Subscribe

BREAKING NEWS

09 June 2017

64 வது நாயன்மார்


இன்று காண இருப்பது  அனைவரும் கண்டிப்பாக இதுநாள் வரை ஒரு முறைஎனும் உச்சரித்த
சொல். சிவ பெருமான் என்று சொன்னாலே அந்த சொல் தான் நினைவிற்கு வரும்.
கண்டு பிடித்து விட்டீர்களா ? ஆம் ...அடியார் என்ற பதமே. நம் தலைவரையும், அவர் தம் அடியார் பெருமையையும் தனியாய் பிரிக்க இயலுமா என்ன?இங்கு அடியார்க்கு அடியாராக விளங்கும் நாயான்மார்கள் பற்றி சற்று காண்போம்.


நாயன்மார்கள்:

ஏற்கனவே கூறியது போல்..இவர்கள் அடியார்களுக்கு அடியார்கள்.நாயன்மார்கள் என்போர் சைவ அடியார்கள்.தனக்கென யாதும் வேண்டாதவர்கள். சிவ பெருமான் கொடுத்த சோதனைகளை தாண்டி தனக்கு இறையருள் ஒன்றே போதும் என்று சாதித்துக் காட்டிய சிவப் பழங்கள் என்று சொன்னால் மிகையில்லை.





நாயன்மார்கள், தினம் மூன்று வேளை கோயிலுக்குப் போவார்கள். ஆனால், சிவபெருமானைப் பார்த்துப் பொன்னைக் கொடு; பொருளைக் கொடு, எனக்கு செல்வத்தைக் கொடு, மக்களைக் கொடு, வழக்கில் வெற்றியடைய வேண்டும், பதவி உயர்வு வேண்டும் என்று ஒருநாளும் கேட்க மாட்டார்கள். நாயன்மார்கள் ஆண்டவனிடத்திலே இதுவரை ஒன்றையும் கேட்டதில்லை. அதனால் அவர்கள் பெரியவர்கள். குலத்தினால் பெரியவர்கள் அல்லர். சலவைத் தொழிலாளி ஒருவர் அதிலே இருக்கிறார். திருக்குறிப்புத் தொண்ட நாயனார் தீண்டாத குலத்திலே பிறந்தவர்கள் இருக்கின்றார்கள். அப்படி என்னென்னமோ குலத்தவர்கள் எல்லாம் அங்கே தொண்டராயிருக்கிறார்கள். அவர்கள் செல்வத்தினாலே பெரியவர்கள் அல்லர். கண்ணப்ப நாயனாருக்கு எழுத்து வாசனையே கிடையாது. ஆனால், அவர்கள் எதிலே பெரியவர்கள்? வேண்டாமையிலே பெரியவர்கள். நாமெல்லாம் இந்த உலகத்திலே பெரியவர்கள் ஆக வேண்டுமென்றால் யாரிடமும், கடவுளிடம் கூட ஒன்றும் கேட்கக் கூடாது. ஆண்டவனே! எனக்கு ஒன்று கொடு என்று கேட்காதீர்கள்.


"வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை
யாண்டும் அஃதொப்ப தில்"

என்பார் திருவள்ளுவர். அதனாலே நாயன்மார்கள் பெரியவர்கள்.


63 நாயன்மார்கள்:

நாயன்மார் எண்ணிக்கை அடிப்படையில் 63 நபர்கள் ஆவார்கள். சுந்தரமூர்த்தியார் திருத்தொண்டத் தொகையில் அறுபது சிவனடியார்கள் பற்றிய குறிப்பிட்டுள்ளார். அந்த நூலினை மூலமாக கொண்டு சேக்கிழார் பெரிய புராணத்தினை இயற்றினார். எனவே திருத்தொண்டத் தொகையை எழுதிய சுந்தரமூத்தியாரையும், அவரது பெற்றோர் சடையனார் - இசை ஞானியார் ஆகிய மூவரையும் நாயன்மார்களாக இணைத்துக் கொண்டார்.






நாயன்மார்களுக்குச் சிவாலயங்களின் சுற்றுபிரகாரத்திற்குள் கற் சிலைகள் வைக்கப்படுகின்றன. அத்துடன் அறுபத்து மூவரின் உலோகச் சிலைகளும் ஊர்வலத்தின் பொழுது எடுத்துச் செல்லப்படுகின்றன. இந்த ஊர்வலத்திற்கு அறுபத்து மூவர் திருவீதி உலா என்று பெயர். இந்த விழா
சென்னை மயிலாப்பூரில் நடை பெறுவது சிறப்பான விழா. ஏனெனில் கொடுப்பதும்,பெறுவதும்
இன்பம் என்ற பேரானந்த நிலையை நாம் அங்கு அடைவோம்.


'
எண்பெயர்குலம்பூசை நாள்
1அதிபத்தர்பரதவர்ஆவணி ஆயில்யம்
2அப்பூதியடிகள்அந்தணர்தை சதயம்
3அமர்நீதி நாயனார்வணிகர்ஆனி பூரம்
4அரிவட்டாயர்வேளாளர்தை திருவாதிரை
5ஆனாய நாயனார்இடையர்கார்த்திகை ஹஸ்தம்
6இசைஞானியார்ஆதி சைவர்சித்திரை சித்திரை
7இடங்கழி நாயனார்வேளிர்ஐப்பசி கார்த்திகை
8இயற்பகை நாயனார்வணிகர்மார்கழி உத்திரம்
9இளையான்குடிமாறார்வேளாளர்ஆவணி மகம்
10உருத்திர பசுபதி நாயனார்அந்தணர்புரட்டாசி அசுவினி
11எறிபத்த நாயனார்மரபறியார்மாசி ஹஸ்தம்
12ஏயர்கோன் கலிகாமர்வேளாளர்ஆனி ரேவதி
13ஏனாதி நாதர்சான்றார்புரட்டாசி உத்திராடம்
14ஐயடிகள் காடவர்கோன்காடவர்,பல்லவர்ஐப்பசி மூலம்
15கணநாதர்அந்தணர்பங்குனி திருவாதிரை
16கணம்புல்லர்செங்குந்தர்கார்த்திகை கார்த்திகை
17கண்ணப்பர்வேடர்தை மிருகசீருஷம்
18கலிய நாயனார்செக்கார்ஆடி கேட்டை
19கழறிற்றறிவார்சேரர்-அரசன்ஆடி சுவாதி
20கழற்சிங்கர்பல்லவர்-அரசன்வைகாசி பரணி
21காரி நாயனார்அந்தணர்மாசி பூராடம்
22காரைக்கால் அம்மையார்வணிகர்பங்குனி சுவாதி
23குங்கிலியகலையனார்அந்தணர்ஆவணி மூலம்
24குலச்சிறையார்மரபறியார்ஆவணி அனுஷம்
25கூற்றுவர்களப்பாளர்ஆடி திருவாதிரை
26கலிக்கம்ப நாயனார்வணிகர்தை ரேவதி
27கோச்செங்கட் சோழன்சோழர்-அரசன்மாசி சதயம்
28கோட்புலி நாயனார்வேளாளர்ஆடி கேட்டை
29சடைய நாயனார்ஆதி சைவர்மார்கஇசைழி திருவாதிரை
30சண்டேஸ்வர நாயனார்அந்தணர்தை உத்திரம்
31சக்தி நாயனார்வேளாளர்ஐப்பசி பூரம்
32சாக்கியர்வேளாளர்மார்கழி பூராடம்
33சிறப்புலி நாயனார்அந்தணர்கார்த்திகை பூராடம்
34சிறுதொண்டர்மாமாத்திரர்சித்திரை பரணி
35சுந்தரமூர்த்தி நாயனார்ஆதி சைவர்ஆடிச் சுவாதி
36செருத்துணை நாயனார்வேளாளர்ஆவணி பூசம்
37சோமசிமாறர்அந்தணர்வைகாசி ஆயிலியம்
38தண்டியடிகள்
செங்குந்தர்
பங்குனி சதயம்
39திருக்குறிப்புத் தொண்டர்ஏகாலியர்சித்திரை சுவாதி
40திருஞானசம்பந்தமூர்த்திஅந்தணர்வைகாசி மூலம்
41திருநாவுக்கரசர்வேளாளர்சித்திரை சதயம்
42திருநாளை போவார்புலையர்புரட்டாசி ரோகிணி
43திருநீலகண்டர்குயவர்தை விசாகம்
44திருநீலகண்ட யாழ்ப்பாணர்பாணர்வைகாசி மூலம்
45திருநீலநக்க நாயனார்அந்தணர்வைகாசி மூலம்
46திருமூலர்இடையர்ஐப்பசி அசுவினி
47நமிநந்தியடிகள்அந்தணர்வைகாசி பூசம்
48நரசிங்க முனையர்முனையர்புரட்டாசி சதயம்
49நின்றசீர் நெடுமாறன்பாண்டியர் அரசர்ஐப்பசி பரணி
50நேச நாயனார்சாலியர்பங்குனி ரோகிணி
51புகழ்சோழன்சோழர்-அரசன்ஆடி கார்த்திகை
52புகழ்த்துணை நாயனார்ஆதி சைவர்ஆனி ஆயிலியம்
53பூசலார்அந்தணர்ஐப்பசி அனுஷம்
54பெருமிழலைக் குறும்பர்குறும்பர்ஆடி சித்திரை
55மங்கையர்க்கரசியார்பாண்டியர்-அரசர்சித்திரை ரோகிணி
56மானக்கஞ்சாற நாயனார்வேளாளர்மார்கழி சுவாதி
57முருக நாயனார்அந்தணர்வைகாசி மூலம்
58முனையடுவார் நாயனார்வேளாளர்பங்குனி பூசம்
59மூர்க்க நாயனார்வேளாளர்கார்த்திகை மூலம்
60மூர்த்தி நாயனார்வணிகர்ஆடி கார்த்திகை
61மெய்ப்பொருள் நாயனார்வேளாளர்கார்த்திகை உத்திரம்
62வாயிலார் நாயனார்வேளாளர்மார்கழி ரேவதி
63விறன்மிண்ட நாயனார்வேளாளர்சித்திரை திருவாதிரை


அறுபத்து மூவர் பற்றி இனிவரும் பதிவுகளில் ஒவ்வொன்றாக காண்போம்.கீழ்காணும் சுருக்க குறிப்புகள் ஒவ்வொரு நாயன்மாரைப் பற்றி எளிதில் அறிந்து கொள்ள உதவும்.




1. திருநீலகண்ட நாயனார்/Tiru Neelakanta Nayanar(கூடா நட்பின் விளைவால், மனைவியை இளம் வயது முதல் தீண்டக் கூடாது, முதுமைகாலத்தில், மனைவியாருடன் கோல் பிடித்து, குளத்தில் முழுகி, சிவ பெருமான்அருளால் இளமை பெற்றார்.)

2.இயற்பகை நாயனார்/Iyarpahai Nayanarசிவனடியாராக வந்த சிவனிடம், தன்னுடைய மனைவியை , முழுநம்பிகையுடன் அனுப்பியவர்.

3.இளையான்குடிமாற நாயனார்/Ilayankudi Mara Nayanarநடு இரவில், சிவனாடியார் வேடத்தில் வந்த சிவபிரானுக்காக, நெல் அறுத்தவர்.தன்னுடைய , வீட்டுக் கூரையையும் விறகாக ஆக்கி, சிவனடியாருக்கு உணவு தந்தவர்.

4.மெய்ப்பொருளார்/Maiporul Nayanarதன்னுடைய பகைவன், பொலி சிவவேடம் பூண்டு தன்னைக் கொன்றான். இருப்பினும், சாகும்தறுவாயிலும், சிவவேடத்திற்கு மரியாதைத் தந்து, பகைவனின் உயிரைக் காப்பாற்றியவர்

5.விறல்மிண்டர்/Viralminda Nayanarசிவ பகதர்களை வணங்காத காரணத்தினால், சுந்தர நாயனாரைக் கடிந்து ஏசியவர்.

6.அமர்நீதியார்/Amaraneedi Nayanarசிவனடியாராக வந்த சிவனின் கோவணம் தொலைந்துப் போக, ஈடாக , தன்னுடைய சொத்தையும்,குடும்பத்தையும் ஈடாகத் தந்தவர்

7.எறிபத்தர்/Eripatha Nayanarசிவபக்தரின் பூஜைக்குரிய பூவை எறிந்த மன்னனின் யானையைக் கொன்றவர். பின், தவறுசெய்ததாக எண்ணிய மன்னன், சிவபக்தன் என்று உணர்ந்தவுடன், தன் கழுத்தை வெட்டத்துணிந்தவர்.

8.ஏனாதிநாதர்/Enadinatha Nayanarகொல்ல வந்த பகைவனின் நெற்றியில் திருநீறு இருந்ததையறிந்து, பகைவனைக்கொல்லாமல், தான் உயிர் இழந்தவர்.

9.கண்ணப்பர்/Kannappa Nayanarபக்தியில், சிவனுக்காக, இரு கண்களையும் தோண்டி எடுத்தவர். அன்புப் பெருக்கால்,மாமிசத்தையும் நெய்வைத்தியமாய் இறைவருக்குப் படைத்தவர்.

10.குங்கிவியக்கலயர்/Kungiliya Kalaya Nayanarசாய்ந்த லிங்கத்தை, தான் கழுத்தில் கயிறு கட்டி இழுத்தவர். வறுமையில்வாடினாலும், மனைவி கொடுத்த தாலியை விற்று, உணவு வாங்காமல், சிவ பூஜைக்காகதூபம் ஏற்றியவர்.

11.மானக்கஞ்சறார்/Manakanchara Nayanarமறுநாள், தன் மகளுக்குக் கல்யாணம் என்றாலும், சிவனடியார் கேட்க, மகளின் அழகியகூந்தலை வெட்டியவர்.

12.அரிவாட்டாயர்/Arivattaya Nayanarசிவபூஜைக்குரிய பொருட்கள் கீழே விழுந்ததால், மாறாக, தன்னுடைய கழுத்தை வெட்டத்துணிந்தவர்.

13.ஆனாயர்/Anaya Nayanarபுல்லாங்குழல் ஓசையில், சிவ பக்தியை வெளிப்படுத்தியவர்.

14.மூர்த்தி/Murthi Nayanarசந்தனக் கட்டைகள் கிடைக்காது, தன்னுடைய முழங்கையைக் கல்லில் தேய்த்தவர்.நாடாளும் பொறுப்பு வந்தாலும், திருநீறு, உருத்திராக்கம், சடைமுடியைத் தன்னுடையசின்னமாகக் கொண்டவர்

15.முருகர்/Muruga Nayanarவழிபாட்டுக்கு உரிய காலத்திற்கு ஏற்ப எம்பெருமானுக்குப்ப பூமாலையாம், பாமாலைசாத்தி அர்ச்சனை புரிவார். இடைவிடாமல் இறைவனுடைய பஞ்சாட்சர மந்திரத்தைஓதிக்கொண்டேயிருப்பார்.

16.உருத்திரபசுபதி/Rudra Pasupathi Nayanarகழுத்தளவு நீரில், பகல் இரவு பாராமல், ருத்ரம் ஓதியவர்.

17.திருநாளைப்போவார்( நந்தனார்)/Tiru Nalai Povar Nayanarதாழ்ந்த குலமென்பதால், கோயிலில் நுழையாமல் வெளி நின்று சிவனை வணங்குவார். தன்தரிசனத்தை மறைத்த நந்தியை நகரச் செய்தவர். சிதம்பரம் திருத்தலம் போக வெகு ஆவல்கொண்டவர்.

18.திருக்குறிப்புத் தொண்டர்/Tiru Kurippu Thonda Nayanarசிவபிரான் வேடமிட்ட சிவனின் அழுக்குத் துணியைத் துவைத்தவர். ஆனால், குறித்தநேரத்தில் தன் பணியைச் செய்ய இயலாததால், தன் தலையைக் கல்லில் மோதியவர்.

19.சண்டேசுர நாயனார்/Chandesvara Nayanarசிவலிங்கத்திற்கு பால் அபிடேகம் செய்தவர். பாற்குடத்தைக் காலால் உடைத்ததந்தையின் காலை வெட்டியவர்.

20.திருநாவுக்கரசர் சுவாமிகள்/Tiru-Navukkarasar Nayanarதேவாரம் பாடி, உழவாரப் பணியில் ஈடுபட்டு சிவன் அருளைச் சிறப்பித்தவர். பற்பலஅற்புதங்கள் மூலம், சிவனருளைக் கண்முன் காட்டியவர்.

21.குலச்சிறையார்/Kulacchirai Nayanarபாண்டிய நாட்டின் அமைச்சராக இருந்து சைவத்தைக் காத்தவர்.

22.பெருமிழலைக் குறும்பர்/Perumizhalai Kurumba Nayanarசுந்தரருடன் கயிலை சென்றவர்.

23.பேயார் [ காரைக்கால் அம்மையார்]/Karaikal Ammaiyarஇறைவனின் அருளால் , கணவருக்காக மாம்பழம் வரவழைத்தாள். பின், இறைவனே துடிக்க,பேய் வடிவம் எடுத்தவர்.  சிவபெருமானால் அம்மையே என்று அன்புடன் அழைக்கப்பெற்றவர்.  அறுபத்து மூவருள் அமரும் பாக்கியம் பெற்ற ஒரே அம்மையார்.

24.அப்பூதி அடிகள்/Appuddi Nayanarதிருநாவுக்கரசரின் பெயரில் பற்பல தொண்டுகள் புரிந்தவர். தன் மகன் பாம்பால்கடியுண்ட போதிலும், திருநாவுக்கரசரின் உணவு உபசரிப்பு பாதிக்கப்படடக்கூடாதுஎன்ற அச்சத்தால், இறந்த மகனை மறைத்துவைத்தவர். பின், இறந்த மகன், சிவன்அருளால் உயிர் பெற்றான்.

25.திருநீலநக்கர்/Tiruneelanakka Nayanarதிருச்சாத்தமங்கை அவயந்தி ஆலயத்தில், சிவலிங்கத்தின் மீது உள்ள சிலந்தியை ஊதியமனைவியை கடிந்து ஏசியவர்.

26.நமிநந்தி அடிகள்/Nami Nandi Adigalதண்ணீரால் விளக்கு ஏற்றியவர்

27.திருஞானசம்பந்தர்/Tiru Jnana Sambandarஞானக் குழந்தை.  பல அற்புதங்கள் செய்தவர்.  பார்வதி அம்மையிடம் ஞானப்பால் உண்டபேறு பெற்றவர்.  அப்பர் பெருமானால் மிகவும் போற்றப் பட்டவர்.  சமணர்களைவென்று சைவம் தழைக்கச் செய்தவர்.

28.ஏயர்கோன் கலிக்காமர்/Eyarkon Kalikama Nayanarஇறைவனை, தூதுதவராய் அனுப்பிய சுந்தர நாயனாரிடம் கடிந்து பேசியதால், சூலைநொய்பெற்றார். பின், சிவன் அருளால், நோய் நீக்கப்பட்டது.

29.திருமூலர்/Tiru Mula Nayanarதிருமந்திரம் பாடியவர்.  நந்தி எம்பெருமானின் மாணாக்கர்.  சித்தர்.

30.தண்டி அடிகள்/Dandi Adigal Nayanarகண் குருடாக இருந்தாலும், சமுதாய நோக்கம் கொண்டு, குளம் தோண்டியவர். சிவஅருளால், கண் பார்வை மீண்டும் பெற்றவர்.

31.மூர்க்கர்/Murkha Nayanarசூதாடி, வரும் வருமானத்தில் சிவ பூஜை நடத்தியவர்.

32.சோமாசிமாறர்/Somasira Nayanarநிறைய யாகம் நடத்தி, சிவ பூஜை செய்தவர். சுந்தரரின் நண்பர்.

33.சாக்கியர்/Sakkiya Nayanarஅன்பால், சிவ லிங்கத்தின் மீது கல் எறிந்து வழிபட்டவர்.

34.சிறப்புலி/Sirappuli Nayanarசிவ பூஜையைத் தவறாமல் செய்தவர்.

35.சிறுத்தொண்டர்/Siruthonda Nayanarபைரவ அடியாராய் வந்த சிவனுக்காக, தன் மகனையே வெட்டி கறி சமைக்கத் துணிந்தவர்.

36.சேரமான் பெருமாள்/ Cheraman Perumal Nayanarசுந்தரரின் நண்பர். சிவ பூஜையைத் தவறாமல் செய்தவர்.

37.கணநாதர்/Gananatha Nayanarசிவ பூஜையை அதிக பக்தியுடன் செய்வார்.

38.கூற்றுவர்/Kootruva Nayanarநாடாள முடிசூட விரும்பியவர். ஆனால், வாய்ப்புக் கிடைக்காததால், தன்சிந்தையில், சிவனே முடி சூட்டி தந்ததாக எண்ணியவர்.

39.புகழ்ச்சோழர்/Pugal Chola Nayanarஎறிபத்தர், தவறு செய்த யானையை கொன்றுவித்தார் என்று அறிந்து, சிவனை நினைத்து,தன் உயிரை விட நினைத்த மன்னர்.

40.நரசிங்க முனையரையர்/Narasinga Muniyaraiyarசுந்தரமூர்த்தி நாயனாரை வளர்த்தவர்.

41.அதிபத்தர்/Adipattha Nayanarவலையில் கிடைக்கும் முதல் மீனை சிவனை நினைத்து, ஆற்றில் விடுபவர். அன்று, ஒருபொன் மீன் கிடைத்தாலும், சிவனுக்காக ஆற்றில் விட்டு விட்டார்.

42.கலிக்கம்பர்/Kalikamba Nayanarமுன்பு வேலைக்காரனாக இருந்தவன் சிவனடியாராய் வந்திட, உபசரிக்க மறுத்தமனைவியின் கையை வெட்டியவர்.

43.கலியர்/Kalia Nayanarவறுமையில், தன் மனைவியே விற்று விளக்கு ஏற்றினார். எண்ணெய் வாங்கக் காசுஇல்லாத சமயத்தில், தன் இரத்தத்தால், விளக்கு ஏற்றியவர்.

44.சத்தி/Satti Nayanarசிவனைப் பற்றி தவறாக பேசியவரின் நாக்கை அறுத்தவர்.

45.ஐயடிகள் காடவர்கோன்/Aiyadigal Kadavarkon Nayanarமன்னன் பதவியை விட்டு, திருத்தல யாத்திரை மேற்கொண்டவர்.

46.கணம்புல்லர்/Kanampulla Nayanarவிளக்கு ஏற்றுவதற்குத் தடை ஏற்பட்டதால், தன் தலைமுடியைக் கொண்டு விளக்குஏற்றியவர்

47.காரி/Kari Nayanarகாரிக்கோவை என்ற நூல் இயற்றி, வரும் வருமானத்தில் சிவாலயங்களை அமைத்தார்.

48.நின்றசீர் நெடுமாறனார்/Ninra Seer Nedumara Nayanarதிருஞான சம்பந்தாரால், தன்னுடைய நோயும், கூனும் நீக்கப்பெற்று, சைவத்தைவளர்க்கும் அரசராய் வாழ்ந்தவர்.

49.வாயிலார்/Vayilar Nayanarஇறைவனை எப்போதும் நினைக்கக்கூடிய தமது மனக்கோயிலில் இருத்தினார். உணர்வுஎன்னும் தூய விளக்கேற்றினார். ஒப்பில்லா அரும்பெரும் இன்பம் என்னும்திருவமுதத்தால் வழிபட்டு சிவபெருமானுடைய சேவடி நீழலை எய்தும் பேரின்ப வாழ்வுபெற்றார்.

50.முனையடுவார்/Munaiyaduvar Nayanarஅரசருக்காகப் போர் புரிந்து, வரும் வருமானத்தில், அனைவருக்கும் உணவு அளித்தார்.

51.கழற்சிங்க நாயனார் / Kazharsinga Nayanarசிவ பூஜைக்கு உரிய மலரை முகர்ந்த மனைவியின் கையை வெட்டியவர்.

52.இடங்கழி/Idangazhi Nayanarஅரசனாய் இருந்தாலும், தன்னுடைய நெல் களஞ்சியத்தை, சிவ பூஜைக்கு வாரித் தந்தவர்.

53.செருத்துணை/Seruthunai Nayanarசிவ பூஜைக்குரிய மலரை மோந்த, கழற்சிங்க நாயனாரின் மனைவியின் மூக்கை வெட்டியவர்.

54.புகழ்த்துணை/Pugazh Tunai Nayanarவறுமை வந்தாலும், கோயிலில் சிவ பூஜையைத் தவறாமல் செய்தவர். பின், ஊரின்பஞ்சத்தைத் தீர்க்க, பொருள் பெற்றார்.

55.கோட்புலி/Kotpuli Nayanarசிவபூஜைக்குரிய நெல்லை எடுத்த உறவினர்களின் நெல்லை அழித்தவர்.

56.பூசலார்/Pusalar Nayanarபொருள் இல்லாததால், மனத்தில் கோயில் கட்டினார். மன்னன் கட்டிய கற் கோயிலைவிட்டு, இறைவன் முதலில் பூசலாரின் மனக்கோவிலுக்கு வருகை அளித்தார்.

57.மங்கையர்க்கரசியார்/Mangayarkarasiyarசைவத்தைப் பரப்பிய, பாண்டிய மகாராணி.  நின்ற சீர் நெடுமாறனின் மனைவி. அமைச்சர் குலச்சிறையாரின் துணையுடன் ஞான சம்பந்தரை மதுரைக்கு அழைத்து சைவமதம் தழைக்கும் படி செய்த அம்மையார்.

58.நேசர்/Nesa Nayanarஎப்பொழுதும், சிவனின் நாமத்தை நினைத்தவர்.

59.கோச்செங்கட் சோழர்/Kochengat Chola Nayanarமுற்பிறவியில், சிலந்தியாய் சிவனை வழிபட்டு, யானையால் இடர் பட்டு மன்னராய்பிறந்தார். பின், மன்னராய், நிறைய சிவ ஆலயங்களை யானை நுழைய இயலா வண்ணம்கட்டினார்.

60.திருநீலகண்ட யாழ்ப்பாணர்/Tiru Neelakanta Yazhpanarஞானசம்பந்தருடன் யாழ் இசையின் மூலம், சிவனைப் போற்றியவர்

61.சடையனார் நாயனார்/Sadaya Nayanarசுந்தரமூர்த்தி நாயனாரின் தந்தை.

62.இசைஞானியார்/Isaijnaniyarசுந்தரமூர்த்தி நாயனாரின் அன்னை.

63.சுந்தரமூர்த்தி நாயனார்/Sundaramurthi Nayanarதேவாரம் பாடியவர்.  சிவ பெருமானின் தோழர்.




64 வது நாயன்மார்:


வாரியார் 60 நாயன்மார்கள் 63 நாயன்மார்கள் ஆன வரலாற்றைச் சொன்னார்கள். வாரியாரைப் பற்றி முழுமையாக அறிந்தவர்கள் சொல்கிறார்கள் நாயன்மார்கள் 60 என்றும், 63 என்றும் சொல்வது தவறு. மொத்தம் 64 நாயன்மார்கள். 64 வது நாயன்மார் வேறு யாருமல்ல. திருமுருக கிருபானந்த வாரியார்தான். ஆன்மிகப் பற்றுடைய பலரும் சொல்கிறார்கள். ஆயகலைகள் 64 என்று சொல்வதுண்டு. அதுபோல் நாயன்மார்கள் 64 என்று சொல்வதில் தவறேதுமில்லை. அறுபத்து நான்காம் நாயன்மார் திருமுருக கிருபானந்த வாரியார் என்பதில் எந்த சந்தேகமுமில்லை. வாரியாரும் நாயன்மார்களைப் போல் இறைவனிடம் எதையும் வேண்டாத பெரியாராகவேதான் வாழ்ந்தார். மனித வாழ்க்கையில் பிற்காலத்திலும் நினைத்துப் போற்றக்கூடியவர்களாக வாழ்பவர்கள் சிலரே. அந்த மிகச் சிலருள் வாரியார் சுவாமிகளும் ஒருவர் என்பதை நாமும் நினைவில் கொள்வோம்.  




இனிவரும் பதிவுகளில் வாரியார் பற்றியும், முருகனருள் பற்றியும் தொடர்வோம்.கீழ்காணும்காணொளியை தவறாது பார்க்கவும் 



- முருகனருள் முன்னிற்க அடுத்த பதிவில் சிந்திப்போம்


No comments:

Post a Comment