Subscribe

BREAKING NEWS

15 March 2019

ஞானத்தேவே! வருக! வருக!! - பங்குனி மாத அகத்தியர் ஆயில்ய ஆராதனை

அனைவருக்கும் வணக்கம்.

இன்று அகத்தியம் சிறிது உணர இருக்கின்றோம். அகத்தியரின் தேடலில் பல யுகங்களில் அகத்தியர் நாமம் கொண்டு பலர் இருந்துள்ளார்கள் என்பது கண்கூடு. நாம் இப்போது புறத்தே தான் அகத்தியரை கொண்டு வருகின்றோம்.இந்த புறத் தேடல் தான் அகத்தேடலுக்கு ஆதாரம். அகத்தியரின் சரித்திரம் என்று பல நூல்கள் காண கிடைக்கின்றன. இன்னும் அவற்றை யாம் படிக்கவில்லை. அகத்தில் உள்ள ஈசனை எந்த காலத்தில் பகுக்க முடியும்? காலம் தாண்டிய சித்தர் அவர். அகத்தியம் என்பது பேருணர்வு,பேரன்பு,பேராற்றல். இது தான் நாம் அகத்தில் உணரும் அகத்திய நிலை. இந்த நிலை வந்தால் நம் அகத்தில் உள்ள தீ - நம்மில் எழும் தீமை,நஞ்சு என அனைத்தும் அழிக்க வல்லது. பிறகென்ன நம் மனதுள் அகத்தியத்தால் பேராற்றல்,பேரன்பு கிடைக்கும். அப்போது பாரதி பாடிய தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா..நின்னை தீண்டும் இன்பம் தோன்றுதடா நந்தலாலா என்று நாமும் அனுபவிப்போம்.

நாம் கொண்டாடிய அகத்தியர் ஜெயந்தியின் துளிகளை இங்கே தொகுக்கின்றோம்.இடையிடையே மகாகுரு அகத்தியரை பற்றி திருமூலர் சுவடி மூலம் அருளிய  பாடலை சேர்க்க விரும்புகின்றோம். 

காலனையும் கைக்குள்ளே அடக்கிக்கொண்டு
கருணை என்ற கடல் தனிலே ஆட்சி செய்து
ஞாலமதில் ஞானத்தை காத்து நின்று
ஞானிகளை ஆக்கி நின்ற ஞானத்தேவே...





அன்றைய தினம் காலை மூத்தோனை வணங்கி விட்டு அகத்தியர் ஜெயந்தி கொண்டாட தயாரானோம். எப்போது நாம் மாமரத்து விநாயகர் கோயிலுக்கு சென்றாலும் முதல் தரிசனம் மூத்தோன் தரிசனம் தான். அடுத்து முருகர்,அகத்தியர் என தொடர்வோம். அன்று நாம் வாழைப்பழங்கள் வாங்கி வைத்து கோமாதாவிற்கு கொடுக்க மனதில் நினைத்தோம்.இதோ நீங்களே பாருங்கள். அதுவும் நடந்தேறியது.





தேவே நின் திருவடிகள் மூலன் இப்போ
தெரிவிப்பேன் குருமுனியின் ஆசியோடு
கூறிடுவேன் தலைவா நின் அடியைப் போற்றி
குருமுனியே திருமுனியே அறிந்தவர்க்கு...

அடுத்து வழக்கம் போல் பூசைக்கு தயாரானோம்.







அறிந்தவர்க்கு அறக்கடலாய் விளங்குவாரே
அருள் என்றல் அகத்தியன் தான் வணங்குவோர்க்கு
குறிப்பறிந்து குறை நீக்கும் குருவே கும்பன்
குந்தகத்தை உடைத்தெறியும் அருளே கும்பன்...

மேலும் விளக்கேற்றி வழிபடவும் சித்தம் கொண்டோம். இதோ அன்று முழுதும் ஆசிகள் தான்.







கும்பனருள் நிகர் சொல்ல எவருமில்லை
குகனும் சிவன் தனக்கு நிகர் அருளைத் தந்தார்
எம்மறையும் அவர் உரைத்தால் பின்தான் சொல்வோம்
ஏழு என்றால் நாங்கள் எல்லாம் கரத்தைக் கட்டி...
















கட்டி நின்று கால் பற்றி ஆசி கேட்போம்
கடாட்சமென்றல் அவர் ஈந்தால் உண்டு என்போம்
சட்டிசுட வேண்டுமென்றால் கும்பனைக்கேள்
சாகாவரம் வேண்டுமென்றால் கும்பனைக்கேள்...


அடுத்து அபிஷேகம் ஆரம்பம்.











கும்பனைக்கேள் குடும்பமுடன் ஞானம் சொல்வார்
கோடிலக்கம் வேண்டுமா கும்பனைக்கேள்
எம்மானும் கும்பனே எல்லோர்க்கும் தான்
எங்களுக்கு வாசி தந்த வாசி கும்பன்...




அங்கே ஒரு அம்மையார் அபிஷேக நீரை தூய்மை செய்து கொண்டிருந்தார்.இது தான் உழவாரப் பணி என்பது. மாதத்திற்கு ஒரு நாள் தான் நாம் இது போன்ற சேவைகளில் ஈடுபடுவோம் என்று எண்ணாது இது போல் நமக்கு வாய்ப்பு கிடைக்கும் போது செய்வது சிறப்பாகும்.




கும்பன் தான் ஔடதமும் நவக்கோளும் தான்
கும்பன் தான் குவலயமே வேறு ஏது
கும்பன் என்றால் ஆயிரத்தெட்டு  அண்டமெல்லாம்
குறுகி நின்று நடு நடுங்கும் பராக்கிரமங்கள்...

அடுத்து அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் அலங்கார தரிசனம். அதுவும் ராஜாவாக காண இருக்கின்றோம்.



ஓம் அகத்தீசாய நம என்று 108 முறை ஓதிய போது ..பிறவியின் நோக்கம் குருவை அடைவது. அதுவும் சித்தர்களை நாம் குருவாக அடைய எத்துனை பிறப்பெடுத்தோம். அகத்தியரின் நாமம் சொல்வது அவ்வளவு எளிதல்ல. மனிதனாக இருப்பதில் கொஞ்சம் புண்ணியம் செய்து இருந்தால் தான் அகத்தியரின் நாமம் சொல்ல முடியும்.


அன்று ஒரு சிறுமி பிறந்த நாள் என்று வாழ்த்து கேட்டார். அட..தித்திப்பே




பராக்கிரமம் இகபரமும் சொல்வார் கும்பன்
பாடிட்டால் மாற்றம் சொல்ல எவனும் இல்லை
பராக்கிரமும் வாளையைப் போல் அளிப்பார் கும்பன்
பட்டமரம் துளிர்க்குமடா கும்பன் சொன்னால்...










கும்பன் சொன்னால் குளவிகூட குதிறையாகும்
குருமுனிக்கு கிரியாவும் கடுகாய் நிற்கும்
கும்பனையே வணங்கியோர்க்கு குறைகளண்டா
குறையில்லா காப்பாக இருப்பார் என்றும்!

நம் குழுவினர் அனைவருக்கும் சிறப்பாக சங்கல்பம் செய்தோம். 










இதோ..அடுத்து நீங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் தீப ஆராதனை 







 அகத்தியரை அருட்குருவை அகத்துள் வைக்க வேண்டினோம். அடுத்து வழக்கம் போல் பிரசாத விநியோகம் மற்றும் மரியாதை செய்யும் நிகழ்வில் இருந்தோம்.








அன்று இரு அன்பர்களுக்கு அகத்தியர் அருள்நிலை கொடுக்க அருளாணை நமக்கு கிடைத்தது. புதிய அன்பர் ஒருவருக்கும், பூசையில் சுத்தம் செய்து உதவிய அந்த அம்மையாருக்கும் கொடுக்க குருவருள் நமக்கு காட்டியது.


குமரனின் சீடனை, ராஜாதி ராஜாவாக இங்கே காணுங்கள் 








பேராற்றல், பேரறிவு,பேரின்பம் தருகின்ற அகத்தியரை அகத்தியர் ஜெயந்தியை ராஜாதி ராஜாவாக காண நாம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் விரும்பினோம். நமது விருப்பம் நிலை பெற்றது. இரண்டு நாட்கள் அகத்தியர் ஜெயந்தி கொண்டாட நமக்கு குருவருள் காட்டியது. அடுத்து  பாண்டிச்சேரி ஸ்ரீ அகத்தியர் ஞானம் இல்ல திருக்கல்யாணத்திற்கு நாம் செல்வோம். 

பங்குனி  மாத அகத்தியர் ஆயில்ய ஆராதனை 


 மெய் அன்பர்களே.

நிகழும் மங்களகரமான விளம்பி வருடம் பங்குனி மாதம் 4  ஆம் நாள் (18/03/2019)  திங்கட்கிழமை   ஆயில்ய நட்சத்திரமும், அமிர்த யோகமும் கூடிய சுப தினத்தில்காலை  8:30 மணி முதல் கூடுவாஞ்சேரி - மாமரத்து விநாயகர் ஆலயத்தில் அருள்பாலிக்கும் அகத்திய மகரிஷிக்கு அபிஷேகம், அலங்காரம் செய்து ஆயில்ய ஆராதனை செய்ய உள்ளோம். அனைவரும் வருகை புரிந்து சித்தர்களின் அருளாசி பெறும்படி வேண்டுகின்றோம்.

தொடர்புக்கு : 7904612352/9677267266
tut-temple.blogspot.in
https://www.facebook.com/thedalullathenikalaai/
அகத்தியனை அருட்குருவை அகத்துள் வைப்போம்.
- அடுத்த பதிவில் சந்திப்போம்.


மீள்பதிவாக:-

 அகத்தியரை அருட் குருவை அகத்துள் வைப்போம் - அகத்தியர் ஜெயந்தி பதிவு - https://tut-temple.blogspot.com/2019/03/blog-post.html
ஸ்ரீ வினை தீர்த்த விநாயகர் ஆலயம் - 7 ம் ஆண்டு அகத்தியர் அவதார பெருவிழா - http://tut-temple.blogspot.com/2018/12/7.html

கும்பமுனி குருவே சரணம்! சரணம்!! - http://tut-temple.blogspot.com/2018/12/blog-post_51.html

அனுவாவி ஸ்ரீ அகத்தியர் ஆயில்யம் நட்சத்திர குருபூஜை பெருவிழா (26/12/2018) - http://tut-temple.blogspot.com/2018/12/26122018_22.html


தூசி கிராமத்தில் ஸ்ரீ அகத்தியர் ஜெயந்தி (26/12/2018) - http://tut-temple.blogspot.com/2018/12/26122018_19.html

பாண்டிச்சேரி ஸ்ரீ அகத்தியர் ஞானம் இல்ல திருக்கல்யாணத்திற்கு வாங்க! - http://tut-temple.blogspot.com/2018/12/blog-post_18.html

திருச்செந்தூரில் திருவிழா - ஸ்ரீ அகத்தியர் ஜெயந்தி (26/12/2018) - http://tut-temple.blogspot.com/2018/12/26122018.html 
அகத்திய மகரிஷி நம என்றென்றோது - ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - https://tut-temple.blogspot.com/2018/10/blog-post_29.html


வாழ வழி காட்டும் குருவே வருக - ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - http://tut-temple.blogspot.com/2018/10/blog-post_3.html

அன்பின் ஈசனே போற்றி - ஆவணி மாத அகத்தியர் ஆயில்ய ஆராதனை - http://tut-temple.blogspot.com/2018/09/blog-post_3.html 
அகத்தின் ஈசனே போற்றி - ஆயில்ய ஆராதனை அறிவிப்பு (11/08/2018) - http://tut-temple.blogspot.com/2018/08/11082018.html

கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகர் கோயில்,அகத்தியர் ஆயில்ய ஆராதனை - 15/07/2018 - http://tut-temple.blogspot.com/2018/07/15072018.html
கூடுவாஞ்சேரி அகத்தியர் ஆயில்ய ஆராதனை - 17/06/2018 - http://tut-temple.blogspot.com/2018/06/17062018.html

எந்தையும் தாயும் - கூடுவாஞ்சேரி அகத்தியர் ஆயில்ய ஆராதனை அறிவிப்பு 21/05/2018  - http://tut-temple.blogspot.com/2018/05/21052018.html

மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டா - கூடுவாஞ்சேரி அகத்தியர் ஆயில்ய ஆராதனை அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2018/04/blog-post_22.html

அகத்தியருக்கு ஆயில்ய ஆராதனை -புரட்டாசி -2017- http://tut-temple.blogspot.in/2017/09/2017.html

அகத்திய முனிவரின் பஞ்ச யாக ஷேத்திரம் - பஞ்செட்டி சதய பூஜை அழைப்பு - http://tut-temple.blogspot.in/2018/04/blog-post_74.html

குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!! - கூடுவாஞ்சேரி அகத்தியர் ஆயில்ய ஆராதனை அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2018/03/blog-post_89.html

கூடுவாஞ்சேரி அகத்தியர் ஆயில்ய ஆராதனை - 28/2/2018 - http://tut-temple.blogspot.in/2018/02/2822018.html

மனமது செம்மை யாக அகத்தியர் பூசை தானே - http://tut-temple.blogspot.in/2018/03/blog-post_6.html

மாசி மகம் கும்ப பௌர்ணமி ஹோமத் திருவிழா - http://tut-temple.blogspot.in/2018/03/blog-post_16.html

ஓம் அகஸ்த்திய நாதனே - ஸ்ரீ குருமண்டல தெய்வமே ! - http://tut-temple.blogspot.in/2018/03/blog-post_76.html

அகத்தியர் ஆயில்ய ஆராதனை (21/05/2018) - http://tut-temple.blogspot.com/2018/05/21052018_19.html


No comments:

Post a Comment