Subscribe

BREAKING NEWS

05 January 2020

ஆழ்மனத்தின் இயக்க சக்தியை வெளிப்படுத்துவது எப்படி?ரகசியம் 8..

ஒரு நண்பர் ஒருவர் தன்னுடைய உறுப்பு ஒன்றில் புற்றுநோய் உயிரணுக்கள் இருப்பதாக தன் திசு ஆய்வறிக்கையில் காட்டியதாக கூறினார். அவரது சிறப்பு மருத்துவர் ஒரு வலிமைமிக்க ஆபத்தான சிகிச்சை முறையை பரிந்துரைத்தார். அதை ஒப்புக் கொள்வதற்கு முன்பாக அந்த நண்பர் வேறொரு அணுகுமுறையை  முயற்சித்தார் அது தினமும் இரவு உறங்கச் செல்வதற்கு முன்னர் அவர் அமைதியாக கீழ்க்கண்டவாறு கூறினார். என் ஒவ்வொரு உயிரணுவும் நரம்பும் திசுவும் உருபும் இப்போது முழுமையடைந்து தூய்மை ஆக்கப்பட்டு சுத்தமாக்கப்பட்டு  என் உடல் முழுவதும் ஆரோக்கியமும் இயக்கமும் மீண்டும் குடியேறுகின்றன என்று தனக்குத்தானே சுய பிரகடனத்தை கூறிக்கொண்டார்.
 

ஒரு மாதத்தில் அவர் பரிபூரணமாக    குணமடைந்தார் அதையடுத்து மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகள் அனைத்தும் அவரது உடலில் புற்றுநோய் உயிரணுக்கள் இல்லை என்பதை உறுதிப்படுத்தினார்.

 தூக்கத்துக்கு முன்பு அவர் மீண்டும் மீண்டும் சுயபிரகடனம் கூறியதன் காரணத்தை அவரிடம் கேட்டபோது அதற்கு அவர் மனதை ஒருமுறை ஒரு குறிப்பிட்ட திசையில் இயக்கப்பட்டால் ஆழ்மனத்தின் இயக்க சக்தி உங்கள் உறக்கம் முழுவதும் தொடர்ந்து செயலாற்றிக் கொண்டே இருக்கும் எனவேதான் நீங்கள் ஆழ்ந்த உறக்கத்திற்கு செல்லும் முன்பு உங்கள் ஆழ்மனம் வேலை செய்வதற்கான ஏதேனும் பயனுள்ள ஒன்றை அதற்கு வழங்குவது அல்லது நமக்கு வேண்டிய பிரார்த்தனைகளை செய்வது  மிக மிக இன்றியமையாதது என்று அவர் பதிலளித்தார்.

 பரிபூரண ஆரோக்கியம் குறித்து சிந்திக்கையில் அவர் தனது உடல்நிலையை அந்த நோயின் பெயரை கொண்டு அழைக்க வில்லை என்பதை நாம் இங்கு கவனிக்க வேண்டும் நீங்கள் உங்கள் உபாதைகளை பற்றிப் பேசுவதையும் அவற்றுக்கு பெயர் இடுவதையும் குறிப்பாக தூங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு முற்றிலுமாக நிறுத்தி விடுங்கள் என்று நான் பரிந்துரைக்கிறேன்.

 உபாதைகள் உயிர் பெற்று நீங்கள் அதற்க்கு அளிக்கும் கவனம்  அவை குறித்து பயத்தாலும் மேற்கூறப்பட்ட தகவல்கள் போல் நீங்களும் மன அறுவை சிகிச்சை நிபுணராக மாறலாம். காய்ந்துபோன கிளைகள் எவ்வாறு மரத்தில் இருந்து உதிர்ந்து விழுகின்றன அவ்வாறு உங்கள் பிரச்சனைகளும் உங்கள் வாழ்விலிருந்து துண்டிக்கப்பட்டு விடும்.
 அதற்கு மாறாக உங்கள் வலிகளும் அறிகுறிகளும் அதற்குரிய நோய்களின் பெயர்களை அடிக்கடி கூறிக் கொண்டிருந்தால் அவற்றைப்பற்றி மற்றவர்களிடத்தில் கலந்து பேசிக்கொண்டும்   இருந்தால் நீங்கள் அவற்றுக்கு உங்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் வல்லமையை அளிக்கின்றீர்கள்  ஆழ்மனதில் குணமாக்கும் சக்தியை ஆற்றலையும் விடுவிக்கும் இயக்க வினையை அணை போட்டுத் தடுத்து விடுகிறீர்கள்  மேலும் உங்கள் சொந்த மனதின் விருப்பப்படி உங்களது கற்பனைகள் உருப்பெறுகின்றன என்பதனை மறக்க வேண்டாம்  வாழ்வின் மாபெரும் உண்மைகள் உங்கள் மனத்தில்  நிரப்பவேண்டும் 

 உங்களை குணப்படுத்துவது எது என்பதை முதலில் நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும் உங்கள் ஆழ் மனதிற்கு இடப்படும் சரியான கட்டளைகள் உங்கள் மனத்தையும் உடலையும் குணப்படுத்தும் என்பதை நீங்கள் மறக்கக்கூடாது.

 உங்கள் வேண்டுகோள்களையும் விருப்பங்களையும் உங்கள் ஆழ்மனதிற்கு தெரிவிப்பதற்கு ஒரு தீர்மானமான திட்டத்தை முதலில் நீங்கள் வகுத்துக்கொள்ள வேண்டும்.

 விரும்பும் விளைவுகளை கற்பனை செய்யுங்கள் அவற்றின் அர்த்தத்தை உணருங்கள் அதைத் தொடர்ந்து பின்பற்றுங்கள் தீர்மானமான விளைவுகள் உங்களுக்கு நிச்சயம் கிடைக்கும்.

 நம்பிக்கை என்றால் என்ன? என்று முடிவு செய்யுங்கள் நம்பிக்கை என்பது உங்கள் மனதில் தோன்றும் ஓர் எண்ணம் என்பதை அறிந்து கொள்ளுங்கள் நீங்கள் என்ன சிந்திக்கிறீர்களோ  அதை உருவாக்குகிறீர்கள் என்பதை நீங்கள் ஒருபோதும் மறந்துவிடக் கூடாது.

 உடல் நலமின்மை உங்களை பாதிக்கும் அல்லது உங்களுக்கு தீங்கு விளைவிக்கும் எதிலும் நம்பிக்கை கொள்வது தவறானது பூரண ஆரோக்கியம் செழிப்பு அமைதி செல்வம் தெய்வீக சிந்தனை ஆகியவற்றை எப்பொழுதும் நீங்கள் நம்ப வேண்டும்.

 நீங்கள் வழக்கமாக சிந்திக்கும் உரிய எண்ணங்களை உங்கள் வாழ்க்கையில் அது நிகழ்வுகளாக மாறும் நெகடிவான எண்ணங்கள் உங்கள் மனதில் எப்போது தோன்றினாலும் உடனே அதனை அந்த இடத்திலேயே நிறுத்திவிட்டு பாசிடிவான எண்ணங்களை உங்கள் மனதில் பதிய வையுங்கள்.ஆதலால் எப்போதும் உங்களது எண்ணங்களை கவனித்தவரே இருக்கவேண்டும் இதுவே தியானமாகும் .

 பிரார்த்தனையில் சிகிச்சையின் சக்தியை உங்கள் வாழ்வில் நடைமுறைப் படுத்துங்கள் ஒரு குறிப்பிட்ட திட்டம் அல்லது  எண்ணம் அல்லது மனசாட்சியை தேர்ந்தெடுங்கள் உளப்பூர்வமாக உணர்ச்சி பூர்வமாகவும் அதனோடு ஒன்றிணைந்து விடுங்கள் உங்கள் மனப்போக்கின் மீது தொடர்ந்து விசுவாசத்துடன் இருந்து வந்தால் உங்கள் பிரார்த்தனை பலிக்கும்.

 குணமாக்கும் சக்தி உங்களுக்கு உண்மையிலேயே வேண்டுமென்றால் விசுவாசத்தின் மூலம் நீங்கள் அதைப்பெறலாம் அதாவது அது வெளிமனம் மற்றும் ஆழ்மனத்தின் செயல்பாடுகள் குறித்த அறிவு என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள்.

 கண்மூடித்தனம் விசுவாசம் என்பது உடலில் உள்ள சக்தி அறிவியல் அறிவு தன் பிணி நீங்கப் பெறும்.

 நீங்கள் அன்பு கொண்டிருக்கும்  நண்பர்கள் நோய்வாய்ப்பட்டிருந்தார் அவர்களுக்காக பிரார்த்தனை செய்ய கற்றுக் கொள்ளுங்கள் அது உங்கள் மனதை அமைதிப்படுத்தும் ஆரோக்கியம் வலிமை முழுமை குறித்த உங்களது எண்ணங்கள் உணர்ச்சிமிக்க ஒரே பிரபஞ்ச மனத்தின் ஊடாக இயங்கி உங்கள் அன்புக்குரியவர்கள் உணரப்பட்டு அவர்கள் மனத்தில் வெளிப்படுத்தப்படும்.அதனால் அவர்களது பிணிகள் நீங்கப்பெற்று முழு சுகத்தை பெறுவார்.

ரகசியங்கள் தொடரும்...

No comments:

Post a Comment