Subscribe

BREAKING NEWS

14 April 2020

தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

ன்பு உள்ளங்களே
தேவைகள் தீர்வதில்லை
எதுவும் முடிவு அல்ல
எல்லாமே அடுத்த
நல்லதுக்கான தொடக்கமே
மகிழ்ச்சியுடன் புத்தாண்டை வரவேற்று
நலமுடனும் வளமுடனும்
வாழ்ந்திட நல் வாழ்த்துக்கள்.




சார்வரி தமிழ் புத்தாண்டில் எல்லா வளங்களும் நலங்களும் பெற்று வாழ அனைவரையும் வாழ்த்துகிறோம்.

சார்வரி என்றால் வீறியெழல் என பெயர். இந்த புத்தாண்டில் தீயவை அழிந்து நல்லவை பெருக, அயுள் ஆரோக்கியம் அதிகரிக்கவும் வாழ்க வையகம் வாழ்க வளமுடன் என்று வாழ்த்துகிறோம்.

சார்வரி வருடம் சித்திரை மாதம் 1-ம் நாள் (13.04.2020) திங்கட்கிழமை இரவு உதயாதி நாழிகை 32-52 இல் திருக்கணித பஞ்சாங்கப்படி இரவு 8.23 மணிக்கு (வாக்கிய பஞ்சாங்கப்படி இரவு 7.26 மணி) சார்வரி என்னும் பெயருடைய தமிழ்ப் புதுவருடம் பிறக்கின்றது.
தமிழ் புத்தாண்டான சித்திரை முதல் நாளன்று பூஜை அறைகளை அலங்கரித்து விளக்கேற்றி, பஞ்சாங்கம் வைத்து கனிகளை இறைவனுக்கு படைத்து வழிபடுவதன் மூலம் ஆண்டு முழுவதும் நன்மைகள் நடைபெறும். இந்த நாளில் பஞ்சாங்கம் படிப்பதன் மூலம் நோய்கள் நீங்கும் ஆயுள் அதிகரிக்கும். மும்மூர்த்திகளில் பிரம்மாவுக்கு உரியது விஷூ புண்ணிய காலம் ஆகும். 12 தமிழ் மாதங்களில் சித்திரை, ஆடி, ஐப்பசி மற்றும் தை ஆகியவை பிரம்மாவுக்கு உரியவை. அந்த மாதங்களின் முதல் நாள் விஷூ புண்ணிய காலம் என்று குறிப்பிடப்பட்டு, தலை எழுத்தை மாற்றி எழுதக் கூடிய பிரம்மாவை வணங்கு வதற்குரிய நாட்களாகவும் வரையறுக்கப்பட்டுள்ளன. ஜோதிட ரீதியாக, அந்த காலகட்டம் சூரியனது சர ராசி சஞ்சார மாதங்களாகவும் அமைகிறது.

கிரக நிலை:
அன்றைய நேரத்தில் தனுசு ராசி, துலாம் லக்கினமாக அமைகிறது. நவாம்சமாக கடக ராசியும், கும்ப லக்கினமாகவும், புதன் ஹோரை, கேது மகா தசையும், சனி புத்தி என அமைந்து சார்வரி ஆண்டு பிறக்கிறது.
சார்வரி ஆண்டுக்குரிய சித்தர் பிரான் இடைக்காடரின் பாடல்
சாருவரி ஆண்டதனிற் சாதிபதினெட்டுமே
தீரமறு நோயால் திரிவார்கள், மாரியில்லை
பூமி விளை வில்லாமற் புத்திரரும் மற்றவரும்
ஏமமன்றிச் சாவார் இயம்பு.


அதாவது சார்வரி ஆண்டில், தீராத நோயால் அவதிப்படுவர், மழை குறைவாக இருக்கும் என்பதால், பூமியில் விளைச்சல் குறையும் சோகம் உண்டு. மக்கள் தாமாக வரக்கூடிய மரணமில்லாமல் சாவார் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மழை வாய்ப்பு 
ஆடி மாதம் நல்ல மழை உண்டு அதனால் விவசாயம் உள்ளிட்ட தொழில் தழைக்கும். அதே சமயம், மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளுக்கு பல சலுகைகள் வழங்கக் கூடும் என கணிக்கப்படுகிறது. சலுகைகள் ஒருவருக்கு வழங்குகிறார்கள் என்றால் அவர் பாதிக்கப்பட்டவராக இருப்பார். அதனால் மழை அதிகமாகவோ அல்லது குறைவாக ஏற்படும் என்பது இதன் மூலம் தெரிகிறது.
ஸ்ரீ சார்வரி வருடம் பல சிக்கல்களை தவிர்க்க முடியாததாக இருக்கும். மழை சுமாராக இருந்தாலும் விளைச்சல் ஓரளவு நம்பிக்கை தரும். காய், கனி, கிழங்கு வகைகள் ஓரளவு நல்ல விளைச்சலை தரும்
இந்தாண்டு நவகிரகங்களின் பதவி
சனி -ராஜா 
சூரியன் - மந்திரி
சனி - சேனாதிபதி
புதன் - ஸஸ்யாதிபதி
சந்திரன்- தான்யாதிபதி 
சனி - அர்க்காதிபதி
சனி - மேகாதிபதி 
சுக்கிரன் - இராசாதிபதி 
புதன்- நீரஸாதிபதி
நவநாயகர்களின் வலிமையும், இந்தாண்டு பலனும், அரசுகளின் ஆதிக்கம் ஓங்கி இருக்கும். திடீர் புதையல் கிடைக்க வாய்ப்புள்ளது. 
பிறக்கவிருக்கும் சார்வரி புத்தாண்டில் பன்னிரு ராசிகளுக்குமான வரவு செலவு 
இந்த ஆண்டு மேஷம் விருச்சிகம் ராசிகளுக்கு ஆதாயம் 5 விரையம் 5 ஆகவும் .
ரிஷபம், துலாம் ராசிக்காரர்களுக்கு ஆதாயம் 14 விரையம் 11ஆகவும் .
மிதுனம் கன்னி ராசிக்காரர்களுக்கு ஆதாயம் 2 விரையம் 11 ஆகவும் .
கடகம் ராசிக்கு ஆதாயம் 2 விரையம் 2, ஆகவும் .
சிம்மம் ராசிக்கு ஆதாயம் 14 விரையம் 2,ஆகவும் .
தனுசு, மீனம் ராசிக்கு ஆதாயம் 8 விரையம் 11 ஆகவும் .
மகரம் கும்பம் ராசிக்கு ஆதாயம் 11, விரையம் 5.ஆகவும் உள்ளது
இந்த ஆண்டு மொத்த ஆதாயம் 56 மொத்த விரையம் 47 . இந்த ஆண்டு ஆதாயத்தை விட விரையம் குறைவாக இருப்பதால் பொதுமக்களுக்கு வருமானத்தை விட செலவு குறைவாக இருக்கும்.
சார்வரி வருடத்தில் வரும் கிரகணங்கள்
ஜூன் 5 அன்று ஒரு பௌர்ணமி தினத்தில் சந்திர கிரகணம்.
ஜூன் 21 அன்று ஒரு வருடாந்திர சூரிய கிரகணம்.
ஜூலை 5 அன்று ஒரு பௌர்ணமி தினத்தில் சந்திர கிரகணம்.
நவம்பர் 30 அன்று ஒரு தெளிவற்ற சந்திர கிரகணம்
டிசம்பர் 14 அன்று சூரிய கிரகணம்.
2020 - 2021 சார்வரி கிரக பெயர்ச்சி
குரு
குரு தற்போது அதிசாரம் அடைந்து மகர ராசியில் இருக்கும் நிலையில், ஜூன் 8ம் தேதி (ஆனி 24) வக்கிரம் அடைந்து தன் சொந்த வீடான தனுசு ராசிக்கு திரும்புவார்.
2020 நவம்பர் 15ம் தேதி இரவு 9.36 மணிக்கு குரு பகவான் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு பெயர்ச்சி அடைவார். அதன் பின்னர் 2021 ஏப்ரல் 6ம் தேதி (பங்குனி 23) கும்ப ராசிக்கு அதிசார பெயர்ச்சி அடைவார்.
சனி
வாக்கிய பஞ்சாங்கப்படி சனி பகவான் மகர ராசிக்கு மார்கழி மாதம் 11 (2020 டிசம்பர் 26) அன்று பெயர்ச்சி அடைவார்.
ராகு – கேது பெயர்ச்சி:
2020 செப்டம்பர் 1ம் தேதி (ஆவணி 16) ராகு கேது பெயர்ச்சி நிகழ உள்ளது. ராகு பகவான் ரிஷப ராசிக்கும், கேது விருச்சிக ராசிக்கும் பெயர்ச்சி அடைய உள்ளனர்.
எந்த நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம். 

1. அஸ்வினி - புரவி
பணவரவு நன்றாக இருக்கும். நினைத்த காரியங்கள் நிறைவேறும். வியாபாரம் விருத்தியடையும். செய்யும் தொழிலில் லாபம் வரும். கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். 

2. பரணி - அடுப்பு
குடும்பத்தில் சின்னச் சின்ன பிரச்சினைகள் வரலாம் கணவன் மனைவி விட்டுக்கொடுத்து போங்க. பணவரவும் செலவும் சரியாக இருக்கும். நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் போது பயன்படுத்திக்கொள்ளுங்கள். 

3. கார்த்திகை - ஆரல்
உங்களுக்கு இந்த ஆண்டு பணவரவு நன்றாக இருக்கும். வியாபாரத்தில் லாபம் திருப்தி தரும். பிள்ளைகளின் நலனில் அக்கறை காட்டுவீர்கள். எடுத்த காரியத்தை சாதகமாக செய்து முடிப்பீர்கள். 

4. ரோகிணி - சகடு
உங்களின் மனோ தைரியம் அதிகரிக்கும். காரியத்தடைகள் உண்டாகும். தம்பதியர் இடையே நெருக்கம் கூடும். அவ்வப்போது சின்னச் சின்ன சண்டைகள் வரலாம் கவனம் தேவை. வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும் பணம் பாக்கிகள் இன்றி வசூலாகும்.

5. மிருகஷீரிடம் - மான்றலை
உங்களின் மனக்கவலை நீங்கும் தெம்பும் தைரியமும் உண்டாகும். கணவன் மனைவி இடையே நெருக்கம் கூடும். புதிய வாய்ப்புகள் தேடி வரலாம். பிள்ளைகள் மீது அதிக அக்கறை காட்டுவீர்கள். பணவரவு உற்சாகத்தை கொடுக்கும். 

6. திருவாதிரை - மூதிரை
தோல்விகளை வெற்றிகளாக மாற்றும் வல்லமை படைத்தவர்கள் நீங்கள். எதிலும் தெளிவான முடிவு எடுப்பீர்கள். வியாபாரத்தில் சாதுர்யமான பேச்சினால் லாபம் அடைவீர்கள். பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள். கணவன் மனைவி இடையே டென்சனும் கோபமும் வேண்டாம் விட்டுக்கொடுத்து போங்க. 

7. புனர்பூசம் - கழை
குடும்பத்துடன் குதூகலமாக இருப்பீர்கள். இந்த ஆண்டு இதமான ஆண்டாக அமையும். கணவன் மனைவி இடையே சின்னச் சின்ன சண்டைகள் ஏற்பட்டு விலகும். கொடுத்த கடனை திரும்ப வசூலித்து விடுவீர்கள். இந்த ஆண்டு உங்களின் நிதி நிலைமை நன்றாக இருக்கும். வேலைச்சுமை சில நேரங்களில் டென்சனை ஏற்படுத்தும். 

8. பூசம் - கொடிறு
வியாபாரம் தொடர்பாக சில அலைச்சல்கள் ஏற்படலாம். திடீர் கோபம் உங்களுக்கு சில பாதிப்புகளை ஏற்படுத்தும். பழைய பாக்கிகள் வசூலாகும். உங்க குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். இந்த ஆண்டு உங்களுக்கு கெட்ட கனவுகளால் சில பிரச்சினைகள் வரலாம் இறை வழிபாடு மனதில் அமைதியை ஏற்படுத்தும்.

9. ஆயில்யம் - அரவு
இந்த ஆண்டு உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும் சுறுசுறுப்பாகவும் உற்சாகமாகவும் இருப்பீர்கள். பணவரவு நன்றாக இருக்கும் வீண் செலவு கட்டுப்படும். உங்களுக்கு இந்த ஆண்டு வியாபாரம் நன்றாக இருக்கும். பழைய கடன்கள் வசூலாகும். வேலையில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் தேடி வரும். 
10. மகம் - கொடுநுகம்
உங்களின் மனோ தைரியம் அதிகரிக்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். வேலையில் கவனம் தேவை. பெண்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்க. கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். இந்த ஆண்டு சுப காரியங்கள் செய்யும் முன்பாக ஒருமுறைக்கு இருமுறை ஆலோசனை செய்வது நல்லது. 

11. பூரம் - கணை
பூரம் நட்சத்திரக்காரர்களே நீங்க இந்த ஆண்டு எந்த ஒரு விசயத்தையும் கவனமாக கையாளுங்கள். ரகசியம் காக்கவும் எந்த ஒரு விசயத்தையும் வெளிப்படையாக பேச வேண்டாம். உறவினர்களால் நன்மை ஏற்படும். உங்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். தைரியம் கூடும்.

12. உத்திரம் - உத்தரம்
இந்த ஆண்டு திடீர் பணவரவு வரும். புதிய நபர்களுடன் எதையும் விவாதிக்க வேண்டாம். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு டென்சன் அதிகமாகும். பெண்கள் அடுத்தவர்களின் விசயங்களில் தலையிட வேண்டாம். 

13. ஹஸ்தம் - கை
இந்த ஆண்டு உங்களின் மதிப்பு மரியாதை கூடும். கணவன் மனைவி இடையே ஏற்பட்ட பிரச்சினைகள் தீரும். கணவன் மனைவி இடையே ஏற்பட்ட பிரச்சினைகள் தீரும். இந்த ஆண்டு உங்களுக்கு உற்சாகமான ஆண்டாக அமையும். தொழில் வியாபாரம் லாபகரமாக இருக்கும். பணவரவு நன்றாக இருக்கும். 

14. சித்திரை - அனுபை
உங்களின் மனோ தைரியம் அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே விட்டுக்கொடுத்து போங்க சின்னச் சின்ன பிரச்சினைகள் வந்தாலும் அதை நீங்க பெரிதுபடுத்த வேண்டாம். தொழில் வியாபாரத்தில் ஆரம்பத்தில் நஷ்டம் ஏற்படுவது போல இருந்தாலும் இந்த ஆண்டு இறுதியில் வியாபாரம் லாபத்தில் இருக்கும். 

15. சுவாதி - விளக்கு
இந்த ஆண்டு உங்களுக்கு பணவரவு அதிகமாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களிடம் வாக்குவாதத்தை தவிர்த்து விடுங்கள். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். தடைகள் நீங்கும் வெற்றிகரமான ஆண்டாக அமையும். பிரச்சினைகள் தீரும். பணவரவு அதிகமாக இருக்கும். 

16. விசாகம் - முறம்
இந்த ஆண்டு உங்களுக்கு வீண் செலவு அதிகரிக்கும். வேலையில் இருப்பவர்கள் கோபப்பட வேண்டாம். மேலதிகாரிகளை அனுசரித்து செல்வதன் மூலம் வேலையை தக்கவைக்கலாம். கணவன் மனைவி இடையே கோபமாக பேச வேண்டாம். பெண்களின் மன அமைதி பாதிக்கும். உங்களின் பேச்சுக்கு மதிப்பு மரியாதை கூடும். 

17. அனுசம் - பனை
இந்த ஆண்டு உங்களின் உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். நோய் பாதிப்புகள் நீங்கும். பிரிவினை ஏற்பட்டு பிரிந்தவர்கள் ஒன்று சேர்வார்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு புரமோசன் கிடைக்கும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். 

18. கேட்டை - துலங்கொலி
இந்த ஆண்டு விஐபிக்களின் அறிமுகம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். கணவன் மனைவி இடையே நெருக்கம் கூடும். தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். உடல் சோர்வு நீங்கி சுறுசுறுப்பு அதிகரிக்கும். 

19. மூலம் - குருகு
வாழ்க்கையில் எதிர்பாராத திடீர் திருப்பங்களை சந்திக்க வேண்டியிருக்கும் , கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். உறவினர்களால் நன்மைகள் நடைபெறும். வேலை செய்பவர்களுக்கு புரமோசன் கிடைக்கும். எந்த செயலையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செய்யுங்கள். 

20. பூராடம் - முற்குலம்
இந்த புத்தாண்டு முதல் நீங்க புதிய மனிதராக இருப்பீர்கள். நீங்க எண்ணியவை நிறைவேறும். நிறைய நேரங்களில் கோபம் வரும். கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். பணவரவு இருந்தாலும் காரிய தடைகளால் அவ்வப்போது டென்சன் மன உளைச்சல் ஏற்படும். 

21. உத்திராடம் - கடைக்குலம்
எந்த பிரச்சினை வந்தாலும் சாதுர்யமான பேச்சினால் சமாளிப்பீர்கள். எதிர்பார்த்த இடத்தில் இருந்து பணவரவு வரும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். குடும்பத்தில் கணவன் மனைவி இடையே நெருக்கம் கூடும். 

22. திருவோணம் - முக்கோல்
இந்த புத்தாண்டு முதல் உங்க ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். தைரியம் தன்னம்பிக்கை கூடும். நீங்க எதிர்பார்த்ததை விட பணவரவு அதிகமாகவே இருக்கும். எதிரிகளால் ஏற்பட்ட பிரச்சினைகள் தீரும். கணவன் மனைவி இடையே மகிழ்ச்சி அதிகரிக்கும். 

23. அவிட்டம் - காக்கை
கணவன் மனைவி இடையே ஏற்பட்ட பூசல்கள் சரியாகும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கும் போது ஒருமுறைக்கு இருமுறை யோசித்து முடிவெடுப்பது நல்லது. திடீர் செலவுகள் அதிகம் வரும். அமைதியே ஆரோக்கியத்திற்கு வழி

24. சதயம் - செக்கு
இந்த சார்வரி ஆண்டில் எந்த புதிய செயலை செய்யத் தொடங்குவதற்கு முன்பும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செய்யவும். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்லவும். கணவன் மனைவி இடையே ஏற்பட்ட பிரச்சினைகள் நீங்கும். பெண்களுக்கு நகை, பொன் பொருள் சேர்க்கை அதிகரிக்கும். 

25. பூரட்டாதி - நாழி
இந்த வருடம் உங்க பேச்சில் கவனமாக இருங்க காரணம் உங்க பேச்சே உங்களுக்கு எதிரியாகும். அக்கம் பக்கத்தினர் உறவினர்களிடம் கவனமாக பேசுங்க. குடும்பத்தில் அவ்வப்போது வீண் வாக்குவாதம் ஏற்படும். கணவன் மனைவி உறவில் கவனமாக இருங்க. ஏதோ மனக்கவலையுடனே இருப்பீங்க கவனமாக இருங்க கடவுளை நம்பினோரை கைவிட மாட்டார். 

26. உத்திரட்டாதி - முரசு
குடும்பத்தில் உள்ளவர்களுடன் பேசும் போது பேச்சுவார்த்தையில் கவனமாக இருங்க. கணவன் மனைவி இடையே சிறுசிறு மனஸ்தாபம் ஏற்படும். சகோதரர்களிடம் பேசும் போது கவனமாக பேசவும். கொடுத்த பணம் கைக்கு வருவதில் தாமதம் ஏற்படும். வேலைப்பளு இருந்தாலும் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பக்திமயமான ஆண்டாக அமையும். 

27. ரேவதி - தோணி
ஆண்டு முழுவதும் குதூகலமாக இருப்பீர்கள். குடும்பத்தில் கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். தடைபட்ட காரியங்கள் தடையின்றி நடைபெறும். பெண்களின் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். பணவரவு அதிகமாகும். மனதில் குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். புதிய பட்டங்கள் பதவிகள் தேடி வரும்.

இறை வழிபாடு
வளமை தூபக்காலில் மரக்கரியை எரியச் செய்து, அந்தக் கனலில் சாம்பிராணியைப் போட்டு, புகைய விட்டு, இறைவனுக்குக் காட்டுங்கள்.
பாறை போல் இறுகிக் கிடக்கும் சாம்பிராணிக் கட்டிகள், தீயில் பட்டவுடன் புகையாகிப் போகிறது. அதுபோல், நம்முன் பூதாகாரமாக, மிகக் கடினமாகக் கிடக்கும் துன்பங்கள் எல்லாம், அக்னி உருவாக உள்ள இறைவனின் அருள் கடாட்சம் கிட்டியவுடனே, புகையைப் போன்று லேசாகி விலகிவிடும்.இதுதான் அதற்கான விளக்கமாக உள்ளது .
புத்தாண்டில்
புதிய சிந்தனை
புதிய முயற்சி
புதிய எண்ணங்கள் பூக்கட்டும்
நட்புகளுக்கும்
சொந்தங்களுக்கும்
தமிழ் இனத்துக்கும்
உயிரோடு இணைந்த
அனைத்து தமிழ் உறவுகளுக்கும்
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

No comments:

Post a Comment