Subscribe

BREAKING NEWS

28 October 2018

திருவெண்காடர் உணர்த்தும் வாழ்வியல் நீதி

அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.

 வாவி எல்லாம் தீர்த்தம் மணலெல்லாம் வெண்நீறு
காவனங்களெல்லாம் கணநாதர் - பூ உலகில்
ஈது சிவலோகமென் றன்றே மெய்த்தவத்தோர்
ஓதுந் திருவொற்றியூர்

என்று புகழப்பட்ட வரும் திருஒற்றியூரில் உள்ள மகான் ஒருவரை பற்றி இன்றைய பதிவில் சிந்திக்க இருக்கின்றோம். ஏற்கனவே இவரைப் பற்றி பேசியுள்ளோம். அருளாளர்களைப் பற்றி தினம் தினம் பேசுவதும் படிப்பதும் நமக்கு ஒரு வரமே. திருவெண்காடர் என்று பதிவின் தலைப்பைப் பார்த்தாலே பல பேருக்கு யார் என்று புரிந்திருக்கும். பதிவின் ஆரம்ப பாடலைப் படிக்கும் போதாவது சிலருக்கு யார் என்று தோன்றி இருக்கும். திருஒற்றியூர் என்று சொன்னாலே இவர் தான் நமக்கு உணர்த்தப்படுகின்றார்.

ஆம்..அவர் தான் பட்டினத்தார். பட்டினத்தார் என்னும் பெயருடன் 10, 14, 17 ஆம் நூற்றாண்டுகளில் மூன்று அருளாளர்கள்  வாழ்ந்து வந்தனர். அவர்கள் பாடியுள்ள பாடல்களின் பாங்குகள் இதனைப் புலப்படுத்துகின்றன. திருமுறைப் பட்டினத்தார் 10 ம் நூற்ற்றாண்டிலும், சித்தர் பட்டினத்தார் 14 ஆம் நூற்றாண்டிலும், பிற்காலப் பட்டினத்தார் என்று ஒருவர் 17 ஆம் நூற்றாண்டிலும் வாழ்ந்துள்ளார்கள். இதில் நாம் திருவெண்காடர் என்றும் சுவேதாரண்யன் என்றும் அழைக்கப்படும் பட்டினத்தார் பற்றி சிறிது காண இருக்கின்றோம்.





பட்டினத்தார் என்றும் பட்டினத்தடிகள் என்று கூறப்படுபவர்,சோழர்கள் காலத்தில், கி.பி. 11 ஆம் நூற்றாண்டில், வாழ்ந்த துறவி. இவருடைய இயற்பெயர் திருவெண்காடர். இவர் காவிரிப்பூம்பட்டினத்தில் வணிகத்தொழில் புரிந்து வந்த பெருஞ்செல்வர். கடல்வழி வாணிகத்தில் பெரும் பொருள் ஈட்டியவர். பொருளின் நிலையாமையை உணர்ந்து, கடவுள் பால் ஈர்ப்புண்டு துறவறம் பூண்டவர். பெருஞ்செல்வத்தைத் துறந்து இவர் பூண்ட துறவு, கௌதம புத்தருக்கு இணையாக தமிழகத்திலே கருதப்படுகின்றது. பாரனைத்தும் பொய்யெனவே பட்டினத்தடிகள் போல் யாரும் துறக்கை அரிது என்ற கூற்றால் பரவலாக பாராட்டப்படுபவர். தம் தாயார் இறந்த பொழுது உடலுக்குத் தீ மூட்டும்முன் அவர் உருகிப் பாடிய பாட்டைக் கேட்டு இன்றும் கண்ணீர் உகுப்பவர் பலர்.



சிவநேசர் - ஞானகலை தம்பதியருக்கு மகனாக காவிரிப்பூம்பட்டினத்தில் பிறந்த இவருக்கு, திருவெண்காட்டில் உறையும் சுவேதாரண்யப் பெருமானை நினைத்து சுவேதாரண்யன் என்று பெயரிடப்பட்டது. திருவெண்காடர் என்றும் அழைக்கப்பட்டார். பெருந்தன வணிகக் குடும்பம் என்பதால் திரைகடலோடியும் பெருஞ்செல்வம் திரட்டி மன்னரும் மதிக்கத்தக்க வளத்துடன் இருந்தார். அதனால் பெயர் சொல்லி அழைக்கத் தயங்கிய மக்களால் பட்டினத்தார் என்றே அழைக்கப்படலானார். சிவகலை என்னும் பெண்ணை மணந்து இல்லறம் நடத்தினார். குழந்தைப் பேறு இல்லாத வருத்தத்தில் திருவிடைமருதூர் சென்று இறைவனை வேண்டினார். அங்கே சிவசருமர் என்கிற சிவபக்தர், கோவில் குளக்கரையில் கண்டெடுத்ததாகக் கூறி ஓர் ஆண்மகவை பட்டினத்தாருக்குக் கொடுத்தார். அவனுக்கு மருதபிரான் என்று பெயரிட்டு வளர்த்து வந்தார்.


அவன் வளர்ந்து பெரியவனானதும் அவனைக் கடல்கடந்து சென்று வணிகம் செய்து வர அனுப்பினார். அவனோ திரும்பி வரும் போது எருவிராட்டியும் தவிடுமாகக் கொண்டு வந்தது கண்டு அவனைச் சினந்து கண்டித்தார். அவன் தன் தாயாரிடம் ஓர் ஓலைத் துணுக்கும் காது இல்லாத ஊசி  ஒன்றும் அடக்கிய பேழை ஒன்றினைத் தந்து விட்டு எங்கோ சென்று விட்டான். அந்த ஓலைத் துணுக்கில் இருந்த "காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே" என்கிற வாசகமே பட்டினத்தாருக்கு ஞானம் தந்த வாக்கியம்.



அப்படியே தன் சகல சொத்துக்களையும் செல்வத்தையும் துறந்து கட்டிய கோவணத்துடன் துறவறம் பூண்டு வெளியேறினார் பட்டினத்தார். அவர் துறவியாகத் திரிவதால் தம் குடும்ப கௌரவம் கெடுவதாக எண்ணி அவருக்கு விஷம் தோய்ந்த அப்பம் கொடுக்க முயன்றார் அவருடைய தமக்கை. அந்த அப்பத்தினை அவள் வீட்டுக் கூரை மீதே செருகி விட்டு "தன்வினை தன்னைச் சுடும்; ஓட்டப்பம் வீட்டைச் சுடும்' என்று கூறிவிட்டு பட்டினத்தார் சென்று விட அந்தக் கூரை தீப்பற்றி எரிந்த அதிசயம் கண்டு அவரும் மற்ற உறவினர்களும் அவருடைய அருமை அறிந்தார்கள் என்று சொல்லப்படுகிறது. அவர் சித்தர் என்று உணர்ந்து கொண்டு பட்டினத்தடிகள் என்று மதிக்கத் தொடங்கினார்கள்.



பட்டினத்தடிகள் துறவியாக ஊர் ஊராகத் திரிந்து கொண்டிருந்த காலத்தில் அவருடைய அன்னையார் மரணமடைந்தார். அவருடைய ஈமச்சடங்கை எங்கிருந்தாலும் வந்து செய்து தருவேன் என்று வாக்களித்திருந்த பட்டினத்தடிகள் சரியான நேரத்தில் சுடுகாட்டினை அடைந்தார். அவருடைய தாயின் சிதைக்காக உறவினர்கள் அடுக்கியிருந்த காய்ந்த விறகுகளை அகற்றிவிட்டு பச்சை வாழைமட்டைகளையும் இலைகளையும் கொண்டு சிதை அடுக்கி பத்துபாடல்கள் பாடி சிதையைப் பற்றச் செய்தார். அந்தப் பாடல்கள் மிகப் புகழ்பெற்றவை.

        ஐயிரண்டு திங்களாய் அங்கமெலாம் நொந்து பெற்றுப்
        பையலென்ற போதே பரிந்தெடுத்துச் செய்ய இரு
        கைப்புறத்தில் ஏந்திக் கனகமுலை தந்தாளை
        எப்பிறப்பில் காண்பேன் இனி

        முந்தித் தவம் கிடந்து முன்னூறு நாள்சுமந்தே
        அந்திபகலாய்ச் சிவனை ஆதரித்துத் தொந்தி
        சரியச் சுமந்து பெற்ற தாயார் தமக்கோ
        எரியத் தழல் மூட்டுவேன்

        வட்டிலிலும் தொட்டிலிலும் மார்மேலும் தோள்மேலும்
        கட்டிலிலும் வைத்தென்னைக் காதலித்து முட்டச்
        சிறகிலிட்டுக் காப்பாற்றிச் சீராட்டிய தாய்க்கோ
        விறகிலிட்டுத் தீமூட்டு வேன்

        நொந்து சுமந்து பெற்று நோவாமல் ஏந்திமுலை
        தந்து வளர்த்தெடுத்துத் தாழாமே அந்திபகல்
        கையிலே கொண்டென்னைக் காப்பாற்றிய தாய்தனக்கோ
        மெய்யிலே தீமூட்டு வேன்

        அரிசியோ நானிடுவேன் ஆத்தாள் தனக்கு
        வரிசையிட்டுப் பார்த்து மகிழாமல் உருசியுள்ள
        தேனே திரவியமே செல்வத் திரவியப்பூ
        மானே எனஅழைத்த வாய்க்கு

        அள்ளி இடுவது அரிசியோ தாய்தலைமேல்
        கொள்ளிதனை வைப்பேனோ கூசாமல் மெள்ள
        முகமேல் முகம்வைத்து முத்தாடி என்றன்
        மகனே எனஅழைத்த வாய்க்கு

        முன்னை இட்ட தீ முப்புறத்திலே
        பின்னை இட்ட தீ தென்இலங்கையில்
        அன்னை இட்ட தீ அடிவயிற்றிலே
        யானும் இட்ட தீ மூள்கமூள்கவே

        வேகுதே தீயதனில் வெந்து பொடிசாம்பல்
        ஆகுதே பாவியேன் ஐயகோ மாகக்
        குருவி பறவாமல் கோதாட்டி என்னைக்
        கருதி வளர்த்தெடுத்த கை

        வெந்தாளோ சோணகிரி வித்தகா நின்பதத்தில்
        வந்தாளோ என்னை மறந்தாளோ சந்ததமும்
        உன்னையே நோக்கி உகந்து வரம் கிடந்து என்
        தன்னையே ஈன்றெடுத்த தாய்

        வீட்டிருந்தாள் அன்னை வீதிதனில் இருந்தாள்
        நேற்றிருந்தாள் இன்றுவெந்து நீறானாள் பால்தெளிக்க
        எல்லோரும் வாருங்கள் ஏதென்று இரங்காமல்
        எல்லாம் சிவமயமே யாம்


சீடர் பத்திரகிரியார் விரைவில் முக்தி அடைந்து விட அதன் பிறகு பட்டினத்தடிகள், திருவெண்காடு, சீர்காழி, சிதம்பரம் போன்ற சிவத்தலங்களுக்குச் சென்று பாடிய பாடல்கள் அனைத்தும் சைவத் திருமுறைகளில் பதினோராம் திருமுறைத் தொகுப்பில் உள்ளன. அவையாவன:

  •     கோயில் நான்மணிமாலை
  •     திருக்கழுமல மும்மணிக்கோவை
  •     திருஏகம்பமுடையார் திருவந்தாதி
  •     திருவிடைமருதூர் மும்மணிக்கோவை
  •     திருவொற்றியூர் ஒருபா ஒருபஃது




பட்டினத்தடிகளின் பாடல்கள் எளிய வார்த்தைகளும் அரிய பொருளும் கொண்ட அற்புதக் கலவை ஆகும்.

எடுத்துக்காட்டாக சில பாடல்களைச் சொல்லலாம்:

        இருப்பதுபொய் போவதுமெய் என்றெண்ணி நெஞ்சே
        ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே; பருத்த தொந்தி
        நம்மதென்று நாமிருக்க, நாய்நரிகள் பேய்கழுகு
        தம்மதென்று தாமிருக்கும் தாம்
        மாலைப் பொழுதில் நறுமஞ்சள் அரைத்தே குளித்து
        வேலை மெனக்கெட்டு விழித்திருந்து சூலாகிப்
        பெற்றாள் வளர்த்தாள் பெயரிட்டாள் பெற்றபிள்ளை
        பித்தானால் என்செய்வாள் பின்
        ஓன்றென்றிரு தெய்வம் உண்டென்றிரு உயர்செல்வமெல்லாம்
        அன்றென்றிரு பசித்தோர் முகம்பார் நல்லறமும் நட்பும்
        நன்றென்றிரு நடுநீங்காமலே நமக்கு இட்டபடி
        என்றென்றிரு மனமே உனக்கு உபதேசம் இதே

        நாட்டமென்றே இரு சற்குரு பாதத்தை நம்பு
        பொம்மலாட்டமென்றே இரு பொல்லா உடலை
        அடர்ந்த சந்தைக் கூட்டமென்றே இரு சுற்றத்தை
        அடர்ந்த சந்தைக் கூட்டமென்றே இரு சுற்றத்தை
        வாழ்வை குடங்கவிழ் நீர் ஓட்டமென்றே இரு
        வாழ்வை குடங்கவிழ் நீர் ஓட்டமென்றே இரு
        நெஞ்சே உனக்குபதேசம் இதே...
        நாப்பிளக்கப் பொய்யுரைத்து நவநிதியம் தேடி
        நலனொன்றும் அறியாத நாரியரைக் கூடிப்
        பூப்பிளக்க வருகின்ற புற்றீசல்போலப்
        புலபுலெனக் கலகலெனப் புதல்வர்களைப் பெறுவீர்
        காப்பதற்கும் வகையறியீர் கைவிடவும் மாட்டீர்
        கவர்பிளந்த மரத்துளையில் கால் நுழைத்துக் கொண்டே
        ஆப்பதனை அசைத்து விட்ட குரங்கதனைப் போல
        அகப்பட்டீர் கிடந்துழல அகப்பட்டீரே




தன் இறுதிக் காலத்தில் திருவொற்றியூர் வந்து சேர்ந்த பட்டினத்தடிகள், அங்கே கடற்கரையில் சிறுவர்களுடன் சித்து விளையாடியபடி தன்னை மண்மீது மூடச் செய்து மறைந்து சமாதியானார் என்கிறார்கள். அவர் மறைந்த இடத்தில் லிங்கம் ஒன்று மட்டும் இருந்ததாகக் கூறப்படுகிறது. தற்போது இங்கே கோயில் கட்டி வழிபாடு செய்து வருகின்றார்கள். நாம் இந்தப் பதிவின் இடையில் இணைத்துள்ள காட்சிகள் அனைத்தும் திருவொற்றியூர் பட்டினத்தார் திருக்கோயிலில் இருந்து எடுக்கப்பட்டது ஆகும்.












பட்டினத்தார் நமக்கு முதன் முதலாக திரைப்படம் மூலமாகவே பரிச்சயமானவர். என்ன ஒரு ஆச்சர்யம். பதிவின் துவக்கத்தில் கூறியது போலவே இந்த திரைப்படமும் மூன்று முறை 1935,1936 மற்றும் 1962 ஆம் ஆண்டில் வெளி வந்துள்ளது. இதில் நமக்கு 1962 ஆம் ஆண்டின் படமே கிடைக்கின்றது. இந்த திரைப்படத்தில் முருகன் அடியார் டி. எம். சௌந்தரராஜன் பட்டினத்தாராகவே வாழ்ந்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நூற்றாண்டில் மீண்டும் ஒரு முறை பட்டினத்தார் திரைப்படத்தை தற்கால தொழில்நுட்பத்தோடு எடுக்க வேண்டும் என்பது நமது விருப்பம் ஆகும். வணிக ரீதியில் படம் ஓடாவிட்டாலும் இவர்களைப் போன்ற அருளாளர்களின் வாழ்வியலை நாம் அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லவாவது இது நிச்சயம் வேண்டும்.

- மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம் 

மீள்பதிவாக:-

தெய்வத் திருமகன் ஸ்ரீ குழந்தையானந்த சுவாமிகளின் 86 ஆவது ஆராதனை அழைப்பிதழ் - http://tut-temple.blogspot.com/2018/09/86.html

பட்டதாரிச் சித்தரே சரணம் - ஸ்ரீலஸ்ரீ சுப்பைய சுவாமிகள் மஹா கும்பாபிஷேகப் பெருவிழா அழைப்பிதழ் - http://tut-temple.blogspot.com/2018/08/blog-post_8.html

பாண்டமங்கலம் காசி விசாலாட்சி உடனுறை ஸ்ரீ காசி விஸ்வநாதர் திருக்கோவில் - http://tut-temple.blogspot.com/2018/08/blog-post_21.html

ஶ்ரீஶ்ரீஶ்ரீ சொரக்காய சுவாமி! 116−வது மஹா குருபூஜை மற்றும் கலச பூஜை மஹோத்சவம் - http://tut-temple.blogspot.com/2018/08/116.html

ஸ்ரீ பைரவச் சித்தரின் அருள் மழையில் நனைவோம்.- http://tut-temple.blogspot.com/2018/08/blog-post_34.html

கசவை கண்ட கயிலைமூர்த்தியே போற்றி...- http://tut-temple.blogspot.com/2018/08/blog-post_22.html

இச்சையில் தீ வைத்தால் தீட்சை பெறலாம் - ஸ்ரீ மச்சமுனி சித்தர் ஜெயந்தி விழா - http://tut-temple.blogspot.com/2018/08/blog-post_5.html

கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் 161 ஆம் ஆண்டு அவதார திருவிழா அழைப்பிதழ் - http://tut-temple.blogspot.com/2018/07/161.html


பாரத்தைக் குறைத்து பரத்தை உணர்த்தும் பரஞ்சோதி பாபா - 7- ஆம் ஆண்டு மகா குருபூஜைப் பேரானந்த வழிபாடு - http://tut-temple.blogspot.com/2018/06/7_27.html

 உன்னுள் உத்தமனைக் காணும் வழி - மஹான் சங்கு சித்தர் அவர்களின் 119 ஆவது குரு பூஜை - http://tut-temple.blogspot.com/2018/06/blog-post_13.html

அருள்மிகு சோமப்பா சுவாமிகளின் 50 ஆம் ஆண்டு குருபூசை விழா அழைப்பிதழ் - http://tut-temple.blogspot.com/2018/06/50.html

என்னை நீ ஆள்வாய் சிவப்பிரகாச இறைவநல் தேசிக மணியே! - http://tut-temple.blogspot.com/2018/06/blog-post_5.html

திருச்சி வரகனேரி பிர்மரிஷி ஸ்ரீ குழுமியானந்த சுவாமிகள் குருபூஜை - http://tut-temple.blogspot.com/2018/06/blog-post_1.html

ஸ்ரீ கண்ணையா யோகி குரு பூஜை - http://tut-temple.blogspot.com/2018/05/blog-post_79.html

மண் உண்ட மகான் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மல்லையா சுவாமிகள் - http://tut-temple.blogspot.in/2018/05/blog-post_89.html

மீண்டும் மீண்டும் நம்மை அழைக்கும் குழந்தைவேல் சுவாமிகள் - உழவாரப் பணி அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2018/05/blog-post_21.html

சித்திரை பூசத்தில் குழந்தைவேல் சுவாமிகளிடம் சரண் அடைவோம் - http://tut-temple.blogspot.in/2018/04/blog-post_21.html

ஜாதகத்தை மாற்றி சாதகமாக்கும் குழந்தைவேலர் - உழவாரப் பணி அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_77.html

 ஜாதகத்தையே மாற்றும் குழந்தைவேலர்... - http://tut-temple.blogspot.in/2017/05/blog-post_22.html

 என் கடன் பணி செய்து கிடப்பதே - உழவாரப் பணி - http://tut-temple.blogspot.in/2017/08/blog-post_24.html

உன்னுள் உத்தமனைக் காணும் வழி சாகாக் கல்வி - http://tut-temple.blogspot.com/2017/07/blog-post_4.html

ஓம் அகஸ்த்திய நாதனே - ஸ்ரீ குருமண்டல தெய்வமே !  - http://tut-temple.blogspot.com/2018/03/blog-post_76.html

எந்தையும் தாயும் - கூடுவாஞ்சேரி அகத்தியர் ஆயில்ய ஆராதனை அறிவிப்பு 21/05/2018  - http://tut-temple.blogspot.com/2018/05/21052018.html

மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டா - கூடுவாஞ்சேரி அகத்தியர் ஆயில்ய ஆராதனை அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2018/04/blog-post_22.html

அகத்தியருக்கு ஆயில்ய ஆராதனை -புரட்டாசி -2017- http://tut-temple.blogspot.in/2017/09/2017.html

அகத்திய முனிவரின் பஞ்ச யாக ஷேத்திரம் - பஞ்செட்டி சதய பூஜை அழைப்பு - http://tut-temple.blogspot.in/2018/04/blog-post_74.html

குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!! - கூடுவாஞ்சேரி அகத்தியர் ஆயில்ய ஆராதனை அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2018/03/blog-post_89.html

கூடுவாஞ்சேரி அகத்தியர் ஆயில்ய ஆராதனை - 28/2/2018 - http://tut-temple.blogspot.in/2018/02/2822018.html

மனமது செம்மை யாக அகத்தியர் பூசை தானே - http://tut-temple.blogspot.in/2018/03/blog-post_6.html


No comments:

Post a Comment