Subscribe

BREAKING NEWS

25 October 2018

ஐப்பசி அன்னாபிஷேகம் தரிசனம்

அனைவருக்கும் வணக்கம்.

ஒவ்வொரு தமிழ் மாத பௌர்ணமி சிறப்பு வாய்ந்தது. நேற்றைய பௌர்ணமி அதாவது ஐப்பசி பௌர்ணமி மிக மிக விசேஷம். அன்றைய தினத்தில் அனைத்து சிவாலயங்களிலும் அன்னாபிஷேகம் கொண்டப்படும். நாம் நம் தளம் சார்பில் திருநெல்வேலி சுற்றியுள்ள கோயில்களில்  அரிசி மூட்டை வாங்கிக் கொடுக்க நம்மால் முடிந்த தொகையை அளித்தோம். இன்றைய பதிவில் அன்னாபிஷேக தரிசனப் பதிவுகளை ஒவ்வொன்றாக பாப்போம்.

அன்னாபிஷேகம் ஏன்?

மகா வில்லாளி அர்ஜுனனுக்கு தன்னைவிட சிறப்பாக சிவபூஜை செய்பவர், சிறப்பான லிங்கத்தை வைத்து பூசிப்பவர் யாருமில்லை என ஒரு கர்வம் கொண்டிருந்தான். அதனை அறிந்த கண்ணன் உன்னைவிட அதிகமான லிங்கங்களை வைத்து சிவபூசை செய்யும் தம்பதியினர் இதே ஊரில் இருக்கின்றனர் , அதனால் உன்னைவிட அவர்களே சிவபூசை செய்வதில் சிறந்தவர்கள் என கண்ணன் சொல்கிறார்.

யார் என அர்ஜுனன் கேட்க ஒரு குடியானவரையும் அவர் மனைவியையும் காட்டுகிறார். அர்ஜுனன் அக்குடியானவருக்கு தெரியாமல் காலை முதல் இரவு வரை அவரது நடவடிக்கைகளை பார்க்கிறான். ஆனால் சிவபூஜையே அவர் செய்யவில்லை, திரும்ப கண்ணனிடம் வருகிறான், நடந்தவற்றை சொல்லி அவர்கள் சிவபூஜையே செய்யவில்லை, சிவலிங்கமே அவர்கள் வீட்டில் இல்லை , ஒருமுறை சேர்ந்து நின்று சாதம் வடித்த பானையை கும்பிட்டனர் அவ்வளவு தான் என கூறுகிறான்.
அப்போது கண்ணன் , உலக ஜீவராசிகள் பசிப்பிணி தீர்க்க பொன்மணி தேவையா அரிசிமணி தேவையா என கேட்க , அர்ஜுனனும் அரிசிதான் பொன்னைவிட உயர்வானது. அதனால் தான் அரிசியும் சிவனும் ஒன்னு என பழமொழியே வந்தது என்கிறான்.

கண்ணனும் அப்படியென்றால் ஒரு அன்ன பருக்கை ஒரு லிங்கத்திற்கு சமம் தானே? ஒரு பானை நிறைய சாதம் வடித்தபின் அதனை வணங்கினால் பல ஆயிரம் லிங்கங்களை வணங்கியதற்கு சமம் தானே.அதனால் ஒரே சமயத்தில் பல ஆயிரம் லிங்கங்களை வைத்து பூசித்த அவரே சிறந்த சிவபக்தர் என்கிறார் கண்ணன்.

எந்த லிங்கத்தையும் விட அன்னத்தில் லிங்கம் பிடித்து வைத்து பூசித்தால் பலன் அதிகம். அதனால் நித்தம் வீட்டில் சாதம் வெண்கல பானையிலோ, குக்கரிலோ வடித்தபின் அதற்கு ஒரு விபூதி பட்டையிட்டு திலகமும் சிறிது பூவும் வைத்து , முடிந்தால் வெற்றிலை,பாக்கு வாழைப்பழம் இரண்டை வைத்து கிழக்கு நோக்கி நின்று தம்பதிகளாக வணங்கினால் இம்மை, மறுமை இரண்டிலும் இறைவன் அருள் பெற்று வாழ்வாங்கு வாழலாம்.

ஐப்பசியில் வரும்  பவுர்ணமி அன்று சந்திரன் தனது அமிர்த கலையாகும் பதினாறு கலைகளுடன் பூரண சோபையுடன் பிரகாசிக்கிறது.ஆண்டுக்கு ஒருமுறை ஐப்பசி மாத பௌர்ணமி அன்று சிவாலயங்களில் சாயரட்சையின் போது சிவபெருமானின் அருவுருவமான லிங்கத்திருமேனிக்கு அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது.தானத்தில் மிக உயர்ந்ததாகக் கூறப்படுவது அன்னதானம் மட்டுமே. அன்னமாகிய அரிசி சாதம் கொண்டு சிவலிங்கத்தை மூடி அபிஷேகம் செய்யும் அன்னாபிஷேகத்தின் போது,வடித்த சாதத்தில் தீர்த்தம் விட்டு ஆறவைத்துப் பிறகு சிவவடிவத்தை முழுவதும் மறைக்கும் படியாக அன்னத்தைக் கொண்டு அபிஷேகம் செய்வார்கள்.


அண்டம் முழுக்க சிவ வடிவம் தான். சிவபெருமானுக்கு செய்யப்படும் அபிஷேகம் முழுக்க சிவ வடிவமாகவே இருப்பதால் எண்ணற்ற சிவாலயங்களை தரிசனம் செய்த பெரும் பாக்கியம் கிடைக்கும்.அன்னாபிஷேகம் சிவலிங்கத் திருமேனியின் எல்லா பாகங்களுக்குமாக முழுமையாகவே செய்யப்படும்.அன்ன அபிஷேகம் மட்டும்தான் கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் அப்படியே வைக்கப்பட்டிருக்கும். அந்த சமயத்தில் யஜுர் வேத பாராயணமும், ருத்திரம், சமகம் போன்ற மந்திரங்களின் பாராயணமும் நடைபெறும்.நாழிகை நேரம் முடிந்த உடன் அன்னத்தை அகற்றி விடுவார்கள்.பின்னர் மீதமிருக்கும் ஐந்து வகைப் பொருட்கள் கொண்டு அபிஷேகம் நடைபெறும். லிங்கத்தின் ஆவுடையிலும் பாணத்தின் மீதும் சாத்தப்பட்ட அன்னம் மிகவும் கதிர்வீச்சுடன் இருக்கும்.எனவே அதனை எவரும் உண்ணாமல் அப்படியே எடுத்துச் சென்று நீர்வாழ் உயிர்களுக்கு உணவாக கோயில் குளத்திலோ இல்லை ஆற்றிலோ கொண்டு கரைப்பார்கள்.
எல்லா உயிரினங்களும் வாழ வேண்டும். அவ்வாறு வாழ்ந்தால் தான் மனிதனுக்குத் தேவையான உணவு தடையின்றிக் கிடைக்கும் என்பதை இயற்கையின் சமன்பாட்டு விதியை நன்கு அறிந்திருந்தனர் நம் முன்னோர். எனவே அன்னாபிஷேகப் பிரசாதம் நீரில் வாழும் புழு, பூச்சிகள், மீன்கள், மற்ற நீர் வாழ் உயிரினங்கள் எல்லாமும் பெற வேண்டும் என்ற உயரிய நோக்கம் கொண்டு நீரில் கரைக்கப்படுகிறது.நல்ல அதிர்வுகளும், உடலுக்குத் தேவையான கதிர் வீச்சுகளும் நிறைந்திருக்கும் பிரும்ம பாகத்தில் சாத்தப்பட்ட அன்னம் மனிதர்களுக்கே அளிக்கப்படுகிறது. பிரசாதமாக வினியோகிக்கப்படும் அன்னத்தில் தயிர் சேர்த்துக் கொடுக்கப்படுகிறது.இந்தப் பிரசாதத்தை உண்டால் நோய் நொடிகள் வராது, குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது ஐதிகம்.

பஞ்சபூதங்களை வழிபட்ட புண்ணியம் கிடைக்கும்.அன்னாபிஷேகக் காட்சி அளவற்ற இன்பம் தரக்கூடியது. அன்னாபிஷேகத்தில் கலந்து கொள்வதால், அன்னதானம் செய்த புண்ணியமும் கிடைக்கின்றது. அன்னம் என்பது பிரம்மா, விஷ்ணு, சிவ சொரூபமாக கருதப்படுகிறது.
ஆகாயத்தில் பிறந்த காற்றின் துணையுடன் தீ எரிகிறது. நிலத்தில் விளைந்த நெல் அரிசியாகிறது.அரிசி நீரில் மூழ்கி, தீயில் வெந்து அன்னமாகிறது. எனவே அன்னமும் பஞ்ச பூதங்களின் சேர்க்கையாகிறது.இந்த அன்னத்தை அபிஷேக நிலையில் இறைவன் சிவபெருமானின் திருமேனி முழுவதும் சாத்தி நாம் வழிபடுவது, ஐம்பூதங்களும் அவருள் அடக்கம் என்பதை உணர்த்துகிறது.அன்னாபிஷேக தினத்தில் சிவனை வணங்கினால் பஞ்சபூதங்களை வழிபட்ட பலன்  கிடைக்கும்.




கும்பகோணம் மகாமகக் குளக்கரைகளில் உள்ள 16 மண்டபங்களில் எழுந்தருளி உள்ள சோடச மகாலிங்கங்களுக்கு அன்னாபிஷேகம் நடைபெற்றது.






சேலம் ஸ்ரீ காசிவிஸ்வநாதர் அன்னாபிஷேகம் தரிசனம்





வில்வேஸ்வரர் அன்னாபிஷேகம் தரிசனம்


பல சிவாலயங்களில் இருந்து கிடைத்த தரிசனத்தை கீழே தொகுத்து தருகின்றோம்.




அச்சிருபாக்கம் மலைக்கோயில் பசுபதிஸ்வர் அன்னாபிஷேக அலங்காரம் உங்களுக்காக இதோ.



அடுத்து நாம் காண இருப்பது நல்லம்பாக்கம் படியளந்த பெருமான் தரிசனம். வண்டலூர் - கேளம்பாக்கம் செல்லும் பாதையில் உள்ள கண்டிகை அருகில்  நல்லம்பாக்கம் கிராமத்தில் மலை உள்ளது. இந்த மலை சித்தர்களின் அருள் ஆற்றல் நிறைந்து காணப்படும் அற்புத மலை.இயற்கை சூழலலில்  நேற்று அன்னாபிஷேகத்தில் கம்பீரமாக காட்சியளிக்கிறார்  நம் படியளந்த பரமன்.








எங்கெங்கோ சென்று தரிசித்தாலும் நம் கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகர் கோயிலில் தரிசனம் பெற வில்லை என்றால் நம் பதிவும் முழுமை பெறாது.இதோ உங்களுக்காக அந்த நிகழ்வின் துளிகள்.












ஐப்பசி மாத அன்னாபிஷேகத்தின் சூட்சுமம் அன்னத்தை வீணாக்காதீர்கள். மேலும்  இந்த வழிபாடு பஞ்சபூத வழிபாட்டை உணர்த்துகின்றது. 

இந்த பதிவிற்கு உறுதுணையாக காட்சிப்பதிவுகளை அனுப்பி நமக்கு உதவிய நல்லுள்ளங்களுக்கு என்றென்றும் நன்றி.

- அடுத்த பதிவில் மீண்டும் இணைவோம்.

மீள்பதிவாக:-

கோடகநல்லூர் ஸ்ரீ பூமி நீளா சமேத ப்ரஹன்மாதவர் மலரடி சரணம் (22/10/2018 - அன்று, அந்தநாள்>>இந்த வருடம்) - http://tut-temple.blogspot.com/2018/10/22102018.html

தாமிரபரணி தாயே போற்றி - http://tut-temple.blogspot.com/2018/10/blog-post_12.html

தாமிரபரணி புஷ்கரம் தீப ஆரத்தி பெருவிழா அழைப்பிதழ் - http://tut-temple.blogspot.com/2018/10/blog-post.html

இறை, சித்தர், தாமிரபரணி அருளை பெறுவதற்கு தாமிரபரணி புஷ்கரம் அழைக்கின்றது - http://tut-temple.blogspot.com/2018/07/blog-post_24.html

அன்பின் ஈசனே போற்றி - ஆவணி மாத அகத்தியர் ஆயில்ய ஆராதனை - http://tut-temple.blogspot.com/2018/09/blog-post_3.html 
அகத்தின் ஈசனே போற்றி - ஆயில்ய ஆராதனை அறிவிப்பு (11/08/2018) - http://tut-temple.blogspot.com/2018/08/11082018.html

கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகர் கோயில்,அகத்தியர் ஆயில்ய ஆராதனை - 15/07/2018 - http://tut-temple.blogspot.com/2018/07/15072018.html

கூடுவாஞ்சேரி அகத்தியர் ஆயில்ய ஆராதனை - 17/06/2018 - http://tut-temple.blogspot.com/2018/06/17062018.html

எந்தையும் தாயும் - கூடுவாஞ்சேரி அகத்தியர் ஆயில்ய ஆராதனை அறிவிப்பு 21/05/2018  - http://tut-temple.blogspot.com/2018/05/21052018.html

மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டா - கூடுவாஞ்சேரி அகத்தியர் ஆயில்ய ஆராதனை அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2018/04/blog-post_22.html

அகத்தியருக்கு ஆயில்ய ஆராதனை -புரட்டாசி -2017- http://tut-temple.blogspot.in/2017/09/2017.html





No comments:

Post a Comment