Subscribe

BREAKING NEWS

04 December 2018

கார்த்திகை மாத மோட்ச தீப வழிபாடு அழைப்பிதழ் - 6/12/2018

அனைவருக்கும் வணக்கம்.

நம் தளத்தின் மூலம் நம்மால் முடிந்த அளவில்  அறப்பணிகள், சேவைகள்,பூசைகள் என செய்து வருவது அனைவரும் அறிந்ததே. மாதம் தோறும் அகத்தியர் பெருமானுக்கு ஆயில்ய ஆராதனை செய்து வருகின்றோம். இது அகத்தியர் பெருமானுக்கு மட்டும் நடைபெறுகின்றது என்று நீங்கள் நினைக்க வேண்டாம். நேரில் வந்து பார்த்தால் தான் தெரியும். இது அனைத்து சித்தர்கள், மகான்களுக்கான பூசை. ஆயில்ய ஆராதனையில் சித்தர்கள் போற்றித் தொகுப்பை நாம் ஓதி வருகின்றோம். இதுவே நம்மை வழி நடத்தி வருகின்றது.

இந்த பயணத்தில் நாம் அடுத்து அடி எடுத்து வைத்தது மோட்ச தீப வழிபாடு. சென்ற ஆடி மாதம் கோலாகலமாக சிறப்பாக கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகர் ஆலயத்தில் வழிபாடு நடைபெற்றது. இந்த வழிபாட்டில் நமக்கு நேரிடையாக வந்து , முதல் வழிபாட்டை துவக்கி வைத்த அகத்தியர் அடியார்கள் பாதம் தொட்டு வணங்குகின்றோம். இதோ இந்த மாதம் கார்த்திகை  மோட்ச தீப வழிபாட்டிற்கு அனைவரையும் இந்த பதிவின் மூலம் அழைக்கின்றோம். இப்போது தான் ஆரம்பித்தது போல் இருந்தது. அதற்குள் ஆடி,ஆவணி,புரட்டாசி,ஐப்பசி  என நான்கு  மோட்ச தீப வழிபாடு குருவருளால்  முழுமை பெற்றுள்ளது.

அனைவருக்கும் இங்கே பணிவான வேண்டுகோள் ஒன்றை சமர்ப்பிக்கிறோம். மோட்ச தீப வழிபாட்டின் பதிவுகளை, காணொளிகளை பார்த்து யாரும் தாமாக வழிபாட்டினை செய்ய வேண்டாம். குருவருள் இன்றி இந்த வழிபாடு முழுமை பெறாது. அப்படி இந்த வழிபாட்டை மேற்கொள்ள விரும்புபவர்கள் தங்களுக்கு தெரிந்த அருகில் உள்ள ஜீவ நாடியில் குருவிடம் உத்திரவு பெற்று மேற்கொண்டு வழிபாட்டை செய்யலாம். வேறு ஏதேனும் இந்த வழிபாடு சம்பந்தமாக நம்மை தொடர்பு கொள்ளலாம்.



சரி.சென்ற ஐப்பசி  மாத நிகழ்வின் துளிகளை பார்த்துவிடுவோமா? மோட்ச தீபத்திற்கு அகல் விளக்குகள் வாங்கி தயார் செய்யப்பட்ட காட்சி.





மோட்ச தீபத்திற்கு நாம் சில முன்னேற்பாடுகள் செய்ய வேண்டும். அதில் குறிப்பாக அகல், எள்,பச்சரிசி இவை அடங்கும்.இவற்றை வாங்கி, நன்கு கழுவி காய வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். மிக மிக பொறுமையும் ,சிரத்தையும் அவசியம்.



கோயிலில் விளக்கேற்றும் இடத்தை நன்கு கூட்டி, பெருக்கி , பின்னர் சாணம் கொண்டு மொழுகி வைத்துக் கொள்ள வேண்டும். அடுத்து தீபங்களை தயார் செய்ய வேண்டும். வழக்கம் போல் சிவசங்கர் இந்த சேவை ஆரம்பித்தார்.



தீபத்திரி நன்கு நிமிர்ந்து இருக்கும் படி இருக்க வேண்டும். அன்றைய தினம் அமாவாசை என்பதால் நாம் அன்னதானம் செய்ய ஏற்பாட்டில் இருந்தோம். இரவாகி விட்டால் அனைவரும் உண்டு விடுவார்கள்.. ஒருபுறம் மோட்ச தீப ஏற்பாடு, மறுபுறம் அன்னதான ஏற்பாடு.






சுமார் 10 நபர்களுக்கு உணவு கொடுத்து விட்டு, ஆலயத்திற்கு வந்தோம். நாம் வர தாமதாமானால், நீங்களே ஆரம்பித்து விடுங்கள் என்று சொல்லி சென்றோம். ஆனால் நாம் செல்வதற்கு சரியாக இருந்தது. உடனே கோயில் குருக்களிடம் கூறி விட்டு, விநாயகரை வழிபட்டோம்.










தீபங்கள் அனைத்தும் தயார் செய்யப்பட்ட உடன்.விநாயகர் சன்னதி சென்று வழிபட்டோம். பின்னர் ஒரு சிதறு காய் உடைத்தோம். அகத்தியர் சந்நிதி சென்று அவரிடம் உத்திரவு கேட்டோம். பொதுவாக சில சங்கல்பங்கள் செய்தோம்.




கோயில் குருக்களை முதல் தீபம் ஏற்ற வேண்டினோம்.அவர் சிறிதாய்  ஒரு உரை ஆற்றிவிட்டு முதல் தீபமேற்றினார்.



 இந்த முறை ஏழேழு விளக்குகளாக மூன்று அடுக்குகளில் விளக்கு வைத்துள்ளோம். ஒவ்வொரு வரிசையும் ஒவ்வொரு விதமாக ஏற்ற உள்ளோம். முதல் வரிசை கோயில் குருக்களையும், இரண்டாம் வரிசை ஆடவர்களையும், மூன்றாம் வரிசை மகளிரையும் வைத்து ஏற்றினோம். 






 தீபம் ஏற்றியாகி விட்டது.அடுத்து மந்திர உச்சாடனம் செய்ய உள்ளோம். 






அவ்வப்போது நெய் ஊற்ற வேண்டிய பணியை விஜய் ஆதித்தன் ஐயா அவர்கள் செய்து கொண்டிருந்தார்கள். 











மந்திர உச்சாடனத்தை திரு.சிவசங்கர் செய்தார்கள். இரண்டு மந்திரங்கள் 108 முறை சொல்ல வேண்டும். இரண்டையும் மிக அழகாக பொறுமையாக 108 முறை சொல்லி முடித்தார்கள்.







 அடுத்து ஒவ்வொருவராக வந்து, அவர்களின் முன்னோர்களை நினைத்து வேண்டி, அங்கே பூக்கள் தூவி வழிபாடு செய்ய பணித்தார்கள். 21 தலைமுறை முன்னோர்களின் ஆசி வேண்டி நின்ற ஒவ்வொருவரையும் பார்க்கும் போது, இந்த பூமியில் நாம் பிறந்த நோக்கத்தை இவர்கள் அனைவரும் நிறைவேற்றி வருகின்றார்கள் என்பது உறுதியாக தெரிந்தது.







 அடுத்து உணவு பரிமாறப்பட்டது.






 அனைத்து நிகழ்வுகளும் சிறப்பாக நடந்து கொண்டிருந்தது.மீண்டும் ஒரு முறை நீங்களே பாருங்கள்.



கடைசியாக தாம்பரத்தை சேர்ந்த திரு.தங்கவேல் வந்தார்கள். அவருக்கு பூக்கள் கொடுத்து வழிபாடு செய்ய சொன்னோம். மிக திருப்தியாக இருந்தது.

 இந்த மோட்ச தீப வழிபாடானது மிக மிக உயர்ந்த வழிபாடு.,இத்தகைய வழிபாட்டை நமக்கு பணித்த அனைத்து குருமார்களின் பாதம் பணிகின்றோம். அதே போல் சென்ற பூசையில் பங்கு கொண்டு, சிறப்பாக நடக்க ஒத்துழைப்பு நல்கி உதவிய அனைத்து அன்பர்களின் பாதம் பணிகின்றோம். இந்த மோட்ச தீப வழிபாடு ஒருவரால் நிகழ்த்தப்படுவதன்று. இது ஒரு கூட்டு வழிபாடு. யாரும் நமக்கு அழைத்து சொல்லவில்லை என்று நினைக்காது தாமாக முன்வந்து உதவுங்கள் என்று வேண்டுகின்றோம்.
இனிவரும் பதிவுகளில் அவ்வப்போது நமக்கு கிடைக்கின்ற செய்திகளை இங்கே பகிர்கின்றோம். சரி..இந்த மாத மோட்ச தீப வழிபாடு பற்றி கீழே கண்டு பங்கு பெறவும். வருபவர்கள் தங்களால் முடிந்த அளவில் நெய் மற்றும் எள்ளு வாங்கி கொண்டு வரவும்.

கார்த்திகை மாத மோட்ச தீப வழிபாடு அழைப்பிதழ் - 6/12/2018

மெய் அன்பர்களே.

நிகழும் மங்களகரமான விளம்பி வருடம் கார்த்திகை  மாதம் 20 ஆம் நாள் (06/12/2018) வியாழக்கிழமை  மாலை  5 மணி முதல் கூடுவாஞ்சேரி - மாமரத்து விநாயகர் ஆலயத்தில் அருள்பாலிக்கும் அகத்திய மகரிஷி முன்னிலையில் பித்ருக்களின் ஆசி வேண்டி மோட்ச தீபம் ஏற்றி வழிபாடு செய்ய உள்ளோம். அனைவரும் வருகை புரிந்து முன்னோர்களின் அருளாசி பெறும்படி வேண்டுகின்றோம்.

இந்த முறை மோட்ச தீப வழிபாட்டிற்கு வரும் அன்பர்களுக்கு சித்தன் அருள் வலைப்பூவின் "ஓதியப்பர் பால் கட்டி பிரசாதம்" வழங்கப்படும் 
தொடர்புக்கு : 7904612352/9677267266
tut-temple.blogspot.in
https://www.facebook.com/thedalullathenikalaai/

மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்.

மீள்பதிவாக:-

ஐப்பசி மாத மோட்ச தீப வழிபாடு அழைப்பிதழ் - 7/11/2018 - http://tut-temple.blogspot.com/2018/10/7112018.html


ஆவணி மாத மோட்ச தீப வழிபாடு அழைப்பிதழ் - http://tut-temple.blogspot.com/2018/09/blog-post_7.html

முன்னோர்களின் ஆசி பெற மோட்ச தீப வழிபாடு - http://tut-temple.blogspot.com/2018/05/blog-post_15.html

வளங்களை அள்ளித் தரும் மோட்ச தீப வழிபாடு - http://tut-temple.blogspot.in/2018/05/blog-post_29.html

21 தலைமுறை முன்னோர்களுக்காக மோட்ச தீபம் ஏற்றுவோம் - http://tut-temple.blogspot.in/2018/04/21.html

No comments:

Post a Comment