ஆன்மநேய அன்பர்களே !
உலக மக்களின் அறியாமை என்னும் இருளை அகற்றவும், அறிவு ஒளி பெருகவும் ஆன்ம ஒளி நல்கவும் தஞ்சைத் தரணியில் அவதரித்து தத்தாத்ரேய பீடம், சுயம்பிரகாச சுவாமிகளென்னும், திருவிடைமருதூர் மௌனசுவாமிகளின் சீடராகி உலக மக்களின் துன்பம் நீவி இன்பம் அடைவதற்காக தவங்கனிந்து, நவங்கனிந்து, சிவங்கனிந்து இறையனுபூதி பெற்று, இரண்டற்ற, ஏகமான இறைவனில் இரண்டறக் கலந்து, மறைபொருளின் சத்தியமாய், ஓங்காரமாய், நித்தியமான பேருணர்வில் பிரம்மதத்துவாய் ஒளிரும் சத் - குரு பூஜ்யஸ்ரீ ஸ்ரீமத் சதானந்தபிரம்ம குருதேவதத் சுவாமிகள் காரண குருவாய், காரிய உருவாய், சிவவடிவமாய் பக்தர்களுக்கு அருள்புரிய வேண்டி , சென்னையில் ஆலப்பாக்கம் சதானந்தபுரத்தில் எழுந்தருளியுள்ளார்.
சுவாமிகளின் இந்த வருடத்திய 96 ஆவது மகா குரு பூஜைக்கு விழா சிறப்புடன் நடைபெற இருக்கின்றது. நிகழும் ஹேவிளம்பி வருடம் தைத்திங்கள் 20ம் நாள் (02/02/2018) வெள்ளிக்கிழமை மகம் நட்சத்திரம் கூடிய சுபதினத்தில் ஆன்மிக அன்பர்கள் மூலமாக நடக்க உள்ள குருபூஜை விழாவில் பங்கேற்று சத்-குருவின் திருவருளும், அருளாசியும் பெற்று விழாவினை சிறப்பிக்க வேண்டுமாய் ஸ்ரீ சதானந்த சுவாமிகள் அறக்கட்டளை சார்பாகவும், நமது தேடல் உள்ள தேனீக்களாய் குழுவின் சார்பாகவும் அழைக்கின்றோம்.
நம்மைப் பொறுத்தவரை, நாம் உழவார செய்ய பிள்ளையார் சுழி போட்ட இடம், அங்கே தொடங்கிய பயணம் இன்னும் நீண்டு கொண்டே செல்கின்றது. யாரைத் தெரியும், எப்படி செய்ய போகின்றோம் என்று பல கேள்விக்குறியோடு தான் ஆரம்பித்தோம். குருவருளால் சிறப்பாக எந்தவொரு தடையுமின்றி, தடங்களுமின்றி. ஒவ்வொரு உழவாரத்தின் அனுபவமும் நம்மை ஆச்சர்யத்தில் ஆழ்த்தும் படி நடை பெற்று வருகின்றது என்றால், அது குருவருளால் தான். மனதில் ஏகப்பட்ட குழப்பங்கள் உள்ளதா? மனம் சஞ்சலப் படுகிறதா? இதோ வருகின்ற மகம் பூஜைக்கு வாங்க..தெளிவோடு சொல்லுங்க...சுமார் 20 நிமிடம் சதானந்த சுவாமிகள் அதிஷ்டானத்தில் அமர்ந்து தங்களின் நியாயமான கோரிக்கையை பிரார்த்தனையாக வைக்கவும். மற்றதை சத்-குரு பார்த்துக் கொள்வார்.
ஆன்மிகத்தோடு இயற்கை எழில் சூழ்ந்த ஒரு அற்புதமான இடம். மாதம் ஒரு முறையாவது இங்கு வந்து செல்லுங்கள், உங்கள் வாழ்வில் கண்டிப்பாக மாற்றம் பெறுவதை நீங்கள் உணர்வீர்கள். இது போன்ற ஒரு ஜீவ ஆலயம் நம் அருகில் இருப்பது நாம் செய்த புண்ணியமே. இந்த ஜீவ ஆலயத்தில் ஆன்ம லயம் பெற ஒவ்வொரு தமிழ் மாத மகம் பூஜையில் கலந்து குருவிற்கு தொண்டு செய்யுங்கள். உழவாரத்தோடு நாம் இங்கே "தமிழ் கூறும் நல்லுலகம் " என்ற சிந்தனை நிகழ்ச்சியை இங்கே நடத்தினோம். அதன் அனுபவத்தையும் கீழே கொடுத்திருக்கின்றோம்.
அடுத்த உழவாரப் பணி எங்கே? எப்போது ? செய்ய உள்ளோம். நம் பதிவை தொடர்ந்து படித்து வருபவர்கள் இப்போதே ஊகித்து இருக்கலாம். சரி ! அடுத்த பதிவில் உழவார அறிவிப்பு வெளியாகும்.
முந்தைய பதிவுகளுக்கு:-
சதானந்த சுவாமிகள் ஆசிரமத்தில் தமிழ் கூறும் நல்லுலகம் - http://tut-temple.blogspot.in/2017/12/blog-post_26.html
தமிழ் கூறும் நல்லுலகம் -வருக ! வருக ! - http://tut-temple.blogspot.in/2017/12/blog-post_5.html
ஆலயம் காப்போம்...ஆனந்தம் காண்போம் - உழவாரப்பணி அனுபவம் - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_5.html
சங்கடங்கள் தீர்க்கும் சதானந்த ஸ்வாமிகள் ஆசிரமம் - உழவாரப் பணி அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2017/06/blog-post_27.html