Subscribe

BREAKING NEWS

15 June 2018

கூடுவாஞ்சேரி அகத்தியர் ஆயில்ய ஆராதனை - 17/06/2018

சித்தருக்கெல்லாம் தலைமை சித்தராய் விளங்கும், அகத்தின் ஈசனும் ஆன அகத்தீசர் நம் இதயத்துள் வாழ்கின்றார். அவரது அருளை  ஒவ்வொரு தமிழ் மாதமும் ஆயில்ய நட்சத்திரம் அன்று பெற்று வருகின்றோம் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. இந்தப் பதிவிலும் வருகின்ற ஆயில்ய பூசைக்கான அழைப்பை அறிவிக்கின்றோம். வாய்ப்புள்ள அன்பர்கள் கலந்து கொண்டு சித்தர்களின் அருள் பெற வேண்டுகின்றோம்.

சித்தர்கள் என்ற வார்த்தையை படிக்க.பேச என புண்ணியம் செய்திருக்க வேண்டும். இல்லையேல் இணையக் கடலில் வெறும் குப்பையைத் தான் நாம் பெற்றுக் கொண்டு இருப்போம். ஆனால் நமக்கு சித்தர்கள் போன்ற செய்திகள் கிடைக்கின்றது என்றால் நாம் புண்ணியம் செய்து இருக்கின்றோம் என்று தானே அர்த்தம். சித்தர்களின் வழிபாட்டில் , இதோ கடந்த ஆண்டு நாம் ஆரம்பித்த அகத்தியர் பூசை முதல் ஆண்டின் நிறைவு நோக்கி சென்று கொண்டிருக்கின்றது.

சரி. சென்ற மாதம் நாம் கொண்டாடிய ஆராதனை இங்கே தொகுத்து தருகின்றோம்.பதிவின் இறுதியில் பூசை பற்றி அறிவிப்பு கூறுகின்றோம். 21/05/2018 வைகாசி அன்று காலை ஆயில்ய பூசை செய்ய நமக்கு உத்தரவு கிடைத்தது. சிவன் மலை கடந்த 20/5/2018 அன்று சென்று ஐந்து கால பூசை செய்து அடுத்த நாள் திங்கட்கிழமை காலை வந்து சேர்ந்தோம். உடனே வீட்டில் இருந்து கிளம்பி பூசைக்கு வந்தோம்.


பூசைப் பொருட்கள் எடுத்து வைத்து தயாரான போது 


பஞ்சாமிர்தம் தயார் செய்த பொழுது 



அனைத்தும் தயார் நிலையில் 



எம் பெருமான் தரிசனம். அட..அகத்தியர் முன்பு விளக்கு ஒன்று இருக்கின்றதே..ஆம், நம் தள உறவினர் திரு.கந்தசாமி அய்யா அவர்களின் கைங்கர்யத்தில் எப்போதும் சுடர் விடும் விளக்கு ஒன்று ஏற்றியுள்ளோம்.  மனதில் இது போல் விளக்கு வைத்திட தீர்மானித்த பிறகு, நம்மால் மேற்கொண்டு எந்த முயற்சியும் செய்ய இயலவில்லை. கந்தசாமி அய்யாவிற்கும் விளக்கேற்றும் போது தடங்கலாக இருக்கவே, உடனே விளக்கினை வாங்கி, விளக்கேற்றிவிட்டோம். பின்னர் தான் நமக்கு திருப்தி கிடைத்தது.


அபிஷேகம் ஆரம்பம். அபிஷேகம் மட்டும் ஆரம்பமென்று..அருளின் வெளிப்பாடும் ஆரம்பம் தான். அபிஷேகத்தின் பொது அகத்தியர் துதி,போற்றி என்று கொஞ்சமாக பாட ஆரம்பித்தோம். 
அகத்தியரைப் போற்றும் நந்தி தேவர் துதி மிக மிக விசேஷம். அகத்தியர் தமிழை வளர்த்தார் என்பதற்கு சான்று அவர் படைத்த நூட்களே ஆகும். சுமார் 147 நூட்களை நமக்கும், நம் தமிழுக்கும் சேர்த்து தந்துள்ளார். இலக்கணம்,மருத்துவம்,யோகம்,ரசவாதம்,மந்திரம்,சாலம்,ஞானம்,சோதிடம்  என அவர் தொடாத இடமே இல்லை. 






ஒவ்வொரு அபிஷேகமாக கண்டு களித்தோம். நம் குழுவை சேர்ந்த திரு.குமார் அய்யா அவர்கள் அன்றைய தினம் வந்தார்கள்.


                                      பஞ்சாமிர்த அபிஷேகத்தில்  நம் ஐயன்






சித்தர்களைப் பற்றி நாளெல்லாம் பேசிக்கொண்டே இருக்கலாம். அகத்தியர் பூசையில் அவர் மட்டும் தான் ஆசி வழங்குவார் என்று எண்ணாதீர். சித்தர்களில் யார் வேண்டுமானாலும் வந்து அருள் வழங்கலாம். பெயர், இடம் போன்ற பாகுபாடு தாண்டி ஜீவனில் உள்ள சிவத்தை உணர்ந்தவர்கள்..எனவே தான் மீண்டும் மீண்டும் சொல்கின்றோம். சித்தர் பூசை எங்கு நடந்தாலும் சென்று வழிபடுங்கள்.







                         விபூதி அலங்காரம் கண்டதும் நம் வினை ஓடிடும் என்று புரிந்தது.





அடுத்து அலங்காரம் தான். இதோ..நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கும் அருள் வெளிப்பாடு.









நம் "தேடல் உள்ள தேனீக்களாய்" குழுவின் அங்கத்தினர் அனைவருக்காகவும் சங்கல்பம் செய்து, மனமுருக வேண்டி, வந்திருந்த அனைத்து அன்பர்களுக்கும் பிரசாதம் கொடுத்து, அன்று ஆயில்ய பூசை முழுமை  செய்தோம்.

மெய் அன்பர்களே.

நிகழும் மங்களகரமான விளம்பி வருடம் ஆனி  மாதம் 3  ஆம் நாள் (17/06/2018) ஞாயிற்றுக்கிழமை ஆயில்ய நட்சத்திரமும்,அமிர்த யோகமும் கூடிய சுப தினத்தில் காலை  8 மணி முதல் கூடுவாஞ்சேரி - மாமரத்து விநாயகர் ஆலயத்தில் அருள்பாலிக்கும் அகத்திய மகரிஷிக்கு அபிஷேகம், அலங்காரம் செய்து ஆயில்ய ஆராதனை செய்ய உள்ளோம். அன்பர்கள் தவறாது கலந்து கொண்டு அகத்தியரின் அருள் பெற வேண்டுகின்றோம்.





தொடர்புக்கு : 7904612352/9677267266
tut-temple.blogspot.in
https://www.facebook.com/thedalullathenikalaai/

மீண்டும் அடுத்த பதிவில் சிந்திப்போம்

மீள்பதிவாக:-

எந்தையும் தாயும் - கூடுவாஞ்சேரி அகத்தியர் ஆயில்ய ஆராதனை அறிவிப்பு 21/05/2018  - http://tut-temple.blogspot.com/2018/05/21052018.html

மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டா - கூடுவாஞ்சேரி அகத்தியர் ஆயில்ய ஆராதனை அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2018/04/blog-post_22.html

அகத்தியருக்கு ஆயில்ய ஆராதனை -புரட்டாசி -2017- http://tut-temple.blogspot.in/2017/09/2017.html

அகத்திய முனிவரின் பஞ்ச யாக ஷேத்திரம் - பஞ்செட்டி சதய பூஜை அழைப்பு - http://tut-temple.blogspot.in/2018/04/blog-post_74.html

குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!! - கூடுவாஞ்சேரி அகத்தியர் ஆயில்ய ஆராதனை அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2018/03/blog-post_89.html

கூடுவாஞ்சேரி அகத்தியர் ஆயில்ய ஆராதனை - 28/2/2018 - http://tut-temple.blogspot.in/2018/02/2822018.html

மனமது செம்மை யாக அகத்தியர் பூசை தானே - http://tut-temple.blogspot.in/2018/03/blog-post_6.html

மாசி மகம் கும்ப பௌர்ணமி ஹோமத் திருவிழா - http://tut-temple.blogspot.in/2018/03/blog-post_16.html

ஓம் அகஸ்த்திய நாதனே - ஸ்ரீ குருமண்டல தெய்வமே ! - http://tut-temple.blogspot.in/2018/03/blog-post_76.html


அகத்தியர் ஆயில்ய ஆராதனை (21/05/2018) - http://tut-temple.blogspot.com/2018/05/21052018_19.html



No comments:

Post a Comment