Subscribe

BREAKING NEWS

18 October 2018

சன்மார்க்க நேசனின் பக்தி சொற்பொழிவு - தாமிரபரணி புஷ்கரம் - 19/10/2018


அனைவருக்கும் வணக்கம்.

இந்த மாதம் திருவிழா களை கட்டி வருகின்றது. ஒரு புறம் நவராத்திரிக் கொண்டாட்டங்கள். மறுபுறம் 144 ஆண்டுக்கு ஒருமுறை வரும் தாமிரபரணி புஷ்கரம். கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகர் ஆலயம், வேலி அம்மன் ஆலயம் என நவராத்திரி கொண்டாட்ட தரிசனங்கள் நம் தலத்தில் கண்டு வருகின்றோம்.  நம் அன்பர்களும், குழு உறவுகளும் அவரவர்களாக தாமிரபரணி புஷ்கரம் கண்டு வருகின்றார்கள். நாம் நம் குழுவுடன் வருகின்ற சனிக்கிழமை இரவு தாமிரபரணி புஷ்கரம் செல்கின்றோம். சரியாக வருகின்ற ஞாயிற்றுக்கிழமை புஸ்கரம் காண இருக்கின்றோம். வழிநடத்தும் குருவருளுக்கு நன்றி. தாமிரபரணி புஷ்கரம் பற்றியும் நம் தளத்தில் பதிவுகள் தந்துள்ளோம். இன்றும் தாமிரபரணி புஷ்கரம் பற்றி தான் தொடர விரும்புகின்றோம்.



ஆரம்பத்தில் மிக மிக ஆட்கள் ஆரவாரமின்றி ஆரம்பித்த தாமிரபரணி புஷ்கரம் இன்று மிகப்பெரும் எண்ணிக்கையில் கூட்டம் கண்டு வருகின்றது. இன்று முதல் தொடர்விடுமுறை ஆரம்பம். பாபநாசம் தீர்த்தகட்டத்தில் அதிகளவில் கூட்டம் எதிர்பார்க்கப்படுகின்றது. எனவே நாளை முதல் 4 நாட்களுக்கு அகஸ்தியர்பட்டியில் வாகனங்கள் நிறுத்தப்பட்டு, அங்கிருந்து பாபநாசத்திற்கு சுமார் 20 அரசுப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. மேலும் திரை பிரபலங்கள் பலர் தீர்த்தமாடி உள்ளனர். தாமிரபரணி அன்னையின் அருள் பெற இது நல்ல சந்தர்ப்பம், அனைவரும் பயன்படுத்திக் கொள்ளுங்கள். நாம் ஏற்கனவே குறுக்குத்துறை தீர்த்தகட்டத்தில் நடைபெறும் நிகழ்வுகளை தனிப்பதிவாக அளித்து இருந்தோம்.

அதில் நம் சன்மார்க்க நேசன் - மருத்துவர் திரு.M.A ஹுசைன் ஐயா அவர்கள் வருகின்ற 19/10/2018 அன்று மாலை பக்தி சொற்பொழிவு ஆற்ற உள்ளார் என்ற செய்தி கண்டு இன்புற்றோம்.



யார் இந்த சன்மார்க்க நேசன் என்று மீண்டும் மீள்பதிவாக இங்கே தருகின்றோம்.

 சன்மார்க்கம் என்ற வார்த்தையை கேட்டால் உங்களுக்கு என்ன தோன்றுகின்றது? வள்ளலார் தானே ! ஆம் ! இந்த இதழ் ஒரு சமரச சுத்த சன்மார்க்கியால் வெளியாகின்றது. ஏன் இதனை இங்கே அழுத்தி சொல்கிறோம் என்றால்,நீங்களே ஆச்சர்யப் படுவீர்கள்.

அவர் தான் சன்மார்க்க நேசன்,இராமலிங்க அடிகளாரின் பக்தர்! வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்"என்ற வள்ளலாரின் சித்தாந்தத்துக்குக் கிடைத்த வெற்றியாய் இருப்பவர்,அன்பே சிவம் என்பதை பூரணமாக உணர்ந்த சித்தாந்தவாதி,மனிதரில் மாணிக்கம்,உண்மையை உரைக்கும் உத்தமர்,சைவ நெறியாளர்,திருமந்திர உரையாளர்,சித்த மருத்துவர் என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.அவர் தான் சுத்த சன்மார்க்கி திரு. மரு.M.A.ஹுசைன் அவர்கள். மேலே உள்ள அழைப்பிதழில் பாருங்கள். நெற்றி நிறைய திருநீறு அணிந்து ஒரு சன்மார்க்கி. ஒரு இஸ்லாமியர் நெற்றி நிறைய திருநீறு அணிந்து இருக்கின்றார் என்றால் அவரிடம் நாம் பெற வேண்டிய ஆன்மிக அனுபவம் எவ்வளவு இருக்கும்?

யோசித்துப் பாருங்கள்.ஒரு இஸ்லாமியர்,வள்ளலார் பற்றி பேசுகிறார்,எழுதுகிறார் என்றால் அவர் எவ்வளவு உணர்ந்திருப்பார். இவரைப் பற்றி எழுதவே ஒரு பதிவு போதாது.விரைவில் அவரை சந்தித்து,ஒரு வி.ஐ.பி சந்திப்பு பதிவாய் விரைவில் வெளியிட குருவருளும்,இறையருளும் துணை புரியட்டும்.அந்த சந்திப்பில் பொதுவான விசயங்கள் பற்றி பேசி,பதிவிட விரும்புகின்றோம்.உதாரணமாக வள்ளலார் தமிழ்மொழியை தந்தை மொழி என்று கூறிய நிகழ்வு,தமிழ் மொழி உலக மொழியில் சிறந்தது எவ்வாறு? தமிழ்ப் புத்தாண்டு சித்திரையிலா? தை மாதத்திலா? என்பன போன்ற கேள்விகள்.

 சன்மார்க்க நேசன்  மாத இதழின் முகப்புப் படம் காண்போமா? யாராலும் சற்று ஊகிக்க முடிகின்றதா? ஜோதி இல்லாமல் இருக்காது என்று நினைக்கலாம்.
















 இதழின் முகப்புப் படம் மிக எளிமையாய் உள்ளதாய் தோன்றும்.ஆனால் இதழின் உள்ளே உள்ள செய்திகள் நம் உடல் நலம்,மன நலம் பற்றி ஏகப்பட்ட கருத்துக்களை பேசுகின்றது. மொத்தத்தில் சன்மார்க்க நேசன் அறிவியல் மற்றும் ஆன்மிக இதழாய் மணம் வீசுகின்றது. இது வியாபார நோக்கில் நடத்தப்படுவதில்லை.எனவே தான் அட்டைப்படம் மிக எளிதாய் உள்ளது.மூர்த்தி சிறிது ஆனால் கீர்த்தி பெரிது என்பதற்கேற்ப இதழ் உள்ளது.

 இதழைத் திறந்தால், உள்ளடக்கமாய் ஆசிரியர் உரை உள்ளது.இதில் பல்வேறு தலைப்புகளில் அக்குவேறு,ஆணி வேறு என்பதை ஆராய்கின்றார் ஆசிரியர். உதாரணத்திற்கு இன்றைய கல்வி முறை -தொழில் புரட்சி என்று பேசி பேசியே, விவசாயத்தை இழந்து கொண்டிருக்கின்றோம்.இன்னும் ஒரு 50 ஆண்டுகள் கழித்து,நம் சந்ததியினர் உணவிற்கு என்ன செய்ய போகின்றார்கள்? என்று தெரியவில்லை. 

 ஒவ்வொரு பக்கத்தின் கீழே ஒரு பொன்மொழி உள்ளது, 2 1/2 மணி நேர ஆழ்ந்த உறக்கம் நல்ல ஆரோக்கியம் தரும்,தரை நோக்கி நடப்பவன் தடையின்றி நடப்பான் என்பது போன்ற செய்திகள்.அடுத்தாற் போல், விளம்பரக் கட்டணம் பற்றிய அறிவிப்பு உள்ளது.பதிவை படிக்கும் அன்பர்கள்,தங்களால் இயன்ற விளம்பரம் கொடுத்து உதவலாமே !

 இல்லதிற்கேற்ற இனிய மருத்துவம் என்ற கட்டுரையில் இல்லத்திற்கு தேவையான மருத்துவக் குறிப்புகள் உள்ளது.உதாரணத்திற்கு கண் பயிற்சி பற்றிய செய்திகளை மேலே இணைத்துள்ளோம்.கண்ணுக்கு எப்படி ஓய்வளிப்பது என்றும் கூறுகின்றார்கள். சுமார் 15 வருடங்களுக்கு முன்பு பள்ளியில் உள்ள வகுப்பறையில் ஒரு வகுப்பிற்கு 2-3 மாணவர்கள் தான் கண்ணாடி போட்டு இருப்பார்கள்.ஆனால் இப்போது நிலைமை தலை கீழ். சுமார் 2 -3 மாணவர்கள் தான் கண்ணாடி போடாமல் இருக்கின்றார்கள். எனவே இது போன்ற பயிற்சிகளை செய்து கண்ணாடிகளுக்கு  விடுதலை அளிப்போம்.

 நம் தமிழகம் சுமார் 1800 ஆண்டுகளுக்கு முன் எப்படி இருந்தது என்பதை ஒரு கட்டுரை வாயிலாக உணர்த்துகிறார்கள். 10-15 வருடங்களிலேயே பற்பல சொல்ல இயலாத மாற்றங்கள்.அப்படியாயின் சுமார் 1800 ஆண்டுக்கு முன்? எப்படி இருந்திருக்கும்? கற்பனை செய்ய முடிகின்றதா? எந்த சமூகம்  பழமை மறந்து,புதுமை நோக்கி பாய்கின்றதோ, அது கண்டிப்பாக அழிந்தே தீரும். தமிழ்ச் சமூகம் அப்படி அழியலாமா? அழிய விடலாமா? என்று நம்மை நோக்கி சிந்திக்க தூண்டும் தொடரே இது.

 இதழ் சொல்லும் அனைத்து கருத்துக்களும் ஏற்புடையதே. நம் பாரம்பரியத்தில் எத்தனை நெல் வகைகள் இருந்தது. ஆனால் இன்றோ? வெறும் 5 -6 வகைகள் தான். கடைக்கு சென்று நெல் வகைகள் பேர் சொல்லி அரிசி வாங்கிய காலம் மறைந்து,இன்று 50 ருபாய் அரிசி உண்டா? என்று விலை சொல்லி அரிசி வாங்கி காலத்திற்கு தள்ளப்பட்டு இருக்கோம். அதுவும் பாரம்பரிய நெல் மாமருந்து என்று சொல்கின்றார்கள்.இது போன்ற செய்திகள் நமக்கே புதிது.இனி வரும் காலம்? கண்டிப்பாக உணர்த்துவது நம் கடமையே.

 மூலிகைக்  கலைக்களஞ்சியம் என்ற தலைப்பில் மாதம் ஒரு மூலிகை பற்றி அதன் பெயர்,குணம்,பயன்படுத்தும் முறை பற்றி எழுதி வருகின்றார்கள்.உதாரணத்திற்கு உளுந்து எனும் மூலிகை ..இதை நாம் பருப்பில் தான் சேர்க்கின்றோம். ஆனால் இங்கே மூலிகை பட்டியலில் சேர்த்து, அதன் குணம் பற்றி கூறி, உபயோகிக்கும் முறைகளும் பற்றி சூப்பராக எழுதி உள்ளார்கள்.

 எளிய மருந்து இனிய வாழ்வு என்ற தொடர் சில சமயங்களில் கேள்வி பதிலாகவும்,சில சமயம் பொது கட்டுரை வடிவிலும் வருகின்றது. நீரை எப்படி நாம் குடிக்கின்றோம்? அண்ணாந்து தானே? அது தவறு.நின்று கொண்டு தானே? அதுவும் தவறு. பின் எப்படிக் குடிப்பது? மேலே உள்ள இணைப்பைப் பாருங்கள்.இது போன்ற சித்தர்களின் நெறிகளை நமக்கு வழி மொழிகின்றார்கள்.

 கேள்வி பதில் பகுதியாக எளிய மருந்து - இனிய வாழ்வு என்ற தலைப்பில் சிறப்பான பதில்கள்.சாக்கு போக்கு சொல்லாமல், ஆதி முதல் அந்தம் வரை பேசுகின்றார்கள்.என்னப்பா? ஒரே ஆரோக்கியமாக உள்ளதே என்று நினைக்காதீர்கள். ஆரோக்கியமே ஆன்மிகத்தின் திறவுகோல். சுவரின்றி சித்திரம் வரைய முடியுமா? உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே என்பது போன்ற கருத்துக்கள் ஆரோக்கியம் பற்றி சொல்கின்றது.

 இவ்வாறு தலையங்கம் முதல் இதழின் கடைசி வரை ஆரோக்கியம் மற்றும் ஆன்மிகம் அள்ளித் தருகின்றார் நம் நண்பன் சன்மார்க்க நேசன். இதழை வாங்கி படியுங்கள். சன்மார்க்கம் பரப்புங்கள். சன்மார்க்கம் இல்லையேல், ஆன்மிகம் தழைக்காது.என்ன அன்பர்களே ! புதியதொரு நூல் பற்றி அறிந்து கொண்டீர்களா? வண்ணப்படத்திலே ஆசிரியரின் தொடபு எண் உள்ளது. வாங்கி படித்து,மரபைக் காப்போம்.
இனி நம் நண்பன் "சன்மார்க்க நேசன்" உடன் நம் பயணம் தொடரட்டும்

பதிவினை படிக்கும் அன்பர்கள் முடிந்த அளவில் வாய்ப்பு இருப்பின் சுத்த சன்மார்க்கி திரு. மரு.M.A.ஹுசைன் அவர்கள் உரையைக் கேட்டு மகிழவும்.

- மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்.

மீள்பதிவாக:-

நதியைக் காப்போம்...முன்னோர் வழி நடப்போம்... - http://tut-temple.blogspot.com/2018/10/blog-post_14.html

தாமிரபரணி தாயே போற்றி - http://tut-temple.blogspot.com/2018/10/blog-post_12.html

தாமிரபரணி புஷ்கரம் தீப ஆரத்தி பெருவிழா அழைப்பிதழ் - http://tut-temple.blogspot.com/2018/10/blog-post.html

 இறை, சித்தர், தாமிரபரணி அருளை பெறுவதற்கு தாமிரபரணி புஷ்கரம் அழைக்கின்றது - http://tut-temple.blogspot.com/2018/07/blog-post_24.html

பிழைத்தலில் இருந்து வாழ்தல் நோக்கி - ஒரு நூல் அறிமுகம் - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_47.html

"ஜீவ அமிர்தம்" பருகலாமே! - http://tut-temple.blogspot.in/2017/06/blog-post_30.html

No comments:

Post a Comment