Subscribe

BREAKING NEWS

31 October 2018

ஐப்பசி மாத மோட்ச தீப வழிபாடு அழைப்பிதழ் - 7/11/2018

அனைவருக்கும் வணக்கம்.

நம் தளத்தின் மூலம் நம்மால் முடிந்த அளவில்  அறப்பணிகள், சேவைகள்,பூசைகள் என செய்து வருவது அனைவரும் அறிந்ததே. வருகின்ற தீபாவளி பண்டிகையை அருகில் உள்ள ஏதேனும் இல்லத்தில் கொண்டாட உள்ளோம்.இதன் பொருட்டு உதவி வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.மாதம் தோறும் அகத்தியர் பெருமானுக்கு ஆயில்ய ஆராதனை செய்து வருகின்றோம். இது அகத்தியர் பெருமானுக்கு மட்டும் நடைபெறுகின்றது என்று நீங்கள் நினைக்க வேண்டாம். நேரில் வந்து பார்த்தால் தான் தெரியும். இது அனைத்து சித்தர்கள், மகான்களுக்கான பூசை. ஆயில்ய ஆராதனையில் சித்தர்கள் போற்றித் தொகுப்பை நாம் ஓதி வருகின்றோம். இதுவே நம்மை வழி நடத்தி வருகின்றது.

இந்த பயணத்தில் நாம் அடுத்து அடி எடுத்து வைத்தது மோட்ச தீப வழிபாடு. சென்ற ஆடி மாதம் கோலாகலமாக சிறப்பாக கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகர் ஆலயத்தில் வழிபாடு நடைபெற்றது. இந்த வழிபாட்டில் நமக்கு நேரிடையாக வந்து , முதல் வழிபாட்டை துவக்கி வைத்த அகத்தியர் அடியார்கள் பாதம் தொட்டு வணங்குகின்றோம். இதோ இந்த மாதம் ஐப்பசி மோட்ச தீப வழிபாட்டிற்கு அனைவரையும் இந்த பதிவின் மூலம் அழைக்கின்றோம். இப்போது தான் ஆரம்பித்தது போல் இருந்தது. அதற்குள் ஆடி,ஆவணி,புரட்டாசி என மூன்று மோட்ச தீப வழிபாடு குருவருளால்  முழுமை பெற்றுள்ளது.

அனைவருக்கும் இங்கே பணிவான வேண்டுகோள் ஒன்றை சமர்ப்பிக்கிறோம். மோட்ச தீப வழிபாட்டின் பதிவுகளை, காணொளிகளை பார்த்து யாரும் தாமாக வழிபாட்டினை செய்ய வேண்டாம். குருவருள் இன்றி இந்த வழிபாடு முழுமை பெறாது. அப்படி இந்த வழிபாட்டை மேற்கொள்ள விரும்புபவர்கள் தங்களுக்கு தெரிந்த அருகில் உள்ள ஜீவ நாடியில் குருவிடம் உத்திரவு பெற்று மேற்கொண்டு வழிபாட்டை செய்யலாம். வேறு ஏதேனும் இந்த வழிபாடு சம்பந்தமாக நம்மை தொடர்பு கொள்ளலாம்.

சரி.சென்ற மாத நிகழ்வின் துளிகளை பார்த்துவிடுவோமா? மோட்ச தீபத்திற்கு அகல் விளக்குகள் வாங்கி தயார் செய்யப்பட்ட காட்சி.


இந்த நிகழ்வில் நம்மால் பங்கு கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்பட்டு விட்டது. கோயிலுக்குள் சென்று பார்க்கவும் முடியவில்லை. எனவே அனைத்து விதமான முன்னேற்பாடுகளும் செய்து விட்டு, நம் அன்பர்களிடம் சில வழிமுறைகளை கூறி இதனை தொடர்ந்து செய்க என்று கூறி விட்டு,கோயிலின் வெளியே இருந்தோம்.



இந்த முறை புரட்டாசி அமாவாசை என்பதால் எம் வீட்டிலிருந்து தங்கை, குடும்ப சகிதமாக வந்திருந்தார்கள். மேலும் போளூர் உமா அவர்கள். ஆவடி சதீஸ் அவர்கள் என அகத்திய அடியார்கள் புடை சூழ வந்தார்கள். அனைவரையும் கண்டு இன்புற்றோம்.


இதோ..மோட்ச தீப வழிபாட்டிற்கான ஆயத்த ஏற்பாடுகள் ஒவ்வொன்றாக நடைபெற்று வருகின்றதுட.









அன்பர்கள் அனைவரையும் கண்டு இன்புற்றோம். திருவொற்றியூர் கேசவன், பெருங்களத்தூர் ஆதி ஐயா என பட்டியல் நீண்டு கொண்டே சென்றது. வழக்கமாக நம் TUT அன்பர்கள் பரிமளம் அவர்கள் ,சந்திரசேகரன் அவர்கள் , செல்வி  அவர்கள், ராஜகுமாரன் அவர்கள் என அனைவரும் தத்தம் கடமை உணர்ந்து செயலாற்றினார். இதோ.தீபம் தயார் நிலையில் உள்ளது. நமக்கு குருக்களும் வழிகாட்டினார்.சிறிய அளவில் மோட்ச தீபம் பற்றி குருக்கள் கூறிவிட்டு இதோ..நீங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் மோட்ச தீப வழிபாடு ஆரம்பமாக உள்ளது.


இந்த முறை ஏழேழு விலங்குகளாக மூன்று அடுக்குகளில் விளக்கு வைத்துள்ளோம். ஒவ்வொரு வரிசையும் ஒவ்வொரு விதமாக ஏற்ற உள்ளோம். முதல் வரிசை கோயில் குருக்களையும், இரண்டாம் வரிசை ஆடவர்களையும், மூன்றாம் வரிசை மகளிரையும் வைத்து ஏற்றினோம்.






தீபம் ஏற்றியாகி விட்டது.அடுத்து மந்திர உச்சாடனம் செய்ய உள்ளோம். இம்முறை பித்ரு ஸ்துதி சேர்க்க சொல்லி உத்திரவு என்பதால் மொத்தம் மூன்று மந்திரங்கள் சொல்ல உள்ளோம். இதிலும் மகளிரை இணைக்க சொன்னோம். அதே போல் ஒவ்வொரு மந்திரமாக 108 முறை சொல்லி முடித்தார்கள்.














அடுத்து ஒவ்வொருவராக வந்து, அவர்களின் முன்னோர்களை நினைத்து வேண்டி, அங்கே பூக்கள் தூவி வழிபாடு செய்ய பணித்தார்கள். 21 தலைமுறை முன்னோர்களின் ஆசி வேண்டி நின்ற ஒவ்வொருவரையும் பார்க்கும் போது, இந்த பூமியில் நாம் பிறந்த நோக்கத்தை இவர்கள் அனைவரும் நிறைவேற்றி வருகின்றார்கள் என்பது உறுதியாக தெரிந்தது.

அடுத்து உணவு பரிமாறப்பட்டது.


அனைத்து நிகழ்வுகளும் சிறப்பாக நடந்து கொண்டிருந்தது.மீண்டும் ஒரு முறை நீங்களே பாருங்கள்.





இந்த மோட்ச தீப வழிபாடானது மிக மிக உயர்ந்த வழிபாடு.,இத்தகைய வழிபாட்டை நமக்கு பணித்த அனைத்து குருமார்களின் பாதம் பணிகின்றோம். அதே போல் சென்ற பூசையில் பங்கு கொண்டு, சிறப்பாக நடக்க ஒத்துழைப்பு நல்கி உதவிய அனைத்து அன்பர்களின் பாதம் பணிகின்றோம். இந்த மோட்ச தீப வழிபாடு ஒருவரால் நிகழ்த்தப்படுவதன்று. இது ஒரு கூட்டு வழிபாடு. யாரும் நமக்கு அழைத்து சொல்லவில்லை என்று நினைக்காது தாமாக முன்வந்து உதவுங்கள் என்று வேண்டுகின்றோம்.

இனிவரும் பதிவுகளில் அவ்வப்போது நமக்கு கிடைக்கின்ற செய்திகளை இங்கே பகிர்கின்றோம். சரி..இந்த மாத மோட்ச தீப வழிபாடு பற்றி கீழே கண்டு பங்கு பெறவும். வருபவர்கள் தங்களால் முடிந்த அளவில் நெய் மற்றும் எள்ளு வாங்கி கொண்டு வரவும்.

அன்றைய அமாவாசை அன்னதான சேவை காட்சிகள் இங்கே பகிர்கின்றோம்.







மெய் அன்பர்களே.

நிகழும் மங்களகரமான விளம்பி வருடம் ஐப்பசி மாதம் 21 ஆம் நாள் (07/11/2018) புதன்கிழமை மாலை  5 மணி முதல் கூடுவாஞ்சேரி - மாமரத்து விநாயகர் ஆலயத்தில் அருள்பாலிக்கும் அகத்திய மகரிஷி முன்னிலையில் பித்ருக்களின் ஆசி வேண்டி மோட்ச தீபம் ஏற்றி வழிபாடு செய்ய உள்ளோம். அனைவரும் வருகை புரிந்து முன்னோர்களின் அருளாசி பெறும்படி வேண்டுகின்றோம்.


தொடர்புக்கு : 7904612352/9677267266
tut-temple.blogspot.in
https://www.facebook.com/thedalullathenikalaai/

மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்.

மீள்பதிவாக:-

ஆவணி மாத மோட்ச தீப வழிபாடு அழைப்பிதழ் - http://tut-temple.blogspot.com/2018/09/blog-post_7.html

முன்னோர்களின் ஆசி பெற மோட்ச தீப வழிபாடு - http://tut-temple.blogspot.com/2018/05/blog-post_15.html

வளங்களை அள்ளித் தரும் மோட்ச தீப வழிபாடு - http://tut-temple.blogspot.in/2018/05/blog-post_29.html

21 தலைமுறை முன்னோர்களுக்காக மோட்ச தீபம் ஏற்றுவோம் - http://tut-temple.blogspot.in/2018/04/21.html

No comments:

Post a Comment