Subscribe

BREAKING NEWS

22 April 2017

குறள்.09



கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.
சொல்லுரை:
கோளில்- தனக்குரிய புலன் தன்மைகளை கொண்டிராத
பொறியின் - ஐம்பொறிகளின்
குணமிலவே- பயனற்ற தன்மைபோல
எண்குணத்தான் - எண்வகைக் குணங்களையுடைய இறைவனின்
தாளை - திருவடிகளை
வணங்காத் - வணங்காத
தலை - தலைகளும் பயன் அற்றவை.
பொருளுரை:
தனக்குரிய புலன் தன்மைகளை கொண்டிராத ஐம்பொறிகளின் பயனற்ற தன்மைபோல எண்வகைக் குணங்களையுடைய இறைவனின் திருவடிகளை வணங்காத தலைகளும் பயன் அற்றவை.

No comments:

Post a Comment