Subscribe

BREAKING NEWS

29 May 2018

சிவத் தல தொகுப்புகள் (1)

அனைவருக்கும் வணக்கம்.

நாம் ஏற்கனவே சென்ற மாத துவக்கத்தில் சிவத் தல தொகுப்புகள் என்றொரு பதிவு கண்டோம். அனைவரும் படித்து பாதுகாக்க வேண்டிய செய்திகள்.அனைவரும் படித்து பார்த்து காற்றில் பறக்க விடாது, மனதில் இருத்தி, உங்கள் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுங்கள். நம் சனாதன தர்மத்தை நிகழ்காலத்திடமும், எதிர்காலத்திடமும் கொண்டு செல்ல வேண்டியது நம் கடமையாகும்.  அட்ட வீரட்டத் தலங்கள்,  பன்னிரு ஜோதிர்லிங்கத் தலங்கள், முக்தி அளிக்கும் தலங்கள்,  பஞ்சபூத தலங்கள்,  நடராஜருக்கான பஞ்ச சபைகள், வியாக்ரபாதர் வழிபட்டவை - புலியூர்கள்,  சப்த (ஏழு)விடங்க தலங்கள்,  சிவராத்திரி வழிபாட்டுக்கு ஏற்ற தலங்கள்,   காசிக்கு ஈடான தலங்கள்,   நந்தியுடன் தொடர்புடைய தலங்கள்,  திருமால் சந்நிதி உள்ள சிவாலயங்கள் என அறிந்தோம் அல்லவா? 


பன்னிரு ஜோதிர்லிங்கத் தலங்கள் தொகுப்பில் 11 தலங்கள் வட நாட்டில் தான் இருக்கின்றன. ஆனால் நாம் துதிக்கும் போது "தென்னாடுடைய சிவனே போற்றி" என்று தான் போற்றுகின்றோம். ஒரே ஒரு ஜோதிர்லிங்கம் ராமேஸ்வரத்தில் உள்ளது. இந்த ஒரு தலம் மீதமுள்ள 11 தலத்திற்கு ஈடானது என்று எடுத்துக் கொள்ளலாமா? சரி...இந்த சிந்தனைக்கு தீனி விரைவில் நம் தலத்தில் வழங்க குருவருள் புரியட்டும்.

 ஒரே கோயிலில் இரு பாடல் பெற்ற கோயில்கள்

1. திருவாரூர் அரநெறி                      -  திருவாரூர்
2. திருப்புகலூர் வர்த்தமானீச்சுரம்    -  திருப்புகலூர்
3. மீயச்சூர் இளங்கோயில்                -  மீயச்சூர்

திருவாரூர் அரநெறி

திருவாரூர் அரநெறி என்னும் பாடல் பெற்ற இத்தலம் திருவாரூர்க் கோயிலுக்குள்ளேயே இரண்டாம் பிராகாரத்தில் தென் கிழக்குத் திசையில் மேற்கு நோக்கி அமைந்துள்ளது. இக்கோயில் அசலேச்சரம் என்று வழங்கப்படுகிறது. இச்சந்நிதியில் சிவராத்திரி வழிபாடு விசேஷமானது. இங்கு சிவன் மேற்கு நோக்கிய சுயம்பு மூர்த்தியாக அரநெறியப்பர், அசலேசுவரர் என்ற பெயர்களுடன் எழுந்தருளியுள்ளார். இப்பெருமானின் - அசலேஸ்வரர் கோயில் மூலஸ்தான கோபுரத்தின் நிழல் கிழக்கு திசையில் மட்டும் விழும். மற்ற திசைகளில் விழுவதில்லை என்ற தனி மகிமை வாய்ந்தது. ஆறு மாதத்திற்குள் இறப்பவர் நோக்கினால் அந்த நிழலும் தெரியாது என்பது மற்றொரு சிறப்பு. தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோபுரத்தை போன்ற கட்டட அமைப்பில் இது கட்டப்பட்டுள்ளது. அரநெறியப்பர் கோயிலை செம்பியன் மாதேவியார் கருங்கல்லால் கட்டி, இரு திருமேனிகளை எழுந்தருளுவித்ததோடு நாடோறும் பூஜைக்கும் கோயிலைப் பழுது பார்ப்பதற்கும் ஆக 234 காசுகளைக் கொடுத்ததையும் இத்தலத்திலுள்ள கலவெட்டுகள் குறிப்பிடுகின்றன.

திருப்புகலூர் வர்த்தமானீச்சுரம்

அக்னீஸ்வரர் ஆலயத்தின் உள்ளேயே கோணப்பிரான் சந்நிதியின் அருகே திருப்புகலூர் வர்த்தமானீச்சுரம் என்ற மற்றொரு பாடல் பெற்ற ஸ்தலமும் அமைந்திருக்கிறது.

மீயச்சூர் இளங்கோயில் 

மயிலாடுதுறை - திருவாரூர் சாலையில் பேரளம் வந்து, இடப்புறமாக பிரியும் காரைக்கால் பாதையிற் செல்லாமல், வலப்புறமாகத் திரும்பும் திருவாரூர்ச் சாலையில் திரும்பிச் சிறிதுதூரம் சென்றதும், கடைவீதியில் - கடைவீதிக்கு இணையாகப் பின்புறமாகப் பிரிந்து செல்லும் 'கம்பூர்' பாதையில் சென்று - ரயில்வே கேட்டைத் தாண்டி, சுமார் 2 A.e. சென்றால் மீயச்சூரை அடையலாம். சரளைகல்பாதை, கோயில்வரை வாகனங்கள் செல்லும். இக்கோயில் திருப்புகலூர் வேளாக்குறிச்சி ஆதீனத்திற்குரியது. மீயச்சூர் கோயிலுக்குள்ளேயே இளங்கோயில் உள்ளது. மீயச்சூர் கோயில் - சூரியன் வழிபட்டது. இக்கோயில் விமானம் கஜப்பிரஷ்ட அமைப்புடையது.

காயாரோகணத் தலங்கள்

1. கச்சிக்காரோணம் (வைப்புத் தலம்)
2. சூடந்தைக் காரோணம்
3. நாகைக் காரோணம்

 மயானத் தலங்கள்

1. கச்சி மயானம்
2. கடவூர் மயானம்
3. நாலூர் மயானம்

கைலாயத் தலங்கள் - தெட்சண கைலாசம்

1. திருக்காளத்தி
2. திருச்சிராப்பள்ளி
3. திரிகோணமலை (இலங்கை)

 பூலோக கைலாசம்

1. திருவையாறு
2. திருக்குற்றாலம்
3. சிதம்பரம்

 அழகிற் சிறந்த கோயில்கள் என்றால் நாம் ஒவ்வொருவரும் ஒரு கோயிலைப்பற்றி சொல்வோம். இங்கே அந்தந்த கோயிலின் சிறப்புகள் சுருக்கமாக! இந்த அழகை பார்க்கவே ஒவ்வொரு கோயிலாக சென்று தரிசிக்க வேண்டும் என்று தோன்றுகின்றது. தேரழகு,வீதி அழகு, மதிலழகு என ஒவ்வொன்றும் கண்கள் ஏங்குகின்றன.

1. தேரழகு     ---    திருவாரூர்
2. வீதி அழகு  ---    திருஇடை மருதூர்
3. மதிலழகு   ---    திருவிரிஞ்சை
4. விளக்கழகு  ---    வேதாரண்யம்
5. கோபுரமழகு --    திருக்குடந்தை
6. கோயிலழகு – காஞ்சி



 பூசாகாலத்தில் சிறப்பு வழிபாடு
அதே போல் ஒவ்வொரு பூசா காலத்திலும் சிறப்பு வழிபாடாக சில கோயில்கள் இருக்கின்றன. இதோ அந்த பட்டியல். ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு கோயில் சென்று தரிசிக்க எம் பெருமாள் அருள் புரியட்டும்.

1. திருக்குற்றாலம்  -- திருவனந்தல் சிறப்பு
2. இராமேச்சுரம்    --- காலை பூசை சிறப்பு
3. திருஆனைக்கா  --- மத்தியான பூசை சிறப்பு
4. திரு ஆரூர்     --- சாயுங்கால பூசை சிறப்பு
5. மதுரை         --- இராக்கால பூசை சிறப்பு
6. சிதம்பரம்       --- அர்த்தசாம பூசை சிறப்பு

திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் காலத்து வாழ்ந்த நாயன்மார்கள்

குங்கிலியக்கலயர், முருகர், குலச்சிறை, அப்பூதி, நீலநக்கர்,சிறுத்தொண்டர், நின்றசீர் நெடுமாறர், மங்கையர்க்கரசி,திருநீலகண்டயாழ்பாணர்.

நடராசர் அபிஷேக நாட்கள் 6


மார்கழி - ஆதிரை ,
சித்திரை - ஓணம்,
ஆனி - உத்திரம்
மாசி,ஆவணி, புரட்டாசி ஆகிய மூன்றும் நட்சத்திர அடிப்படையிலானவை.
 ஏனையமூன்றுக்கும் சதுர்த்தசி திதி அடிப்படை.

ஆயிரங்கால்  மண்டபங்கள் உள்ள சிலஸ்தலங்கள்

ஆயிரங்கால் மண்டபம் என்றாலே மதுரை தான். இதோ அந்த பட்டியலில் இன்னும் இரண்டு தலங்கள்.

மதுரை
சிதம்பரம்
இராமேஸ்வரம்.

ஒரே ஆவுடையாரில் இரண்டு பாணங்கள் அமைந்து காணப்பெறும்ஒரே தேவாரத் திருத்தலம்

திருநல்லூர்த் திருத்தலம்.

அமர்ந்த நிலையிலான அர்த்தநாரீஸ்வர வடிவம்

“திருகண்டியூர் வீரட்டம்” என்னும் திருத்தலத்தில் மட்டுமேஅமையப்பெற்றுள்ளது.

திருஞான சம்பந்தருக்காக நந்தி விலகிய தலங்கள் இரண்டு.

திருப்பட்டீச்சரம்
திருப்பூந்துருத்தி.

சிவன் சிறப்புத் தேவாரத் தாண்டவத் தேவாரத்தலங்கள் ஆறு

1.            மயூர தாண்டவம்  - மயிலாடுதுரை
2.            அஞ்சிதபாத கரண தாண்டவம்- செங்காட்டங்குடி
3.            கடிசம தாண்டவம்- திருவக்கரை
4.            சதுர தாண்டவம்- திருநல்நூர்
5.            சுந்தரத் தாண்டவம்- கீழ்வேளூர்
6.            லதா விருச்சிக தாண்டவம்- திருமழபாடி

அறுபத்து மூன்று நாயன்மாரில் குருவருளால் முக்தி பெற்றோர்.

சம்பந்தர்,
நாவுக்கரசர்
திருமூலர்
நின்றசீர் நெடுமாறன்
அப்பூதி
சோமாசிமாறர்
மங்கையர்கரசி
நீலகண்டயாழ்பாணர்
மிழலைக்குறும்பர்
கணநாதர்
குலச்சிறை என 11 பேர் ஆவார்.

 பெரிய கோபுரத் தலங்கள்

திருவண்ணாமலை
மதுரை
தில்லை
திருமுதுகுன்றம்
திருச்செந்தூர்
இராமேஸ்வரம்
குடந்தை
காளையார் கோவில்
தென்காசி

மண்டபங்கள் சிறப்பு

வேலூர் - கல்யாண மண்டபம்
கிருஷ்ணாபுரம் - சபா மண்டபம்
பேரூர் -  கனக சபை
தாரமங்கலம் – குதிரை மண்டபம் என புகழ் பெற்றவை மட்டுமில்லாமல் இம்மண்டபங்கள் கலைச் சிறப்புக்குசிறந்த எடுத்துக்காட்டானவைகளாகும்.

யானை ஏறாத மாடக் கோயில்கள் சில

1.     திருவானைக்காவல்
2.    ஆக்கூர்
3.    திருத்தேவூர்
4.    திருக்கீழ்வேளூர்
5.    சிக்கல்
6.    வலிவலம்
7.   அம்பர்மகாளம்
8.   தண்டலை நீள் நெறி
9.   திருநறையூர்
10. பழையாரை
11. திருமருகல்
12. வைகல்மாடக் கோயில்
13. நன்னிலம்(மதுவனம்)
14. குடவாசல்
15. புள்ளமங்கை
16. திருத்தலைச்சங்காடு
17. நல்லூர்
18. திருநாலூர்
19. திருச்சாய்க்காடு
20. திருவக்கரை
21. திருநாங்கூர்
22. திருப்ராய்த்துறை
23. ஆவுர்
24. திருவெள்ளாறை
25. திருவழுந்தூர்
26. நாகப்பட்டினம்
27. பெருவேளூர்
28. கைச்சின்னம்
29. சேங்கனூர் இவ்விதம் எழுபதுக்கும் மேல்…….


பெரிய லிங்கம் 
                    
கங்கை கொண்ட சோழபுரம் – இங்குள்ள மூலஸ்தான மூர்த்திக்குஇலிங்கத் திருஉருவைச் சுற்ற 15 முழமும், ஆவுடையார்க்கு 54 முழமும்பரிவட்டம் வேண்டும்.

திருப்புனவாயில் – இத்தலத்து மூல லிங்கம் மிகப் பெரியது. இலிங்கவடிவிற்கு மூன்று முழப் பரிவட்டமும், ஆவுடையாருக்கு முப்பது முழம்பரிவட்டமும் தேவை “மூன்று முழம் ஒரு சுற்று; முப்பது முழமும் ஒருசுற்று ”என்பது பழமொழி.
       

பெரிய நந்தி 
                   
தஞ்சை நந்தி மிகப் பெரியது தான். அதனினும் பெரியது லேபாட்சிவீரபத்திரர் சுவாமி கோயிலில் உள்ள நந்தியாகும்.


புகழ் பெற்ற கோயில்கள் 

             கோயில் – சிதம்பரம்
             பெரியகோயில்- தஞ்சை
             பூங்கோயில் – திருவாரூர்
             திருவெள்ளடை- திருக்குருகாவூர்
             ஏழிருக்கை-சாட்டியக்குடி
             ஆலக்கோயில்-திருக்கச்சூர்
             கரக்கோயில்- திருக்கடம்பூர்
             கொகுடிக் கோயில்- திருப்பறியலூர்
             மணிமாடம்- திருநறையூர்
             தூங்கானைமாடம்- திருப்பெண்ணாடகம்
             அயவந்தீச்சரம்-திருச்சாத்தமங்கை
             சித்தீச் சுரம்- திருநறையூர்

நால்வர் இறையருளில் கலந்த தலங்கள்

1.            திருஞானசம்பந்தர் - ஆச்சாள் புரம்
2.            திருநாவுக்கரசர் - திருப்புகலூர்
3.            சுந்தரர் - திருவஞ்சைக்களம்
4.            மாணிக்கவாசகர் – தில்லை

சந்தானக்குரவர் அவதரித்த தலங்கள்

1.            மெய்கண்டார்- திருப்பெண்ணாடகம்
2.            அருள் நந்திதேவ நாயனார் – திருத்துறையூர்
3.            மறைஞானசம்பந்தர்- பெண்ணாடகம்
4.            உமாபதி சிவம்- சிதம்பரம்.

சந்தானக்குரவர் முக்தி அடைந்த தலங்கள்

1.            மெய்கண்டார்- திருவண்ணாமலை
2.            அருள் நந்திதேவ நாயனார் – சிர்காழி
3.            மறைஞானசம்பந்தர்- சிதம்பரம்
4.            உமாபதி சிவம்- சிதம்பரம்

பக்தர்கள் பொருட்டு

திருவிரிஞ்சியுரம்- பக்தனுக்காக இறைவன் தன் முடியை சாயத்துஅபிஷேகத்தை ஏற்றுக்கொண்டார்.

திருப்பனந்தாள் – பக்தைக்காக இறைவன் தன் முடியை சாய்த்துபூமாலையை ஏற்றிக் கொண்டருளினார்.

                 
தேவாரம் போற்றும் பெருங்கோயில்கள்

1.            அம்பர் பெருந்திருக்கோயில்
2.            நன்னிலத்துப் பெருந்திருக்கோயில்
3.            கீழ்வேளூர் பெருந்திருக்கோயில்
                   அதிசய நடராஜர்


 திருக்கயிலாய பரம்பரை

சிவபெருமானிடமிருந்து நந்தி தேவர் உபதேசம் பெற்றார்.
நந்தி  தேவரிடமிருந்து சணற்குமாரர் உபதேசம் பெற்றார்
சணற் குமாரரிடமிருந்து சத்ய ஞானதரிசினிகள் உபதேசம் பெற்றார்
சத்தியஞானதரிசினிகளிடமிருந்து பரஞ்சோதியார் உபதேசம் பெற்றார்
பரஞ்சோதியாரிடமிருந்து மெய்கண்டார் உபதேசம் பெற்றார்
இப்படி வழி வழியாக உபதேசம் பெற்ற குரு பரம்பரையே திருக்கயிலாயபரம்பரை என அழைக்கப்படுகிறது.

விஷ்னு கோயில்களில் சிவன்

1.திருங்குறுங்குடி
2.திருக்கோஷ்டியூர்
3.உத்தமர் கோயில்
4.கம்பம்


பஞ்ச பாசுரத் ஸ்தலங்கள்

1.            தேவாரம்
2.            திருவாசம்
3.            திருப்பல்லாண்டு
4.            திருவிசைப்பா
5.            பெரியபுராணம்

இவ்வைந்தாலும் பாடல்பெற்ற ஸ்தலம் 2

1.திருவாரூர் 2. சிதம்பரம்.

கும்பமேளா தீர்த்தங்கள்

1.            ஹரித்துவார் – உத்திரபிரதேசம்
2.            அலகாபாத் -  உத்திரபிரதேசம்
3.            உஜ்ஜயினி  - மத்தியப் பிரதேசம்
4.            நாசிக் – மஹாராஷ்டிரம்

சிவ தேவார திருத்தலங்கள் - 274

காவிரிக்கு வடகரையிலுள்ள திருவூர்கள் - 63

காவிரிக்கு தென்கரையிலுள்ள திருவூர்கள் - 127

ஈழநாட்டிலுள்ள திருவூர்கள் - 2

பாண்டிநாட்டிலுள்ள திருவூர்கள் - 14

மலைநாட்டிலுள்ள திருவூர்கள் - 1

கொங்கு நாட்டிலுள்ள திருவூர்கள் - 7

நடுநாட்டிலுள்ள திருவூர்கள் - 22
தொண்டை நாட்டிலுள்ள திருவூர்கள் - 32

துளுவ நாட்டிலுள்ள திருவூர்கள் - 1

வட நாட்டிலுள்ள திருவூர்கள் - 5

காவிரிக்கு வடகரையிலுள்ள திருவூர்கள் - 63

01. சிதம்பரம்
02. திருவேட்களம்
03. திருநெல்வாயில்
04. திருக்கழிப்பாலை
05. திருநல்லூர்ப் பெருமணம்
06. திருமயேந்திரப்பள்ளி
07. தென்திருமுல்லைவாயில்
08. திருகலிக்காமூர்
09. திருச்சாய்க்காடு
10. திருபல்லவனீச்சரம்
11. திருவெண்காடு
12. கீழைத்திருக்காட்டுப் பள்ளி
13. திருக்குருகாவூர் வெள்ளடை
14. சீர்காழி
15. திருக்கோலக்கா
16. திருபுள்ளிருக்கு வேளூர் (வைத்தீஸ்வரன் கோயில்)
17. திருக்கண்ணார் கோயில்
18. திருக்கடை முடி
19. திருநின்றியூர்
20. திருப்புன்கூர்
21. திரு நீடூர்
22. திரு அன்னியூர்
23. திருத்துருத்தியும் திருவேள்விக்குடியும்
24. திருவெதிர்கொள்பாடி

அப்பப்பா..எத்தனை தலங்கள் ..எத்துணை சிறப்புகள். பதிவின் நீளம் தான் அதிகமாகின்றது. இத்தகு சிறப்புகள் மிக்க தமிழ்நாட்டில் நாம் வாழ்வதே நாம் செய்த புண்ணியம். மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்.

மீள் பதிவாக :- 

சிவத் தல தொகுப்புகள் - http://tut-temple.blogspot.in/2018/04/blog-post_30.html

No comments:

Post a Comment