளூர்காலை 7:30 - 12 ; மாலை 1 - 8
திருப்புளியங்குடி பெருமாள் கோயில்புதன்புதன்புதன்கிழமை
Thirupuliyangudi3.jpg
திருப்புளியங்குடிகாலை 8 - 12; மாலை 1 - 6
ஆழ்வார்திருநகரி ஆதிநாதன் கோயில்குருவியாழன்வியாழக்கிழமை
Azhwar Thirunagari9.jpg
ஆழ்வார்திருநகரிகாலை 6 - 12; மாலை 5 - 8:45
திருப்பேரைசுக்ரன்வெள்ளிவெள்ளிக்கிழமை
Then Thirupperai3.jpg
தென்திருப்பேரைகாலை 7 - 12 ; மாலை 5 - 8:30 pm
பெருங்குளம் பெருமாள் கோவில்சனீசுவரன்சனிசனிக்கிழமை
Thirukulandhai1.jpg
பெருங்குளம்காலை 7:30 - 12:30; மாலை 4:30 - 7:30
இரட்டைத் திருப்பதி தேவப்பிரான் கோயில்இராகு
Devapiran temple4.jpg
தொலைவில்லிமங்கலம்காலை 8 - 1; மாலை 2 - 6
இரட்டைத் திருப்பதி
அரவிந்தலோசனர் திருக்கோயில்
கேது
Aravinda Lochanar temple3.jpg
தொலைவில்லிமங்கலம்காலை 8 - 1; மாலை 2 - 6