Subscribe

BREAKING NEWS

26 December 2017

கார்த்திகை காதில் கனமகர குண்டலம்போல் (1)


குருவின் கருணையினால் கடந்த ஞாயிற்றுக்கிழமை குன்றத்தூர் கோவிந்தன் தரிசனம் பெற்று, அங்கே உழவாரம் செய்தோம். மேலும் சென்ற மாதம் கந்தலீஸ்வரர் கோயிலில் செய்த உழவாரப் பணி அனுபவத்தை பதிவாக தர விரும்பினோம். அந்த உழவாரப் பணி மறக்க முடியாத ஒன்று, ஒரே கல்லுல ரெண்டு மாங்கா என்று சொல்வார்கள். நம்மைப் பொறுத்த வரை ஒரே கல்லுல மூன்று மாங்கா..பின்னே..
உழவாரப் பணி நிறைவில் மூன்று தரிசனங்கள் பெற்றோம், குன்றத்தூர் கந்தலீஸ்வரர், குன்றத்தூர் முருகன் ,குன்றத்தூர் சேக்கிழார் பெருமான் என்று..இன்னும் அந்த தித்திப்பு மனதுள் உள்ளது குன்றத்தூர் கோவிந்தன் தரிசனம் பெற இயலவில்லை. அதனை இதோ வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு செய்து முடித்தோம். சரி ..நாம் விசயத்திற்கு வருவோம். இன்றைய பதிவில்  TUT குழுவின் மூலம் நாம் பெற்ற கார்த்திகை தீபம் தரிசனத்தை தர விழைகின்றோம்.


குன்றத்தூர் உழவாரப் பணி முடித்ததும், ஆலய நிர்வாகி அவர்கள், தீபத்திற்கு குன்றத்தூர் வருமாறு நம்மைப் பணித்தார். நாம் திருஅண்ணாமலை சென்று கார்த்திகை தீபம் காண விரும்புவதாய் சொல்லி இருந்தோம். திருஅண்ணாமலை செல்லாது இருந்தால் குன்றத்தூர் வருவதாக சொல்லி இருந்தோம். கடைசியில் திருஅண்ணாமலை தீப தரிசனம் செல்ல இயலவில்லை. நம் மகளிர் குழுவிடம் பேசி, மாலை குன்றத்தூர் கோயிலில் தீபம் ஏற்ற இலுப்ப எண்ணெய் வாங்கி வருமாறு கூறினோம். அவர்களும் சரி என்றார்கள். திருமதி பரிமளம், திருமதி சுபாஷினி, திருமதி மாலதி மூவரும் குன்றத்தூர் கந்தலீஸ்வரர் கோயிலுக்கு வருவதாக சொன்னார்கள்.

நாமும் அன்று மாலை சரியாக 5 மணி அளவில் கோயிலை அடைந்தோம். மூவரும் சற்று நேரத்தில் வந்து விட்டார்கள்.  நம் கையில் என்ன இருக்கின்றது? நடப்பதெல்லாம் அவனின் அருளன்றோ ! என்று நினைக்க தோன்றியது. திருமதி பரிமளம் அவர்கள், சென்ற மாத உழவாரம் போது, அறுபத்து மூவர் சன்னிதியை தூய்மையாக்கி விட்டு, அப்படியே ஒவ்வொரு அடியார்க்கும் விளக்கு போட்டால் எப்படி இருக்கும் என்று மனதுள் நினைத்தார்களாம். இதோ இன்றைய தீபத் திருநாளில் கனவு நனவானது.




கோயிலை அடைந்ததும், திரு விஜயகுமார் அவர்களிடம் பேசி, தீபம் ஏற்ற ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டோம். ஈசனார் தரிசனம் பெற்ற பின்பு, அப்படியே கோயிலின் வெளியே வந்து, விளக்கு எடுத்து வைத்தல்,திரி போடுதல் போன்ற வேலை ஆரம்பமானது.







 





நேரம் ஆக, ஆக துள்ளாத மனமும் துள்ளியது. பின்னே..முதன் முதலாய் கார்த்திகை தீபம் கோயிலில் வந்து கொண்டாட இருக்கின்றோம், மேலும் நம்முடன் TUT குழுவும் உள்ளது என்னும் போது , மனம் துள்ளுவதில் சந்தேகம் இல்லையே. இதோ அடியார் ஒருவர் கோலம் இட்ட காட்சி. நம்மை வரவேற்கும் அழகுக் கோலம் 








கோயிலின் வெளியே ஒரு கல்வெட்டு இருந்தது. அதனை அங்கிருந்த மூதாட்டி தொட்டு வணங்கினார்கள். நாம் சென்று கேட்டபோது, விளக்கம் சொல்லவில்லை, மாறாக அனைத்தும் இதில் அடக்கம் என்றார்கள், நாமும் சென்ற முறை வந்த உழவாரப் பணியின் போது, இதனை கவனிக்க வில்லை, இதோ இன்று கவனித்துப் பார்த்தோம், கல்வெட்டு எழுத்துக்கள் நமக்குப் புரியவில்லை


சொக்கப் பனை ஏற்ற தயார் 

தமிழ் மாதங்களில் எட்டாவது மாதமான கார்த்திகை பல்வேறு சிறப்புகளை கொண்டுள்ளது. அக்னி ரூபமாய் போற்றப்படும் சிவனுக்கும், அக்னியில் உதித்த ஆறுமுகனுக்கும், காக்கும் கடவுளான விஷ்ணுவுக்கும் உகந்த மாதமாக கார்த்திகை மாதம் பக்தர்களால் போற்றப்படுகிறது. அந்த வரிசையில் இங்கு நாம் சிவனுக்கு ஏற்றப் படும் தீபம் பார்க்க வந்திருக்க நாம் நினைத்தோம். ஆனால் நடந்தது வேறு, அறுமுகனுக்கு ஏற்றப்படும் தீப தரிசனமும் நாம் பெற்றோம்.





                                                  இலுப்பை எண்ணெய் சேர்க்கப்பட்டது

                                            
                                    தீபம் ஏற்ற அகல் விளக்குகள் தயார் செய்த காட்சி

                                     
                                              அகல்களை துடைக்க நடக்க உள்ள போட்டி 


 ஒவ்வொரு அடியாரிடமும் ஒவ்வொரு அகல், எண்ணெய் ஊற்ற, மற்றொருவர் வந்து திரி வைத்து, லேசாக கற்பூரம் வைத்த காட்சி 


  முதல் சுற்று முடிவில், அகல் தீர்ந்து விட்டது, இதோ மறுபடியும் வந்து, அகல்கள் துடைக்கப்பட்டன.

                                     சேக்கிழார் பெருமானுக்கு அகல் வைத்த காட்சி




                          நவகிரக சன்னதியில் தீபம் ஏற்ற ஆயத்தப் பணிகள் ஆரம்பம்



கோயிலின் மேலே தீபம் ஏற்ற தயார் செய்த காட்சி 
 


சைதாப்பேட்டை பகுதியில் இருந்து வரும் அடியார் இவர், ஒவ்வொரும் நாயன்மாரின் பிறந்த நட்சத்திரத்தில் இங்கு வந்து, அன்றைய தினம் அடியார்களை தொழுது, தூப தீபம் காட்டி வழிபடுவது இவரது வழக்கம். இதனை நாம் கேட்ட போது மெய் சிலிர்த்தது. அடுத்த சந்திப்பில் இவரிடம் நிறைய விசயங்கள் கேட்க வேண்டும் என்று மனதில் விரும்பினோம். நேரம் மாலை 5:50 மணியை நெருங்கி விட்டது.  நாம் கொடுத்த இலுப்பை எண்ணையை அகலில் ஊற்றிவிட்டு, மீதம் எண்ணையை முருகன் கோவிலில் சேர்ப்பிக்க உத்தரவானது. சரி ! என்று கூறிவிட்டு, நாம் குன்றத்தூர் முருகன் கோவில் நோக்கி புறப்பட்டோம். வெளியே வந்து பார்த்தால், குன்றத்தூர் முழுதும் ஒளி வெள்ளத்தில் மிதந்தது.







 ஒரே பதிவாக , கார்த்திகை தீப அனுபவத்தை தர விரும்பி தொடங்கினோம். ஆனால் பதிவின் நீளம் கருதி குன்றத்தூர் முருகன் கோயில் அடிவாரத்தில் நாம் இந்த பதிவை நிறைவு செய்கின்றோம். அடுத்த பதிவில் மீண்டும் தொடர்வோம். என்னவென்று தெரியவில்லை, குன்றத்தூர் பதிவு என்றாலே தொடர்பதிவு தான் போலிருக்கின்றது.


முந்தைய பதிவுகளுக்கு :-

பெருமையம் சதுரகிரிக் குள்ளேயப்பா - (2)  - http://tut-temple.blogspot.in/2017/12/2_24.html

அகத்தியரைத் துதி, அவர் மாற்றுவார் உன் விதி- (2) - http://tut-temple.blogspot.in/2017/12/2.html

 மருதேரியில் மரீசி மகரிஷியின் வருகை - http://tut-temple.blogspot.in/2017/12/blog-post_18.html
போற்றினால் நமது வினை அகலுமப்பா!  - http://tut-temple.blogspot.in/2017/12/blog-post_15.html
 வாய் வாழ்த்தாவிட்டாலும் வயிறு வாழ்த்தும் - AVM அன்னதான அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2017/12/avm.html

 செண்பகப்பொழில் தாயே போற்றி !  - http://tut-temple.blogspot.in/2017/12/blog-post_13.html

 பனப்பாக்கம் - அகத்திய பெருமான் 108 கலச பூஜை விழா - http://tut-temple.blogspot.in/2017/12/108.html
 
குன்றத்தூர் கோவிந்தன் காண வாருங்கள் - உழவாரப் பணி அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2017/12/blog-post_95.html

அருள்மிகு பிருகு மகரிஷி குரு விழா - அகண்ட சோதி தரிசனம் காண வாரீர் - http://tut-temple.blogspot.in/2017/12/blog-post_11.html

  மருதேரியில் ஸ்ரீ பதஞ்சலியின் ஆசிகள் - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_15.html

பாம்பாட்டி சித்தர் பெருமைகள்... - http://tut-temple.blogspot.in/2017/06/blog-post_62.html

பிருகு முனிவர் ஆசிரமத்தில் நம் வாசகரின் மற்றுமோர் நேரடி அனுபவங்கள்.. - http://tut-temple.blogspot.in/2017/05/blog-post_30.html

அருள்மிகு பிருகு மகரிஷி சித்தர் குடில் தரிசனம்... - http://tut-temple.blogspot.in/2017/04/test.html

அண்ணாமலையானே...எங்கள் அன்பில் கலந்தோனே...(3) - http://tut-temple.blogspot.in/2017/12/3.html

 ஒற்றியூர் தொழ, நம் வினை ஓயுமே - முக்கிய அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2017/12/blog-post.html

ஆலய(ன்ம) தரிசனம் எனும் அற்புத மருந்து - http://tut-temple.blogspot.in/2017/11/blog-post_46.html

கிரிவலம் - திருஅண்ணாமலை சிறப்புப் பதிவு (2) - http://tut-temple.blogspot.in/2017/11/2.html

ஜீவனில் உள்ள சிவத்தை உணர - சிவவாக்கியம் - http://tut-temple.blogspot.in/2017/11/blog-post_28.html

திருஅண்ணாமலையாருக்கு அரோகரா ! - http://tut-temple.blogspot.in/2017/11/blog-post_76.html

சுகம் தரும் சுருட்டப்பள்ளி ஈசனே போற்றி - http://tut-temple.blogspot.in/2017/11/blog-post_24.html

வேதநாராயணப் பெருமாள் பாதம் போற்றி! - http://tut-temple.blogspot.in/2017/11/blog-post_23.html

தங்கச் சாலையில் மின்னிக் கொண்டிருக்கும் ஒரு வைரம் - http://tut-temple.blogspot.in/2017/11/blog-post_96.html

துர்குணங்கள் நீங்கி சற்குணங்கள் பெற - பனப்பாக்கம் வருக ! - https://tut-temple.blogspot.in/2017/11/blog-post_21.html

நாள்தோறும் ஓதுவோம்! ஓதியப்பரின் புகழை !! - https://tut-temple.blogspot.in/2017/11/blog-post_39.html

ஓதிமலை ஸ்ரீகுமார சுப்ரமண்யருக்கு அரோகரா! - https://tut-temple.blogspot.in/2017/10/blog-post_18.html

பேசும் முருகன் தரிசனம் பெற - ஓதிமலைக்கு வாருங்கள் - https://tut-temple.blogspot.in/2017/10/blog-post_5.html

சித்த சுத்திக்குச் சில சின்ன விஷயங்கள் : TUT & AVM அன்னதான நிகழ்வின் துளிகள் - https://tut-temple.blogspot.in/2017/10/tut-avm.html

பெரியபுராணம் கூறும் பூரண தானம் & அன்ன தான அறிவிப்பு - https://tut-temple.blogspot.in/2017/09/blog-post_12.html

AVM & TUT இணைந்த அன்னதான நிகழ்வின் துளிகள் - யார்க்கும் இடுமின், அவர் இவர் என்னன்மின் - http://tut-temple.blogspot.in/2017/08/avm-tut.html

ஆடி அமாவாசை - பூரண தான நிகழ்வு - 22/07/2017 - http://tut-temple.blogspot.in/2017/07/22072017.html

உங்கள் உணவிலிருந்து ஒரு கவளம் கொடுங்கள் போதும் - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_80.html

என் கடன் பணி செய்து கிடப்பதே - உழவாரப் பணி - https://tut-temple.blogspot.in/2017/08/blog-post_24.html

ஜாதகத்தை மாற்றி சாதகமாக்கும் குழந்தைவேலர் - உழவாரப் பணி அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_77.html

ஜாதகத்தையே மாற்றும் குழந்தைவேலர்... - http://tut-temple.blogspot.in/2017/05/blog-post_22.html

ஆலயம் காப்போம்...ஆனந்தம் காண்போம் - உழவாரப்பணி அனுபவம் - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_5.html

சங்கடங்கள் தீர்க்கும் சதானந்த ஸ்வாமிகள் ஆசிரமம் - உழவாரப் பணி அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2017/06/blog-post_27.html

எங்களின் ஓராண்டு பயணம்..- http://tut-temple.blogspot.in/2017/05/blog-post_18.html


No comments:

Post a Comment