Subscribe

BREAKING NEWS

15 October 2018

நவராத்திரி மூன்றாம் நாள் தரிசனப் பதிவு

அன்பார்ந்த அன்பர்களே... 

அனைவருக்கும் வணக்கம். இன்றைய பதிவில் நவராத்திரி பதிவுகளை தொடர இருக்கின்றோம். சக்தி  இன்றேல் சிவம் இல்லை..சிவம் இன்றேல் சக்தி இல்லை.. நம்மை இயக்கும் சக்தியை..அன்னையை நாம் வெளிப்படவே இந்த நவராத்திரி விழா கொண்டாடி வருகின்றோம்.

நவராத்திரி வழிபாட்டின் மகிமையை உணர்த்தும் கதையை தெரிந்து கொள்ளலாம்.

காட்டில் கணவர் மனைவி வாழ்ந்து வருகிறார்கள். மிகவும் வறுமையில் இருக்கும் அவர்கள் மிகவும் துன்பத்தில் இருக்கிறார்கள் கணவருக்கு தீர முடியாத நோய் வேறு. அடுத்து என்ன செய்யப்போகிறோம்? உணவைத் தேடி செல்வதா? கணவருக்கான மருந்துகளை தேடுவதா? உணவா? பொருளா? மருந்தா என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தாள்.அப்போது வாசலில் யாரோ அழைக்கும் ஓசை கேட்டது.

உதவி கேட்டு மகரிஷி ஒருவர் வந்திருந்தார். அழுது வீங்கிய கண்களுடன் இந்தப் பெண்ணைப் பார்த்தவுடனேயே, மகரிஷி ஒரு உண்மையை கண்டுபிடித்தார். உன்னைப் பார்த்தால் அரச குடும்பத்தைச் சேர்ந்தவளைப் போல இருக்கிறது. என்ன ஆயிற்று? ஏன் இங்கே வந்திருக்கிறாய் ? என்று கேட்டார்.


'எங்களுடைய தயாதிகள் எங்கள் மீது பொறாமைபட்டு எங்களுடன் போர்புரிந்து எங்களை தோற்கடித்துவிட்டார்கள்' என்று வருத்தப்பட்டிருக்கிறாள். உண்மையை அறிந்த முனிவர் ஆறுதல் அளித்ததோடு, அருகில் இருக்கும் பஞ்சவடியில் எழுந்தருளியிருக்கும் அம்பிகையை பூஜை செய்தால் இழந்த ராஜ்ஜியம் மீண்டும் கிடைக்கும் அதோடு வம்சத்தை விரித்தி செய்ய புத்திரனும் பிறப்பான் என்கிறார்.

அதைக் கேட்டு மகிழ்ந்த அந்தப் பெண்மணி தன் கணவருடன் பஞ்சவடிக்கு செல்கிறாள். இவரின் வீட்டிற்கு வந்த அங்கிரஸ முனிவர் அங்கே இருந்தார். அவர் முன்னின்று நடத்திய நவராத்திரி பூஜையை செய்து வைத்தார்.


பூஜையை முறைப்படி முடித்த பின்னர் அங்கிரஸர் முனிவருடன் அவரின் ஆசிரமத்திற்கே சென்றனர். அங்கே அரசர் நோயிலிருந்து மீண்டார். அரசிக்கு சூரியப் பிரதாபன் என்ற ஆண் குழந்தை பிறந்தது.அங்கிரஸ முனிவரை குருவாக ஏற்ற சூரியப் பிரதமன் அனைத்து கலைகளையும் கற்றுத் தேர்ந்தான். தன் பெற்றோர் ஏமாற்றப்பட்ட கதையை கேட்டு , பகைவர்களுடன் போரிட்டு தங்களின் நாட்டை மீட்டு வருகிறான்.இதன் பொருட்டே நவராத்திரி கொண்டாடப்பட்டு வருவதாக ஐதீகம்.
 நவராத்திரி விழா ஆண்டு தோறும் புதுப்புது மாற்றங்களுடன் கொண்டாடப்படும் விழாக்களுள் ஒன்று. நவம் என்ற சொல்லுக்கு ஒன்பது என்றும் புதியது என்றும் பொருள். மகிஷாசூரனை அழிப்பதற்காக அம்மன் ஒன்பது நாள் போர் செய்து பத்தாம் நாள் வெற்றி பெறுகிறாள்.

சும்பன், நிசும்பன் என்ற அசுரர்கள் பிரம்மனின் அருளால் சாகாவரம்பெற்றனர். இருந்தாலும் தங்களுக்கு சமமான பெண்ணால் மட்டுமே எங்களுக்கு மரணம் ஏற்பட வேண்டும் என்ற வரத்தை பெற்றிருந்தனர். எனவே தேவர்களை ஜெயித்தும் அதர்மங்களை விளைவித்தும் வந்தனர். அவர்களது அழிவு காலத்தில் ஆதிபராசக்தியிடமிருந்து கவுசிகியும், காளிகா என்ற காலராத்திரியும் தோன்றினர். காளிகாவுக்கு துணையாக முப்பெரும்தேவியின் வடிவான அஷ்டமாதர்களும் அஷ்ராத்திரிகளாக தோன்றினர்.

பிராம்மணி என்ற பிரம்ம சக்தி அன்ன வாகனத்தில் அட்சமாலை, கமண்டலத்துடனும் வைஷ்ணவி என்ற விஷ்ணுசக்தி கருட வாகனத்தில் சங்கு சக்கரம் கதை தாமரைப்பூவுடனும், மகேஸ்வரி என்ற சிவனின் சக்தி ரிஷப வாகனத்தில் திரிசூலம் மற்றும் வரமுத்திரையுடனும், கவுமாரி என்ற கார்த்திகேய சக்தி வேலாயுதத்துடனும் மாகேந்திரி என்ற இந்திரனின் சக்தி ஐராவதத்தில் வஜ்ராயதத்துவம் வாராஹி என்ற வாராஹிருடைய சக்தி எருமை வாகனத்தில் கலப்பையுடனும், சாமுண்டா என்ற பைரவரின் சக்தி எம வாகனத்தில் கத்தியை ஏந்தியவளாகவும் நரசிம்மஹி என்ற நரசிம்மரின் சக்தி கூரிய நகத்தை ஆயுதமாகவும் கொண்டு கமல பீடத்தில் தோன்றினார்கள். இவர்கள் காளிகா என்ற சண்டிகா தேவியுடன் ஒன்பது ராத்திரிகளாயினர் இந்த நவராத்திரி தேவதைகள் சும்ப நிசும்பர்களை ஒழித்தனர்.

அசுரர்களின் கொடுமையில் இருந்து விடுபட்ட தேவர்கள் கவுசிகியான அம்பிகையையும், நவராத்திரி தேவதைகளையும் போற்றி துதித்தனர். இந்த வைபவம் நவராத்திரி எனப்படுகிறது.
நவராத்திரி விழாவில் 9 படிகள் உணர்த்தும் தத்துவம் இடம் பெறுகின்றது.இதோ விளக்கமாக தருகின்றோம்.

நவராத்திரியின் போது வீட்டில் வைக்கப்படும் கொலு மேடையானது, 9 படிகள் கொண்டதாக அமைக்கப்பட்டு இருக்க வேண்டும். இந்த ஒவ்வொரு படிகளும் ஒவ்வொரு தத்துவத்தை மிக எளிதாக சொல்லிச் செல்கின்றன.

1ஆம் படி: கொலு மேடையில் கீழிருந்து முதல் படியில் ஓரறிவு கொண்ட உயிர்களான புல், செடி, கொடி போன்ற தாவரங்களின் பொம்மைகள் கொலுவாக வரிசைப்படுத்தி வைக்க வேண்டும்.

2ஆம் படி: அடுத்ததாக அமைந்த இரண்டாவது படியில் ஈரறிவு கொண்ட நத்தை, சங்கு போன்ற உயிர்களின் பொம்மைகளில் கொலுவில் வைக்க வேண்டும்.

3ஆம் படி: மூன்றறிவு படைத்த உயிரினங்களான கறையான், எறும்பு போன்றவற்றின் பொம்மைகளை கொண்டு மூன்றாவது படியை அமைக்க வேண்டும்.

4ஆம் படி: நான்கறிவு உயிர்களை விளக்கும் நண்டு, வண்டு போன்றவற்றின் பொம்மைகளை வைத்து நான்காவது படியை அலங்கரிக்க வேண்டும்.

5ஆம் படி: ஐந்தறிவு கொண்ட உயிர்களான மிருகங்கள் மற்றும் பறவைகளின் பொம்மைகளை வைத்து ஐந்தாவது படியை அமைக்க வேண்டும்.

6ஆம் படி: இந்த படி மனிதர்களுக்கு உரியது. எந்த உயிருக்கும் இல்லாத சிந்திக்கும், சிரிக்கும் சக்தியை இறைவன் மனிதனுக்கு வழங்கியுள்ளார். அத்தகைய ஆறாவது அறிவு கொண்ட மனிதர்களின் பொம்மைகளை வைத்து ஆறாவது படியை நிர்மாணிக்க வேண்டும்.

7ஆம் படி: மனித நிலையிலிருந்து உயர்நிலையை அடைந்த சித்தர்கள், ரிஷிகள், மகரிஷிகள் (ரமணர், வள்ளலார்) போன்றோரின் பொம்மைகள் கொண்டு ஏழாவது படியை அமைக்க வேண்டும்.

8ஆம் படி: தேவர்கள், அட்டதிக்கு பாலகர்கள், நவக்கிரக அதிபதிகள் போன்ற தெய்வங்கள், தேவதைகள் போன்றோரின் பொம்மைகளைக் கொண்டு எட்டாவது படியை அலங்காரம் செய்ய வேண்டும்.

9ஆம் படி: பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய முப்பெரும் தேவர்கள், சரஸ்வதி, லட்சுமி, பார்வதி தேவி போன்ற முப்பெரும் தேவிகள் ஆகிய தெய்வங்களையும், அவர்களின் நடுவில் நடுநாயகமாக ஆதிபராசக்தியின் உருவ பொம்மையையும் வைத்து ஒன்பதாவது படியை நிறைவு செய்ய வேண்டும். மனிதன் படிப்படியாக உயர்ந்து தெய்வ நிலையை அடைய வேண்டும் என்பதற்காகவே இப்படி கொலு அமைப்பது வழக்கத்தில் உள்ளது.


                            பெரம்பலூரில் இருந்து அன்னை லோபாமுத்ரா தரிசனம்.




தனலட்சுமி அலங்காரத்தில் 


 மாமரத்து விநாயகர் கோயிலில் தனலட்சுமி அலங்காரத்தில் அன்னையை தரிசித்தோம்., அன்று சிந்தனை விருந்து சிறப்பாக இருந்தது.



அடுத்து வேலி அம்மன் கோயிலுக்கு சென்றோம்.


நல்ல கூட்டம், கோயில் களை கட்டிய வண்ணம் இருந்தது.ஒரு திருவிழா போல் தான் இருந்தது.






ஆத்தாளை எங்கள் அபிராமவல்லியை அண்டம் எல்லாம்
பூத்தாளை மாதுளம் பூ நிறத்தாளை புவி அடங்கக்
காத்தாளை ஐங்கணைப் பாசாங்குசமும் கரும்புவில்லும் அங்கை
சேர்த்தாளை முக்கண்ணியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கும் இல்லையே

என்று தொழுத தருணம். அப்படியே அங்கேயே இருக்கலாம் என்று தோன்றியது.மீண்டும் மீண்டும் அன்னையிடமிருந்து சக்தி பெற்றோம்.







இங்கு கொலுவும் விசேஷம். ஆற,அமர கண்டு களித்தோம்.







மீண்டும் கோயிலுக்கு வெளியே வந்து அம்மனை உற்சவர் ரூபத்தில் கண்டோம்.




மீனாட்சி அம்மன் அலங்காரம்..சொக்கா..சொக்கா ..என்று சொக்கித் தான் போனோம். கலைநிகழ்ச்சியும் பட்டையை கிளப்பிக் கொண்டிருந்தார்கள்.


மூன்று தரிசனம் பெற்றோம். நம்மை வழிநடத்தும் இச்சா சக்தி,கிரியா சக்தி, ஞான சக்திக்கு நன்றி.

மீண்டும் அடுத்த தரிசனத்தில் தொடர்வோம்.

மீள்பதிவாக:-

நவராத்திரி இரண்டாம் நாள் தரிசனம் - http://tut-temple.blogspot.com/2018/10/blog-post_13.html

நவராத்திரி 75 - முதல் நாள் தரிசனம் - http://tut-temple.blogspot.com/2018/10/75.html

நவராத்திரி விழா கொண்டாட வாருங்கள் - http://tut-temple.blogspot.com/2018/10/blog-post_10.html

தாமிரபரணி தாயே போற்றி - http://tut-temple.blogspot.com/2018/10/blog-post_12.html

நவராத்திரி சிறப்பு பதிவு - அம்மன் நெய்க்குளம் தரிசனம் (8) - https://tut-temple.blogspot.in/2017/10/8.html

TUT நவராத்திரி தரிசனம் - ஆறாம் நாள் (7) - https://tut-temple.blogspot.in/2017/09/tut-7.html

தாமிரபரணி புஷ்கரம் தீப ஆரத்தி பெருவிழா அழைப்பிதழ் - http://tut-temple.blogspot.com/2018/10/blog-post.html

 இறை, சித்தர், தாமிரபரணி அருளை பெறுவதற்கு தாமிரபரணி புஷ்கரம் அழைக்கின்றது - http://tut-temple.blogspot.com/2018/07/blog-post_24.html

TUT நவராத்திரி 5 ம் நாள் தரிசனம் - https://tut-temple.blogspot.in/2017/09/tut-5.html

நவராத்திரி - 4 ம் நாள் தரிசனம் - (5) - https://tut-temple.blogspot.in/2017/09/4-5.html

TUT நவராத்திரி சிறப்புப் பதிவு(3) - https://tut-temple.blogspot.in/2017/09/tut-3.html

TUT நவராத்திரி சிறப்புப் பதிவு (2) - http://tut-temple.blogspot.in/2017/09/tut-2.html

TUT தளத்தின் நவராத்திரி சிறப்பு பதிவு (1) - https://tut-temple.blogspot.in/2017/09/tut-1.html

TUT தளத்தின் நவராத்திரி பதிவுகள் - https://tut-temple.blogspot.in/2017/09/tut.html

TUT தளத்தின் விநாயகர் சதுர்த்தி - சிறப்புப் பதிவு - https://tut-temple.blogspot.in/2017/08/tut.html

விநாயகர் சதுர்த்தி செய்தி - மண(ன)ப் பொருத்தம் - http://tut-temple.blogspot.in/2017/08/blog-post_78.html


No comments:

Post a Comment