Subscribe

BREAKING NEWS

18 October 2018

ஸ்ரீ மாமர சுயம்பு சித்தி விநாயகர் ஆலயம் - நவ சண்டி மஹா யாகம் & நெய்க்குள தரிசனம் காண வாருங்கள் - 19/10/2018

அனைவருக்கும் வணக்கம்...

நவராத்திரி கொண்டாட்டங்களில் அனைவரும் அருள் பெற்று வருவீர்கள் என்று நாம் நம்புகின்றோம். கோயிலுக்கு செல்ல முடியாதவர்கள் மனம் சஞ்சலப்பட வேண்டாம், இதோ..நம் தளத்திலே நவராத்திரி கொண்டாட்ட பதிவுகள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரத்தில் குருவருளால் அளித்துக் கொண்டு வருகின்றோம்.

சிவனை பூஜித்த அம்பாள், ஸ்ரீ கெஜலஷ்மி, ஸ்ரீ காமாட்சி, ஸ்ரீ தனலட்சுமி, ஸ்ரீ அர்த்தநாரீஸ்வரர், ஸ்ரீ அன்னபூரணி, ஸ்ரீ வராஹி, ஸ்ரீ சந்தானலட்சுமி என கண்டு மகிழுங்கள்.

 பத்தாவது நாள் "விஜயதசமி" நாளோடு நவராத்திரி  விழாவானது  பத்து நாட்கள் கொண்டாடப்படுகின்றது. விஜயதசமி திருவிழாவை முன்னிட்டு ஸ்ரீ மாமர சுயம்பு சித்தி விநாயகர் ஆலயத்தில் நவ சண்டி மஹா யாகம் வருகின்ற 19/10/2018 வெள்ளிக்கிழமை காலை முதல் நடைபெற உள்ளது.வழக்கம் போல் அழைப்பிதழ் இணைத்துள்ளோம். இந்த யாகம் மொத்தம் 13 அத்தியாயங்களாக பகுக்கப்பட்டு நடைபெறும்.


இதில் முதல் அத்தியாயம் நம் தளம் சார்பில் நடைபெற உள்ளது. இந்த பதிவின் வாயிலாக இது நாள் வரை அனுதினமும் கூடுவாஞ்சேரி வேலி அம்மன் ஆலயம் &  ஸ்ரீ மாமர சுயம்பு சித்தி விநாயகர் ஆலயம் இரண்டிலும் காலை, மாலை நவராத்திரி விழாவிற்கு உறுதுணையாக இருந்து உபயம் செய்தவர்கள் அனைவரையும் வாழ்த்தி மகிழ்கின்றோம். மேலும்  உடலுழைப்பை தந்து வழங்கிய அத்துணை நாள் உள்ளங்களின் பாதம் பணிகின்றோம்.

19/10/2018 அன்று மாலை நெய்க்குள தரிசனம் பெறவும் உள்ளன்போடு அழைக்கின்றோம். அதென்ன நெய்க்குள தரிசனம்?


திருமீயச்சூர் லலிதாம்பிகை அம்மனின் நெய்க்குளம் தரிசனம் நவராத்திரி காலத்தில் மிகவும் பிரசத்தி பெற்றது. விஜயதசமி அன்று கருவறைக்கு முன்பாக 15 அடி நீளத்திற்கு வாழை இலையை பரப்பி அதில் சர்க்கரைப் பொங்கலை பரப்பிடுவர்.  அத்துடன்  புளி சாதம், தயிர்சாதம் போன்றவற்றை தயாரித்து தேவியின் சந்நதியின் முன் வாழையிலை, மட்டை, தென்னை ஓலை ஆகியவற்றின் மீது 15 அடி நீளம், 4 அடி அகலம், ஒன்றரை அடி உயரத்தில் படையலாகப் படைக்கப்படும். 

சர்க்கரைப் பொங்கல் நடுவே குளம் போல அமைத்து அங்கே இரண்டரை டின் தூய நெய்யைக் கொண்டு நிரப்புவர். அதன் பின்னர் கருவறையின் திரையை விலக்கினால் அலங்கரிக்கப்பட்ட அம்மனின் உருவம் நெய் குளத்தில் பிரதிபலிக்கும். இதனை தரிசிப்பவர்களுக்கு மறுபிறவியே கிடையாது என்று நம்பப்படுகிறது.

இதுதான் நெய்க்குள தரிசனம். நவராத்திரி நிகழ்வின் மிகவும் பிரசித்தி பெற்ற  தரிசனம். திருமீயச்சூரில்  உள்ள அருள்மிகு லலிதாம்பிகை சமேத ஸ்ரீ மேகநாத சுவாமி திருக்கோயில் மட்டுமே கிடைக்கப் பெறும் தரிசனம்.இதோ உங்களுக்காக!


நெய்க்குள தரிசனம் 


மேலே நாம் கண்ட தரிசனத்தை அடுத்து, சென்ற ஆண்டு  கூடுவாஞ்சேரியில் உள்ள மாமரத்து விநாயகர் கோயிலில் பெறப் போகின்றோம். இப்படியொரு தரிசனத்தை அன்னை அருள்வாள் என்று நாம் கனவில் கூட நினைத்ததில்லை. நாம் நமக்கு இது வேண்டும்? அது வேண்டும்? என்று கேட்டுக் கொண்டே போகலாம்.ஆனால் அன்னைக்குத் தானே தெரியும்,தம்  பிள்ளைக்கு என்ன தர வேண்டும் என்று ? அப்படிதான் அமைந்தது இந்த ஆண்டு விஜய தசமி தரிசனம்.

நாம்  அன்றைய தினம் திரு அண்ணாமலையார் தரிசனம் பெற்று, அன்று மாலை 6 மணிக்கு கூடுவாஞ்சேரி வந்தோம். நேரம் ஆகி விட்டதோ? என்று மனம் பதைபதைத்தது. கோயில் சென்றோம்.  நல்ல கூட்டம்.கூட்டத்தில் ஒருவனாய் நாம் இருந்தோம். அன்று லலிதா சஹஸ்ரநாமம் பாராயணம் செய்து கொண்டு இருந்தார்கள். சரியாக 7 மணி அளவில் அம்மன் புகழ் பாடல்கள் பாடி, சங்கல்பம் செய்தோம். சற்று நேரத்தில் தீபாராதனை. நமக்கு நெய்க்குள தரிசனம் பற்றி தெரியவில்லை. திரையை விலக்கிய பின்னரே, குருக்கள் நெய்க்குளம் தரிசனம்  பற்றிய செய்தியைச் சொன்னார். மெய்  மறந்தோம். அன்னையின் அன்பில் பரவசம் அடைந்தோம். அன்று காலை சண்டி ஹோமம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. மாலை குங்கும அர்ச்சனையும் நடைபெற்றது.

இதோ..கூடுவாஞ்சேரி லலிதாம்பிகை அம்மனின் நெய்க்குளம் தரிசனம்










அம்மன் நெய்க்குளம் தரிசனம் பெற்றீர்களா? ஒரே கல்லில் ரெண்டு மாங்கா என்பது இதுதான் போலும். ஒரே பதிவில் திருமீயச்சூர் மற்றும் கூடுவாஞ்சேரியில் உள்ள லலிதாம்பிகை அம்மனின் தரிசனம் அதுவும் நெய்க்குளம் தரிசனம் என்றால் சும்மாவா? இப்படியொரு பதிவை நாம் அளிக்க இருக்கின்றோம் என்று  நாமும் நினைக்கவில்லை. எல்லாம் அவள் அருளாலே தான்.

திருமீயச்சூர் சென்று லலிதாம்பிகை அம்மன் பெற அன்னையிடம் பிரார்த்திக்கின்றோம். கூடுவாஞ்சேரியில் உள்ள மாமரத்து விநாயகர் பற்றி இனிவரும் பதிவுகளில் சொல்ல, விநாயகரிடம் வேண்டுகின்றோம்.

பாலும் தெளி தேனும் பாகும் பருப்பும் இவை                            
நாலும் கலந்துனக்கு நான் தருவேன்  – கோலஞ்செய்                                 
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீ எனக்கு                           
சங்கத் தமிழ் மூன்றும் தா!

இது ஏதோ சாதாரணமான பாடல் என்று நினைக்காதீர்கள். பல முறை படித்துப் பார்த்தால் பல செய்திகளை நமக்கு நம் அவ்வைப் பாட்டி சொல்வது புரியும்.

இந்த ஆண்டு நெய்க்குள தரிசனம் காண வாருங்கள்.

- மீண்டும் அடுத்த பதிவில் இணைவோம்.

மீள்பதிவாக:-


TUT நவராத்திரி தரிசனம் தொகுப்பு - https://tut-temple.blogspot.com/2018/10/tut.html

நவராத்திரி மூன்றாம் நாள் தரிசனப் பதிவு - http://tut-temple.blogspot.com/2018/10/blog-post_15.html

நவராத்திரி இரண்டாம் நாள் தரிசனம் - http://tut-temple.blogspot.com/2018/10/blog-post_13.html

நவராத்திரி 75 - முதல் நாள் தரிசனம் - http://tut-temple.blogspot.com/2018/10/75.html

நவராத்திரி விழா கொண்டாட வாருங்கள் - http://tut-temple.blogspot.com/2018/10/blog-post_10.html

தாமிரபரணி தாயே போற்றி - http://tut-temple.blogspot.com/2018/10/blog-post_12.html

நவராத்திரி சிறப்பு பதிவு - அம்மன் நெய்க்குளம் தரிசனம் (8) - https://tut-temple.blogspot.in/2017/10/8.html

TUT நவராத்திரி தரிசனம் - ஆறாம் நாள் (7) - https://tut-temple.blogspot.in/2017/09/tut-7.html

தாமிரபரணி புஷ்கரம் தீப ஆரத்தி பெருவிழா அழைப்பிதழ் - http://tut-temple.blogspot.com/2018/10/blog-post.html

 இறை, சித்தர், தாமிரபரணி அருளை பெறுவதற்கு தாமிரபரணி புஷ்கரம் அழைக்கின்றது - http://tut-temple.blogspot.com/2018/07/blog-post_24.html

TUT நவராத்திரி 5 ம் நாள் தரிசனம் - https://tut-temple.blogspot.in/2017/09/tut-5.html

நவராத்திரி - 4 ம் நாள் தரிசனம் - (5) - https://tut-temple.blogspot.in/2017/09/4-5.html

TUT நவராத்திரி சிறப்புப் பதிவு(3) - https://tut-temple.blogspot.in/2017/09/tut-3.html

TUT நவராத்திரி சிறப்புப் பதிவு (2) - http://tut-temple.blogspot.in/2017/09/tut-2.html

TUT தளத்தின் நவராத்திரி சிறப்பு பதிவு (1) - https://tut-temple.blogspot.in/2017/09/tut-1.html

TUT தளத்தின் நவராத்திரி பதிவுகள் - https://tut-temple.blogspot.in/2017/09/tut.html

TUT தளத்தின் விநாயகர் சதுர்த்தி - சிறப்புப் பதிவு - https://tut-temple.blogspot.in/2017/08/tut.html

விநாயகர் சதுர்த்தி செய்தி - மண(ன)ப் பொருத்தம் - http://tut-temple.blogspot.in/2017/08/blog-post_78.html

No comments:

Post a Comment