Subscribe

BREAKING NEWS

03 May 2017

ஆஞ்சநேயருக்கு ஏன் வடை மாலை சாத்துகிறோம் தெரியுமா ?மஹா பெரியவா பதில்..


ஒரு முறை வட நாட்டில் இருந்து ஓர் அன்பர்மஹா பெரியவாளைத் தரிசிக்க வந்தார்.மனம் குளிரும் வண்ணம் அவரது தரிசனம் முடிந்த
பிறகு, சற்றே நெளிந்தவாறு நின்றார்.இவரது மனதில் ஏதோ கேள்வி இழையோடுகிறது போலும் என்று தீர்மானித்த பெரியவா, “என்னசந்தேகம். கேளுங்கோ” என்றார்.அந்த வட நாட்டு அன்பருக்கு ஆஞ்சநேயர் குறித்த ஒரு சந்தேகம் நெடு நாட்களாகவே இருந்து
வந்தது.இது குறித்துப் பலரிடமும் விளக்கம்கேட்டு விட்டார்.ஆனால் எவரிடம் இருந்தும்சரியான பதில் வரவில்லை.




அவர், அந்தசந்தேகத்தை மஹா பெரியவாளிடம்கேட்கலாமா என்று யோசித்துக் கொண்டிருந்தபோதுதான் , ஸ்வாமிகளே உத்தரவு கொடுத்துவிட்டார்.ஆஞ்சநேயரைப் பற்றி எனக்கு ஒரு சந்தேகம்…”
இழுத்தார் அன்பர்.“வாயுபுத்திரனைப் பத்தியா… கேளேன்”  என்றார்

ஸ்வாமிகள்.“ஸ்வாமி..  ஆஞ்சநேயர் பலருக்கும் இஷ்டதெய்வமாக இருக்கிறார்.  எல்லாருமே அவரை வணங்கி அருள் பெறுகிறார்கள்.  ஆனால்அவருக்கு அணிவிக்கப்படும் மாலை பற்றித் தான்

என் சந்தேகம்….”பெரியவா மெளனமாக இருக்கவே… அன்பரே தொடர்ந்தார்:அனுமனுக்குத் தென்னிந்தியாவில் காரமானமிளகு கலந்த வடை மாலை சாற்றுகிறார்கள்.ஆனால் நான் வசிக்கும் வட இந்தியாவிலோ ஜாங்கிரி மாலை சாற்றுகிறார்கள்.  ஏன் இப்படி
வித்தியாசப்படுகிறது ?”பதிலுக்காக மஹா பெரியவாளையே பார்த்துக்கொண்டிருந்தார் வட நாட்டில் இருந்து வந்த
அன்பர்.  தன்னுடைய நீண்ட நாளைய
சந்தேகத்துக்கு, பெரியவாளிடம் இருந்தாவதுதகுந்த பதில் வருமா என்கிற எதிர்பார்ப்பு அவரதுமுகத்தில் இருந்தது.
கேள்வி கேட்ட வட நாட்டு அன்பர் மட்டுமல்ல…பெரியவா சொல்லப் போகும் பதிலுக்காக அன்றுஅங்கு கூடி இருந்த அனைவருமே ஆவலுடன்இருந்தனர்.ஒரு புன்முறுவலுக்குப் பிறகு பெரியவா பதில்
சொல்ல ஆரம்பித்தார்.“பெரும்பாலோர் வீட்டில் கைக்குழந்தைகள்
சாப்பிடுவதற்கு அடம் செய்தால்,  வீட்டுக்குவெளியே குழந்தையை இடுப்பில் தூக்கிக்கொண்டு வந்து,  ‘அதோ பார் நிலா…’ என்றுசந்திரனை அந்தக் குழந்தைக்கு வேடிக்கை காட்டி
உணவை சாப்பிட வைப்பார்கள் பெண்கள்.அழகான நிலாவையும் வெளிக்காற்றையும்சுவாசிக்க நேரும் குழந்தைகள் அடம் பண்ணாமல்சமர்த்தாக உணவை சாப்பிட்டு விடும் .சம்பந்தப்பட்ட அம்மாக்களுக்கும் இதுசந்தோஷத்தைத் தரும்.உங்களில் பலர் வீடுகளிலும் இது நிகழ்ந்திருக்கும்.சாதாரண குழந்தைகளுக்கு  நிலா விளையாட்டுப்பொருள் என்றால், ராமதூதனான அனுமனுக்கு
சூரியன் விளையாட்டுப் பொருள் ஆனது.  அதுவும்
எப்படி ?  பார்ப்பதற்கு ஏதோ ஒரு பழம் போல்காட்சி தந்த சூரியனை அடுத்த கணமே தன்கையில் பிடித்துச் சாப்பிட வேண்டும் என்று தீராதஆசை ஏற்பட்டது அனுமனுக்கு.அனுமன் கைக்குழந்தையாக விளையாடிக்கொண்டிருந்தபோது வானத்தில் செக்கச்செவேல்
 என்று ஒரு பழம் போல்  ‘ஜிவுஜிவு’  என்றுதோற்றமளித்த சூரியன்,  அவரை மிகவும் கவர்ந்துவிட்டது.  மனித வாழ்க்கையின் ஜீவாதாரத்துக்குக்காரணமான சூரியனை,  சாப்பிடுவதற்கு உகந்தஒரு பழம் என்று நினைத்து விட்டார் அனுமன்.
வாயுபுத்திரன் அல்லவா ?  அடுத்த கணமே அதுதன் கையில் வந்து விட வேண்டும் என்றுவிரும்பினார்.  வாயு வேகத்தில் வானத்தில்
பறந்தார்.  பிறந்து சில நாட்களே ஆன ஒருபச்சிளங்குழந்தை, சூரியனையேவிழுங்குவதற்காக இப்படிப் பறந்து செல்வதுகண்டு தேவர்கள் திகைத்தனர்.  வாயுபுத்திரனின்வேகத்தை எவராலும் தடுக்க முடியவில்லை.அதே நேரத்தில் ராகு கிரஹமும் சூரியனைப்
பிடித்து கிரஹண காலத்தைஉண்டுபண்ணுவதற்காக நகர்ந்து கொண்டிருந்தது.ஆனால், அனுமன் சென்ற வேகத்தில்  ராகுபகவானால் செல்ல முடியவில்லை.  சூரியனைப்
பிடிப்பதற்காக நடந்த இந்த ரேசில் அனுமனிடம்ராகு பகவான் தோற்றுப் போனார்.  இந்தநிகழ்ச்சியின் முடிவாக, அனுமனுக்கு ஒரு
அங்கீகாரம் கொடுத்தார் ராகு பகவான்.அதாவது, தனக்கு மிகவும் உகந்த தானியமானஉளுந்தால் உணவுப் பண்டம் தயாரித்து எவர்
ஒருவர் அனுமனை வணங்குகிறாரோ , அவரைஎந்தக் காலத்திலும் தான் பீடிப்பதில்லை எனவும்,தன்னால் வரும் தோஷங்கள் அனைத்தும்நிவர்த்தி ஆகி விடும் எனவும் ராகு பகவான்
அனுமனிடம் தெரிவித்தார்.  இந்த உணவுப்பண்டம் எப்படி இருக்க வேண்டும் என்றும் ராகுபகவான் அனுமனிடம் சொன்னார்.  அதாவது தன்உடல் போல் (பாம்பு போல்) வளைந்து இருக்கவேண்டும் எனவும் சொன்னார்.  அதைதான்உளுந்தினால் ஆன மாலைகளாகத் தயாரித்துஅனுமனுக்கு சமர்ப்பிக்கிறோம்.  ஆக, ராகு
தோஷத்தால் பாதிக்கப்பட்டிருப்பவர்  உளுந்துதானியத்தால் ஆன வடை மாலைகளைஅனுமனுக்குச் சார்த்தி வழிபட்டால்,  ராகு
தோஷம் நிவர்த்தி ஆகி விடும் என்பது இதில்இருந்து தெரிகிறது.
இப்போது மிளகு வடை மற்றும் ஜாங்கிரிவிஷயத்துக்கு வருகிறேன்.
வடையாகட்டும்… ஜாங்கிரி ஆகட்டும்.இரண்டுமே உளுந்தினால் செய்யப்பட்டவை தான்.தென்னிந்தியாவில் இருப்பவர்கள் அனுமனுக்குஉளுந்து வடை மாலை சாற்றுகிறார்கள்.  இங்கேஉப்பளங்கள் அதிகம் உள்ளன.  இங்கிருந்து பலவெளி நாடுகளுக்கும் உப்பு அதிக அளவில்ஏற்றுமதி ஆகிறது.  ஆகவே, உப்பும் உளுந்தும்கலந்து கூடவே மிளகும் சேர்த்து பாம்பின் உடல்போல் மாலையாகத் தயாரித்து, அனுமனுக்குசார்த்தி வழிபடும் வழக்கம் நம்மூரில் அதிகம்உண்டு.வட இந்தியாவில் பல மாநிலங்களில் கரும்புவிளைச்சல் அமோகமாக இருக்கிறது.  சர்க்கரைபெருமளவில் அங்கு உற்பத்தி ஆகி,
வெளிநாடுகளுக்கெல்லாம் ஏற்றுமதி ஆகிறது.
தவிர, வட இந்தியர்கள் இனிப்புப் பண்டங்களைஅதிகம் விரும்பிச் சாப்பிடுபவர்கள்.   அதுவும்,அவர்களுக்குக் காலை நேரத்திலேயே  — அதாவதுபிரேக் ஃபாஸ்ட் வேளையில் இனிப்புப்
பண்டங்களையும் ரெகுலர் டிஃபனோடு சேர்த்துக்கொள்வார்கள்.  அவர்கள் இனிப்பு விரும்பிகள்.எனவேதான், அவர்கள் உளுந்தினால் ஆனஜாங்கிரி மாலையை அனுமனுக்கு சாரதிவழிபடுகிறார்கள்.
எது எப்படியோ… அனுமனிடம் ராகு பகவான்கேட்டுக் கொண்டபடி உளுந்து மாலைகள்அனுமனுக்கு விழுந்து கொண்டே இருக்கின்றன.
அது உப்பாக இருந்தால் என்ன… சர்க்கரையாகஇருந்தால் என்ன..  மாலை சார்த்தி வழிபடும்பக்தர்களுக்கு ராகு தோஷம் தொலைந்து
போனால் சரி”  என்று சொல்லி விட்டு, இடிஇடியெனச் சிரித்தார் மஹா பெரியவா.பெரியவாளின் விளக்கமான இந்த பதிலைக்கேட்ட வட நாட்டு அன்பர் முகத்தில் பரவசம்.சடாரென மகானின் திருப்பாதங்களுக்கு ஒருநமஸ்காரம் செய்து தன் நன்றியைத் தெரிவித்தார்.கூடி இருந்த அநேக பக்தர்களும் பெரியவாளின்
விளக்கத்தால் நெகிழ்ந்து போனார்கள்.