Subscribe

BREAKING NEWS

02 September 2019

விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்! பல சுவாரஸ்யமான அரிய தகவல்கள்


நமக்கெல்லாம் தெரிந்த விநாயகரும் (வலம்புரி விநாயகர், இடம்புரி விநாயகர்) பற்றி  அரிய பதிவு:


நமது மூளை வலப்பகுதி,இடப்பகுதி என இரண்டு பிரிவுகளாக உள்ளது.  மூளையின் இடது, வலது பாகங்கள்தான் நம் உடலின் அத்தனை செய்கைகளுக்கும் காரணம். இடப்பக்க மூளை, உடலின் வலது பாகத்தையும், வலப்பக்க மூளை, உடலின் இடது பாகத்தையும் கட்டுப்படுத்துகிறது என்கிறது விஞ்ஞானம். இதையே நம் சாஸ்திரம் பிங்கலை, இடங்கலை,நாடிகள் என வரையறுக்கிறது.

உடலின் செயல் வலது ,இடது என பிரிக்கப்பட்டு செயல்படுகிறது. உங்கள் வலது பக்க மூளை செயல்படும் பொழுது உங்கள் இடது நாசி துவாரத்தில் சுவாசம் வரும்.  அதே போல இடது பக்க மூளை இயங்கும் பொழுது வலது நாசியில் சுவாசம் வரும்.  இந்த நாடி சிந்தாந்தத்தை குறிக்கும் வகையில் தான் விநாயகரின் துதிக்கையை வலம்புரியாகவும் இடம்புரியாகவும் நமது முன்னோர்கள் அமைந்திருக்கின்றார்கள்.

தொன்மையான கோவிலில் விநாயகரை வணங்கும் பொழுது உங்களின் நாசியில் வரும் சுவாசத்தை கவனியுங்கள்.  விநாயகரின் துதிக்கை எந்த பக்கத்தில் இருக்கிறதோ அந்த பக்கம் உங்களின் நாசியில் சுவாசம் வரும்.  வலம்புரி விநாயகராக இருந்தால் உங்கள் வலது நாசியிலும், இடம்புரி விநாயகராக இருந்தால் உங்கள் இடது நாசியிலும் சுவாசம் வருவதை காணலாம்.  வெளியே இருக்கும் நான் தான் உன் உள்ளேயும் இருக்கிறேன் என பிள்ளையார் கூறும் விஷயம் இது.

என்ன ஆச்சரியமாக இருக்கிறதா? விநாயகர் உருவத்தின் இந்த அரிய இரகசியத்தை முயற்சி செய்து பார்த்து உணர்ந்து கொள்ளவும்.
வலது நாசியின் வழியாக உள்ளே செல்லும் காற்றிற்கு சூரிய கலை என்றும்; இடது நாசியின் வழியாக உள்ளே செல்லும் காற்றிற்கு சந்திர கலை என்றும் நமது முன்னோர்கள் பெயர் சூட்டியுள்ளனர். இந்த இரண்டு சுவாசங்களுக்கும் தனித்தனிப் பண்புகளும் வெவ்வேறு வகையான செயல்பாடுகளும் உள்ளன. 

வலது நாசியில் செல்லும் மூச்சுக்கும், இடது நாசியில் செல்லும் மூச்சுக்கும் வித்தியாசம் இருக்க முடியுமா என் றால் , ஆம் - இரண்டு நாசிகளிலும் செல்லும் மூச்சுக் காற்றுக்கு தனித்தனித் தன்மைகளும், செயல்பாடுகளும் உள்ளன.  நாம் நமது இரண்டு நாசித் துவாரங்களின் வழியாகவும் ஒரே நேரத்தில் சுவாசிப்பதாக ஒரு தவறான கருத்து நம்மிடையே உள்ளது. உங்களது சுவாசத்தை உற்றுக் கவனித்துப் பாருங்கள். இதிலுள்ள உண்மை புரியும்.
ஒரு நேரத்தில் ஒரு நாசியின் வழியாகவே அதிகப்படியான காற்று உள்ளே செல்லும். (அடுத்த நாசியில் மிகச் சிறய அளவிலான காற்று உட்புகும்.) சற்று நேரத்திற்குப்பின் (இரண்டு மணி நேரத்திற்குப் பின்) அடுத்த நாசி வழியாக காற்று செல்லத் துவங்கும். இவ்வாறு ஒரு நாளில் இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை என மொத்தம் 12 முறை இந்த இடம் மாறுதல் நடைபெறும். எந்த நேரத்தில் எந்த நாசியில் காற்று செல்லும் என்பதையும் நம் முன்னோர்கள் கணித்து வைத்துள்ளனர்.
Image result for vinayagar gif

வலது நாசிக் காற்று (சூரிய கலை)
**************************************
·         உடலுக்குத் தேவையான வெப்ப சக்தியைத் தருகின்ற பிராணன் இதுவே.
·         வலது நாசியின் வழியாக சுவாசம் நடைபெறும் காலகட்டத்தில் உடலின் வெப்ப நிலை சற்றே உயரும்.
·         உடல் சுறுசுறுப்படையும்; சோர்வு அகலும்.
·         உடலின் வலிமை அதிகரிக்கும்.
·         மூளையும் உடலும் பரபரப்பாக இயங்கும்.
·         இந்த இரண்டு மணி நேரத்தில் நிதானம் குறைவாகவும், வேகம் அதிகமாகவும் இருக்கும்.

இடது நாசிக் காற்று (சந்திர கலை)

·         உடலைக் குளிர்விக்கும் தன்மை கொண்டது.
·         சந்திரனைப் போன்றே இந்த மூச்சுக் காற்றும் குளுமையானதாகும்.
·         இடது நாசி வழியே சுவாசம் நடைபெறும் வேளையில் உடலின் வெப்ப நிலை சற்றே குறைந்து, உடல் குளிர்ச்சியடையும்.
·         பரபரப்புத் தன்மை குறைந்து, மனதிலும் உடலிலும் ஒரு சாந்தத் தன்மை உருவாகும்.
·         மூளை அமைதியாக சிந்திக்கத் துவங்கும்.
·         அவசரத் தன்மை மறைந்து, நிதானமான மனநிலை நிலவும்.

வலம்புரி - இடம்புரி விநாயகர்களுக்கு உள்ள சிறப்பு

விநாயகர் தனது தும்பிக்கையை வலது, இடது என்ற இரு பக்கமாக வளைத்தவாறு அருள் புரிகின்றார். இதனால், வலபக்கம் தும்பிக்கை சுழித்துள்ள விநாயகர் ‘வலம்புரி விநாயகர்’ என்றும், இடப்பக்கம் தும்பிக்கை சுழித்துள்ள விநாயகர் ‘இடம்புரி விநாயகர்’ என்றும் அழைக்கின்றனர். இரு விநாயகரும் கேட்கும் வரம் தந்து வினைகளை தீர்ப்பவர் என்றாலும் இவ்விரு விநாயகர்களுக்கும் உள்ள சிறப்புகளை அறிவதும் அவசியமாகிறது.

‘ஓம்’ என்ற பிரணவ மந்திரத்தை குறிக்கும் வலம்புரி விநாயகர்
வலம்புரி விநாயகர் ஒரு சில குறிப்பிட்ட ஆலயங்களில் மட்டுமே வழிபட முடியும். வலம்புரி விநாயகருக்கு என்று ஓர் சிறப்பம்சம் உண்டு. இதில், தும்பிக்கையின் வளைவு ‘ஓம்’ என்ற பிரணவ மந்திரத்தின் அமைப்பை ஒத்துள்ளது. வாய் பகுதியின் வலது ஓரம் ஆரம்பித்து கன்னம், மத்தாம் தொந்தி வழியாக சுழன்று தும்பிக்கை வளைந்து இருக்கும். 

இதுவே வலம்புரி விநாயகர் சிறப்பு. வலம்புரி விநாயகரின் சிறப்பிற்கு மேலும் ஓர் காரணமாய், இரு முறை விஷ்ணுவின் வலம்புரி சங்கை சிவபெருமான் எடுத்து சென்று விட்டார். பின் அவர் வந்து கேட்க என்னிடம் இல்லை. என் மகன் விநாயகன் வைத்திருக்கிறான் என்றார். பின் பல முறை அலைந்து திரிந்து விநாயகரிடம் தனது வலம்புரி சங்கை திரும்ப பெற்றார் விஷ்ணு.
 

இப்படி பல நாள் வலம்புரி சங்கை தனது தும்பிக்கையில் வலது பக்கம் வைத்திருந்ததாலும் விநாயகரை வலம்புரி விநாயகர் என்று அழைக்கின்றனர். விஷ்ணுவின் சங்கை வைத்திருந்த காரணத்தால் வலம்புரி விநாயகரை வணங்கிட சகல காரியங்களும் சித்தியாகும் என்பதாம். வளமை, வல்லமை, செல்வம் வழங்கும் விநாயகராக வலம்புரி விநாயகர் திகழ்கிறார்.

வலம்புரி விநாயகர் கோவில்களில் சில மிகவும் பழமையான வரலாற்று சிறப்பு மிக்கவையாக உள்ளன.
தமிழகத்தின் பழமையான பிள்ளையார் கோவிலான பிள்ளையார்பட்டி விநாயகர் வலம்புரி விநாயகர் தான். செவல்பட்டியிலும், செட்டிநாட்டு பகுதிகள் பலவற்றிலும் வலஞ்சுழி விநாயகர் ஆலயம் உள்ளன.

பிரான்மலை என்ற ஊரில் உள்ள சிறப்பு மிக்க குடைவரை கோட்டை கோயிலில், வலம்புரி விநாயகர் சங்க நிதி, பதும நிதி ஆகியோருடன் இணைந்து உள்ளார். மதுரை மீனாட்சியம்மன் கோவில் மற்றும் திருவலஞ்சுழியிலும் வலம்புரி விநாயகர்களை வழிபடலாம். வலம்புரி விநாயகரை வழிபட வேண்டிய வரங்களை பெறலாம்.

வினைகளை தீர்க்கும் இடம்புரி விநாயகர்

விநாயகரின் தும்பிக்கை இடது பக்கமாக சுழித்தபடி இருப்பின் இடம்புரி விநாயகர் எனப்படுவார். பொதுவாக சிற்ப சாஸ்திரத்தில் வினை தீர்க்க கூடியவர் என கூறப்படுகிறது. மேலும், இடர்களை தீர்ப்பவர் இடம்புரி விநாயகர் என பேச்சு வழக்கில் கூறுவர். அனைத்து ஆலயங்களிலும் இடம்புரி விநாயகரே அருள் புரிவார்.

மணக்குள விநாயகர் போன்ற சிறப்பு மிகு பல கோயில்களில் விநாயகர் இடம்புரி விநாயகராகவே காட்சி தருகிறார். இன்னல்களை தீர்க்கும் வகையில் எங்கும் நிறைந்துள்ளார். இது தவிர்த்து இடம்புரி மற்றும் வலம்புரி விநாயகர் இருவரும் இணைந்து அருள்புரியும் கோயில்களும் உள்ளன. பேளூர் தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் கல்யாண விநாயகர்கள் என்றவாறு இடம்புரி மற்றும் வலம்புரி விநாயகர் இருவரும் அருள் புரிகின்றனர்.

திருவலாங்காடு கோயிலில் வலம்புரி, இடம்புரி விநாயகர்கள் காட்சி தருகின்றனர். எந்த வடிவ விநாயகராயினும் நம்கை காத்து அருள் புரிவதில் எவ்வித பாகுபாடும் இன்றி அருள்மழை பொழிவர்.
 
 
விநாயகப்பெருமானின் கல் விக்ரஹத்திற்கு உங்கள் சுவாசம் சம்பந்தப்பட்ட சூரிய கலை மற்றும் சந்திர கலைகளை மேம்படுத்தும் இத்தகைய ஆற்றல் இருப்பதால் தான் அவரை முதலில் வணங்க வேண்டும் என்கிறார்கள்.
பிராணன் (சுவாசம்)இல்லாமல் நாம் ஏது? அத்தகைய பிராணனை சுத்தப்படுத்தவே அவரை அரசமரத்தடியில் அமரச்செய்து அவரை வழிபடுவதன் மூலம் அரசமரம் நாளொன்றுக்கு 1808 கிலோ கரியமில வாயுவை உள்வாங்கி 2400 கிலோ பிராண வாயுவை சுவாசித்தும், கருப்பை கோளாறுகளை போக்கியும் அரசமரக் காற்றினால் மூளையின் செயல்பாடுகளை தூண்டி, மன அமைதியை பெறுகின்றோம்.

எளிமையாக சொல்ல வேண்டும் என்றால் பிள்ளையாருக்கு பிறப்பில்லை.  அதனால் தான் நாம் விநாயகர் ஜெயந்தி என கொண்டாடுவதில்லை.  விநாயகர் சதுர்த்தி என கொண்டாடுகிறோம். ஆவணி மாத சுக்லபக்‌ஷ சதுர்த்தி திதி பிரணவ மந்திரத்தின் நாளாக , பிரணவ ரூபனின் நாளாக கொண்டாடுகிறோம்.

எனவே வாருங்கள்! விநாயகப்பெருமானின் கல் உருவத்திற்கும்  உங்கள் சுவாசம் சம்பந்தப்பட்ட சூரிய கலை மற்றும் சந்திர கலைகளை மேம்படுத்தும் ஆற்றல் இருப்பதால் அவரை வணங்கி ஞானத்தின் வழியில் சென்று ஞான சித்தி பெறுவோம்..

No comments:

Post a Comment