Subscribe

BREAKING NEWS

25 August 2017

மண(ன)ப் பொருத்தம் - தொடர் பதிவு

இல்லத்தை இனிமையாக்கும் இனிய தொடராக மணப் பொருத்தம் என்ற தொடரை இங்கே ஆரம்பிக்க இருக்கின்றோம். மணப் பொருத்தம் என்பது எதில் அடங்கி உள்ளது? மனதில் தான் அடங்கியுள்ளது.எனவே தான் மணப் பொருத்தம் என்பதும் சரி.மனப் பொருத்தம் எனபதும் சரி தான். இன்று எங்கு பார்த்தாலும் மண வாழ்வில் பிரச்சினைகள்.அதனை எதிர்கொள்ள முடியாமல் பல்வேறு நிகழ்வுகள்.செய்தித் தாளை திறந்தாலே ஒரே ரகளை தான்.கொலை,கொள்ளை....என எழுத இயலாத நிகழ்வுகள் நடந்து வருகின்றன.






இந்த விநாயகர் சதுர்த்திக்கு சிறப்பு பதிவாய் இந்த தொடர் அமைய, ஆனை முகனை வேண்டி தொடங்குகின்றோம். இந்த பதிவில் தெய்வீக உறவாம் கணவன் -மனைவி உறவு பற்றி சிறிது சிந்திப்போம்

கணவன்-மனைவி உறவு சரியாக இருந்தால் தான் சமுதாயம் சீர்படும்.அப்போதுதான் வளமான எதிர்கால இந்தியா உருவாகும். ஒரு சிறிய விளக்கத்தின் மூலம் இதை உணர்வோமா? கணவனை பாலாகவும், மனைவியை நீராகவும் எடுத்துக்கொள்வோம்.பாலில் எவ்வளவுதான் நீர் கலந்தாலும்,நீரைத் தனியே பிரித்துக் காட்டும் குணம் பாலிற்கு இல்லை.பாலை தனியே காட்டும் குணம் தண்ணீர்க்கு இல்லை.இங்கு பாலும்,நீரும் ஒன்றுக்குள் ஒன்று அடக்கம். இது மட்டுமா? இன்னும் ஒரு சுவாரசியமான செய்தி பால் காய்ச்சுவதில் உள்ளது.




தண்ணீர் கலந்த பாலை அடுப்பில் வைத்து காய்ச்சுகின்றோம்.அப்போது என்ன நடக்கின்றது.பாலில் உள்ள நீர் ஆவியாகி பாலை பிரிந்து செல்கின்றது.உடனே பால் கோபத்தில் பொங்கி மேலே வரும்.அப்போது என்ன செய்கின்றோம்.சிறிது தண்ணீர் எடுத்து தெளிக்கின்றோம். தன்னை விட்டு பிரிந்து சென்ற நீர்,மீண்டும் தன்னிடம் வந்ததும், பால் கோபம் தணிந்து பாத்திரத்தில் நிலை பெறும்.

ஒரு வேளை தண்ணீர் தெளிக்காவிட்டால் என்ன ஆகும்? உங்களுக்கே தெரியுமே? பால் பொங்கி,அடுப்பையே அணைத்து விடும்.கணவன்,மனைவி என்ற இருவரும் ஒருவருக்கொருவர் பாலும் நீரும் போல அடங்கி இருக்க வேண்டும்.இவ்வாறு அடங்கி இருந்தால் குடும்பம் கொடுக்கின்ற இன்பம் என்ற பொருளில் இன்பமாய் இருக்கும்.இல்லையேல் பால் பொங்கி,குடும்பம் எனும் நெருப்பு அணைந்து விடும். மிக மிக எளிதான,அன்றாட உதாரணம்.ஆனால் சொல்கின்ற கருத்தோ வாழ்வியல் கருத்து .மனதில் இறுத்தி, மகிழ்வோடு வாழ்வோம்.மணமானவர்கள் சரி.மற்றோர் தாய்,தந்தை சொல்பேச்சைக் கேட்டு நடந்தாலே போதும்.அவர்களுக்கும் மனப் பொருத்தம் சரியாக கிடைக்கும்.





கணவன் மனைவி உறவு எப்படி இருக்க வேண்டும் என்று குழந்தைப் பேறு உண்டாவதற்கு முன்னே நாம் சொல்லி கொடுத்து வளர்க்க வேண்டும்.எதையெல்லாம் சொல்லிக் கொடுக்க வேண்டுமோ,அதையெல்லாம் விட்டுவிட்டு,இன்று யுவதிகள் படும் பாடு திண்டாட்டம் தான்.திருமணத்திற்கு முன்பாக கணவன்,மனைவி பற்றி சொல்லிக் கொடுத்தால் தான் குடும்ப உறவு தெய்வீக உறவாக இருக்கும். அனைத்து திருமண நிகழ்வுகளுக்கு திருக்குறள் என்றதும் நமக்கு

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது.




என்ற திருக்குறள் நினைவிற்கு வரும்.இதன் பொருளை சற்று உணர்வோம். அன்பை போற்றும் தாயும்,அறத்தை போற்றும் தந்தையும் இணைந்து இல்வாழ்க்கை நடத்துவதே, அந்த வாழ்க்கையின் பண்பாகவும்,பயனாகவும் அமையும். பயன் என்றால் சரி..அதென்ன பண்பு? ஒரு செயலைச் செய்தால் நமக்கு கிடைப்பது பயன். ஆனால் பண்பென்பது இது இப்படி தான் இருக்க வேண்டும் என்று வரையறை செய்வது.அதாவது இல்வாழ்க்கை மூலம் இன்பம் எனும் பயனை அடைய வேண்டும் என்று நம் தாத்தா சொல்கின்றார்.

இன்று பல காதல் திருமணங்கள் மண முறிவுக்கு வர காரணம்? காதலிக்கும் போது,காதலர்களாக இருந்தவர்கள், இல்வாழ்க்கையில் கணவன்,மனைவியாய் இருக்கின்றார்கள்.அப்போதும் அவர்கள் காதலர்களாக இருந்தால் வாழ்க்கை வசப்படும்.கணவன் மனைவி உறவைப் பற்றி சொல்லிக் கொடுத்து தான் திருமண பந்தத்தில் இணைய வேண்டும்.




மேலே பார்த்தீர்களா? என்ன மகிழ்ச்சி.பேரின்பம்.அப்பப்பா ..இப்படி ஒரு வாழ்க்கை வாழ வேண்டும் என்று வேண்டுங்கள்.

ஒருவருக்கொருவர் பிணக்கு எழாது உள்ள குடுமபத்தில் தான் குழந்தைகள் நன்றாக இருக்கும்.அங்கு பிணக்கு இருக்குமேயானால் அடிப்படை சுந்தந்திரத்தையே அடக்குமுறையால் தடுக்கும் போக்கு,அதில் உள்ள போராட்டம் குழந்தைகளிடம் பாதிக்கும் மனம் உருவாகும்.இதனால் உடல் நலம் கெடத்தானே செய்யும்.முதலில் கணவன்,மனைவி இருவரும் குழந்தைகள் முன்பு சண்டையிடாதீர்கள்.அது உங்களைப் பற்றிய தவறான பிம்பத்தை அவர்களிடம் ஏற்படுத்தும்.அவ்வாறு நேரிட்டால் முதலில் அதைத் தவிர்க்க பழகுங்கள்.

இப்படி யோசித்துக் கொண்டு செல்லும் போது,குடும்பத்தில்,கணவனும் ஒத்துழைக்க வேண்டும்,மனைவியும் ஒத்துழைக்க வேண்டும்.ஒருவருக்கொருவர் உள்ளத்தைப் புரிந்து கொண்டு,ஒருவருக்கொருவர் உதவி வாழ்வதற்காக வந்தாகி விட்டது.திருமணமும் ஆகிவிட்டது.இனி வாழ்ந்து தான் ஆகா வேண்டும்.ஒருவருக்கொருவர் உதவிதான் ஆக வேண்டும் என்ற நிலைக்கு  வந்து விட  வேண்டும்.




அப்படியே விட்டுக் கொடுத்து பழக வேண்டும்.பலமுறை இந்த வரிகள் மனத்தில் வந்து போவதுண்டு.

விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப் போவதில்லை.
கெட்டுப் போனவர்கள் விட்டுக் கொடுப்பதில்லை.

நாம் நல்லவராவது நம் கையில் தான் உள்ளது.குடும்பங்களில் நிதர்சனமாக காண்பது உண்டு.அங்கு விட்டுக் கொடுப்பதற்கு பதிலாக ஒவ்வொருவரும் ஒருவிதமான பிடியை பிடித்துக் கொண்டு,என் கருத்துத் தான் உயர்ந்தது ,உனக்கு என்ன தெரியும் போன்ற நிலையைப் பிடித்தால் பிணக்கு தான் வரும்.இந்த பிணக்கு நமக்குத் தேவையா? இது போன்ற பிணக்குகளை சரி செய்ய பக்தி,யோகம்,தியானம் என்று மேற்கொண்டு விழிப்பு நிலையில் குடுமபம் நடத்த வேண்டும்.அதென்ன விழிப்பு நிலை என்று நீங்கள் கேட்பது எனக்கு புரிகின்றது?

விட்டுக் கொடுத்து போகும் நிலையே விழிப்பு நிலை.



புதியதொரு செய்தியை தங்களுக்கு வழங்கி இருக்கின்றோம்,அதனையே நாமும் கடைபிடித்திட நாமும் வேண்டுகின்றோம்.

- மீண்டும் அடுத்த பதிவில் மனம் திறப்போம்

முந்தைய பதிவுகளுக்கு:-

வாழ்வாங்கு வாழ - கேள்வி பதில் தொடர் (1) - http://tut-temple.blogspot.in/2017/07/1.html

வாழ்வாங்கு வாழ - கேள்வி பதில் தொடர் - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_7.html

இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. 'வெற்றி' உங்களை தேடி வரும்..! http://tut-temple.blogspot.in/2017/08/blog-post_4.html


தாலாட்டு வேண்டுமா? தேசிய கீதம் வேண்டுமா? - http://tut-temple.blogspot.in/2017/06/blog-post_51.html


No comments:

Post a Comment