Subscribe

BREAKING NEWS

29 September 2019

முன்னோர்களின் பசிதீர்க்கும் திருவிழா!!!

முன்னோர்களின் பசிதீர்க்கும் திருவிழா நேற்றுடன்  முடிவடைந்தது  ,கடந்த 14/09/2019 முதல் இன்று 28/09/2019.வரை  நாம் நம் குழுவின் சார்பாக தொடர்ந்து அன்னதானங்கள் செய்துவந்தோம். என்பது அனைவருக்கும் தெரிந்திருக்கும்.ஒவ்வொரு நாளும் ஒருவர் அன்னதானத்திற்காக  பொருப்பேற்றுகொண்டார்கள்.நமது தமிழ்நாடு ஆன்மீக யாத்திக்குழு என்பது வெறும் யாத்திரைக்கானது மட்டுமல்ல நம்மால் முடிந்த பற்பல நற்காரியங்கள் செய்துவருகிறோம்.மேலும் செய்ய எத்தனிக்கின்றோம் .

இந்த மஹாளயபட்ச தினங்களாகிய பதினைந்து நாட்களிலும் பித்ரு தேவதைகள் எம தர்மனிடம் விடைபெற்றுக்கொண்டு தங்கள்  குடும்பத்தினருடன் தங்கி விடுவர் என்பர்.எனவேதான் இந்த நாட்களில் அவர்கள் பசியாற அன்னமாகவோ அல்லது எள்ளும் தண்ணீருமாகவோ தர்ப்பணம் அளிக்க வேண்டும் என்கிறார்கள். அவர்களும் அதன் மூலம் திருப்தியடைந்து, நமக்கு அருளாசி வழங்குகின்றனர். நோயற்ற வாழ்வினை வழங்குகிறார்கள். தாய், தந்தையர் இறந்த தினத்தில் சிரார்த்தம் செய்யாதவர்கூட, மறக்காமல் மஹாளயத்தை அவசியம் செய்ய வேண்டும்.

மஹாளய தினத்தில் நம் முன்னோர்களுக்கு பிடித்தமான சைவ உணவுகளை ஆக்கிப்படைத்து அவர்களை மகிழ்வித்து அவர்களின் ஆசிகளைப் பெறுவதாக அமைகின்றது. படைத்த உணவின் சிறு பகுதியை மிருகங்களுக்கும், பறவைகளுக்கும் உணவாக கொடுப்பதும், மிகுதியை, உற்றார், உறவினர்களுடன் பகிர்ந்து உண்பதும் மஹாளய அமாவாசையின் சிறப்பாகும். இந்த நாளில் நம் முன்னோர்களுக்கு கொடுக்கும் தர்ப்பணம் மூலம் நமது மூன்று தலைமுறைக்கும் ஆசியை பெற்றுத்தரும்.

நாம் செய்த பித்ரு கடன்களில் சிறு துளிகள் :-

அதிகாலையில் சுமார் 5.00 மணிக்கு  மறைமலை நகரிலிந்து சிங்கபெருமாள் கோவில் நோக்கி சென்றோம். அதிகாலைமுதலே சற்று கூட்டம் அதிகமாகவே இருந்தது.வரிசையில் நிற்கும்போது சுமார் 50 பேர் நமக்கு முன்னர் வரிசையில் நின்றிருந்தனர்.


சிங்கபெருமாள் கோவில் குளத்தில் பித்ருகடன் செய்ய நீண்ட வரிசையில் மக்கள் 

பித்ருகடன் செய்ய கூடியிருந்த மக்கள் அதிகாலை 5.00 மணி.


பின்பு நமது வாய்ப்பு வந்தவுடன் நமது முன்னோர்களின் பெயர்கள் உட்பட நமக்கு தெரிந்தவரையில் அனைவரின் பெயர்களை  சொல்லிமுடித்தவுடன்  சிரார்த்த கடன் செய்துவிட்ட திருப்தில், அங்கிருந்து புறப்பட்டோம். வழியில் கன்றுடன் கூடிய பசுவிற்கு அகத்திகீரை அளித்தோம்.


கன்றுடன் கூடிய பசுவிற்கு அகத்திகீரை கொடுக்கும்போது 


நேராக வீட்டிற்கு வந்தவுடன் வீட்டில் அனைத்து ஏற்பாடுகளும் தயார்நிலையில் இருக்க பூஜைக்கு தயாரானோம்.முன்னோர்கலின் பெயர்களை மனதில் நினைத்து ஆத்மார்த்தமாக பிராரத்தனை செய்யப்பட்டது.

நமது குழுவின் சார்பாக வழங்கப்பட்ட அன்னதான நிகழ்வின் துளிகள் :-









மஹாலய பட்சம் ஆரம்பித்த நாள் முதல் 28/09/2019 வரையில் நமது குழுனர் ஒவ்வொரு நாளும் ஒருவர்  அன்னதானம் பொருப்பேற்றுகொண்டார்கள். அவர்கள் இல்லாமல் இந்த மஹாலய பட்சம் எனும் முன்னோர்களின் பசிதீர்க்கும் திருவிழா  இவ்வளவு சிறப்பாக நடந்திருக்குமா என்பது கேள்விக்குறிதான் ...பங்கேற்ற அனைத்து நண்பர்கள்,குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் நமது நெஞ்சார்ந்த நன்றிகளை இத்தருனத்தில் தெரிவித்துகொள்கிறோம். நன்றி ..நன்றி . 

No comments:

Post a Comment