Subscribe

BREAKING NEWS

25 May 2017

எல்லாம் என்னால் முடியும் என்ற அகந்தையில் உன்னை மறந்தேன்.!!!


மஹாபாரத யுத்தம் --

தன் மகன் அபிமன்யு இறப்புக்கு துணை நின்ற ஜெயத்ரனை இன்றைய சூர்ய அஸ்தமனத்துக்குள் வதைப்பேன் அது முடியாது போனால் தீக்குளித்து என் உயிர் மாய்ப்பேன் என்று  சபதம் செய்தான் போர்க்களத்தில் அர்ஜுனன் ,



இதை கேட்ட ஜெயத்ரன் போர்க்களத்தில் பாண்டவர்கள்  எவர் கண்ணுக்கும் சிக்காமல் மறைவாக இருந்தான்,,துரியோதனன்,,கர்ணன் போன்றோர் அவனுக்கு காவலாக இருந்தனர்,,மாலைவேளை நெருங்கியது அர்ஜுனன் பார்வைக்கு ஜெயத்ரன் தட்டுப்படவே இல்லை ,,அர்ஜுனனின் மனம் பதைபதைத்தது,,அருகே இருந்த கிருஷ்ணரிடம் அப்போதுதான் யோசனை கேட்டான் கிருஷ்ணா சூரியன் அஸ்தமிக்க போகிறதே எப்படி ஜெயத்ரனை கொல்வேன்....மேலும் சில நொடிகள் நகர்ந்தன ,,,தன் கையில் இருந்த வில்லையும் ,,அம்பையும் கீழே போட்டுவிட்டு ,


பரந்தாமா என்னை காப்பாற்று அனைத்தும் உன் செயல் ,,,என் செயலில் எதுவும் இல்லை என்று பணிந்து அழுதான்,,,,அதுவரை அமைதியாக இருந்த கிருஷ்ணர் தன் சக்ராயுதத்தை ஏவி சூரியனை மறைத்தார் மாயவன் மாயை அது என்று அறியாமல் ஜெயத்ரன் வெளியே வந்தான் கௌரவர்கள் சந்தோச குரல் எழுப்பினர் சூரியன் அஸ்தமித்துவிட்டான் இனி ஜெயத்ரனை கொல்ல முடியாத அர்ஜுனன் தீக்குளிக்க வேண்டியதுதான் என்று ஆரவாரித்தனர் ,ஜெயத்ரனும் அவர்களோடு சேர்ந்து ஆரவாரித்தான் ,,,,,அப்போது கிருஷ்ணர் பார்த்திபா ,,அதோ பார் ஜெயத்ரன் தலை தெரிகிறது உன் ஒரே அம்பால் அவன் தலையை கொய்து அது கீழே விழாமல் அருகில் உள்ள சமந்த பஞ்சகத்தில் ஜபம் செய்து கொண்டிருக்கும் விருத்தட்சரனின் மடியில் விழும்படி அம்புகளாலே அதை தள்ளு ம்ம் சீக்கிரம் என்றான் ,,,,,,,அர்ஜுனனும் அப்படியே செய்தான் ,,,,அந்த சமயம் விருத்தட்சரன் பூமியில் அமர்ந்து சந்தியோபாஸனம் செய்து கொண்டிருந்ததால் ஜெயத்ரன் தலை தன் மடியில் விழுந்ததை உணரவில்லை ,,,,பிறகு சத்தியோபாஸனம் முடிந்து அர்க்கயம் கொடுப்பதற்காக எழுந்த போது,,,,தனது மடியில் எதோ கனமாக இருப்பதை உணர்ந்து அதை கீழே தள்ளினார் ,,,கொய்யப்பட்ட ஜெயத்ரன் தலை பூமியில் விழுந்த அடுத்த கணம் விருத்ராட்சனின் தலை வெடித்து சிதறியது ,,அதிர்ந்து போன அர்ஜுனன் கிருஷ்ணரை பார்த்தான் ,,அவனது பார்வையின் நோக்கத்தை புரிந்து கொண்டு விடை சொல்லலானார் கிருஷ்ணர்-பார்த்திபா ,,,ஜெயத்ரனின் அப்பாதான் விருத்ராட்சணன் தன் கோரமான தவ பயனால் ஜெயத்ரனை பெற்றார் ,,,அவன் பிறக்கும் போது ஒரு அசிரி,,,,,உன் புத்திரன் மகா வீரனாக எல்லோராலும் போற்ற படுவான் அதே சமயம் மிக்க வலிமையுடைய ஒரு வீரனால் உன் மகன் தலை கொய்யப்பட்டு மாள்வான் இது சத்யம் என்றது ,அதை கேட்ட விருத்ராட்சணன் ,,,எந்த வலிமை மிக்க வீரன் என் மகன் தலையை கீழே விழ செய்கிறானோ அதே நேரம் அவனது தலையும் சுக்கு நூறாக வெடித்து சிதறவேண்டும் இது நான் செய்த தவத்தின் மீது ஆணை என்றார் ,,,,,,,உன்னால் அறுபட்ட ஜெயத்ரனின் தலை கீழே விழுந்திருந்தால் உன் தலை அல்லவா வெடித்து சிதறியிருக்கும் அதனால் தான் சத்யம் செய்த விருத்ராட்சன் மடியில் ஜெயத்ரன் தலை விழும்படி உன்னை செய்ய சொன்னேன் என்றான் புன்னகையுடன் ,,,இதை கேட்ட அர்ஜுனன் கண்ணீருடன் கிருஷ்ணா எனக்கு எப்பொழுதும் நீ துணை இருக்கிறாய் என்பதை மறந்து ,,,,நான்,,,, என்னால் முடியும் என்கிற அகந்தையால் உன்னை மறந்து விட்டேன் என்னை மன்னித்து அருள்வாயாக என்று மண்டியிட்டான்  நண்பர்களே  எந்த ஒரு செயலையும்  இறை அன்போடு நினைத்து செய்யுங்கள் ,,,,அவனது அருளால் எல்லோருக்கும் அது  நன்மையாகவே  நடக்கும்.

நன்றி:-திருமதி,ரமா சங்கர்.

No comments:

Post a Comment