Subscribe

BREAKING NEWS

21 November 2019

உங்களுக்குள் ஒளிந்திருக்கும் புதையல் (ரகஸியம் 2)



நாம் முன் பதிவில் கேட்டிருந்த அனைத்து கேள்விகளுக்கான விடைகளை தற்போது வருகின்ற இந்தப்பதிவில் ஒவ்வொன்றாக பதிலைக் காண முயற்சிப்போம்.




இத்தகைய கேள்விகளுக்கும் இதேபோன்ற இன்னும் பிற கேள்விகளுக்கும் நான் கண்டுபிடித்துள்ள விடைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற ஆழ்ந்த விருப்பமே என்னை இந்த பதிவை எழுதத் தூண்டியது. உங்கள் மனதில் அடிப்படை உண்மைகளை இயன்ற அளவு எளிய நடையில் விளக்க முயற்சித்துள்ளேன் உங்கள் நாளிதழ்களிலும் பத்திரிகைகளிலும் உங்கள் தொழிலிலும் உங்கள் அலுவலகங்களையும் உங்கள் வீட்டிலும் நீங்கள் உபயோகிக்கும் நடையில் நான் இந்தப் பதிவை எழுதி இருக்கிறேன் .

 இந்தப் பதிவை படித்து இதில் வரையறுக்கப்பட்டுள்ள உத்திகளை அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்துமாறு நான் உங்களை கேட்டுக்கொள்கிறேன். அவ்வாறு நீங்கள் செயல்படும்போது ஒரு அற்புதமான நிகழ்த்தும் சக்தி உங்கள் கைவசம் படும் என்று நான் மனதார நம்புகிறேன். குழப்பம் துயரம் மனசோர்வு தோல்வி ஆகியவற்றிலிருந்து அச்சக்தி உங்களை மீட்டெடுக்கும். உங்கள் துன்பங்கள் தீர்க்கும் உணர்ச்சி ரீதியான தலையிலிருந்து உடல் ரீதியான தலையில் இருந்து உங்களை விடுவிக்கும் சுதந்திரம் மகிழ்ச்சி மற்றும் மன அமைதிக்கான பாதையில்  உங்களைக் கொண்டுபோய் சேர்க்கும்.

 உங்கள் ஆழ்மனத்தின் இந்த அற்புத நிகழ்த்தும் சக்தி உங்களை நோயிலிருந்து குணப்படுத்தி மீண்டும் பலம் வாய்ந்தவராகவும் துடிப்பு மிக்கவராகவும் ஆக்கும்  உங்களுக்குள் இருக்கும் சக்திகளை எவ்வாறு உபயோகிப்பது என்பதை கற்றுக் கொள்வதன் மூலம் நீங்கள் பயமெனும் சிறைக் கதவை திறந்துவிட்டு இன்பத்தை   அனுபவிக்கும் புகழ் பெற்ற சுதந்திர வாழ்வுக்குள் நுழைவீர்கள்.

 அற்புதம் நிகழ்த்தும் சக்தியை விடுவித்தல் ஒரு தனிமனிதன் அனுபவபூர்வமாக உணர்ந்த கணமே நமது ஆழ்மனதில் காட்சிகளுக்கு சிறந்த நம்பகமான ஆதாரம் என்னை உருவாக்கி இன்று வரையிலும் என் உடலில் இன்றியமையா செயல்கள் அனைத்தையும் கண்காணித்து வருவது  எனது ஆழ்மனமே.என்று நான் நம்புகிறேன்.

ஆழ்ந்து பிரார்த்திக்கும்போது அற்புதங்கள் நிகழ்கின்றன அறிவியல்பூர்வமான பிரார்த்தனை என்பது ஒரு குறிப்பிட்ட குறிக்கோளை நோக்கி செலுத்தப்படும் வெளி மனத்திற்கும் உள்மனத்திர்க்கும் இடையே நடைபெறும் ஓர் இணக்கமான நடவடிக்கை உங்களுக்குள் இருக்கும் மகா சக்தியை வெளிக் கொணர்ந்து வாழ்க்கையில் நீங்கள் உண்மையிலேயே என்ன வேண்டும் என்று விரும்புகிறீர்களோ அது உங்களுக்கு கிடைக்க உதவும். ஓர் அறிவியல் பூர்வமான முறையை இந்த பதிவில் கற்றுக் கொடுக்கும். நீங்கள் ஒரு மகிழ்ச்சியான முழுமையான வளமான வாழ்வை விரும்புகிறீர்கள் அற்புதங்களை நிகழ்த்தும் சக்தியை பயன்படுத்தி உங்கள் அன்றாட நடவடிக்கைகளை எளிதாக உங்கள் வியாபாரம் ,செல்வம், கல்வி,ஆரோக்கியம் போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு காணுங்கள்.

 இந்த பதிவை பலமுறை படிக்கவும்... இந்த அற்புதமான சக்தி எவ்வாறு செயல்படுகிறது என்பதையும் உங்களுக்குள் ஒளிந்திருக்கும் உள்ளத்தையும் ஞானத்தையும் எவ்வாறு வெளிக்கொணர்வது என்பதையும் இந்த பதிவில் பல அத்தியாயங்கள் உங்களுக்கு எடுத்துக்காட்டும். உங்கள் ஆழ்மனதில் எண்ணப் பதிவை ஏற்படுத்தும் எளிய உத்திகளை கற்றுக்கொள்ளுங்கள் வற்றாத களஞ்சியமான உங்கள் ஆழ்மனதில் இருந்து வேண்டியதைப் பெற உதவும் புதிய அறிவியல் முறையை கடைபிடியுங்கள். இதை கவனமாகவும் அக்கறையோடும் அன்போடும் படியுங்கள். இது வியத்தகு முறையில் உதவி செய்யும் என்பதை உங்களுக்கு நீங்களே நிரூபித்துக் காட்டுங்கள் இது கண்டிப்பாக உங்கள் வாழ்வில் ஒரு திருப்பு முனையாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்.

 பலனளிக்கும் விதத்தில் பிரார்த்திப்பது எப்படி என்று உங்களுக்கு தெரியுமா?

அதனை உங்கள் அன்றாட வாழ்வில் ஒரு பகுதியாக அங்கம் வகித்து எவ்வளவு காலம் இருக்கும் ஆனால் ஒரு அவசர காலத்தில் ஆபத்தான அல்லது பிரச்சனையான சமயங்களில் காலம் அதிலிருந்து நம்மை பார்க்கும் நேரத்தில் பொதுவாக நமக்குள் பிரார்த்தனைகள் பீறிட்டுக் கிளம்பும் தினசரி செய்திகள் உற்று கவனியுங்கள் தீராத நோயால் அல்லலுறும் ஒரு குழந்தைக்காக நாடுகளுக்கு இடையேயான அமைதிக்காக நீர் புகுந்து கரங்களில் சிக்கித்தவிக்கும்  சுரங்கத் தொழிலாளர்கள் இன்று நாடெங்கிலும் மக்கள் சமூக வலைதளங்களில் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கும் செய்திகள் அதில் இடம் பெற்றிருக்கும் பின்னர் அட்சரங்கள் தொழிலாளர்கள் மாற்றப்படும் போது தாங்கள் காத்திருந்த நேரம் முழுவதும் பிரார்த்தித்துக் கொண்டு இருந்ததாக அவர்கள் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறோம்.
பிரார்த்தனை  என்பது பிரச்சனை காலங்களில் நமக்கு கிடைக்கும் ஒரு அருமருந்து என்பதில் சந்தேகமில்லை ஆனால் பிரார்த்தனை நம் வாழ்வில் பிரிக்கமுடியாத ஆக்கபூர்வமான ஓர் அங்கமாகி கொள்ள நாம் ஏன் பிரச்சினைக்காக காத்திருக்க வேண்டும்.. பிரார்த்தனைக்கு கிடைக்கும் நம்பமுடியாத பலன்கள் தலையங்கங்களை அலங்கரிக்கும் அதையே பலன் தரும் பிரார்த்தனைகளுக்கு கிடைக்கும் நற்சான்றிதழ் கூட ஆனால் குழந்தைகளின் பணிவான பிரார்த்தனைகளை பற்றியும் தினமும் உணரும்போது நமக்கு கிடைத்த உணவுக்காக இறைவனுக்கு நாம் தெரிவிக்கும் எளிமையான நன்றி பாராட்டுக்கள் பற்றியும் இறைவனிடம் ஐக்கியத்தை மட்டுமே நாடி வரும் மக்களின் நம்பிக்கை .

மக்கள் பலரும் நினைப்பது போல ஒரு மனிதன் பிரார்த்தனைக்கான விலை அவன் எதன் மீது நம்பிக்கை வைத்து உள்ளானோ அதைப் பொறுத்து அமைவது இல்லை மாறாக அவனுடைய ஆழ்மனம் எப்போது அவனுடைய வெளி மனம் சிந்திக்கும் சிந்தனைகளுக்கு காணும் காட்சிக்கு ஏற்றவாறு செயலாற்றுகிறது அப்போதுதான் அவனுடைய பிரார்த்தனைக்கான விடை கிடைக்கிறது இந்த நம்பிக்கை விதிதான் உலகில் உள்ள அனைத்து மக்களின் அடிப்படை ரகசியம்.


 இந்து கிறிஸ்தவர் இஸ்லாமியர் யூதர் ஆகியோருக்கு இடையேயான நம்பிக்கைகளில் மாபெரும் வேறுபாடுகள் இருக்கும் போதிலும்  பிரார்த்தனை களுக்கான விடைகள் அவர்கள் எல்லோருக்கும் கிடைக்கக்கூடும் இது எவ்வாறு சாத்தியம் இது ஒரு குறிப்பிட்ட சமயக் கோட்பாடுகளையும் சடங்குகளையும் விழாக்களையும் புத்தகங்களையோ வழிபாட்டு முறைகளையும் உச்சரிக்கும் மந்திரங்களையும் கொடுக்கும் வழிகளையும் செலுத்தும் காணிக்கைகலையோ பொறுத்தது அல்ல மாறாக அவர் எதைப் பற்றிப் இருக்கிறாரோ அதை முழுமையாக நம்பும் அல்லது மனதளவில் ஏற்றுக் கொள்ளும் நிலையில் அவர் இருப்பதால்தான் இது சாத்தியப்படுகிறது.


 நம்பிக்கைக் கோட்பாடு வாழ்க்கை கோட்பாடு சுருங்கக் கூறினால் நம்பிக்கை என்பது உங்கள் மனதில் உள்ள ஒரு எண்ணமே ஒருவர் எவ்வாறு சிந்திக்கின்றோம் உணர்கிறோம். நம்புகிறாரோ அவ்வாறு அவருடைய உடலும் மனமும் சூழ்நிலைகளும் அமையும் நீங்கள் என்ன செய்கிறீர்கள் ஏன் செய்கிறீர்கள் என்ற புரிதலின் அடிப்படையில் உருவாகும் உத்தியும் வழிமுறையும் வாழ்வின் சகல சௌபாக்கியங்களையும் உங்களிடம் கொண்டு வந்து சேர்க்க ஆழ்மனம் உதவும் நிறைவேறிய பிரார்த்தனை என்பது உங்கள் இதயப்பூர்வமான விருப்பம் மெய் படுவதால் தான்.


 தீவிர விருப்பமே பிரார்த்தனை ஆரோக்கியம் மகிழ்ச்சி பாதுகாப்பு மற்றும் மன நிம்மதி ஆகியவற்றை எல்லோரும் விரும்புகிறோம் ஆனால் நம்மில் எத்தனை பேர் இந்த இலக்குகள் அத்தனையும் அடைகிறோம்? என்னுடைய மனப் போக்கை மாற்றி உணர்ச்சிபூர்வமான வாழ்க்கைக்கு கடிவாளம் விட்டால் என்னுடைய இதயத்தில் நிலை மேம்படும் என்பதை நான் மனப்பூர்வமாக அறிவேன். பிரச்சனை என்னவென்றால் என்னிடம் அதற்கான உத்தியோ வழி முறையோ அல்லது இரு முறையோ இல்லை என் மனம் பல பிரச்சினைகள் குறித்து முன்னும் பின்னும் சதா உழன்று கொண்டே இருக்கிறது. அதனால் நான் வெறுப்பாகவும் மகிழ்ச்சி அற்றவனாகவும் தோல்வி அடைந்ததாகவும் உணருகிறேன் என்று பலபேர் புலம்புகின்றனர்.



இவர் முழுமையான ஆரோக்கியத்தை பெற தீவிர விருப்பம் கொண்டிருந்தார் தன் மனம் எவ்வாறு செயலாற்றுகிறது என்பது குறித்த அறிவு அவருக்கு தேவைப்பட்டது இந்த அறிவை அவர் தன்னுடைய விருப்பத்தை பூர்த்தி செய்ய அவருக்கு உதவும் இந்த பதிவில் வரையறுத்து காட்டப்பட்டுள்ள நிவாரண வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் அவர் குறை நீங்கி முழுமை அடைய முடியும்.


ஆழ்மனத்தின் அற்புத நிகழ்த்தும்சக்தி என்பது  நீங்கள் நானும் பிறப்பதற்கு முன்னரே  உலகமும் தோன்றுவதற்கு முன்பே இருந்து வந்துள்ளது வாழ்வில் நிலையான பேர் உண்மைகளும் கோட்பாடுகளும் மதங்கள் யாவும் தோன்றுவதற்கு முன்னரே இருந்து வந்துள்ளன இதை மனதில் கொண்டே இந்த அற்புதமான மாயமான பூரணமான மாற்றத்தை ஏற்படுத்தும் சக்தியை அதிகப்படுத்திக் கொள்ள பின்வரும் பதிவுகளில் நான் உங்களை கேட்டு கொள்கின்றேன். சக்தி உங்கள் மனது காயங்களையும் ஆற்றும். பயம் சூழ்ந்த மனதிற்கு விடுதலையை அழகுபடுத்தும் ஏழ்மை தோல்வி துயரம் பற்றாக்குறை மற்றும் வெறுப்பு ஆகிய குறைபாடுகளில் இருந்து உங்களை முழுமையாக விடுவிக்கவும் செய்யும்..


 நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் நீங்கள் பயன்படுத்த விரும்பும் நல்ல விஷயங்களோடு உங்களை மன பூர்வமாகவும் உணர்ச்சி பூர்வமாகவும் ஐக்கியப் படுத்திக் கொள்வது தான் உங்களுடைய ஆழ்மனத்தில் படைதிரட்டி அதற்கேற்ப செயல்படும் இன்றே இப்பொழுதே தொடங்குங்கள் உங்கள் வாழ்வில் அற்புதங்கள் நிகழ்த்தும் இருள் விலகி உங்கள் வாழ்வில் ஒளி வீசும் வரை ஓயாதீர்கள் ...


சிந்தனைகள் தொடரும் ...


No comments:

Post a Comment