Subscribe

BREAKING NEWS

10 August 2018

மீண்டும் மீண்டும் அழைக்கும் பெருங்களத்தூர் சதானந்த சுவாமிகள் - உழவாரப்பணி அறிவிப்பு

 அனைவருக்கும் வணக்கம்.

சென்ற மாதம் கொளத்தூர் திருமால் மருகன் ஆலயத்தில் உழவாரப்பணி சிறப்பாக நடைபெற்றது. எண்ணிக்கை முக்கியமில்லை எண்ணங்களே முக்கியம் என்று மீண்டும் ஒருமுறை நிரூபணமாகி உள்ளது. அட..ஆச்சர்யமாக உள்ளதே..இதே தலைப்பில் "எண்ணிக்கை முக்கியமல்ல...எண்ணங்களே முக்கியம்... உழவாரப் பணி அனுபவம் "என்று ஒரு பதிவு ஏற்கனவே நம் தளத்தில் அளித்துள்ளோம்.என்ன ஆச்சர்யம் என்கின்றீர்களா? இதே திருமால் மருகன் ஆலயத்தில் நடைபெற்ற உழவாரப் பணி அனுபவமே அது. மீண்டும் இந்த முறையும் ஆறே ஆறு பேருடன் உழவாரப் பணி நடைபெற்றது. அந்த அனுபவத்தை தனியாக தருகின்றோம்.

நமக்கு அருகில் இருக்கும் கோயில் பற்றி நமக்கு அதிகம் தெரியாது. அது போல் தான் சதானந்த சுவாமிகள் ஆசிரமம். நீண்ட நாள் கழித்து அங்கு சென்று, பேசிக் கொண்டு இருந்தோம். நம் தளத்திக்கு பிள்ளையார் சுழி போட்டவர் இவர் தான். பிள்ளையார் கொண்டு சித்து ஒன்றை செய்தவரும் இவர் ஆவார். நம்மைப் பொறுத்த வரை இங்கு தான் , இப்படி தான் , இந்த பொழுதில் தான் உழவாரம் செய்ய வேண்டும் என்று நாம் நினைப்பது கூட இல்லை.அவன் பார்த்து நம்மை இழுத்துக் கொண்டிருக்கின்றான். அந்தப் பாதையில் நாம் சென்று கொண்டிருக்கின்றோம்.

அன்றைய தினமும் அப்படியே. ஆசிரம நிர்வாகி ஆனந்த் ஐயாவிடம் பேசிக்கொண்டு இருந்த போது, குழந்தைவேல் சுவாமி அனுபவம் பற்றி கூறினோம். உடனே ஆனந்த் ஐயா அவர்கள் நம் கோயிலிலும் பணி செய்யலாமே என்று அன்பாக கூறினார். சாட்சாத் அந்த பரம்பொருளே நம்மை அழைப்பது போல் இருந்தது.தேதிகளை பார்த்தோம். நம் தளத்தில் புதிதாக அன்பர்கள் இணைந்து உள்ளார்கள்.எனவே ஞாயிற்றுக்கிழமை அன்று மகம் நட்சத்திரம் வரும் நாள் பார்த்து பணி செய்ய அனுமதி கோரினோம், இதோ கிடைத்து விட்டது. அறிவிப்பினை பதிவின் இறுதியில் காண்க.





















இறை அன்பர்களே.

நமது TUT குழுமத்தின்  இம்மாத  உழவாரப்பணி கீழ்க்காணும் நிகழ்வின் படி நடைபெறும்.

உழவாரப்பணி 
அபிஷேகம்,ஆராதனை 
தீபாராதனை 
பிரசாதம் வழங்கல் 

நாள்:12/08/2018 ஞாயிற்றுக்கிழமை 

இடம் :சதானந்த சுவாமிகள் ஆசிரமம், பெருங்களத்தூர் 

நேரம்: காலை 9 மணி முதல் 1 மணி வரை 

தங்களின் வருகையை கண்டிப்பாக உறுதி செய்க.(மதிய உணவு மற்றும் இன்ன பிற ஏற்பாட்டிற்கு எங்களுக்கு உதவியாக இருக்கும்.)

7904612352/9677267266

அனைவரும் வருக! இறையருள் பெறுக !!

- அடுத்த பதிவில் இணைவோம்.

முந்தைய பதிவுகளுக்கு :-

எப்போ அழைப்பீரோ? - உழவாரப்பணி அறிவிப்பு - http://tut-temple.blogspot.com/2018/06/blog-post_22.html

எண்ணிக்கை முக்கியமல்ல...எண்ணங்களே முக்கியம்... உழவாரப் பணி அனுபவம் - http://tut-temple.blogspot.com/2017/10/blog-post_27.html

வாருங்கள்...உளம் ஆற உழவாரப் பணி செய்வோம் - https://tut-temple.blogspot.in/2017/10/blog-post_17.html

சித்த சுத்திக்குச் சில சின்ன விஷயங்கள் - உழவாரப் பணி அறிவிப்பு - https://tut-temple.blogspot.in/2017/09/blog-post_2.html

என் கடன் பணி செய்து கிடப்பதே - உழவாரப் பணி - http://tut-temple.blogspot.in/2017/08/blog-post_24.html

ஜாதகத்தை மாற்றி சாதகமாக்கும் குழந்தைவேலர் - உழவாரப் பணி அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_77.html

ஆலயம் காப்போம்...ஆனந்தம் காண்போம் - உழவாரப்பணி அனுபவம் - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_5.html

சங்கடங்கள் தீர்க்கும் சதானந்த ஸ்வாமிகள் ஆசிரமம் - உழவாரப் பணி அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2017/06/blog-post_27.html

No comments:

Post a Comment