Subscribe

BREAKING NEWS

09 November 2018

உள்ள நிறைவைத் தந்த பனப்பாக்கம் உழவாரப் பணி & TUT தளத்தின் உழவாரப் பணி அறிவிப்பு

அனைவருக்கும் வணக்கம்.

பனப்பாக்கத்தில் சென்ற மாதம் நடைபெற்ற உழவாரப் பணி  அனுபவத்தை இந்த பதிவில் தர விரும்புகின்றோம். ஏற்கனவே உழவாரப் பணிக்கு இணையேது இவ்வுலகில் - பனப்பாக்கம் ஸ்ரீ அகத்திய முனிவ தம்பதிக்கு உருத்திராக்க மண்டபம் அமைக்கும் விழா என்ற பதிவில் நம் உழவாரப் பணி யாத்திரை பற்றி தொட்டுக்காட்டினோம். மீண்டும் அங்கிருந்து தொடர்கின்றோம்.

பனப்பாக்கம் மயூரநாதர் திருக்கோயிலை சரியாக 9:30 அளவில் அடைந்தோம்.நம் அன்பர் திரு.செந்தில்வேல் ஐயா அவர்கள் குருக்களிடம் அறிமுகம் செய்து வைத்தார்.பின்னர் ஒவ்வொரு குழுவாக பிரிந்து பணியை செய்து கொண்டிருந்தார்கள். நாம் செய்த பாக்கியம் எம் பெற்றோர், தம்பி, தங்கை என குடும்பம் சகிதமாக கலந்து கொண்டோம். நம் குழுவிலும் வழக்கமாக வரும் அன்பர்கள் வந்திருந்தார்கள்.


               புலியும் மயிலும் வழிபட்ட தலம் என்பது தெளிவாக நமக்கு தெரிந்தது.




இதோ உங்களுக்காக திருப்பனசை புராணம் கல்லெழுத்துக்கள் காண்பித்துள்ளோம். இது போன்ற செய்திகளை நாம் படித்து உணர வேண்டும். பழமை பழமை என்று பழம் பெருமையில் தான் நம் புதுமையும் அடங்கியுள்ளது.



இந்த உழவாரப் பணியில் குழந்தைகளும் கலந்து கொண்டது சிறப்பாகும். இதோ நீங்களே பாறுகளே,பாருங்களேன். கூட்டி பெருகுவதை நாம் கண்டோம்.பின்னர் கோயிலை சுற்றி வந்தோம். ஆங்காங்கே செடிகள் முளைத்து இருந்தன.இதனை நம் குழுவினர் சரி செய்து கொண்டிருந்தார்கள்.





பார்ப்பதற்கும் கொஞ்சமாக இருப்பது போல் இருந்தது. ஆனால் சுத்தம் செய்ய செய்ய பணியின் பளு சற்று அதிகமானது. ஒரே ஆளாக நம் அன்பர் திரு. ராஜகுமாரன் ஐயா அவர்கள் செடிகளை நீக்கிக் கொண்டிருந்தார்கள்.



மகளிர் அணியினர் தம் பணியை தொடங்கி விட்டார்கள். எண்ணெய் பிசுபிசுப்பு பாத்திரங்கள், தீப மேடை என அனைத்தும் சுத்தம் செய்ய ஆரம்பித்தார்கள்.

வஸ்திரங்களை துவைத்து காய வைத்தும் விட்டார்கள்.


நேரம் ஆக, ஆக தேய்க்கும் பாத்திரங்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. இந்த திருக்கோயிலுக்கு நம்மை அழைத்தவர் நம் குருநாதர் ஸ்ரீ அகத்திய மகரிஷி தான். இதோ..அவரின் அருளிடம் தற்போது தூய்மை செய்யப் போகின்றோம்.










அகத்திய முனிவ தம்பதி அருளிடம் தூய்மை செய்யும் பணியை எம் தங்கை ராகினியும், தம்பி மனோவும் எடுத்துக் கொண்டார்கள். பிரபை அகற்றி, அங்கிருந்த என்னை பிசுக்கை கையால் நீக்கி, நீரால் அந்த இடத்தில் கழுவி விட்டார்கள்.


                                                           பளபளக்கும் வஸ்திரங்கள்


நீண்ட நாட்களுக்கு பின்னர் நம் செந்தில் அண்ணனை பணியில் சந்தித்தோம். இதோ அவரும் நந்தியம்பெருமான் கோபுரத்தை சுத்தம் செய்து கொண்டிருக்கின்றார். நாம் அவரை ஓய்வு எடுக்க சொன்னோம். ஆனால் அவர் என்னால் இந்த பணி எளிதாக செய்ய முடியும் என்று அங்கிருந்த சுவர், கோபுரத்தை தன்னால் இயன்ற அளவில் சுத்தம் செய்தார்.





அட..குட்டி சுட்டிஸ் பார்த்தீர்களா? இவர்கள் பார்க்கத்தான் சிறு குழந்தைகள். ஆனால் பெரிய பெரிய வேலைகள் செய்தார்கள். கூட்டி பெருக்குதல், மகளிர் அணிக்கு உதவுதல் என தொடர்ந்தார்கள். சிறு பிள்ளைகளை வளர்க்கும் போது இது ;போன்ற சிறு வேலைகளை கொடுத்து வளர்த்து வாருங்கள். வீட்டு வேலை செய்வது நம் கடமை என உணர்த்துங்கள். அதற்கு இது போன்ற சேவைகளுக்கு அழைத்து வாருங்கள். அந்த வகையில் உழவாரப் பணிக்கு அழைத்து வரும் திருமதி தாமரை அவர்களுக்கு நம் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.






பாத்திரங்கள் தேய்க்கும் பணி ,வஸ்திரம் துவைக்கும் பணி என மகளிரும், கோயிலை சுற்றியுள்ள செடிகளை அகற்றுதல், தூசி நீக்குதல் போன்ற பணிகளை ஆடவரும் பிரித்துக் கொண்டு செய்தார்கள்.











என்னமோ, ஏதோ என்று ஆரம்பித்த பணியானது நேரம் அதிகமாக அதிகமாக சூடு பிடித்தது. சூரிய பகவானும் நம்மை சோதிக்க ஆரம்பித்து விட்டார். சோதனை செய்வது தானே அந்த பரமனின் வேலை.இதுக்கே மலைத்தால் எப்படி என்று தான் தோன்றியது.







நம் மகளிர் அணிக்கு உதவியாக சில பிரபைகளை நம் அன்பர்களும் தேய்க்கத் தொடங்கினார்கள்.


                                            விளக்குகள் சுத்தம் செய்வதற்கு முன்பு






பளபளக்கும் விளக்குகள், தீப மேடை சுத்தம் செய்த பின்பு 




ஒவ்வொரு அன்பரும் ஒவ்வொரு வேலையை இழுத்துப் போட்டு சையது கொண்டிருந்தார்கள். இது தான் உழவாரப் பணியின் தாத்பர்யமும் கூட. நம்மால்  நம் உடல் திறனுக்கு ஏற்ப என்ன முடியுமோ அதனை செய்யலாம். வெகு நீண்ட நாட்கள் கழித்து,திரு. மனோகரன் ஐயா அவர்கள் தங்கள் குடும்பத்தோடு வந்தார்கள். சந்திப்பில் மனமகிழ்ந்தோம்.











           கோயிலின் மேல் தளத்தில் ஏறி, அங்கிருந்த செடிகளை அப்புறப்படுத்தும் காட்சி.



உள்ளம் நிறைவாக பணிகள் நடந்து கொண்டிருந்தது. காலை 9:30 மணிக்கு தொடங்கிய சேவை மணி 1 ஐ தாண்டியும் நடந்து கொண்டிருந்தது. இடையில் தேநீர் அனைவர்க்கும் திரு.செந்தில்வேல் ஐயா சார்பில் வழங்கப்பட்டது.


குழந்தை உள்ளத்தில் தான் தெய்வம் வாழ்கின்றார். இதோ மேலே அந்தக் காட்சி 




கோயிலினுள் உள்ள வஸ்திரங்கள் மீண்டும் சரிபார்க்கப்பட்டது, நேரம் 1 ஐ தாண்டினாலும் நமக்கு இன்னும் பணி முடியவில்லை. மதிய உணவும் வந்து விட்டது. எப்போதும் மதிய உணவு உண்டால் பணி நிறைவு பெற்று விடும். ஆனால் இங்கே நடந்ததோ வேறு? அப்போது தான் அந்த நிகழ்வு நடந்தது? அது என்ன? உழவாரப் பணி எப்படி நிறைவு செய்தோம் போன்ற செய்திகள் அடுத்த பதிவில் காணலாம்.

உழவாரப் பணி அறிவிப்பு :

இந்த முறை உழவாரப் பணி கூடுவாஞ்சேரியில் உள்ள நூலகத்தை தூய்மை செய்ய நமக்கு கிடைத்துள்ளது. ஒவ்வொரு நூலகமும் ஒரு திருக்கோயில் ஆகும். கோயில் என்றால் தான் வருவோம் என்ற எண்ணம் வேண்டாம்.நூலகங்களிலும் இறைவன் வாழ்கின்றார்.( எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவார்).


நமது TUT குழுமத்தின் நவம்பர் மாத உழவாரப்பணி கீழ்க்காணும் நிகழ்வின் படி நடைபெறும்.

உழவாரப்பணி

AVM அன்னதானம்

நாள்:11/11/2018 ஞாயிற்றுக்கிழமை

இடம் :
கூடுவாஞ்சேரி நூலகம்,
வள்ளலார் சத்திய ஞான சபை அருகில்,
கூடுவாஞ்சேரி

நேரம்: காலை 9 மணி முதல் 1 மணி வரை

தங்களின் வருகையை கண்டிப்பாக உறுதி செய்க.(மதிய உணவு மற்றும் இன்ன பிற ஏற்பாட்டிற்கு எங்களுக்கு உதவியாக இருக்கும்.)

7904612352/9677267266

அனைவரும் வருக! இறையருள் பெறுக !!

உழவாரப் பணி முடித்து , வள்ளலார் சத்திய ஞான சபையில் அன்னதானம் செய்ய உள்ளோம்.

- மீண்டும் அடுத்த பதிவில் சிந்திப்போம் 

மீள்பதிவாக:-



உழவாரப் பணிக்கு இணையேது இவ்வுலகில் - பனப்பாக்கம் ஸ்ரீ அகத்திய முனிவ தம்பதிக்கு உருத்திராக்க மண்டபம் அமைக்கும் விழா - http://tut-temple.blogspot.com/2018/10/blog-post_20.html

பனப்பாக்கம் அருள்மிகு ஸ்ரீ மாயூரநாதர் திருக்கோயில் உழவாரப் பணி அறிவிப்பு - http://tut-temple.blogspot.com/2018/10/blog-post_56.html

நாள்தோறும் ஓதுவோம்! ஓதியப்பரின் புகழை !! - https://tut-temple.blogspot.in/2017/11/blog-post_39.html

ஓதிமலை ஸ்ரீகுமார சுப்ரமண்யருக்கு அரோகரா! - https://tut-temple.blogspot.in/2017/10/blog-post_18.html

பேசும் முருகன் தரிசனம் பெற - ஓதிமலைக்கு வாருங்கள் - https://tut-temple.blogspot.in/2017/10/blog-post_5.html

சித்த சுத்திக்குச் சில சின்ன விஷயங்கள் : TUT & AVM அன்னதான நிகழ்வின் துளிகள் - https://tut-temple.blogspot.in/2017/10/tut-avm.html

பெரியபுராணம் கூறும் பூரண தானம் & அன்ன தான அறிவிப்பு - https://tut-temple.blogspot.in/2017/09/blog-post_12.html

AVM & TUT இணைந்த அன்னதான நிகழ்வின் துளிகள் - யார்க்கும் இடுமின், அவர் இவர் என்னன்மின் - http://tut-temple.blogspot.in/2017/08/avm-tut.html

ஆடி அமாவாசை - பூரண தான நிகழ்வு - 22/07/2017 - http://tut-temple.blogspot.in/2017/07/22072017.html

உங்கள் உணவிலிருந்து ஒரு கவளம் கொடுங்கள் போதும் - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_80.html

என் கடன் பணி செய்து கிடப்பதே - உழவாரப் பணி - https://tut-temple.blogspot.in/2017/08/blog-post_24.html

ஜாதகத்தை மாற்றி சாதகமாக்கும் குழந்தைவேலர் - உழவாரப் பணி அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_77.html

ஜாதகத்தையே மாற்றும் குழந்தைவேலர்... - http://tut-temple.blogspot.in/2017/05/blog-post_22.html

ஆலயம் காப்போம்...ஆனந்தம் காண்போம் - உழவாரப்பணி அனுபவம் - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_5.html

சங்கடங்கள் தீர்க்கும் சதானந்த ஸ்வாமிகள் ஆசிரமம் - உழவாரப் பணி அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2017/06/blog-post_27.html

எங்களின் ஓராண்டு பயணம்..- http://tut-temple.blogspot.in/2017/05/blog-post_18.html

No comments:

Post a Comment