Subscribe

BREAKING NEWS

14 April 2017

குறள் 1:


அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு
மு.வ உரை:
எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாக கொண்டிருக்கின்றன. அதுபோல உலகம் கடவுளை அடிப்படையாக கொண்டிருக்கிறது.

*தமிழ் புத்தாண்டு வாழ்த்து*
வையகம் செழிக்க வானம்
பொழிக !
வானவர் தேவர் வாழ்த்துச்
சொல்க !
ஏரி குளங்கள் எங்கும் நிறைக !
ஆறு பெருக அணைகள்   நிறைக !
மரங்கள் பூத்திட மழை எங்கும் பொழிக !
நல்லோர் வாழ்த்த நல்லாட்சி வருக !
நாட்டு மக்கள் நலம் பல பெருக !
நட்பும் சுற்றமும் நலமுடன்
வாழ்க !
தேசமெங்கும் செழிக்க மக்கள்
நேசமுடன் வாழ்க!
சிறுவர் விரும்பி செந்தமிழ்
படிக்க !
நிலமகள் குளிர்ந்து விளை ச்சல் பெருக !
அனைத்து மக்களும் அன்பால் இணைய !
இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

No comments:

Post a Comment