Subscribe

BREAKING NEWS

28 May 2018

சண்முகா சரணம்

முருகா!

மு’ என்றால் ” முகுந்தன்

‘ரு’ என்றால் ” ருத்ரன் ”

‘கா’ என்றால் ” பிரம்மா ”

இதனால் “முருகா ” என்ற நாமத்தைச் சொன்னால் மூன்று பெருங்கடவுள்களின் பெயர்களைச் சொன்ன புண்ணியம் கிடைக்கும்.

இது மட்டுமல்ல.

” முகுந்தன் ” தமது மார்பில் மகாலட்சுமியை வைத்துக் கொண்டிருக்கிறார்.

” ருத்ரன் ” எனும் சிவபெருமான் உமையவளுக்கு உடலில் ஒரு பாகத்தையே கொடுத்திருக்கிறார்.

” பிரம்மா ” தமது மனைவியான சரசுவதியை நாக்கில் வைத்திருக்கிறார்.

இதனால் ” முருகா ” என்றால் ஆறு பேர்களைத் தொழுத புண்ணியம் கிடைக்கிறது.

இதனால்தான் முருகா என்பவை நாமங்கள் என்றார் அருணகிரிநாதர்.

முருகா!முருகா!முருகா!முருகா!முருகா

முருகா!முருகா!முருகா!முருகா!முருகா

நாளெல்லாம் நின் புகழை பாட போதுமா?

இன்று வைகாசி விசாகம். நமக்கு கிடைத்த இன்றைய கொண்டாட்டங்களை ஒரு சேர இங்கே தொகுத்து தருகின்றோம்.




அமெரிக்காவில் உள்ள மிட்சிகன் மாகாணத்தில் உள்ள ஸ்ரீ பராசக்தி ஆலயத்தில் நடைபெற்ற வைகாசி விசாக காட்சிகள் மேலே 

கூடுவாஞ்சேரி வேலி அம்மன் திருக்கோயிலில் இன்று நாம் பெற்ற தரிசனம்.




  வைகாசி விசாகம் அன்று பிரம்மமுகூர்த்த வேளையில் (காலை 4.30-6) மணிக்குள் எழுந்து நீராடவேண்டும். நாள் முழுவதும் விரதம் இருக்க முடிந்தவர்கள், ஒருவேளை மட்டும் உணவு உண்ணலாம். மற்றவர்கள் பால், பழம் சாப்பிட்டு விரதம் மேற்கொள்ளலாம். முருகனுக்குரிய ஆறெழுத்து மந்திரமான ‘ஓம் சரவணபவ’ என்ற மந்திரம், ‘ஓம் சரவணபவாய நம’, ‘ஓம் முருகா’ ஆகிய மந்திரங்களில் ஏதாவது ஒன்றை நாள் முழுவதும் ஜெபித்து வர வேண்டும்.

திருப்புகழ், கந்தசஷ்டி கவசம், கந்தகுரு கவசம், சண்முக கவசம் பாடல்களில் ஏதேனும் ஒன்றை காலையிலும், மாலையிலும் பாராயணம் செய்யலாம். முருகன் கோவிலுக்குச் சென்று விளக்கேற்றி வழிபாடு செய்யவேண்டும். முருகனின் திருத்தலங்களுக்கு அருகில் இருப்பவர்கள் கோவிலுக்கு குழுவாகச் செல்லலாம். முருகன் கோவில் அமைந்துள்ள மலையை வலம் வந்தால் மிகுந்த புண்ணியம் உண்டாகும். இந்த விரதம் இருப்பவர்களுக்கு புத்திரதோஷம் நீங்கும். குழந்தை இல்லாதவர்களுக்கு விரைவில் மழலைச்செல்வம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

இன்றைய  வைகாசி விசாகம் ஸத்குரு ஸ்வாமிகள் மற்றும் ஸ்வாமிநாத ஸ்வாமி அபிஷேகம் வீபூதி காப்பு அலங்காரம் இதோ...



கொளத்தூர் திருப்பதி நகரில் உள்ள திருமால் மருகன் ஆலயத்தில் அருள் பாலிக்கும் முருகப் பெருமானுக்கு இன்றைய வைகாசி விசாக தினத்தில் வேல் பிரதிஷ்டை செய்யப்பட்டது. பக்தர்கள் அனைவரும் விரதமிருந்து பால் குடம் தூக்கினார்கள். பின்னர் பக்தர்கள் கையாலேயே வேலிற்கு பால் அபிஷேகம் செய்தார்கள்.









அனைவருக்கும் நம் தளம் சார்பில் வைகாசி விசாக திருநாள் வாழ்த்துக்கள். 

- அடுத்த பதிவில் மீண்டும் இணைவோம்.

மீள் பதிவாக :-

முருகன் அருள் முன்னிற்க! பங்குனி உத்திரம் 2018 - http://tut-temple.blogspot.in/2018/03/2018.html





No comments:

Post a Comment