Subscribe

BREAKING NEWS

03 September 2018

அன்பின் ஈசனே போற்றி - ஆவணி மாத அகத்தியர் ஆயில்ய ஆராதனை

அனைவருக்கும் வணக்கம்.

மாதத் தொடக்கத்தில் எப்படியும் அன்னதானம் போன்ற பதிவுகள் நம் தலத்தில் வெளியிடப்படும்.இம்முறை குருவருளாலே கூடுவாஞ்சேரியில் நடைபெற்ற மனைவி நல வேட்பு நாள் விழா பற்றிய அறிவிப்பைத் தந்திருதோம். இந்த விழாவிற்கு நாம் செல்ல வேண்டும் என்று நினைக்கவில்லை. குரு ...நம்மை சும்மா விடுவாரா என்ன? எம் பெற்றோரோடு விழாவிற்கு செல்லப் பணித்தார். நேற்றைய மனைவி நல வேட்பு நாள் விழாவில் சென்று வந்தோம். எம் அன்னை, இது போல் தேனியில் நடக்கும் போது நான் மட்டுமே சென்று வருவேன். ஆனால் இன்று நாங்கள் இருவரும், குருவின் அருள் நிறை பூமியில் இந்த விழாவில் பங்கேற்றதே போதும் ! என்றார். இது மிகவும் ஆனந்தமாக இருந்தது. பொதுவாக ஒரு திருமண மண்டபத்தில் ஒரே ஒரு தம்பதியருக்கு திருமணம் நடைபெறும். ஆனால் மனைவி நல வேட்பு நாள் விழாவில், ஒரே திருமண மண்டபத்தில் சுமார் 50 தமபதியருக்கு திருமணம் நடைபெற்றது. இதனுடன் நடைபெற்ற கலைநிகழ்ச்சிகள் ..அப்பப்பா..ஒவ்வொரு நிகழ்வும் சுவையாய் இருந்தது. நிகழ்வின் ஆரம்பம் மற்றும் மதியம், உண்ட உணவு ..உயிர் உள்ள வரை உணர்த்தப்படும்.  சரி..குருவருள் வழி நடத்த, இந்த அனுபவத்தை தனிப் பதிவாக அளிக்கின்றோம்.

சரி..இந்த மாத அகத்தியர் ஆயில்ய ஆராதனை பற்றி பேசுவோம்.

சித்தருக்கெல்லாம் தலைமை சித்தராய் விளங்குகின்ற அகத்தியரை பற்றிய "அகத்தியர் காவியம் பன்னிரெண்டாயிரம்" வாயிலாக சில கருத்துக்களை மட்டுமே தெரிந்து கொள்ள முடிகிறது. அகத்தியர் அனந்தசயனம் என்ற திருவனந்தபுரத்தில் சமாதியடைந்ததாகக் கூறப்படுகிறது. ஒரு சிலர் அவர் கும்பகோணத்தில் உள்ள கும்பேசுவரர் கோவிலில் சமாதி கொண்டிருப்பதாகக் கூறுகின்றனர்.

    தூங்கெயிலெறிந்த தொடித்தோட் செம்பியன் காலத்தில் காவிரி பூம்பட்டிணத்தில் இந்திர விழாவை எடுப்பித்தார் அகத்தியர்.

    புதுச்சேரிக்கு அருகிலுள்ள ‘உழவர் கரை’யில் ஆசிரமம் அமைத்து வேதபுரி பல்கலைக் கழகத்தில் தமிழை போதித்தார். எனவே அவர் தங்கியிருந்த பகுதி ‘அகத்தீஸ்வரம்’ என்று அழைக்கப்பட்டு அங்கு பெரிய சிவாலயம் கட்டப்பட்டது. அதனை அகத்தீஸ்வரமுடையார் ஆலயம் என்றும் கூறுகின்றனர்.


அகத்தியரின் சிறப்புகள்

அகத்தியர் தோற்றம் பற்றியும் சிறப்புச் செயல்கள் பற்றியும் பல கதைகள் உள்ளன.

   தாரகன் முதலிய அரக்கர்கள் உலகை வருத்த, அவர்களை அழிக்க இந்திரன், வாயு, அக்கினி ஆகியோர் பூமிக்கு வந்தார்கள். இவர்களைக் கண்ட அசுரர்களோ கடலுக்குள் ஒளிந்தார்கள். இந்திரனின் யோசனைப்படி அக்கினி வாயுவுடன் கூடி பூமியில் விழுந்து அகத்தியராய் அவதரித்தார் என்றும், மிர்திரர் குடத்திலிட்ட வீரியத்திலிருந்து அகத்தியரும், வருணன் தண்ணீரிலிட்ட வீரியத்திலிருந்து வசிஷ்டரும் அவதரித்தனர் என்றும் பலவாறான கருத்துகள் நிலவுகின்றன. குடத்திலிருந்து தோன்றியமையால் அகத்தியர் குடமுனி, கும்பயோகி என்னும் பெயர்களைப் பெற்றார் எனக் கூறப்படுகிறது. இவ்வாறு பிறவி பெற்ற அகத்தியர், இந்திரன் வேண்டுகோளுக்கிணங்க சமுத்திர நீர் முழுவதையும் குடித்து விட, இந்திரன் அசுரர்களை அழித்தார். அதன்பின் நீரை மீண்டும் கடலுள் விடுவித்தார் அகத்தியர்.

    அகத்தியர் நீரின் மேல் படுத்தபடியே பன்னிரெண்டாண்டுகள் கடுந்தவமியற்றி அரிய சக்திகளை(ஆற்றல்களைப்) பெற்றார்.

    அகத்தியர் தம் முன்னோர்களுக்காக விதர்ப்ப நாட்டை அடைந்து அவ்வரசன் மகள் உலோபமுத்திரையை மணந்து தென்புலத்தார் கடனை தீர்த்தார்.

    கைலையில் நடந்த சிவபெருமான் திருமணத்தின் போது வடதிசை தாழ்ந்து தெந்திசை உயர, அகத்தியரை தென் திசைக்கு செல்லுமாறு சிவபெருமான் கட்டளையிட்டார். இதனால் தெற்கே மேருமலை நோக்கிப் பயணித்தார் அகத்தியர். மேருமலைக்கு செல்ல வழிவிடாமல் நின்ற விந்தியமலை, அகத்தியரைக் கண்டதும் பணிந்து தாழ்ந்து நின்றது. தான் தென் திசை சென்று வரும் வரையில் பணிந்து இருப்பாயாக என்று அதனிடம் கூறிச் சென்ற அகத்தியர், மீண்டும் வடதிசை செல்லாதிருந்தார். ஆதலால் விந்திய மலையும் அதன் பின் உயரவில்லை எனக்கூறப்படுகிறது.

    தென் திசைக்கு வந்த அகத்தியர் பொதிகை மலையில் தங்கி முருகக் கடவுளின் ஆணைப்படி அகத்தியம் என்னும் நூலை இயற்றினார்.

    இராமபிரானுக்கு சிவகீதையை போதித்தவர் அகத்தியர்

    சிவ பூசை செய்வதற்காக கமண்டலத்தில் அகத்தியர் கொண்டு வந்த கங்கை நீரை விநாயகர் காகமாக உருக் கொண்டு சாய்த்துவிட கமண்டலத்திலிருந்து வழிந்து ஓடிய நீரே காவிரி ஆறு ஆனது.

    இலங்கை மன்னர் இராவணனை தம் இசை திறத்தால் வென்றார் அகத்தியர்.

    அகத்தியர் இந்திரன் சபைக்கு சென்றபோது இந்திரன் ஊர்வசியை நடனமாட செய்தான். ஊர்வசி இந்திரன் மகன் சயந்தனிடம் கொண்ட காதலால் தன்னிலை மறந்தாள். அதனால் அகத்தியர் சயந்தனையும் ஊர்வசியையும் பூமியில் பிறக்கும்படி சபித்தார்.

    வாதாபி, வில்வளவன் என்னும் அரக்கர் இருவரில் வில்வளவன் வேதியர் உருக்கொண்டு வழியில் செல்லும் வேதியர், முனிவர் முதலானோரை விருந்திற்கு அழைத்து வாதாபியைக் கறியாய்ச் சமைத்துப் படைத்து, வாதாபியை திரும்ப அழைக்க; அவன் அவர்கள் வயிற்றைக் கிழித்து வெளியே வருவதால் அவர்கள் இறந்து போவார்கள். முனிவர்கள் இதனை அகத்தியரிடம் முறையிடவே, அகத்தியர் அவர்களிடம் விருந்து உண்ண சென்றார். வில்வளவன் உணவு படைத்துவிட்டு அகத்தியர் வயிற்றிலிருக்கும் வாதாபியை கூப்பிட அகத்தியர் “வாதாபே ஜீர்ணோ பவ” என்று வயிற்றைத் தடவ வாதாபி இறந்தான். நிலமையை அறிந்த வில்வளவன் அகத்தியரிடம் மன்னிப்பு கோரினான்.

இவை போல் அகத்தியரைக் குறித்து புராணங்களில் உள்ள கதைகள் பற்பல.

சித்த வைத்தியம்

அகத்திய மாமுனி சித்த வைத்தியத்திற்கு செய்த பணி அளவிடற்கரியது. பல நோய்களுக்கும் மருத்துவ சந்தேகங்களுக்கும் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தெளிவாக விளக்கம் கொடுத்துள்ளார். அகத்தியர் பெயரில் வெளியாகியுள்ள சமரச நிலை ஞானம் என்னும் நூலில் உடம்பில் உள்ள முக்கியமான நரம்பு முடிச்சுகள் பற்றிய விளக்கம் காணப்படுகிறது. அகத்தியர் ஐந்து சாஸ்திரங்கள் என்னும் நூலில், பதினெட்டு வகையான மனநோய் பற்றியும் அதற்குரிய மருத்துவம் பற்றியும் விளக்கப்பட்டிருக்கின்றன. அகத்தியர் அஷ்ட மாசத்தில் குழந்தைகளுக்கு ஏற்படும் தோஷங்கள் பற்றி கூறியுள்ளார்.


அகத்தியர் எழுதிய நூல்கள்

அகத்தியர் எழுதிய நூல்களில் கிடைத்தவை:

    அகத்தியர் வெண்பா
    அகத்தியர் வைத்தியக் கொம்மி
    அகத்தியர் வைத்திய ரத்னாகரம்
    அகத்தியர் வைத்தியக் கண்ணாடி
    அகத்தியர் வைத்தியம் 1500
    அகத்தியர் வைத்திய சிந்தாமணி
    அகத்தியர் கர்ப்பசூத்திரம்
    அகத்தியர் ஆயுள் வேத பாஷ்யம்
    அகத்தியர் வைத்தியம் 4600
    அகத்தியர் செந்தூரம் 300
    அகத்தியர் மணி 4000
    அகத்தியர் வைத்திய நூல் பெருந்திரட்டு
    அகத்தியர் பஸ்மம் 200
    அகத்தியர் நாடி சாஸ்திரம்
    அகத்தியர் பக்ஷணி
    அகத்தியர் கரிசில் பஸ்யம் 200
    சிவசாலம்
    சக்தி சாலம்
    சண்முக சாலம்
    ஆறெழுத்தந்தாதி
    காம வியாபகம்
    விதி நூண் மூவகை காண்டம்
    அகத்தியர் பூசாவிதி
    அகத்தியர் சூத்திரம் 30

போன்ற நூல்களை இவர் எழுதியதாகக் கூறப்படுகிறது. மேலும்

    அகத்திய ஞானம் என்னும் அகத்தியம் என்னும் ஐந்திலக்கணம்
    அகத்திய சம்ஹிதை என்னும் வடமொழி வைத்திய நூலும் இவரால் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.


அகத்தியர் பெருமானின் பூசை முறைகள்

தேகசுத்தியுடன் அழகிய சிறு பலகையில் மஞ்சள் இட்டு மெழுகி, பக்தியுடன் கோலமிட்டு, அம்மஞ்சள் பலகையின் மேல் சுவாமிகளின் படத்தை வைத்து, அதற்கு முன்பு மஞ்சள், குங்கும திலகமிட்டு அலங்கரிக்கப்பட்ட குத்துவிளக்கில் இரு முக தீபம் ஏற்றி வைக்க வேண்டும். படத்தின் முன்பாக பித்தளை அல்லது செம்பு அல்லது வெள்ளியினால் செய்யப்பட்ட உருண்டையான செம்பில் சுத்தமான தண்ணீரை நிரப்பி வைக்க வேண்டும்.

பின் சித்தரின் தியானச் செய்யுளை கண்மூடி மனதார கூறி பிறகு பின்வரும் பதினாறு போற்றிகளை சொல்லி வில்வம், துளசி, கதிர்பச்சை, விபூதி பச்சை போன்ற பச்சிலைகளைக் கொண்டு அர்ச்சிக்க வேண்டும்.


பதினாறு போற்றிகள்

    தேவாதி தேவர்களைக் காத்தவரே போற்றி!
    சிவசக்தி திருமண தரிசனம் கண்டவரே போற்றி!
    தென் திசை, வடதிசையைச் சமப்படுத்தியவரே போற்றி!
    விந்திய மலையின் அகந்தையை போக்கியவரே போற்றி!
    கும்பத்திலுதித்தக் குறு முனியே போற்றி!
    சித்த வைத்திய சிகரமே போற்றி!
    சுவேதனின் சாபம் தீர்த்தவரே போற்றி!
    இசைஞான ஜோதியே போற்றி!
    உலோப முத்திரையின் பதியே போற்றி!
    காவேரி தந்த கருணையே போற்றி!
    அகத்தியம் தந்த அருளே போற்றி!
    இராமபிரானுக்கு சிவ கீதையருளியவரே போற்றி!
    அசுராசுரர்களை அழித்தவரே போற்றி!
    அரும் மருந்துகளை அறிந்தவரே போற்றி!
    இசையால் இராவணனை வென்றவரே போற்றி!
    இன்னல்கள் போற்றி இன்பம் தரும் அகத்திய பெருமானே போற்றி! போற்றி!


நிவேதனம்

பஞ்சாமிர்தம், பழங்கள், சக்கரைப்பொங்கல், இளநீர் போன்றவற்றுடன் இளம் பச்சை நிற வஸ்திரம் அணிவித்து புதன்கிழமை பூசை செய்யவும். நிறைவாக “ஓம் ஸ்ரீம் அகத்திய முனிவரே போற்றி!” என்று 108 முறை சொல்லி ஆராதனை செய்ய வேண்டும்.


அகத்திய முனிவரின் பூசா பலன்கள்

    இசையிலும் கவிதையிலும் மேன்மையுண்டாகும்.
    கல்வித்தடை நீங்கும்.
    புதன் பகவானால் உண்டான தோஷம் நீங்கும்.
    முன்வினை பாவங்கள் அகலும்.
    பித்ருசாபம் நீங்கி அவர்களின் ஆசி கிடைக்கும்.
    பேரும், புகழும், மதிப்பும் தேடி வரும்.
    பூர்விக சொத்துக்கள் கிடைக்கும்.
    சகலவிதமான நோய்களும் தீரும்.
    குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும்.

சென்ற மாதம் நடைபெற்ற ஆயில்ய ஆராதனை இனி நாம் கண்டு களிக்க உள்ளோம்.



                                                 அபிஷேகப் பொருட்கள் தயார் நிலையில்


இம்முறை தாம்பரத்தில் இருந்து அனந்தகிருஷ்ணன் தம்பதியர் வந்திருந்தார்கள். இம்முறை விடுமுறை நாளில் தான் ஆயில்ய பூசை நடைபெற்றது. 






சங்கல்பம் செய்த போது 



                                  
                                                  அனைவருக்கும் பிரசாதம் வழங்கிய போது 



இதோ..நீங்கள் ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கும் நம் ஐயனின் அற்புத தரிசனம்.







மெய் அன்பர்களே.

நிகழும் மங்களகரமான விளம்பி வருடம் ஆவணி  மாதம் 23 ஆம் நாள் (08/09/2018)  சனிக்கிழமை  ஆயில்ய நட்சத்திரமும்,
அமிர்த யோகமும் கூடிய சுப தினத்தில்காலை  9 மணி முதல் கூடுவாஞ்சேரி - மாமரத்து விநாயகர் ஆலயத்தில் அருள்பாலிக்கும் அகத்திய மகரிஷிக்கு அபிஷேகம், அலங்காரம் செய்து ஆயில்ய ஆராதனை செய்ய உள்ளோம். அனைவரும் வருகை புரிந்து சித்தர்களின் அருளாசி பெறும்படி வேண்டுகின்றோம்.




தொடர்புக்கு : 7904612352/9677267266
tut-temple.blogspot.in
https://www.facebook.com/thedalullathenikalaai/

அகத்தியனை அருட்குருவை அகத்துள் வைப்போம்.

- அடுத்த பதிவில் சந்திப்போம்.

மீள்பதிவாக:-

அகத்தின் ஈசனே போற்றி - ஆயில்ய ஆராதனை அறிவிப்பு (11/08/2018) - http://tut-temple.blogspot.com/2018/08/11082018.html

கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகர் கோயில்,அகத்தியர் ஆயில்ய ஆராதனை - 15/07/2018 - http://tut-temple.blogspot.com/2018/07/15072018.html

கூடுவாஞ்சேரி அகத்தியர் ஆயில்ய ஆராதனை - 17/06/2018 - http://tut-temple.blogspot.com/2018/06/17062018.html

எந்தையும் தாயும் - கூடுவாஞ்சேரி அகத்தியர் ஆயில்ய ஆராதனை அறிவிப்பு 21/05/2018  - http://tut-temple.blogspot.com/2018/05/21052018.html

மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டா - கூடுவாஞ்சேரி அகத்தியர் ஆயில்ய ஆராதனை அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2018/04/blog-post_22.html

அகத்தியருக்கு ஆயில்ய ஆராதனை -புரட்டாசி -2017- http://tut-temple.blogspot.in/2017/09/2017.html

அகத்திய முனிவரின் பஞ்ச யாக ஷேத்திரம் - பஞ்செட்டி சதய பூஜை அழைப்பு - http://tut-temple.blogspot.in/2018/04/blog-post_74.html

குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!! - கூடுவாஞ்சேரி அகத்தியர் ஆயில்ய ஆராதனை அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2018/03/blog-post_89.html

கூடுவாஞ்சேரி அகத்தியர் ஆயில்ய ஆராதனை - 28/2/2018 - http://tut-temple.blogspot.in/2018/02/2822018.html

மனமது செம்மை யாக அகத்தியர் பூசை தானே - http://tut-temple.blogspot.in/2018/03/blog-post_6.html

மாசி மகம் கும்ப பௌர்ணமி ஹோமத் திருவிழா - http://tut-temple.blogspot.in/2018/03/blog-post_16.html

ஓம் அகஸ்த்திய நாதனே - ஸ்ரீ குருமண்டல தெய்வமே ! - http://tut-temple.blogspot.in/2018/03/blog-post_76.html

அகத்தியர் ஆயில்ய ஆராதனை (21/05/2018) - http://tut-temple.blogspot.com/2018/05/21052018_19.html

No comments:

Post a Comment