Subscribe

BREAKING NEWS

02 July 2018

அன்னம் பாலிக்குந் தில்லைச்சிற் றம்பலம் - ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமம்

அன்பார்ந்த மெய்யன்பர்களே...

இந்த மாதத்தின் முதல் பதிவு சிறப்பாக இருத்தல் வேண்டும். முற்காலத்தில் சம்பளம் வாங்கி வந்தவுடன் வீட்டில் கொடுத்து முதன் முதலில் மங்கல பொருட்கள் வாங்க வேண்டும் என்று கருதுவார்கள். உதாரணமாக உப்பு, மஞ்சள் போன்றவை இவற்றுள் இடம் பிடிக்கும். அதே போல் வீட்டிற்கு மளிகை பொருட்கள் வாங்கும் போதும், முதலில் பிள்ளையார் சுழி இட்டவுடன், உப்பும், மஞ்சளும் தான் இடம் பெறும். இன்று நிலைமை தலைகீழ்.அடுக்குமாடி கடைகளுக்கு சென்று நாமே ஷாப்பிங் செய்கின்றோம். அப்போதாவது உப்பு,மஞ்சள் எடுத்துப்போட்டு, பில் போடும் போது உப்பு,மஞ்சளை முதலில் போட சொல்லலாமே..முயற்சித்துப் பாருங்கள்.

இது போல் தான் மாதத்தின் முதல் பதிவு எப்போதும் தானம் பற்றியதாக இருந்து வருகின்றது. நம் தளத்தின் மாதத்தின்  முதல் பதிவை எடுத்துப் பாருங்கள். முதல் பதிவு அறம் சார்ந்து இருக்க வேண்டும். இது போன்ற பணிகள் செய்வோரை ஊக்குவிக்க வேண்டும். நம்மால் செய்ய முடியவில்லை என்றால் கூட, இது போன்ற பதிவை படித்தல், நமக்கு நாம் இது போல் தானம் செய்ய ஊக்குவிக்கும்.

சரி..அன்னதானமும், மகேஸ்வர பூசையும் செய்து வரும் தயவு சித்தாஸ்ரமம் நிகழ்வுகளை இங்கே அள்ளித் தெளிக்க இருக்கின்றோம். குருவருளால் தான் இந்தப் பதிவு இங்கே அருளப்படுகின்றது.

அன்னம் பரப்பிரம்மம்' என்பர். ஆம்... உணவை இறைவனாகப் பார்க்கிறது ஆன்மிகம். உடலை வளர்ப்பதுடன், உள்ளத்தையும் வளர்ப்பது அன்னம் தான். இதனால் தான், ஐப்பசி பவுர்ணமி அன்று, சிவாலயங்களில் அன்னாபிஷேகம் நடத்தப் படுகிறது.

அன்னத்தின் பெருமையை விளக்கும் கதையைக் கேளுங்கள்...

முனிவர் ஒருவர், ஒரு தேசத்தின் ராஜாவைச் சந்தித்தார். அவரை வரவேற்ற அவன், தனியறையில் தங்க வைத்து, சகல வசதிகளையும் செய்து கொடுத்து, சாப்பிட்டு விட்டுப் போகும்படி கட்டாயப்படுத்தினான்; முனிவர் மறுத்தார். இருப்பினும், நியமத்துடன் சமைத்துப் போடுவதாக வாக்களித்து, சமையலுக்கும் தனியாட்களை ஏற்பாடு செய்தான்; முனிவரும் சாப்பிட்டார். பலவகை உணவுகளால் வயிறு மந்தமாயிற்று; தூக்கம் வந்தது. சற்று நேரம் தூங்கி, பின் விழித்ததும், கண் எதிரே இருந்த சுவரில் ஒரு முத்துமாலை தொங்கியதைப் பார்த்தார். உள்ளே சென்ற உணவின் தாக்கமோ என்னவோ... அதை எடுத்து வைத்துக் கொண்டால் என்ன என்று முனிவருக்கு தோன்றியது. அதையெடுத்து தன் வஸ்திரத்தில் முடிந்து வைத்துக் கொண்டார்.
சற்று நேரம் கழித்து, ராஜாவிடம் விடைபெற்று, தன் ஆசிரமத்துக்குப் போய் விட்டார். அவர் சென்ற பிறகு தான், மாலை காணாமல் போன விஷயம் வெளிப்பட்டது. அதிகாரிகள் விசாரணையை ஆரம்பித்தனர். அந்த அறைக்கு வந்து போன அப்பாவிகளுக்கெல்லாம் உதை விழுந்தது; ஆனால், அவர்களோ ஒரேயடியாக மறுத்தனர். முனிவர் மீது சந்தேகம் என்ற சிந்தனை கூட யாருக்கும் வரவில்லை. அவர் முற்றும் துறந்தவர் என்பதில் எல்லாருக்கும் முழு நம்பிக்கை.
அன்றிரவு, முனிவருக்கு வயிறு, "கடமுடா' என்றது; கடும் பேதி. வயிறு குறைய, குறைய மனசும் பழைய நிலைக்கு வந்து விட்டது.

"அவசரப்பட்டு தப்பு செய்து விட்டோமே... நேற்று விசாரணையில் அப்பாவிகளெல்லாம் அடி வாங்கியிருப்பரே... என்ன நடந்தாலும் பரவாயில்லை. ராஜாவிடம் இதை ஒப்படைத்து, கொடுக்கிற தண்டனையைப் பெற்றுக் கொள்வோம்' என்று சென்றார். ராஜாவிடம் உண்மையைச் சொல்லி, மாலையை ஒப்படைத்தார்.

"யாரோ ஒருவன் இதைத் திருடி உங்களிடம் ஒப்படைத்திருக்கிறான். அவனைக் காப்பாற்ற நீங்கள் திருடியது போல் நாடகமாடுகிறீர்கள். நீங்களாவது, திருடுவதாவது...இதைக் கேட்கவே மனம் சகிக்கவில்லை...' என்றான் ராஜா. அவ்வளவு நம்பிக்கை!

முனிவரோ, தன் கருத்தில் விடாப்பிடியாய் நின்றார்.

ராஜா அவரிடம், "நீங்கள் சொல்வது உண்மையாயினும், அதற்கும் ஒரு காரணம் இருந்திருக்க வேண்டுமே... அதுபற்றி ஏதாவது உங்கள் பேரறிவுக்கு புலப்படுகிறதா?' எனக் கேட்டான்.
"மன்னா... நேற்றைய உணவை சமைத்தது யார்? அதற்கு பயன்படுத்திய பொருட்கள் எந்த வழியில் வந்தன என சொல்...' என்றார்.

"சுவாமி... திருடன் ஒருவன் ஒரு அரிசிக் கடையை உடைத்து மூடையை தூக்கிச் சென்ற போது, பறிமுதல் செய்த அரிசி அது. அரிசிக்குரியவர் உரிய ஆவணம் தராததால், அரண்மனை கிட்டங்கியில் சேர்க்கப்பட்டது...' என்றான்.

"பார்த்தாயா... திருட்டு அரிசியை சாப்பிட்டதால், திருட்டு புத்தி வந்துள்ளது...' என்றார் முனிவர்.
"அப்படியே இருந்தாலும் கூட, அப்படி ஒரு அரிசியை சமைக்க காரணமான நான் தான் குற்றவாளி...' என்ற ராஜா, முனிவரை அனுப்பி விட்டான்.

உணவு பயிரிடும் விதம், பயிரிடுபவர், சமைப்பவர் இவற்றைப் பொறுத்தே சாப்பாட்டின் தரம் அமையும். அதைச் சாப்பிடும் போது, அந்த குணநலன்கள் மனிதனை தாக்கும். அதனால் தான், இறைவனுக்கு படைத்து பிரசாதமாக சாப்பிடுகிறோம். பிரசாதத்தை "ப்ர+சாதம்' என சொல்ல வேண்டும். "சாதம்' சாதாரண உணவு; "ப்ர' என்றால், கடவுள். அதுவே கடவுளுக்கு படைக்கப்பட்டு விட்டால், அதிலுள்ள தோஷங்கள் விலகி, "பிரசாதம்' ஆகி விடுகிறது. இதனால் தான், சிவனுக்கு அன்னாபிஷேகம் நடத்தி, உணவளித் தனர்.

தஞ்சை பெரிய கோவிலில், நூறு மூடை அரிசி சமைத்து பிரகதீஸ்வரருக்கு அபிஷேகம் செய்கின்றனர். ஐப்பசி சதயத்தில் தான், ராஜராஜ சோழனுக்கு பிறந்தநாள் வருகிறது. அதை முன்னிட்டு, இந்த தர்மத்துக்கு அவன் ஏற்பாடு செய்திருக்கலாம். கால வெள்ளத்தில், இது எல்லா சிவாலயங்களுக்கும் பரவியிருக்க வேண்டும்.

பயிரிடும் போதும், சமைக்கும் போதும், சாப்பிடும் போதும் நல்லதையே சிந்தித்தால், நாம் சாப்பிடும் சாப்பாடே பிரசாதம் ஆகிவிடும். இனியேனும் செய்வோமா!

07.05.2018 அன்று மஹேஷ்வரபூஜை  தர்மபுரி ராமகிருஷ்ணன் பிறந்தநாள் முன்னிட்டு நடைபெற்றது.



07.05.2018 மாலைப்பொழுது அன்னதானம் இட்லி,சாம்பார்,பொங்கல்,தேங்காய்சட்னி என சாது 72 நபர்களுக்கு வழங்கப்பட்டது.



10.05.2018 அன்று மாலைப்பொழுது அன்னதானம் இட்லி,சாம்பார்,சப்பாத்தி, வெஜிடபிள்குருமா என  81 சாதுக்களுக்கு வழங்கப்பட்டது





10.05.2018 அன்று மஹேஷ்வரபூஜை பெங்களூர் முரளிகிருஷ்ணப்பா அவர்களால் வழங்கப்பட்டது.






11.05.2018 அன்று மஹேஷ்வரபூஜை மேட்டூர் கதிரவன் அவர்களை வழங்கப்பட்டது.





இது மட்டுமா? நாம் நம் தளம் சார்பில் அமாவாசை தோறும் சுமார் 20 நபர்களுக்கு அன்னதானம் செய்து வருகின்றோம். மாதந்தோறும் செய்யும் அன்னதானம் இனிவரும் காலங்களில் குருவருளால் மீண்டும் தொடரப்படும் என்பதை இங்கே தெரிவித்துக் கொள்கின்றோம்.

தயவு ஆசிரமத்தில் நாம் ஒரு நாள் நேரில் சென்று அவர்கள் மாலைப்பொழுது செய்யும் அன்னதானம் பற்றி பார்த்தோம். மதியம் தான் மகேஸ்வர பூசை முழுமை பெற்றது. சற்று நேரத்தில் மாலை 5:30 மணி அளவில் அன்னதானம் நடைபெற்றது. இரவில் தானே உணவு? இங்கே மாலையே கொடுக்கின்றார்கள் என்று கேட்ட போது, நாம் எப்படி, எப்போது வேண்டுமானாலும் சாப்பிடலாம். ஆனால் சாதுக்களுக்கு மாலை 5:30 மணி முதல் அதாவது சூரிய மறைவுக்குள் கொடுக்க வேண்டும் என்பது நியதி. சாதுக்களுக்கு அன்னதானம் செய்வதற்கென சில நியதிகள் உண்டு. அதனை தயவு ஆசிரமம் பின்பற்றுவது சிறப்பு.

11.05.2018 அன்று மாலை அன்னதானம் இட்லி,சாம்பார்,பொங்கல் என 88 சாதுக்களுக்கு வழங்கப்பட்டது.



12/5/2018 அன்று நடைபெற்ற மகேஸ்வர பூசை காட்சிகள் இங்கே.







12,0 5,2018 அன்று மாலை அன்னதானம் இட்லி,சாம்பார்,தோசை,தேங்காய் சட்னி என 82 சாதுக்களுக்கும் ,13.05.2018 அன்று இட்லி,சாம்பார்,கோதுமை உப்புமா,தேங்காய்சட்னி என  86 சாதுக்களுக்கும் உணவு வழங்கப்பட்டது. ஒரு 10 பேருக்கு உணவு வழங்கவே ஏகப்பட்ட வேலைகள் இருக்கும். இதில் நாளொன்றுக்கு சுமார் 80 சாதுக்கள் எனும் போது, அணையாத அடுப்பில் தான் இவை சாத்தியமாகும்.

மேலும் சில மகேஸ்வர பூசை காட்சிகள் இங்கே பகிர்கின்றோம்.







அருள் பெரும் நேரமாக..நாங்கள் செய்த பாவங்களை உங்கள் ஆசிகள் தான் கரைக்கும் என்று மடியேந்தி வாங்குதல் தான் மகேஸ்வர பூசையின் மகத்துவம் ஆகும்.

அடுத்து திருஅண்ணாமலை கிரிவலப் பாதையில் நடக்கும் அன்னதான காட்சிகள் 






மேலும் விபரங்களுக்கு:

ஸ்ரீ சரவணபவா சுவாமிகள்,
ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமம், கிரிவல பாதையில் உள்ள பழனி ஆண்டவர் கோவில் அருகில், திருவண்ணாமலை, செல்: (0)9944800220 (இந்த எண்ணில் தொடர்பு கொண்டு மகேஸ்வர பூஜை செய்ய பதிவு செய்து கொள்ளலாம்)


மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம் 

மீள்பதிவாக :-

தேடிப்போய் தர்மம் செய்; நாடி வருவருக்கு உதவி செய் - http://tut-temple.blogspot.com/2018/06/blog-post.html 

பல கோடி நன்மைகள் வழங்கும் அன்னதானம் & மகேஸ்வர பூசை - ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமம் - http://tut-temple.blogspot.com/2018/05/blog-post_8.html

அன்னதானம் கொடுப்பது அனைத்தையுமே கொடுப்பதாம் - http://tut-temple.blogspot.in/2018/03/blog-post.html

ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமத்தில் அன்னம் பாலிக்கும் தில்லை சிற்றம்பலம் - ம(மா)கேஸ்வர பூசை - http://tut-temple.blogspot.in/2018/01/blog-post_24.html

ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமம் அருட் தொண்டுகள் - மகேஸ்வர பூசை & அன்னதான சேவை - http://tut-temple.blogspot.in/2018/04/blog-post_18.html

No comments:

Post a Comment