Subscribe

BREAKING NEWS

27 August 2017

ஸ்ரீதர ஐயாவாள் வீட்டு கிணற்றில் பொங்கிய கங்கை

ஷேத்ராடணம்திருத்தலம் 46- திருவிசைநல்லூர்

ஸ்ரீதர ஐயாவாள் வீட்டு கிணற்றில் பொங்கிய   கங்கை

ஸ்ரீதர ஐயாவாள்

மைசூர் சமஸ்தானத்தின் ஆஸ்தான வித்வானாக இருந்தவர் இலிங்கார்யர். இவரது ஒரே மைந்தன் ஸ்ரீதர வெங்கடேசர்
இவர் கர்நாடக சமஸ்தானத்தில் திவானாகப் பணிபுரிந்தவர் தன் பதவி, சொத்துகளைத் துறந்துவிட்டு தமிழக காவிரிக் கரையிலுள்ள திருவிசநல்லூரில் குடியமர்ந்தவர்...!தினமும் அருகேயுள்ள மத்யார்ஜூனமான திருவிடைமருதூர்மகாலிங்கேஸ்வரரை தரிசிப்பார். அர்த்தஜாம பூஜையும் காண்பார்.சிவன்மேல் அபார பக்தி கொண்டவர்.அதே சமயம் ஸ்ரீ ஐயாவாள் ஏக பாவத்தில், சிவ-விஷ்ணு வித்யாசம் ஏதும் பாராட்டாமல் திகழ்ந்தவர்..!


"அநித்யத்வம் ஜானன்னதி த்ருடமதர்ப் பஸ்ஸவினய:
ஸ்வகே தோஷே அபிக்ஞ: பரஜுஷிது மூடஸ்ஸகருண:
ஸதாம் தாஸ: சாந்த: ஸமமதிரஜஸ்வரம் தவ யதா
பஜேயம் பாதாப்ஜம் யதுவர தயேதா மம கதா"

என்று ஸ்தோத்திரம் செய்கிறார்.
உலகத்தின் அநித்ய நிலையை புரிந்தவனாகவும்,
கர்வமில்லாதவனாகவும், வினயமுடையவனாகவும்,
என்னுடைய தோஷங்களை அறிந்தவனாகவும்,
பிறர் தோஷங்களை அறியாதவனாகவும்,
எல்லா ஜீவராசிகளிடமும் இரக்கம் உடையவனாகவும்,
பாகவதர்களுக்கு தாசனாகவும், சாந்தனாகவும்,
உன் பாதகமலத்தை எப்போதும் பூஜிப்பவனாகவும்
எப்போது நான் மாறுவேன் கிருஷ்ணா என்று  அவர் பகவான் கிருஷ்ணன் மீது செய்த ஸ்தோத்திரம் தான் "கிருஷ்ண த்வாதச மஞ்சரி" ..!
     

வீட்டிற்கு வந்த கிருஷ்ணரின்  விக்ரகம்                   
                      
தாங்கள்தான் சிவ பக்தராயிற்றே..! என்று  தேரில் ஊர்வலம் வந்த கிருஷ்ண விகரஹத்தை வணங்க விடாமல் தடுத்தனர் பொறாமை கொண்டவர்கள்..!
அமைதியாக இல்லத்துக்குள் சென்று ஐயாவாள் தம்மை மறந்து டோலோத்ஸவ ஸேவை சார்த்துவதாக பாடிக்கொண்டிருக்க  ஊர்வலத்தை விட்டு கண்ணன் விக்ரஹம்  ஐயாவாள்  பூஜை அறையில் தோன்றிய போது பாடியது "டோலோ நவரத்ன மாலிகா" ..!
தந்தையின் சிரார்த்தம்கார்த்திகை மாதத்தில் வரும் இவரது தந்தையார் மறைந்த திதி நாளில் இவர் பிராமணர்களுக்கு சிரார்த்த  சமையல் தயார்செய்ய ஏற்பாடு செய்துவிட்டு, காவிரியில் நீராடச்சென்றார்.நீராடி இல்லம் திரும்பும்போது எதிரேவந்த வயதான ஏழை ஐயாவாளிடம், "சுவாமி, ரொம்ப பசிக்கிறது. ஏதாவது கொடுங்களேன்'' என கேட்டார்.அவர்மீது இரக்கம்கொண்ட ஐயா அவரை இல்லத்திற்கு அழைத்து வந்தபோது,  சிரார்த்த  சமையல் மட்டுமே தயாராக இருந்தது.பசி மயக்கத்தில் இருந்த ஏழைக்கு சிரார்த்த சமையல்உணவைக்கொடுத்து பசியாற்றினார்.
சிரார்த்த சமையலை திதி கொடுக்கும் அந்தணர்கள்மட்டுமே உண்ணவேண்டும்.மீதம் உள்ளதை பசுவுக்குதான் தருவார்கள். அந்த நியதியை மீறினார் ஐயாவாள். அதனால் கோபமடைந்த அந்தணர்கள் வெளியேறி,

"பரிகாரம் செய்தால் தான் நாங்கள் திதி கொடுப்போம்' என்றனர்.
"ஒரேநாளில் காசியிலுள்ள கங்கையில் நீராடி விட்டுவா'
என்பதுதான் அவர்கள் சொன்ன பரிகாரம்.
ஒரேநாளில் எப்படி அவ்வளவு தூரத்திலுள்ள காசி சென்று கங்கையில் நீராடிவிட்டு அன்றே திரும்பமுடியும்? இதை நினைத்து வருத்தத்துடன் படுத்தவர் அசதியில் உறங்க, கனவில் சிவன் காட்சி கொடுத்து, "உன் இல்லக் கேணியில் நாளை கங்கையைப் பிரவேசிக்கச் செய்வேன்' என உறுதியளித்து மறைந்தார். இக்கனவை ஐயா எல்லாரிடமும் சொன்னார்.

கிணற்றில் பொங்கிய கங்கை



கார்த்திகை மாத அமாவாசை. ஊரே திரண்டு ஐயா வீட்டுமுன் கூடிவிட்டது. ஐயாவாள் கிணற்றடியில் நின்றபடி மனம் உருக "கங்காஷ்டகம்' பாடினார்.ஐந்தாம் பாடல் பாடியவுடன் கேணியில் கங்கை பொங்கி வழிந்து, திருவிச நல்லூர் சாலை முழுவதும் வெள்ளமாய்ப் பாய்ந்தோடினாள்!

அதில் காசியில், கங்கையில் போடப்பட்டமங்கல திரவியங்கள் காணப்பட்டன.பெரும் வெள்ள அபாயத்தைத் தடுப்பதற்காக "கிணற்றிலேயே கங்காதேவி அடங்க வேண்டும்' என்று மனமுருகி வேண்டினார் ஐயாவாள்.

நீர்ப்பெருக்கு படிப்படியாகக் குறைந்து  கங்கா தேவி அக்கிணற்றில் நிரந்தரமாகக் குடியிருப்பதாக ஐதீகம்.
அந்த நீர் கங்கைதான் என்பதற்கு பிரமாணம் கேட்டார்கள் பிராமணர்கள்..ஐயாவாள் ஒரு விழுதுகளுடன் கூடிய பெரிய ஆலமரத்தை வேருடன் பிடுங்கி தலைகீழாக வேர் மேலே இருக்கும் வண்ணம் நட்டு தன் கிணற்று நீரைப்பாய்ச்சினார்.. ஆலமரம்  செழித்து வளர்ந்து அவர் பீமனின் அவதார அம்சம் என்பதையும் , கிணற்று நீர் கங்கை தான் என்பதையும் ஒருங்கே நிரூபித்தது..

அந்தணர்கள் ஐயாவிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு கங்கை நீராடினார்கள்.அவர் கிணற்றிலே வற்றிய கங்கை
சில வருடங்களுக்கு முன்னால்  தஞ்சாவூர் ப்ரதேசத்தில்  ஐப்பசியில் பருவ மழை பெய்யாது பொய்த்தது.. மேட்டூர் ஜலமும் வரவில்லை..  காவேரியில் சுத்தமாக வரத்து இல்லை.. ஸ்ரீஐயாவாள்  மடத்தின் பின்புறம் கங்கை ஆவிர்பவிக்கும் கிணறும்  வறண்டு போனது..
ஸ்ரீஐயாவாள்  மடத்தின்  கார்த்திகை அமாவாஸ்யை உத்ஸவம்  அந்த வருஷம்   நடக்குமா என்ற பயம் வந்து விட்டது..

ஸ்ரீபெரியவாளின் அபயம்

உத்ஸவ பத்ரிகையை  எடுத்துக் கொண்டு போய் காஞ்சி ஸ்ரீபெரியவாளின் ஸன்னதியில் ஸமர்ப்பித்து அங்கு இருக்கும் நிலைமையை பெரியவாளிடம் விவரித்தார்கள் பக்தர்கள்.
சிரிது நேரம் அமைதியாக இருந்த பெரியவாள் பின் தன் சீடர்களை ஒரு செப்பு குடத்தில் கங்கை நீர் நிரப்பிவரும்படி உத்தவிட்டார். அதன் கங்கா ஜலத்தைக் கொண்டு வந்து அவர்முன் வைத்தார்கள்.
பக்தர்களை பார்த்து பெரியவாள் மழை வராவிட்டால்  ஸ்ரீஐயாவாள்  மடத்தில் இருக்கும் கங்கை ஆவிர்பவிக்கும் கிணற்றில்  கார்த்திகை அமாவாசைக்கு முன்னால் சேர்த்து விடுங்கள் .. ! " என்று அபயம் காட்டி  அவர்களுக்கு  ப்ரஸாதம் அளித்து அனுப்பி வைத்தார்..
ஆனால் அம்மாவாசை முதல் நாள்வரை மழை பெய்யவில்லை பிறகு செப்புக் குடத்திலிருந்த ஸ்ரீபெரீவா அனுக்ரஹித்திருந்த கங்கையைக் கிணற்றில் சேர்த்த சில மணி நேரத்தில்..  தொடங்கியது  பெரும் மழை.. விடிய விடிய விடாது பெய்து ஊரையே வெள்ளத்தில்  மிதக்க வைத்தது ..

ஸ்ரீஐயாவாள் அவர்கள் கங்கையை வரவழைத்தது போல்  மடத்திலிருந்த கிணற்றில் ஜலம் பெருகியது..
அமாவாஸ்யை  அன்று விடியற்காலை   கிணற்றின்  கைப்பிடிச் சுவற்றிற்கு மேல் ஜலம் பெருகி வழிந்தோடியதைக் கண்டோர் அதிசயித்தனர்.. அதேவிதமாகக் காவேரியிலும் கால் வைக்கக்கூட  முடியாத அளவிற்கு ப்ரவாஹம் மிக  அதிகமாக இருந்தது..
பல நூறு பக்த ஜனங்கள் அன்று மடத்திலிருந்த கிணற்றில் ஸ்நானம் செய்தும் வழிபட்டனர்..

இந்த சம்பவத்தை தொடர்ந்து ஆண்டுதோறும் கார்த்திகை அமாவாசை நாளில் திருவிசநல்லூர் ஸ்ரீதரஐயாவாள் இல்லத்தில் உள்ள கிணற்றில் கங்கை நீர் பொங்குவதாக பக்தர்கள் நம்புகிறார்கள். இந்த கிணற்றை பக்தர்கள் “புனித கங்கை கிணறு” என்றே அழைக்கிறார்கள். தற்போது ஸ்ரீதரஐயாவாள் இல்லம் மடமாக மாற்றப்பட்டு, அங்கு ஆண்டுதோறும் கார்த்திகை அமாவாசை நாளில் புனித நீராடல் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. 
இன்றளவும் கார்த்திகை அமாவாசையன்று,பொங்கி வந்ததுபோல, ஐயாவாள் இல்லக் கேணியில் நீர் பொங்கி வருவதைக் காணலாம்; நீராடலாம்.



செல்லும் வழி

 திருவிடைமருதூரிலிருந்து 7Km தொலைவிலும். திருவிசைநல்லூர்,சிவயோகிநாத சுவாமி ஆலையத்தின் மிக அருகிலும் உள்ளது.
ஷேத்ராடணம்
ஸ்ரீதர ஐயாவாள்.



நன்றி:-திருமதி,ரமாசங்கர்.

No comments:

Post a Comment