Subscribe

BREAKING NEWS

31 August 2018

மயிலாளிபுரி முற்றோதல் அழைப்பிதழ் - 2/9/2018


அனைவருக்கும் வணக்கம்.

இன்றைய பதிவில் முற்றோதல் அழைப்பிதழ் ஒன்றை இங்கே இணைக்க விரும்புகின்றோம். பொதுவாக முற்றோதல் என்று சொன்னாலே அது திருவாசக முற்றோதல் என்று தான் பொருள் கொள்ளும்படி கூறப்பட்டு வருகின்றது. முற்றோதல் என்று சொல்லும்போது நமக்கு ஒரு சந்தேகமும் வந்துவிட்டது. முற்றோதல் என்பது சரியா? இல்லை முற்றோதுதல் என்பது சரியா? என்று. சரி. நாம் விசயத்திற்கு வருவோம்.

முற்றோதல் என்பது குழுக்களாக தமிழ் மொழியில் உள்ள பக்தி  நூலை ஒருவரே படிக்காமல், குழுவில் உள்ள அனைவரும் படிக்கும் படி செய்வது ஆகும். பொதுவாக சைவ ஆதீனத் திருமடங்கள், கோயில்களில் இந்த முற்றோதல் நடைபெறுவதுண்டு. சைவர்கள் மிகுதியாகக் கையாளும் வழக்கம் இது. திருவாசக முற்றோதல்; திருமந்திர முற்றோதல் வழக்கத்தில் உள்ளவை. நாலாயிரப் பிரபந்த
முற்றோதலும் உண்டு. ஆனால் நாம் திருவாசக முற்றோதல் என்று நிறைய கேட்டிருப்போம். இந்த முற்றோதல் நிகழ்வில் கண்டிப்பாக குழந்தைகள் பங்கு பெற வேண்டும். அப்போது தான் பக்தி வளரும். புத்தி தெளியும். ஐந்தில் வளைத்தால் தான் ஐம்பதில் வளைக்க முடியும். 

முற்றோதல் என்ற நிகழ்வு பற்றி நாம் அறிந்து ஒரு சில முற்றோதல்களிலும் கலந்து கொண்டது இன்னும் நமக்கு இறை பற்றி சிந்திக்க வைக்கின்றது. rightmantra.com நிகழ்த்திய அகத்தியர் தேவாரத் திரட்டு முற்றோதல் நம்மை வலுப்படுத்தியது. அடுத்து தாமோதரன் ஐயாவின் திருவாசகம் முற்றோதல் கண்டுள்ளோம்.கேட்டுள்ளோம். முற்றோதலில் நாம் திளைக்க திளைக்க நாம் சிவ புண்ணியம் சேர்ப்பது உறுதி, சிவ புண்ணியம் கொஞ்சமாவது இருந்தால் தான் இது போன்ற  முற்றோதல் நிகழ்வுகளில் பங்குபெற முடியும்.

திருவாசகம் மட்டும் முற்றோதல் செய்தல் என்ற நிலையில் இருந்து நாம் வெளியே வர வேண்டும். தமிழில் இல்லாத பக்தி நூல்களா? சென்ற நூற்றாண்டில் ஒலிநாடாக்கள் சில தொடங்கின: அபிராமி அந்தாதி - சீர்காழி, டிஎம்எஸ் பாடியுள்ளனர் முற்றோதலாய். பாம்பே சகோதரிகளின் திருமுருகாற்றுப்படை முற்றோதல் ஒலிநாடா கிடைக்கும். திருப்பாவை அரியக்குடி, எம்எல்வி, பாலக்காடு கேவிஎன், வடமொழியில் சுப்ரபாதங்கள் (எம் எஸ்), கீதை முற்றோதல் ஒலிநாடாக்கள் உண்டு, யுட்யூபில் இருக்கலாம். 

இன்று கேட்பொலி (ஆடியோ), காணொளி (யுட்யூப்) போன்றன இருப்பதால் தமிழில்
உள்ள ஏராளமான புராணங்களையும், இலக்கியங்களையும் முற்றோதுவித்து ஏற்றலாம். ஓய்வு நேரத்தில் உலகெல்லாம் உள்ள தமிழர்கள் கேட்டுப் பயன்பெறுவர்.சீறாப்புராணம், தேம்பாவணி போன்றனவும் முற்றோதலாமே.

இந்த வகையில் புது முயற்சியாக... ஒன்பதாம் திருமுறைகளான திருவிசைப்பாவும், திருப்பல்லாண்டும் முற்றோதல் நடைபெற உள்ளது.  அழைப்பிதழை கீழே இணைத்துள்ளோம்.


அனைவரும் திரளாக கலந்து கொண்டு இறையருள் பெறும்படி வேண்டுகின்றோம். 

- மீண்டும் அடுத்த பதிவில் இணைவோம்.

மீள்பதிவாக:-


பாவங்கள் போக்கும் 108 சிவ தலங்கள் - http://tut-temple.blogspot.com/2018/08/108.html

பாண்டமங்கலம் காசி விசாலாட்சி உடனுறை ஸ்ரீ காசி விஸ்வநாதர் திருக்கோவில் - http://tut-temple.blogspot.com/2018/08/blog-post_21.html

ஶ்ரீஶ்ரீஶ்ரீ சொரக்காய சுவாமி! 116−வது மஹா குருபூஜை மற்றும் கலச பூஜை மஹோத்சவம் - http://tut-temple.blogspot.com/2018/08/116.html


ஸ்ரீ பைரவச் சித்தரின் அருள் மழையில் நனைவோம்.- http://tut-temple.blogspot.com/2018/08/blog-post_34.html

கசவை கண்ட கயிலைமூர்த்தியே போற்றி...- http://tut-temple.blogspot.com/2018/08/blog-post_22.html

இச்சையில் தீ வைத்தால் தீட்சை பெறலாம் - ஸ்ரீ மச்சமுனி சித்தர் ஜெயந்தி விழா - http://tut-temple.blogspot.com/2018/08/blog-post_5.html

கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் 161 ஆம் ஆண்டு அவதார திருவிழா அழைப்பிதழ் - http://tut-temple.blogspot.com/2018/07/161.html


பாரத்தைக் குறைத்து பரத்தை உணர்த்தும் பரஞ்சோதி பாபா - 7- ஆம் ஆண்டு மகா குருபூஜைப் பேரானந்த வழிபாடு - http://tut-temple.blogspot.com/2018/06/7_27.html

 உன்னுள் உத்தமனைக் காணும் வழி - மஹான் சங்கு சித்தர் அவர்களின் 119 ஆவது குரு பூஜை - http://tut-temple.blogspot.com/2018/06/blog-post_13.html

அருள்மிகு சோமப்பா சுவாமிகளின் 50 ஆம் ஆண்டு குருபூசை விழா அழைப்பிதழ் - http://tut-temple.blogspot.com/2018/06/50.html

என்னை நீ ஆள்வாய் சிவப்பிரகாச இறைவநல் தேசிக மணியே! - http://tut-temple.blogspot.com/2018/06/blog-post_5.html

திருச்சி வரகனேரி பிர்மரிஷி ஸ்ரீ குழுமியானந்த சுவாமிகள் குருபூஜை - http://tut-temple.blogspot.com/2018/06/blog-post_1.html

ஸ்ரீ கண்ணையா யோகி குரு பூஜை - http://tut-temple.blogspot.com/2018/05/blog-post_79.html

மண் உண்ட மகான் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மல்லையா சுவாமிகள் - http://tut-temple.blogspot.in/2018/05/blog-post_89.html

மீண்டும் மீண்டும் நம்மை அழைக்கும் குழந்தைவேல் சுவாமிகள் - உழவாரப் பணி அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2018/05/blog-post_21.html

சித்திரை பூசத்தில் குழந்தைவேல் சுவாமிகளிடம் சரண் அடைவோம் - http://tut-temple.blogspot.in/2018/04/blog-post_21.html

ஜாதகத்தை மாற்றி சாதகமாக்கும் குழந்தைவேலர் - உழவாரப் பணி அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_77.html

 ஜாதகத்தையே மாற்றும் குழந்தைவேலர்... - http://tut-temple.blogspot.in/2017/05/blog-post_22.html

 என் கடன் பணி செய்து கிடப்பதே - உழவாரப் பணி - http://tut-temple.blogspot.in/2017/08/blog-post_24.html

உன்னுள் உத்தமனைக் காணும் வழி சாகாக் கல்வி - http://tut-temple.blogspot.com/2017/07/blog-post_4.html

ஓம் அகஸ்த்திய நாதனே - ஸ்ரீ குருமண்டல தெய்வமே !  - http://tut-temple.blogspot.com/2018/03/blog-post_76.html

எந்தையும் தாயும் - கூடுவாஞ்சேரி அகத்தியர் ஆயில்ய ஆராதனை அறிவிப்பு 21/05/2018  - http://tut-temple.blogspot.com/2018/05/21052018.html

மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டா - கூடுவாஞ்சேரி அகத்தியர் ஆயில்ய ஆராதனை அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2018/04/blog-post_22.html

அகத்தியருக்கு ஆயில்ய ஆராதனை -புரட்டாசி -2017- http://tut-temple.blogspot.in/2017/09/2017.html

அகத்திய முனிவரின் பஞ்ச யாக ஷேத்திரம் - பஞ்செட்டி சதய பூஜை அழைப்பு - http://tut-temple.blogspot.in/2018/04/blog-post_74.html

குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!! - கூடுவாஞ்சேரி அகத்தியர் ஆயில்ய ஆராதனை அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2018/03/blog-post_89.html

கூடுவாஞ்சேரி அகத்தியர் ஆயில்ய ஆராதனை - 28/2/2018 - http://tut-temple.blogspot.in/2018/02/2822018.html

மனமது செம்மை யாக அகத்தியர் பூசை தானே - http://tut-temple.blogspot.in/2018/03/blog-post_6.html 


28 August 2018

பாவங்கள் போக்கும் 108 சிவ தலங்கள்

அனைவருக்கும் வணக்கம்.

தளத்தின் பதிவுகளில் மிக நீண்ட இடைவெளி ஏற்பட்டுள்ளது. மிக நீண்ட இடைவெளிவிட்டு தங்கள் அனைவரையும் இந்தப் பதிவு வாயிலாக சந்திப்பதில் மகிழ்கின்றோம். என்ன பதிவு அளிக்கலாம் என்று தேடிய பொழுது, நம் தேடல் பாவங்கள் போக்கும் 108 சிவ தலங்கள் என்று தொடங்கியது. இந்தப் பதிவில் என்னென்ன பாவங்கள்...எந்தெந்த சிவத்தலங்களில் நீங்கும் என்று குறிப்புகளை மட்டுமே தருகின்றோம். அங்குள்ள பிரசித்தி பெற்ற சிவ தலங்களை நீங்கள் தான் தேடிக் கண்டு தரிசிக்க வேண்டும்.



1. திருக்குடந்தை                 - ஊழ்வினை பாவம் அகல

2. திருச்சிராப்பள்ளி             - வினை அகல

3. திருநள்ளாறு                    - கஷ்டங்கள் அகல

4. திருவிடைமருதூர்            - மனநோய் விலக

5. திருவாவடுதுறை              - ஞானம் பெற

6. திருவாஞ்சியம்                 - தீரா துயர் நீங்க

7. திருமறைக்காடு               - கல்வி மேன்மை உண்டாக

8. திருத்தில்லை                  - முக்தி வேண்ட

9. திருநாவலூர்                   - மரண பயம் விலக

10. திருவாரூர்                    - குல சாபம் விலக

11. திருநாகை                   - சர்ப்ப தோஷம் விலக

12. திருக்காஞ்சி      - முக்தி வேண்ட

13. திருஅண்ணாமலை  - நினைத்த காரியம் நடக்க 

14. திருநெல்லிக்கா   - முன்வினை அகல 

15. திருச்செங்கோடு  - மணவாழ்க்கை சிறக்க 

16. திருக்கருகாவூர் - கர்ப்ப சிதைவு தோஷம் விலக 

17. திருவைத்தீஸ்வரன் கோயில் - நோய் விலக 

18. திருக்கோடிக்கரை    - பிரம்ம தோஷம் விலக 

19. திருக்களம்பூர்  - சுபிட்சம் ஏற்பட 

20. திருக்குடவாயில்  - இறந்தவர் ஆன்மா சாந்தி பெற 

21. சிக்கல்                        - துணிவு கிடைக்க 

22. திருச்செங்காட்டாங்குடி - வம்பு,வழக்கு உள்ளவர்கள் தோஷம் விலக 

23. திருகண்டீச்சுரம் - நோய் விலக, தீராத புண் ஆற 

24. திருக்கருக்குடி - குடும்ப கவலை விலக 

25. திருகருவேலி - குழந்தை பாக்கியம் பெற, வறுமை நீங்க

26. திருவழுந்தூர் - முன் ஜென்ம பாவம் விலக 

27. திருச்சத்திமுற்றம் - மணவாழ்க்கை கிடைக்க 

28. திருப்பராய்த்துறை - கர்வத்தால் வீணானவர்கள் சுகம் பெற 

29. திருநெடுங்களம் - தீரா துயரம் தீர 

30. திருவெறும்பூர் - அதிகாரத்தால் வீழ்ந்தவர்கள் சுகம் பெற 

31. திருப்பைஞ்சீலி - யம பயம் விலக 

32. திருவையாறு - அக்னி தோஷம் உள்ளவர்கள் தோஷம் விலக 

33. திருவைகாவூர் - வில்வ அர்ச்சனை செய்து பாவம் போக்க 

34. திருக்கஞ்சனூர் - திருமண தோஷம் விலக 

35. திருமங்கல குடி (சூரியனார்) - குழந்தை பாக்கியம் பெற 

36. திருமணஞ்சேரி  - திருமண தோஷம் விலக 

37. திருமுல்லைவாயில் - சந்திர திசை நடப்பவர்கள் சந்திர தோஷம் விலக 

38. திருவெண்காடு  - ஊழ்வினை தோஷம் உள்ளவர்கள் செல்ல 

39 .திருநெல்வேலி - பிராமண குற்றம் விலக 

40 .திருக்குற்றாலம் - முக்தி வேண்ட 

41. திருஆலவாய்  - தென்திசையில் குடியிருப்பவர்கள் நட்சத்திர தோஷம் உள்ளவர்கள் செல்ல 

42. திருப்பரங்குன்றம் - வாழ வலி தெரியாது தவிப்பவர்கள் வழிபட 

43. திருவாடானை  - தீரா பாவம் விலக 

44. திருமுருகன்பூண்டி  - மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் தோஷம் விலக 

45. திருப்பாதிரிப்புலியூர் - தாயை விட்டு பிரிந்து இருக்கும் குழந்தை தோஷம் விலக 

46. திருவக்கரை  - செய்வினை தோஷம் விலக 

47. திருவேற்காடு - வாணிப பாவம் விலக 

48. திருமயிலாப்பூர் - மூன்று தலைமுறை தோஷம் விலக 

49. திருஅரசிலி - காமத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தோஷம் விலக 

50. திருவாலங்காடு  - வீண் வம்பில் மாட்டிக்கொண்டவர்கள் தோஷம் விலக 

51. திருவேட்டிபுரம்  - ஞானம் பெற

52. திருப்பனங்காடு  - பந்த பாசத்தில் இருந்து விலக 

53. திருவூறால்   - உயிர்வதை செய்த பாவம் விலக 

54. திருப்பாச்சூர் - குடும்ப கவலைகள் நீங்க

அடுத்த பதிவில் மீண்டும் தொடர்வோம். இங்கு கொடுக்கப்பட்ட தலங்களை முடிந்த அளவில் சென்று வழிபடவும். 




- மீண்டும் இணைவோம்.

மீள்பதிவாக:-

பாண்டமங்கலம் காசி விசாலாட்சி உடனுறை ஸ்ரீ காசி விஸ்வநாதர் திருக்கோவில் - http://tut-temple.blogspot.com/2018/08/blog-post_21.html

ஶ்ரீஶ்ரீஶ்ரீ சொரக்காய சுவாமி! 116−வது மஹா குருபூஜை மற்றும் கலச பூஜை மஹோத்சவம் - http://tut-temple.blogspot.com/2018/08/116.html


ஸ்ரீ பைரவச் சித்தரின் அருள் மழையில் நனைவோம்.- http://tut-temple.blogspot.com/2018/08/blog-post_34.html

கசவை கண்ட கயிலைமூர்த்தியே போற்றி...- http://tut-temple.blogspot.com/2018/08/blog-post_22.html

இச்சையில் தீ வைத்தால் தீட்சை பெறலாம் - ஸ்ரீ மச்சமுனி சித்தர் ஜெயந்தி விழா - http://tut-temple.blogspot.com/2018/08/blog-post_5.html

கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் 161 ஆம் ஆண்டு அவதார திருவிழா அழைப்பிதழ் - http://tut-temple.blogspot.com/2018/07/161.html


பாரத்தைக் குறைத்து பரத்தை உணர்த்தும் பரஞ்சோதி பாபா - 7- ஆம் ஆண்டு மகா குருபூஜைப் பேரானந்த வழிபாடு - http://tut-temple.blogspot.com/2018/06/7_27.html

 உன்னுள் உத்தமனைக் காணும் வழி - மஹான் சங்கு சித்தர் அவர்களின் 119 ஆவது குரு பூஜை - http://tut-temple.blogspot.com/2018/06/blog-post_13.html

அருள்மிகு சோமப்பா சுவாமிகளின் 50 ஆம் ஆண்டு குருபூசை விழா அழைப்பிதழ் - http://tut-temple.blogspot.com/2018/06/50.html

என்னை நீ ஆள்வாய் சிவப்பிரகாச இறைவநல் தேசிக மணியே! - http://tut-temple.blogspot.com/2018/06/blog-post_5.html

திருச்சி வரகனேரி பிர்மரிஷி ஸ்ரீ குழுமியானந்த சுவாமிகள் குருபூஜை - http://tut-temple.blogspot.com/2018/06/blog-post_1.html

ஸ்ரீ கண்ணையா யோகி குரு பூஜை - http://tut-temple.blogspot.com/2018/05/blog-post_79.html

மண் உண்ட மகான் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மல்லையா சுவாமிகள் - http://tut-temple.blogspot.in/2018/05/blog-post_89.html

மீண்டும் மீண்டும் நம்மை அழைக்கும் குழந்தைவேல் சுவாமிகள் - உழவாரப் பணி அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2018/05/blog-post_21.html

சித்திரை பூசத்தில் குழந்தைவேல் சுவாமிகளிடம் சரண் அடைவோம் - http://tut-temple.blogspot.in/2018/04/blog-post_21.html

ஜாதகத்தை மாற்றி சாதகமாக்கும் குழந்தைவேலர் - உழவாரப் பணி அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_77.html

 ஜாதகத்தையே மாற்றும் குழந்தைவேலர்... - http://tut-temple.blogspot.in/2017/05/blog-post_22.html

 என் கடன் பணி செய்து கிடப்பதே - உழவாரப் பணி - http://tut-temple.blogspot.in/2017/08/blog-post_24.html

உன்னுள் உத்தமனைக் காணும் வழி சாகாக் கல்வி - http://tut-temple.blogspot.com/2017/07/blog-post_4.html

ஓம் அகஸ்த்திய நாதனே - ஸ்ரீ குருமண்டல தெய்வமே !  - http://tut-temple.blogspot.com/2018/03/blog-post_76.html

எந்தையும் தாயும் - கூடுவாஞ்சேரி அகத்தியர் ஆயில்ய ஆராதனை அறிவிப்பு 21/05/2018  - http://tut-temple.blogspot.com/2018/05/21052018.html

மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டா - கூடுவாஞ்சேரி அகத்தியர் ஆயில்ய ஆராதனை அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2018/04/blog-post_22.html

அகத்தியருக்கு ஆயில்ய ஆராதனை -புரட்டாசி -2017- http://tut-temple.blogspot.in/2017/09/2017.html

அகத்திய முனிவரின் பஞ்ச யாக ஷேத்திரம் - பஞ்செட்டி சதய பூஜை அழைப்பு - http://tut-temple.blogspot.in/2018/04/blog-post_74.html

குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!! - கூடுவாஞ்சேரி அகத்தியர் ஆயில்ய ஆராதனை அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2018/03/blog-post_89.html

கூடுவாஞ்சேரி அகத்தியர் ஆயில்ய ஆராதனை - 28/2/2018 - http://tut-temple.blogspot.in/2018/02/2822018.html

மனமது செம்மை யாக அகத்தியர் பூசை தானே - http://tut-temple.blogspot.in/2018/03/blog-post_6.html 


22 August 2018

பட்டதாரிச் சித்தரே சரணம் - ஸ்ரீலஸ்ரீ சுப்பைய சுவாமிகள் மஹா கும்பாபிஷேகப் பெருவிழா அழைப்பிதழ்


சித்தர்கள் 

ஆத்ம தரிசனம் பெற்றவர்கள். ஆத்ம தரிசனம் நாமும்  பெற விரும்புபவர்கள். ஆத்ம ஞானம் போதிப்பவர்கள். மதம் மறுப்பவர்கள், குலம் மறுப்பவர்கள், தன்னை மறந்தவர்கள். அனைத்தும் நாம் என்று பரத்தை வசப்படுத்துபவர்கள். ஜீவனில் சிவத்தை உணர்ந்தவர்கள் என்று சித்தர்கள் பற்றி பறைசாற்றலாம். என்ன தான் நாம் சொன்னாலும் இது பெருங்கடலில் பெருங்காயத்தை கரைப்பதை போன்றதே ஆகும். ஒவ்வொரு சித்தர்களும் ஒவ்வொரு மார்க்கத்தை கடைபிடித்துள்ளனர். மார்க்கம் வேறுவேறாக இருந்தாலும் அவர்கள் கடைசியில் கண்ட தரிசனம் ஒன்றே ஆகும். சிலர் பக்தி, சிலர் மந்திரங்கள், சிலர் யோகம், சிலர் ஞானம் என்று வேறு வேறு பாதையாக இருந்துள்ளது. நாளை நடை பெற உள்ள  ஸ்ரீலஸ்ரீ சுப்பைய சுவாமிகள் மஹா கும்பாபிஷேகப் பெருவிழா பற்றி இந்தப் பதிவில் பேச உள்ளோம்.



பட்டதாரிச் சித்தரே சரணம் என்று பதிவின் தலைப்பில் கூறியுள்ளது போன்று, ஸ்ரீலஸ்ரீ சுப்பைய சுவாமிகள் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்றவர். ஐயாவினை பற்றிய செய்திகள் இனி தருகின்றோம்.

திருநெல்வேலி மாவட்டம் கடையனோடை என்று ஊரை சார்ந்தவர்.

முத்து - நாராயண வடிவு தம்பதியினருக்கு மூன்று பெண் குழந்தைகள் இருந்தார்கள். ஆண் குழந்தை வேண்டு திருசெந்தூர் சென்று வழிபட்டார்கள். நாராயண வடிவு அம்மா கைகளை பின்னாடி கட்டிக் கொண்டு மண் சோறு சாப்பிட்டு, 48 நாள் விரதம் இருந்தார்கள். 23.11.1908 கார்த்திகை மாதம் விசாக நட்சத்திரத்தில் பிறந்தவர் ஸ்ரீலஸ்ரீ சுப்பைய சுவாமிகள். முருகன் அழகன் மட்டுமா? அறிவும் ஆவார். எனவே அறிவு சுடர் கொண்டு இவருக்கு சுப்பைய சுவாமிகள் என்று பெயர் வைத்தார்கள்.

ஏற்கனவே கூறியபடி இளங்கலை பட்டம் முடித்த பிறகு சித்த மருத்துவம், ஓலைச்சுவடி என்று திசை திரும்பலானார். பின்னர் தான் சுவாமிகளின் தேடல் விரிந்தது. வள்ளலார், ராமகிருஷ்ண பரமஹம்சர் போன்ற மஹான்களின் பாதம் பட்ட இடங்களுக்கு சென்று வருகின்றார். பின்னர் மீண்டும் கடையனோடை வந்து அன்னதான சேவையில் முழுதும் ஈடுபட்டார். வள்ளலார் வழியே சுப்பைய சுவாமிகளுக்கு மிகவும் பிடித்திருந்தது. 



வள்ளலாரின் புகழைப் பாடியபடியே, நடந்தே திருக்கழுக்குன்றம் வந்தவர், அங்கிருந்த வேதகிரீஸ்வரர் மலையில் உள்ள குகையின் உள்ளே அமர்ந்தார். ஒன்பது வருடங்களுக்கு அந்த இடத்தை விட்டு அவர் எழவே இல்லை. யாருடனும் பேசமாட்டார். அவர் முன்பு வைக்கப்பட்ட விபூதியை தன்னை காண வரும் பக்தர்களுக்குக் கொடுத்து ஆசீர்வதிக்கத் தொடங்கினார். நாத்திக வாதம் பரவத் தொடங்கிய காலத்தில் 30 இளைஞர்கள் அவரைத் தொந்தரவு செய்யும் நோக்கத்துடன் இளநீர் வெட்டிவெட்டி கொடுத்துக் கொண்டே இருந்தார்கள். சுவாமியும் அதை வாங்கிக் குடித்தார். சித்தர் எப்படியும் சிறுநீர் கழிப்பதற்குக் குகையை விட்டு வெளியே வரவேண்டும் என்று இளநீர் கொடுத்தவர்கள் நினைத்தார்கள்? ஆனால் பாவம், சுவாமிக்கு இளநீர் கொடுத்தவர்களே, அதை சிறுநீராக வெளியேற்றிக் கொண்டிருந்தார்கள். அப்போதுதான் சுவாமியின் சக்தி மற்றவர்களுக்குப் புலப்பட ஆரம்பித்தது. இவர் கடைசிகாலத்தில் 6-ம் திருமுறை நூலை எப்போதும் கையில் வைத்திருந்தார்.

'எனது ஆன்மா உடலை விட்டுப் பிரிந்தால் எனது உடலை குழியில் இட்டு ஒரு கல்லை போட்டு மூடி வையுங்கள். 40 நாள் கழித்து அந்த உடலைத் திறந்து பாருங்கள். எனது உடல் சாய்ந்தாலோ, சரிந்தாலோ, பிணவாடை அடித்தாலோ மண்ணையிட்டு நிரப்புங்கள். வைத்த நிலையிலேயே எனது உடல் இருந்தால் 10 மாதம் கழித்து ஒரு முறை திறந்து பாருங்கள். அப்படியே இருந்தால் மேலே ஒரு கல்லை எடுத்து மூடிவிடுங்கள்' என்று சமாதி ஆவதற்குச் சில தினங்களுக்கு முன்பே சொல்லி வைத்தார்.



1960 ஜனவரி முதல் தேதி இரவு ஸித்தியடைந்தார். அவர் சொன்னது போலவே உடல் அடக்கம் செய்யப்பட்டது. 40 நாள் கழித்து சப் கலெக்டர், நாடாளுமன்ற உறுப்பினர் ராஜேஸ்வரி வேதாசலம் முன்னிலையில் அவரின் உடல் திறந்து பார்க்கப்பட்டது. என்ன ஆச்சர்யம்!? அவரின் உடல் வைத்த நிலையில் அப்படியே இருந்தது. தலைமுடி மேல் நோக்கி நின்றது. யோகிகளுக்கு உச்சி வழியாக உயிர் போகும். இதனை காயஸித்தி என்கிறார்கள். இந்த நிகழ்வினை உச்சி பார்த்தல் என்பார்கள். The body was impact என்று சப்கலெக்டர் தனது கெசட்டிலேயே பதிவு செய்டிருக்கிறார்.
சுப்பையா சுவாமிகள் நினைவாக திருக்கழுக்குன்றம் பேருந்து நிலையம் அருகிலேயே சிறிய அளவில் ஒரு கோயில் கட்டினார்கள். கோயிலுக்கு வரும் பக்தர்கள் அவரின் திருஉருவச் சிலையை வணங்கிச் செல்கிறார்கள். கடந்த 7 ஆண்டுகளாக தினமும் காலையில் 100 பேருக்கு உணவு, மதியம் 150 பேருக்கு உணவு வழங்கப்படுகிறது.



மார்கழி சதய நட்சத்திரத்தில் வருடந்தோறும் குருபூஜை நடந்து வருகின்றது. நாளை செவ்வாய்க்கிழமை ( 22/8/2018 ) அன்று திருக்கழுக்குன்றத்தில் உள்ள ஆலயத்தில் சுப்பையா சுவாமிகளுக்கு மஹா கும்பாபிஷேகப் பெருவிழா  நடக்க இருக்கிறது.






இந்த மஹா கும்பாபிஷேகப் பெருவிழாவினை கூடுவாஞ்சேரியில் உள்ள மாமரத்து விநாயகர் ஆலயத்தில் சேவை செய்து வரும்  கணபதி உபாசகர்  சிவத்திரு. R.S. முத்துக்குமார சிவாச்சாரியார் அவர்கள் நடத்த உள்ளார்கள். இவரின் அபிஷேகமும் ,அலங்காரமும்  கூடுவாஞ்சேரி அகத்தியருக்கு மாதந்தோறும் ஆயில்யத்தில் மின்னுகின்றது. அப்படியிருக்க இந்த மஹா கும்பாபிஷேகப் பெருவிழா மாபெரும் அருளை அனைவர்க்கும் வழங்கும் என்பது உறுதி. இந்தப்பதிவின் மூலம் சிவத்திரு. R.S. முத்துக்குமார சிவாச்சாரியார் அவர்களுக்கு நம் தளம் சார்பில் நம் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.


வாய்ப்புள்ள அன்பர்கள் கலந்து கொண்டு சித்தர்களின் அருள் பெற வேண்டுகின்றோம்.

- அடுத்த பதிவில் மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

பாண்டமங்கலம் காசி விசாலாட்சி உடனுறை ஸ்ரீ காசி விஸ்வநாதர் திருக்கோவில் - http://tut-temple.blogspot.com/2018/08/blog-post_21.html

ஶ்ரீஶ்ரீஶ்ரீ சொரக்காய சுவாமி! 116−வது மஹா குருபூஜை மற்றும் கலச பூஜை மஹோத்சவம் - http://tut-temple.blogspot.com/2018/08/116.html


ஸ்ரீ பைரவச் சித்தரின் அருள் மழையில் நனைவோம்.- http://tut-temple.blogspot.com/2018/08/blog-post_34.html

கசவை கண்ட கயிலைமூர்த்தியே போற்றி...- http://tut-temple.blogspot.com/2018/08/blog-post_22.html

இச்சையில் தீ வைத்தால் தீட்சை பெறலாம் - ஸ்ரீ மச்சமுனி சித்தர் ஜெயந்தி விழா - http://tut-temple.blogspot.com/2018/08/blog-post_5.html

கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் 161 ஆம் ஆண்டு அவதார திருவிழா அழைப்பிதழ் - http://tut-temple.blogspot.com/2018/07/161.html


பாரத்தைக் குறைத்து பரத்தை உணர்த்தும் பரஞ்சோதி பாபா - 7- ஆம் ஆண்டு மகா குருபூஜைப் பேரானந்த வழிபாடு - http://tut-temple.blogspot.com/2018/06/7_27.html

 உன்னுள் உத்தமனைக் காணும் வழி - மஹான் சங்கு சித்தர் அவர்களின் 119 ஆவது குரு பூஜை - http://tut-temple.blogspot.com/2018/06/blog-post_13.html

அருள்மிகு சோமப்பா சுவாமிகளின் 50 ஆம் ஆண்டு குருபூசை விழா அழைப்பிதழ் - http://tut-temple.blogspot.com/2018/06/50.html

என்னை நீ ஆள்வாய் சிவப்பிரகாச இறைவநல் தேசிக மணியே! - http://tut-temple.blogspot.com/2018/06/blog-post_5.html

திருச்சி வரகனேரி பிர்மரிஷி ஸ்ரீ குழுமியானந்த சுவாமிகள் குருபூஜை - http://tut-temple.blogspot.com/2018/06/blog-post_1.html

ஸ்ரீ கண்ணையா யோகி குரு பூஜை - http://tut-temple.blogspot.com/2018/05/blog-post_79.html

மண் உண்ட மகான் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மல்லையா சுவாமிகள் - http://tut-temple.blogspot.in/2018/05/blog-post_89.html

மீண்டும் மீண்டும் நம்மை அழைக்கும் குழந்தைவேல் சுவாமிகள் - உழவாரப் பணி அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2018/05/blog-post_21.html

சித்திரை பூசத்தில் குழந்தைவேல் சுவாமிகளிடம் சரண் அடைவோம் - http://tut-temple.blogspot.in/2018/04/blog-post_21.html

ஜாதகத்தை மாற்றி சாதகமாக்கும் குழந்தைவேலர் - உழவாரப் பணி அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_77.html

 ஜாதகத்தையே மாற்றும் குழந்தைவேலர்... - http://tut-temple.blogspot.in/2017/05/blog-post_22.html

 என் கடன் பணி செய்து கிடப்பதே - உழவாரப் பணி - http://tut-temple.blogspot.in/2017/08/blog-post_24.html

உன்னுள் உத்தமனைக் காணும் வழி சாகாக் கல்வி - http://tut-temple.blogspot.com/2017/07/blog-post_4.html

ஓம் அகஸ்த்திய நாதனே - ஸ்ரீ குருமண்டல தெய்வமே !  - http://tut-temple.blogspot.com/2018/03/blog-post_76.html

எந்தையும் தாயும் - கூடுவாஞ்சேரி அகத்தியர் ஆயில்ய ஆராதனை அறிவிப்பு 21/05/2018  - http://tut-temple.blogspot.com/2018/05/21052018.html

மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டா - கூடுவாஞ்சேரி அகத்தியர் ஆயில்ய ஆராதனை அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2018/04/blog-post_22.html

அகத்தியருக்கு ஆயில்ய ஆராதனை -புரட்டாசி -2017- http://tut-temple.blogspot.in/2017/09/2017.html

அகத்திய முனிவரின் பஞ்ச யாக ஷேத்திரம் - பஞ்செட்டி சதய பூஜை அழைப்பு - http://tut-temple.blogspot.in/2018/04/blog-post_74.html

குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!! - கூடுவாஞ்சேரி அகத்தியர் ஆயில்ய ஆராதனை அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2018/03/blog-post_89.html

கூடுவாஞ்சேரி அகத்தியர் ஆயில்ய ஆராதனை - 28/2/2018 - http://tut-temple.blogspot.in/2018/02/2822018.html

மனமது செம்மை யாக அகத்தியர் பூசை தானே - http://tut-temple.blogspot.in/2018/03/blog-post_6.html 

21 August 2018

பாண்டமங்கலம் காசி விசாலாட்சி உடனுறை ஸ்ரீ காசி விஸ்வநாதர் திருக்கோவில்

அன்பின் நெஞ்சங்களே..

அனைவருக்கும் வணக்கம். இன்றைய பதிவில்  பாண்டமங்கலம் காசி விசாலாட்சி உடனுறை ஸ்ரீ காசி விஸ்வநாதர் திருக்கோவில் பற்றி காண உள்ளோம். ஏன் இந்த திருக்கோயில் தரிசனம் என்று நீங்கள் கேட்பது நம் காதில் விழுகின்றது. நமக்கும் ஏன் என்று தெரியவில்லை. ஆனால் வழிநடத்துவது அவன் அன்றோ ! அவன் வழியில் நாமும் செல்கின்றோம்.

பொதுவாக ஸ்ரீ காசி விஸ்வநாதர் திருக்கோவில் என்று நிறைய திருக்கோயில்கள் நாம் பார்த்திருப்போம்.அதாவது காசியில் உள்ள ஸ்ரீ காசி விஸ்வநாதர் திருக்கோவில் தவிர சென்னை மற்றும் தமிழகம் முழுதும் இதே திருப்பெயரில் நம் தகப்பன் குடி கொண்டுள்ளார்.உதாரணமாக சென்னையில் ஸ்ரீ காசி விஸ்வநாதர் திருக்கோவில், சிவகாசி ஸ்ரீ காசி விஸ்வநாதர் திருக்கோவில், தென்காசி ஸ்ரீ காசி விஸ்வநாதர் திருக்கோவில்,மதுரை பழங்காநத்தம் ஸ்ரீ காசி விஸ்வநாதர் திருக்கோவில் என்று பட்டியல் நீளுகிறது. காசியில் இறந்தால் முக்தி..இது சரியா? காசியில் இருந்தால் முக்தி.அதாவது புருவ மத்தியில் இருந்தால் முக்தி. எது எப்படியோ, நம் தமிழ் நாட்டில் உள்ள அனைவரும் காசிக்கு  சென்று ஸ்ரீ காசி விஸ்வநாதர் திருக்கோவில் தரிசனம் பெற இயலுமா? அதனை நிறைவேற்றத் தான் ஒவ்வொரு ஊரிலும் ஸ்ரீ காசி விஸ்வநாதர் திருக்கோவில் என்ற பெயரில் நம் அப்பன் அருள்பாலிக்கின்றார். பாண்டமங்கலம் ஸ்ரீ காசி விஸ்வநாதர் திருக்கோவில் தரிசனம் பெறுவோம் வாருங்கள்.

பாண்டமங்கலம் எங்குள்ளது? நாம் இரண்டு மாதங்களுக்கு முன்னர் திருச்சி சென்றிருந்தோம். தஞ்சாவூர் சித்தர் அருட்குடிலில் இருந்து ஞாயிற்றுக்கிழமை உறையூர்  ஸ்ரீ காசி விஸ்வநாதர் திருக்கோவிலில் அபிஷேகம் உள்ளது என்று கூறினார்கள்.நாமும் சரி என்று புறப்பட்டு உறையூர் சென்று அங்கு  ஸ்ரீ காசி விஸ்வநாதரைத் தேடினோம்.  தேடினோம். தேடினோம்..தேடிக் கொண்டே இருந்தோம். முச்சக்கர வாகன ஓட்டிகளிடமும் விசாரித்தும் பயனில்லை. பின்னர் முச்சக்கர வாகனம் மூலம்  ஸ்ரீ காசி விஸ்வநாதர் திருக்கோவில் அடைந்தோம். இந்த கோயில் சரியாக பாண்டமங்கலத்தில் உள்ளது. நம்மை ஏன் அங்கு இவர் அழைத்தார். நமக்கு எப்படி தெரியும். பதிவின் இறுதியில் உங்களுக்கே தெரியும்.





கடுகு சிறுத்தாலும் காரம் குறையுமா? என்பது போல் தான் இருந்தது. கோயில் பார்க்க சிறியதாக இருந்தது. அருள் வெளிப்பாடு அளவின்றி கிடைத்தது. எந்தெந்த சித்தர் பெருமக்கள் இங்கே வாசம் செய்கின்றார்கள் என்று நமக்கு எப்படி தெரியும். பிரதோஷ பலன்கள் இவ்வளவு இருக்கின்றதா என்று வியக்கும் வண்ணம் கீழ்கண்ட செய்தி கண்டோம்.


அது சரி..ஏன் இந்த கோயிலுக்கு சென்றோம்? திருச்சி காவிரி ஆற்றில் நீர் வர வேண்டும் என்பதற்காக 48 நாள்கள் இந்த கோயிலில் அபிஷேகம் செய்தார்கள். சரியாக 48 நாள் கழித்து, காவிரியில் நீர் பெருக்கெடுத்தது. இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இதே கோயிலில் அபிஷேகம் மற்றும் பூசை ஏற்பாடு செய்து இருந்தார்கள். இப்படி ஒரு நிகழ்வில் நம்மை இணைத்துள்ளார் அந்த பரம்பொருள் என்று நினைக்கும் போதே கண்களில் நீர் பெருக்கெடுத்தது.



காசி விஸ்வநாதர்,காசி விசாலாட்சி தரிசனம் இங்கே பெறலாம்.









கோயிலின் தல வரலாறு நமக்கு கிடைக்கவில்லை. ஆனால் கோயிலை பார்க்கும் போது, அருள் நிறைந்திருந்ததை உணர முடிந்தது. விநாயகர், முருகன், ஸ்ரீ தட்சிணாமூர்த்தி , ஸ்ரீ சரஸ்வதி, ஸ்ரீ மகாலட்சுமி, ஸ்ரீ பிரம்மா என அனைத்து சன்னிதிகளும் கண்டோம்.









இந்த திருக்கோயில் உறையூர் ஸ்ரீ வெக்காளியம்மன் திருக்கோயிலுடன் இணைந்த கோயிலாகும்.


அன்று மாலை அபிசேகம் நடைபெற்ற நிகழ்வு இன்னும் நம்முள் உள்ளது. இங்கு பால் அபிஷேகம் செய்தார்கள். சிறிய கோயில் தானே. நாம் இரண்டு முதல் மூன்று லிட்டர் பால் அபிஷேகம் என்று பார்த்தால், நம் எண்ணம் தவறு என்று புரிந்தது. சுமார் 15 லிட்டருக்கு மேல் பால் அபிஷேகம். சுமார் 10 - 15 இளநீர் அபிஷேகம் என்று நன்றி செலுத்திய பூஜை நம்மை இன்னும் அன்பில் ஆழ்த்தியது. இதுதான் சித்தர் அருட்குடிலின் சிறப்பும் ஆகும். அபிஷேகத்தின் போது அடியார் ஒருவர் பல பாடல்கள், ஸ்லோகங்கள் சொல்லிக் கொண்டிருந்தார். கேட்கவே தித்திப்பாக இருந்தது. அவர் கூறினார், யார் வந்து இங்கு மனமொன்றி பிரார்திக்கின்றார்களோ, அவர்களின் பிரார்த்தனை நிறைவேறும் என்றார். அதற்கு உதாரணமாக காவேரி தாயின் கருணை ஒன்றே போதும்.


இதோ. நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் இந்த கோயில் தரிசனம் இதற்காகத் தான்.இந்த அழைப்பிதழை நாம் பெற்று, நம் தளத்தின் மூலம் அனைவருக்கும் தெரியப்படுத்தவே.


இங்கு சம்வத்சராபிஷேக  திருக்கல்யாண விழா 22/08/2018 முதல் 24/08/2018 வரை சீரும் சிறப்புமாக நடைபெற உள்ளது. மேலதிக விபரங்களுக்கு அழைப்பிதழைப் பார்க்கவும். வாய்ப்புள்ள அன்பர்கள் கலந்து கொண்டு இறையருள் பெறுக !



மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம். 


மீள்பதிவாக:-

சிவன்மலை கந்தன் பாதம் கனவிலும் காக்கும் - http://tut-temple.blogspot.com/2018/08/blog-post_20.html

அற்றார் அழி பசி தீர்த்தல் - அன்னம்பாலிப்பு சிறப்புப் பதிவு - http://tut-temple.blogspot.com/2018/08/blog-post_17.html

சித்த சுத்திக்குச் சில சின்ன விஷயங்கள் : TUT & AVM அன்னதான நிகழ்வின் துளிகள் - http://tut-temple.blogspot.com/2017/10/tut-avm.html 

 கொடுத்துப் பார் - AVM அன்னதான அறிவிப்பு - http://tut-temple.blogspot.com/2017/11/avm.html

 சரணம் சரணம் சண்முகா சரணம்! - கூட்டுப் பிரார்த்தனை அறிவிப்பு - http://tut-temple.blogspot.com/2017/06/blog-post_4.html

தேடிப்போய் தர்மம் செய்; நாடி வருவருக்கு உதவி செய் - http://tut-temple.blogspot.com/2018/06/blog-post.html

பல கோடி நன்மைகள் வழங்கும் அன்னதானம் & மகேஸ்வர பூசை - ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமம் - http://tut-temple.blogspot.com/2018/05/blog-post_8.html

அன்னதானம் கொடுப்பது அனைத்தையுமே கொடுப்பதாம் - http://tut-temple.blogspot.in/2018/03/blog-post.html

ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமத்தில் அன்னம் பாலிக்கும் தில்லை சிற்றம்பலம் - ம(மா)கேஸ்வர பூசை - http://tut-temple.blogspot.in/2018/01/blog-post_24.html

ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமம் அருட் தொண்டுகள் - மகேஸ்வர பூசை & அன்னதான சேவை - http://tut-temple.blogspot.in/2018/04/blog-post_18.html

20 August 2018

சிவன்மலை கந்தன் பாதம் கனவிலும் காக்கும்

அடியார் பெருமக்களுக்கு வணக்கம்.

இன்றைய பதிவில் சிவன்மலை முருகனை சிந்திக்க உள்ளோம். முருகா...என்ற பதமே...நம்மை முருகனின் பாதம் நோக்கி நகர செய்யும். அழகென்ற சொல்லுக்கு மட்டுமில்ல முருகன். அறிவு, வீரம், சரணாகதி போன்ற அனைத்து நிலைகளுக்கும் மொத்தத்தில் தமிழுக்கே முருகன் சொந்தம். ‘விழிக்குத் துணை திருமென்மலர்ப் பாதங்கள் – மெய்மை குன்றா மொழிக்குத் துணை முருகா’ என்கிறார் அருணகிரிநாதர். இந்த சிவன்மலை தலமும் அருணகிரிநாதரால் பாடப் பெற்ற தலமாகும்.

 சிவன்மலை சுப்பிரமணியர் கோவில், தமிழ்நாட்டில் திருப்பூர் மாவட்டம், காங்கேயத்துக்கு அருகிலுள்ள சிவன்மலையில் அமைந்துள்ள அருணகிரிநாதரால் திருப்புகழில் பாடப்பெற்ற பெருமை கொண்ட முருகன் கோவில் ஆகும்.மூலவராக, சுப்ரமணியர், வள்ளியுடன் ஒரே கருவறையில் திருமண கோலத்தில் எழுந்தருளியுள்ளார். பட்டாலி என்ற கிராமமே சிவன்மலை அமைந்துள்ள பகுதியாகும்.

பால்வளம் மிக்க வனத்தில் கோவில் கொண்டுள்ள நல்ல மங்கை உடனமர் சிரவனீஸ்வரர் மகனே, சிவன்மலை சுப்ரமணிய சுவாமி. மலைச்சாரலில் தினைப்புனம் காத்துக்கொண்டிருந்த வள்ளியம்மையை, காதல் மணம் புரிந்து, இங்கு முருகன் குடியேறியதாகவும், சிவன் திரிபுரத்தை அழிக்க மேருமலையை வில்லாகப் பயன்படுத்தியபோது அதிலிருந்து சிதறிய ஒரு சிறுபகுதியே சிவன்மலை எனப்படுகிறது.

பார்வதி மற்றும் அகத்தியர் சிவனை நோக்கித் தவம் செய்த தலம் என்றும், வள்ளிமலைக்குச் சென்று வள்ளியை மணம்முடித்த முருகன் வள்ளியுடன் இங்கு திரும்பி வந்து குடிகொண்டதாகவும் தல வரலாறு கூறுகிறது.அதனால்தான் இத்தலத்தில் முருகன், சுப்பிரமணியராக வள்ளியுடன் காட்சி தருகிறார்.

இந்த வரலாறு ’சிவமலைக் குறவஞ்சிப் பாடலில்’ கூட குறிப்பிடப்படுகின்றது.

அந்த மேரை ஈசன் திரிபுர சம்ஹாரம்
செய்ய வளைக்குங் காலை
முந்து கொடுமுடியுள் ஒன்று சிந்தி இங்கு
வந்த சிவமலை இம்மலையே!’

சிவன்மலை கோவில் சிறப்புகளில், பிரசித்தி பெற்றது ஆண்டவன் உத்தரவு பெட்டியாகும்.மனிதர்களுக்கு ஏற்படும் இன்னல்கள், மகிழ்ச்சிகளை முன்னதாகவே உணர்த்துவதால், மூலவருக்கு காரண மூர்த்தி என்ற பெயர் உள்ளது.

 சிவன்மலை ஆண்டவர் பக்தர்களின் கனவில் வந்து, தனக்கு இன்ன பொருளை வைத்து பூஜை செய்யுமாறு கூறுவார். அதன்படி, சுவாமியிடம் உத்தரவு கேட்கப்பட்டு, உத்தரவானதும் குறிப்பிட்ட பொருள் ஆண்டவர் உத்தரவு பெட்டியில் வைக்கப்படும்.

 இன்னொரு பக்தரின் கனவில் வந்து அடுத்த பொருளை சுட்டிக்காட்டும் வரை, பழைய பொருளே கண்ணாடிப் பெட்டிக்குள் பக்தர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கும்.நடக்கப்போகும் நிகழ்வுகளின் முன்னறிவிப்பாக இப்பொருள்கள் முக்கியத்துவம் பெற்றவவை என்பது பக்தர்களின் நம்பிக்கை. ஏற்கனவே நம் தலத்தில் " இது சிவன் மலை ஆண்டவன் கட்டளை - உத்தரவுப் பெட்டி " என்ற பதிவில் உத்தரவுப் பெட்டி நாம் சற்று கூறியுள்ளோம்.

சிவன்மலை கோயிலுக்கு வெளியே தீபத்தூண் உள்ளது. அத் தூணின் அடிப்புறத்தில், விநாயகர் (கிழக்கே), சூலம் (தெற்கே), மயில் ((வடக்கே) மற்றும் தண்டபாணி (மேற்கே) வடிக்கப்பட்டுள்ளது. கோயிலின் உள்ளே தெற்குப் பிரகாரத்தில், கைலாசநாதர், ஞானாம்பிகை சன்னிதிகள் கிழக்குமுகமாக உள்ளன. மேற்குப் பிரகாரத்தில் தென்மேற்கு மூலையில் கன்னிமூலை விநாயகரும், வடமேற்கில் தண்டபாணியும், கருவறையின் வெளிச்சுவற்றில் தட்சிணாமூர்த்தி, துர்க்கை, துர்க்கைக்கு எதிரில் சண்டிகேஸ்வரர் உள்ளனர். சனிபகவானுக்குத் தனி சன்னிதியும் அதுதவிர நவக்கிரக சன்னிதியும் அடுத்து பைரவர் சன்னிதியும் அமைந்துள்ளன.

பிரகாரம் சுற்றிவந்து, கொடிமரம், மயில்வாகனக் குறடு, பலிபீடம் கடந்தால், சுமுகர், சதேகர் துவாரபாலகர்கள். அடுத்து உள்ளே கருவறையில் சுப்பிரமணிய சுவாமி வள்ளி சமேதராக இருக்கிறார்.

இக்கோயிலின் தலவிருட்சமாக தொரட்டி மரம் உள்ளது.

தல இறைவன் : சுப்ரமணிய சுவாமி.
தல இறைவி: வள்ளி, தெய்வானை.
தல விருட்சம் : தொரட்டி மரம்.
தல தீர்த்தம் : காசி தீர்த்தம்.

திருவிழாக்கள்: சித்ரா பவுர்ணமி, வைகாசி விசாகம், மாசி மகம், பங்குனி உத்திரம்.
பழமை: 1000-2000 வருடங்களுக்கு முன்

இத்தல முருகரின் பக்தையான ஒரு பெண் காசி சென்று நீராட விரும்பியும் காசி செல்ல வசதியில்லாததால் மனம் வருந்த, தம் பக்தைக்காக முருகப்பெருமான் காசித் தீர்த்தத்தை இத்தலத்திற்கே வரவழைத்தார்.

 திருமணத் தடை, குழந்தை பாக்கியம், தொழில் மேன்மை, நோய் பாதிப்பு என அத்தனை பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைக்கும் அற்புதமலையாக விளங்குகிறது.

நவக்கிரக சன்னதியை, ஒன்பது முறை சுற்றி, வழிபட்டு வந்தால் எத்தனை பிரச்சனைகள் இருந்தாலும், அதிலிருந்து விடுபடலாம்.

சனி பகவான் தனி சன்னதியிலும் எழுந்தருளியுள்ளார்.

 மலை மேல், சுரலோக நாயகி சமேத ஜூரஹரேசுவரர் எழுந்தருளியுள்ளார். காய்ச்சல் வந்தவர்கள் மிளகு ரசம் வைத்து, இங்கு வந்து பு+ஜை செய்து உண்டால், காய்ச்சல் நீங்கும் என்ற ஐதீகம் உள்ளது.

மற்ற திருத்தலங்கள் போலன்றி இங்கு முதல் வழிபாடு முருகப்பெருமானுக்கே.மற்ற திருத்தலங்களில் முதல் வழிபாடு பிள்ளையாருக்கே.

 நவக்கிரகங்கள் அனைத்தும் சூரியபகவானைப் பார்த்து நிற்கின்றன

 அணையாத தீபம் எரிந்து கொண்டுள்ளது சிறப்பாகும்.

 திருநள்ளாறு சென்று சனீஸ்வரனை தரிசிப்பதும், சூரிய நாராயணர் கோவில் சென்று சூரியனை வழிபடுவதால் ஏற்படும் சிறப்பும் இங்கு கிடைக்கும்.

இப்படி நாளெல்லாம் குமரனை பற்றி பேசிக் கொண்டே இருக்கலாம். மீண்டும் ஒருமுறை பதிவின் தலைப்பை படியுங்கள்.



- அடுத்த பதிவில் நாமும் சிவன்மலை செல்வோம்.

 மீள்பதிவாக:-

இது சிவன் மலை ஆண்டவன் கட்டளை - உத்தரவுப் பெட்டி - http://tut-temple.blogspot.com/2018/06/blog-post_19.html

கந்தனுக்கு அரோகரா... ஆடிக் கிருத்திகை தரிசனம் - http://tut-temple.blogspot.com/2018/08/blog-post_7.html

ஆடிக் கிருத்திகை - மாற்றம் அதை தந்திடுவான் மீஞ்சூரான் - http://tut-temple.blogspot.com/2018/08/blog-post_3.html 

திருப்புகழைப் பாடப் பாட வாய் மணக்கும் - http://tut-temple.blogspot.com/2018/06/blog-post_27.html

திருப்புகழைக் கேட்கும் செவி - ஸ்ரீமத் அருணகிரிநாதர் குருபூஜை விழா - http://tut-temple.blogspot.com/2018/06/blog-post_54.html

அழகெல்லாம் முருகனே ... அருளெல்லாம் முருகனே... - http://tut-temple.blogspot.com/2018/06/blog-post_47.html

தேனி சண்முகநாத மலை தரிசனம் (1) - http://tut-temple.blogspot.com/2018/06/1.html

வெற்றி வேல் வீர வேல் - தேனி சண்முகநாத மலை தரிசனம் - http://tut-temple.blogspot.com/2018/05/blog-post.html

இது சிவன் மலை ஆண்டவன் கட்டளை - உத்தரவுப் பெட்டி - http://tut-temple.blogspot.com/2018/06/blog-post_19.html

சண்முகா சரணம் - http://tut-temple.blogspot.com/2018/05/blog-post_84.html

முருகன் அருள் முன்னிற்க! பங்குனி உத்திரம் 2018 - http://tut-temple.blogspot.in/2018/03/2018.html

முருகன் அருள் முன்னிற்க! - பங்குனி உத்திரம் கொண்டாட்டம் - http://tut-temple.blogspot.com/2018/04/blog-post.html

நால்வரின் பாதையில்... திருப்புகழ் தலங்கள் - http://tut-temple.blogspot.in/2018/03/blog-post_30.html

வேலை வணங்குவதே நம் வேலை! - http://tut-temple.blogspot.com/2018/04/blog-post_2.html