Subscribe

BREAKING NEWS

22 November 2019

கனவு காணுங்கள் VISUALIZE (ரகசியம்3)



எல்லையற்ற சக்தி நிறைந்த முதல் களஞ்சியத்தில் அளவில்லா அன்பும் தங்களுக்குள் இருப்பதை அறிந்து கொள்ளாத மக்கள் பலரும் தங்களுடைய முழு ஆற்றலை உணர்ந்து கொள்ள முடியாதவர்களாக இருந்துவிடுகின்றனர் உங்களுக்கு வேண்டிய அனைத்தையும் உங்களால் இதிலிருந்து பெற முடியும்.



காந்தவிசை கூட்டப்பட்ட ஓர் இரும்பு துண்டால் தன் எடையைப் போல் 12 மடங்கு எடையுள்ள பொருட்களைத் தூக்க முடியும் ஆனால் அதே இரும்பு செல்லிலிருந்து காந்தவிசை நீக்கப்பட்டு விட்டால் ஓர் இறகை கூட அதனால் தூக்க முடியாது.
 இதேபோன்று மக்களிலும் இருவகையான உள்ளனர் கவர்ந்து இழுக்கும் ஈர்ப்பு சக்தி நிறைந்த மக்கள் துணிச்சலோடும் தன்னம்பிக்கையோடும் இருப்பார்கள் தாங்கள் வெற்றி நடை போட பிறந்தவர்கள் என்று அவர்களுக்கு தெரியும்.

 அதேசமயம்  வலுவிழுந்தவர்கள் ஏராளமான மக்கள் உள்ளனர் அவர்கள் மனம் முழுவதும் பயங்களும் சந்தேகங்களும் நிறைந்திருக்கும் அவர்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும்போது ஒருவேளை நான் தோற்று விட்டால் என்னவாகும் நான் என் பணத்தை இழக்க நேரலாம் மக்கள் என்னை பார்த்து ஏளனமாக சிரிப்பார்கள் என்று கூறுவார்கள் இத்தகைய மக்கள் வாழ்வில் வெகு தூரம் சென்று அடையப் போவதில்லை முன்னேற விடாமல் தடுக்கும் அவர்களது பயம் அவர்கள் இருக்கும் இடத்திலேயே அவர்களை முடக்கிப் போட்டுவிடும்.

 காலத்தால் அழியாத பரம ரகசியத்தை நீங்கள் கண்டறிந்து அதை நடைமுறைப்படுத்தினால் உங்களுக்கு வேண்டியதை தீர்த்துக் கொள்வதற்கான காந்த சக்தியை நீங்கள் பெறலாம்.

 காலத்தால் அழியாத மாபெரும் ரகசியம் என்ன என்று யாரோ ஒருவர் உங்களை கேட்கிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள் நீங்கள் என்ன பதில் அளிப்பீர்கள் அனுசக்தி கோள்களுக்கு இடையேயான பயணம் கருங்குழி இவற்றில் ஏதுமில்லை அப்படியானால் அந்த மாபெரும் ரகசியம் எது ஒருவர் அதனை எங்கே கண்டுபிடிக்கலாம் அதனை எப்படிப் புரிந்து கொண்டு நடைமுறைப்படுத்துவது இதற்கான விடை நம்மை வியப்பில் ஆழ்த்தும் அளவுக்கு மிகவும் எளிமையானது உங்களுடைய சொந்த ஆழ்மனத்தில் குடிகொண்டுள்ள அற்புதமான அதிசயங்களை உருவாக்கும் சக்தி தான் அந்த ரகசியம். இப்பெரும் ரகசியத்தை கண்டு பிடிக்க முனையும் அனேக மக்கள் கடைசியாக தேடும் இடம் தங்கள் ஆழ்மனமாகத்தான் இருக்கும் வெகு சிலரே இதை கண்டுபிடித்து அதற்கான காரணமும் இதுதான்.

 ஒருமுறை நீங்கள் உங்கள் ஆழ்மனதில் உறைந்து இருக்கும் இந்த அற்புத சக்தியை தொடர்பு கொண்டு அதை விடுவிக்க கற்றுக் கொண்டால் உங்களது வாழ்க்கைக்குள் இன்னும் அதிகமான சக்தியும் செல்வத்தையும் ஆரோக்கியத்தையும் மகிழ்ச்சியையும் மங்களத்தையும் உங்களால் கொண்டுவர முடியும் நீங்கள் மின்சக்தியை கையகப்படுத்த அலைந்து திரியத் தேவையில்லை நீங்கள் அதை ஏற்கனவே பெற்றுள்ளீர்கள் ஆனால் அதை எப்படி உபயோகிப்பது என்பதை மட்டும் நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டும் உங்கள் வாழ்க்கையின் எல்லாத் துறைகளிலும் சக்தியைப் பயன்படுத்து வதற்கு முதல் இதனை நன்றாக புரிந்து கொள்வது அவசியமாகும்.
இங்கே கொடுக்கப்பட்டுள்ள எளிய உத்திகளையும் செயல்முறைகளையும் நீங்கள் பின்பற்றினால் தேவையான புரிதலை பெறுவீர்கள் உங்கள் நம்பிக்கைகள் மெய்ப்படும் கணவுகள் நனவாக தேவையான ஒரு வேகத்தையும் ஒரு புதிய சக்தியையும் உங்களால் உருவாக்கிக்கொள்ள முடியும் உங்கள் வாழ்க்கையை நீங்கள் இதுவரை கண்டிராத அளவு பிரம்மாண்டமானதாக சிறப்பானதாக வளமானதாக மேன்மை பொருந்தியதாக மாற்ற இப்பொழுதே உறுதி எடுத்துக்கொள்ளுங்கள்.

 எல்லா அறிவும் அளவற்ற சக்தியும் உங்களுக்கு தேவையான அனைத்தும் உங்கள் ஆழ்மனதில் ஆழங்களில் புதைந்து கிடக்கின்றன உருவம் கொடுக்கப்படும் அதற்காகவும் தட்டி எழுப்பப்படும் அதற்காகவும் அவை காத்துக்கொண்டிருக்கின்றன நீங்கள் இப்பொழுது உங்கள் ஆழ்மனத்தின் ஆற்றல்களை உணர்ந்துகொள்ள துவங்கினால் அது புறவுலகில் நிஜமாக உருவெடுக்கத் துவங்கும்.

 நீங்கள் திறந்த மனதோடும் ஏற்றுக்கொள்ளும் மன நிலையும் இருக்கும் பட்சத்தில் உங்கள் ஆழ்மனதில் உள்ள எல்லையற்ற சக்தியானது உங்கள் வாழ்வின் ஒவ்வொரு கணத்திலும் உங்களுக்கு தேவையான அந்தந்த நேரத்தில் வெளிப்படுத்தும் நீங்கள் புதிய சிந்தனைகளையும் கருத்துக்களையும் பெறுவீர்கள் புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தும் புதிய விஷயங்களை கண்டறிவீர்கள் புதிய ஓவியங்களை படைப்பீர்கள் உங்கள் ஆழ்மனதில் உள்ள எல்லா எல்லையில்லா சக்தியானது பலவகைப்பட்ட வியத்தகு அறிவைத் தர உங்களுக்கு உதவும் அது தானாகவே தன்னை வெளிப்படுத்திக்கொள்ளும் அவ்வாறு நிகழும்போது வாழ்வில் நிலையான இடத்தை நீங்கள் அடைய அது உங்களுக்கு உதவும்.

உங்கள் ஆழ்மனத்தின் அறிவியல் வாயிலாக நீங்கள் மிகச் சிறந்த துணையையும் சரியான வியாபாரக் கூட்டாளிகள் உங்கள் பக்கம் இருக்க முடியும் அது உங்களுக்கு தேவையான பணத்தை எல்லாம் எப்படி பெறுவது என்பதைக் காட்டும் நீங்கள் இதயபூர்வமாக எதை விரும்புகிறீர்களோ அதை செய்வதற்கும் எப்படி இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அப்படி இருப்பதற்கும் எங்கு செல்ல விரும்புகிறோமோ அங்கு செல்வதற்கு தேவையான பொருளாதார சுதந்திரத்தை சக்தி உங்களுக்குக் கொடுக்கும்.

 எண்ணமும் உணர்வும் சக்தியும் ஒளியும் அன்பும் அழகும் நிறைந்த உங்களுடைய இந்த உலகை கண்டறிந்து தெரிந்து கொள்வது உங்கள் உரிமை கண்ணுக்குப் புலப்படாமல் இருந்தாலும் அது மிகவும் சக்தி வாய்ந்தது எந்த ஒரு பிரச்சினைக்கான தீர்வையும் எந்த ஒரு விளைவு கான காரணத்தையும் நீங்கள் உங்கள் ஆழ்மனதில் கண்டறிவீர்கள் ஒளிந்திருக்கும் சக்திகளை வெளிக்கொணர நீங்கள் கற்றுக் கொள்ளும்போது வாழ்வில் செழிப்பையும் பாதுகாப்பையும் மகிழ்ச்சியையும் விருத்தி செய்து கொள்ளத் தேவையான சக்தியையும் அறிவும் உண்மையிலேயே உங்கள் வசப்படும்.

 முடங்கிக் கிடந்த மக்கள் தங்கள் ஆழ்மனத்தின் சக்தி கொண்டு அந்நிலை நீங்கி மீண்டும் முழுமையான அவர்களாகும் வலிமை உடையவர் களாகவும் பலசாலிகளாகவும் ஆகியுள்ளது நான் பார்த்திருக்கிறேன் அவர்களுடைய மனம் அவர்கள் வெளி உலகிற்கு சென்று மகிழ்ச்சியையும் ஆரோக்கியத்தையும் ஆனந்தமான வெளிப்பாடுகளையும் அனுபவிக்கும் சுதந்திரத்தை அவர்களுக்கு கொடுத்தது உழன்று கொண்டிருக்கும் மனத்தையும் நொறுங்கிப் போன இதயத்தையும் குணமாக்கும் ஓர் அதிசய சக்தி உங்கள் ஆழ்மனதில் இருக்கிறது அதே உங்கள் மனதில் சிறைக் கதவை திறந்து விட்டு அதில் இருந்து உங்களை விடுவிக்கும் பௌதீக ரீதியான மற்றும் உடல்ரீதியான அடிமைத்தனத்தில் இருந்து உங்களை விடுதலை அளிக்கும்.

எந்தத் துறையிலும் நீங்கள் மென்மேலும் முயற்சியில் முன்னேற்றம் காண வேண்டும் என்றால் அதற்கான இன்றியமையாத முதற்படி உலகளாவிய அளவில் நடைமுறைப்படுத்தக் கூடிய செயல்பாட்டு முறை ஒன்றை கண்டுபிடிப்பதுதான் உங்கள் ஆழ்மனத்தை செயல்படுத்துவதற்கு முன்பு அதன் கோட்பாடுகளை புரிந்துகொள்வது அவசியம் புரிதலுக்கு பிறகு நீங்கள் பெறக்கூடிய நல் விளைவுகளை மனதிற் கொண்டு அதன்படி பயன்படுத்த பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்  காட்சிகளை நடைமுறைப்படுத்துவதன் மூலம் நீங்கள் அடைய விரும்பும் நிச்சயமான குறிப்பிட்ட நோக்கங்களையும் இலக்குகளையும் உங்களால் கண்டிப்பாக அடைய முடியும்.

 சிந்தனைகள் தொடரும் ....

No comments:

Post a Comment